Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, April 4, 2009

கலைஞர் கருணாநிதியும் நடிகர் வடிவேலுவும் ஒரு கற்பனை சந்திப்பு








கலைஞர் கருணாநிதியும் வடிவேலுவும்


ஒரு கற்பனை சந்திப்பு


நா. வைகறை







வடிவேலு : அய்யா, வணக்கம்


கலைஞர் : வாஙக் தம்பி வடிவேலு. ஓய்வு நேரத்துல உங்க நகைச்சுவை காட்சிகள் தான் மனதுக்கு ரொம்ப ஆறுதலா, தெம்பா இருக்கு.



வடிவேலு : எப்படி இருக்கீங்க அய்யா?



கலைஞர் : முடியல. கண்ணக்கட்டுது. (சிரிக்கிறார்)




வடிவேலு : முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குக் குப்புற படுக்கச் சொன்னதுக்கு நான் எதுக்காகவும் குப்புற விழமாட்டேன்னு சொன்னீ;ங்களாமே?



கலைஞர் : இந்த பத்திரிக்கைகாரங்க ஏன்தான் இப்படி எழுதுறாங்களோ. உட்கார்ந்து யோசிப்பாங்களோ தம்பி. இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்திதான் என்னை ரணகளப்படுத்துறாங்கப்பா.



வடிவேலு : எவ்வளவுதான் கஷ்டப்பட்டு மத்தவங்க உணர்ச்சிய உருவாக்கினாலும் , உசுப்பேத்தினாலும் நீங்கதான் ‘பொசுக்’;குன்னு இறக்கிவிட்டுருங்களே?



கலைஞர் : எதச் சொல்ற தம்பி? வடிவேலு : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராகப் போராடிய கன்னடர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் திரையுலகினர் நாங்களும் உங்களுக்கு ஆதரவா உண்ணாவிரதம் இருந்தோம். ஆனா நீங்க கர்நாடக தேர்தல் முடிஞ்சவுடன் பேசிக்கலாமுன்னு சொல்லித் தமிழக உணர்ச்சியை மடைமாற்றி விட்டுட்டீங்க.



கலைஞர் : நான் சமயோசிதமா சிந்தித்து; எடுதத் முடிவாலதான் கர்நாடக- தமிழக மத்தியில் பகையுணர்ச்சி வளராம தடுக்க முடிஞ்சது. இந்திய இறையாண்மைக்கு வரவிருந்த ஆபத்தை என்னுடைய ராஜதந்திர நடவடிக்கையால தடுத்து நிறுத்தினதை நீங்க புரிஞ்சிக்கனும். நீங்க புரிஞ்சுக்காம போனா பரவாயில்ல. என்னுடைய ராஜதந்திரத்தை தோழர் என். வரதராஜனும், தம்பி வீரமணியும் வரவேற்று பாராட்டியதை நான் எப்பவும் மறக்க மாட்டேன்.




வடிவேலு : அய்யா வரதராசனும் - அய்யா வீரமணியும் உங்கள பாராட்டியதை என்னுடைய திரைப்படத்துல பயன்படுத்தியிருந்தேனே - பார்த்தீங்களா?



கலைஞர் : நீங்க நடிச்ச படத்துலேயே நான் அதிகம் ரசித்த படமாச்சே இம்சை அரசன் 23-ம் புலிகேசி . எதிரி மன்னன் படையெடுத்து வந்தவுடன் வீரர்களிடம் ஆவேசமாக பேசிவிட்டு, வௌ;ளைக் கொடியோடு ஒரு ஆட்டம் போட்டு சரணடைவீங்க. உடனே இரண்டு புலவர்கள் வந்து உங்களப்பாத்து வெள்ளைக் கொடியோடு வந்து எதிரியை விரட்டிய மாமன்னா என்று பாராட்டுவாங்க. இந்த காட்சியதான சொல்றீங்க.



வடிவேலு : ரொம்ப சரியா சொன்னீங்க அய்யா.



கலைஞர் : இநத் படத்துல வௌ்ளைக்காரன்கிட்ட இனாம் அது ரொம்ப முக்கியமுன்னு சொல்லுவீங்களே அந்தக் காட்சியில நடிப்பும் முகபாவனையும் ரொம்ப அருமை.




வடிவேலு : பல்வேறு பணிகளுக்கு இடையிலும் என்னுடைய படங்களையெல்லாம் பார்க்குற நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அய்யா.



கலைஞர் : என் காதுபட என்னைப் புகழாதீங்க தம்பி, கவியரங்கம் ஏற்பாடு செய்கிறேன். அங்க வந்து பேசுங்க. ஆஸ்தான கவிஞர்கள் பட்டியல்ல உங்களையும் சேர்த்துக்கிறேன்.



வடிவேலு : அய்யா இந்த முத்துக்குமார் அறிக்கையை பார்த்தீங்களா?



கலைஞர் : என்ன, சின்னப்புள்ளத்தனமா கேக்குற, அறிக்கையா தம்பி அது ! இல்லப்பா என்னைப் போன்றவர்களுக்கு வைத்த பெரிய ஆப்பு. நீங்க நடித்த வின்னர் படத்து கைப்புள்ள கதாபாத்திரத்தோடு என்னை கனக்கச்சிதமாப் ‘பொசுக்’குன்னுபொருத்திட்டானே.



வடிவேலு : ஆமாங்கய்யா. நீங்களும் அனைத்துக்கட்சி கூட்டம், சட்டமன்றத் தீர்மானம், பேரணி, மனித சங்கிலின்னு செய்றீங்க. ஒண்ணும் எடுபடலையே.



கலைஞர் : நல்லா கேட்கிறாங்க டீடெய்லு. இருப்பது ஒர் உயிர். அது போவது ஒருமுறை. அது தமிழுக்காக போகட்டுமுன்னு நான் ஆயிரத்து நானூறு முறை சொல்லியிருந்தேன்.



வடிவேலு : எத்தனைபேர் அடிச்சாலும் வலிக்காத மாதிரி நான் நடிப்பது போல நீங்களும் நல்லா சமாளிக்கிறீங்க அய்யா.



கலைஞர் : உண்மை தம்பி. அதுமட்டுமல்ல. கைப்புள்ள நீங்க அடிபட்டு சட்டைகிழிஞ்சு நடக்க முடியாம பாலத்துல உட்கார்ந்து இருப்பீங்க. அந்த வழியா நடந்துபோற ரெண்டு பேர் உங்களப் பார்த்துச் சொல்லுவாங்க அடி கொடுத்த கைப்புள்ள நிலையே இப்படின்னா, “அடி வாங்குனவன் கதி என்னவாயிருக்குமோ?” அப்படின்னு சொல்லும்போது, “இன்னுமாடா நம்பள நம்புறாங்க”ன்னு நீங்க சொல்வது போலத்தான் என் நிலையும்.



வடிவேலு : எதிர்ப்புகளை எப்படி எதிர் கொள்றீங்க.




கலைஞர் : உடம்புல எங்க வேண்ணாலும் அடிச்சுக்குங்க. ஆனா ஃபேசுல மட்டும் அடிக்காதீங்க, பர்சனாலிட்டி முக்கியமுன்னு நீங்க சொல்லுவீங்க. அதுமாதிரி தான் நானும் என் குடும்ப உறுப்பினர்களை யாராவது குறை சொன்னா உடனே கவிதை எழுதிடுவேன். கண்டன அறிக்கை கொடுத்துடுவேன். “பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கு. பேஸ் மட்டம் வீக்கா இருக்குறதால வேகமா செயல்பட முடியல.” மருதமலை படத்துல போலீசுகாரர் உங்கள அடிச்சு கத்திக்குத்து கந்தன், பீடா ரவியெல்லாம் பெரிய ரவுடிகளா ஆனது போல பலர் என்னைப் பேசி பெரிய ஆளா வரப்பார்க்குறாங்க. போகட்டும் தம்பி, உங்களுக்கும் ஏதாவது ஒரு பட்டம் தரணும்னு ரொம்ப நாளா ஆசை.



வடிவேலு : (தனக்குள்) (பார்க்க வந்தது ஒரு குத்தமாடா) பட்டமெல்லாம் ஒண்ணும் வேண்டாங்கய்யா. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.



கலைஞர் : எதுக்குப்பா?



வடிவேலு : நான் 23-ம் புலிகேசி, தீப்பொறித் திருமுகம், கைப்புள்ளன்னு பல கதாபாத்திரங்கள்ள நடிச்சிருக்கேன். நீங்க என்னுடைய கதாபாத்திரங்களுக்கே உயிர் கொடுத்து வாழ்ந்துகிட்ருக்கீங்க. அதுக்காகத்தான்.




“என்னை வைச்சு காமெடி - கீமெடி பண்ணலயே” - என்றவாறு கலைஞர் முறைக்க வடிவேலு வேகமாக வெளியேறுகிறார்.





நன்றி : புதிய தமிழர் கண்ணோட்டம் மாத இதழ்



க.அருணபாரதி"



arunabharthi@gmail.com








"சோ"-தான் ஒரு முட்டாள் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்!




"துக்ளக்"

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை; வக்கீல் - போலீசார் மோதல்; கலைஞரின் ஹிந்து மத துவேஷம் போன்றவற்றில் துணிந்து கருத்துகளைச் சொல்லி வருகிறீர்களே! இந்த அசா தாரண தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

பதில்: தேவதைகளும் கால்வைக்கத் தயங்கும் இடத்தில் முட்டாள்கள் நுழைவார்கள் என்பது ஒரு ஆங்கில வாசகம்.

("துக்ளக்", 25.3.2009).


என் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் பத்திரிகை நடத்துகிறேன் என்றார் ஒருமுறை. இப்பொழுதோ தான் ஒரு முட்டாள் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

"சோ" ராமசாமியை ஒருமுறை பாராட்டலாம் என்றால், இந்த இரண்டுக்காகவே ஒருமுறை பாராட்டி விடலாம்.

முட்டாள்தனத்தில் ஒரு படு முட்டாள்தனம் என்னவென்றால், தேவதைகள் என்று முட் டாள்தனமாக ஏதோ ஒரு கிறுக்கன் கூறியதை இவர் எடுத்துக்காட்டியுள்ளாரே - அதுதான்.

---------------------"விடுதலை"31-3-2009



















கருத்துப்படம்

முத்தமிழ் வேந்தன்
muthamil78@gmail.com
சென்னை

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!