Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, September 18, 2009

♥ ஆந்திரா ராஜசேகர ரெட்டி மரணத்திற்கு 462 பேர் தற்கொலையா? இதோ தில்லுமுல்லுகள் அம்பலம் ! ♥

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: நேபாள முன்னாள் பிரதமர் கண்டனம்


http://www.nankooram.com/wp-content/uploads/2009/04/5001-8702.jpg

காத்மாண்டு, ஆக.3- விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நேபாள முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

காத்மாண்டுவில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

உலகளவில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் பணியில் இந்திய, இலங்கை அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.

நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதியாக ஆதரிப்போம்.

நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியது தவறு. நேபாள அரசு தனது தவறை திருத்திக்கொள்ள நான்கு நாட்கள் அவகாசம் தருகிறோம். அதன்பிறகும் திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும்.

இவ்வாறு பிரசந்தா தனது பேட்டியில் கூறியுள்ளார்

நன்றி தினமணி


http://blog.taragana.com/n/wp-content/uploads/2009/09/wisconsin_medical_helicopter_crash.jpg

http://i27.tinypic.com/j6qzqx.jpg

ஆந்திராவில் நாட்டுக்காக உழைத்து உழைத்தே உயிரை விட்ட காங்கிரஸ் கட்சி தியாகி ? ஹெலிகாப்டரில் பறந்து போய் விபத்தில் இறந்தார் அல்லவா?

அந்த ராஜசேகர்ரெட்டி பிணத்துக்கு துணையாக, அதிர்ச்சியில் மொத்தம் 462 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறியதல்லவா, பொய்க்கார ஆந்திர அரசு.


அதெல்லாம் சுத்தப் பொய் என்று அந்த தில்லுமுல்லுகளை போட்டு உடைத்து, அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆய்வில் இறங்கிய "மெயில் டுடே" பத்திரிக்கை.


இயற்கையாக இறந்தவர்கள், நீண்ட நாள் நோய்வாய்ப் பட்டவர்களின்.....

மரண ஊர்வலச் செலவை காங்கிரஸ் கட்சியை ஏற்று நடத்தியிருக்கிறது.
ராசசேகர ரெட்டியின் மரணத்தின் போது, ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை கிரிக்கெடில் விக்கெட் விழுவதை போல அறிவித்ததாம், ஆந்திர காங்கிரஸ்..

பத்திரிக்கை தொலைக்காட்சி,வானொலிகளை அப்படி போடச் சொல்லி வற்புறுத்தப் பட்டதாம்!


இத்தகைய மோசடிக்கு தலைவன் ராசசேகர ரெட்டியின் மகன் ஜகன்மோகன(னி பிசாசு)ன் என்கிறது, அந்த பத்திரிக்கை. ஒரு மனநோயாளின் மரணம் கூட அந்த பட்டியில் சேர்க்கப் பட்டிருக்கிறதாம்!

எங்களை எரித்த தீயில்...


கொதிக்கிறது...!


உங்கள் வீட்டுச் சாப்பாடு!


கருத்து

தீக்கதிர் 17.09.09
எழுத்து வடிவம்
-மனிதன்.


http://www.islandcrisis.net/wp-content/uploads/2009/09/militaryhelico.jpg

ராகுல் வருகையால் செலவு ரூ. 1 கோடி


http://www.sankathi.com/uploads/images/news/Images/India/ragul%20&%20sonia.jpg

சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 3 நாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி சுற்றுப் பயணத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல் செலவாகியுள்ளதாம்.

நாடு முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்படுவது சோனியா காந்தி முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் திடீரென சிக்கணத்திற்கு மாறிய கதைதான்.

ஆனால் வெறும் 3 நாள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சமீபத்தில் ராகுல் காந்தி வந்து போனதற்கான செலவு ரூ. 1 கோடிக்கு மேல் என்ற தகவல் வயிற்றில் புளியைக் கரைப்பதாக உள்ளது.

ராகுல் காந்தியின் பயணத்திற்கு சரியாக எவ்வளவு செலவானது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவருக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளைப் பார்க்கும்போது ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஆகியிருக்கும் என்று கணக்கிட முடிகிறது.

ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரின் ஒரு மணி நேர வாடகை ரூ. 1.5 லட்சமாம். மேலும் அவர் பயணம் செய்த பீச்கிராப்ட் ஹெலிகாப்டரின் வாடகை மணிக்கு ரூ. 1.1 லட்சம். இந்த ஹெலிகாப்டரைத்தான் அவர் அதிகம் பயன்படுத்திநார்.

ஹெலிகாப்டர் வாடகைக் கட்டணமே ரூ. 1 கோடியைத் தாண்டும் என்கின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த ஏர் சார்ட்டர் சர்வீஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் பீச்கிராப்ட் கிங் ஏர் 350 ரக ஹெலிகாப்டரைத்தான் ராகுல் காந்தி பயன்படுத்தினார். வாடகை தவிர 10 சதவீத சேவை வரி தனியாக வரும். மேலும், ஹெலிகாப்டர் ஊழியர்களுக்கான செலவுகளையும், சாப்பாடு உள்ளிட்டவற்றையம் காங்கிரஸ் கட்சியே கவனித்துக் கொண்டது.

இதுதவிர ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றில் ராகுல் காந்தியின் பாதுகாப்புக்காக பின் தொடர்ந்து வந்த எஸ்.பி.ஜி படையினரின் செலவுகள் தனியாக வருகிறது.

ராகுல் காந்தி பல வகை ஹெலிகாப்டர்களை தனது பயணத்தின்போது பயன்படுத்தினார்.

திருவனந்தபுரத்திலிருந்து செப்டம்பர் 8ம் தேதி அவர் பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வந்தடைந்தார். அதற்கு முன்னதாக பீச்கிராப்ட் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வந்திருந்தார்.

கோவையிலிருந்து டெல்லிக்குத் திரும்பிச் சென்றபோது பால்கன் 2000 விமானத்தை அவர் பயன்படுத்தினார். இந்த விமானம் மும்பையைச் சேர்ந்த தாஜ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

இந்த நிறுவனத்தின் இணையதளம் டெல்லி - கோவை ஒரு வழிப் பாதை பயணத்திற்கான கட்டணம் ரூ. 20,32,250 என்று கூறுகிறது.

தனது முதல் நாள் பயணத்தின்போது ராகுல் காந்தி திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் பறந்து வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை, விருதுநகர், மதுரை என பறந்தார்.

அடுத்த நாள் தஞ்சாவூருக்கு பீச்கிராப்ட் ஹெலிகாப்டரில் பறந்தார்.

இந்த பயணத்தின்போது, திருவனந்தபுரம் - மதுரை மற்றும் இரவு மதுரை தங்கல் ஆகியவற்றுக்கான செலவு ரூ. 15 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது.

2வது நாலில், தஞ்சைக்கு வந்த ராகுல் காந்தி அங்கிருந்து அதே ஹெலிகாப்டரில் புதுச்சேரி பறந்தார். பின்னர் இன்னொரு ஹெலிகாப்டரில் ஏறி விழுப்புரம், வேலூர் சென்றார். பின்னர் அரக்கோணம் கடற்படைத் தளத்திற்குச் சென்று இறங்கி, அங்கிருந்து பி.350 ரக ஹெலிகாப்டரில் ஏறி சென்னை திரும்பினார்.

சென்னையிலிருந்து ஓசூருக்கு அதே ஹெலிகாப்டரில் சென்றார் ராகுல்.

ஓசூரில் உள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் நிலையத்தில் ஹெலிகாப்டரை நிறுத்திக் கொள்வதற்கான வாடகைக் கட்டணமான ரூ. 7500த்தை காங்கிரஸ் கட்சி கட்டியதாம்.

பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஏரி சேலம் சென்ற ராகுல் அங்கிருந்து கோவை போய்ச் சேர்ந்தார்.

சேலம் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் இறங்குவது உள்ளிட்டற்றுக்கான வாடகைக் கட்டணத்தை சென்னையிலேயே செலுத்தி விட்டார்களாம். காரணம், சேலத்தில் விமான நிலையம் செயல்பாட்டில் இல்லாததால்.

கோவை விமான நிலையத்தில் ஹெலிகாப்டரை இறக்கி, நிறுத்திக் கொள்வதற்கான வாடகைக் கட்டணமாக ரூ. 6800 செலுத்தியுள்ளனர். இந்தப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கட்டணமாக ரூ. 1500 செலுத்தப்பட்டுள்ளது.

இப்படியாக அத்தனை செலவுகளையும் பார்த்தால் ரூ. 1 கோடியைத் தாண்டி ஓடியுள்ளதாக தெரிய வருகிறது.

''ஒரு அரசியல் தலைவரின் முக்கியக் கடமை என்னவென்றால், சிக்கணமாக இருப்பதுதான். பணத்தைத் தேவையில்லாமல் செலவழிக்கக் கூடாது'' - இது ராகுல் காந்தி தமிழகம் வந்திருந்தபோது செய்தியாளர்களிடம் சொன்ன வார்த்தை.

http://thatstamil.oneindia.in/news/2009/09/17/tn-rahuls-visit-to-tamil-nadu-cost-over-rs1-crore.html


http://2.bp.blogspot.com/_XbfX6SbO9cc/RpiUipMNPGI/AAAAAAAAAV4/qNIo_ZBDbnc/s320/Thenkachi%2BSwaminathan.jpg

சிரிப்பு சிகிச்சை : தென்கச்சி சுவாமிநாதன்


சிரிக்க, சிரிக்க சொல்லி எங்களை அழ வைத்து விட்டீர்கள் ...!

சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''

இதுதாண்டா தமிழ் பத்திரிகை


'எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்' இதுதாண்டா தமிழ் பத்திரிகை – தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்



http://cache.daylife.com/imageserve/0eGW2kfa7bbzl/340x.jpg

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகம்

ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் 'தமிழணர்வு' கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது.

தமிழ்ப் பத்திரிகைகள், இலங்கை அரசிடம் காசு வாங்கிக் கொண்டு படுகொலை செய்கிற ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். இதில் ஜூனியர் விகடன் விகேஷ் மட்டுமல்ல, இன்னும் பல 'எட்டப்பன்கள்-பச்சைத் தமிழன் புதுக்கோட்டை மகாராஜா ரகுநாத தொண்டைமான்கள் -ஆற்காட்டு நவாப்புகள்' பத்திரிகை உலகில், பல பெரிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.. (நக்கீரன் மட்டும்தான் அம்சா சதியை அம்பலப்படுத்தியது )

ஆட்சியில் நடக்கும் ஊழல்களை துப்பறிந்து உலகத்துக்கு அம்பலப்படுத்துவதாக மார்தட்டுகிறது ஜூனியர் விகடன். ஆனால், தன் நிறுவனத்தில் இப்படி ஒரு ஊழல் நடப்பது உலகத்துக்கே தெரிந்த பிறகும், தனக்கு தெரியாமல் ஜூனியர் விகடன் துப்பு கெட்டு கிடந்தது எதனால்?

திடீர் என்று தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்கு விகேஷை மட்டும் பலியிட்டது எதனால்?

இதே ஜீனியர் விகடனும், இன்னும் பல பத்திரிகைகளும் ஈழத்தமிழர்களின் கொலைகளை நியாப்படுத்தியும், போராளிகளை காட்டிக் கொடுத்த துரோகிகளின் பேட்டிகளை பிரசுரித்தபோதும், எத்தனை பேர் இந்த பத்திரிகைகளை கண்டித்தார்கள்?

மாறாக, 'நம்ம கிட்ட ஒரு பேட்டி எடுக்க மாட்டானா? நம்மள ஒரு கட்டுரை எழுத சொல்ல மாட்டானா?' என்று நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு அலைந்தார்கள் எழுத்தளார்களும், பிரபலங்களும். அல்லது அதை கண்டித்தால் நாம அந்தப் பத்திரிகைகளில் எழுத முடியாது. நம்ம தொடர நிறுத்திடுவான். நம்ம பேட்டிய போட மாட்டானுங்க… என்று பம்மிக் கொண்டு கிடந்தார்கள்.

ஒரு பேட்டிக்கும், இரண்டு பக்கம் கட்டுரை எழுதற வாய்ப்புக்காகவும் பத்திரிகைகளின் மோசடிகளை கண்டிக்காமல், காந்தியின் குரங்குகளைப்போல், கண்ணை, காதை, வாயை மூடிக்கொண்டு சோரம்போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள், 'சமூக அக்கறை' கொண்ட பெரும்பாலான எழுத்தாளர்களும், பிரபலங்களும்.

தமிழனல்லாவர்கள் யாராவது தமிழின விரோதிகளாக இருந்தால், 'தமிழனாக இருந்தால் இதை செய்வானா?' என்று சவடால் பேசுகிறார்கள், சில தமிழனவாதிகள். இன்று பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல முதலாளிகளும், பொறுப்பில் உள்ளவர்களும் பச்சை தமிழர்கள்தான்.

இவர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?

தமிழன் என்பதற்காகவே தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை அரசின் படுகொலைகளை நியாப்படுத்தி, 'விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் போது, இடையில் சிக்கி பலியான தமிழர்கள்' என்று படத்திற்கு கீழ் ஏதோ தமிழர்கள் தற்செயலாக கொல்லப்பட்டதுபோல் 'புட்நோட்' எழுதினார்கள்.

புலிகளை காட்டிக் கொடுத்தவர்களோடு உறவு வைத்துக் கொண்டு பணம் பார்த்தார்கள்.

இன்னொருபுரம் ஆதரவாக செய்தி வெளியிடுதைப்போல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய செய்திகளை, கட்டுக்கதைகளாக எழுதி அவர் படங்களை பிரசுரித்து, புலிகளின் ஆதரவாளர்களையும், வாசகர்களையும் ஏமாற்றி பணம் சேர்த்தார்கள்.

ஈழத்தில் 3 லட்சம் தமிழர்களுக்கு மேல், மிக கொடூரமான முறையில் துன்புறுத்தப்படுகிறார்கள். பலர் நிர்வாணப்படுத்தப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்படுகிறார்கள். ஆனால் இந்த தமிழ் பத்திரிகைகள் இந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி தமிழர்களிடம் அரசியல் எழுச்சியை உண்டாக்குவதற்கு பதில், கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், 'ஈழ வரலாறு-இலங்கை வரலாறு-பிரபாகரன் வரலாறு' என்று பழைய கதைகளை எழுதி, தமிழர்களை வெற்று பெருமை பேச வைத்து, பணம் பார்க்கிறார்கள்.

விபத்தில் சிக்கி உயிருக்கு போரடுகிறவர்களின் பாக்கெட்டில் கைவிட்டு திருடுகிறவனைப்போல், ஈழத் தமிழர்களின் துயரங்களை வைத்து பணம் சம்பாதிப்பவைகளாகத்தான் இருக்கிறது தமிழ் பத்திரிகைகள்.

தமிழக தமிழர்களின் ஈழ ஆதரவு நிலை, ஈழத்தமிழர்களுக்கு எந்தவகையிலும் உதவவில்லை. அதன் மூலம் பலகோடி ரூபாய் பெரும் லாபம் அடைந்தவர்கள் தமிழ் பத்திரிகைகள்தான்.

எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம் என்று செயல்படுபவைகள்தான் தமிழ் பத்திரிகைகள்.

தமிழ் பத்திரிகையாளர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவளார்களான சில உணர்வாளர்கள்கூட, தங்கள் உணர்வை இணையங்களில் ரகசியமாக புனைப் பெயர்களில்தான், பகிர்ந்து கொண்டார்கள். 'ஆபிசுக்கு தெரிஞ்ச பிரச்சினை.. யாருக்கிட்டயும் சொல்லாதீங்க…அதை எழுதுனது நான்தான்…' என்கிற பாணியில்…

ஆனால், தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடுமையை உலகத்துக்கு அம்பலப்படுத்தியவர்கள், சிங்களப் பத்திரிகையாளர்கள்தான். தமிழர்களை கொன்று குவிக்கிற ராஜபக்சே அரசை கண்டித்து, தமிழர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்தார்கள் சிங்களப் பத்திரிகையாளர்கள். சிங்களப் பத்திரிகையாளர்களின் ஜனநாயகத் தன்மைதான், இன்று தமிழர்களின் துயரங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது.

ஹிட்லருக்கு பிறகு, கடந்த் 50 ஆண்டுகளில் உலகில் இதுவரை, இதுபோன்ற ஒரு கொடூரத்தை எந்த நாடும் தன் சொந்த மக்களுக்கே செய்ததில்லை என்பதை நிரூபிப்பதைப்போல், தன் நாட்டில் வாழும் தமிழ் மக்களை மிக கொடுமையான முறையில் கொன்று ஒழிப்பவன் ராஜபக்சே. இவனின் கொடுமைகளை வெளிகொண்டு வந்ததற்காக, நாடு கடத்தப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 30.

தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூரத்தை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டதால், சிங்கள அரசால் இதுவரை கொலை செய்யப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 20.

2006 ல் இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதற்காக, திஸ்ஸ நாயகம்என்கிற பத்திரிகையாளருக்கு 20 ஆண்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் துன்புறுத்தப்படுகிறார்.

இன்று இலங்கை ராணுவம் தமிழர்களை நிர்வாணப்படுத்தி, சுட்டுக்கொல்கிற கொடூரத்தை வெளி கொண்ர்ந்ததும் சிங்களப் பத்திரிகைளார்கள்தான்.

ஆனால், தமிழ் முதலாளிகளால், தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த தமிழ் பத்திரிகைகள்….. ச்சீ…

சவடாலாக பேசும் தமிழனவாதிகள் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் யோக்கியதை குறித்தும், பார்ப்பன அறிவாளிகளின் அயோக்கியத்தனத்தை பற்றியும் 16-02-2009 அன்று கு. தமிழ்ச்செல்வன் என்பவரின் கேள்விக்கு எழுதிய பதிலை மீண்டும் பிரசுரிக்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

உண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்?

-கு. தமிழ்ச்செல்வன்

'தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அல்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை' என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை.

'ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது சிங்கள அரசு. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே' என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்கு தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோகத்தை எதிர்ப்பார்கள்.

இந்த மனிதாபிமான உணர்வோடுகூட பார்ப்பனர்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை செய்யவில்லை. அவர்கள் எதையும் பார்ப்பன, இந்துக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், என்பதுதான் வருத்தற்குரியது.

மற்றபடி, தனக்கென்று சுயஅரசியலும், மனிதாபிமானமும் இல்லாதவன் பச்சைத் தமிழனாக இருந்தால்கூட அவனால் எந்த உபயோகமும் இல்லை. கெடுதல்தான்.

'சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது' என்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கொண்ட அந்த 'சிங்களவர்கள்' தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.

ஆனால், இங்கு பச்சைத் தமிழர்களான தமிழ் பத்திரிகையாளர்கள் சிங்கள அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு, 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போர்' என்ற பெயரில், தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி செய்திகள் வெளியிடுகிறார்கள்.

சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிற நேர்மை, துணிவு ஏன் பச்சைத் தமிழர்களான, தமிழ் பத்திரிகையாளர்களிடம் இல்லை?

காரணம், கொலை செய்யப்பட்ட அந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் – யார் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக, தங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் தங்கள் இனம் தாண்டி, எது உண்மையோ அதன் பக்கம் நின்றார்கள். சிங்கள அரசின் கொலைவெறியை துணிந்து உலகத்திற்கு அம்பலப் படுத்தினார்கள்.

ஆனால், பல தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. பணம்தான் முக்கியம். அதனால்தான் யாரெல்லாம் பணம் தருகிறானோ அவர்களுக்கெல்லாம் ஆதரவாகவும், பணம் தருகிறவர்களுக்கு யாரரெல்லாம் எதிரியோ, அவர்களுககு எதிராகவும் செய்திகள் வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் பணம் தரமறுத்தாலும், அதுவரை தந்துக் கொண்டிருந்தவனைப் பற்றியே எதையாவது அவதூறும் எழுதி விடுவார்கள். 50 ரூபா கொடுத்தால் தன்னையே திட்டி எழுதிகொள்கிற பத்திரிகையாளர்களும் இருக்கிறர்கள்.

நேர்மையான, திறமையான பத்திரிகையாளர்களை உடன் வேலை செய்கிற சக பத்தரிகையாளர்களுக்கும் பிடிப்பதில்லை. நிர்வாகத்திற்கும் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களை டம்மி ஆக்கி வைத்துக் கொள்வார்கள். அல்லது வேலையை விட்டு தூக்குவதற்கு நிர்வாகத்தோடு இணைந்து சக பத்திரிகையாளர்களும் சதி செய்வார்கள்.

நிர்வாகத்திற்கு எதிராக இல்லாத வகையில் அந்த எல்லைக்குள் ஊழல் செய்கிற, ( எங்கிட்ட சம்பள உயர்வு கேக்காத, ஆபிஸ் பொருளை திருடி விக்காத, எவன் கிட்டயாவது வாங்கி தின்னுக்க) இதுபோன்ற பத்திரிகையாளர்களைத்தான் பத்திரிகை முதலாளிகளும் விரும்புகிறார்கள் அவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகளையும் கொடுக்கிறார்கள். ஏனென்றால், இவர்களின் ஊழல் சில ஆயிரம், முதலாளிகளின் ஊழல் பலகோடி. ஜாடிக்கேத்த மூடி.

குறிப்பு:

* சிங்களப் பத்திரிகையாளர்களைப் போல் தமிழ் பத்திரிகையாளர்களை உயிரை தியாகம் பண்ணச் சொல்லவில்லை. வீதியில் இறங்கி ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாவிட்டாலும், ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாவிட்டாலும் கூட பரவயில்லை. பச்சைத் துரோகத்தையாது நிறுத்தக்கூடாதா?

* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டுவரும் 'நக்கீரன்' பத்திரிகையை மிரட்டுகிற தொனியில் கடிதம் எழுதியிருக்கிற ராஜபக்சேவின் தூதுவர் அம்சாவிற்கு கண்டத்தை தெரிவிப்பது தமிழர்களின் கடமை.

* 'தமிழிலேயே தான்தான் பெரிய எழுத்தாளப் புடுங்கி, நீயெல்லாம் ஒன்னும்கிடையாது' என்று தெருநாயைப் போல் சண்டைப் போட்டுக்கொள்கிற 'ஊதாரி-உதவாக்கரை-தரமான' எழுத்தாளன்களில் பலபேர், ஈழமக்கள் படுகொலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்கள். எருமாடு மேல மழை பெய்தது போல்.

16-02-2009 அன்று எழுதியது

தோழர்.மதிமாறன்


http://1.bp.blogspot.com/_TTKdst0hnBE/SZqFR5zNMdI/AAAAAAAAAfM/_msyeXiZ0J4/s400/indian-train-1.jpg


திருட்டு ரயில்!

எங்கள் தலைவரகள்
சொகுசு
வசதி பயணத்தை தவிர்த்து

குறைந்த கட்டண வசதி தரும்
பயணத்தை
தேர்ந்தெடுக்கிறார்களாம்...


ப்ப்பூ...!
இதுவா
சிக்கனம்?

இதென்ன அதிசயம்?
நீங்களாவது பரவாயில்லை...!
உங்களுக்கு
ஒட்டுப் போட்ட

நாங்கள்
பயணச்சீட்டே இல்லாமல்

பயணம்
செய்கிறோம்...!

-மனிதன்.




தமிழகத் தமிழர்கள் போராடாவிட்டால் இலங்கையில் ஒன்றுமே நடக்கப் போவதில்லை! - செய்தியாளர்கள்


சென்னை:
தமிழ்நாட்டுத் தமிழர்கள் முழு மனதோடு போராடாவிட்டால் இலங்கைத் தமிழர்களின் துயரத்துக்கு விடிவு கிடைக்காது என்று முன்னணி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

journalist_20090913011

ஈழத் தமிழர்களுக்கான கொடுமைகள், இலங்கையின் அடக்குமுறைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட செய்தியாளர் ஜேஎஸ் திசைநாயகத்துக்கு இலங்கை நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டுகால கடும் சிறைத் தண்டனை தீர்ப்பினை கண்டித்து 'சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை' எனும் தலைப்பில் சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் 'Save Tamil' என்னும் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களால் இக்கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திசநாயகத்துக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறைத் தண்டனையை உடனடியாக இரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும், ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும், சிங்கள அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும் இந்தியாவின் முன்னணி செய்தியாளர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர். ஏதோ தங்கள் உணர்வைக் காட்டவேண்டுமே என்றில்லாமல், பத்திரிகையாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் இனவாத ஒடுக்குமுறையை ஆதாரங்களுடன் எடுத்து வைத்தனர்.

புதினம் இணையதளம் இதுகுறித்து விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள செய்தியாளர்கள் பேச்சு விவரம்…

இக்கூட்டத்தில் செய்தியாளர் ஏ.எஸ்.பன்னீர்ச்செல்வம் பேசியதாவது:

"சார்க் அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கைச் சந்தித்தார் journalist_20090913001இலங்கை அதிபர் ஜெயவர்த்தன. அப்போது அவரிடம் ஜியா, "உங்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை நான் படித்தேன். உலகில் வேறு எந்த நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இல்லாத அளவுக்கு கட்டற்ற சுதந்திரம் உங்களின் அரசியல் சாசனத்தில் இருக்கிறது. ஆனால் எல்லோரும் என்னை சர்வாதிகாரி என்கிறார்கள். உங்களை ஜனநாயகவாதி என்கிறார்கள்" என்றாராம்.

இதற்கு என்னிடம் ஆதாரம்கூட இருக்கிறது. அன்று ஜியா சுட்டிக்காட்டிய அதிகாரக் குவியமே இன்றுவரை இலங்கையில் சிறுபான்மை மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இன்றைய நீதித்துறையில் முற்போக்காளராக தோற்றமளிக்கும் சில்வா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதுதான் இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இணைப்பு செல்லாது என்று அறிவித்தார்.

நீதித்துறையும் சர்வாதிகார இலங்கை அரசும் இணைந்து பயணித்து வந்ததன் விளைவே திசநாயகம் கைது. நாம் எல்லாம் திசநாயகத்துக்காய் குரல் எழுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் இது குறித்து அக்கறையற்றவர்களாக இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை. ஆனாலும் நாம் தொடர்ந்து ஜனநாயகத்துக்காய் பேச வேண்டும், என்றார் அவர்.

மீண்டும் ஒரு ஈழப்போர்!

டெல்லியிலிருந்து இருந்து வந்திருந்த 'ஹெட்லைன்ஸ் டுடே' தொலைக்காட்சியின் இணை ஆசிரியர் ராஜேஷ் சுந்தரம் பேசியதாவது:

journalist_20090913005"கேள்விகளற்ற நிலைதான் அவர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்கிற நிலைக்குக் கொண்டு செல்கிறது. புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆயுதப் போராட்டம் என்பது அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதார பலத்தை பலவீனப்படுத்துவதாகவே இருந்தது.

ஆனால் இதே போராட்டங்களை நாம் காந்தீய வழிகளில் முன்னெடுக்க முடியும். நாம் 'ஏர் லங்கா' அலுவலத்தில் போய் அங்கு வருகிற வாடிக்கையாளர்களிடம் நீங்கள் கொடுக்கிற பணத்தில் பெரும்பங்கு போருக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே 'ஏர் லங்கா'வில் பயணம் செய்யாமல் வேறு வானூர்தி சேவைகளை நாடுங்கள் என்று இலங்கையில் வர்த்தக நலன்களை பாதிக்கிற அளவுக்கு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இன்றைய இலங்கை அரசு இனி ஈழ மக்கள் எழ மாட்டார்கள் என நினைக்கிறது. நான் அங்கே எஞ்சியுள்ள போராளிகளோடும் தமிழ் மக்களோடும் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் தங்கள் மக்கள் கொல்லப்படுவதையும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதையும் இப்போதைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இலங்கை அரசு செய்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலைகள் மீண்டும் ஒரு ஈழப் போரை அந்த மண்ணில் உருவாக்கும் என்பது அந்த மக்களிடம் பேசிய மன நிலையிலிருந்து தெரிகிறது.

இந்திய அரசைப் பொறுத்தவரையில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எழுந்த நெருக்கடிகளுக்காகச் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக நடந்து கொண்டது.

நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லி விட்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியதோடு போரை முட்டுக்கொடுத்தும் நடத்தியதும் இந்தியாதான்.

இந்த அதிருப்தி எல்லோருக்குமே இருக்கிறது குறிப்பாக தமிழர்களான உங்களுக்கும் இருக்கிறது. திசநாயகம் கைதுக்காக மட்டுமல்ல ஒரு பெரிய போராட்டத்தையே இன்று நாம் ஜனநாயகத்துக்காய் நடத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது என்றார் அவர்.

தமிழக மக்கள் போராடவில்லையெனில்….

journalist_20090913007'தி வீக்' இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரன்:

"இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆனால் அவற்றுக்கு மதிப்பளிக்கும் மனநிலையில் ஆளும் தரப்பில்லை.

ஆனால் போருக்குப் பின்னர் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்கிற சூழலில் ஏதோ சாதித்து முடித்து விட்ட மாதிரி இங்கே அமைதியாக இருக்கிறார்கள்.

என்னதான் நாம் பேசினாலும் எழுதினாலும் தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லை என்றால் இலங்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை. மக்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுக்காக போராட முன்வரவேண்டும்", என்றார் அவர்.

மூத்த பத்தி எழுத்தாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான தேவசகாயம் பேசியதாவது:

journalist_20090913004தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டது. உலக நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகளைக் கொண்டுவந்த போதும் தென் ஆபிரிக்கா அசைந்து கொடுக்கவில்லை.

ஆனால், அனைத்துலக விளையாட்டுக்கள் எதையும் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கிற வரை தென் ஆபிரிக்காவில் நடத்தப் போவதில்லை என்று உலக நாடுகள் முடிவு எடுத்த பின்புதான் அது தன் நிறவெறிக் கொள்கையை மறு பரீசிலனை செய்தது. அதுபோல இலங்கையில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறா வண்ணம் நாம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு நாம் காட்டும் எதிர்ப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும், என்றார்.

இந்திய - தமிழக உளவுத் துறை சதி…

'டெக்கான் குரோனிக்கல்' ஆங்கில நாளேட்டின் செய்தியாளர் பீர் முகம்மது:

journalist_20090913008"அமெரிக்காவின் முக்கியமான மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் எலின் சாண்டஸ் இலங்கையில் உள்ள முகாம்களை ஜேர்மனியின் நாஜி முகாம்களோடு ஒப்பிட்டார்.

அவர் வரும் 15 ஆம் நாள் தொடங்கி 20 ஆம் நாள் வரை இனப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

இதற்காக அவர் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகத்தில் விசாவும் பெற்றிருந்தார். ஆனால் தனது பிரச்சார பயணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையிடம் பத்து நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால், அவருக்கு பத்து நாட்களாக அதற்கான காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்பதோடு இந்த பத்து நாட்களில் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகம் அவருக்கு வழங்கியிருந்த விசாவை இரத்தும் செய்து விட்டது.

இதிலிருந்து தமிழ்நாட்டு உளவு காவல்துறையும் இந்திய புலனாய்வுத்துறையும் எப்படி எல்லாம் ஈழ மக்களுக்காக இங்கே பேசுவதை திட்டமிட்டு தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இங்கே இருக்கிற மாநில முதல்வரோ அங்கே சுமூக நிலை நிலவுகிறது என்கிறார். இது எங்களை வேதனைப்படுத்துகிறது," என்றார்.

9ஆனால் இவர் பணியாற்றும் டெக்கான் குரோனிக்கல் தொடர்ந்து புலிகள் எதிர்ப்பு எனும் பெயரில் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் இயங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவான செய்திகளே இதில் இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.)

ஆங்கில ஊடகங்களுக்கு அக்கறையில்லை…

journalist_20090913006வாரம் இருமுறை வெளிவரும் 'நக்கீரன்' புலனாய்வு ஏட்டின் உதவி ஆசிரியர் லெனின்:

"போர் நடந்தபோது தமிழ் ஊடகவியலாளர்களும் பல்வேறு அரசியல் சக்திகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடினார்கள். ஆனால் ஆங்கில ஊடகங்கள் இதில் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டார்கள்.

உண்மையில் அவர்கள் நினைத்திருந்தல் இலங்கை விவகாரத்தில் ஏதாவது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதிகார மையங்களுக்கு நெருக்கமான ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில ஊடகவிலாளர்கள் இன்னும் அதிக கவனம் எடுத்து இலங்கை விவாகரத்தில் செயற்பட வேண்டும், என்றார்.

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டின் வெங்கட்ரமணா:

journalist_20090913002"திசநாயகம் பயங்கரவாதியல்ல அவர் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து பேசினார். இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் இவர்களுக்குத் தேவைப்படும்போது அவரைப் பயன்படுத்தி விட்டு இப்போது அவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள்" என்றார் அவர்.

செய்தியாளர் டி.அருள் எழிலன்:

"திசநாயகம் செய்த தவறு என்ன? சுதந்திரமாக சிந்திக்கவும், சிந்திக்கிற ஒன்றை எழுதுகிற உரிமையும் ஏன் திசநாயகத்திற்கு மறுக்கப்பட்டது என்றால், அவர் போர் நிறுத்தக் காலத்தில் தனது கண்காணிப்பின் கீழ் வெளியான 'நோர்த் ஈஸ்டர்ன்' இதழில் இரண்டு கட்டுரைகள் எழுதினார்.

இந்த இரண்டு கட்டுரைகளுக்காகவும்தான் அவருக்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

journalist_20090913003இரண்டு கட்டுரைகளின் மூலம் திசநாயகம் இலங்கையின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும், அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டதாகவும் அவரை கைவிலங்கிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

ஆனால், திசநாயகம் 80-களில் தொழிலாளர்களுக்காக போராடி தன் வேலையை இழந்தவர். காணாமல் போனவர்களுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தவர்.

வடக்கில் காணாமல் போனவர்கள் குறித்து அவர் ஆவணப்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். போர் மனித உறவுகளைச் சிதைப்பது குறித்த ஆழ்ந்த கவலை அவருக்கு இருந்தது.

இன ரீதியான பிரச்சினைகளை வன்முறை வழியில் இல்லாமல் அரசியல் ரீதியாக தீர்ப்பது குறித்த ஆய்வை செய்தவர் அவர். தான் கைது செய்யப்படும் வரை போருக்கு எதிராகவும் சமாதானம் தொடர வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.

ஆனால், போரை தீவிரப்படுத்துவதில் குறியாக இருந்தவர்களுக்கு மிகவும் இடையூறு செய்து கொண்டிருந்த திசநாயகத்தை கையில் விலங்கிட்டு முடக்கினார்கள்.

திசநாயகம் கைது செய்யப்பட்ட பின்புதான் லசந்த கொலை செய்யப்பட்டார். போரின் பங்காளிகள் குறித்து புலனாய்வு செய்து போர், ஆயுதக் கொள்வனவு, அதில் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தெல்லாம் அதிர்ச்சியான பல உண்மைகளை லசந்த வெளிக்கொண்டு வர இருந்தப்போது கோழைத்தனமான முறையில் அவரைக் கொன்றார்கள். அவரது துணைவியார் சோனாலி சமரசிங்க குழந்தைகளோடு இலங்கையில் இருந்தே தப்பிச் சென்றார்.

லசந்த கொலை, திசநாயகம் கைது என, தமிழ் மக்கள் மீது காட்டப்பட்ட போர் வெறி, நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த சிங்கள ஊடகவியளார்கள் மீதும காட்டப்பட ஒரு நியாயவாதி கூட அங்கு வாழ முடியாது என்று ஊடகவியளார்கள் தப்பித்து ஓடினார்கள் இன்றுவரை உலகெங்கிலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்," என்றார் அவர்.

'இலங்கை தூதரகத்தின் கைக்கூலிகள்…'

கார்ட்டூனிஸ்ட் பாலா:journalist_20090913009

"இலங்கையில் உண்மைக்காக பேசிய ஊடகவியளார்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் உண்மை பேசக்கூடாது என்பதற்காக இலங்கை தூதுவர் அம்சாவிடம் சன்மானம் பெறும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.

போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர்கள் கொடுத்த அன்பளிப்புக்களுக்காக இனத்தையே காட்டிக் கொடுத்து துரோகம் செய்து விட்டார்கள். பல நேரங்களில் இதை நினைக்கும்போது அருவருப்பாக இருக்கிறது.

தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இப்படி என்றால்… ஆங்கில ஊடகங்களோ தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மீது ஒரு போரையே தொடுத்தது.

இலங்கை அங்கே தமிழர்களைக் கொன்றார்கள். இங்குள்ள ஆங்கில ஊடகவியளார்களோ போரின் முடிவை பெரும் வெற்றியாக கொண்டாடினார்கள்.

ஆனாலும் இலங்கை அரசின் அரசின் பாசிசப் போக்குக்கு எதிராகப் பேசவும் இதுபோன்ற ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் என்கிற மன நிம்மதி இருக்கிறது" என்றார் அவர்.

நன்றி -என்வழி

♥ தமிழீழத்திற்கு சென்று வந்த உணர்வு ஓவியர் புகழேந்தி ♥

அந்த வலியை நாம் உணர்ந்துள்ளோம் - ஓவியர் புகழேந்தி


தமிழ்.வெப்துனியா.காம்: அவரைக் கூட நீங்கள் ஓவியமாகப் படைத்தீர்கள். அவர் அதைப் பார்த்தாரா?


ஓவியர் புகழேந்தி: பார்த்தார். எல்லா ஓவியங்களையும் பார்த்து கருத்து சொன்னவர், அந்த ஓவியத்தைப் பார்த்து மட்டும் கருத்து சொல்லவில்லை. அவர் கருத்து சொல்லும் வரை நானும் விடவில்லை. இதுதான் நடந்தது. எல்லா ஓவியத்தையும் பார்த்து, திலீபன் ஓவியத்தைப் பார்த்தார். கடைசி நேர திலீபனுடைய நிலையை வரைந்திருக்கிறீர்கள். எப்படி உங்களால் அதைப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே மக்களே கேட்டார்கள். எங்கள் திலீபன் அண்ணாவை எப்படி இவ்வளவு நுட்பமாக, அந்த கடைசி நேரத்தினுடைய உணர்வுகளை‌க் கொண்டு வந்திருக்கிறீர்களே என்று கேட்டார்கள். அதே வெளிப்பாட்டை அண்ணனும் கேட்டார்கள். நான் சொன்னேன் அப்பொழுது, ஈழத்திலே திலீபன் உண்ணாவிரதம் இருந்தால், நாங்கள் தமிழ்நாட்டிலே இருந்தோம். எங்கள் உடல்கள் வெவ்வேறாக இருந்தாலும், உணர்வுகள் ஓரிடத்தில்தான் இருந்தது. என்னுடைய உணர்வுகள் எல்லாம் ஈழத்தில்தான் இருந்தது. அதனால் என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அதனால்தான் செய்ய முடிந்தது.

இதுமட்டுமல்ல, பல்வேறு வகையான ஈழம் குறித்த ஓவியங்களைப் பார்த்துவிட்டு மக்களும் கேட்டார்கள், போராளிகளும் கேட்டார்கள், அண்ணனும் கேட்டார், எப்படி இவ்வளவு நுட்பமாக எங்கள் வாழ்க்கையை வாழாத நீங்களும் பதிவு செய்திருக்கிறீர்களே எப்படி என்று கேட்டார்கள். உண்மையிலேயே நான் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் வீடுகள் அங்கு வீழுகின்ற போது அங்கே கேட்கின்ற கதறல்கள் எங்கள் காதுகளில் கேட்கின்றபோது அதை நான் உணர்ந்தேன். அதனால் நான் அனைத்து வகையான உணர்வுகளையும் பெற்றேன். அதனால்தான் என்னால் இப்படி செய்ய முடிந்தது. அதனால்தான் நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று நான் சொன்னேன். அதுதான் உண்மை. அந்த வலியை நாம் பெற்றிருக்கிறோம்.

25
ஆண்டுகளாக அந்த மக்கள் எவ்வளவு துன்பங்களையும், துயரங்களையும் அடைந்தார்கள் என்பதெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். அதனால்தான் அந்த ஓவியங்களை பார்த்து மக்கள் உணர்கிறார்கள் என்றால், அந்த வலியை நாம் உணர்ந்திருக்கிறோம். அதன் வெளிப்படாகத்தான் அந்த ஓவியத்தில் இருக்கிறது.

webdunia photo
WD
தமிழ்.வெப்துனியா.காம்: உங்களுக்கு ஈழப் பிரச்சனையில் ஈழ மக்கள் பட்ட துயரம், துன்பம் எல்லாம் உங்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தை, வலியை ஏற்படுத்தியது. இதுபோன்று, இதற்கு ஈடாகவோ அல்லது சற்று குறைவாகவோ, கூடுதலாகவோ வேறு எந்த சம்பவமாவது உலக ரீதியில் உங்களை பாதித்து இவ்வாறு ஓவியம் தீட்டுவதற்கு தூண்டுதலாக அமைந்துள்ளதா?

ஓவியர் புகழேந்தி: ஒரு உண்மையை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நான் இதை சொல்லி வருகிறேன். நம்முடைய பாரம்பரியத்தில் நமக்கென்று ஏற்கனவே இருந்த பல்வேறு உணர்வுகள், நாம் தமிழர், நம் மொழி தமிழ் மொழி என்ற உணர்வு நமக்கு இருந்தது. ஆனால், ஈழ விடுதலைப் போராட்டத்தை நான் ஓவியங்களில் பதிவு செய்த பிறகுதான், அது நமக்கு ஒரு உலகப் பார்வையைத் தந்தது. அந்த ஈழப் போராட்டம்தான் உலகத்தில் எந்த இனம் ஒடுக்கப்பட்டாலும், எந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற உலகப் பார்வையை, சர்வதேசப் பார்வையை நமக்கு கொடுத்தது.

ஆக, ஈழப் போராட்டம் என்ற ஒன்று இல்லாவிட்டால் உலகப் பார்வையே நமக்கு இருந்திருக்காது என்றுதான் நான் கருதுகிறேன். அந்த ஈழப் போராட்டம், உலகத்தில் எந்த மூலையில் மக்கள் ஒடுக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும், அந்த மக்கள் படுகின்ற துன்பங்களை, துயரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்கின்ற உந்துதலை எனக்கு கொடுத்தது.

அப்படி நான் தென் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டத்தை பதிவு செய்திருக்கிறேன். தென் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலாவினுடைய வாழ்க்கையையும் நான் அதில் பதிவு செய்திருக்கிறேன். யாசர் அராஃபத்தினுடைய பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை பதிவு செய்திருக்கிறேன். அதேபோல்...
தமிழ்.வெப்துனியா: ஆனால், எல்லாவற்றிற்கும் தூண்டுதலாக அமைந்தது ஈழப் போராட்டமா?

webdunia photo
WD
புகழேந்தி: ஆமாம், என்னைப் பொறுத்தவரை அதன்பிறகுதான், உலகத்தில் எது நடந்தாலும் பார்க்கத் தூண்டியது. ஏனென்றால், நம்ம மக்கள் அடிபட்டு வலிக்கும் போது நாம கதறுகிறோம். அதேபோன்ற கதறுதல்தானே அடுத்தவர்களிடம் இருக்கும் என்கின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

தமிழ்.வெப்துனியா: உங்களுடைய அரசியல் பார்வை கூட, விடுதலைப் புலிகள், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒட்டியதாக ஏற்பட்ட நிகழ்வுகளின் காரணமாக அரசியல் ஏற்பட்டதா? அல்லது பள்ளி, கல்லூரி வாழ்க்கையிலேயே ஏற்பட்டதா?

புகழேந்தி: பள்ளி இறுதி முடிக்கும்போதே எனக்கு தமிழ் உணர்வு இருந்தது. எங்கள் குடும்பம் திராவிடர் இயக்க பின்னணியில் இருந்தது. எங்களுக்கெல்லாம் புகழேந்தி, மதிவாணன், பூங்கோதை என்ற பெயர்களை சூட்டியதெல்லாம் திராவிடர் இயக்கத்தினுடைய தாக்கம். ஒரத்தநாடு தொகுதி என்பது திராவிடர் இயக்கத்தின் மிக முக்கியமான கோட்டை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தது. அதன் அடிப்படையிலே நாங்கள் பாரதிதாசன் பாடல்கள், பாரதியார் போன்று தமிழ் கவிதையெல்லாம் அந்த காலத்தில் எங்களுடைய தந்தை எங்களுக்கு ஊட்டினார், சொல்லிக் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பாரதிதாசன் பாடல்களையெல்லாம் நாங்கள் ஒப்பிப்பது உண்டு. அது ஒரு உணர்வை, தமிழ் உணர்வைக் கொடுத்தது. ஈழப் பிரச்சனை, ஈழப் போராட்டம் தமிழன் என்கின்ற உணர்வைக் கொடுத்தது.

தமிழ்.வெப்துனியா: கொழும்புவில் இருந்து ஈழத்திற்குச் செல்லும் போது அந்த உணர்வு எப்படி இருந்தது? சி்ங்கள மக்களையும் நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா?

புகழேந்தி: நான் முதன் முதலில் கொழும்புவில் போய்தான் இறங்கினேன். கொழும்புவில் போய் இறங்கிய பிறகு, நான் வந்திருக்கிற செய்தி அறிந்து பத்திரிக்கையாளர்களே வந்துவிட்டார்கள். யாருக்கும் தெரியாமல்தான் போகவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் செய்தி எப்படியோ பரவி பத்திரிக்கையாளர்கள் வந்தார்கள். வந்திருந்தவர்கள் தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள்தான். அவர்கள் உடனே நிறைய செய்தியைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களிடம் நான் சொன்னேன், தயவு செய்து நான் திரும்பிப் போகும்வரை நேர்காணல்களை வெளியிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஏனென்றால், என்னுடைய நோக்கம் வேறு. அப்படியிருந்தும் அவர்கள் பத்திரிக்கைகளில் போட்டுவிட்டார்கள்.

அவர்கள் பல்வேறு செய்திகளைச் சொன்னார்கள். என்னதான் சமாதான காலமாக இருந்தாலும் அந்தவொரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுதே அந்த சமாதானத்தை உடைக்கின்ற பல்வேறு நிகழ்வுகளையெல்லாம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். எந்தவொரு புரிதல்களும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தம். புரிதலே இல்லாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டு வைத்துக்கொண்டு, கொழும்புவிலும் பதற்றம், வெவ்வேறு இடங்களிலும் பதற்றம் என்று நிலவிய சூழல். அந்தச் சூழலில் நாங்கள் ஒவ்வொரு இடமாக சென்று, மகிழுந்துவில்தான் நாங்கள் பயணம் செய்தோம்.

போகின்ற ஒவ்வொரு இடங்களிலும் பார்க்கின்ற பொழுது சிங்கள மக்கள் பகுதிகளையெல்லாம் கடந்து சென்றோம். மிகவும் ஒரு அழகான நாடு. நல்ல பசுமையாக இருக்கின்ற ஒரு சூழல். நிறைய நதிகள் ஓடுகின்ற பகுதியாக சிங்களப் பகுதி இருக்கின்றது. உண்மையிலேயே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. சில இடங்களில், புத்தளம் போன்ற பகுதிகளில் பயணம் செய்கின்ற போது, பல்வேறு பகுதிகள், தமிழ்ப் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டதை என்னுடைய நண்பர் சொல்லிக் கொண்டே வந்தார். பிறகு வவுனியா சென்றடைந்தோம். புத்தளமே தமிழ்ப் பகுதிதான். ஆனால் அது கலப்பு அதிகம் உள்ள பகுதி. அதைக் கடந்து வவுனியா செல்லுகின்ற பொழுது முழுக்க அது தமிழ்ப் பகுதி.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிதான் வவுனியா. அந்தப் பகுதியை கடக்கும் பொழுதே, ராணுவ நடமாட்டம், காவல்துறை நடமாட்டம் என்று அதிகம் தெரிந்தது. வவுனியாவைத் தாண்டி ஓமந்தை. இதுதான் எல்லைப் பகுதி. தமிழீழப் பகுதியையும், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியையும், வவுனியாவும் தமிழீழம்தான். ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி என்று சொல்வதற்கு கூட தமிழ் மக்கள் தயாராக இல்லை. ராணுவத்தினுடைய ஆக்கிரமிப்புப் பகுதி என்று சொல்லுவார்கள். அந்தப் பகுதிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழீழப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி. அதுதான் செக்போஸ்ட் என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதி.

தமிழ்.வெப்துனியா: போகும் வழியில் ராணுவத்தினர் உங்கள் ஓவியத்தைப் பார்த்தார்களா?

புகழேந்தி: எல்லாவற்றையும் பார்த்தார்கள். நான் வரைந்த ஓவியம் என்று சொன்னேன். ஆனால், பார்க்கணும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு ஓவியமாக எடுத்து பிரித்தார்கள். ஓவியங்களை சுற்றிதான் வைத்திருந்தேன். அங்கே போய்தான் காட்சிப்படுத்தணும்கிற நிலையில எல்லாவற்றையும் சுருட்டி வைத்திருந்தேன். அதை ராணுவத்தினர் பரிசோதிக்க வந்தார்கள். என்ன என்று கேட்டார்கள், பெயிண்ட்டிங்ஸ் Dont Open அப்படின்னு சொன்னேன். No we should check everything அப்படின்னாங்க. You can proceed என்று சொன்னேன். அதை எடுத்து பிரித்து பார்க்க ஆரம்பித்த உடனேயே ஆர்வத்தில் எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு என்ன இருக்கிறது என்பது புரிந்துவிட்டது. யார் செய்தது என்று கேட்டார்கள். நான்தான் செய்தேன் என்று சொன்னேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள். சொன்னேன். ஒவ்வொரு ஓவியமாக பார்க்க ஆரம்பித்து பிறகு அதைப் பார்க்க மேலும் ராணுவத்தினர் வர ஆரம்பித்துவிட்டனர்.

webdunia photo
WD
இவர்கள் ஆர்வத்தில் பார்க்க வர ஆரம்பித்ததும் எனக்கு கொஞ்சம் பதட்டம் வந்துவிட்டது. ஏனென்றால், அதில் அண்ணன் படமெல்லாம் இருக்கிறது. அது தேவையில்லாத சிக்கலை உருவாக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அப்படி ஒவ்வொரு ஓவியமாகப் பிரித்துப் பார்க்கும் போது சொன்னேன், அழுக்காக்கி விடாதீர்கள். இதற்குப் பிறகும் அதைப் பார்க்காதீர்கள் என்று சொன்னேன். பிறகு அதிலிருந்த ஒருவர், பாவம் விட்டுவிடு என்று சொன்னார்.

உண்மையிலேயே அவர்கள் ஆர்வத்தில்தான் பார்க்கிறார்கள். அ‌தி‌ல் ஏதோ இருக்கிறது என்று அவர்கள் பார்க்கவில்லை. ஆனால், நமக்கு என்னன்னா, கீழே அண்ணன் படமெல்லாம் இருக்கிறது. தேவையில்லாமல் சிக்கலைக் கொடுக்குமே என்பது. பிறகு அவர்களே சுருட்ட ஆரம்பித்தார்கள். அப்புறம் நானே சுருட்டிக் கொள்கிறேன் என்று வாங்கி உள்ளே வைத்துவிட்டேன். பிறகு எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டோம்.

தமிழ்.வெப்துனியா: உங்களுடைய பேச்சில், முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கூட போனேன் என்று சொன்னீர்கள். நந்திக் கடல் பகுதி தாண்டி அந்த இடத்திற்கு சென்றிருப்பீர்கள். அங்கே எப்படி இருந்தது அந்த நேரத்தில்?

புகழேந்தி: உண்மையிலேயே முள்ளிவாய்க்கால், முள்ளியவலை அந்தப் பகுதியெல்லாம் நான் கண்காட்சி நடத்திய இடம்தான். மிகவும் அடர்ந்த காட்டுப் பகுதி போன்ற ஒரு பசுமையான சூழல், தென்னை மரங்கள் அழகாக இருந்தது. சண்டை இல்லாத காரணத்தினால், அதுவும் முக்கியமாக என்னவென்றால் மீள்கட்டமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். நிறைய மரங்கள் நட்டு, ஏனென்றால் நிறைய காடுகளை அழித்துவிட்டார்கள். குண்டுகளை போட்டு மரங்களை அழித்து, கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல், சுற்றுச்சூழலைப் பற்றி கவலையில்லாமல் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்ட நிலையில், புலிகள் மீள்கட்டமைப்பில் ஈடுபட்டு, வன வளத்துறை ஒன்று உருவாக்கி அதிகமான மரங்களை நட்டு வனத்தை பாதுகாக்கின்ற ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி நிறைய மரங்களை நட்டிருந்தார்கள். ஒரு பசுமையான சூழலை உருவாக்கியிருந்தார்கள். அந்தச் சூழலில்தான் நான் அந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றேன். அற்புதமான ஒரு இடம். நம்முடைய மக்கள் எவ்வளவு செழிப்போடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு மிகவும் உதாரணமாக இருக்கின்ற, புரிந்துகொள்வதற்கு ஒன்றாக இருக்கின்ற நிலையில் அங்கே நான் சென்றேன்.

அவர்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரை, நம்முடைய வாழ்க்கை, இங்கே சராசரியான வாழ்க்கை என்பது அங்கே மிகவும் பின்தங்கிய வாழ்க்கை. பொருளாதார ரீதியாக, செழிப்போடு வாழ்ந்த மக்கள்தான் தமிழீழ மக்கள். அவர்கள் சுயமாக தங்களுடைய மண்ணில் உழைத்து, சம்பாதித்து செலவு செய்து வாழ வேண்டும் என்கின்ற உணர்வோடு இருக்கின்றவர்கள். அதைச் செய்தவர்கள். அப்படி அந்த மக்கள் நிறைய தொழில்கள் செய்து, விவசாயம் செய்து, பல்வேறு தோட்டங்களை உருவாக்கி, அவர்களுக்கென்று தனிப்பட்ட பொருளாதாரத்தை, மறுசீரமைப்பை கட்டமைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தச் சூழலில்தான் அந்த இடத்திற்குச் சென்றேன். பரந்த அளவில் ஒட்டுமொத்தமாக அழகான ஒரு நாட்டை அங்கே நீங்கள் பார்க்கலாம். அது முள்ளியவலை என்று அல்ல, அனைத்து இடங்களிலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அத்தனை இடங்களிலும் எந்த வேறுபாடும் இல்லாமல் கட்டமைத்திருந்தார்கள்.

அதற்கு ஒரு சின்ன உதாரணத்தை நான் சொல்ல வேண்டும். என்னுடைய கண்காட்சியை - என்னுடைய நிகழ்ச்சிநிரலை முதலில் திட்டமிட்டார்கள் - பல்வேறு இடங்களிலே நடத்துவது என்று திட்டமிட்டு பல்வேறு ஓவிய பயிலரங்குகளை நடத்தி, அந்த நிகழ்ச்சி நிரலை ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டிருந்தார்கள். அதன்படி நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், தமிழ்ச்செல்வனும், அவருடைய அரசியல் துணைப் பொறுப்பாளராக இருந்த சுதா மாஸ்டர் என்று சொல்லக் கூடிய தங்கன் அவர்களும் வந்தார்கள்.

அண்ணே என்ன செய்வீர்களோ தெரியாது, இரண்டு நாள் மன்னார் பகுதிக்கு வரணும் என்றார். நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே நெருக்கடியாக இருக்கிறதே, உங்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லையே, நான் எப்படி இரண்டு நாள் ஒதுக்குவது என்று சொன்னேன். என்ன செய்வீர்கள் என்று தெரியாதுண்ணே, மன்னாரில் இருந்த மக்கள் தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டார்கள். எங்களை நீங்கள் ராணுவத்துடனேயே தள்ளிவிட உத்தேசித்திருக்கிறீர்களா? யார் வந்தாலும் வன்னியோடு வைத்து அவர்களை நீங்கள் அனுப்பி விடுகிறீர்கள். எங்கள் மன்னார் என்ன செய்தது? ஏன் எங்கள் மன்னாரை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. இல்லை ராணுவத்தோடு எங்களை நீங்கள் விட்டுவிடுகிறீர்களா? என்று கேட்டு கடிதத்தை எழுதிவிட்டார்கள்.

webdunia photo
WD
தலைவர் கூப்பிட்டு எங்களிடம் சொல்லிவிட்டார். புகழிடம் எப்படியாவது பேசி இரண்டு நாள் ஒதுக்கிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார் என்று கேட்டபொழுது, உண்மையிலேயே அந்த மக்களுடைய எதிர்பார்ப்பு நியாயமானது என்று பட்டது. ஒன்றுமே சொல்லவில்லை, கவலையை விடுங்கள், யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் குறைத்துவிடுவோம், கொழும்புவில் ஒரு நாள் குறைத்துவிடுகிறேன். மன்னாரில் இரண்டு நாட்கள் கண்காட்சியை வைத்துவிடுங்கள் என்று சொல்லி மன்னாருக்கு இரண்டு நாட்களுக்கு திட்டமிட்டோம்.

யாழ்ப்பாணத்தில் 5 நாட்கள் நடக்க வேண்டிய கண்காட்சியை ஒரு நாள் குறைத்து 4 நாட்களாக்கிவிட்டு, நான் ஊருக்குத் திரும்பும்போது கொழும்புவில் ஒரு நாள் இருப்பதாகத் திட்டம். அதையும் தவிர்த்துவிட்டு இரண்டு நாட்களை ஒதுக்கி மன்னாரில் கண்காட்சி வைத்தோம். ஆக, அந்த மக்களுடைய உணர்வை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் மன்னாருக்குச் சென்ற பிறகுதான், மன்னார் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். அந்த மக்களுடைய வாழ்க்கை, அந்தப் பகுதி, மீன் பிடி தொழில், மடு தேவாலயம் இருக்கின்ற பகுதியை எந்த அளவிற்கு சிங்கள ராணுவம் சீரழித்திருக்கிறது என்பதையும் பார்த்தேன். எந்தவிதமான மின்சார வசதியும் இல்லாமல் அந்தப் பகுதி இருக்கிறது. படிக்கின்ற குழந்தைகள் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து படிக்கிறார்கள். உண்மையிலேயே ஈழத்திற்கு நான் சென்றிருந்தபோது, மன்னாருக்குச் சென்றிருந்தபோதுதான் முழுமை பெற்றது கண்காட்சி. அந்த மக்களோடும், குழந்தைகளோடு நான் இருந்ததும், அவர்களோடு நான் நேரத்தை பகிர்ந்துகொண்டதும் எனக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

உண்மையிலேயே அங்கு செல்லாமல் வந்திருந்தால் தமிழீழ பயணம் முழுமை பெற்றிருக்காது என்றே நான் எழுதியிருப்பேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால், தமிழீழத்தின் எந்தவொரு பகுதியையும் புலிகள் புறக்கணிக்கத் தயாராக இல்லை. எல்லோரையும், எல்லா பகுதிகளையும் சமமாக மதித்தார்கள். அந்த அளவிற்கு முக்கியத்தும் கொடுத்தார்கள். அதுவும் குறிப்பாக அண்ணன் பிரபாகரன் அவர்கள் எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். எல்லா பகுதிகளையும் ஒரே மாதிரியாக கட்டமைக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார். அதற்காக வேலைத் திட்டங்களையும் செய்தார். அப்படி ஒட்டுமொத்த தமிழீழத்தையுமே ஒரு அழகான நாடாக, ஒரு மாதிரி நாடாக உருவாக்க வேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருந்தார்.

தமிழ்.வெப்துனியா: மிக்க நன்றி. தமிழீழத்திற்கு சென்று வந்தது போன்று ஒரு உணர்வு இரு‌க்கிறது. நன்றி.



சோனியா,கருணாநிதிக்கும் மன்னிப்பே கிடையாது


தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா?

இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்..fullpost{display:inline;}

இவர்களுக்கும், இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று

காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்கு கனடா படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து கனடா படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கை..

" கடந்த 60 ஆண்டுகளாக மத்தியில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்த ஆட்சிதான் இருந்து வந்திருக்கிறது. எனவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசு க்கு இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு பின்பற்றுகிறது என்பது தேவையற்ற வாதம்" என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளது நல்ல பகிடி.

பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், துணைப் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் சிறிலங்காவிற்கு ஹெலிகாப்டர்கள், ராடார்கள், உளவு, புலனாய்வு, வட்டியில்லா நிதி கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அவற்றை வைத்துத்தான் சிங்கள பவுத்த வெறிபிடித்த மகிந்த ராசபக்சே கும்பல் 25,000 பொது மக்களைக் கொன்றொழித்தது.

அண்மையில் சானல் 4 ஒளிபரப்புச் செய்த காணொளியை நீங்கள் பார்க்கவில்லையா? கண் துணியினால் கட்டப்பட்டு கைகள் பின்னால் பிணைக்கப்பட்டு தரையில் வைத்து முதுகுப் புறமாக பலப் தமிழ் இளைஞர்கள் சிங்கள ராணுவ வெறியர்களால் பத்தடி தொலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை அந்தக் காணொளி காட்டியது.

சிறிலங்கா சிங்கள -பவுத்த இனவெறி ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய இனப் படுகொலைக்குப் பொறுப்பாக இருந்த இனத் துரோகிகளையும் பேரினப் படுகொலைக்காரர்களையும் வரலாறு பதிவு செய்யும்.

ஷேக்ஸ்பியர் கூறுவது போன்று ஏழேழு கடல் அளவு நீர் கொண்டு கழுவினாலும் இவர்களின் கைகளில் படிந்த குருதிக் கறையைப் போக்க முடியாது.


இந்த ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனிதவுரிமை அவையில் சிறிலங்கா மீது போர்க்குற்றம் சாட்டி மேற்குலக நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்துப் பேசியதும் அல்லாமல் எதிர்த்து வாக்களிக்கவும் செய்தது.

திருகோணமாவட்டத்தில் உள்ள சம்பூரை சிங்கள ராணுவம் 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் மூலம் சம்பூர் உட்பட முதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூதூர் கிழக்கில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 23 ஊர்களைச் சேர்ந்த 17,000 மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.

எனினும் மே 30, 2007 ஆம் ஆண்டு ராசபச்சேயினால் வெளியிடப்பட்ட அதி சிறப்பு அரச அரசாணை மூலம், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புப் கொண்ட மூதூர் (கிழக்கு) மற்றும் சம்பூர் பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதில் ஜூன் 16, 2007 அன்று மூதூர் கிழக்கையும் சம்பூரையும் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசு அரசாணை மூலம் அறிவித்தது. அதே அரசாணையின் மூலம் முதலீட்டு சட்ட அவைச் சட்டததின் கீழ் 675 ச.கிமீ (260 ச.மைல்அல்லது 500 ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஒரு சிறப்பு பொருளாதார வலயமும் உருவாக்கப்பட்டது.

அரசினால் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த பூர்வீகப் பகுதிகளினுள் அமைக்கப்பட்டிருந்த 300 வீடுகள் மண் அகழும் இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், 500 ஏக்கர் கொண்ட இந்த நிலப்பகுதியில் இந்தியாவின் 100 மெகாவாட் மின் உற்பத்தி அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கான அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இந்திய அரசு சம்பூரில் 500 மெகாவாட் ஆற்றலுடைய ஒரு அனல்மின் உலையை கட்ட ஸ்ரீலங்கா அரசோடு உடன்பாடு செய்துள்ளது.

இந்தியா சார்பாக இந்திய அரச நிறுவனமான தேசிய அனல் மின் கழகமும், (National Thermal Power Corporation (NTPC) ஸ்ரீலங்கா அரசு சார்பாக இலங்கை மின்சார கழகமும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. 5-50 விழுக்காட்டில் இரண்டு நாடும் முதலீடு செய்யும். அமெரிக்க டாலர் 500 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் உலை 2012 இல் முடிவு பெறும்.

சம்பூர் நகரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் கடலடி கம்பிவடங்களை அமைக்கும் திட்டம் என்பன தொடர்பிலான ஒப்பந்தங்கள் அடுத்த கிழமை இந்தியா - சிறிலங்கா இடையே கையெழுத்திடப்படவுள்ளது.

இதன் மூலம் இடம்பெயர்ந்த 2000 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்லாது தடுக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக வாழ்ந்த வாழ்விடங்கள் அநீதியான முறையில் பறிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நிலத்தை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு ஆய்வு செய்யுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

மூதூர் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு சிங்கள – பவுத்த பேரினவாதியான ராஜபக்சே செவிசாய்க்க மாட்டார் என்பது தெரிந்ததே.

காலம் காலமாக வாழ்ந்த நிலத்தில் மூதூர் கிழக்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படாதது மட்டுமல்ல அவர்களது நிலம் அனல் மின்உலை கட்டுவதற்கு இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா தாரைவார்த்துக் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த மின் உலைத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் தமிழ்மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை பணவருவாய் தான் தனது குறிக்கோள் என்று இந்தியா சொல்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்ற மாதிரி ஏழைகளின் கண்ணீரில் இந்தியா பணம் ஈட்டப் பார்க்கிறது.

தமிழ்மக்களுக்கு எதிராக இந்தியா செய்யும் இந்த இரண்டகம் "தமிழின விரோதப் போக்கு" இல்லையா? இதைவிடப் பச்சை இரண்டகம் வேறு இருக்கமுடியுமா?

இதுதொடர்பாக மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது ...

கடந்த 2006 ஆம் அண்டு ஏப்ரில் மாதம் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாம் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது மீள்குடியேற்றத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதேசமயம், கடற்கரைச்சேனை சம்பூர் கிழக்கு சம்பூர் மேற்கு கூனித்தீவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கணிசமான நிலப்பரப்பினை இந்தியாவிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அக்கிராமங்களைச் சேர்ந்த எம்மை பள்ளிக்குடியிருப்பு இறால்குழி ஆகிய பிரதேசங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அறிகின்றோம்.

முற்றுமுழுதாக விவசாயமும் கால்டை வளர்ப்புமே எமது தொழில்களாகும். நாம் வாழ்ந்த பிரதேசம் அதற்கேற்ற நீர்வளம் நிலவளம் மேய்ச்சல் தரைகள் சந்தை வாய்ப்பு என்பனவற்றைக் கொண்டுள்ளன.

ஆனால் தற்போது எம்மைக் குடியமர்த்த தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசம் இந்த வாய்ப்புக்கள் அற்ற பிரதேசம் ஆகும்.

'வெறும் குடியிருப்புக்கள் மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமானதல்ல" என்ற அடிப்படையில் எமது சம்மதம் இன்மையை ஏற்கனவே அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

எனினும் இம் முயற்சிகள் கைவிப்படாத சூழ்நிலையில் நாட்டின் தலைவர் என்ற வகையில் எமது நியாயபூர்வமான கோரிக்கைகளை தங்களிடம் தெரிவித்து அதற்கான பரிகாரத்தினை எதிர்பார்க்கின்றோம்.

1) இழந்த எமது இயல்பு வாழ்வை மீட்டுத்தந்து எமது சொந்தக் கிராமங்களிலேயே மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்

2) எமது கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு பரிசீலனை செய்யுங்கள்

3) எமது கிராமங்களை உள்ளடக்காத வகையில் அல்லது எமது குடியிருப்புக்களாவது பாதிக்கப்படாத வகையில் அடையாளம் கண்டு நில ஒதுக்கீட்டை மேற்கொள்ள உதவுங்கள்

4) மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற பிரதேசத்தில் எம்மைக் குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சியினை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்

5) எமது மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் வாழ்வுக்கும் எதிர்கால நன்மைக்கும் ஏற்றவிதத்தில் மீள்குடியேற்றத்தினை தொடர நடவடிக்கை எடுங்கள்.

காலம் காலமாக அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு நீண்ட துயரத்தினைச் சந்தித்து இன்று இயல்பு வாழ்வைப் பறிகொடுத்து நிர்க்கதியாகியுள்ள எமக்கு தங்களால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இக் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

நாட்டின் தலைவர் என்ற வகையிலும் பெருமை மிக்க புத்த மதத்தினைப் பின்பற்றும் உத்தம தலைவன் என்ற வகையிலும் தங்களிடம் இருந்து ஒரு நியாயபூர்வமான முடிவுக்காய் காத்திருக்கின்றோம்."

இப்போது நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்?

இவை தமிழர்களுக்கு எதிரான பச்சைத் துரோகம் இல்லையா?

தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா?

இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களுக்கும் இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று கூறியுள்ளார் நக்கீரன்.



♥ "படத்துலயும் அடிக்கணும்… நிஜத்துலயும் அடிக்கணும்." -சீமான் ஆனந்தவிகடன் பேட்டி ♥

சீமான் தேசியத்தலைவருடனான சிலிர்ப்பான சந்திப்பு



"படத்துலயும் அடிக்கணும்… நிஜத்துலயும் அடிக்கணும்."
 



http://2.bp.blogspot.com/_G300mEFhsyg/SpvQZJ5g9lI/AAAAAAAABVc/arW11qlFEWg/s400/p2.jpg

leader_withseemaanஇயக்குநர் சீமான் அவர்கள் தமிழீழத்தில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சந்தித்ததைப்பற்றி ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி.

சீமான்-முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர் படும் துயரம் பற்றிப் பேசும்போது கூடியிருப்போரைக் கலங்கி அழ வைக்கிறார். 'பிரபாகரன் விரைவில் வருவார்!' என்று அடித்துச் சொல்லி மிரளவைக்கிறார். என்ன பேசினாலும், எது கேட்டாலும் படபட பட்டாசு பொறிதான். மதுரை, தூத்துக்குடியில் முழங்கிவிட்டு திருப்பூர் ஆரவாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். சீமானின் 'நாம் தமிழர் இயக்கம்' அடுத்த மே மாதம் மாநில மாநாட்டை அரங்கேற்றுவதற்கான முனைப்பில் இருக்கிறது.

leader_withseemaan_b

ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சீமானைச் சந்தித்தேன்.

"கொடூரமாகப் பல கொலைகள் நடந்திருப்பதற்கான புகைப்பட, சலனப்பட ஆதாரங்கள் இப்போது வெளியில் வந்துகொண்டு இருக்கின்றன. இது குறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்கிறாரே முதல்வர்?"

"தமிழ் இளைஞனை கண்ணைக் கட்டி, நிர்வாணப் படுத்தி சுட்டுக் கொன்ற கொடூரத்தை இந்திய அரசாங்கம் இதுவரை கண்டிக்கவில்லை. ஏன் என்பதற்கான உண்மையான அர்த்தம் அவர்களுக்குத்தான் தெரியும்." "தமிழர்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை வாங்கிக் கொள்ளலாம், தனி நாடு கேட்பதால்தான் இலங்கை அரசு பயப்படுகிறது என்கிறார்களே?"

"இதெல்லாம் வரலாறு அறியாத அம்மண்ணின் துயர் புரியாதவர்களின் பேச்சு. தமிழீழ மக்களுக்கு அந்தத் தேசத்தில் பங்கு பாத்தியதை இருக்கிறதுதானே? அப்படியென்றால், அம்மக்கள் கொடுமைப்பட்டது ஏன்? சிங்களவன் வைத்திருக்கும் துப்பாக்கி தமிழனை மட்டும் சுட்டது ஏன்? அவன் பேசிய தமிழ் மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தமிழ்ப் பெண்ணை விரட்டி விரட்டிச் சூறையாடியது ஏன்? எல்லாம் இனவாத நோக்கம்தான். இந்த வெறுப்பும் வக்கிரமும் ஆரம்பம்தொட்டே இருந்ததால்தான் தமிழனால் அவர்களுடன் ஐக்கியமாகி வாழ முடியவில்லை. தனி நாடு கேட்டான்.

தமிழனாக இருந்துகொண்டு இதைச் சொல்லவே எனக்கு நாக்கு கூசுகிறது. ஆனாலும், அதுதான் உண்மை. தற்காலத் தமிழன் இனத்தைவிட பணத்தை மதிப்பவன். அதைக் கொடுத்து வாக்குகள் வாங்கிவிடலாம் என்பதால்தான், இந்தத் துரோகம் நடந்தது. ஆனால், கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல சங்கதியாக இன்றைய இளந் தலைமுறை அதைப் புரிந்துவைத்திருக்கிறது. அதை ஆக்க சக்தியாக மாற்றும் வேலையைக் கட்டளையாகப்
பணித்துதான் தலைவர் பிரபாகரன் என்னை அனுப்பியிருக்கிறார்!"

"பிரபாகரனை நீங்கள் சந்தித்தீர்கள் என்று முன்பு செய்தி உலவியது… அதுபற்றி நீங்கள் இப்போதாவது பேசலாமே…"

"இந்திய ராணுவ உதவியுடன் சிங்களவன் தொடுத்த தந்திரப் போர் உக்கிரமடைவதற்குச் சில நாட்களுக்கு முன் தலைவர் பிரபாகரனை நான் சந்தித்தேன். முழுக்க முழுக்க நள்ளிரவுப் பயணமாகவே இருந்தது அது. நானும் நடேசன் அண்ணாவும் பின்னால் உட்கார்ந்திருக்க… ஜீப் எங்களை
அழைத்துச் சென்றது. திடீரென்று நின்ற வண்டியில்இருந்து அதுவரை ஓட்டி வந்தவர் இறங்கிக்கொண்டார்.. தொடர்ந்து நடேசன் ஓட்ட ஆரம்பித்தார். சில கிலோ மீட்டர்கள் போனதும் ஜீப்பின் விளக்கு கள் அணைக்கப்பட்டன. இருட்டுக்குள் ஜீப் தனக்கு மட்டுமே தெரிந்த திசையில் பயணமானது. ஒரு மணி நேரம் கழித்து நான் இறங்கிய இடம் சாதாரண குடிசை. உள்ளே தலைவர் இருக்கிறார் என்று ஆசையுடன் போனேன்.
இல்லை அவர்!

அரை மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு வாகனம் வந்தது. 'புலி உறுமிக்கொண்டு வருகிறது!' என்றார் நடேசன் சிரித்தபடி.. நான் தங்கியிருந்த குடிசைக்குப் பின்னால் அழைத்துப் போனார்கள். அங்கு இன்னொரு குடிசை இருந்தது. வாசலில் நின்றிருந்தார் என் தலைவர் பிரபாகரன். பார்த்ததும் உருகிப் போனேன். பாய்ந்து சென்று கட்டி அணைத்தேன். வணக்கம் வைத்து, சின்னச் சிரிப்புடன் என்னை
அழைத்துச் சென்றார்.

உள்ளே பொட்டு அம்மான், தமிழேந்தி இருவரும் இருந்தார்கள். வெகுநேரம் வரையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவரேதான் நாத்திகம், கடவுள் நம்பிக்கை குறித்துப் பேச ஆரம்பித்தார். ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. அப்புறமாகத்தான் எனக்கு மூளையில் உறைத்தது.

பிரபாகரனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக,
சுமார் ஒரு வார காலம் அங்குள்ள போராளிகள் மத்தியில் நான் பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு காசிக் கயிறு கட்டியிருந்தாள் ஒரு பெண் போராளி. 'நொடியில் சாகும் சயனைடைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆயுளைக் காப்பாற்றும் என்று இந்த காசிக் கயிற்றை எந்த நம்பிக்கையுடன் கட்டியிருக்கிறாய் தங்கச்சி?' என்று நான் கேட்டது அப்படியே பிரபாகரன் காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான்
கடவுள் நம்பிக்கை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'சின்ன வயசுல இருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஏன்னு தெரியலை. தமிழர்களுக்குத் துரோகம் செய்த துரையப்பாவைச் சுட, முதன்முதலா ஆயுதம் தூக்கிப் போனப்ப அவர் கிருஷ்ணன் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு இருந்தாரு. குறிபார்க்கும்போது கிருஷ்ணர் முகம்தான் தெரிஞ்சது. 'அநியாயத்தை அழிக்க யுகம்தோறும் அவதாரமா வருவேன்' அப்படின்னு நீதானே சொன்னே என்று நினைத்துக்கொண்டே சுட்டேன். துரையப்பா செத்துட்டாருன்னு பிறகு தகவல் வந்து சேர்ந்தபோது, 'கிருஷ்ணர் என் பக்கம்'னு நினைத்தேன்.

எங்க போராட்டத்துக்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பணம் கொடுத்தார். அதை எப்படியாவது பாதுகாப்பா இங்க கொண்டு வரணும்னு கவலைப்பட்டபோது, எனக்குத் திரும்பவும் கடவுள் நினைவு வந்துச்சு. பழநிக்குப் போய் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டேன். கிட்டு இறந்ததற்குப் பிறகுதான் எந்தக் கணத்திலும் கடவுள் எண்ணம் தோன்றாத முழு நாத்திகனா மாறிட்டேன்' என்றார்.

தமிழோடு பல வார்த்தைகளை ஆங்கிலத்தில் இருந்தே எடுத்துப் பயன்படுத்துவது குறித்து நான் போராளிகளிடம் சற்றே கேலியாகப் பேசியிருந்தேன். அதைப் பற்றியும் அடுத்து விளக்கினார் பிரபாகரன். 'தமிங்கிலீஷ்ல பேசுவதாகச் சொன்னீங்களாமே. அது உங்க நாட்டுல இருந்து இங்க இறக்குமதி ஆனதுதான். ரொம்ப நாள் வரை அப்படி இங்கே இல்லை. சமாதான காலத்துல உங்க நாட்டு டி.வி-யை இங்கே திறந்துவிட்டதன் விளைவு அது. தமிழீழம் மலரும்போது தமிழ் தமிழாக மட்டுமே இருக்கும்!' என்றார்.

அடுத்து பேச்சு, திரைப்படங்கள் குறித்துத் திரும்பியது. அடுத்து 'கோபம்'னு ஒரு படம் செய்யப் போவதாகச் சொன்னேன். 'அது சம்ஸ்கிருத வார்த்தை. சினம் அல்லது சீற்றம்னு பேர் வைங்களேன்' என்றார் தமிழேந்தி. உடனே தலைவர், ' 'கோபம்'னு சொல்ற வார்த்தைக்கு இருக்கிற உணர்ச்சி அதுல இல்லை. அதனால 'கோபம்'னே இருக்கட்டும்!' என்றார். மேலும், 'தம்பி' மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ணுங்கள், 'வாழ்த்துகள்' மாதிரி தேவையில்லை என்பது அவரது எண்ணம். 'பூக்கள், பறவைகள் என்று மென்மையான விஷயங்கள் எதற்கு நமக்கு? படத்துலயும் அடிக்கணும்… நிஜத்துலயும் அடிக்கணும். அதுதான் அடிமை விலங்கை உடைக்கும்' என்றார். தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்தார். நம்ம போராட்டத்தை முழுமையாகப் புரிஞ்சுக்கிட்டு ஆதரிக்கிற நடிகர் சத்யராஜ்னு சொன்னேன்.

சந்தோஷப்பட்டார். விஜய் பற்றிப் பேசிட்டு இருந்தப்ப, 'யாழ்ப்பாணத்துக்காரரின் பெண்ணைத்தானே அவர் திருமணம் செய்திருக்கிறார்' என்று நினைவுபடுத்திக்கொண்டார். 'பாலாவும் சேரனும் நம்ம போராட்டத்தின் நியாயத்தை ஆதரிப்பவர்கள்தானே' என்று என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்.. அமீர் பற்றி அதிகம் விசாரித்தார். அவருக்கு 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' மாதிரி ஈழப்போராட்டத்தை ஒரு படமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. எத்தனையோ பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்தும், முடியாமல் போனதைச் சொல்லி வருத்தப்பட்டார்.

'பாலுமகேந்திராவை மட்டும் இங்கே கொண்டுவந்து சேர்த்திருங்க. அவரை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்'னு மெய்சிலிர்த்தார். திடீர்னு என்னை நினைத்தாரோ, 'சிவாஜிக்குப் பிறகு வடிவேலுவைக் கொண்டாடுறீங்க.. எனக்கும் வடிவேலுதான் தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான கலைஞன் மாதிரி இருக்கு. நடக்கட்டும்… நடக்கட்டும்!' என்றார்.

சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது பற்றி அடுத்து பேசினார். 'வன் முறைக்கு அதை விஞ்சும் வன்முறைதான் பதிலாக இருக்க முடியும். சுமாரான வன்முறையை வைத்து வெற்றி பெற முடியாது. வலிமை உள்ளவன் வெல்வான். எனக்குப் பிறகும் இந்தப் போராட்டம் நடக்கும். என்னுடைய கவலை இளைய தலைமுறை இந்தப் போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதைப்புரியவைக்க நீங்கள் உங்களது பேச்சைப் பயன்படுத்த வேண்டும்' என்றார். 'பேசிப் பேசித்தான் காலங்கள் கரைந்து விட்டன. இனிமேல் பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்றேன். 'இல்லை தம்பி, பேச்சும் ஒரு படையணிதான். என் துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் வார்த்தைக்கும் உன் வார்த்தைக்கும் ஒரே அளவு வலிமை உண்டு. அதே போல் சினிமாவும் ஒரு படையணிதான். தமிழனுக்குத் தலைவனாகவருபவன் சாகத் துணிந்தவனாக இருக்கணும்.

சாகப் பயந்தவன் தரித்திரம். சாகத் துணிந்தவன் சரித்திரம். இந்தா இருக்காரே…' என்று ஒருவரைச் சுட்டிக் காட்டினார் பிரபாகரன். 'இவர்தான் கடாபி. என் பாதுகாவலர். சாதாரணத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர். உங்கள் நாட்டில் இப்படியருத்தர் இருந்தால், அனைத்து உச்ச விருதும் கொடுத்திருப்பீர்கள்.

எல்லாவற்றுக்கும் பயிற்சிதான் காரணம். கடுமையான பயிற்சி… எளிதான சண்டை! இது தான் இங்குள்ள தத்துவம்' என்றார்.

அவரது உடம்பு கனமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதைக் கேட்டேன். 'குண்டாக இருக்கிறேனே தவிர, எனக்கு எந்த நோயும் இல்லை!' என்றார். நன்றாகச் சாப்பிடுகிறார். 'இங்கு நடக்கும் சமையலுக்கும் நான் தான் டைரக்ஷன்' என்றார். ராணுவம் சம்பந்தமாக ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. முக்கியமானவை அனைத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தார்..

எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும்போது எல்லாம் அவரது முகம் மலர்கிறது. அவர் அமைப்புக்குச் செய்த உதவி பற்றி எல்லாம் சிலாகித்துச் சொன்னார். அமைதிப்படையுடன் விடுதலைப் புலிகள் சண்டை போட்டுக்கொண்டு இருந்த காலத்தில், திடீரென்று ஒருநாள் கிட்டுவை அழைத்த எம்.ஜி.ஆர், ஒரு பெட்டியில் 36 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துக் கொடுத்தாராம். 'உங்களது நாட்டை எதிர்த்துப் போரிடும்போது எம்.ஜி.ஆர்.. கொடுத்தார். 'அது தேசத் துரோகமா?' என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. எங்களது நோக்கத்தை மட்டும்தான் பார்த்தார்!' என்று வார்த்தைகளில் அத்தனை நன்றி தொனிக்கப் பேசிக்கொண்டே இருந்தார்.

அவரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, என்னுடன் இருந்த சேரலாதனிடம் அதைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. 'ஏன்?' என்று கேட்டேன்.

அது உங்களுக்கும் தலைவருக்குமான தனிப்பட்ட சந்திப்பு. அது பற்றி எனக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றவர்,

'இங்கு தலைவர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர். மற்றவரில் யாரும் துரோகியாகலாம். நான் உட்பட!'
என்று கூறி நிறுத்தினார். என் இதயம் அதிர்ந்து அடங்கியது.

மயூரி என்ற காயம்பட்ட பெண் போராளிகளின் காப்பகத்துக்குச் சென்றேன். 'கண்டேன் பிரபாகரனை' என்று அங்கிருந்த தங்கை யிடம் சொன்னேன். 'யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது. நீங்கள் இந்த இனத்துக்கு உண்மை யாக இருங்கள்' என்றாள் அவள்.

உண்மையாக இருக்கவே போராடி வருகிறேன்." "இனியும் காண்பீர்களா பிரபாகரனை?" "ஆம்.. காண்பேன்! 20 முறை அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். அவர் மீண்டு வந்திருக்கிறார். அமைதிப்படை கொன்றதாகச் சொன்னார்கள்.. வந்தார். சுனாமியில் அடித்துப் போய்விட்டார் என்றார்கள். மீண்டும் வந்தார். கால் கருகிப்போய், ஒரு காலை எடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். அதுவும் பொய். அவரது கால் நன்றாகத்தான் இருந்தது. இப்போதும் அவர்களது ஆசைப்படி இறந்திருக்கிறார். பார்க்கலாம். அவரது வருகைக்காக நாங்கள் வழக்கம் போல் காத்திருக்கிறோம்!"

நம்பிக்கையும் உறுதியுமான வார்த்தைகள்!

நன்றி: ஆனந்தவிகடன்




நாம் தமிழர் இணையம்

http://271984.ning.com
http://www.naamtamilar.org

♥ முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்-காணொளி ♥

முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்-காணொளி


http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/damilvany-gnanakumar460276_001.jpgவன்னிக்குச் சென்ற பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி என்பவர் இறுதிவரை முள்ளிவாய்க்கால் பகுதில் இருந்து பின்னர் தடைமுகாமில் இருந்து தற்போது மீண்டு பிரித்தானியா வந்துள்ளார்.

அவர் பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

http://www.youtube.com/watch?v=JL9xAFv78KU




“இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை வந்தால் சாட்சியம் கூற தயார்”: தமிழ்வாணி

kalaiஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக போரின் இறுதிகாலத்தின் வன்னிப் பகுதியில் தங்கியிருந்த லண்டனில் இருக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் பெண்மணி தமிழ்வாணி ஞானகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் முடியும் வரை வன்னிப் பகுதியிலும், அதன் பின்னர் இம்மாதத்தின் முதல் வாரம் வரை வடக்கே வவுனியாவில் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தாகக் கூறும் அவர் அப்போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து தனது கருத்தினை தமிழோசையிடம் வெளியிட்டார்.

தனது உறவினர் ஒருவரை சந்திக்க விஸ்வமடு பகுதிக்கு விடுமுறைக்காக சென்றதாக் கூறும் அவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாக் காலம் முடிந்த பிறகும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகக் கூறுகிறார்.

போர் இடம் பெற்ற காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற கடுமையான மோதல்களில் பல மக்கள் உயிரிழக்க நேரிட்டதை தான் நேரில் கண்டதாகவும், காயப்பட்ட மக்களுக்கு உதவ முடியாமல் மருத்துவமனைகள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

மருத்துவ துறையில் ஓரளவு பயிற்சி உள்ளதாக கூறும் அவர், போர் காலத்தில் அங்கு இருக்க நேரிட்ட சமயத்தில் அங்கு காயப்பட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்ததாகவும் கூறுகிறார்.

போர் இடம் பெற்ற சமயத்தில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தன்னால் சரியான கணக்கு தரமுடியாது என்றும் தெரிவிக்கிறார்.

விடுதலைப் புலிகளால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை தான் பார்க்கவில்லை என்று கூறும் தமிழ்வாணி, ஆனால் மருத்துவமனைக்கு வந்தவர்கள் அனைவருமே ஷெல் தாக்குதலால்தான் காயப்பட்டு வந்தார்கள் என்று தெரிவிக்கிறார்.

வன்னி யுத்தத்தில் மக்களை மனிதக்கேடயங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை என்று, முள்ளிவாய்க்காலில் இருந்து இலண்டன் மீண்டிருக்கும் செல்வி ஞானகுமார் தமிழ்வாணி என்ற யுவதி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சிக்கு இன்று (16.09.2009) இரவு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு செல்வி தமிழ்வாணி குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மக்களின் வாழ்விடங்களை இலக்கு வைத்து சிறீலங்கா படைகள் நிகழ்த்திய தாக்குதல்களில் நாள்தோறும் பெரும் தொகையில் மக்கள் பலியானதை சுட்டிக் காட்டியிருக்கும் செல்வி தமிழ்வாணி, உலக சமூகத்தின் மீது தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்து நம்பிக்கையிழந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் மீதான தாக்குதல்களை சிறீலங்கா படையினர் நிகழ்;த்தினார்கள் என்பதை எவ்வாறு அறுதியிட்டுக்கூற முடியும் என்று சனல்-4 செய்தியாளர் வினவிய பொழுது, அதற்குப் பதிலளித்த செல்வி தமிழ்வாணி, வன்னி மக்களுடன் வாழ்ந்து அவர்களுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள், மக்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக விளக்கமளித்தார்.

மக்களை மனிதக்கேடயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சனல்-4 செய்தியாளர் வினவிய பொழுது, அதற்குப் பதலளித்த செல்வி தமிழ்வாணி, தான் அறிந்தவரையில் மக்களை மனிதக்கேடயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதில்லை என்று மீண்டும் உறுதிபடக் கூறினார்.

இறுதி நாளில் முள்ளிவாய்க்காலை விட்டு தான் வெளியேறிய பொழுது, இறந்த குழந்தையின் உடலத்தை அடக்கம் செய்வதா? அல்லது எடுத்துச் செல்வதா? என்று செய்வதறியாது அங்கு பரிதவித்து நின்ற தாய் ஒருவரை தான் கண்ணுற்றதாகவும், இப்படியான பேரவலத்தையே வன்னி மக்கள் எதிர்நோக்கியதாகவும் செல்வி தமிழ்வாணி சுட்டிக் காட்டினார்.

அத்துடன், தமிழ் மக்களை உலகம் சமூகம் ஏமாற்றியிருப்பதாகவும், தனது செவ்வியில் செல்வி தமிழ்வாணி மேலும் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவை தனது வதிவிடமாகக் கொண்ட உயிரியல் மருத்துவ பட்டதாரியான செல்வி தமிழ்வாணி, கடந்த 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வன்னி சென்று, மக்களுக்கான பொதுப்பணிகளில் ஈடுபட்டதோடு, முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்த மக்களோடு கூடப்பயணித்து, அவர்களின் துன்ப துயரங்களில் பங்கேற்று, முள்ளிவாய்க்கால் பகுதியை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து மக்களோடு மக்களாக அங்கிருந்து வெளியேறி, வவுனியா மனிக்பார்ம் வதைமுகாமில் நான்கு மாதங்கள் சிறைப்பட்டு, தற்பொழுது பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார்.

♥ பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள்-நக்கீரன் செய்தி ♥



              ம.தனபாலசிங்கம்ஆஸ்திரேலியா சிட்னி நகரில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர். ஓய்வு பெற்ற கணக்கர், ஆழமான தமிழ் அறிஞரும்கூட. அவரது இளைய சகோதரர் தமிழீழ மண் மீட்புக்காய் தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்.

                ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக உலக நாடுகள் பலவற்றிலும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் சிலரை இந்தி யாவின் வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பு "ரா' (தஆர) கடந்த 17 ஆண்டுகளில் விசாரித்துள்ளது. அவ்வாறு விசாரிக்கப்பட்டவர்களில் தனபாலசிங்கமும் ஒருவர். 2001-ம் ஆண்டு சிட்னி நகரில் "ரா' அமைப்பின் இரு அதிகாரிகள் அவரை நேர் கண்டனர். அவர்களுக்கு தனபாலசிங்கம் கூறிய பதிலின் ஒரு பகுதி இது:

""எனது உடல் மிகவும் பலவீனமுற்றிருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராய் இருப்பதற்கு அடிப்படைத் தேவையான மனத் துணிவும், அர்ப்பண உணர்வும் எனக்கு இல்லை. தமிழர் களாகிய எமது ஆதர்சனமான அந்த மாபெரும் இயக் கத்தில் அங்கமாக இருக்க வேண்டுமென்றால் "உயிரினும் மேலாய் என் சுதந்திரத்தை மதிக்கிறேன்; உயிரே போயினும் என் விடுதலையை விட்டுக்கொடுக்கவோ, விலை பேசவோமாட்டேன்' என்று குரல் எழுப்பி முழங்கு கிற அச்சமின்மையும், உறுதியும் தேவை. அது எனக்கு இல்லை. நான் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினன் அல்லேன், பிரபாகரன் அவர்களை நான் சந்தித்தது மில்லை. ஆனால் உலகெங்கும் பல்வேறு நிலப்பரப்பு களிலும் தூரக்கடல்கள் கடந்தும் வாழ்கிற லட்சோப லட்சம் தமிழர்களைப்போல் எனக்கும் கனவொன்று உண்டு. மரணிப்பதற்கு முன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நேரில் காணவேண்டுமென்ற கனவு அது. பணிவுடன் அந்த மாமனிதன் முன் தெண்டனிட்டுத் தலை வணங்கி, ""நன்றியப்பா... எமக்கான மாண்பினை மீட்டுத் தந்தமைக்கு நன்றி. உன்னால் தமிழர்களாகிய நாங்கள் இன்று தலைநிமிர்ந்து நடக்கிறோம். நன்றி... நன்றி!'' எனச் சொல்ல வேண்டும். இது மட்டுமே ஆஸ்திரேலியாவில் வாழும் பலவீனமான இத்தமிழனுக்கு இருக்கிற இறுதிக் கனவு. தனபாலசிங்கம்போல் உலகில் இன்று கோடி தமிழர் உண்டு.

தனக்குப் பாடல்கள், பொதுவில் இசை பிடிக்கும். ஆனால் பாட வராது என நான் நேர்கண்டபோது வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறி யிருந்தார். "உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய தமிழ்ப்பாடல் ஒன்றைச் சொல்லுங்களேன்' என்றபோது முகம் மலர்ந்தவராய்,

"அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா...

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா'

என்று உச்சரித்துப் பதிவாக்கினார். அப்பாடலில் தொடரும் வரிகளை அவர் சொல்லவில்லை. ஆனால் தனபாலசிங்கம் போன்ற பலநூறு தமிழர்களின் உணர்வுப் பதிவுகளை இந்நாட்களில் இணையதளங்களில் கண்ணுறும்போது வரலாற்றுப் புகழ்பெற்ற அப்பாடலின் தொடரும் மறக்க முடியாத வரிகளை இங்கு எழுதவேண்டும்போல் தோன்றுகிறது.

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம்தனிலே நிற்கின்றார்.'

நடேசன் சத்தியேந்திரா லண்டனில் வாழ்ந்து வரும் புகழ்பெற்ற சட்ட நிபுணர். வாழ்வில் சந்திக்க வேண்டுமென விரும்பிய, விரும்பும் மனிதர்களில் இவரும் ஒருவர். அனைத்துலக அரசியல் சட்ட நுணுக் கங்களில் அசாத்தியமான நுண்ணறிவும் திறனும் கொண்டவர். 2002 அமைதிப் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் இவரை ஈடு படுத்தியிருக்க வேண்டுமென நண்பர்கள் பலரிடம் நான் கூறிய துண்டு. நல்லவர், நடுநிலையாளர் என பலரும் சொல்லிக் கேட்டி ருக்கிறேன். அவரும் இணைய இதழ் ஒன்றில் எழுதியிருந்தார். ஒரு காலத்தில் பிரபாகரன் அவர்களுக்கு இணையானவராக மதிக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டு அவர்களை 1990-களில் நடேசன் சத்யேந்திரா சந்தித்திருக்கிறார். 1993-ல் கிட்டு வீரமரணம் அடைந்தபோது அவரைப்பற்றி சத்யேந்திரா பின்வருமாறு எழுதினார் :

""தமிழ் ஈழத்தின் உண்மையான அறிவுஜீவிகளில் ஒருவர் கிட்டு. புத்தகங்கள் படித்தும், பிறர் பேசக்கேட்டும் பெற்றுக்கொண்டவற்றை தம் சொந்த சிந்தனைகள்போல் சித்தரிக்கும் போலி அறிவு மரபுக் காரனல்ல கிட்டு.

எப்போது, எவ்வாறு செய்ய வேண்டுமென்ற தெளிவும், நேர்மை யுமின்றி "அப்படிச் செய்திருக்க வேண்டும்', "இப்படிச் செய்யவேண்டும்' என்றெல்லாம் வாய்ப்பந்தல் கட்டும் அரைகுறை அறிவுஜீவியுமல்ல கிட்டு. விடுதலைப்பயணம் ஏதோ விரைவு ரயில் வண்டிபோல என்று நினைத்து துரித அதிரடி பலன்களை எதிர்பார்க்கும் முதிரா கனியுமல்ல கிட்டு. கிட்டு நிறைய படித்தார். தனது வாழ்வின் அனுபவங்களினூடே கற்றுக்கொண் டவைகளை படித்தவற்றோடு இணைத்தார். அந்த இணைவில் பிறந்த திட்டங்களை முன்னிறுத்தி, தான் சந்தித்த தமிழர்களை செயலுக்குத் தூண்டினார். அவரைப் பொறுத்தவரை சித்தாந்தம் என்பது யதார்த்த செயற்பாடாயிருந்தது.

கிட்டுவைப் பற்றி 1993-ம் ஆண்டு, தான் எழுதிய இவ்வரிகளை மீண்டும் மேற்கோள் காட்டி இப்போது எழுதி யுள்ள சத்தியேந்திரா அவர்கள், ""கிட்டு போன்ற ஒரு மாவீரன் -அறிவாளி - மாமனிதன் தன்னிலும் மேலாக ஒருவரை தலைவன் என ஏற்றுக் கொள்வ தென்றால் அப்படியான தகுதிகள் அத்தலைவனுக்கு இருந்திருக்க வேண்டும்.'' தொடர்ந்து எழுதும் சத்தியேந் திரா, பிரபாகரன் தன்னிடம் அவ்வப்போது கூறும் சில விஷயங் களை கிட்டு கூறுவதுண்டு. அவற்றில் சில பிரபாகரனின் ஆளுமையை வெளிப்படுத்துவதாய் இருந்தன.

"பேச்சாளர்கள் தலைவர் களாவதில்லை, ஆனால் தலை வர்கள் சில வேளைகளில் பேச் சாளர்களாகவும் இருக்க வாய்ப் புண்டு!'

"தூங்குகிறவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது!'

"புதுடில்லிக்காரர்கள் வியாபாரிகள், எமது விடுதலை

வேட்கைக்கு அவர்கள் விலைபேசுகிறார்கள்!'

ஒருமுறை விடுதலைப்புலிகளின் லண்டன் அலுவலகப் பணியாளர் ஒருவர், தான் பலமுறை அணுகியும்கூட தமிழ்மக்கள் சரியான பதில் தர வில்லை, ஒத்துழைக்கவில்லை என சலித்துக் கொண்டபோது கிட்டு அப்பணியாளருக்குக் கூறினாராம், ""அதனாலென்ன... சரியான பதில் கிட்டும் வரை, ஒத்துழைப்பு வரும் வரை மீண்டும் மீண்டும் தொடர்ந்து சென்று பாரும், பேசும். உமக்குத் தெரியுமா... என்னை இயக்கத்தில் இணைய வைக்கவேண்டி தலைவர் என் வீட்டுக்கு ஆறுமுறையோ, ஏழு முறையோ வந்தார்''.

விடாமுயற்சி பிரபாகரனது ஆளுமையின் மிகப்பெரிய பரிமளிப்புகளில் ஒன்றாக இருந்தது. அதுவே ""விழ விழ எழுவோம்'' என்ற புலிகளின் தாரக மந்திரமாகவும் மாறியது. "வெற்றி -பெற்றுக் கொள்வதற்கு, தோல்வி -கற்றுக்கொள்வதற்கு' என்று பிரபாகரன் அடிக்கடி தளபதிகளிடமும் போராளிகளிடமும் கூறு வதுண்டாம். மக்கள் படும் துன்பங்கள்தான் அவரை கவலைக் குள்ளாக்குமேயன்றி தானும் இயக்கமும் சந்திக்கிற பின் னடைவுகள் புதிய உத்வேகத்தையே அவருக்குத் தந்திருக் கின்றன என்பதை நான் பேசிய எல்லா தளபதியர்களும் குறிப்பிட்டனர். இந்த அவரது குணாம்சம் இயக்கத்தின் இலட்சியம் நோக்கிய விடாப்பிடித்தனமான உறுதியை ஒவ்வொரு போராளியினதும் தாரக மந்திரமாக ஆக்கி யிருந்த தென்பதே உண்மை.

அதேவேளை தமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பணிவும் அவரிடம் இருந்திருக்கிறது. "எங்கு பிழை விட்டோம் என்று யோசியுங்கள்' என்பதும் அவர் அடிக்கடி குறிப்பிடும் ஒன்று எனச் சொல்கிறார்கள். "சர்வாதிகாரி' என இந்திய -உலக ஊடகங்கள் அவர் பற்றி உருவாக்கிய பிம்பத்திற்கு அப்பால், யதார்த்தத்தில் கேள்வி கேட்கும் கலாச்சாரத்தை அவர் மிகவும் ஊக்கு வித்தார் என்றே பலரும் எனக்குக் கூறினர்.

நான் அவரை நேர் கண்டபோது "அச்சம் என்பது மடமையடா' பாட்டு தனக்குப் பிடிக்குமெனக் கூறியதை முன்னர் எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட மற்றொரு பாட்டு 1960-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த "உயிர் மேல் ஆசை' படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி கே.பி.சுந்தராம்பாள் பாடிய

"கேளு பாப்பா... கேள்விகள் ஆயிரம் கேளு பாப்பா...

கேட்டால் கிடைப்பது பொது அறிவு,

இந்த கேள்வியில் வளர்வது பொது அறிவு'

என்ற பாடல். அந்தப் பாடலில் தொடர்ந்து வருகின்ற

"கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்

அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்

பயந்தவன் தனக்கே பகைவனானான்

என்றும் துணிந்தவன் உலகிற்கு ஒளியானான்!'

என்ற வரிகளையும் சிலிர்ப்புடன் சொல்லிக் காட்டினார்.

மே-04 இளைய போராளித் தலைவர்களிடம்...

""கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்,

அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்!''

என்ற வரிகளையும் சொல்லி ஊக்குதல் தந்திருக்கிறார் பிரபாகரன். நிறைவாக அன்றைய நாளில் அவர் சொன்னது தமிழ் வரலாறு மறக்க முடியாத, மறக்கவும் கூடாத ஒன்று. உலகத்தமிழ் மக்கள் அனைவருக்குமான சவால். அது என்ன?

(நினைவுகள் சுழலும்)

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16475




                          வேலுப்பிள்ளைபிரபாகரன் அவர்கள், மே-4-ம் தேதியன்று இளைய தளபதியருக்கு நிறை வாகக் கூறியவை இரண்டு விஷயங்கள். முதலாவது, ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமகால பின்னடைவு களுக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித் தது. இரண்டாவது, ஈழ வரலாற்றின் கடைசி மன்னன் பண்டாரவன்னியனின் வாள் பற்றியது. தமிழ் எழுச்சிக்கான முழக்கமாகவும், அறைகூவலாயும் பண்டாரவன்னியனின் வாளை வரலாற்றுக் குறி யீடாக நிறுத்திய பிரபாகரன் அவர்களின் உணர்ச்சி மிகு உரை நிறைவை உங்களுக்குச் சொல்லுமுன், மறக்க முடியாத முக்கியமான கடிதம் ஒன்றை இங்கு நான் திறந்து படிக்க வேண்டும். பிரபாகரன் போராட் டப் பின்னடைவுக்கான காரணங்களாய் முள்ளிவாய்க் கால் களத்தில் நின்றுகொண்டு பட்டியல் இட்டவற்றிற் கும் அக்கடிதத்திற்கும் நிறைய தொடர்பிருப்பதால், இங்கு அதனை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

பலநூறு முறை, ஏன் பல்லாயிரம் முறை வேண்டுமா, வேண்டாமா என்று யோசித்துக் குழம்பிய பின்னரே அக்கடிதத்தின் சில பகுதிகளை இங்கு பதிவு செய்யும் முடிவினை எடுத்தேன். அக்கடிதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு நான் எழுதிய பதினேழு பக்கக் கடிதம். 2002-ல் அவரை நேர்காணச் சென்றபோது எழுதிக் கையிலெடுத்துக் கொண்டு போனேன். நேரில் பார்க்க எப்படியிருப் பாரோ, கடிதத்தின் விஷயங்களை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்றெல்லாம் அப்போதே தயங்கினேன். ஆனால் அவரது எளிமையும் இயல்பான அணுகுமுறையும் தந்த துணிவில் கடிதம் தாங்கியிருந்த கருத்துக்களை படபடவென்று சொல்லி முடித்துக் கொண்டு கடிதத்தையும் கொடுத்தேன். இதுபற்றி முன்பொருமுறை "மறக்க முடியுமா?' கட்டுரையொன்றில் நான் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து இத்தொடரை படித்து வரும் வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

சராசரி அரசியல்வாதிகளைப்போல் பொதுமேடை களில் வாய்ப்பந்தல், தோரணங்கள் கட்டும் பழக்கம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இல்லையே தவிர, இயல்பான நட்புச் சூழமைவில் அவர் கலகலப்பான வாயாடி என்பதை அவரை நேர்கண்ட ஒரு நாளிலேயே தெரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தது. எனது எல்லா கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் பதில் தந்த அவர், நான் எழுதியிருந்த அக்கடிதத்தின் கருத்துக்களுக்கு மட்டும் பதில் தரவில்லை. ஆனால் அவற்றை நான் கூறியபோது கூர்மையாகக் கேட்டார், அதனிலும் கூர்மையாக என்னைப் பார்த்தார். அவர் முகத்தில் துயரம் கவிந்ததை அக்கணத்தில் என்னால் உணர முடிந்தது.



எனது கெட்ட-நல்ல பழக்கங்களில் ஒன்று மனதில் பட்டதை கரடு முரடாகவே சொல்லிவிடுவது. பிரபாகரன் அவர்களிடம் பேசியதோடு நான் நிறுத்தவில்லை. தமிழ்ச் செல்வன் அவர்களிடமும் அக்கடிதக் கருத்துக்களை வாதிட்டேன். அவரோ வாய் திறக்கவில்லை. தனது தனி முத்திரையான புன்னகை ஆயுதத்தால் என்னை கட்டுக் குள் வைத்திருந்தார். அதற்குப் பிறகு தளபதி பால்ராஜ் அவர்களிடமும் கொட்டித் தீர்த்தேன். உள்ளத்தில் கள்ளமில்லா குழந்தையாயிருந்த பால்ராஜ் மட்டும் ""ஓம் ஃபாதர்... இதத்தான் நாங்களும் சொல்லுறம் ஃபாதர்... தலைவரும் உப்பிடித்தான் நினைக்கிறார். பேச்சுவார்த்தைக்குப் போயிட்டம். எப்படி இந்த முற்றுகைக்குள்ளிருந்து வெளியே வரப் போறமென்டுதான் சரியான குழப்பமா கிடக்கு'' என்றார்.

1995 முதல் 2002 வரை தமிழ்ஈழ மக்களுக்கான பணிகளில் முழுநேரப் பணியாளன் போல் ஈடுபட்டிருந்த நான், 2002-ல் இந்தியா வந்து அமைதியாக வேறு களங்களைத் தெரிவு செய்தது ஏன் என்ற கேள்விக்கான பதிலும் அந்தப் பதினேழு பக்கக் கடிதத்தில் இருந்தது.

வெற்றியின் நாளில் சற்றே விட்டு விலகி நிற்பதும், தோல்வியின் இடரின் பொழுதில் எதிர்கொண்டு அருகில் களம் நிற்பதும் நல் அறம் என ஆழமாய் நம்புகிறேன். எல்லா தருணங்களிலும் அதன்படி வாழ இயலாதுபோயினும் எப்போதும் அதனை உள்ளத்தில் இருத்த வேண்டுமென்பதில் இடைவிடா நினைவுபடுத்தல் செய்வதுண்டு.

துன்புறும் ஈழமக்களுக்கான பணியில் நான் தீவிரமாக உள்நுழைந்தது மிகவும் நெருக்கடியான காலத்தில். ராஜ பக்சே கொடுங்கோலர்கள் தமிழர் இன அழித்தலை ""மனிதாபி மான மீட்பு நடவடிக்கை'' என்று எப்படி மோசடி வனைந்தார் களோ அப்படி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ""சமா தானத்திற்கான யுத்தம்'' (War For Peace) என சந்திரிகா குமாரதுங்கே அம்மையார் மோசடி வனைந்த காலம். முப்படைகளும் பெரும் எடுப்பில் தமிழ் ஈழத்தின் இதயமான யாழ்ப்பாணத்தை அடிமை கொள்ள முற்றுகையிட்டு முன் நகர, பத்து லட்சம் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாகி வலிகாமம், தென்மராட்சி, வன்னிக்காடுகள் என தஞ்ச மடைந்த காலம். இன்று வவுனியா திறந்தவெளிச் சிறையில் தமிழர்கள் படும் அத்தனை இடர்களையும் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டே அம்மக்கள் பட்ட காலம். அம்மக்க ளின் மீது இடைவிடா யுத்தம். உணவு, மருந்துப் பொருட்கள் தடை என சந்திரிகா அம்மையார் "சமாதானத் திற்கான' இன அழித்தல் நடத்திய காலம்.

அக்காலத்தில் இந்தியா-தமிழகம் தவிர்த்து உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார் களோ அங்கெல்லாம் சென்றோம். துன்புறும் ஈழத் தமிழ் மானுடத்தோடு உலகத் தமிழ் உணர்வு களை, உறவுகளை இணைத்தோம். பசி, பட்டினி யிலிருந்து அம்மக்களைக் காக்க அணிதிரண்டு உழைத்தோம். யுத்தம் அனாதைகளாக்கிய பல்லாயிரம் குழந்தைகளுக்கு புதிய குடும்பங்களில் தொட்டில் கட்டினோம். யுத்தம் சிதறடித்த பல்லாயிரம் உறவுகளை மீண்டும் இணைத்தோம்.

1996-ல் ஏழுபேர் நாங்கள் பேசுவதைக் கேட்கவந்த நகரில் 1997-ல் ஈராயிரம் பேர் வந் தார்கள். அதற்குப்பின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டிசுட்டான், கரிப்பட்ட முறிப்பு, பளை, பரந் தன், ஆனையிறவு என 2000-ம் ஆண்டில் போர்க் கள வெற்றிகளின் உச்சத்தை விடுதலைப்புலிகள் தொட, ஈராயிரம் தமிழர் கூடிய நகர்களில் இருபதாயிரம் பேர் கூடினர். ஐயங்கள், அச்சங்கள் தவிர்த்து தமிழீழ விடுதலைக்காய் கடமையாற்ற பலர் முன்வந்த காலம் அது. யாழ்குடாவின் வாயிலில் புலிகளின் படையணிகள் நின்றன. "யாழ்ப்பாணத்தை பிடித்து விட்டால் தனி நாடு அங்கீகாரம் தருகிறோம்' என உலக நாடுகள் சில ரகசிய வாக்குறுதி கொடுத்திருந்ததாய் அப்போது செய்திகள் உலவிக்கொண்டி ருந்தன. புலிகளது போர்க்கள வெற்றிகளின் உச்ச தருணத்தில்தான், தமிழீழக் கனவு வெகு அருகில் வந்து விட்டதென்ற பொழுதில்தான் பணிக் களத்தை விட்டு நான் அகன்று விலகி வந்தேன். காரணம்... என்னவென்பதை அக்கடிதம் தாங்கியிருந்தது.

பதினேழு பக்க கடிதத்தை ஒருவரிச் செய்தியாகச் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் : ""சமாதானப் பேச்சுவார்த்தை களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் ஒத்துக் கொண்டது மிகப்பெரும் வரலாற்றுத் தவறு. இதற்காக விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல தமிழர் வரலாறும் நிரந்தரமாய் வருத்தப்படும்'' இதோ கடிதத்தின் சில பகுதிகள்:

""தமிழ்ஈழ தேசியத் தலைவர் என ஈழத்தமிழ் மக்கள் போற்றிக் கொண்டாடும் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு, வணக்கம்.

பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன், பிழையெனின் பொறுத்தருள்க.

யுத்தக்களத்திலும் காலத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கம் எடுக்கிற முடிவுகளை தமிழ் மக்கள் கேள்விக்குள்ளாக்குவதில்லை. ஆனால், அமைதியின் காலத்தில் அவ்வாறு இருத்தலாகாதென்றும், கட்டற்ற விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டு மென்றும் கருதுகிறேன். அவ்வகையில் இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தற்போதைய சூழலில் தாங்கள் எடுத்துள்ள முடிவு தவறானதென்றும், இதற்காக தமிழீழ வரலாறு மிகவும் வருத்தப்படவேண்டி வருமென்றும் மிகுந்த பணிவுடன் சொல்லத் தலைப் படுகிறேன். எனது இந்நிலைப்பாட்டுக்கான கார ணங்களையும் இங்கு சமர்ப்பிக்கத் தலைப்படுகிறேன்.

1. ""ஓயாத அலைகள்'' தொடர் வெற்றிகள் மூலம் ஆனையிறவை வீழ்த்தி, யாழ்குடா நாட்டின் வாயிலில் நின்றீர்கள். தொடர்ந்து "வாழ்வா - சாவா' என்று இலங்கை ராணுவம் முன்னெடுத்த மிகப்பெரிய "அக்னிஹேலா-தீப்பிழம்பு'' நடவடிக்கையை சின்னா பின்னமாக்கிச் சிதைத்தீர்கள். அப்பாவித் தமிழர்களின் அனுதின வாழ்வை அச்சுறுத்திய விமானப்படையை உலகமே வியக்கும் வண்ணம் கட்டுநாயகே தாக்குதல் மூலம் சிதைத்தீர்கள். நாளொன்றுக்கு சராசரி 100 ராணுவத்தினர்... இலங்கை ராணுவத்தினர் தப்பியோடிக் கொண்டிருந்தனர். தொடர் யுத்தத்தின் சுமை யை தாங்க முடியாது, இலங்கை பொருளா தாரம் பாதாளம் நோக்கிச் சென்று கொண்டி ருந்தது. அரசியல்ரீதியாக தென்னிலங் கை கொந்தளிக்கத் தொடங்கியிருந் தது. ராணுவரீதியாக இலங்கையின் முப்படைகளும் தமது தன்னம்பிக்கை யை இழந்திருந்தன. மூர்க்கத்துடன் முன்னோக்கிச் சென்று, யாழ்குடாவையும் வென்று ஒட்டுமொத்த இலங்கை அரசமைப்பை மண்டியிடச் செய்வதற்கு ஏற்ற தருணம் இதைவிட வேறொன்றும் நிச்சயம் உங்க ளுக்குக் கிடைக்கும் என நாம் நினைக்கவில்லை. இதுவரை தமிழர்களின் உதவிக்கு வராத, நாளை தமி ழர்களுக்கான நீதிக்கு உத்தரவாதமாய் நிற்கப் போகாத உலகநாடுகளை நம்பி தாங்கள் சண்டை நிறுத் தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் ஒத் துக்கொண்டிருப்பது உண்மையில் செத்துக்கொண்டி ருக்கும் இலங்கையின் ராணுவ, பொருளாதார, அர சியல் அமைப்புகள் மீண்டும் மூச்சுபெற்று உயிர்பெறக் கொடுக்கும் வாய்ப்பாகும். இதற்காக நிச்சயம் தமிழர்களாகிய நாம் வருத்தப்பட வேண்டியது வரும்.

2. நானொன்றும் நிறைய படித்தவனல்ல -அனுபவ முதிர்ச்சி கொண்டவனுமல்ல. ஆயினும் அரசியல் விஞ்ஞான மாணவன் என்ற வகையில் என் சிற்றறிவு அறிந்து ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் தம் இறுதி இலக்கை அடை கின்றவரை போராடிக்கொண்டிருந்தால் மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும். சண்டை நிறுத்தம் தந்திரோபாயமான சிறு இடைவெளியாக இருக்கலா மேயன்றி, இப்போது நிகழ்வதுபோல் நீண்ட இடைவெளியாக இருத்தலாகாதென்றே கருதுகிறேன்.

3. முப்பது ஆண்டுகாலம் உங்களோடு சண்டை யிட்டு சாதிக்க முடியாத ராணுவ நலன்களையும் அனுகூலங்களையும் இச்சமாதான காலத்தில் இலங்கை ராணுவம் சாதிக்க முயலும். இந்தியா-மற்றும் உலகநாடுகளின் துணை இருப்பதால் அவற்றை நிச்சயம் இலங்கை சாதித்துவிடும்.

எவ்வாறு?

(நினைவுகள் சுழலும்)

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16754


பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள்


http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/05/prabhakaran.jpg

டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி சார்பில் `இலங்கை தமிழரின் உரிமையை காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் பரந்தாமன் பேசுகையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை கூறி பேசினார்.


இலங்கை தமிழர்கள் படும் அவல நிலைகளை நேரில் கண்டு அதை படமாக எடுத்து வந்து உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டாக்டர் எலைன்சான்டர், இந்தியா வருவதற்கு தடை விதித்ததால், அவர் இங்கு கருத்தரங்கில் பேச இருந்ததை வீடியோ படமாக எடுத்து அனுப்பி இருந்தார். அதை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16739


இலங்கையில் தயாராகும் ஜவுளியை வாங்கமாட்டோம்: ஐரோப்பிய நாடுகள்

http://img141.imageshack.us/img141/200/viduthaipoorniyayamzt3.jpg

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்கள் நடைபெற்று வருவதால், இலங்கையில் தயாராகும் ஜவுளியை வாங்க மாட்டோம் என்று ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.
 
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 
இருந்தும், இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்நிலையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இதற்கு பதில் அளிக்கும்படியும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இலங்கை அரசு இதுகுறித்து பதில் அளிக்கவில்லை.
 
ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையில் தயராகும் ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் ஏற்றுமதியாகிறது. அவற்றை ஏற்றுமதி செய்ய இலங்கை அரசுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வந்தது.
 
இதற்கிடையே, மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அறிக்கைக்கு இன்னும் பதில் தெரிவிக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால இன்னும் 3 வருடத்துக்கு இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகை நீடிக்கப்படமாட்டாது.
 
மேலும் ஜவுளி உள்ளிட்ட பொருட்களையும் வாங்க மாட்டோம் என ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
 
ஆனால் இந்த விவகாரத்தை கையாள ராஜபக்சே 4 அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து இருந்தார். அந்த குழு அறிக்கை அளித்திருந்தது.
 
அதில் தங்களுக்கு திருப்தி இல்லை. தெளிவான, உறுதியான பதில் வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் ஒன்றிய அதிகாரிகள் கூறி விட்டனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16626

பிரபாகரனையே தெரியாதவர்களுக்கு ஏன் தண்டனை?


இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இலங்கையில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்பு குழுவின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,  அவ்வியக்கத்துடன் தொடர்பில்லாதவர்கள் இன்று வன்னி அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு பிரபாகரனையே தெரியாது.

பிரபாகரனுடன் நெருங்கிப் பழகிய இருவரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் இந்த மக்கள் மட்டும் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்?

விடுதலைப் புலிகளுடனான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.

மக்களை அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கு அரசியலமைப்பில் எந்த சட்டமும் இல்லை. வன்னி முகாம்களிலிருந்து தமிழ்ச்செல்வனின் செயலாளர் உட்பட 10 ஆயிரம் பேர் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தப்பியோடியவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும் எவ்வாறு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்''என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16709

http://www.vinavu.com/wp-content/uploads/2009/09/6.JPG


வன்னி முகாம்களில் இருந்து தினம் 40 பேர் காணாமல் போகிறார்கள்

இலங்கை சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர, நேற்று  நடைபெற்ற மக்கள் கண்காணிப்புக் குழுவின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

அப்போது அவர்,  ''வன்னி முகாம்களில் இருந்து நாள்தோறும் 30 முதல் 40 பேர் காணாமல் போகிறார்கள்.  இதுவரை 10ஆயிரம் பேர் இப்படி காணாமல் போயிருக்கிறார்கள்''என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16725

http://www.vinavu.com/wp-content/uploads/2009/09/4.JPG


பிரபாகரன் கட்டளைப்படி செயல்படுகிறார் சீமான்:போலீஸ் கமிசனரிடம் காங்கிரஸ் புகார்

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுடன் இயக்குநர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில்  வெளியானது. மேலும் சீமான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்கப்போவதாக கூறி இருந்தார்.

இதற்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் இளையான்குடி சபீர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு கொடுத்தார்.
 
அம்மனுவில் இயக்குனர் சீமான், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கட்டளைப்படி செயல்படுவதாக ஒரு பேட்டியில் கூறி உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16767

http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/seeman_vazhthukal.jpg


பெரியாருடன் பிரபாகரனை இணைத்திருக்கும் படத்துக்கு காங். எதிர்ப்பு

http://2.bp.blogspot.com/_x9XA8wx8M0k/RzW9eQUBDiI/AAAAAAAAAlA/v-iiu_AKlnM/s400/Bradlaugh+with+Periyar.JPG

ஈரோட்டில் பெரியாருடன் பிரபாகரனை இணைத்து தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த பேனரை அகற்றினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர்.



http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16695


தமிழக ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரை சிறைப் பிடிப்பு

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரை இல‌ங்கை கட‌ற்படையின‌ர் து‌ப்பா‌க்‌கியா‌ல் ‌மிர‌ட்டி ‌சிறை‌ப் ‌பிடி‌த்து செ‌ன்றன‌ர். இதனா‌ல் ராமே‌ஸ்வர‌‌த்‌தி‌‌ல் பெரு‌ம் பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று இரவு கடலு‌க்கு சென்றனர். அப்போது அவ‌ர்க‌ள் க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அ‌ங்கு வ‌‌ந்தன‌ர்.

அவ‌ர்களை பா‌ர்‌த்து பய‌ந்த மீனவர்க‌ள் படகை கரை‌க்கு ‌திரு‌ப்‌பின‌ர். அப்போது அவ‌ர்களை சு‌ற்‌றி வளை‌த்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் து‌ப்பா‌க்‌கியா‌‌ல் சு‌ட்டன‌ர்.

‌பி‌ன்ன‌ர் ‌மீ‌ன்‌பிடி சாதன‌‌ங்களை தூ‌க்‌கி எ‌‌றி‌ந்து ‌வி‌ட்டு 21 ‌மீனவ‌ர்களை ‌சிறை‌ப் ‌பிடி‌த்து செ‌ன்றன‌ர்.

அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி வ‌ந்த மீனவர்கள் நட‌ந்தவ‌ற்றை ஊ‌ர் ‌பிரமுக‌ர்‌க‌ளி‌ட‌ம் கூ‌றின‌ர். இதனா‌ல் ராமேஸ்வரத்தில் பத‌ற்றமான சூழல் நிலவுகிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16690



பிரபாகரன் படம் வைத்த பெ.தி.க நிர்வாகி கைது

http://2.bp.blogspot.com/_JIXtPYzDuAY/SNGSW1jrEfI/AAAAAAAAAJM/n2zTdmk6_eE/s320/pl0224023.jpg

பெரியாருடன் பிரபாகரன் இருப்பது போன்ற படம் வைத்த பெரியார் திராவிட கழக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

பெரியார் பிறந்த நாள் விழா ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. பெரியார் சிலை அமைந்துள்ள பன்னீர்ச்செல்வம் பூங்காவில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் தேச பொதுவுடைமை இயக்கம் சார்பில் பெரியாருடன் விடுதலைப்புலிகள் தலை வர் பிரபாகரன் இருப்பது போன்ற பெரிய கட்அவுட் வைக்கப்பட்டு சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், எம்எல்ஏ விடியல் சேகர் உட்பட காங்கிரசார் மறியல் செய்தனர். இதையடுத்து கட் அவுட் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் குமரகுருபரன்(42) மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16793


http://nimban.files.wordpress.com/2009/06/britain-tamils.jpg



pra.jpg
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!