Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Monday, July 6, 2009

♥ உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி ? ♥



உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி ?


ஒவ்வொரு வலைத்தளங்களில் மேயும் போது அவற்றின் முகவரி இருக்கும்
Address bar இல் அவர்களின் சிறிய லோகோ ( Logo ) இடம் பெற்றிருக்கும். அதே போல அந்த தளத்தின் தலைப்பு இடம்பெறும் வலை உலவியின் டேப் இல் கூட அந்த லோகோ இடம் பெற்றிருக்கும். இதனைத்தான் Favicon அல்லது Logo என்று சொல்வார்கள். என்னுடைய வலைப்பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம்.இதனை உங்கள் வலைப்பக்கத்தில் எப்படி இடம் பெறச்செய்வது எப்படி என்று பார்ப்போம்.



படிநிலை - 1

உங்களுக்கான படத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில்
twitter கணக்கு வைத்திருந்தால் அந்த படத்தை கூட எளிமையாக தேர்வு செய்யலாம். பின்னர் இந்த தளத்தில் சென்று உங்கள் படத்தை ஐகானாக மற்ற வேண்டும், ஏனெனில் முகவரிப்பட்டியில் இடம் பெறவேண்டிய குறும்படம் ஐகானாக அல்லது .gif Animated கோப்பாக தான் இருக்க வேண்டும்.

http://www.html-kit.com/favicon/


இங்கே சென்றால் உங்களுடைய படத்தை ஐகானாக அல்லது .gif கோப்பாக மாற்றி தருவார்கள். இதில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம். இங்கேயே
படத்திற்கு பின்புற வண்ணம் சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கருப்பு வெள்ளை ஐகானாக மாற்றுதல் போன்றவற்றை Customize என்பதை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம். பின்பு Download Icon Package என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் தரவிறக்கிகொள்ளவும்.

படிநிலை - 2

உங்களுக்கான குறும்படம் தயாரானபின் அதை நீங்கள் ஆன்லைனில் சேமித்தால் தான் அதை பயன்படுத்த முடியும். அதனால் இந்த குறும்படத்தை எதாவது ஒரு இணைய சேமிப்பகம் ( Online Storage Website ) வசதி உள்ள தளங்களில் சேமிக்கவேண்டும். Photobucket போன்ற பல இணையதளங்களில் ஐகான் ( .ico ) கோப்புகளை சேமிக்கும் வசதி இல்லை. நான் இறுதியாக Fileden என்ற தளத்தில் உறுப்பினராகி என்னுடைய ஐகானை சேமித்தேன்.
இணையதள முகவரி: http://www.fileden.com/

உங்களுக்கு தெரிந்த ImageHosting தளங்கள் இருந்தால் கருத்துரை இடவும். இந்த தளத்தில் ஏற்றிய பின்னர் அதற்க்கான இணைப்பை ( Link ) பெற்றுக்கொள்ளவும்.

Link இதைப்போல இருக்கும்.

http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico

படிநிலை - 3




உங்கள் blogger கணக்கில் நுழைந்து Layouts பகுதிக்கு சென்று Edit Html என்பதை
தேர்வு செய்யவும். இப்போது உங்கள் வலைப்பக்கத்தின் HTML கோடிங் பகுதியில்
சென்று Head Tag முடிவதற்கு முன்பாக கீழே உள்ள கோடிங்கை சேர்க்கவும்.
Head Tag என்பது எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால் F3 அழுத்தி தேடிக்கொள்ளுங்கள். மேலும் படத்தைப்பார்க்க விபரங்களுக்கு.


link href="http://www.fileden.com/files/2009/7/6/2500219/favicon.ico" rel="shortcut icon" type="image/x-icon"

இந்த வரிக்கு முன்பும் பின்பும் < > குறியீடுகள் சேர்த்துக்கொள்ளவும்.








மேல் உள்ள கோடிங்கில் முக்கியமான விஷயம் உங்கள் குறும்படத்திற்க்கான
Fileden இல் கிடைத்த இணைப்பை ( Link ) மாற்றி அடித்துக்கொள்ளவும். பின்னர் சேமித்து விட்டு உங்கள் வலைப்பக்கத்தை பாருங்கள்.
ஜொலிக்கிறதா என்ன ?

தொடபுடைய பதிவு :

எந்த கோப்பிலிருந்தும் ஐகான் பெற மென்பொருள்

நன்றி

http://ponmalars.blogspot.com/2009/07/favicon.html


அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

Jul 5, 2009

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த
முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்
Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.
வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த
மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.

R-Linux Recovery



இதன் தரவிறக்க சுட்டி : RLinux

இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,
Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.

இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து
வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்
கோப்புகளை மீட்கலாம்.

இது போல மற்ற இலவச மென்பொருள்கள் :

Pandora Recovery
Recover Files 2.1
PC Inspector File Recovery 4
Data Recovery 2.3.1
EASEUS Deleted File Recovery 2.1.1
Glary Undelete 1.3


நன்றி!

http://ponmalars.blogspot.com/2009/07/blog-post_05.html



♥ இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்தி கொடுபபதா? ♥

இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளது: பழ.நெடுமாறன் எச்சரிக்கை 

seeman

இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனவே, இலங்கையினால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

திண்டுக்கல், தேனி மாவட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில், "தமிழ் ஈழம் மலரும்' என்ற ஆய்வரங்கம் மற்றும் "ஐயம்தீர் அரங்கம்' நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், கலந்துகொண்டு பழ. நெடுமாறன் பேசியதாவது:

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கூடாது என்பதற்காக, சிங்கள இராணுவத்திற்கு உதவி செய்வதன் மூலம் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் நல்லதல்ல.

சீனாவின் பிடிக்குள் இலங்கை சென்றுவிட்டது. ஹம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. மன்னார் குடாவில் இந்தியா-இலங்கை கூட்டாகச் சேர்ந்து பெற்றோல் எடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் மீறி, பெற்றோல் எடுக்கும் உரிமையை சீனாவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது இலங்கை.

மேலும், இப்பகுதியில் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தையும் சீனா ஏற்படுத்தி வருகிறது.

இதன்மூலம், இந்தியாவின் எதிர்காலத்துக்கு அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எனவே, இலங்கையினால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது.

யூதர்களை ஹிட்லர் அழித்தது போல, இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழர்களை அழித்து வருகிறார். இலங்கை அரசு தரும் செய்திகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

சர்வதேச சட்டத்தையும் ராஜபக்ச மதிப்பது இல்லை. ஐ.நா. மக்களுக்கு வழங்கும் உரிமைகளையும் மதிப்பதில்லை.

ஜெனிவா ஒப்பந்தப்படி, போரில் சம்பந்தப்படாத பொதுமக்களைக் கொல்லக் கூடாது என்ற நெறிமுறைகளும் மீறப்படுகின்றன.

தற்போது 3.5 லட்சம் தமிழ் மக்களை அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ளனர். தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் கண்ணிவெடிகள் அதிகளவு புதைக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறுகிறார் இலங்கை அதிபர்.

ஆனால், தமிழர்கள் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றுகின்றார். அப்போது மட்டும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி வெடிக்காதா? உலகத்தினரை ஏமாற்றும் இலங்கை அதிபரின் செயலுக்கு இந்தியா உதவி வருகிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வளர அனுமதிக்கக் கூடாது. அது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியும் என்றார் பழ. நெடுமாறன்.

http://www.nerudal.com/nerudal.9046.html


http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/21052009_029.jpg   http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/21052009_061.jpg

♥ புலிகளின் புதிய தாக்குதல்கள்.. சிங்களப் படை அதிர்ச்சி... ♥

5ம் கட்ட (இராணுவ ரீதி) ஈழ போர் ஆரம்பித்துவிட்டதா ?!!!!‏




nakk.jpg
http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/n1527581102_30330398_7908176.jpg




வாங்கிய அடிக்கு வாய்விட்டு அலறக்கூட முடியாமல் உள்ளுக்குள்ளேயே முனகிக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசுக்கு இடுப்பு சுளுக்கு ஏற்படும் அளவுக்கு புலிகள் கொடுத்திருக்கும் புதிய அடிதான் சிங்கள ராணுவத் தலைமைக்கு உள்காயத்தை உண்டாக்கியிருக்கிறது.

இறுதி கட்டப் போரின்போதே யுத்த யுக்தியாக ஆயுதங்களேந்தி அணிஅணியாக அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்தது விடுதலைப்புலிகளின் படையணி. மாதக்கணக்கில் தாங்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் காட்டிலேயே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில்தான், காட்டுப்பகுதியில் புலிகள் முகாமிட்டிருப்பதை அறிந்து ஜூன் 2-வது வாரத்தில் சிங்கள ராணுவத்தினர் 150 பேர் தாக்குதல் நடத்த வந்தனர். ஆரம்பகட்டத்தில் எந்த எதிர்ப்பையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை. பலவீனமான நிலையில் காட்டுக்குள் புலிகள் பதுங்கி யிருப்பதாக நினைத்து முன்னேறிச் சென்றது ராணுவம். நெடுங்கேணி என்ற பகுதிக்குச் செல்லும் வரை ராணுவத்தினர் விசிலடித்துக் கொண்டுதான் போனார்கள். அதன்பிறகுதான்... ... ...

காட்டுப்பகுதிக்குள் நுழைந்த ராணுவத்தினர் 150 பேரையும் சுற்றி வளைத்தனர் புலிகள். இது விடுதலைப் புலிகளுக்கேயுரிய தனித்துவமான போர் யுக்தியாகும். ராணுவத்தினரை முன்னேற விடுவதுபோல போக்கு காட்டி, சரியான தருணத்தில் அவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவது புலிகளின் அசாத் திய போர் முறை. அதன்படி நெடுங்கேணியில் சிக்கிய ராணுவத்தினர் மீது புலிகள் கடுமை யான தாக்குதல் நடத்தினர். அவர்களிட மிருந்த ஆயுதமும், சரியான இலக்கும், விடுதலை உணர்வும் சிங்கள ராணுவத்தை சிதறடித்தன. முன்வரிசைகளில் இருந்த ராணுவ வீரர்களின் உயிரற்ற உடல்கள் பொத் பொத்தென தமிழீழக் காடுகளில் விழ, அடுத்த வரிசைகளிலிருந்து ராணுவத்தினர் சிதறி ஓடினர். அவர்களில் பலர், புலிகள் வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி பலியானார்கள். சிங்கள ராணுவம் தப்பமுடியாதபடி படை வளையம் அமைத்த புலிகள், பல திசைகளிலிருந்தும் தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் 125-க்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் உயிரை விட்டனர். எஞ்சியவர்களில் பலருக்கும் பலத்த காயம். நடை பிணங்களாகத்தான் காட்டிலிருந்து தப்பியுள்ளனர்.

நெடுங்கேணி தாக்குதலை நம்மால் நெடுநாளைக்கு மறக்க முடியாது என்ற கருத்து ராணுவ வட்டாரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கும் மேலாக புலிகள் செயல் பாட்டுடன் இருப்பதையும் வலுவான ஆயுத பலத்துடன் அவர்கள் இருப்பதையும் நேரில் கண்டுவிட்ட ராணுவம் மிரட்சியின் உச்சத் தில் இருக்கிறது. இலங்கை அதிபர் ராஜ பக்சே, ""உலகத்தை நம்பவைப்பதற்கு அரசுத் தரப்பிலிருந்தும் ராணுவத் தரப்பிலிருந்தும் நாம் பல கதைகளை விடலாம். ஆனால் விடுதலைப்புலிகளை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது'' என்று எச்சரிக்கையான குரலில் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், இந்த பலத்த அடி பற்றிய தகவல் வெளியே கசிந்துவிடக் கூடாது என பொத்தி வைத் துள்ளது ராணுவத் தலைமை.

ஈழத்தின் காட்டுப் பகுதி களுக்குச் செல்லும் ராணுவத் தினரின் உயிருக்கு உத்தரவாத மில்லை என்கிற அளவுக்கு உக்கிரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிலிருந்து நடத்தும் புலிகள். நெடுங்கேணி பகுதியில் மட்டுமின்றி, பல காடுகளிலும் புலிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேரடித் தாக்குதலிலும் கண்ணிவெடி களாலும் பலியாகும் ராணுவத்தினரின் எண்ணிக்கையை மறைப்பதிலேயே குறியாக இருக்கும் சிங்கள அரசு, தமிழர்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தனது படையைப் பாதுகாத்துக் கொள்ள வடக்கு வசந்தம் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிரமாகிவிட்டது.

தமிழர் பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து அங்கே விளை நிலங்களை உருவாக்குவது என்பதே "வடக்கு வசந்தம்' திட்டமாகும். காடுகளை அழிப்பதன் மூலமாக விடுதலைப்புலி களை அழிக்க முடியும் என நினைக்கிறது இலங்கை அரசு. ஆனால், காட்டுக்குள் நுழைந்தால் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்துவதால், "வடக்கு வசந்தம்' திட்டத்திற்காக மலையகத் தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களையும் தமிழகத்தின் அகதி முகாம்களில் இருப்பவர்களையும் கொண்டு செல்வதற்கு ராஜபக்சே அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் தமிழகத் தமிழர்களுக்கும் தங்கள் செலவில் விசா எடுத்து அழைத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தமிழர்களை நம்பச் செய்வதற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாத னை "வடக்கு வசந்த'த்தின் ஆலோசகராகவும் நியமித்துள்ளது.

உரிமைகள் மறுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு வழங்குவதாக வெளியுலகுக்கு காட்டி, அவர்களை காடுகள் அழிப்பு திட்டத்தில் இறக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. இதன் மூலமாக காட்டுப் பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளில் சிங்கள ராணுவத்தினர் சிக்காமல், தமிழர்களை உயிர்ப்பலி கொடுத்து, தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளையும் அழிக்கலாம் என கணக்குப் போட்டுள்ளது ராஜபக்சே அரசு.

காடு அழிப்பில் தமிழர்களை பலி கொடுப்பதுடன் காட்டில் உள்ள விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை அழிக்க இந்தியாவின் நவீன ரேடார் உதவி தேவை என்பது பற்றியும் சிங்கள அரசும் ராணுவமும் ஆலோசித் துள்ளது. அதன் அடுத்த கட்ட மாகத்தான் ராஜ பக்சேவின் சகோதரர் கள் டெல்லிக்கு விசிட் அடித்தார்கள் என்கிற கொழும்பு வட்டாரத்தினர், கோத்தபய ராஜ பக்சேவும் பசில் ராஜபக்சேவும் இந்தியா பறந்ததன் நோக்கம் இதுதான். தங்களின் திட்டத்திற்கு ஒப்புதலும் உதவியும் பெறுவதற்காகத்தான் இந்திய அரசின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்தனர்.

இந்தியாவின் ஒத்துழைப்பு நிச்சயமாகக் கிடைக்கும் என்று கொழும்பு திரும்பியதும் ராஜபக்சே விடம் சகோதரர்கள் தெரிவித்திருக் கிறார்கள் என்பதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் என்கிறார்கள்.

இந்திய ரேடார்களின் உதவி யுடன் காட்டில் உள்ள புலிகளின் மீது ரசாயன குண்டுகளை வீசிக் கொல்ல வும், காடு அழிப்பில் ஈடுபடும் தமிழர்களை கண்ணிவெடிகளில் பலி கொடுக்கவும் "வடக்கு வசந்தம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை உருவாக்கி யுள்ள ராஜபக்சே அரசுக்கு புதிய தாக்குதல்கள் மூலமாக கிலியை உண்டாக்கியிருக்கிறார்கள் புலிகள்.
-- பொன்ராஜ் மதியழகன் ---

nakk.jpg


கடும்பாதுகாப்பின் மத்தியில் முதலாவது கரும்புலித்தாக்குதல் இடம்பெற்ற நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப் பகுதியில் மலர் மாலைகள் வீசப்பட்டுள்ளன ‐ படைத்தரப்பு அதிர்ச்சியில் :

Captain Miller's statue

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகன் இன்று அனுஸ்டிக்கப்பட வேண்டிய நிலையில் முதல் தாக்குதல் இடம்பெற்ற நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப் பகுதியில் சர்ச்சைக்குரிய முறையில் இன்று இரவு பூமாலைகள் வீசப்பட்டுக் காணப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அப்பகுதியில் படையினரும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் 1987 ஆம் ஆண்டின் யூலை 5ம் திகதி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப் பகுதியில் இடம்பெற்றிருந்தது. கரும்புலி கப்டன் மில்லர் என்பவர் இத்தாக்குதலை நடத்தியிருந்தாh.; இதன் பிறகு விடுதலைப் புலிகள் ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தை கரும்புலி தினமாக கொண்டாடுவதும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில் பெருமெடுப்பில் இத்தினத்தில் நிகழ்வுகளை நடாத்துவதும் குறிப்பிடத்தக்கதாகும்

எனினும் சமாதான காலத்தின் போது விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தை அடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கரும்புலி மில்லரின் சிலை முற்றாக இடித்து நொருக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் படையினரின் நெருக்குவாரத்தின் மத்தியிலும் அங்கு கரும்புலி தினத்தன்று ஏதாவது அசம்பாவிதம் இடம்பெறுவதே வழமையாகும். இந்த நிலையில் கடந்த ஆண்டும் குறித்த பகுதியில் மலர்மாலைகள் வீசப்பட்டிருந்தன. படையினரின் கண்காணிப்பையும் மீறி இவ்வாறு மலர்மாலை வீசப்பட்டமை படைத்தரபிபற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இன்றைய தினமும் குறித்த பகுதியைச் சுற்றி பெருமளவு படையினர் பகல் முழுவதும் பதுங்கி காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் படையினரின் காவலையும் மீறி கரும்புலித் தாக்குதல் இடம்பெற்ற இரவுவேளை குறித்த பகுதியில் மாலைகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த சிலரே மாலைகளை வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. படையினர் கண்மூடித் திறக்கும் முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லியடி வதிரி வீதியில் அமைந்திருக்கும் இந்தப் பாடசலைக்கு அண்மையில் வதிரிச் சந்தியிலும் நெல்லியடியிலும் படையினரின் முகாம்கள் அமைந்திருக்கும் நிலையில் எவ்வாறு இவர்கள் தப்பிச் சென்றார்கள் என்பது குறித்து படைத்தரப்பு விசாரணைகளை நடத்தி வருகின்றது


http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/4664_1136245416143_1527581102_30330406_1752734_n.jpg http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/4664_1136245296140_1527581102_30330403_4565593_n.jpg



http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/n1527581102_30330412_646130.jpg http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/4664_1136245456144_1527581102_30330407_6920669_n.jpg

http://eeladhesam.com/


மட்டக்களப்பில் திடீர் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலி சிங்கள வீரரை சுட்டுக்கொன்றார்

கொழும்பு, ஜூலை. 6-

இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் பல இடங்களில் அவர்கள் பதுங்கி இருக்கின்றனர். அவர்கள் திடீரென தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மட்டக்களப்பு அருகே உள்ள கிரான்குளம் என்ற இடத்தில் மகேந்திராஜா என்ற விடுதலைப்புலி கடற்பகுதி வழியாக தப்பி செல்ல முயன்றார்.
இதை பார்த்த சிங்கள படையினர் அவரை பிடிக்க சுற்றி வளைத்தனர். அப் போது அவர் சிங்கள வீரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து அவர்களை நோக்கி சுட்டார்.
இதில் சிங்கள வீரர் ஒருவர் பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர். உடனே மற்ற வீரர்கள் மகேந்திர ராஜாவை நோக்கி சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார்.

அவரை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ராணுவ வீரர்களும் அதே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் மேலும் விடுதலைப்புலிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதி தேடி வருகின்றனர்.

http://www.maalaimalar.com/2009/07/06111611/CNI03060709.html



smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!