Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, July 23, 2009

♥ இந்தியாவை பார்த்து மிரண்டு போன ராஜபக்சே! - வீடியோ ♥

இந்தியாவை பார்த்து மிரண்டு போன ராஜபக்சே! - வீடியோ


லங்கை அரசுக்கு இந்தியா முன் வந்து ஆயுத உதவியும், பண உதவியும் இப்போது தாராளமாக வழங்கி வரும் சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே 1987 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது அவர் ஒரு மனித உரிமைகள் சட்டதாரியாக இருந்தபோது ஒரு அயல் நாட்டு ஊடகத்தில் இந்தியாவை பற்றி தெரிவித்த கருத்துகள்...

"வீடியோ" வை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://transcurrents.com/tc/2009/05/then_and_now_president_mahinda.html

அவர் சொன்ன கருத்துகளின் சாராம்சம் இது தான்.

இந்தியா எங்கள் நாட்டுக்குள் உட்புகுந்து விட்டது.அவர்கள் தங்கள் வசம் எங்கள் நாட்டை வைத்திருக்கப் பார்க்கிறார்கள்.

100 ஆயிரம் இந்தியப்படை வீரர்கள் இங்கு இருக்கிறார்கள்,எங்களுக்கு பயமாக இருக்கிறது,அவர்கள் தெற்குப் பக்கமும் வந்து இதையும் ஆக்கிரமித்து விடுவார்களோ என்று.நாங்களும் இந்தியாவின் ஒரு பகுதியா இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

"சோழியன் குடும்பி சும்மா ஆடாது" ன்னு சும்மாவா சொன்னாங்க. ராஜபக்ஷேவின் இந்த ரத்தத்தோடு ஊறி விட்ட இனவெறியை இந்தியா எப்போது புரிந்து கொள்ளும்.

இந்த தகவலை அறியத்தந்த "தங்க முகுந்தன்" அவர்களுக்கு நன்றி.


http://www.sakthipages.com/2009/07/blog-post_9515.html

♥ இதோ அவன் மின்னஞ்சல் உங்கள் உணர்வுகளை அவனிடம் பதிவு செய்யுங்கள் .♥

இலங்கைக்கு உதவ வேண்டாம்-எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சீமான் எச்சரிக்கை


சிங்களர்களை வளப்படுத்துவதற்காக தமிழக நிலங்களை மேம்படுத்த எம்.எஸ்.சுவாமிநாதனைப் பயன்படுத்த இலங்கை முயல்கிறது.

எனவே எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. மீறி அவர் சென்றால் சென்னையில் உள்ள சுவாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்

என்று இயக்குநர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:

இலங்கை அரசு வடக்கில் வசந்தம் என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்களது பூர்வீக பகுதியில் குடியமர்த்தப் போவதாக கூறி உள்ளது.

ஆனால் இதுவரை தமிழர்கள் யாரும் குடியமர்த்தப்படவில்லை. சிங்கள ராணுவ, போலீசார் குடும்பத்தினரும் நிர்வாகத்தில் உள்ள சிங்களர்கள்தான் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

இதற்காக இந்தியா வழங்கிய ரூ.500 கோடியையும் தமிழக அரசு கொடுத்த ரூ.100 கோடியையும் சிங்கள அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இந்திய, தமிழக அரசுகள் இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க வேண்டும்.

இலங்கை வடக்கில் தமிழர் பகுதிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் சிங்களர்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்கள் வசித்த இடத்தில் வீடு கட்டி கொடுக்காமல் சிங்கள அரசு சொல்லும் இடங்களில் வசிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்க�
�்.

19 பேர் கொண்ட இலங்கை குழுவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் 2 தம்பிகள், 8 ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் சிங்களர்கள். ஒரு தமிழர் கூட இல்லை. இந்த குழுவா தமிழர்களுக்கு வசந்தமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது?

இதை இந்திய அரசும், தமிழக அரசும், சர்வதேச சமூகமும் தட்டிக்கேட்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் வரை அடுத்த நாட்டு விவகாரத்தில் எப்படி தலையிடுவது என்று கேள்வி எழுப்பிய மத்திய அரசு ரூ.500 கோடி கொடுத்தது வேடிக்கையானது. இந்த தொகையை வைத்துதான் கண்ணி வெடிகளை அகற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

நெற்களஞ்சியமான கிளிநொச்சி, மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விளை நிலங்களை சிங்களர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள விவசாய நிலங்களில் விவசாய புரட்சி ஏற்படுத்துவதாக கூறி தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து பேசி உள்ளார்.

முழுமையான விவசாய திட்டங்களை செயல்படுத்த மீண்டும் எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லப் போவதாக அறிந்தோம். இதனால் சிங்களர்கள்தான் பயன் அடைவார்களே தவிர தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவது இல்லை.

தமிழர்கள் அனைவரும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள்? இது சிங்களர்களை வளப்படுத்தும் முயற்சி. எனவே எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. விவசாயப் புரட்சிக்கான திட்டங்களையும் அவர் வழங்கக்கூடாது.

இதை மீறி அவர் இலங்கை சென்றால் தமிழ் உணர்வுள்ள மக்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள எம்.எஸ்.சாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

எம்.எஸ்.சாமிநாதன் தமிழர்கள் உணர்வை மதிப்பார் என்று நம்புகிறோம் என்றார் சீமான்.

---------------------

 
உலக தமிழர்கள் எல்லாம் வேதனையின் விளிம்பில் துடித்துகொண்டிருக்க எம்.எஸ். விசுவநாதனோ ராசபக்சேவோடு சிரித்து பேசி கைகுழுக்கி தொழில் ஒப்பந்தம் செய்துகொண்டு வந்துள்ளான். வன்னியின் மண்வளத்தை கெடுக்கவும், காடுகளை அழிக்கவும் சிங்களவனோடு கைகோர்த்துள்ளான். ...தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழன் வியர்வையில் விளைந்த சோற்றை திண்றுகொண்டு தமிழனுக்கு துரோகம் செய்துகொண்டிருக்கும்  ஒருவன்தான் இவன்
 
 
இலங்கை அதிபரால் தகவல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட "இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி" பின்னர் அந்நிறுவனத்தில் பணிபுரியும்  தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் எழுந்த எதிப்பினால் அப்பதவியை ராஜினாமா செய்தார்...தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்...
 
ஆனால் இந்த வகையான மனிதர்கள் தமிழர்களின் மீதான விரோதபோக்கை என்றுதான் கைவிடப்போகிறார்களோ?
 
இதோ அவன் மின்னஞ்சல் உங்கள் உணர்வுகளை அவனிடம் பதிவு செய்யுங்கள்.
 
M S Swaminathan Research Foundation
3rd Cross Street, Institutional Area, Taramani
Chennai - 600113, India
Ph: +91-44-22542698, 22541229 Fax: +91-44-22541319
hmrc@mssrf.res This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
msswami@mssrf.res.in This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
msswami@vsnl.net This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
chariman@mssrf.res.in


http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=166:2009-07-23-14-32-07&catid=36:2009-07-08-13-09-37&Itemid=57


http://www.telonews.com/sritelo/wordpress/wp-content/uploads/2009/06/swaminathan-mahinda-rajapakse.jpg      http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/seman-2001.jpghttp://www.envazhi.com/wp-content/uploads/2009/06/seeman11.jpg 





♥ "எங்கே தேசியத் தலைவரின் பெற்றோர் ?" ♥

மெனிக்பாம் ஏதிலிகள் முகாமிலிருந்த தேசியத் தலைவரின் பெற்றோரைக் காணவில்லை



வவுனியா மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது பெற்றோரைக் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக இவர்கள் மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவர்கள் சிறீலங்காப் படையினரால் இரகசிய இடத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 17ம் நாள் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்த நடவடிகையின் போது அரச கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

http://dhesam.de.tl/thalaivar-thaai-thanthai.htm



♥ "தனக்கு கட்டுப்படாத இணையத்தளமா முடக்கு..! "-சிங்கள அரசு..! ♥

தனக்கு கட்டுப்படாத செய்தி இணையத்தளங்களை முடக்க சிறிலங்கா அரசு தீர்மானம்


computer_crimeஇலங்கை அரசானது தனக்குக் கட்டுப்பட்டுச் செயற்படாத செய்தி இணையத் தளங்கள் அனைத்தையும் அந்நாட்டில் பார்வையிட முடியாதவாறு முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக நம்பிக்கையான அரச வட்டாரங்களை ஆதாரம் காட்டி சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான இணையத்தளங்களை யார் நடத்தி வருகின்றார்கள், எங்கிருந்து நடத்துகின்றார்கள் என்ற தகவல்களைக் கண்டறியுமாக குற்றப் புலனாய்வுத்துறைக்கும் இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கின்றது.

அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை ஒன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது' என அரச ஆதரவுச் சிங்கள நாளேடான 'தினமின' இன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

அரசை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையிலான செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளார்கள் எனவும் தினமினவின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


http://www.meenagam.org/?p=5914

♥இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் முயற்சியில் இந்தியா ♥

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதைத் தடுக்கும் முயற்சியில் இந்தியா

தமிழீழப்போர் ஆரம்பித்த காலம்தொட்டு தமிழக மக்களும், தமிழக அரசியல் வாதிகள் பலரும் புலிகளுக்கு பலத்த ஆதரவளித்தனர். இதனால் இலங்கையரசு கேட்கும் அனைத்து ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை இந்தியாவால் முழுவதும் வழங்கமுடியாத ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆனால் இலங்கையோ தமக்கு ஆயுத உதவியை வழங்கக்கூடிய பாகிஸ்தான், சீனா ஆகியவற்றை நாடி ஆயுதத்தைப் பெற்றுக்கொண்டது. இவ்விரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட சில படுகொலைகளை புலிகள் செய்ததால் அது ஒரு பயங்கரவாத இயக்கம் என இந்தியாவின் பிறபகுதிகளிலுள்ள மக்கள் கூறத்தொடங்கியதால் இந்தியா இலங்கையை முற்றுமுழுதாக புறக்கணித்துவிடாமல் ராடார், யுத்தக் கப்பல்கள் போன்ற ஆயுதத் தளபாடங்களை வழங்கிவந்தது. புலிகளின் ஆயுதக் கடத்தலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடற்படையினரின் ரோந்தை இந்திய-இலங்கைக்கடற்பரப்பில் முடுக்கிவிட்டது இந்தியா.
அண்மையில், வடக்கிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றவென 500 ராணுவ பொறியியலாளர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

இலங்கையும் இதையடுத்து, பாகிஸ்தான், சீனா ஆகியவற்றிடம் 200 மில்லியன் டொலருக்கு வாங்கவிருந்த ஆயுதங்களை ரத்துச் செய்துள்ளது. புலிகளை ஒழித்துவிட்டதால் இனி ஆயுதம் தேவைப்படாது என்று கூறுகிறது இலங்கை.

உண்மையில், இலங்கையிலும் இந்திய கடற்பரப்பிலும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதால் விழிப்படைந்த இந்தியா அதை முடக்கும் வகையில் தொழிற்படுகிறது. சீனாவுக்கான எரிபொருள் விநியோகமும், சீன வர்த்தகமும் இந்திய கடலினூடாகவே செல்வதால் அவற்றுக்கு பாதுகாப்பு வழங்கும்பொருட்டு சீனா இலங்கைக்கு உதவுவதுபோல தனது கடற்கலங்களை இந்தியக் கடலில் நிலைநாட்ட முனைகிறது. இந்த நடைமுறை தடுக்கப்படவேண்டும் என்றால் இந்தியா, இலங்கைக்கு உதவி செய்து தமக்கு அச்சுறுத்தலாக உள்ள சீன ஆதிக்கத்தை தடுக்கும் எண்ணத்திலுள்ளது. இலங்கையும் சீனாவின் உதவிகளை விட்டு இந்தியாவின் கைகளைப் பற்றிக்கொள்ளும் என நம்பப்படுகிறது.

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1248352715&archive=&start_from=&ucat=2&


♥ இலங்கையில் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாகும் இந்திய வார இதழ்கள் ♥

இலங்கையில் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாகும் இந்திய வார சஞ்சிகைகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் அனைத்து தமிழ் சஞ்சிகைகள், சிறு பத்திரிகைகள் யாவும் விநியோகிக்கப்படுவதற்கு முதல் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக அதிர்வின் நிருபர் தெரிவிக்கிறார். குறிப்பாக இந்த வெளியீடுகளில் இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் கட்டுரைகள், பிரச்சனைக்குரிய செய்திகள், ஆக்கங்கள், அல்லது அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தால் அந்தக் கட்டுரைகள் அல்லது ஆக்கங்கள் அடங்கிய பக்கங்கள் அகற்றப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது.

இதேபோல் முன் அட்டையில் இலங்கை தொடர்பான சிக்கலான தலையங்கம் இடப்பட்டு இருந்தால் அவற்றின் மீது மை பூசப்பட்ட பின்பே விநியோகத்திற்கும் விற்பனைக்கும் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன் அட்டையில் தணிக்கைக்கு உட்பட்டது அதாவது ஊ என்ற அடையாளம் பொறிக்கப்பட்டு இருக்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பு யாழ் புத்தகக் கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வகையில் கடந்த மே மாதம் 27 ஆம் திகதியிடப்பட்ட குமுதம் சஞ்சிகையில் முன் அட்டையில் விரட்டுங்கள் தமிழர்களை ராஜபக்ஸேயின் அலற வைக்கும் அடுத்த திட்டம் என்ற தலையங்கம் இடப்பட்டு இருந்தது.

இந்த சஞ்சிகையில் உள்ளடக்கப்பட்டு இருந்த இந்தக் கட்டுரைப் பக்கங்கள் கிழிக்கப்பட்டு முன் அட்டையில் மை பூசப்பட்டு ஊ என்ற அடையாளம் இடப்பட்ட பின்பே சஞ்சிகை விநியோகத்திற்கும் விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1248358476&archive=&start_from=&ucat=2&


♥ சிறகை விரி ...! ♥

பறவையே.. விரி சிறகை உறவைக் காக்க

என் எண்ணததில் என்றும் என் இனப் பறவையின் சரணாலயம்..

வெண் பனிமலை முகடுகளும் தீங்கனிச் சோலை தழுவிய ஆற்றுப் படுக்கைகளும்..

பச்சை வயல் வெளி விரிப்புகளும்.. அந்த வெண்மணல் தடவும் கடலலைச் சிரிப்புகளும். தென்றல் தாளாட்டும் குளக் கரையும.;.. புல்லினங்கள் கூடுகட்டும் தென்னம்பனைச் சரடுக் காடுகளும்..

தொன்மைத் தமிழ் வாழவைக்கும் எங்கள் தமிழ் தாய் இலக்கிய வருடல்களும்..

வீர வரளாறுகளும் புதைத்து வைத்துள்ள வீர மணி முத்துக்களின் துயிலும் இல்லங்களும்.

எந்தன் முந்தை வினை தொடங்கிய கரப்பன் வழி குடியிருப்பும்.. கன்னித் தமிழகமும் ஈழத்து நிலப் பரப்பு எங்கும் பறந்து.. சிறகடித்த மூத்தகுடிப் பறவையினம் நாம்.. சிறகொடிந்து வாழ்வோமா.. இல்லை எம் கூட்டைச் சீரமைத்து நாடு காண்போமா..

தவமிருந்து இந்த பறவைகளைப் பெற்றவளின் பரம்பரை இராட்சியத்தில்..

வளமிருந்தும்.. பலமிருந்தும்.. ஓற்றுமை ஒன்றுமட்டும் குறைவாக இருந்ததனால்..

புலமிருந்து வந்தவனிடம்..பறிபோகிறது எங்கள் குடியுரிமை..

அன்றும்.. இன்றும்.. நாங்கள் மாறவில்லை.. ஆதனால்தான் இன்றும் எமக்கென்று சொந்தமாக ஒரு நாடுமில்லை..

அன்று பறிக்கப்பட்ட பறவைகளின் சரணாலயத்தில்.. உன்னைப் போல்.. நானும் நின்று.. கூடி மகிழ்ந்து வாழ்ந்த கிளைகள்.. முறிக்கப்பட்டன..

இன்று கூடு இழந்து அந்த மண்ணையும் மரத்தையும் நினைந்து வாழும் ஒரு ஏதிலிப் பறவையாகி..

சிறகு இழந்து வாடும் என் உறவுகளை நினைத்து வாடுவதும்.. எங்கெல்லாம் ஓடுவதும். கண்ணீரால் கண்களை மூடுவதும் தாளாது இன்று என் சோகத்தைப் உன்னிடத்தில் பாடுகிறேன்..

கூடுகள் இழந்த போது சுதந்திரம் தொலைத்த பறவைகள் .. பாரினில் நல்ல புகழிடம் தேடி.. தாமிருந்த மரத்தின் வேரிடம் கூடச் செல்லாது வேறு இடம் வந்து கூடின..

பறவைகள் சில சிறகொடிந்து பாதி வழியிலும் வீழந்தன.. திசைமாறிப் போயின பல.. நோயில் விழுந்தன சில.. தங்க வந்த இடத்தில் தாராளமக வாழ்ந்தாலும் தங்கக் கூட்டுக் கிளிகளாகி.. நாடு இழந்த பறவைகளாகி இன்று நாதியற்றுத் தவிக்கின்றன .

தாய்த் தமிழப் பறவை அடைகாத்த குஞ்சுகளே.. உன்தாயின் முட்டைக் கருவரைக்குள் செட்டையடிக்க முடியாது நீ முடங்கிக் கிடந்த பொழுது.

ஓரு ஒற்றை ஓட்டைவைத்து கொத்தி உடைப்பெடுக்க ஆசைப்பட்டாய்..

அந்த இருண்ட முட்டைக்குள் செட்டைகள் கூட சரியாக முளைக்காத.. உன் ஊன் உடல் வளராப் பருவத்தில் கூட நீ போராட துணிந்தாய்.. அகண்ட இந்த வானிடையில் சுதந்திரமாக பறக்கத் துடித்தாய்.. இன்றுமட்டும் எப்படி நீ உன்சிறகை விரிக்க மறுக்கிறாய்…

உன்னை விழுங்க எத்தனை பாம்புகள்.. உன்தாய் கட்டிய கூட்டைப் பிய்த்து எறிய எத்தனை மந்திகள் கொப்புகள் தாவின.. உன் தாய்க் கூட்டில் கூட சில வேற்றுப் பறவைகள் களவாய்க் கூடி முட்டைகள் இட்டன.. பின்பு உன் தாயின் மடிக்குள் அவை நெருப்பைக் அள்ளிக் கொட்டின..

சுதந்திரக் குஞ்சே நீ பிறக்கும் முன்னே நீ இறந்துவிடக் கூடாது என்பதற்காக உன் உறவுகள் எல்லாம் காவலில் நின்றார்..

உன் அம்மாளுக்கும் ஐயாவுக்கும் நீ இன்று அறுபதாவது பிள்ளை.. உன் தேனையை உலகுக்கு காட்டு.. உல்லாசமாய் திரியும் நேரமல்ல… விரித்து எழுந்து பறந்து எழுப்பி விடு உணர்வுத்தீயை..

உன் அக்காளும் அண்ணாவும் உன்னைப் போல்தான் கொண்ட ஆசைக்கு அளவு இல்லை

சுற்றும் வல்லூறு வரும் என்று தெரிந்தும் உல்லரசமாய் வாழ நினைந்து பறந்து எங்கோ போய் வீழ்ந்தார்.. இன்னும் பல உறவுகள் காணாமல் தொலைந்தார்

காற்றும் அவர்க்குச் சொன்னது காலத்தின் கொடுமையை.. நேற்று வீசிய கொடும் புயலில் கிளை பலவும் முறிந்து போயின.. ஆனாலும் ஆணிவேருக்கு அழிவில்லை.. மீண்டும் தளைத்து விழுதெறியும் புதிதாய் பிறக்கும் உனககும் கூடுகட்ட கிளைபரப்பும்..

மரம் கொத்தி அமைத்த பொந்துக்குள்ளும.;. கரம் பொத்தி வளர்த்த குஞ்சுகளைக் கொல்ல கருநாகம் வழிகாட்ட விரியன்கள் புகுந்துவிட்டன..

சில பீனிக்ஷ்சுகள் மட்டும் எரிதணலில் வாழ பழகிப் போராடுகின்றன.. தாய்ப் பறவையும் தன் பிள்ளைகளை நினைத்து வாடுகிறது..

இங்கிருந்து இந்த வாய்ப் பறவையும் கூவுகிறது.. கூவினால்தான் விடியுமென்று பொய்யாக நினைக்கவில்லை.. விடியல் தெரிகின்றது.. கிழக்கு வெளிக்கும் நேரம் வருகிறது.. சாமக் கோழியின் கூவலுக்கும் உலகம் ஒருமுறை விழித்துதான் உறங்கவேண்டும்.. விடியும் வரை கூவ குயில்களும் மயில்களும் வருகின்றன.. முடியும்வரை ஓன்றாய்க் கூவி உலகை எழுப்ப..

நீயும் உன் சிறகை விரித்து வா..

ஆற்று வெளிகள் எல்லாம் நம்மக்கள் நாகரீகம்;.. வேற்று படை சூழ.. வாழ்ந்த நிலமெல்லாம் விட்டு வந்து.. தென்கோடிப் பனை வட்டு நிலம் மட்டும்தான் இன்று மிச்சம்..அந்நிலமும் பறிபோக செய்கின்ற சதிகளுக்குள் சிலநரிகள் சிங்கத்தின் பக்கம்..

பறவையே எம் உயிரை துச்சமென மதிக்காது அச்சமுடன் அந்த பச்சைப் பனை நிலத்தை விட்டு வந்தது பிழையானது என எண்ணத் தோன்றுகிறது..

மிச்சமிருக்கும் உறவை இச்சகத்துள் காத்துவிட எச்சமிருக்கும் வாழ் நாளைத் தமிழுக்கு தந்துவிட்டு சாவென்று சொல்கிறகு என் மனது.. நீயும் வா சேர்ந்து செயல்படு..

நோகும் இதயத்குள் வேகுது நினைவுகள்.. பறக்கமுடியாத உறவுப் பறவைகளை மறக்க முடியாது.. இறகிருந்தும் பறக்க வகையிலாப் பறவைகள் நாம் வாடிப் பயனற்று போனோமோ..

கூடி நின்று கழத்தறுக்க உடன் பிறந்தவனிடம் கத்தி கொடுத்து காத்திருந்த கயவரிடம் கத்திக் கத்திக் காப்பாற்றக் கேட்டோம்..

வற்றிப் போனது எங்கள் குரல்கள்.. சுற்றிப்பார்த்து வந்தவனும் பாதிக் கணக்கும் சொல்லவில்லை.. மீதியிருந்த எங்கள் சொந்தங்கள்; எல்லாம் வேடன் கூட்டுக்குள் கண் மூடுகின்றது.. நாங்கள் வாய்திறந்ததற்கு பயனில்லையோ.. உலகம் காய் நகர்த்துகிறதாம்..

வல்லரசு வல்லூரு வட்டமிட்டு தான் பிடித்த செய்மதிப் படத்தை பொய் மதிக்கும் ஐநா பாதுகாப்புச் சபைக்கு காட்டி என்ன பயன்..

சொந்தங்கள் வந்து சோகங்கள் ஆற்ற முடியாமலும் வாழத்தான் வாவென்று அழைத்ததா வாய் மூடிக் கிடக்கும் இந்த உலகப்பிணம்..

இறையாண்மை என்னும் ஆமை ஒன்றும் ஊர்கின்றதாம்.. சில கொக்குகள் சொல்லக்கேட்டு ஆமை தொங்கிய கதைதானோ.. நாங்களும் பள்ளிச் சிறுவர்களும் போடும் சத்தம் பலித்திடும் என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போமா.. போராடத் துணியோமா..

பச்சப் பசும் சோலை வாழ்ந்து நல் கனிகள் உண்ட எம் பறவையினம்.. கொச்சத் தமிழில் திட்டு வாங்கி சோற்றுக்குத் தட்டு ஏந்தி.. சிங்களச் சிறைக் கூட்டுக்குள் விக்கித் தவிக்குதாம் தண்ணீருக்கும.;.. எச்சிலிலைப் பருக்கை கூட தேடும் சிற்றெறும்புக்குக் கிடைக்காதபடி வழித்து உண்ணுதாம் பறவை பாதிவயிறு நிறப்ப.. எச்சிக் கையால் எங்கணம் இனித் தமிழன் காக்காய் கலைப்பான்..

இரந்து வந்தவர்க்கெல்லாம் விரைந்து விருந்து வைக்கும் வன்னிப் பறவையினம்..

பிறந்த குழந்தைக்கும்அருந்தப் பாலின்றி தவிக்குதங்கே…

பாலைக் குடித்துப் பாகுடன்நெய்யமுது உண்ட வன்னியின்பாலகன்..

நாளைச் சோற்றுக்கு வேளைக்கே எழும்பி வரிசையில் நிற்குதாம்..

உடுத்தக் கந்தலும் இன்றி முனங்கி அழுவதும்.. பருந்துகள் குதறிய காயம் வலிக்க மருந்தின்றிச் சாவதும் உன் உறவின்நிலை..

சன்னங்கள் பட்டெங்கள் சரீரங்கள் சாயத்தானே எண்ணங்கள் தமிழ் காக்க எழுந்தன..

அன்னங்கள் போலிருந்த தமிழ் பெண்களும் விண்ணெங்கும் எங்கள் புலிக்கொடி ஒளிக்க எங்கள்பகை வாசல் எரித்தனர்..

தமிழ் மன்னர்கள் வாழ்ந்தகாலத்தில் எங்கள்சின்னங்கள் பொறித்த கோட்டைக்குள்.. சிங்கங்களர் புகுந்திடல் தகுமா.. தமிழ்த் தங்கங்களே.. அங்கெங்கள் தலைவன் படை நிமிரும்

வெட்டினாலும் ஒட்டிக் கொள்ளும் அந்த சுதந்திப் பறவையின் சிறகுகள். தலைமேல் தீயள்ளிக் கொட்டினாலும் எழும் பறவை இனமே.. என் அன்புப் புறவையே நீ பீனிக்ஷ் பறவையாகு தமிழ் காக்க எரிதணலில் விழுந்து வேகு..

மணிவண்ணன்

♥ "எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடரும்" -பிரபாகரன்-நக்கீரன் தொடர் ♥

எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடரும் -பிரபாகரன்




வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம் வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை யில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் ஏற்பட்ட போது தானே எழுந்து சென்று எவர்சில்வர் குவளையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இவையெல் லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால் போர்க் கள வெற்றிகளும், உலகத் தமிழரின் உள்ளங்களில் உயர்ந்து நின்ற தகைமையும், தன் கீழ் பல படையணிகள் -என ஆர்ப்பாட்டம் காட்டுவதற்கு அனைத்துமிருந்தும் அவர் இயல்பாயிருந்தார் என்பது மிகவும் பிடித்திருந்தது.

மிகவும் நகைச்சுவையான மனிதர்கூட 60 நிமிடம் பேசினால் 50 நிமிடம் கலகலப்பாக நகைச்சுவை ததும்பிடப் பேசும் ஆற்றல் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். அத்தகையோரை நமக்கு மனதாரப் பிடித்துவிடும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அப்படியொரு கதையாடி. தமிழ் சினிமா பற்றி பேச்சு வந்தபோது, ""எங்கட போராளிகளுக்கு ஹாலிவுட் சினிமா காட்டுவோம். ஆனா அந்த வெள்ளைக்கார பெட்டையளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ்ல தமிழ் உடுப்பு போட்டு விடுவோம்'' என்றார்.

பல்கலைக்கழகம் சென்று படிக்காத அவர், தன் முயற்சியால் ஆங்கிலம் படித்திருக்கிறார். நான் அவரை சந்தித்த காலத்தில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட புத்தகங்களைப் பற்றி தன் உரையாடலில் மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. "புத்தகங்களெல்லாம் படிக்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?' என்று கேட்டேன். ""வேலை களையெல்லாம் எல்லோருக்கு மாய் பகிர்ந்து கொடுத்துவிட் டேன். எனக்கு பெரிய வேலை, காயம்பட்டு நிரந்தரமாய் படுக்கை யிலாகிவிட்ட போராளிகளை அவ்வப் போது பார்த்துக் கொள்வதும் புத்தகங்கள் படிப்பதும்தான்'' என்றார்.

என்னால் நம்ப முடியவில்லை. தலைசிறந்த நிர்வாகி தானே மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் செய்து களைத்துப் போகிறவனல்ல. தகுதியானவர் களை அடையாளம் கண்டு -வள்ளுவர் சொன்னது போல் - "இதனை இதனால் இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடும் ஒப்பிலா நிர்வாகியாய் அவரை நான் கண்டேன்'.

உண்மையில் ""தலைவன் என்கிறவன் இலட்சியத்தை மேலாண்மை செய்கிறவன், தினசரி வேலைகளை நிர்வகிக்கிறவனல்ல'' என்ற புகழ்பெற்ற மேலாண்மை விதியை அவரிடத்தில் நிதர்சனமாய் பார்க்க முடிந்தது.

உணவு இடைவேளையின்போது பாட்டி ஒருவர் திடுமென உரிமையோடு உள்ளே வந்தார். பாதி பற்கள் போயிருந்த பாட்டி ஓய்வு பெற்ற ஆசிரியராம். சொத சொதவென வெற்றிலை பாக்கு சொதப்பிக்கொண்டே வந்தார். தலைவரிடம் வன்னி விளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். தலைவன்-மக்கள் உரையாடலாய் அவர்களின் பேச்சு இருக்கவில்லை. தாய்-மகன் போல், அக்கா-தம்பிபோல், குடும்பத்தில் ஒருவர்போல் உரிமையும், நேசங்களும் தோய்ந்த அந்த உரையாடலை இப்போது நினைக்க நெஞ்சம் நிறைந்து ஒரு வகையான ஏக்க உணர்வில் அடைக்கிறது.

உரையாடல் போக்கில் பாட்டியிடம் பிரபா கரன், ""பாட்டி, உங்களிடம் எனக்கு எல்லாம் பிடிச் சிருக்கு. இந்த வெத்திலை பாக்கு பழக்கம் தவிர'' என் றார். பாட்டி பதிலெல்லாம் யோசிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த அதேபோக்கில் பொலபொல வென பொரிந்தார்.

""தம்பி... இஞ்செ பாருங்கோ... உம்மகிட்டேயும் எனக்கு பல விஷயங்கள் பிடிச்சி ருக்கு. ஆனா இந்த வெத்திலெ பாக்கு விஷயத்திலெல் லாம் நீர் தலையிடறது எனக்கும் துப்புரவா பிடிக்கலெ''. ""வாழ்ந்தவர் கோடி, தாழ்ந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்?'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

சாமான்ய மக்கள் எவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வாதிகாரியாகவோ, ஏன் போராளி இயக்கத் தலைவராகவோ கூட பார்க்கவில்லை யென்பதையும், தங்கள் தம்பியாக -அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதையும் வன்னியில் நான் சுற்றித் திரிந்த அந்நாட்களில் அறிய முடிந்தது.

புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். தலைவர் களுக்கு ரொம்பவே பிடிக்கும். வேலுப்பிள்ளை பிர பாகரன் அவர்கள் எந்த அளவுக்கு புகழ் போதைக்கு அடிமையென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை நான் நேர் கண்ட முக்கியமானவர்களில் மிகவும் நேர்மையான எளிமையோடு, தன்னுணர்வு சுயபிரக்ஞை இல்லாமல் அப்பட்டமான நேர்மை யோடு பதிலளித்த ஒரே மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான். ""தமிழீழ தேசியத் தலைவர் என்ற தகைமையை எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள்?'' என்ற எனது கேள்விக்கு அவர் தந்த பதில் காவியங்களைக் கடந்த வரலாற்றுப் பதிவாக நிற்குமென நினைக்கிறேன்.

இதோ பிரபாகரன் பேசுகிறார். ""பாருங்க ஃபாதர். இப்போ கனபேர் என்னைப்பற்றி கதை எழுதுறாங்கள். "பிரபாகரன் பிறப்பிலேயே வீரன், பதினைந்தாம் வயதிலேயே அவனுக்கு தமிழீழ கனவு பிறந்தது. பறவைகளை குறி தவறாது அவன் கொன்று வீழ்த்துவான். இப்படியெல்லாம் கதை எழுதுறாங்கள். உண்மையை சொல்லப்போனால் ஃபாதர் எனக்கு அந்த வயதில் தமிழீழமும் தெரி யாது, வடக்கு-கிழக்கும் தெரியாது. ஒண்ணும் பெரிதாகத் தெரியாது.

வல்வெட்டித்துறை நூலகத்தில் நாளிதழ்களும் புத்தகங்களும் படிக்கிற மாணவர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ""தமிழ்பெண்கள் கற்பழிப்பு'', "சிங்கள காவல்துறை அப்பாவி தமிழர் மீது தாக்குதல், சித்ரவதை என்றெல்லாம் செய்திகள் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். மனம்கிடந்து தவிக்கும். எதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். ""சாகிறதுக்கு முன்னம் ரெண்டு சிங்கள ஆர்மிக்காரனையோ போலீசையோ சுட்டுப்போட்டு சாகணும்'' என்று தான் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

எங்கள் இலட்சியம் அன்றைக்கு மிகச் சின்னது. தமிழர் படும் துன் பங்களுக்கெல்லாம் எங்களாலான சிறிய பதில் - ஓரிரண்டு பேரை பழி தீர்ப்பது. அப்படித் தான் புறப்பட்டோம். ஆனால் பயணமும் பாதை யும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது. தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத் தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.

"பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது' என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம்.

""இன்னும் ஒருபடி தெளிவாகச் சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தி லெல்லாம் நான் போராடவில்லை.

உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டி ருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.''


அவரது பதிலை இன்று 7 ஆண்டுகளுக்குப்பின் நினைக்கிற போதும் சிந்தை சிலிர்க்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி அவர் கொண்டிருந்த யதார்த்தமான புரிதல் தெளிவுகாண வியப்புணர்வொன்று விரிகிறது. அம் மாமனிதன் இன்று களமாடி நிற்கும் முல்லைத்தீவு காடுகள் நோக்கி மனக்கண்கள் திரும்புகின்றன.

கடந்த இதழைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் கவலையோடு கேட்டனர். இவற்றையெல்லாம் இப்போது சொல்வ தால் உங்களுக்கு நாளை பிரச்சனைகள் வராதா என்று. நானோ, காலங்கடந்து எழுதுகிறேன் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறேன். எதைப்பற்றிய அச்சமும் எனக்கு இன்று இல்லை. நான் தமிழன், எனது இனம் உலகின் மிகப்பழமையான, உயர்ந்த பண்புகளையும் விழுமியங்களையும் கொண்ட ஒப்பிலா இலக்கியங்கள் படைத்த, சுயமரியாதை கொண்ட, எட்டுகோடி உயிர்களைக்கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய மக்கள் இனம் என் இனம். என் இனத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றழித்து, இன்று மேலும் அதே எண்ணிக்கையிலான மக்களை முல்லைத்தீவில் உயிரோடு புதைத்துவரும் கிராதக சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்துகொண்டு இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினரும், பெரும் உலக சக்திகளும் என் இனம் சார்ந்த அம்மக்களின் போராட்டத்தை "பயங்கரவாதம்' என முத்திரை குத்துவது என் இனத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும். குறைந்தபட்சம் என்னால் ஆனது அச்சமில்லா எதிர்குரல். ஒலிக்கும் எது வரினும்.

"இந்தியாவை ஏன் நீங்கள் பகைத்துக்கொண்டீர்கள்?' என்ற கேள்வியைத் தொடர்ந்து "கலைஞரையும் பல தருணங்களில் நீங்கள் காயப்படுத்தினீர்களே...' என்றேன்.

""இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் கலைஞர். நாங்கள் எல்லோரும் கலைஞரின் உரைகள் கேட்டு தமிழுணர்வில் ஊறியவர்கள். யாழ்ப்பாணம் சென்று பாருங்கள் கலைஞரின் உரைகள் அடங்கிய கேசட்டுகள் இல்லாத கடைகளை நீங்கள் பார்க்க முடியாது. சில சூழ்நிலைகள் அவர் மனம் வருந்தும்படி அமைந்திருக்கலாம். ஆனால் அவர் மிகப்பெரிய தலைவர். நான் சொல்ல விரும்புவது ஒன்று தான்...

(நினைவுகள் சுழலும்)


நக்கீரன்

♥ "காதல்..கல்யாணம்....வரதட்சணை!!" பேசுகிறார் பிரபாகரன்!!! -நக்கீரன் தொடர் ♥



                ருநாள்...

நான்அங்கிருந்தபோது ஒரு ஊர் கத்தோலிக்க குருவானவரைப் பற்றி ஏகப்பட்ட புகார்கள். அவரை அழைத்து விசாரிக்க வேண்டுமென அந்தப்பகுதி புலிகளின் பிரதிநிதியிடமிருந்து ஏக அழுத்தம். பிரபாகரன் அவரிடம் கேட்டது: ""அந்த ஃபாதர் விடுதலைக்கு எதிரா வேலை செய்யிற வரோ?''. ""இல்லை.'' ""அவர் நம்ம நாட்டு சட்ட-ஒழுங்குகள் எதையேனும் மீறினவ ரோ?''. ""இல்லெ, ஆனா அந்த கோயில் சனம் நிறைய கம்ப்ளைண்ட் சொல்றவங்கள்.'' ""அதையெல் லாம் விசாரிக்க அவங்கட திருச்சபை உயர் அதிகாரிகள் பிஷப்மாரெல்லாம் இருக்கிறாங்கள். நீர் உம்மட அலுவலெப் பாரும். உமக்குத் தேவையில்லாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்?''

நான் ஒரு குறிப்பிட்ட இந்திய அரசியற் கட்சியை குறிப்பிட்டபோது, ""அவையளைப்பற்றி நமக்கென்ன கதை ஃபாதர். அவையள் குசும்பு பிடிச்சவையள். ஆரும் சந்தோஷமா இருக்கிறது அவையளுக்குப் பிடிக்காது'' என்றார்.

இயல்பான அவரது மனம்தான் யுத்தகளத்தில் அப்படியொரு மகாபாரத உறுதியையும் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர் முதன் முதலில் மனம் கலங்கி உறைந்து போனது ஆகஸ்ட் 14, 2006 அன்று. அவரது தனிக்கோயிலான, யுத்தம் அனாதைகளாக்கிய சின்னஞ்சிறு பிஞ்சுகளை தன் சொந்தப் பிள்ளைகளிலும் மேலாகப் பேணி அவர் அடைகாத்து வளர்த்த "செஞ்சோலை' மீது இலங்கை விமானப்படை குண்டு வீசிய நாள் அது. 61 பிள்ளைகள் கண நேரத்தில் சதைத்துண்டுகளாய் சிதறினார்கள். இந்த செஞ்சோலை பற்றி என்னோடு உரையாடுகையில் அவரிடத்து சாந்தம் படர்ந்தது. ""அங்கு போனால் எனக்கு அமைதி கிடைக்கும். கடுமையான காலங்களில் நான் அங்கு போவேன், அமைதியடைந்து திரும்புவேன்'' என்றார்.

               இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் கடந்த இருவார காலமாய் அதிகமாக விவாதிக்கப்பட்டு வரும் சமாச்சாரம் ஆங்கிலத்தில் LGBT என அறியப்படுகின்ற ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபாற்கூறுடையவர்கள் மற்றும் அரவாணி கள் தொடர்பான அரசியற்சட்ட எண் 377 பற்றியது. காலனியாதிக்கத்தின் நீட்சியாய் தொடர்கிற இந்தியாவின் அரசியற் சட்டம், கஏஇப LGBT (Lesbian, Gay, Bi Sexual and Transgender) குழுமத்தினரின் பாலியல் ஈர்ப்பினை குற்றச் செயலாகவும் சட்டத்தின் முன் தண்டனைக் குரியதாகவும் இதுநாள் வரை நிறுவி நிற்கிறது. இதனை மாற்ற வேண்டுமென்பதுதான் இப்போது நடக்கிற முயற்சிகளும், விவாதங் களும்.

இதுபற்றி என்னிட மும் கருத்துக் கேட்ட டெக்கன் கிரானிக்கல் DECCAN CHRONICAL ஆக என்ற ஆங்கில நாளிதழுக்கு நான் கூறியிருந்தேன், ""அர சியற் சட்டப்பிரிவு எண் 377-ஐ திருத்தும் யோச னையானது இந்திய சட்ட அமைப்பினை மனிதப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க் கப்பட வேண்டுமே யொழிய ஓரினச் சேர்க்கைக்கு ஒழுக்க அங்கீகாரம் வழங்குவ தாகக் கருதப்படக்கூடாது. ஓரினச் சேர்க்கை இயற்கையின் இயல்பான விதிகளுக்கும், மானுடம் காலாதி காலமாய் போற்றிவரும் மிகவும் அடிப்படையான ஒழுங்குகளுக்கும் முரணனானது'' என்றேன்.

அதேவேளை அவர்களுக்கு அறிவுரை, ஆற்றுப்படுத்தல், மருத்துவ உதவிகள் தந்து தோழமை நேயத்துடன் வழிநடத்த வேண்டு மேயன்றி அவர்களை குற்றவாளிகளாக சிறையிலடைக்க முடியாது என்றும் வலியுறுத்தினேன்.

பொறாமை தவறு. புறணி பேசுதல் தவறு. குண்டணி, கோள் மூட்டுதல் தவறு, பல் விளக்காது நாறுதல் தவறு, வீட்டை குப்பையாக வைத்திருத்தல் தவறு, பக்கத்து வீட்டு பெண்ணை இரகசியமாக வக்கிரமாய் பார்த்தல் தவறு. ஆனால் இவற்றையெல்லாம் அறிவுரை, கற்பித்தல் மூலம் திருத்த வேண்டுமேயன்றி சிறையிலடைத்து சரி செய்ய முடியாதென்பதே சரியான கருத்து. சட்டங்கள் குறைவாகவும், கண்காணிப்போர் அதிகமின்றி மக்கள் இயல்பிலேயே நல்லவர்களாக வாழும் நாடே சிறந்த நாடு.

எனது இந்தக் கருத்தினை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, ""கத்தோலிக்க விசுவாசப் பாதுகாப்பு இயக்கம்'' என்ற அமைப்பு கொஞ்சம் விளம்பரம்தேடப் புறப்பட்டிருக்கிறது. இதே அரைவேக்காட்டுப் பரிதாபங்கள்தான் இசைஞானி இளையராஜாவுடன் ""சிம்பொனி யில் திருவாசகம்'' செய்தபோதும் "கத்தோலிக்க பாதிரியார் சிவனைப் போற்றும் திருவாசகத் திற்காய் ஏன் பணம் செலவழித்து உழைக்க வேண்டும்?' என்றெல்லாம் கேள்வி கேட்டு கடிதங்கள் எழுதிப் பொழுது போக்கினார்கள். போப்பாண்டவர் வரையெல்லாம் எழுதிப் போட்டு காமெடி செய்து பார்த்தார்கள். எங்குமே பருப்பு பெரிதாக வேகவில்லை. எனது வாழ்வில் நான் முரட்டுத்தனமான பிடிவாதத்தோடு மூர்க்கம் காட்டும் ஓரிரு விஷயங்களில் ஒன்று -மத அடிப்படைவாதிகளுக்கு அடிபணிவதில்லையென்பது. எனது 23-ம் வயதில் இத்தகையோரைப் பற்றி ஆய்வு செய்து ""போலிகளோடு போர்'' எனத் தலைப்பிட்டு 140 பக்க அறிக்கையை புத்தகமாக வெளியிட்டேன். என்னைப் பொறுத்தவரை நேசமும், இரக்கமும், மன்னிப்பும், தியாகமுமே வேதத்தின் உயிர் பொருட்கள் -உயர் பொருட்கள், சட்டங்களும் சம்பிரதாயங்களு மல்ல.

பைபிளில் "பரிசேயர்கள்' என்றொரு கும்பலைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இடைவெளி கிடைக்கிற இடங்களி லெல்லாம் இயேசுநாதர் இவர்களை ஒரு பிடி பிடிப்பார். ""குடிகாரர், விபச்சாரிகள், பாவிகள் இவர்களெல்லாம் பரலோகம் போவார்கள், ஆனால் இந்தப் பரிசேயர் களால் பரலோகம் இருக்கிற திசையெட்டில் கூட போகமுடியாது'' என்று பொருள்படும் தொனியில் பேசுவார். இப்பரிசேயர்கள் "உள்ளே உயிர் இல்லாது வெறும் எலும்புக் கூடுகளாகிப்போன வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள்' என்று சாட்டையடிப்பார். இத் துணைக்கும் "பரிசேயர்கள்' உலகத்தின் பார்வைக்கு மிக நல்லவர்கள். சட்டத்தை பிசிறின்றி கடைபிடிப்பவர்கள். தினம் ஐந்துமுறை பிரார்த்தனை, வருவாயில் ஒரு பகுதி கோவிலுக்கு, நோன்பென்றால் எச்சில்கூட விழுங்க மாட்டார்கள்... இத்தகையோரை மோசமானவர்கள் என்று நாம் சொல்ல முடியுமா? ஆனால் இயேசுநாதருக்கு இவர்களைப் பிடிக்கவில்லை.

ஏனென்றால் இவர்கள் மமதை கொண்டி ருந்தவர்கள், இரக்கமும் அன்பும் காட்டத் தவறிய கடின மனம் கொண்டவர்கள், வேதத்தின் சட்டப் புத்தகத்தில் இருக்கிறபடி சடங்கு களை செய்தால் போதும் -சக மனிதர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதியவர்கள் -எனவே "கடவுளுக்கு அருகில் ஒருபோதும் இவர்கள் வர முடியா'தென முழங்கி னார் இயேசு. அன்றைய பரிசேயர் கள்தான் இன்றைய விசுவாசப் பாதுகாப்பு அடிப்படைவாதப் படையினர்.

           வேலுப்பிள்ளை பிரபாகர னும் அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் படைத்த போர்க்களச் சாதனைகளை உலகறியும். ஆனால் அவற்றினும் ஆழமாய் அவர்கள் படைத்த சமூக வரலாறு, பலநூறு ஆண்டுகளாய் தமிழ்ச்சமூகம் விடுபட முடியாதபடி விலங்கிடப் பட்டிருக்கும் சில கொடுமைகள், மூடமைகளின் கண்ணிகளை உடைத் தெறிவதாய் அமைந்தது. பரிசேயத் தனங்கள் பலவற்றைத் தகர்த்தது.

விடுதலைப்புலிகள் இயக் கத்திற்குள் பொதுவில் எவரும் ஜாதி பேதம் பார்க்கவில்லை. பலருக்கு யார் என்ன சாதி என்பதே தெரியாது. இயக்கத்தில் சேர்ந்ததும் பெயரை வேறு மாற்றிவிடுவார்கள். ""உங்கள் இயக்கம் கலப்புத் திருமணங்களை ஊக்கு விக்கிறதா?'' என்று பிரபாகரன் அவர்களைக் கேட்டேன்.

பாசாங்கற்ற பாங்குடன் இக்கேள்விக்கு அவர் தந்த எளிமையான, நெகிழ்வோட்டம் கொண்ட, ஆனால் மிகவும் ஆழமான பதிலையும் அப்பதிலை அவர் வெளிப்படுத்திய விதத் தையும் இப்போது நினைத் தாலும் வியப்பாக இருக்கிறது.

இதுதான் அவர் சொன் னது;

""எங்கள் இயக்கத்தில் சாதி பார்த்துத் திருமணமெல்லாம் இல்லை. கலப்புத் திருமணத்தையே ஏதோ பெரிய சாதனையாக சொல்லும் தன்மை கூட எங்களிடையே இல்லை. ஏனென்றால், எங்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் ஒன்று சேரும் ஏற்பாடு, அவ்வ ளவுதான்!'' உள்ளபடியே இப் பதிலில் வெளிப்பட்ட எளிமை யையும் பாசாங்கற்ற தன்மை யையும் முதிர்ச்சியடைந்த பண்பாட்டுக் குறியீடாகவே பார்த்தேன்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை சிரத்தையுடன் பேணிய அந்த அமைப்பு மனித உணர்வுகளின் பெருவெளியில் மென்மையோடு நடந்து கொண்ட முகம் உலகிற் குத் தெரியாது. ""ஆக, காதலிக்கும் உரிமை இயக்க உறுப்பினர் களுக்கு உண்டு?'' என்று அவரை நான் கேட்டேன். ""ஆம், தவ றிழைக்கும் உரிமைதான் இல்லை. உண்மையாக ஒருவருக்கொருவர் விரும்புவதை, காதலிப்பதை இயக் கம் தடை செய்வ தில்லை'' என்றார்.

வரதட்சணை வழக்கையும் விவாதித்தோம்.

""விடுதலைப்புலிகள் இயக் கம் வரதட்சணை வழக்கினை உறுதியாக நிராகரிக்கிறது. வரதட்சணை வாங்கி திருமணம் செய்கிற போ ராளிகளை இயக்கத்தை விட்டே நீக்கிவிடுகிறோம்'' என்றார்.

""மக்களைப் பொறுத்த வரை எங்கள் ஆளுகைப் பகுதிகளில் சீதன தடைச் சட்டம் இருந்தாலும் சட் டத்தால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியுமென நான் நினைக்கவில்லை. கற்றுக் கொடுத்தல், விழிப்புணர்வு முகாம்கள், உறுதியான சாதி ஒழிப்பு நடவடிக்கை கள் மூலமாகத்தான் வர தட்சணை பிரச்சனையை பேரளவுக்கு ஒழிக்க முடியும்'' என்றார்.

போராட்ட அமைப்பு என்று வருகிறபோதுதான் அவர் இறுக்கம் காட்டி னாரேயன்றி தனிமனிதனாய் அவர் மிக மிக நெகிழ் வானராயிருந்தார். யாவரும் இன்புற்றிருத்தலே வையத் தின் பயனாகவும், நெறி யாகவும் இருக்க வேண்டு மென்ற கொள்கையுடையவ ராகவும் இருந்தார் என்றே நான் கருதுகிறேன்.

இதுபற்றி அவருக்கு நெருக்கமான பலரிடமும் நான் விவாதித்தேன். அவர்களில் பலர் கூறிய ஒன்றை உங்களிடம் நான் பகிர வேண்டும்.

(நினைவுகள் சுழலும்)


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=12580

♥ "யாரை எனக்குப் பிடிக்காது?" -பிரபாகரன்-நக்கீரன் தொடர் ♥



""அமைப்பு ரீதியாக பிரபாகரன் காட்டிய இறுக்கம் வரலாற்று ரீதியாக தமிழ்ச்சமூகம் பற்றின அவரது புரிதலில் இருந்தே பிறக்கிறது. அவரைப் பொறுத்தவரை கூட்டு மனப்பான்மையற்ற, நான் எனும் தன்முனைப்பு கொண்ட, பொது நன்மைக்காய் தியாகம் செய்யும் பண்பாட்டுக் குணாம்சமற்ற, எளிதில் துரோகம் செய்யும் பலவீனம் கொண்ட தமிழ்ச் சமூகத்தை துப்பாக்கி முனையிலும், கடுமை காட்டியுமே கட்டுக்குள் வைத்திருக்க முடியுமென அவர் நம்பினார்.

மற்றபடி தன்னில் அவர் மென்மையானவர். அதற்கும் மேலாய் ரசனையானவர்'' என்றனர். இது நூறுசதம் உண்மை. "உங்க ளுக்கு பொதுவாக எப்படிப் பட்டவர்களை பிடிக்காது?' என நான் கேட்டபோது, முகமெல்லாம் சிறுபிள்ளைபோல் சிரித்துக் கொண்டே ""குசும்பு பிடிச்சவங் களை மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறதெ சகிக்க முடியாத வர்களை எனக்குப் பிடியாது'' என்றார்.

போகிற போக்கில், ""சந் தோஷமா இருக்கிறதுக்குத்தானே வாழ்க்கை... எனக்கு சந்தோஷம் விருப்பமென்டா, மற்றவரது சந் தோஷத்தையும் நான் விரும்பணும் தானே'' என்ற ஆழமான பார்வை யை பதிவு செய்தார்.

முன்னதாக நாம் குறிப்பிட்டோமே "விசுவாசப் பாதுகாப்பு அடிப்படைவாதப் பரிசேயர்கள்... கோடி ரூபாய் பந்தயம் கட்டிச் சொல்கிறேன்... இவர்களை நேரில் சென்று பாருங்கள். நிச்சயமாய் இவர்களுக்கு புன்னகைக்க வராது. மென்மையான ரசனைகள் எதுவும் இருக்காது, யாரையும் மனம் திறந்து பாராட்டி யிருக்க மாட்டார்கள். சொந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைக் கூட கட்டியணைத்து அன்பு முத்தம் தந்திருக்க மாட்டார்கள்... எப்போதும் யாரையாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். குறிப்பாக குசும்பு பிடித்தவர்கள்.

கடவுளை எனக்கு முழுமை யாகத் தெரியும் என்றோ, நான் கடவுளை காப்பாற்ற களமிறங்கி நிற்கிறேன் என்றோ ஒருவன் சொல்வானாகில் -ஒன்றேல் அவன் மூடன், அல்லது ஆபத்தான மோசடிக்காரன். மனிதன் கடவுளை காப்பாற்றப் போகிறேன் என பிரகடனம் செய்வது எவ்வளவு நகைப்பிற்குரிய மோசடி, இல்லையா? உண்மையில் கிறித்துவ வேதம் வாழ்வது என்னைப் போன்ற அருட்தந்தையர்களாலோ, பெரிய பேராயர்களாலோ, விசுவாசப் பாதுகாப்பு பரிசேயர்களாலோ அல்ல. வேதம் ஈராயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்ததும் வாழ்வதும் ஒரு மனிதனால். மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, எளிமையில் வளர்ந்து, ஏழைகளை அரவணைத்து, தொழுநோயாளரை தொட்டு அணைத்து விபச்சாரிக்கும் நேசம் தந்து, உண்மை -நீதிக்குரலாய் முழங்கி சிலுவை மரணத்திற்குத் தன்னையே கையளித்த இயேசு என்ற ஒரு மனிதனின் தியாக நினைவில்தான் வேதம் வாழ்கிறது.

ஞாயிறுதோறும் கோயில் திருப்பீடத்தில் நான் வழிபாடு நடத்துகையில் எனக்கு முன் ஐநூறு விசுவாசிகள் பக்தியுடன் முழந்தாள் படியிட்டு அமர்ந்திருக்கிறார்களென்றால் அது எனது தனிப்பட்ட யோக்கியத்துவங்களின் மகத்துவத்தினால் அல்ல. அந்த மக்கள் உண்மையில் வணங்கிப் பணிந்திருப்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வாரி மலையில் ஆணிகள் அறையும்படி கைகளை விரித்துக் கொடுத்த இயேசு பெருமானது தியாகத்தின் திருநினைவில்! தமிழ் ஈழம் ஒருநாள் மலராமல் போகாது என நான் திடமாக நம்புவதற்கும் அதுவே காரணம். தியாகத்தின் நினைவுகள் ஈழம் மலரும்வரை, மலர்ந்த பின்னும் எம் இனத்தை வழிநடத்தும்.

எனக்குத் தெரிந்த ஈழத்துக் குடும்பம். பெரும் பணக்காரக் குடும்பம். ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் தொழில் செய்கிறவர்கள். கனடா நாட்டில் வாழ்கிறார்கள். மூன்று பிள்ளைகள். மூவரும் ஆண்கள். இருவர் கனடாவில். மூன்றாமவர் போராளியாக அப் போது முல்லைத்தீவில் இருந்தார். பலமுறை பெற்றோர் விரும்பி எழுதினர். ""நீ கனடாவுக்கு வா... இங்கிருந்து கொண்டு இயக்கப் பணிகளை செய்'' என்று இடைவிடாது வலியுறுத்தினர். அவன் வரவில்லை. சமாதான காலத்தில் தலைவரிடமே நேரிற்சென்று எடுத்துக் கூறினர். அவன் கனடாவுக்கு வந்தால் இங்கிருப்பதை விட விடுதலைக் காக அதிக பணிகள் செய்யலாம் என்றனர். தலைவரும் அதிகாரப் பூர்வமாய் அவன் கனடா செல்லும் அனுமதியை எழுத் துப் பூர்வமாகவே கொடுத்து கையெ ழுத்திட்டார்.

உள்ளப் பூரிப்புடன் அனுமதிப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு அன்பு மகனிடம் விரைந் தனர். ""தலைவரே சரி சொல்லிட்டார். எப்ப புறப்படலாம் தம்பி'' என்கிறார் தந்தை. ஒரு நிமிடம் அமைதியாக இருந்த மகன் சொன் னான்: ""அப்பா, தப்பா நினைக்காதீங்கோ... உயிரோட இருக்கிற தலைவர்கிட்டெ அனுமதி வாங்கிட் டீங்கள். தமிழீழக் கனவை நம்பி உயிர் ஈகம் செய்த 17000-க்கும் மேலான போராளிகளிடம் எப்படி, எப்போ அனுமதி வாங்கப் போறீங்கள்? நான் போராடுறது தலைவருக்காக அல்ல. அவரது தலைமையில், தமிழீழத்துக்காகவும் அதுக்காக உயிர் கொடுத்த போராளிகளின் கனவு தோற்றுப் போகக்கூடாது என்பதற்காகவும்தான் நான் களத்தில் இருக்கிறேன்.

முதலில் அந்த 17,000 போராளிகளின் துயிலும் ஆத்மாக்களிடமிருந்து அனுமதிக் கையெழுத்து வாங்கிவிட்டு அதன்பிறகு தலைவரிடம் வாங்குங்கள், அப்போது நான் வருகிறேன்'' என்றான். தந்தை கண்ணீருடனும் பெருமையுடனும் கனடா திரும்பினார். பெரும்பாலும் அந்தப் போராளி முல்லைத்தீவில் கடந்த மே மாதம் வீரகாவியமாகி யிருக்க வேண்டும்.


ஒன்றா, இரண்டா? எத்தனை ஆயிரம் தியாகங்களால் இந்த விடுதலையை வளர்த்தோம். வீணாகிக் கருகிடுமோ? செந்நீரில் வேர் பிடித்த ஈழ மரம் மீண்டும் துளிர்க்கும். தியாகங்கள் உள்ளிருந்து உயிர் நீர் ஊட்டும். விடுதலையின் பாடலை ஒருநாள் எமது மக்களின் நாவுகள் முழங்கும்.

(நினைவுகள் சுழலும்)



♥ கருணா ஒரு தமிழ் துரோகி! - மனைவியின் பரபரப்பு பேட்டி! ♥

தமிழரைக் காட்டிக் கொடுத்த துரோகி கருணா! - மனைவி பேட்டி


கருணா ஒரு தமிழ் துரோகி! - மனைவியின் பரபரப்பு பேட்டி!


லண்டன்: வன்னியில் இன்று தமிழர்கள் சந்தித்துள்ள துயர நிலைக்கு

karuna_pillaiyan


எனது கணவர் கருணா தான் பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த பின்னர் அவர் சுயநலவாதியாக மாறி விட்டார் என்று கருணாவின் மனைவி நிரோ எனப்படும் வித்யாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

கருணாவின் மனைவி வித்யாவதி, புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவில் இடம் பெற்றிருந்தார். அப்போது அவரது பெயர் நிரோ என்பதாகும். கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியபோது அவருடன் வித்யாவதியும் வெளியே வந்தார்.

வித்யாவதி தனது மூன்று குழந்தைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு அரசியல் புகலிடம் கோரியுள்ளார். தற்போது அகதி அந்தஸ்தில் அவர் ஸ்காட்லாந்தில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஈழ நிலை குறித்து 'ஸ்ரீலங்கா கார்டியன்' என்ற இணையதளத்திற்கு வித்யாவதி பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் கருணா, தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார், தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கிறார். இன்று தமிழர்கள் சந்தித்துள்ள நிலைக்கு அவரே காரணம் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

வித்யாவதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழின தலைவராக தனது கடமைகளை மறந்து செயல்படுகிறார் கருணா. தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்.

தனது அடிப்படைக் கடமைகளை அவர் சுத்தமாக மறந்து விட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தன்னைத் தமிழர்களின் தலைவராக அவர் கூறிக் கொள்கிறார். ஆனால் அந்தக் கடமையிலிருந்து அவர் தவறி விட்டார்.

குடும்பம் தொடர்பான சில விஷயங்களைக் கூட அவரிடம் நான் பேசத் தயங்குகிறேன். அந்த அளவுக்கு குழப்பி விடுகிறார்.

6 ஆயிரம் போராளிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து உயரிய நோக்கத்திற்காக விலகி வந்தோம்.
ஆனால் தனது சுயநலத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, தலையாட்டி பொம்மை போல செயல்பட்டு வருகிறார்.

தமிழ் மக்கள் இன்று சந்தித்து வரும் இன்னல்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.

அரசில் உள்ள சிலர் கருணாவை தவறான பாதையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊரே பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் நிலை போல உள்ளது கருணாவின் நிலை. இது அப்பட்டமான துரோகம்.

தன்னைத் திருத்திக் கொள்ள கருணாவுக்கு நான் ஒரு மாதம் அவகாசம் கொடுத்துள்ளேன். அவர் திருந்தாவிட்டால் திரைமறைவில் நடந்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக அவரை எச்சரித்திருக்கிறேன். இன்னும் என்னென்ன ரகசிய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்தப் போகிறேன், என்று கூறியுள்ளார் வித்யாவதி.

கருணாவின் மனைவி குறித்து அதிக தகவல்கள் எங்கும் வந்ததில்லை. இப்போதுதான் அவர் முதல் முறையாக மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.envazhi.com/?p=9945

♥ "விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்படவில்லை!" ♥

விடுதலைப்புலிகளுடன் போரின்போது இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பிய வீரர்களுக்கு பொதுமன்னிப்பு


http://farm4.static.flickr.com/3113/2583933332_1849ce7ba9.jpg





கொழும்பு, ஜூலை.20-
 
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது விடுதலைப்புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை ராணுவ வீரர்கள் சுமார் 65 ஆயிரம் பேர் தப்பிச் சென்றதாக தெரிகிறது.
 
இவர்களில் 2 ஆயிரம் பேரை இலங்கை அரசு கைது செய்தது. இவர்கள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.
 
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு புதிதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு மந்திரியாக பொறுப்பேற்ற மிலிந்த மொறகொடா வெலிக்கடை சிறைக்கு சென்றார்.
 
கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் தங்களை விடுதலை செய்யு மாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
 
இதைத்தொடர்ந்து, இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற அனை வருக்கும் பொதுமன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசு ஆராய்ந்து வருகிறது.
 
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபய ராஜபக்சேயுடன் மந்திரி மிலிந்த மொறகொடா ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
இந்த விஷயம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தலைமையில் நடைபெறும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்ததகவலை மந்திரி மிலிந்த மொறகொடா தெரிவித்துள்ளார்.
 
போரின்போது தப்பிய ஓடிய ராணுவ வீரர்களில் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என இலங்கை அரச பலமுறை அறிவித்தது. இருந்தும் எதிர் பார்த்த அளவுக்கு ஏராள மானவர்கள் சரணடைய வில்லை.
 
தப்பிச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் தலைமறைவாக இருப்ப துடன், அரசுக்கு எதிராக உள்ள அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
எனவே பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் மட்டுமே இவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுத்து நிறுத்த முடியும் என்றும் மந்திரி மிலிந்த மொறகொடா தெரிவித்துள்ளார்.


http://www.maalaimalar.com/2009/07/20110027/CNI0150200709.html





இலங்கையில் போரின்போது தப்பிச்சென்ற   சிங்கள  ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்
http://www.inllanka.com/infonation/news/images/armyunderwater.jpg

கொழும்பு,  ஜூலை 21-
 
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போது விடுதலைப்புகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள், 65 ஆயிரம் பேர் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டனர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே பிடிபட்டனர். பலர் சிக்கவில்லை.
 
தப்பி ஓடியவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் துறை நிறுவனங்களில் வேலை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
 
இதற்கிடையே தப்பி ஓடியவர்களில் 150 பேரின் பெயர் மற்றும் முகவரியை பெறும் நோக்கில் ராணுவ உயர் அதிகாரி ரவீந்திர பிரேமரத்னா முன்னிலையில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.

http://www.maalaimalar.com/2009/07/21121244/CNI0230210709.html




விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்படவில்லை: சிங்கள பாதுகாப்பு அதிகாரி சொல்கிறார்

http://1.bp.blogspot.com/_PRWPmcFXhZY/SRTlMFeyPQI/AAAAAAAAAvw/p0iLF0Pr9Q8/s320/amparai_ambush_in.jpg



http://www.nerudal.com/images/2009/06/annainew-300x157.jpg




http://www.sankathi.com/uploads/images/news/16102008-06.jpg

கொழும்பு,  ஜூலை. 20-
 
இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புக் வெல்ல ஒரு தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
விடுதலைப்புலிகளுடன் இலங்கை ராணுவம் நடத்தி வந்த போர் முடிந்துவிட்டது என்றாலும் விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது. விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவதற்கு மிக, மிக குறைவான வாய்ப்புகளே உள்ளன.
 
எதிர் காலத்தில் இலங்கையில் எந்த குழுவும் ஆயுதம் ஏந்த முடியாதபடி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது கரையோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
சூசை ஒரு தடவை கூறுகையில் உண்மையான சண்டை கடலில் உள்ளதாக குறிப்பிட்டார். அவை அனைத்தையும் முறியடித்து விட்டோம். தற்போது விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் செயல்படுகின்றனர்.
 
விடுதலைப்புலிகள் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். விமானம் வைத்திருந்தனர். வெள்ளையர்கள் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.
 
அவர்கள் பலத்தை சிங்கள ராணுவம் வெற்றி கண்டுள்ளது. போர் முடிந்துவிட்டாலும் அதன் மாயை இன்னும் முடியவில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/2009/07/20163137/CNI0400200709.html

http://tamilwin.com/photos/full/2008/09/15_008.JPG


http://www.thenee.eu/assets/images/_45643266_tamilssssss.jpg





http://www.thaaimann.com/wp-content/uploads/2009/07/seelanrygesye.jpg



http://www.telonews.com/sritelo/wordpress/wp-content/uploads/2009/04/civil203.jpg

http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/11/banker.jpg 

♥ பிரபாகரனால் தமிழில் வழங்கப்பட்ட போர் உத்திகள் ♥

தமிழில் ராணுவக் கல்வி… சாதித்துக் காட்டிய பிரபாகரன்!


ழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கூறுவார்கள்…

“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.

photo65

இந்த அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் பிரபாகரன் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.

ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்துரைக்கப்பட்டதோ கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள்.

இப்போது அவர்களே வெட்கித் தலைகுனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

குறிப்பாக, தமிழ் ஈழம் என்ற நாட்டின் கட்டமைப்பு வசதிகளை, ஒரு நாட்டின் தேசியத் தலைவர் என்ற பிரதான இடத்தில் அமர்ந்து அவர் செய்துள்ள சாதனைகள் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.

தமிழில் ராணுவக் கல்வி!

தாய்த் தமிழில் மருத்துவக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி கற்பது இன்னும்கூட தமிழகத்தில் சாத்தியமில்லாத நிலை. ஆனால் பிரபாகரனோ, புலிகளுக்கு சுத்தத் தமிழில் ராணுவக் கல்வியையே போதித்துள்ளார். ராணுவக் கல்வி என்றால், வெறும் வாய்மொழிக் கட்டளைகள்தானே என நினைக்க வேண்டாம். முழுமையான பாடத் திட்டங்களுடன் கூடிய பாரம்பரிய கல்வி அமைப்பையே தமிழ் ஈழத்தில் நடைமுறையில் வைத்துள்ளார் பிரபாகரன். இதனை இப்போது வெளிப்படுத்தியிருக்கும் சிங்கள ராணுவத்தினர், பிரபாகரனின் போர் வியூகங்கள், அதை புலிகளுக்கு கற்றுத் தர வகுத்துக் கொடுத்த முறைகள், பாசறைகள் போன்றவற்றைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள்.

photo731

இலங்கையில் முறையான, கட்டுக்கோப்பான ராணுவமாக 30 ஆண்டுகாலம் புலிகள் அமைப்பு எப்படி இயங்கியது என்ற ரகசியங்கள் இப்போதுதான் அவர்களுக்கு முழுமையாகத் தெரிய வந்துள்ளது.

ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப் படையை ஒரு ராணுவமாக இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரபாகரன் என்ற ஒரு தனி ஆட்சியாளரின் கீழ் இயங்கி வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிக்க, 20-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கையேந்தி ராணுவப் பிச்சையெடுத்தது இலங்கை. இப்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதலை நடத்தி அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் புலிகளோ சுயமாக, யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த பலம், ஆயுதங்களை மட்டுமே நம்பி கடைசி வரை களத்தில் நின்றார்கள்.

இந்த தேடுதலின் போது, புலிகளின் ராணுவ ஆவணக் காப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள், ராணுவத் திட்டங்கள், தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய மிக முக்கிய ஆவணங்கள் இங்குதான் இருந்ததாக சிங்கள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.

இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், உலகில் எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகிறதாம்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் புதையல்களிலேயே மிக மிக முக்கியமானவை இந்த ஆவணங்கள்தான் என்கிறார்கள்.

பிரபாகரனுக்கு நெருங்கியவர் கொடுத்த தகவல்…

இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக இருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றுள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.

sea-leader

புலிகளின் சில முக்கியத் தலைவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் விசாரணையில் இருப்பது நினைவிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல், ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள், புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இலங்கையின் மொத்த ராணுவ அமைப்பை அப்படியே படம்பிடித்து வைத்தது போன்ற துல்லியமான விவரங்கள் அந்த ஆவணங்களில் உள்ளனவாம்.

இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார் பிரபாகரன். இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம் சிங்களத்து உயர் அதிகாரிகள்.


வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் விடுதலைப் புலிகள் நிபுணத்துவம் பெற்றிருந்தது அந்தக் கோப்புகளில் தெரிய வந்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.

பிரபாகரன் அவற்றைக் கொண்டுதான் எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.prabhakaran4

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.

வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன.

இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட புலிகளின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் தயாரிப்பு:

தமிழீழத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர் புலிகள். picture-3731

இதற்காக புலிகள் பல ஆயுத தயாரிப்புக் கூடங்களை நிறுவியுள்ளனர். இன்னொரு பக்கம் கடல்புலிகள் கலக்கியுள்ளனர். மோட்டார் படகுகள், நீர்மூழ்கிகள் போன்றவற்றை அவர்களே கட்டியுள்ளனர். சிறு விசைப்படகு மோட்டார்களையும் புலிகளே தயாரித்துள்ளனர். இந்த திறன் இலங்கை ராணுவத்துக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது எப்படி என்று ஏற்கெனவே பல தகவல்கள் வெளிவந்துவிட்டன. விமானங்களின் உதிரி பாகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு, மற்ற அனைத்தும் தங்கள் சொந்த முயற்சியிலேயே புலிகள் செய்துமுடித்துள்ளனர்.

நிர்வாகத்துறையில் புலிகளின் திறமைக்கும் நேர்மைக்கும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி டி சில்வா கொடுத்த சான்று ஒன்றே போதும். அத்தனை நேர்த்தி… நேர்மை… உறுதியான நிலைப்பாடு மிக்க ஒரு அரசை நிறுவி நடத்தி வந்திருக்கிறார் பிரபாகரன்.

அவரது அந்த திறமையும் உறுதியும்தான் இந்த உலகையே அசைத்துப் பார்த்துவிட்டது… அவருக்கு எதிராக அணி திரளச் செய்திருக்கிறது.

http://tamilthesiyam.blogspot.com/2009/07/blog-post_22.html






http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=11928&boxid=42054656&archive=true



http://live.athirady.org/wp-content/uploads/2007/07/lttepiraba05.bmp
http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/prabakaran-11.jpg




Black Tigers


smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!