Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Monday, September 28, 2009

♥ ஆயுத விசயத்தில் நாங்கள் தமிழ் கடவுளை பின்பற்றுகிறோம்:சீமான் ♥

5வது கட்ட ஈழப்போர் நடக்குமா?யார் தலைமை ஏற்பார்?சீமான் பதில்


பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.


முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை
அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.

''ஐந்தாவது கட்ட ஈழப்போர் நடக்குமா?நடக்காதா?என்பதுதான் பலரும் வெளிப்படையாகவும், மனதுக்குள்ளும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

கண்டிப்பாக 5வது கட்ட ஈழப்போர் நடக்கும். இதுவரை யார் தலைமையேற்று நடத்தினாரோ அவர்தான்...அண்ணன் பிரபாகரன் தான் தலைமையேற்று நடத்துவார்.

தலைவர் தலைமையில் நம் போராளிகள் ஆயுதம் ஏந்துவார்கள். இது நிச்சயம்;இது சத்தியம்'' என்று பேசினார்.


அவர் மேலும், '''போராளி திலீபன் நினைவு தினமான இன்று நான் பிரான்ஸ்-ஜெர்மனி சென்று உரையாற்றவிருந்தேன். சில காரணங்களால் நான் அங்கே போக முடியவில்லை.


அதனால்தான் தமிழகத்திலேயே நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த முடிவெடுத்தேன். புரச்சியாளர்கள் பிறந்த மண்ணில்(பட்டுக்கோட்டை) புரட்சியாளரை பற்றி பேச வந்தேன்.

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். தொடர் உண்ணாவிரதத்தால் திலிபன் உடல் மிகவும் மோசமாவதை உணர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச்சொல்லி கேட்டார்கள்.

திலீபன் கேட்கவில்லை. தலைவர் பிரபாகரன் வந்தால் திலீபன் கேட்பார் என்று முடிவெடுத்தார்கள். தலைவன் சொன்னால் கேட்டு ஆகவேண்டுமே என்று நினைத்த திலீபன் தலைவரை அழைத்து வராதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் தலைவர் வந்துவிட்டார். தலைவர் வந்ததுமே 'எனக்கு ஒரு சத்தியம் செய்து தரவேண்டும் நீங்கள். அதாவது உண்ணாவிரதத்தை கைவிடச்சொல்லக்கூடாது என்பதுதான் அந்த சத்தியம்'' என்று கேட்டிருக்கிறார் திலீபன்.

உண்ணாவிரதத்திலேயே திலீபன் உயிர் நீத்த பிறகு, என் அண்ணன் பிரபாகரன் சொல்கிறார்...பசி வந்தால் பத்தும் மறந்துபோகும் என்று. ஆனால் திலீபனுக்கு அது பொருத்தமல்ல. போராட்டம், போராளி என்ற எண்ணம் மறந்தே போகவில்லை என்று சொல்கிறார்.

இத்தனை ஆழமான போராட்டத்திற்கு முடிவு அமையும்''என்று பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17414


ஆயுத விசயத்தில் நாங்கள் தமிழ் கடவுளை பின்பற்றுகிறோம்:சீமான்


பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார். ''விதை விதைத்தவன் தான் அறுவடை செய்ய வேண்டும். எங்கே அறுவடை செய்ய வேண்டும் என்பதை இந்திய அரசு முடிவு செய்யவேண்டும்.

விதைத்ததை அப்படியே விட்டுவிட்டு பொய்விட முடியுமா.சிங்களனை விரட்டி சுதந்திரம் பெறுவோம்;அதை நான் தன பெருவோம். அதை நாம்தான் பெருவோம்.

நாம் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ் கடவுள் அத்துனையும் ஆயுதம் ஏந்தி இருக்கிறது. அந்த வழியில் வந்த நாங்கள் எப்படி ஆயுதம் ஏந்தாமல் இருக்க முடியும்''என்று பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17413

பிரபாகரனிடம் இந்தியாவை கொடுத்திருந்தால் அப்துல்கலாம் கனவு நிறைவேறியிருக்கும்:சீமான்

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு
பொதுக்கூட்டம் நடைபெற்றது.


நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.

''புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


பாகிஸ்தானும்,சீனாவும் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது ஏன் இந்தியாவுக்கு புரியமாட்டேங்குது.

அண்ணன் பிரபாகரன் எப்போதுமே இந்தியாவை தன் நட்பு நாடாகத்தான் பார்த்துவந்தார். அதனால்தான் இந்தியாவை பாதுகாத்து வந்தார். ஆனால் சிங்களவன் இந்தியாவுடன் நெருங்கியே இருந்தான்.

இந்தியா-சீனா எல்லைப்பிரச்சனை வந்தபோது சீனாவுக்குத்தான் ஆதரவாக இருந்தான் சிங்களவன். இப்போதும் ஆதரவாகத்தான் இருக்கிறான். இந்தியா உள்நோக்கத்துடனேயே உதவுகிறது என்று சரத்பொன்சேகா சொல்லியிருக்கிறார். ஈழம் கிடைத்திருந்தால் எப்போதும் நட்பாகவே இந்தியா இருந்திருக்கும்.

2020ல் இந்தியா வல்லராக ஆகும் என்று அப்துல்கலாம் கனவுகண்டார். அந்த கனவு நிறைவேறுவது மாதிரி தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

பிரபாகரனிடம் இந்தியாவை ஒப்படைத்திருந்தால் 2020ல் அல்ல; இன்னும் 5 ஆண்டுகளிலேயே உலகின் மிக பெரும் தேசமாக இந்தியாவை மாற்றியிருப்பார். அப்துல்கலாம் கனவு வெகு சீக்கிரமே நனவாகியிருக்கும்''என்று பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17410

ஈழத்து பூமியிலும் பூக்கள் பூக்கின்றன:சீமான்

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார். ''ஈழத்து பூமியிலும் பூக்கள் பூக்கின்றன. ஆனால் அந்த பூக்களை பெண்கள் சூடுவதில்லை. கடவுளூக்கும் பூஜை செய்வதில்லை. பிறகு அந்த என்னதான் செய்கிறார்கள்.

என் தேச விடுதலைக்காக களமாடி வீரமரணம் எய்திய போராளிகளின் கல்லறைகளுக்குத்தான், சவக்குழிகளுக்குத்தான் போடுகிறார்கள்.

(பொதுக்கூட்டத்திற்கு முன்பு மழை பெய்தது)இங்கே மழை பெய்ததும் இந்த மழைக்கே நாமெல்லாம் அங்கெங்கே ஓடி பதுங்கிக்கொண்டோம். மழை விட்டதும்தான் பொதுக்கூட்டத்திற்கு வந்தோம்.

ஆனால் அங்கே நம் ரத்த சொந்தங்கள் முள் வேலி முகாம்களூக்குள் கிடந்த வெயில்,மழையில் வேதனையுற்றுக்கிடக்கிறார்கள்.

வீரம் செறிந்தவர்கள்தான் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று அண்ணன் பிரபாகரன் சொன்னார். அந்த வீரம் செறிந்தவர்களே வாருங்கள். மொழி காப்போம்;இனம் காப்போம்''என்று பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17408


பிரதமரையே அடித்த சிங்களன் தமிழர்களை எப்படி அடித்திருப்பான்:சீமான் பேச்சு

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு (26.9.2009) 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.


நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் பேசும் போது, ''போராளி திலீபன் உரையில் இருந்து ஒன்றை மட்டும் சொல்கிறேன். ''இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு வந்தபோது ஜெயமணி என்ற சிங்கள ராணுவ வீரன் ராணுவ அணிவகுப்பு நடந்தபோது துப்பாக்கியால் ராஜீவின் மண்டையில் அடித்தார்.


ஒரு நாட்டின் பிரதமரையே அப்படி அடித்த சிங்களவன் தமிழர்களை எப்படி அடித்திருப்பான் என்று நினைத்துப்பாருங்கள்''என்றூ பேசியிருகிறார்.

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் இந்திய அரசால்.

எல்லா நாட்டு விடுதலையையும் ஆதரிக்கும் என் இந்திய தேசம் ஏன் என் தாயக தமிழ்விடுதலையை மட்டும் வெறுக்கிறது''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17394

முள்வேலியை அறுத்தெறிவோம்;சிங்களர்களை சிறைப்படுத்துவோம்:நாம் தமிழர் இயக்க பேரணியில் கோஷம்


பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு(26.9.2009) 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.


நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இதையடுத்து மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

''முள்வேலியை அறுத்தெறிவோம்;சிங்களர்களை சிறைப்படுத்துவோம்''என்று பேரணியினர் கோஷமிட்டனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17381

பிரபாகரன் -சீமான் இணைந்த படங்கள்:பட்டுக்கோட்டை பரபரப்பு

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு(26.09.2009) 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பட்டுக்கோட்டை முழுவதும் பிரபாகரனும்-சீமானும் இணைந்திருப்பது போன்ற படங்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டு அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17376


ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழக தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர் கருணாநிதி: பொன்னையன்


ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழக தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர் தமிழக முதல்வர் கருணாநிதி என்று அதிமுக அரசியல் ஆலோசகர் பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளார்.


சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள 3 லட்சம் இலங்கை தமிழர்களை மீண்டும் குடியமர்த்த வலியுறுத் தியும், நதிநீர் பிரச்சினையில் பறிபோகும் தமிழக உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறியதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு வடசென்னை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக அரசியல் ஆலோசகர் பொன்னையன்,

இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள். கருணாநிதியை பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி தமிழக தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்.

நதி நீர் பிரச்சனைகளில் தமிழகத் திற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. அதைப்போலவே ஈழத்தமிழர்கள் பிரச்சனையிலும் அவர் துரோகம் செய்து வருகிறார். அவரை மட்டுமன்றி அவரது குடும் பத்தையே தமிழர்கள் வெறுக்கிறார்கள்.

அகதி முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களையும், அவர்களுடைய சொந்த ஊர்களில் குடியமர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கருணாநிதி மீது தமிழர்கள் கொதிப்புடன் உள்ளனர்.

இதில் சோனியாவும், கருணாநிதியும் தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தரா விட்டால் அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17360


உறுப்பினர் பதிவுக்கு....!

http://naamtamilar.org/membership.php



♥ முழங்கு சங்கே ! ♥




http://subavee.files.wordpress.com/2008/12/periyar-prabha.jpg



பெரியார்

சங்கே முழங்கு!


http://2.bp.blogspot.com/_4H70-D76t1U/SjYoRknnfvI/AAAAAAAAFVY/Xqpjs1mmq6k/s320/sangu.jpg

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!

http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SBbpzc_ucwI/AAAAAAAAAEg/UzMXVKExTG0/s200/bdasan%5B1%5D.jpg
பாரதிதாசன்


http://lh5.ggpht.com/_IEYubfMaOJM/Snzt59eljMI/AAAAAAAABWU/snnT7fkIDu0/periyar2%5B3%5D.jpg


அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய், உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை, பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய், விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய், அறுத்தெறி நாக்கை...

தமிழா! நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான், 'லெப்ட்டா'? 'ரைட்டா'?
வழக்கறிஞன் கேட்டான், என்ன தம்பி 'பைட்டா'?
துண்டுக்காரன் கேட்டான், கூட்டம் 'லேட்டா'?
தொலையாதா தமிழ், இப்படிக் கேட்டா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ் மொழியை, ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம், 'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி, சாவது நல்லதா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில் 'வாக்கிங் ஸ்டிக்கா'?
பாட்டி உதட்டுல என்ன 'லிப்ஸ்டிக்கா'?
வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா'?
வெள்ளைக்காரந்தான் உனக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா?


உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்





Sunday, September 27, 2009

புலித் தம்பி சீமானின் மதுரை பேச்சு...! வீடியோ



http://www.youtube.com/watch?v=z6t9u1cYZ2o



e412

இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு விபரிக்கின்றார்.

இதோ சிவரூபன் பேசுகிறார்:

“”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள்ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு.

குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது.

நடந்தவற்றின், நடந்து கொண்டிருப்பவற்றின் கொடூரங்களும், விபரீதங்களும் அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங்களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால்களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பயணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களவனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன்.

உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம் பேர் எம் குலப் பெண்கள். கொடுமையை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களவன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள்.

“”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத்தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் இராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவனிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போறவங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத்தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன்.

“பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.
உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன்.

என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின.

1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)

http://www.paristamil.com/tamilnews/?p=35285

♥ சே குவேரா – சில குறிப்புகள் ♥

தி மோட்டர் சைக்கிள் டைரீஸ் (The Motor cycle Diaries)

http://www.mundurat.net/pintxogorria/images/PERSONAJES/che%20guevara%20azul.jpg                 http://1.bp.blogspot.com/_tLxN4fw-cJM/RxAsjBzS4LI/AAAAAAAAAMA/6YscYUrdY8c/s320/che_guevara.jpg

சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்..போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். சே எனும் அற்புத போராளியின் புகழ் அவர் வாழ்ந்த நிலங்களை தாண்டி உலகின் திசையெங்கும் அறியப்பட்ட காரணம் அந்த மகத்தான் மனிதரின் வாழ்க்கையும் அதில் படிந்திருக்கும் ரத்தக் கறையுடனான உண்மைகளும்தான். லத்தீன் அமெரிக்க புரட்சியில் க்யூபாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையை உருவாக்க உருதுணையாக சே ஏந்திய துப்பாக்கியின் தோட்டாக்கள் புரட்சியின் வடிவமாக அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது.
Motor Cycle Dairies
Motor Cycle Dairies


எர்னெஸ்டோ 'சே' குவேரா - மனிதர்களை பெரும் துயர்களிலிருந்து விடுவிக்க ஆசைப்பட்ட ஒரு மனிதன் – அவனது வாழ்க்கை – அவனது தேடல் – அவனின் பயணம் இதுவே வால்டர் சாலஸ் இயக்கியிருக்கும் the Motorcycle Diaries' திரைக்கதையின் ஒற்றைவரி. உலகின் முதன்மையான புரட்சியாளரின் ஆரம்பக் கட்ட நாள்களின் தொகுப்பே இத்திரைப்படம். உண்மையே புனைவாக்கம் செய்யப்பட்டு நிழலாக மட்டுமல்லாமல் திரையின் நிஜமாக காலத்தின் கரங்களில் ஆழமான பதிவு செய்யப்பட்டிருக்கும் திரைக்காவியம் இது எனலாம்.



1951 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்ட எர்னஸ்டோ குவேரா (ப்யூசர் எனும் செல்லப் பெயர் உண்டு) பயோ கெமிஸ்டான தன் நண்பன் ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு (ப்யூசரை விட நான்கைந்து வயது மூத்தவன்) புதிய நாடுகளை, வெவ்வேறு ஊர்களை, அதன் மனிதர்களை, குறிப்பாக பெண்களை பார்த்து பழக ஆசைப்பட்டு தங்களது அதர பழசான ஆனால் நல்ல நிலையில் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிளில் (அதன் பெயர் மைட்டி ஒன்) லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே நீண்ட நெடிய பயணத்தை துவக்குகிறார்கள். நண்பனின் பொறுப்பில் எர்னஸ்டோவை ஒப்படைத்த அவனின் குடும்பம் புன்னகையுடனும் கொஞ்சம் கண்ணீருடனும் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறது.

துள்ளலுடன் துவங்கிய அவர்களின் அதி உற்சாகப் பயணம் மலைப்பாதைகளையும் ஆற்றோடைகளையும் நீண்ட புறவழிச் சாலைகளிலும் தங்கு தடையின்றி வழுக்கியோடியது. மைட்டி ஒன்னும் மின்னலெனவே அவர்களுக்காய் பறந்தது. இளமையின் உச்சத்திலும் சாகச மனோபாவத்திலும் திளைத்துக் கிடக்கும் அவ்விருவரும் பெரும் மனஉத்வேகத்துடன் தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஓரிரு முறை அவர்கள் வண்டி மணற்பாதையில் சறுக்கி விழுந்தாலும் கலங்காமல் சரி செய்து பயணத்தை தொடர்கிறார்கள்.

தோழர்கள் இருவரும் தேர்ந்தெடுத்திருந்த வழி அபாயகரமானது மிகவும் கடினமானது. ஆனால் ஒரு போதும் அடைய முடியாதது அன்று. வடக்கு திசையில் ஆண்டெஸ் மலையை தாண்டி, சிலியின் கரைகளில் பயணித்து, அடகாமா பாலைவனத்தை கடந்து பெருவிற்குள் நுழைந்து இறுதியில் வெனின்சுலாவை அடைய வேண்டும், ஆல்பர்டோவின் சபதம் ஏப்ரல் இரண்டாம் தேதிக்குள் தனது முப்பதாவது வயது தொடக்கத்தில், தோழன் எர்னஸ்டோவுடன் அங்கு சென்று சேர்வதுதான். ஆனால் அவர்களின் அருமை நண்பன் மைட்டி ஒன் அடிக்கடி ரிப்பேர் ஆனதால் அவர்களின் பயணம் தடைப்பட்டு தடைப்பட்டு ஜூலை மாதம்தான் சென்றடைகிறார்கள். இடைப்பட்ட காலகட்டங்களில் அவர்களின் அனுபவங்களே எர்னஸ்டோவின் மொழியில் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களின் அவனது டைரிக் குறிப்புக்களாக பதிவாகிறது. இந்தப் பயணம்தான் ப்யூசர் புரட்சியாளராக மாறியதற்கான முதல் விதையை போட்டது பயணத்தின் ஆரம்பத்தில் எர்னஸ்டோ தன்னுடைய தோழி சின்சினாவை சந்திக்க விரும்பி அவளின் ஊருக்குச் செல்கிறான். சூதாட்டம், ஆட்டம் பாட்டத்திற்கு பிறகு அவர்கள் சிறுது நேரம் பேசுகிறார்கள். வெகு நாள் கழித்து அவனை சந்தித்த அவள் அவனுடைய பயணத்தை வாழ்த்தி முத்தமிட்டு பலமுத்தமிட்டு கொஞ்சி அதன் பின் அடுத்த நாள் அவன் கிளம்பும் தருவாயில் கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை அவனிடம் தந்து எக்காரணத்தை கொண்டும் செலவு செய்துவிடக்கூடாதென்ற அன்பான பந்தனையுடன் அவனுக்கு அளிக்கிறாள். புன்னகையுடன் விடைபெற்று பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். பல சோதனைகள் வரும்போதெலாம் அப்பணத்தை ஆல்பர்டோ கேட்கிறான், எவ்வளவு கெஞ்சியும் தர மறுக்கிறான் எர்னெஸ்டோ. ஒரு கட்டத்தில் தீவிர ஆஸ்மாவால் பாதிக்கப்பட்ட தன்னை காப்பாற்றிக்கொள்ளக் கூட அவன் அப்பணத்தை பயன்படுத்தவில்லை. மன உறுதியும் நேர்மையும் ஒருங்கே உள்ள் குணம் கொண்டவனாய் நம்முன் எர்னெஸ்டோ காட்சிப்படுத்தப்படுகிறான்.



Motor Cycle Dairies
Motor Cycle Dairies

ஆரம்பத்தில் கோலகலமாக தொடங்கிய அவர்களின் பயணம் பல அலைக்கழிப்புக்களுக்கு உள்ளாகிறது. தென் அமெரிக்காவின் பரந்த நிலப்பரப்புக் காட்சிகள் பார்க்க சலிக்காதவை. தெள்ளந்தெளிவான வானம், மிதந்து செல்லும் மேகம் அதன் கீழே மலையின் ஹேர்பின் வளைவுகளிலும், நீண்ட ஒற்றையடிப் பாதைகளிலும், யாருமற்ற பனிக் காடுகளிலும், மூடுபனி மலைச்சாலைகளில் கடுமையான பனி மழையின் நடுக்கத்திலும் சோர்வடையாத மனதுடன் அவர்கள் வெற்றி வீரர்களாக பயணம் செய்கிறார்கள். கொடுமை என்னவெனில் எர்னெஸ்டோ வாழ்நாள் முழுவதும் கடுமையான ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்டவன். அவனுக்கு வீசிங் வந்துவிட்டால் தாங்கமுடியாத மூச்சிரைப்பால் மிகவும் சிரமப்படுவான். ஒரு குழந்தையைப் போல அவனைத் தாங்கும் நண்பனான ஆல்பர்ட்டோ உடனே டெக்காட்ரானை அவனுக்கு எவ்வாறோ கிடைக்கச் செய்து அவன் சுவாசத்தை அவனுக்கு மீட்டுத் தருவான். எத்தகைய நோய்மையினாலும் உடல் சோர்வினாலும் அவர்களின் பயணம் நிற்கவில்லை. மாறாக இன்னும் தீவிரத்துடன் தொடர்ந்தது.

எர்னெஸ்டோ அடிக்கடி தன் டைரியை எடுத்து அன்று தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை அழகான குறிப்புக்களாக எழுதிக்கொண்டிருப்பான். ஒரு மலைப்பாதையில் சுரங்கத்தில் வேலை செய்வதற்காக கட்டாயப்படுத்தப்படும் தம்பதியினரை சந்திக்கிறான். ஏன் அவர்கள் கட்டாயத்துக்குட்படுத்தப்படுகிறார்கள் என்ற கேள்வி அவன் மனதில் எழுகிறது. கேட்பதற்கு யாருமில்லை எனவே தன் டைரியில் பதிவு செய்கிறான், தன் இதயத்தின் அடி ஆழத்திலும் கூட...

இப்படி வெவ்வேறு மனிதர்களின் பலவகைப்பட்ட துன்பங்களையும் அல்லல்களையும் நேரிடையாக பார்த்த எர்னெஸ்டோவின் மனம் கலங்குகிறது. என்ன வாழ்க்கை எங்கே இது நம்மை இட்டுச் செல்கிறது வாழ்வின் ஆரம்பம் என்ன முடிவு என்ன போன்ற பெரும் கேள்விகள் அவன் இளம் மனதை ஆட்டிப்படைக்கிறது. வறுமை, பசி, பிணி என்று வாழ்க்கை மரணத்தின் வெவ்வேறு உருக்களாய் எங்கும் படிந்து கிடப்பதை மனித நேயக் கண்ணோடு பார்க்கிறான். ஒரு இடத்தில் மருத்துவ வசதியற்ற முதிய பெண்மணிக்கு மனம் முழுக்க தீரா வலியுடன் அவளைப் பிழைக்க வைக்க முடியாதெனத் தெரிந்தும் வைத்தியம் செய்கிறான். வலியாவது குறையும் என்பதே அவன் நோக்கம்.. அவளுக்கான பிரார்த்தனையாய் அன்றைய டைரியின் பக்கங்கள் அவனின் கண்ணீரால் நனைகிறது.

எர்னெஸ்டோவைப் பற்றி குறிப்பிட வேண்டிய பெரும்குணங்களில் ஒன்று அவன் மிகவும் நேர்மையானவன். உண்மையை அதன் ஒளியுடன் மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவன். ஆல்பர்ட்டோவோ அவ்வப்போது புளுகு மூட்டைகளை அள்ளி விடுபவன். இருவருக்கும் இதனால் அவ்வப்போது நடக்கும் சிறு சிறு சண்டைகளின் இறுதியில் வெல்பவன் எர்னெஸ்டோதான். தங்களுக்கு மிகவும் உதவிய டாக்டர் ஒருவர் எழுதிய புதினம் வாசிக்கக் கிடைத்தபோது மிகவும் நேர்மையுடன் அது எழுத்தே அல்ல என்பதை விமர்சிக்கிறான் எர்னெஸ்டோ...அவனை எரித்துவிடும்படியாக பார்த்த ஆல்பர்ட்டோவைத் தவிர்த்து...நல்ல வேளையாக அந்த நேர்மையான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் அந்த டாக்டருக்கு இருந்தது. அவர் தான் இவர்களை பெருவிற்கு வழிநடத்திச் சென்றவர்.

பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் நடந்த நிகழ்ச்சியொன்று தான் அவர்களின் இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. அங்கிருந்த தொழுநோயாளிகள் ஆஸ்பத்திரியில் சில வாரங்கள் தொண்டு செய்தது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழுநோயாளிகள் என்பவர்கள் எப்படி சமூகத்தினரால் புறக்கணிக்க்பட்டு சரியான மருத்துவ வசதிகள் இன்றி வீதிகளில் கைவிடப்பட்ட மனிதர்களாய் இன்றும் நாம் காண்கிறோம். மனித் நேயமும் தாயன்பும் கொண்ட எர்னெஸ்டோ தொழுநோயாளிகளிடம் எவ்வித அறுவறுப்பும் இல்லாமல் க்ளவுஸ் என்ற உறையைக் கூட அணியாமல் அவர்களுக்கு எவ்வகையிலும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களோடு கலந்து பழகி மருத்துவம் செய்கிறான்.

சிறுகச் சிறுக அவர்களின் அன்பையும் நம்பிக்கையும் பெற்று தீர்க்க முடியாத வியாதிகளின் தீவிரத்தன்மையை குறைத்து, சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்து, மனம் உடைந்து போயிருக்கும் நோயாளிகளுக்கு ஆறுதல் மட்டுமே தந்து கொண்டிருக்காமல் அவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி தானும் அவர்களுடன் விளையாடி, ஆடிப் பாடி அவர்களுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கித் தருகிறான். அவனின் உள் அன்பினாலும் நிபந்தனையற்ற பிரியத்தாலும் அந்நோயாளிகள் அவனை நடமாடும் தெய்வமாகவே பார்க்கிறார்கள். ஆனால் எர்னெஸ்டோவிற்கு புகழ்ச்சியோ வழிபடல்களோ ஒருபோதும் பிடிப்பதில்லை. கருணை மனம் கொண்ட அவன் விரும்புவதெல்லாம் வலியினின்றும் வேதனையினின்றும் மனிதர்களைக் காப்பாற்ற உருவாக்கப் படவேண்டிய ஒரு சக்தி. அல்லது கருவி .அது எதுவாக இருக்கும் என்பதை தீவிரமாக யோசித்திக் கொண்டிருந்தான்.

தொழுந்நோயாளிகாளின் காப்பகத்திலிருந்து கிளம்பக்கூடிய நாள் நெருங்கியது. அனைவரும் தங்கள் கண்ணீரை மறைத்து இவர்க்ளுக்கு ப்ரியாவிடை தருகிறார்கள். எர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் கனத்த மனத்துடன் புறப்பட்ட புள்ளிக்கு மீண்டும் திரும்புகிறார்கள். இப்போது அவர்கள் வாழ்வின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு கட்டாய நிலையில் இருக்கிறார்கள். ஆல்பர்ட்டோ ப்ராக்டிகல் வாழ்க்கையில் ஊறியிருப்பவன், அவன் செல்லும் திசை எல்லாரும் செல்லக்கூடியதுதான். ஒவ்வொரு மனிதனும் காலம் காலமாக செய்து கொண்டிருப்பதுதான் அது மிகச் சாதாரண வழியேதானாலும் நம்மைப் போல அவனுக்கும் வேறு வழியில்லை – அவ்வழியிலேயே செல்லத் தலைப்படுகிறான். புறப்படும்முன் எர்னெஸ்டோவிடம் ஒரு உண்மையை சொல்லிவிட்டுச் செல்கிறான். தன்னுடைய பிறந்த தேதி ஏப்ரல் இரண்டு அல்ல...ஒரு இலக்கை நிர்ணயித்து பயணித்தால் பயணம் வேகமாகும் என்பதற்காகவே அவ்வாறு பொய் கூறினேன் என்று சொல்லிய போது புன்னகையுடன் எர்னெஸ்டோ அது தனக்கு தெரியும் என்கிறான். மென்சோகத்துடன் எர்னெஸ்டோவிடம் கைகுலுக்கி விடைபெறுகிறான் ஆல்பர்ட்டோ.




ஆனால் எர்னெஸ்டோ சே குவேரா தேர்ந்தெடுத்த பாதை யாரும் செல்ல அஞ்சுவது. மிகவும் நேசிக்கும் மனிதர்களின் துயர் துடைக்க ஆயுதம் எடுத்து தோட்டாக்களின் இடைவெளிகளில் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளக் கூடிய அபாயகரமான புரட்சிக்கானது. மிக மெல்லிய மனதும் அதே சமயம் எஃகு போல் உறுதியான் நெஞ்சுரமும் கொண்ட சே தேர்தெடுத்த பாதை போராட்டக் களமானது.

உலகில் இரண்டே விதமான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். முதல் வகையினர் ஆல்பர்ட்டோ போன்றவர்கள். இவர்களே பெரும்பான்மையினர். ஆயிரத்தில், கோடியில் ஒருவர் தான் மற்றவர்களுக்காக வாழ்பவர்கள், பிற உயிர்க்காக தன்னுயிரை விடுபவர்கள். என்றும் எல்லா காலங்களிலும் எல்லார் மனதிலும் வாழும் சே போன்றவர்களே அம்மாமனிதர்கள்...அவர்களின் ரத்தம் பருகித்தான் இந்த நிலம் ஈரப்பதத்துடன் இருக்கிறது. அதில் நின்று கொண்டிருப்பது நாமும்தான்...

இப்படத்தின் தாக்கம் என்பது சில நாள்கள் மட்டுமன்று ஒரு வாழ்நாளுக்கானது...

Motor Cycle Dairies
Motor Cycle Dairies


சேவின் டைரிக் குறிப்பிலிருந்து சில துளிகள்:

"என்னுடைய கனவு காணும் மனதை நிறைவு செய்ய இயலாதவனாய் நான் அமைதி இழந்தவனாகிறேன். மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள், தேர்வுகள் ஆகியவை எனக்கு சலிப்பை ஏற்படுத்தின.

மனம் போன போக்கில் அமெர்க்க கண்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட எங்கள் பயணம் நான் உணர்ந்ததை விட அதிகமாகவே என்னை மாற்றிவிட்டது.

எங்கள் மனங்களிலு கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும் அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாரவே உள்ளோம்.

மிருக பலத்திற்கும் அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.

மக்கள் என்னை 'சே' என்று அழைப்பதை நான் மிகவ்ம் விரும்புகிறேன்.

பலர் என்னை ஒரு வீரசாகசச் செயல்களில் நாட்டமுள்ளவன் எனக் கூறலாம். நான் அத்தகையவந்தான். ஆனால் கொஞ்சம் வேறுபட்டவன், என்னுடைய கொள்கைக்காகவும் நம்பிக்கைக்காகவும் உயிரையும் தருபவர்களில் நானும் ஒருவன்."

சில பின் குறிப்புகள் :

"சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்

க்யூபா, பொலிவியா, காங்கோ இன்னும் அடக்குமுறை எந்தெந்த இடங்களில் கொடிகட்டிப் பறந்ததோ ஏகாதிக்பத்யம் தன் கொடுங்கரங்களை மக்கள் மீதி பதித்திருந்ததோ அங்கே ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் சேயை ஈடுபடச் செய்தது. அவரின் மனித நேயம் பரந்துபட்டது, எல்லைக்ளுக்கு உட்பட்டதில்லை. எல்லை என்பது நிலங்களில்தான் மனங்களில் இல்லை என்பதை தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்தவர் சே.

படத்தில் சே குவேராவாக நடித்திருந்த கேல் கார்சியா பெர்னல் (Gael García Bernal) தன் அருமையான நடிப்பாலும் வசீகரத்தாலும் பார்வையாளர்களை கட்டிப் போட்டுவிடுகிறார். ஆல்பர்டோவாக நடித்தவர் ரோட்ரிகோ.

பயணத்தின் போது எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் முதலில் புத்தகம் ஒன்றைத்தான் எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

சே குவேரா க்யூபாவின் அதிபரான ஃபிடல் காஸ்ரோவிற்கு நெருங்கிய நண்பர். சே குவேரா ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் பிற போராளிகளும் தங்கள் உயிரைப் பயணம் வைத்து க்யூபப் போராட்டத்தில் வெற்றியடைந்தனர்.

சே குவேரா – சில குறிப்புகள்

• பிறப்பு – 1929 ஜூன் மாதம் 14ம் தேதி.

• 1945 – மருத்துவ மேற்படிப்பு

• 1950 – மோட்டார்சைக்கிளில் 3000 மைல் தூரம் அர்ஜெண்டைனா முழுவதும் சுற்றுப்பயணம் ஆரம்பம்

• 1952 – தனது ப்ரியமான நண்பன் ஆல்பர்டோ கிரனட்டொவுடன் பெரு, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு கடும் பயணம் செய்தார். தொழுநோயாளிகள் குடியிருப்பில் சேவை செய்து அங்கு பணிபுரிந்தார்.

• 1953 ஜூன் 12 – மருத்துவர் பட்டம் பெற்றார்

• 1953 ஜூலை 6, லத்தீன் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறார்.

• பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தால் சே கைது செய்யப்பட்டு பொலிவிய ராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னும் இடத்தில் அக்டோபர் 9ம் தேதி 1967 ஆண்டு சே கொல்லப்பட்டார்.

http://www.thadagam.com/motorcycledairies_review.aspx

மனித நாய்களின், நாய் வேட்டை...! வீடியோ

1.2லிட்டர் தண்ணீரில் குளியல் : தர்மபுரி வாலிபர் சாதனை

செப்டம்பர் 24,2009,தர்மபுரி : தர்மபுரி அருகே, தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டர் தண்ணீரில் குளித்து வாலிபர் சாதனை புரிந்தார். தர்மபுரி அருகே நாய்க்கன்கொட்டாய் அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டையன்; விவசாயி. இவரது மகன் கோவிந்தசாமி(26) ஐந்தாம் வகுப்பு வரை படித்து, ஆடு மேய்த்து வருகிறார். ஆடுகளை ஓட்டிச் செல்லும் போது, நிலத்தின் தேவை போக பாசன தண்ணீர் வீணாவதைக் கண்டு, தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க, விவசாயிகளிடம் சிறு பிரசாரத்தை மேற்கொண்டார்.

tblHumanTrust_12253534794ஆடுகளுக்கு போதிய குடிநீர், காட்டுப்பகுதிக்குள் கிடைக்காததால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வார். ஆடுகள் குடித்தது போக, மீதமுள்ள தண்ணீரை வீணாக்காமல், தன் உடலில் ஊற்றிக் கொள்வார். ஐந்து லிட்டர் தண்ணீரில் துவங்கிய குளியலை படிப்படியாகக் குறைத்து, மூன்று லிட்டரில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 16 ஆண்டாக, இவர் மூன்று லிட்டர் தண்ணீரில் குளித்து வருகிறார். தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளித்து சாதனை படைக்க விரும்புவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்து தருமாறு, ஊர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று நாயக்கன் கொட் டாய் அரசு துவக்கப்பள்ளியில், இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், தன் சாதனை முயற்சியை மேற்கொண்டார். ஒன்றரை லிட்டர் தண்ணீர் தரப்பட்டதில், இரு முறை ஷாம்பூ, இரு முறை சோப்பு போட்டு குளித்து, சோப்பு நுரையில்லாமல் சுத்தமாகக் குளித்ததுடன், 300 மி.லி., தண்ணீரை மீதம் செய்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கோவிந்தசாமி.

இது குறித்து கோவிந்தசாமி கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தவே, இது போன்ற சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டரில் குளித்துக் காட்டினேன். இன்னும் அளவைக் குறைத்து, பெரிய அளவில் சாதனை படைக்க முயற்சி செய்வேன். இவ்வாறு கோவிந்தசாமி கூறினார்.

http://apdiyaa.blogspot.com/2009/09/12.html





நாய்கள் ஜாக்கிரதை...........! ஒரு நெகிழ்வு பதிவு......!


இந்த ஒளி வடிவத்தை ஒரு கனம் இதில் பதிவிட வேண்டுமா என்று கூடஜோசித்தேன்.....? இருந்தாலும் இதை அறியாமல் இருப்போருக்கு அறிந்துகொள்ள உதவட்டுமே என்பதற்காக மட்டும் தான்.

இதை நீங்கள் பார்ப்பதற்கு முன்னர் நீங்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவரா?இல்லை இரத்தம் கொலை என்பன உங்களை சற்று நேரம் நிலை குழையசெய்யும் என எண்ணினால் பார்ப்பதை தவிர்க்கவும். சிறுவர்கள்,கர்ப்பிணி தாய்மார்கள்,முதியோருக்கு இது உகந்ததல்ல



முடிவில் புறிஞ்சிருக்குமே இந்த வேலைய செய்றது யாருன்னு கண்டிப்பாஇவங்களால மட்டும் தாங்க இதலாம் இப்படி சர்வ சாதரணமா செய்ய முடியும். இதை எதிர்த்து உங்கள் குரலை பதிவு செய்ய விரும்பினா ..... இங்க போய்சொல்லுங்கப்பா. www.onevoice-ear.org

ஆனால் என் மனதிற்குள் ஒரு கேள்வி எழுந்தது ( சைவ பிரியர்களேமுடிந்தால் பதில் சொல்லவும் ) இப்படித்தான் நாம் மற்றைய உயிர்களை அடித்துஉண்ணும் போது சைவ பிரியர்கள் நம்மளை பார்ப்பார்களோ என்று. எதுஎவ்வாறோ இது சற்று மனதை உலுக்கிய காட்சிகளாகவே இருந்தது. உங்க வீட்டு browny,shiny,steffny இன்னும் என்ன என்ன செல்ல பெயர் வைத்திருகீன்களோ தெரியல, ஆனா கண்டிபா இது நம்ம நாட்டுல நடக்க போறதில்ல என்றத மட்டும் நினைச்சு சந்தோஷ பட்டுகோங்க..............





http://busooly.blogspot.com/2009/09/blog-post_24.html
16 சீன பெண்களின் சைக்கிள் சர்க்கஸ்

http://www.youtube.com/watch?v=oerSsjmUcf4






♥ கருவறைக்குள் ஒரு காமுகன்!-ஜுனியர் விகடன் பறக்கும் படை ♥




"குருக்களின் முகத்தை ஏன் மறைத்தாய்,ஜுனியர் விகடனே ..?
பார்ப்பனப் பூணூல் பாசமா...?"
http://4.bp.blogspot.com/_uAN_NpxSl2A/SZP9vMA64II/AAAAAAAAAA4/heCSiE-tiH8/s400/vikatan-final-logo.jpg

http://live.athirady.org/wp-content/uploads/2009/04/video-camera-006-300x300.jpg
வீடியோவில் அம்பலமான படுபாதகம்...

கருவறைக்குள் ஒரு காமுகன்!

'நகரேஷு காஞ்சி' என்பார்கள். ஆன்மிகத்தின் ஆணிவேர் காலங்களைக் கடந்து அழுந்தப் பதிந்து கிடக்கும் பூமி இது. கோயில்களுக்கும், பக்திப் பெருக்கெடுக்கும் திருவிழாக்களுக்கும், மனதை வலுவாக்கும் நல்ல பல அறிஞர்களின் கருத்துக்களுக்கும் பஞ்சமில்லாத நகரம் காஞ்சிபுரம்!

விநோதமான ஒற்றுமையாக, பகுத்தறிவுச் சிந்தனை மூலம் விழிப்பு உணர்வு உண்டாக்கி, அதோடு அரசியலிலும் புதிய சாதனைகள் படைத்த அறிஞர் அண்ணா பிறந்த நகரமும் இதுவே!

ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையோ, நாட்டமோ இல்லாத வர்கள்கூட... கோயில் என்றால் மரியாதையோடு பார்த்துத் தாண்டிப் போகிற வழக்கம் இங்கே உண்டு. ஆத்திக அன்பர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

இங்கேதான், இங்கிருந்துதான் ஜூ.வி. ஆக்ஷன் செல் 044-42890005 எண்ணில்


அந்தக் குரல் வந்து பதிவாகி இருந்தது. ''என் பெயர் முக்கியமில்லை. ஆனால், என்னிடம் இருக்கும் ஒரு வீடியோ சி.டி. முக்கிய மானது. அதை ஜூ.வி. முகவரிக்கு தபாலில் அனுப்பி வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு, இந்த எண்ணுக்குக் கூப்பிடுங்கள். மிச்சத்தைச் சொல்கிறேன்...'' என்றது அந்தக் குரல்!

சொன்னபடியே அந்த சி.டி-யும் வந்தது. எத்தனையோ ஊழல் விவகாரங்கள் குறித்த, ஆவணம்போலத்தான் இதுவும் என்று எண்ணி அதை ஓடவிட்டோம். அந்த சி.டி. ஓட ஓட... நம் இதயம் நின்றுவிடும் போலானது! என்னவொரு பாதகம் அது..!

அது ஒரு கோயிலின் கருவறை என்பது புரிகிறது; கம்பீரமான கருவறையின் கதவுகள் பாதி திறந்தே கிடக்க, அந்தக் கதவுக்குப் பின்னால் உள்ள மறைவைக் குறிவைக்கிறது கேமரா. அந்தக் கருவறையில் பிரதானமாக தரிசனம் கொடுக்கும் சிவலிங்கத்துக்கும் முன்னால், படமெடுத்தாடும் நாக தெய்வத்தின் சிறிய விக்கிரகம். அதை அமைத்துள்ள கான்க்ரீட் திண்டின்மேல் அமர்ந் திருக்கிறார் அந்த மனிதர். கோயில் குருக்களுக்குரிய எல்லா லட்சணங்களையும் அவருடைய பின்புற தோற்றத்திலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.

சேலை உடுத்தியபடி இவரோடு காஷுவலாக நிற்கிறார், நடுத்தர வயதில் ஒரு பெண்மணி. சுவற்றை ஒட்டினாற்போல் நிற்கும் அந்தப் பெண்மணியை ஆலிங்கனம் செய்துகொண்டு... அப்பப்பா... இடம் - பொருள் - ஏவல் தெரியாமல், ஒரு மிருகமாகவே செயல்படும் அந்த மனிதரும் பெண்மணியும் துளிகூட அச்சமோ, கூச்சமோ, தெய்வகுத்தமோ பார்க்கிற வகையாகத் தெரியவில்லை.

இடையிடையே, கதவுக்கு வெளியே இடுப்பை மட்டும் வளைத்துப் பார்த்து, பக்தர்கள் யாராவது அர்ச் சனைக்கோ ஆராதனைக்கோ வருகிறார்களா என்று செக் பண்ணிக் கொள்கிறார் அந்த குருக்கள். பிறகு, தன் பாவத்தைத் தொடர்கிறார். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அதை தொடர்ந்து பார்த்தால், இறுதியில் இடுப்பு வேட்டி மடிப்பிலிருந்து ரூபாய் நோட்டுகளை உருவி அந்தப் பெண்மணிக்குக் கொடுத்து அனுப்பிவைப்பது வரையில் பதிவாகியிருக்கிறது!

சி.டி-யின் அடுத்ததொரு காட்சி... அடுத்த தொரு பெண். குங்குமம், விபூதி என மங்கலம் துலங்கக் காட்சி தரும் இந்தப் பெண்ணுக்கு வயது - இருபத்தைந்துக்குள் இருக்கும். கழுத்தில் தாலி மின்னுகிறது! இடம் - இதே கருவறையின் கதவு மறைப்புதான். முந்தைய காட்சி போலவே பட்டப்பகலில்தான் இதுவும் அரங்கேறுகிறது.

இந்தப் பெண்ணோடு இருந்த படியே எட்டிப் பார்க்கும் அர்ச்சகர், சட்டென்று ஷார்ப்பாகி... நகருகிறார். இளம்பெண்ணை சுவற்றோடு சுவறாக ஒட்டி நிறுத்திவிட்டு... கருவறைக்கு வெளியே காஷுவலாக செல்கிறார். வந்துவிட்ட பக்தர் களிடமிருந்து அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு, எந்தவித சலனமும் முகத்தில் காட்டாமல் சிவலிங்கத்துக்குப் பூஜைகள் செய்கிறார். மிகச் சுருக்கமாக தன் அர்ச்சனையை முடித்துவிட்டு, தீபாராதனைத் தட்டு சகிதம் மறுபடி வெளியேபோகிறார் (பக்தர்களுக்கு கற்பூர ஜோதி காட்டுகிறார் என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது!). வந்த வர்கள் இறைவனிடம் தங்கள் வேண்டுதலைச் சொல்லிவிட்டுக் கிளம்பியதும், மறுபடி கதவை லேசாக சாத்தி வைத்து, அதன்பின்னால் கேமராவின் ஆளுகைக்குள் வந்து அந்த இளம்பெண்ணோடு ஐக்கியமாகிறார்!

மூன்றாம் காட்சி கோயிலில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அது ஒரு லாட்ஜ் அறையாகவே தெரிகிறது. தலைக்கு மேல் போர்ட்டபிள் டி.வி. ஓடிக்கொண்டிருக்க... இதே மனிதரும் முற்றிலும் புதியதொரு பெண்மணியும்! இறுதியில் அந்தப் பெண் மணிக்கும் பணம் அளிக்கப்படுகிறது... எந்த பக்தர், என்ன பிரார்த் தனையோடு இறைவனின் பெயரால் தீபாராதனைத் தட்டில் போட்ட பணமோ..?!

- இவை அனைத்துமே அந்த குருக்களின் சொந்த செல்போனில், வாகாக இடம் பார்த்து வைக்கப்பட்டு, அவருக்குத் தெரிந்தே பதிவாகியிருக்கிறது என்பது இந்தக் காட்சிகளைக் காணும்போதே உறுதியாகிறது. தவறான செய்கை, தவறான இடம்... அதை தாண்டி அதையெல்லாம் பதிவு செய்து வைத்துக்கொள்ளும் உச்சகட்ட வக்கிரம்!

இதுபோல் மொத்தம் ஆறு பெண்கள் தொடர்பான காட்சிகள் இந்த சி.டி-யில் இடம் பெற்றிருக்க... அதையெல்லாம் முழுதாகப் பார்ப்பதற்கு மனதில் திடமில்லாமல், சி.டி-யை அனுப்பி வைத்த வாசகரின் எண்ணுக்கே போன் போட்டோம்.

''உங்கள், பெயரும் அடையாளங்களும் ரகசியமாக வைக்கப்படும். சி.டி-யின் பின்னணியைச் சொல்லுங்கள்...'' என்றோம். அவர் சொன்னதெல்லாமே, ''இது என் கைக்கு வந்து சில மாதங்கள் ஓடிவிட்டது. ஜூ.வி-யின் பார்வைக்கு வைப்பதா வேண்டாமா என்ற மனப்போராட்டத்திலே நாட்கள் ஓடிவிட்டன. தவறு செய்பவர்களை மக்கள் மன்றத்தின்முன் நிறுத்தினால்தான், இனியருத்தர் இப்படிப்பட்ட பாவத்தில் இறங்க மாட்டார்கள் என்று தோன்றியது!'' என்று நிறுத்தியவர்,

''இந்த குருக்களை நான் காஞ்சி நகரத்துக்குள்ளேயே பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன கோயில்களுக்கு அவரே அர்ச்சனை செய்ய வருவார். இப்போது எந்த கோயிலில் இருக்கிறார் என்று தெரியாது...'' என்றார்.

காஞ்சிபுரத்தில் அத்தனை கோயில்களிலும் சுற்றித் திரிந்து எப்படிக் கண்டு பிடிக்க? சிவ லிங்கமும், கதவுக்கு அருகே நாகதேவதையும் அமைந்துள்ள கோயில்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முகமாக, நமது நிருபர் படை புறப்பட்டது.

காஞ்சியில் கால்பட்டதுமே, கண் திரும்பிய திசையெல்லாம் சுற்றுலாப் பயணிகள். ஏராளமான நம்பிக்கைகளோடு பஸ்ஸிலும், காரிலுமாகக் குவிந்து கிடந்தார்கள். ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, அந்தக் கருவறையின் பல்வேறு தோற்றங்களையும், அர்ச்சகரின் க்ளோஸ்-அப் முகத்தையும் எல்லா நிருபர்களிடமும் பிரின்ட் போட்டுக் கொடுத்திருந்தோம். சிறியது, பெரியது என்று வரிசையாகக் கோயில்களுக்கு நீண்டது அந்தப் பயணம். பூக்கடை, பூஜைப் பொருட்கள் விற்பனைக் கடை, டீக்கடை என்று விசாரித்துக் கொண்டே சென்றோம். எங்கும் அப்படி ஓர் இடமும், நாம் தேடும் குருக்களும் கிடைக்கவேயில்லை..!

மூன்று நாள் தேடலுக்குப் பின் ஓர் அர்ச்சகர், ''அட, ........... குருக்களாச்சே இது..! மச்சேச பெருமான் கோயிலில்தான் இருக்கிறார்..!'' என்று அடையாளம் காட்டினார்.

பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள கீழ ராஜவீதியில், அமைதியின் உருவமாக மச்சேசப் பெருமான் திருக்கோயில் காட்சியளிக்கிறது. அந்த மாலை நேரத்தில் நாம் உள்ளே போய்ப் பார்த்தபோது வீடியோ 'க்ளிப்'பில் நாம் பார்த்த இடங்கள் அப்படியே இருந்தன! அங்கிருந்த கோயில் ஊழியர் ஒருவரிடம்,

''திருத்தலங்கள் பற்றிய ஒரு பயணக் கட்டுரைக்கான தகவல் சேகரிக்க வந்திருக்கிறோம். கோயிலைப் பற்றியும், பணியாற்றும் குருக்களைப் பற்றியும் சொல்லுங்கள்...'' என்று கேட்டோம். .......... குருக்கள் பற்றியும் அப்போது சொன்ன அவர், நல்ல விதமாகவே கூறினார். அடுத்தடுத்து நாம் விசாரித்த ஊழியர்கள் சிலரும் அப்படியே சொன்னார்கள்.

ஒரு மணி நேரம் காத்திருந்த நிலையில், சுமார் 6 மணிக்கு நாம் தேடிய குருக்கள் கோயிலுக்குள் வந்தார். முப்பதுகளில் இருக்கும் அவரின் நெற்றியில் திருநீறும் குங்குமமும் மின்னிக்கொண்டிருந்தன. பளிச்சென்று வெளுத்துக் கட்டிய பஞ்சகச்ச வேட்டி... 'வீடியோ காட்சியில் பார்த்தவரேதான்' என்பதில் சந்தேகமில்லை. ஒதுங்கி நின்று கவனித்தோம்... கருவறையினுள் சென்றவர் சுத்தமாக தண்ணீர் விட்டு அலம்பியதோடு, மளமளவென அர்ச்சனையும் தொடங்கினார். கணீர் குரலில் மந்திரங்கள் வந்து விழுந்தன.

அத்தனை பக்தர்களும் இருக்கின்றபோதே, திடீரென்று ஒரு பெண்மணியின் வருகை. கையில் ஒரு பையோடு வந்து அதை குருக்களிடம் அளிக்கிறார் அந்தப் பெண்மணி. 'எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே' என்று யோசித்தால்... வீடியோவில் உள்ள முதல் காட்சியில் இடம்பெறும் அதே பெண்மணி. குருக்கள் அவரை நிமிர்ந்து பார்க்கிறார். ஒரே ஒரு கணம்தான். எதுவுமே பேசாமல் அந்தப் பையை வாங்கி வைத்துக்கொண்டு, ''அப்புறம் வா! பணம் கொடுத்துட

றேன்...'' என்று சொல்லி அனுப்புகிறார். அந்தப் பெண்மணியும் எந்தவித சலனமும் இன்றி வந்த வழியே திரும்பிப் போகிறார்!

பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து, குருக்கள் சற்று ஓய்வானதும் அவரிடம் நாம் பேச ஆரம்பிக்கிறோம். ''உங்களோட நடவடிக்கைகள் பற்றி நாலு பேர் நாலுவிதமா பேசுவது உங்களுக்குத் தெரியுமா?'' என்று ஆரம்பித்து, மெதுவாகக் கேள்விகள் போட்டோம். தன் தரப்பில் எந்த அப்பழுக்கும் இல்லையென்றும், பொறாமை காரணமாக நாலு பேர் நாலுவிதமாகப் பேசத்தான் செய்வார்கள் என்றும், அதையெல்லாம் நம்பிவிடக்கூடாது என்றும் பொறுமை யாகச் சொல்லிக்கொண்டே வந்தார்.

கடைசியாகத்தான் சி.டி. நகலில் பார்த்த காட்சிகளைப் பற்றிக் கேட்டோம். அந்த சி.டி.யிலிருந்து எடுத்த பிரின்ட்அவுட்கள் சிலவற்றை காட்டினோம். இப்போது அவரது பேச்சு நின்றது. சிவந்துபோன முகத்தோடு வெகுநேரம் மௌனமாக இருந்தவர், பிறகு மெள்ள பேச ஆரம்பித்தார்.

''நான் கொஞ்ச வருஷத்துக்கு முந்தி தெரியாம செஞ்ச தப்பு இது. யாரையும் வற்புறுத்தியோ, மிரட்டியோ இப்படியெல்லாம் செய்யலை. என் வீட்டுக்காரிக்குக் கொஞ்சம் உடம்பு சுகமில்லாம போச்சு. அந்த நேரத்துல சபலப்பட்டுட்டேன்...'' என்றவரிடம்...

''எப்போது நடந்திருந்தால்தான் என்ன... நம்பிக்கையோடு ஒப்படைத்த ஒரு புனிதப் பணியை செய்யும் இடத்தில், அதிலும் தெய்வ சந்நிதானத்திலேயே செய்யக்கூடிய செயலா இது! அதிலும் சி.டி-யில் இடம்பெறும் காலண்டர் ஒன்று, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டுகிறதே..?'' என்றோம் அவரிடம்.

மறுபடி சிறு மௌனம். ''இந்தக் கோயில் தவிர இந்தப் பகுதியில் இன்னும் சில கோயில்களிலும் நான்தான் பூஜை பண்ணுவேன். பத்து வருஷத்துக்கும் மேலா இங்கே பூஜை பண்றேன். என் மேல் எந்த புகாரோ, பழிச்சொல்லோ வந்தது கிடையாது. அந்த சி.டி-யில் இருக்கிறதும்கூட நடத்தை சரியில்லாத பெண்கள்தான். தொழில்முறையே அப்படி!'' என்று அப்போதும் நியாயம் கற்பிக்கவே முயன்றார்.

''இந்த கோயிலுக்கு பகவானைப் பார்க்க வர்ற யாரையும் நான் ஏறெடுத்தும் பார்த்தது கிடையாது...'' என்று சொன்னதோடு, தன் பூர்வீகம், குடும்பத்தின் பாரம்பரியம் என்றெல்லாம் மிக விளக்கமாக சில விஷயங்களை எடுத்து வைத்துக்கொண்டே போனார்.
''எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு. அதை நினைச்சு நான் அப்பவே திருந்திட்டேன். ஆனாலும், கோயிலுக்குள் ஏதோ தப்பா நடக்கறதா மோப்பம் பிடிச்சு இங்கே கண்காணிப்பு கெடுபிடியை அதிகம் பண்ணியாச்சு. இப்போ நான் இன்னொரு பெரிய கோயிலிலும் முக்கிய பொறுப்புகளைப் பார்த்துக்கறேன். நான் பழைய ஆளில்லை!' என்று கீழிறங்கிய குரலில் சொல்லிவிட்டுத் தலையைத் தாழ்த்திக்கொண்டார் அவர்.

நாம் அதற்குமேல் எதுவும் பேசாமல் மௌனமாக வெளியே நடந்தோம்!

இந்த சி.டி. பதிவின் நகலை காவல்துறையின் பொறுப்பில் ஒப்படைத்துள்ளோம். நடந்த குற்றத்துக்கு சட்டத்தின் நடவடிக்கையும் தேவைதான் என்ற எங்கள் கருத்து, மதங்களைத் தாண்டி நியாயங்களை உணர்ந்த ஜூ.வி. வாசகர்களுக்கும் ஏற்புடை யதாகவே இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்..!



- _ஜூ.வி. பறக்கும் படை

http://3.bp.blogspot.com/_2F6P-6H3Bhc/SoAaXFPca7I/AAAAAAAAAqE/Y0rSxci3-Sk/s400/2.jpg http://3.bp.blogspot.com/_Dcezi5xfsqA/SoL-5sqUR6I/AAAAAAAABqQ/yLtGInDUp2Q/s320/shilpa-shetty14.JPG http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/08/shilpashetty1.jpg


smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!