Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, November 29, 2009

♥ புலிகள் ஓய்வதில்லை....! ♥

குடும்பத்தை கெடுக்கும் மாதர் சங்கங்கள்

பெண்கள் மீதான வன்கொடுமை:

நேற்று 25 நவம்பர் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு தினமாம். பெண்களுக்கு வன்கொடுமை அதிகபட்சமாக சொல்லப்படுவது பாலியல் வல்லுறவு. ஆனால் இன்றைய வளர்ந்த நாகரீக சூழ்நிலையில் வல்லுறவுகள் அனைத்தும் நல்லுறவுகளாக மாறிவிட்டதால் கற்பழிப்பு வழக்குகள் முன்போல வருவதில்லை. இந்த பாலியல் வல்லுறவுக்கு அடுத்ததாக இடம்பெறுவது மாமியார் கொடுமை. ஆனால் நவீன மருமகள்கள் ஆதிக்கத்தால் இன்றைக்கு எல்லா மாமியார்களும் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டனர். சிலிண்டர் வெடித்துச் சாவுகள் இப்போதெல்லாம் முன்போல நடப்பதில்லை.

மகுடி ஊதிய பாம்பாக:

இப்போதெல்லாம் வரதட்சனை கொடுமைகள் குறித்து அதிகமாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கணவனுக்கு மனைவி பயந்த காலம் மாறி இன்றைக்கு மனைவி சொல்லே மந்திரம் என மகுடி ஊதிய பாம்பாக கணவன்மார்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். பூரிக்கட்டை அடிகளும், தோசைக்கரண்டி வீச்சுகலும் வெளியே மறைக்கப்பட்டு அப்பாவியாய் சின்னப்புள்ளத் தனமாக வெளியே நடமாடும் கணவன்மார்களுக்கு பாதுகாப்பாக என்ன சட்டம் இருக்கிறது?

வாழ்க்கைச் சூழல்:

முன்னர் ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் போது குழ‌வி மட்டும் சுற்றிவரும், கல் அப்படியே இருக்கும். ஆனால் இன்றைக்கு கிரைண்டரில் கல்லும் குழ‌வியும் சேர்ந்து சுற்றுகிறது. அதாவது இன்றைய பொருளாதாரத்தைச் சமாளிக்க கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டனர். வேலைக்கு அனுப்ப விருப்பமில்லாமல் ஆனால் குடும்பச் சூழ்நிலையால் அரை மனதோடு மனைவியை வேலைக்கு அனுப்பி வைப்பவர்கள் எத்தனை பேர்? அலுவலகத்தில் வேலைக்குச் செல்லும் மனைவியில் கைத்தொலைபேசியை தினசரி சோதனை செய்யும் கணவன்மார்கள் எத்தனை பேர்? இப்படி மனைவி மீது எழும் சந்தேகத்தின் காரணமாக ஒரு சிறந்த குடும்பத்திற்குள் விரிசல் ஆரம்பமாகிறது. கணவனுக்கு சமமாக தாங்களும் வேலைக்குச் செல்வதால் தங்களும் ஒரு குடும்பத்தலைவர் தான் என்ற எண்ணம் பெண்களுக்கும் எழுந்து விடுகிறது. சமஉரிமை வேண்டும் என்ற பெயரில் நீயும் துணி துவை, நீயும் சமயல் செய், நீயும் வீட்டை சுத்தம் செய் என்ற ஈகோ பெண்களுக்கு உருவாகி இருவருக்குள்ளும் எழும் பிரச்சனை தினசரி சண்டைகளாக மாறுகிறது.

கவுன்சிலிங்:

இப்படித்தான் பிரச்சனைகள் ஆரம்பமாகி ஒரு கட்டத்தில் கணவன் கையை ஓங்கினால் போதும் இவர்களுக்கென சந்துக்கு சந்து மாதர் சங்கங்கள் இயங்கிவருகின்றன. அந்த சங்கத்தில் பொருப்பில் இருக்கும் சீனியர் பெண்கள் அனைவரும் கணவனோடு சண்டையிட்டுப் பிரிந்து அல்லது சில மோசமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடத்திலே இந்தக் குடும்பப்பெண் கவுன்சிலிங் போகும் போது அவர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ் என்ன தெரியுமா? அவன் பேசினால் நீயும் பேசு அவன் அடித்தால் நீயும் திருப்பி அடி என அவர்களுக்கு சாவியை போட்டுவிடுவார்கள். அதற்கு மேல் போனால் எங்கள் சங்கமே தலையிட்டு இலவசமாக விவாகரத்து வாங்கித் த‌ந்துவிடும் என பெருமையாகச் சொல்லி பல குடும்பங்களுக்கு குண்டு வைத்து வருகிறார்கள் இந்த மாதர் சங்கத்தினர். அவர்கள் சிலர் ஆண்களால் வஞ்சிக்கப்பட்டார்க என்பதற்காக மற்றவர்களின் சாதாரண பிரச்சனையையும் இவர்கள் தலையிட்டு ஊதி பெருசாக்கிவிடுகிறார்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நீள்கிறது இவர்களின் சேவை.

அடிதடி பேச்சுவார்த்தை மேட்டர்‌ சரி வரவில்லை எனில் இவர்கள் கொடுக்கும் அடுத்த யோசனை மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று வரதட்சனை புகார் கொடுக்கச் சொல்வதாகும்.

மகளிர் காவல் நிலையம்:

சினிமாக்களில் எமலோகத்தைப் பார்த்திருப்போம். அங்கே கொம்பு வைத்து பெரிய கோரைப்பற்கள் வெளியே தெரிய‌ பெண் கிங்கரர்கள் இருப்பார்களே அவர்களுக்கும் தமிழக மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்களுக்கும் அதிகபட்சம் பெரிய வித்தியாசமில்லை. இந்த வழக்கு அவர்களில் பார்வைக்கு வந்ததும் அந்தக் கணவன் டாக்டராக இருந்தாலும் அவனை நடுரோட்டில் நிற்க வைத்து அவமானப்படுத்தி அந்த வீட்டில் இருக்கும் பெரிசு சின்னது என எல்லாரையும் ஜீப்பில் அள்ளிப் போட்டுக்கொண்டு ஸ்டேசனுக்கு கொண்டு வந்து காதுகளால் கேட்க முடியாத அர்ச்சனையை ஆரம்பிக்கும் மகளிர் காவல்துறை. ங்கோ..., என ஆரம்பித்து அவனின் அம்மா, அக்கா மூனு தலைமுறைக்கு முன்னாடி செத்துப்போன கிளவி முதற்கொண்டு அனைவரையும் நாறடித்து பின்னர் அவனிடம் மீட்டர் கறக்கும் வேலையில் இறங்குவார்கள் இந்தக் கட்டப்பஞ்சாய‌த்து கம்பெனியினர்..

மீட்டர் கறப்பதற்கென‌ சிறப்பாக பயிற்சி பெற்ற பெண் போலீஸ் அவனிடம் நைசாக பேச்சுக்கொடுக்கும். சார், "அம்மா கொஞ்சம் கோவக்காரங்க தான், ஆனா மற்றபடி நல்லவங்க", என ஆரம்பித்து அவனிடம் பெரிய தொகையை அழுத்திவிடுவார்கள். அதுமட்டுமின்றி அன்றைக்கு அனைவருக்கும் பிரியாணியும் அவன் செலவிலே வாங்கிக்கொள்வார்கள். தமிழக மகளிர் காவல் நிலையங்களில் தினசரி பிரியாணி வாசனை தான். எப்படியும் தினமும் ஒரு கேஸ் கிடைத்துவிடும். ஆனால் காசு கொடுக்க மறுக்கும் அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுவிடும். அத்தோடு அவன் வாழ்க்கை காலி. தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வரதட்சனை கொடுமை வழக்குகளில் 70% இவ்வாறு புணையப்பட்ட வழக்குகள் என வஞ்சிக்கப்பட்ட ஆண்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது போல அவமானப்பட்டு அவர்களின் வற்புறுத்தலால் அவளை வேண்டாவெறுப்பாக சேர்த்துவாழும் கணவன்கள் பல நேரங்களில் அவர்களின் தொந்தரவு தாங்காமல் அவளை கொலை செய்துவிடுவதும் செய்திகளாக நாம் பார்க்கிறோம். காவல்துறையில் இருக்கும் இதுபோன்ற சில காவலர்களால் வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனை பேர். வன்கொடுமை சட்டம் பெண்களுக்கு மட்டும் தானா? ஆண்களுக்கு இல்லையா என விடைதெரியாத பலகேள்விகள் இன்றுவரை கேள்விகளாகவே இருக்கின்றன.

மாரியம்மாள் கொலை வழக்கு:

சில வருடங்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தை உலுக்கிய மாரியம்மாள் வழக்கு மிக சுவாரஸ்யமானது. அதாவது கணவனிடம் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாள் மாரியம்மாள் என்ற‌ மனைவி . சில நாட்களில் மாரியம்மாளை அவளது கணவன் கொலை செய்துவிட்டான் என அவனை கைது செய்து பல நாட்கள் அந்த வழக்கு நடந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. இந்த தீர்ப்பைக் கேள்விப்பட்ட மாரியம்மாள் மனம் மாறி வந்து தான் உயிரோடு இருப்பதாகவும், தன் கணவரை விடுதலை செய்யுமாறு அதே நீதிமன்றத்தில் முறையிட வழக்கிலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. தண்டனை விதிக்கப்பட்ட மாரியம்மாளின் கணவன் அதே நிதிபதியின் முன் நேர் நிறுத்தப்பட்டான். நீதிபதி அவனிடம் கேட்டார்

"அப்பறம் ஏன்யா நீ உன் மனைவிய கொல பண்ணுனதா ஒப்புக்கிட்ட?"

"அடப்போங்க அய்யா! போலீஸ்காரங்க என்னய அடிச்சது மாதிரி உங்களையும் அடிச்சிருந்தா மாரியம்மாள கொல பண்ணுனது நான் தான்னு நீங்களே ஒத்துக்கிட்டு இருப்பீங்க‌"

http://etiroli.blogspot.com/2009/11/blog-post_26.html
தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!



தின மலர் - மலிவு விலையில் மனு தர்மம்

தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.

உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.

1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )

2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )

3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை

பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,

ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )

இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.

தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.

இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.

I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.

-நன்றி வில்லவன்

http://www.vinavu.com/2009/11/25/dinamalar/


பேசாமல் பேச வைத்த கலைஞன்!






பேசாமல் பேச வைத்த கலைஞன்!

ரு காட்சி…

பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு.

Chaplin

அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு.

இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக்கு சரியாக வரும் என்றால், தொடர்ந்து அதே வேலையைச் செய்வது..

இந்த சமூக அவலங்களை, அவை நடக்கும் காலகட்டத்திலேயே ஒரு சினிமா மூலம் நச்சென்று சொல்ல வேண்டும். ஆனால் டாக்குமெண்டரி மாதிரி சொல்லிக் கொண்டிருந்தால் யார் பார்ப்பார்கள்…

ஆனால பார்க்க வைத்தார் ஒருவர்… அவர்தான் சார்லி சாப்ளின்..

படம்: மாடர்ன் டைம்ஸ்!

உலகின் மிகச் சிறந்த புரட்சிகரமான படம் என்று கூட இதைச் சொல்லலாம்.

வசனங்கள் இல்லை, அதிரடி சண்டை, கிராபிக்ஸ், அட குறைந்த பட்சம் ரொமான்ஸ் கூட கிடையாது. ஆனால் பார்ப்போரின் இதயங்களை வசப்படுத்தும் நையாண்டி, உணர்வுகள், அரசியல் எள்ளல் என புதிய கலவையாக இருந்தது அந்தப்படம்.

குறிப்பாக, நேரத்தை மிச்சப்படுத்த சாப்பாடு ஊட்டிவிடும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பதாக வரும் காட்சி… எள்ளலின் உச்சம்!

மாநிலக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் திரையில் நான் பார்த்த முதல் சாப்ளின் படம் இதுதான். அதன் பிறகு இந்தப் படத்தை எத்தனையோ முறைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அந்த முதல் 20 நிமிட தொழிற்சாலை காட்சிகளைப் பார்க்க வேண்டும் என டிவிடியில் ஓடவிட்டால், என்னையும் அறியாமல், படம் முடியும் வரை அதிலேயே லயித்துவிடுவது, இந்தப் பதிவை எழுதும் வரை தொடர்கிறது!

Chaplin_chaplin

மகாத்மாவுடன்..

சாப்ளின் – சில குறிப்புகள்

சார்லி சாப்ளின் என்ற திரைக்கலை மேதை மீது விவரம் தெரிந்த நாள் முதல் நேசம் கலந்த மரியாதை உண்டு. கலைவாணர், புரட்சித் தலைவர் படங்களை விரும்பிப் பார்ப்பது போலவே, சார்லி சாப்ளினின் படங்கள் எங்கே ஓடினாலும் தேடிப் போய் பார்த்துவிடுவேன்.

அந்த அற்புத கலைஞனைப் பற்றி சில வரிகளுக்குள் சொல்வது சாத்தியமான விஷயமே அல்ல…

எல்லோரும் சினிமாவை எப்படி தங்களை முன்னிலைப்படுத்த மட்டுமே கையாளலாம் என யோசித்துக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், சாப்ளின் மட்டுமே சினிமாவை சமூக விழிப்புணர்வுக்கான கருவியாக மாற்றினார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்குப் பகுதியில் ஒரு ஏழை மேடைப் பாடகனின் மகனாக 1889-ல் பிறந்தவர் சாப்ளின். 5 வயதிலேயே நாடக மேடைகளுக்கு அவர் நன்கு அறிமுகமாகிவிட்டார். தான் பெற்ற அனுபவங்களைத்தான் பின்னாளில் திரைப்படங்களில் வெகு யதார்த்தமாகக் காட்டினார்.

பெரிதாக படிப்பறிவில்லை. 21 வயது வரை வறுமையுடன் போராடிய அந்த கலைஞன், பின்னர் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார். 1913-ல் ஊமைப் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்தில் போட்டது வில்லன் வேஷம். வில்லனாக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்வது சாப்ளின் காலத்திலிருந்தே தொடர்கிறது போலும்!

இரண்டாவது படத்திலேயே காமெடியை தனது பிரதான அஸ்கிரமாக்கிக் கொண்டார். ‘கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்’ என்ற அந்தப் படத்தில்தான் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி என தனது ட்ரேட் மார்க் வேடத்துக்கு மாறினார்.

Modern times

மாடர்ன் டைம்ஸ் படத்தில்...

அதன்பிறகு ஒரே ஆண்டில் 35 படங்களில் நடிக்கும் சூப்பர் நடிகராக மாறிவிட்டார் சாப்ளின். இவை அனைத்துமே கிட்டத்தட்ட வெற்றிப் படங்கள்தான். 1916 ம் ஆண்டில் சாப்ளின் வாங்கிய சம்பளம் வாரம் 10000 டாலர்கள்!

இன்னொன்று அன்றைக்கே, குறும்படம், இரண்டு ரீல் சினிமா என பெரிய திரைப் புரட்சியே நடத்திக் காட்டியவர் சாப்ளின்.

நடிகராக இருந்தவர் பின்னர் இயக்குநராகவும் உயர்ந்தார்.

1919-ல் யுனைட்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார், நண்பர்களுடன் இணைந்து. இந்த பேனரில் வெளிவந்த படம்தான் சிட்டி லைட்ஸ் (1931).

மௌனப் படங்களுக்கு மவுசு குறைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் (1936) இந்த மாடர்ன் டைம்ஸ் வெளியானது. இப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சாப்ளின் பேசவே மாட்டார். ஆனால் சரித்திரத்தில் பேச வைத்தார் அந்தப் படத்தை.

Great Dictator

கிரேட் டிக்டேட்டர்

சாப்ளின் சாதனைகளுக்கு சிகரம் என்றால், சர்வாதிகாரி ஹிட்லரைக் கிண்டலடித்து அவர் தயாரித்து இயக்கி 1940 ம் ஆண்டு வெளியான ‘தி கிரேட் டிக்டேட்டர்’. இந்தப் படத்தில்தான் முதல்முதலில் அவர் வசனம் பேசினார்.

ஹிட்லர் சர்வ பலம் மிக்க சர்வாதிகாரியாக கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான படம் இது என்பதிலிருந்தே, சாப்ளின் என்ற கலைஞனின் ஆளுமை என்ன என்பது புரிந்திருக்கும்.

உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 1952 ல் அவர் “லைம் லைட்” என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார்.

அவரது கடைசி படம் A Countess from Honk Kong (1967). நடித்தவர்கள் மார்லன் பிராண்டோ – சோபியா லாரன். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுவார் சாப்ளின். அதுதான் அவரது கடைசி திரைத் தோற்றமும் கூட.

752px-Grand_Op_Mod_Times

மாடர்ன் டைம்ஸ் - சர்வதேச சிறப்புக் காட்சி

பின்னர் தனது பழைய படங்களுக்கு புத்தம் புதிதாய் இசைச் சேர்த்து மறுவெளியீடாகக் கொண்டுவந்தார். அப்போதும் அவை பெரும் வெற்றி பெற்றன.

சாப்ளின் மிகச் சிறந்த இசையமைப்பாளர். லைம்லைட் (1952) படத்தின் ஒரிஜினல் ஸ்கோருக்காக சார்லி சாப்ளினுக்கு ஆஸ்கர் தரப்பட்டது.

இது தவிர 1929 மற்றும் 1972 ம் ஆண்டுகளில் அவருக்கு கவரவ ஆஸ்கர் விருது தரப்பட்டது.

ஆனாலும் உள்ளுக்குள் அவரது ஏக்கம், தனது படங்கள் மூலம், தனது நடிப்புக்காக அந்த ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று. அதுவே பல தருணங்களில் ஆஸ்கர் கமிட்டி மீதான கிண்டலான விமர்சனமாகவும் அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.

‘கம்யூனிஸ்ட்’ சாப்ளின்…

statue-chaplin

லண்டனில் சாப்ளின் சிலை

உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற சிட்டி லைட்ஸ், கிரேட் டிக்ட்டர் போன்றவை ஒரு ஆஸ்கர் விருதுக்குக் கூடப் பரிந்துரைக்கப்படவில்லை. காரணம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் என்கிறது சரித்திரம். இருந்தாலும் பிரிட்டிஷ் அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

சாப்ளின் முழுக்க முழுக்க கம்யூனிஸ சித்தாந்தத்தின் ஆதரவாளர். மேற்கத்திய நாடுகள் அவரை ஒரு கம்யூனிஸ்டாரகவே பார்த்தனர். தனது படங்கள் பெரும்பாலானவற்றில் கம்யூனிஸக் கருத்துக்களை போகிறபோக்கில் நச்சென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார் சாப்ளின்.

சொந்த வாழ்க்கையில் அவருக்கு நிறைய சோகங்கள் இருந்தாலும், 1977-ல் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பெரும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்த ஒப்பற்ற கலைஞன் அவர்.

ஒரு கலைஞன் எப்படிப்பட்ட படைப்புகளை மக்களுக்குத் தரவேண்டும் என்று பாடம் எடுத்த ஆசானும் கூட!

-என்வழி ஸ்பெஷல்

மாடர்ன் டைம்ஸ் படம் (ஒரு பகுதிக்கான காட்சி மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. அடுத்தடுத்த 9 பகுதிகளும் யூட்யுபில் உள்ளன!)


http://www.envazhi.com/?p=13850



Exclusive video: இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசு நிர்வாகம்

இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அன்றாட அரசியல் வாழ்க்கையை காட்டும் ஆவணப்படம். மக்களுக்கான இலவச மருத்துவமனை, நூலக வசதிகள் கொண்ட "கம்யூன்" விடுதலைப் பிரதேசங்கள். முகாம்களில் போராளிகளின் அணிவகுப்பு, அரசியல்மயப்படுத்தப்படும் மக்கள், இன்ன பிற. இதுவரை வெளிவராத தகவல்கள்.

Rising Maoists Insurgency in India
Part 1



Part 2


Part 3


Part 4


Part 5


Part 6


http://kalaiy.blogspot.com/2009/11/exclusive-video_23.html


விடுதலைப் புலிகள் ஓயவில்லை-பிபிசி


விடுதலைப் புலிகள் ஓயவில்லை-பிபிசி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சிய அங்கத்தினர்கள் தங்கள்

அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க அண்மையில் வெளிநாட்டில் செய்த முயற்சிகள் இதுவரை வெற்றி அடையவில்லை.
இப்போது புலிகள் அமைப்பின் அனைத்துலகக் கட்டமைப்பு, பல்வேறு கண்டங்களில் இருக்கும் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் ஆகியவற்றின் வருங்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஒருகாலத்தில் உலகின் ஆக வலிமையான கொரில்லா படைகளில் ஒன்றாகத் திகழ்ந்து, வட்டாரக் கட்டுப்பாடு, சொந்த கடற்படை, விமானப்படை ஆகியவற்றை வைத்திருந்த புலிகள் அமைப்பு, இப்போது முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது.
ராணுவத்தினரின் தாக்குதலுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் கைதான 10,000க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள், அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோர் இலங்கையின் வடக்கே அமைந்துள்ள ராணுவக் கட்டுப்பாட்டிலான முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது காவலில் இருக்கும் விடுதலைப் புலிப் படையினருக்கும், குறிப்பாக அவர்களது தலைவர்களுக்கும் சிறப்பு விசாரணைகளை நடத்த விரும்புவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

தமிழர்களின் நம்பிக்கை
இலங்கையில் ஈடுபாடுமிக்கப் புலிப்படை இல்லாததால், வெளிநாட்டில் வாழும் தலைவர்கள், புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கப் பங்காற்றமுடியும் என்று தமிழர்கள் பலரும் நம்புகிறார்கள்.
ஆனால் அவர்களது நம்பிக்கை மெல்ல மெல்ல மங்கி வருவதாகத் தோன்றுகிறது.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பு உறுதியற்ற நிலையில் உள்ளது.
“கட்டமைப்பின் அமைப்புமுறைகள் தொடர்ந்தாலும், பிணைப்புமிக்க அல்லது மத்திய கட்டுப்பாட்டில் அது இயங்குவதாகத் தெரியவில்லை,” என்கிறார் கனடாவில் இருக்கும் இலங்கை ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ்.
தற்போதைய சூழ்நிலையில், கூடிய விரைவில் இலங்கையிலேயே புலிகள் அமைப்பு மீண்டும் ராணுவ ரீதியில் உயிர்ப்பித்தெழ முடியும் என்று நம்புவோர் மிகச் சிலரே.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தாலும், அவர்களது அனைத்துலகக் கட்டமைப்பில் பெரும்பகுதி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இவ்வாண்டு மே மாதம் வரை, இலங்கையின் வடக்கே தளம் அமைத்திருந்த மூத்த தலைவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் அனைத்துலகக் கட்டமைப்பு செயல்பட்டு வந்தது.
வெளிநாட்டில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் அமைப்பை உயிர்ப்பித்து, குறைந்தபட்சம் வெளிநாட்டிலாவது தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் என்று புலிகளின் ஆதரவாளர்கள் நம்பினர்.
ஆனால் அவர்களது புதிய தலைவரான செல்வராசா பத்மநாதன் ஆகஸ்ட் மாதம் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் கைதானது, அவர்களது நம்பிக்கையைக் குலைக்கும் பேரிடியாக அமைந்தது.
அவர் கைது செய்யப்பட்டபிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியமான சிலரைப் பற்பல நாடுகளின் வேவுத் துறைகள் தேடி வருவதாக இலங்கையின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
திரு பத்மநாதன் தங்கள் பெயர்களை வெளியிட்டு விடுவார் என்ற அச்சத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கைகளை முடக்கிவிட்டனர்.

வெளிநாட்டில் அரசாங்கம்
அதே வேளையில், வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் தளம் அமைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும், தங்களது அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிட, வெளிநாட்டில் அரசாங்கம் அமைக்க முயன்று வருகின்றனர்.
இதுபோன்ற முயற்சி வெற்றியடைய, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பின் ஆதரவு மிகவும் முக்கியம். இந்தக் கட்டமைப்பு, பல ஆண்டுகாலமாக, நிதி வளங்களை வழங்கியதோடு, தகவல் சாதனங்களின்வழி தங்கள் கொள்கைகளையும் பரப்பி வந்தது.
நிதி திரட்டுவது, முதலீடுகளை நிர்வகிப்பது, அதிநவீன ஆயுதங்களை வாங்குவது, அவற்றை இரகசியமான முறையில் இலங்கையின் வடகிழக்கு வட்டாரங்களில் பதுங்கியிருந்த விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைப்பது ஆகியவற்றை இந்த வெளிநாட்டுக் கட்டமைப்பே செய்து வந்தது.
விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு முதலீடுகளில் மளிகைக் கடைகள் முதல் நிலச்சொத்து நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் முதல் இந்து ஆலயங்கள், வர்த்தகக் கப்பல் வணிகம் முதல் இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு வரை உள்ளடங்கும். விடுதலைப் புலிகளுக்கு டொரோன்டோ, லண்டன், பாரிஸ் உட்பட பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

உட்பிளவு
இப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் சொத்துகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்காக உட்பிளவு மோதல்கள் நடந்து வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
இதனால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மனவருத்தமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
“விடுதலைப் புலிகள் முன்பு ஒரு நோக்கத்திற்காகப் பணம் திரட்டினர்.
“இப்போது, அந்தப் பணத்தை என்ன செய்கிறார்கள் என்று தமிழர்கள் கேட்கிறார்கள்.
“அதிகாரத்திற்காகப் போட்டியிடும் இரு பிரிவுகளும் தமிழர்களுக்காகப் போராடிட ஒன்றுசேரவேண்டும் என்று விரும்புகிறார்கள்,” என்கிறார் சுவிட்சர்லாந்தில் இருக்கும் தமிழ் செய்தியாளர் ஷான் தவராஜா.
இதுமட்டுமன்றி, புலிகளுக்காகத் தங்கள் பெயரில் தொழில்களையும் கட்டடங்களையும் பதிவு செய்திருந்த வெளிநாட்டு ஆதரவாளர்களில் சிலர், தங்கள் சொந்த நலனுக்காக இந்தத் தொழில்களின் கட்டுப்பாட்டைப் படிப்படியாக ஏற்கத் தொடங்கி வருகின்றனர்.
புலிகளின் ஒட்டுமொத்த சொத்து விவரங்கள் மிகச்சில தலைவர்களுக்கே தெரியும்.
அவர்களில் பலரும் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில், இந்தப் போக்கு அதிகரிக்கும் என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பலரும் கவலைப்படுகின்றனர்.
மாதந்தோறும் பணம் அளித்துவந்த சாதாரண மக்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தீவிர ஆதரவாளர்கள் பலரும் இன்னமும் நன்கொடை அளிக்க விழைகிறார்கள்.
தற்போது நடவடிக்கைகளை முடக்கி வைத்திருக்கும் முன்னணி ஆதரவாளர்கள், சூழ்நிலை சாதகமாக அமையும் தருணத்தில் அமைப்பை உயிர்ப்பிக்கத் தயங்கமாட்டார்கள் என்று விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் சிலர் கூறுகின்றனர்.
இலங்கையின் நிலவரத்தைப் பொறுத்தே இது நடக்கும் என்று அவர்கள் சொல்கின்றனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடந்த சண்டையின்போது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அரசாங்க முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஒருமித்த உலகளாவிய நெருக்குதலால் மட்டுமே, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கச் செய்யமுடியும் என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நம்புகிறார்கள்.
முகாம்களில் பரிதவிக்கும் தமிழ் மக்களின் நிலையை மேற்கத்திய நாடுகளில் பறைசாற்றுவதற்காவது விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

http://tamiljournal.com/featured/ltte/



காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக கோவிலில் காம லீலைகளை அரங்கேற்றி வந்த செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன், தனது சேட்டைகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை போலீசிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.



காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவில் [^] கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தேவநாதன் தனது வாக்குமூலத்தில் கூறி்யிருப்பதாவது:

காஞ்சிபுரம் தான் எனது பூர்வீகம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவி [^]யும் 2 குழந்தை [^]களும் உள்ளனர். 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் எனது தந்தைக்கு துணையாக கோவிலுக்கு வரும்போதே, அங்கு வரும் பெண்களிடம் கனிவாக பேச கற்றுக்கொண்டேன்.

எனது 15 ஆண்டு அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ளது என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் [^] என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள்.

ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருப்பேன்.

அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன். பெரும்பாலான பெண்களிடம் அம்பாள் போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும்16ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் இருந்தபடி இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன்.

சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜுக்கும் அழைத்துச்செல்வேன். திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன்.

2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி இருந்தது. கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாமல், ஓரமாக நின்று அவர்களை ஆபாசமாக படம் எடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன்.

எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.

அதன்படி கோவிலில் என்னுடன் உல்லாசத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து காம வேலைகளில் ஈடுபட்டேன்.

இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசி்ப்பேன். சில பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்துள்ளேன்.

ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். குழந்தைக்கு நோய் சரியாக வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன்.

அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன். தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை.

எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமாரின் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டிருந்தது.

இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரியவில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவவிட்டது தெரிந்தது.

நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன். கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

என் கணவர் அப்பாவி ...

இதற்கிடையே, எனது கணவர் அப்பாவி, அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று தேவநாதனின் மனைவி கங்கா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது...

எனக்கும், தேவநாதனுக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இன்று வரை என் கணவர் என்னை அன்பாகத் தான் பார்த்துக் கொண்டார்.

அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெகுளியாக எல்லாருடனும் சகஜமாக பழகுவார். அதே போலதான் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் சகஜமாக பழகி உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளை கூறுவார்கள். அவரும் ஆறுதலாக பதில் அளிப்பார்.

எங்களுக்கு நேரம் சரி இல்லை. பகவான் சோதித்தாலும் எங்களை கைவிடமாட்டார். போலீசார் என் கணவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

என் கணவர் அப்பாவி, நிரபராதி, அவருக்கு ஒன்றும் தெரியாது. போலீசார் என் கணவரை மிரட்டுகிறார்கள். பகவானின் செயலால் என் கணவர் விரைவில் விடுதலையாவார் என்றார் கங்கா.

http://thatstamil.oneindia.in/news/2009/11/22/kanchipuram-archagar-reveals.html

Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...






smail


http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg


Update me when site is updated





http://3.bp.blogspot.com/_B8eiFOqb7q0/SwmRQA8fMyI/AAAAAAAADLE/R1Pa4piSsac/s1600/Nandri.jpg

♥ புலி....! புலி....!! புலி....!!! ♥

அடுத்தபிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


http://www.meenagam.org/wp-content/uploads/2009/11/nethaji_ku1.jpg

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஒரே மகளான அனிதாபோஸ் ஜெர்மனியில் வாழ்ந்துவருகிறார். அனிதா போஸ் தனது தந்தையைப் பற்றிய நினைவுகளை குமுதம் சஞ்சிகைக்காக பகிர்ந்துகொண்டார்.



“நேதாஜி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். நீங்கள் ஜெர்மனி வந்த கதையைச் சொல்லுங்கள்?”

“எனது தந்தை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு வந்தார். அப்போது அவரைக் கவனித்துக்கொண்டது எனது தாய் எமிலி சேங்கிள். அவர் வியன்னாகாரர். இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.

அவர்களுக்குப் பிறந்த ஒரே மகள் நான். எனது தந்தை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தபோது இந்தியாவிலிருந்து தலைமறைவாகி ஜெர்மனி வந்து என்னையும், அம்மாவையும் சந்தித்துவிட்டுச் சென்றார்.அப்போது நான் இரண்டரை மாத கைக்குழந்தை. அவ்வளவுதான், அதன்பிறகு அவர் என்னையோ, அம்மாவையே வந்து சந்திக்கவேயில்லை.”

இந்தியாவைப் பற்றி உங்களின் சிந்தனை என்ன?

“என் தந்தை நாடு இந்தியா. நான் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்திருந்தாலும் எனக்கு இந்த கலாசாரமும், பண்பாடும் மிகவும் பிடிக்கும். நிறைய முறை வந்திருக்கிறேன். எனவேதான் எனது மூன்று பிள்ளைகளுக்கும் இந்தியப் பெயராக வைத்திருக்கிறேன். மூத்த மகன் பீட்டர் அருண், இளைய மகன் தாமஸ் கிருஷ்ணா, மகளுக்கு மாயா கரீனா என பெயர் வைத்துள்ளேன்.”

நேதாஜி இறந்துவிட்டார் என்றும் உயிருடன் இருக்கிறார் என்றும் இருவித தகவல்கள் உலவுகின்றன. உங்கள் கருத்து என்ன?

இரண்டாம் உலகப் போரில் 18.8.45 அன்று பார்மோசா தீவிலிருந்து ஜப்பானுக்கு நேதாஜி விமானத்தில் புறப்பட்டார். விமானம் சுமார் முந்நூறு அடி உயரத்தில் எழுந்தபோது அப்படியே தலைகுப்புற விழுந்து தீப் பிடித்து விபத்துக்குள்ளாகிவிட்டது.

நேதாஜியுடன் பாதுகாவலர் அபிபூர் ரகுமான்கான் மற்றும் ஒரு பர்மிய ராணுவ ஜெனரல் மற்றும் எட்டு ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் உட்பட பதினோரு பேர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர்.”

உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் அடிக்கடி நினைக்கும் விஷயங்கள்..?

“எனது தந்தை, `நீ உன் ரத்தத்தைக் கொடு, சுதந்திரம் பெற்றுத் தருகிறேன்’ என்று மக்களைத் தட்டி எழுப்பியது, `ஐ.என்.ஏ. ராணுவத்தில் எனக்கு விசுவாசமாக இருந்து போராடும் தமிழர்களை நினைக்கும்போது அடுத்தபிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன்’ என்று கூறியது விபத்தில் சிக்கிக் கிடந்தபோது, உடன் விபத்தில் சிக்கியிருந்த கர்னல் அபிபூர் ரகுமான்கானிடம் `நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையில்லை. நீ இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றால், நம் தேச மக்களிடம் இந்த நேதாஜி சாகும்வரை இந்திய விடுதலைக்காகப் போராடினேன் என்று சொல்லு’ என்று கூறியதும் எனது தந்தையின் மறக்கமுடியாத வாசகங்கள்.”

- புஷ்கின் ராஜ்குமார்,

படம்: சித்ராமணி.

நன்றி: குமுதம்

http://www.meenagam.org/?p=17661

பிரபாகரனின் இருப்பு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.


























தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அவசர அவசரமாக கடந்த மே மாதம் இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டின் புலனாய்வுத்துறையினர் குழு ஒன்று. தலைவர் பிரபாகரன் இந்தியாவில் கைது செய்யப்பட்டு வைத்திருந்தவேளை அவரிடமிருந்து பெறப்பட்ட கைரேகையை கையோடு எடுத்துச்சென்றிருந்த அந்த குழு பிரபாகரன் என இலங்கை அரசு காட்டிய உடலிலிருந்து அந்த கைரேகை மாறுபடுவதால் அதை உறுதிப்படுத்த முடியாமல் திரும்பிச்சென்று மெளனமாக இருந்தது. அதன் பின்னரே பிரபாகரன் இறந்ததான செய்தியை இந்திய அரசு அமத்தி வாசித்தது.

http://www.varudal.com/index.php/2009-03-29-17-56-53/5-2009-04-05-21-29-09/1301-2009-11-26-02-59-48







அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி.

http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/11/sarathfonseka1206081.jpg

'சிறிலங்காவிற்கு வேண்டத்தகாதவர்கள் பட்டியலில் அன்று பிரபாகரன், இன்று நான். அதனால் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச்சபை என்னைப்படுகொலை செய்வதற்கு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது ' என அதிரடியாக அரசின் மீது குற்றஞ் சுமத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா.

இணையத்தளச் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தனது மெளனம் விரைவில் கலையும் எனத் தெரிவித்திருந்த சரத் பொன்சேகா , ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே அரசின் மீது இந்தக் குறச்சாட்டை சுமத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இச் செவ்வியில், தனக்குள்ளபாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அரசுக்கு தெளிவாக தெரிந்திருந்த போதும், தனக்குரிய பாகாப்பினைத் திட்டமிட்ட வகையிலேயே குறைத்திருக்கிறது என்றார். தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பி.கஜநாயக்க, வவுனியாவிலிருந்து வெடிபொருள் நிரப்பிய லேடன் வாகனம் ஒன்று, வி.ஐ.பி. ஒருவரை படுகொலை செயவ்தற்காக கொழும்பு வந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்ட செய்தியைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நிலையில், எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டும், அரச பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என சிறிலங்கா அரசு வற்புறுத்துவதும், நான் படுகொலை செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடனானது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது எனத் தெரிவித்ததுள்ளார்.

அரசின் இத்தகைய உள் நோக்கம் மிக்க திட்டங்களை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்பு எனது நண்பர்களா அரச அதிபர் அதிபர் மகிந்தவும், அவரது சகோதரர் கோத்தபாயாவும், இராணுவ தளபதியும், எனக்கு எதிரிகளாக இப்போது மாறியிருப்பது எனக்கு கவலையில்லை. இந்தக்கூட்டத்தினரால் என்னைப்போல் இன்னும் எத்தனைபேர் பாதிக்கப்படப்போகின்றார்கள் என்பதே எனது கவலை.

நான் இராணுவத்தளபதியாக இருந்தபோது தவறு செய்திருந்தால், அது அப்போதே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையெனில் அந்த தவறு, அரச தரப்பின் சம்மதத்துடனேயே நிகழ்ந்தப்பட்டிருக்கிறது என்பதுதானே பொருள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதே, அரசாங்கத்தின் சில நடவடிக்டகைகளின் இரகசியம் வெளிப்படும் எனக் கருதப்பட்ட போதும், எடுத்த எடுப்பிலேயே அவர் அரசின் மீது பாரிய குற்றச் சாட்டினை முன்வைத்திருப்பது, அவருக்கு அரசினால் மிகுந்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டடிருப்பதாவே உணரவேண்டியுள்ளதென செய்தியாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். மேலும், அவரது இந்தக் கருத்துக்கள் ஒவ்வொன்றும், சிறிலங்கா அரச அதிபர் மீதான நம்பிக்கையையும், அரசின் கடந்தகாலச் செயற்பாடுகளைக் கேள்விக்குரியதாக்குவதாகவும் அவதானிகள் கருதுகின்றனர்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-04-00/4293-2009-11-27-09-47-05













நேரு-எட்வினா காதல்: விலகாத மர்மங்கள்!



இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டன் பிரபுவின் மனைவி
எட்வினாவுக்கும் அன்றைய பாரதப் பிரதமர் ஐவஹர்லால் நேருவுக்கும் இடையே
இருந்த காதல் குறித்து, ஏற்கெனவே பலரும் குறிப்பிட்டுள்ளனர். அது வெறும்
மானசீகக் காதலா (றிறீணீtஷீஸீவீநீ றீஷீஸ்மீ) அல்லது அதையும் தாண்டியதா
என்ற சர்ச்சை நீண்டநாட்களாக நடந்து வருகிறது.

1993-ல் இந்த அரசல் புரசலான அபூர்வக் காதலை காத்ரீன் கிளெமென்ட் என்ற
பிரெஞ்சு நாட்டுப்பெண் எழுத்தாளர் 'எட்வினா - நேரு' என்ற புத்தகத்தின்
மூலம் உலகுக்குத் தெரியப்படுத்தினார். அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு
இருந்தது.

அதைத் தொடர்ந்து, அலெக்ஸ் வான் டங்ஜெல்மேன் என்பவர் எழுதிய நேரு-எட்வினா
காதல் குறித்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, 'இந்தியன்
சம்மர்' (மிஸீபீவீணீஸீ ண்தனீனீமீக்ஷீ) என்ற திரைப்படத்தை ஹாலிவுட்டின்
யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் எடுக்க முடிவுசெய்து, செயலில்
இறங்கியபோது, பிரச்னை பூதாகரமாக வெடித்தது! நேருவும் எட்வினாவும் இறந்து
பல ஆண்டுகள் ஆகிய பின்பும், அவர்களின் காதல் மட்டும் இன்றைக்கும்
பேசப்படுவது ஏன்? காரணங்களை ஓரளவு ஊகிக்க முடியும். அவை பலவாகவும் இருக்க
வாய்ப்புள்ளது. 1. இருவரும் இந்திய சுதந்திரத்தின் முன்பும் பின்பும்
நிலவிய ஓர் அசாதாரணமான நெருக்கடிச் சூழலில் முன்னணி பாத்திரம்
வகித்தவர்கள். 2. இவர்களின் காதல் மானசீக எல்லைகளைக் கடந்து நெருக்கமான
உறவு என்ற அளவுக்குச் சென்றதா என்பது இன்றைக்கும் அவிழ்க்கப்படாத ஒரு
புதிராகவே இருப்பதால், அதன் மீது மக்கள் இயற்கையாகவே ஆர்வம்
கொண்டுள்ளனர். அந்த ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ள அக் காதல் தொடர்பான
புத்தகங்களும் விவாதங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது
இன்றைக்கு ஒரு திரைப்படமாக உருவாகும் அளவிற்கு வந்துள்ளது. கிளிண்டன் -
மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் எல்லா நடவடிக்கைகளும் வெட்டவெளிச்சமாகி
இருதரப்-பினரும் ஒப்புக் கொண்டபோது, அது ஆர்வத்தைத்
தணித்துவிட்டதைப்போல், நேரு-எட்வினா காதல் விவகாரம் முழுமையாக
இதுவரைக்கும் தீர்க்கப்படாததால், அதன் மீதான ஆர்வம் இன்றைக்கும்
குறையவில்லை.

மேலும், இக்காதல் குறித்து எட்வினா தனது கணவர் மவுன்ட் பேட்டனுக்கு
எழுதிய கடிதத்தில், 'அது பெரும்பாலும் ஒரு மானசீகக் காதலாகத்தான்
இருந்தது' என்று கூறியதில் இருந்து, "அப்படியென்றால் சிறிய அளவில் அதில்
'நெருக்கமான உறவு' கலந்திருந்ததா?" என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இது
இன்றைக்கும் பலரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

இக்காதல் குறித்து நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷேகல் இவ்வாறு
கூறியுள்ளார்- "அது காதலும் நட்பும் கலந்த, இரு மனங்கள் ஒன்று கலந்து
உறவாடிய ஓர் அபூர்வக் காதல். அதில் பாலியல் இருந்ததாக யூகிக்க மட்டுமே
முடியும்" ஷேகலின் இக்கருத்தும் இந்தக் காதல் விவகாரத்தில் தொக்கி
நிற்கும் மையப்பிரச்னையைத் தீர்க்க உதவவில்லை.

3. நேருவை தங்கள் வசப்படுத்த, ஆங்கில ஆட்சியாளர்கள் எட்வினாவைப்
பயன்படுத்தினார்கள் என்ற அபத்தமான வாதத்தை சிலர் முன்வைத்து வருகின்றனர்.
நேருவும் எட்வினாவும் லண்டனில் ஒன்றாய் படித்தபோது, நெருக்கமாகப்
பழகியவர்கள். இதைத் தெரிந்து கொண்ட பிரிட்டன், சுதந்திரத்திற்குப்பின்பு
தங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்கச் செய்ய நேரு-எட்வினா காதலை
பயன்படுத்திக் கொண்டனர் - என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சில
அமைப்பினர் தொடர்ந்து முன்வைக்கின்றனர். நேரு அவ்வாறு செய்தாரா? என்ற
கேள்வி இக்காதலின் மீது கூடுதல் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

ஆனால், தற்போது முன்னுக்கு வந்துள்ள சர்ச்சை, அக்காதல் குறித்த
திரைப்படம் தயாரிப்பது குறித்தது. 'அத்திரைப்படம் எடுக்கவேண்டிய தேவை
உள்ளதா? அவ்வாறு எடுக்கப்பட்டால், அது வெறும் கற்பனைக் கதையாக மட்டும்
இருக்குமா? நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமா? என்ற விவாதம்
எழுந்துள்ளது. "உண்மையும் கற்பனையும் கலந்த கலவையாக அது இருக்கும்" என்று
அப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். மீடியாவின் ஒரு வடிவமான எழுத்தில்
அக்காதல் விவரிக்கப்பட்டுள்ளபோது, இன்னொரு வடிவமான திரைப்படத்தில்
அதைச் சொல்வதற்கு என்ன எதிர்ப்பு இருக்கமுடியும்? தன்னுடைய
புத்தகத்திற்கு சோனியா காந்தி அங்கீகாரம் வழங்கியதாக, காத்ரீன்
கிளெமென்ட் கூறியுள்ளார். மேலும் அக்காதல் குறித்து வெளிவந்த
புத்தகங்களையும் இந்திய அரசு இதுவரை தடைசெய்யவில்லை. ஆனால், திரைப்படமாக
எடுப்பதற்கு மட்டும் இந்திய அரசு நிபந்தனைகளை விதிப்பது ஏன்? அப்படத்தின்
திரைக்கதை, வசனம் இந்திய அரசின் அனுமதிக்காக ஒப்படைக்கப்பட்டு, அதில்
இந்திய அரசு செய்த திருத்தங்களை ஏற்றுக்கொண்ட பின்பும், படம்
எடுக்கப்படும்போது ஓர் அரசு அதிகாரி கூடவே இருந்து அதைக் கண்காணிப்பார்
என்றும், படத்தில் நேரு-எட்வினா குறித்த நெருக்கமான காட்சிகள் இடம் பெறக்
கூடாது என்றும், இறுதியாக அப்படத்தை இந்திய அரசு பார்த்து அனுமதி
வழங்கும் என்றும் அடுக்கடுக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், அப்படம்
எடுப்பது சாத்தியமில்லை என்று தயாரிப்பாளர்கள் அதனைக் கைவிடும் நிலை
ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்தக் கெடுபிடிகள் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும்
செயலாகாதா? ஏன் இத்தனை கெடுபிடிகள்? 'நேருவுக்கும் எட்வினாவுக்கும்
மானசீகமான காதல் இருந்ததாகச் சொல்லலாம். ஆனால், அவர்களிடையே நெருக்கமான
உறவு இருந்தது என்று சொல்வது நேருவின் பெயருக்குக் களங்கத்தை
ஏற்படுத்தும். அது அவரது வாரிசுகளின் செல்வாக்கைப் பாதிக்கும்' என்கிற
பயமா?

அப்படியென்றால், மனங்கள் ஒன்றுபடலாம், ஆனால் உடல்கள் ஒன்றுபடக் கூடாது
என்பதுதானே இதன் உட்பொருள். இது எவ்வளவு அபத்தமானது. இதற்கு எதிராக
'உடல்கள் ஒன்றுபடலாம், ஆனால் மனங்கள் ஒன்றுபடுவது மிகவும் ஆபத்தானது
என்று சிலர் எதிர்வாதம் செய்யலாமே!

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்டார் என்று சித்திரிப்பதால்,
நேருவை யாரும் சிறுமைப்படுத்திவிட முடியாது. எல்லா மனிதர்களுக்கும் இரு
பக்கங்கள் உள்ளன. காசநோய்க்கு மனைவியை பலி கொடுத்து தனிமையில் வாடிய
நேருவுக்குக் காதலும் கலவியும் தேவைப்பட்டிருக்கலாம் என்பது இயற்கையானதே.
உலக அரசியல் களத்தில் மாமனிதராய்த் திகழ்ந்த நேருவும், அகவாழ்க்கையில்
ஒரு சாதாரண மனிதர் தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
முற்போக்குச் சிந்தனையாளரான அவர், அன்றைய சமூக மதிப்பீடுகளையும்
கட்டுப்பாடுகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டவர் அல்ல என்பதை அவர் பல
கட்டங்களில் வெளிப்படுத்தியுள்ளார். கடவுள் நம்பிக்கையில் தீவிர ஈடுபாடு
கொண்ட காந்தியின் சீடராக இருந்தாலும், தன்னை ஒரு நாத்திகராக
வெளிப்படுத்திக்கொள்ள அவர் தயங்கியதில்லை.

'கண்டுணர்ந்த இந்தியா' (ஜிலீமீ ஞிவீண்நீஷீஸ்மீக்ஷீஹ் ஷீயீ மிஸீபீவீணீ)
என்ற தனது புத்தகத்தில் நேரு இவ்வாறு குறிப்பிடுகிறார்- "ஒரு மனிதனின்
தனிவாழ்க்கைக்கும் சமுதாய வாழ்க்கைக்கும் இடையே உள்ள பிரச்னைகள்
உள்மனதின் உணர்வுகளுக்கும் வெளிப்புற நிலைகளுக்கும் உள்ள பாகுபாடு ஆகியவை
என் மனதைப் பெரிதும் அலைக்கழித்தன. இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள்
எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திக்கலானேன். அதற்கு அறிவியல் ரீதியான
வழிமுறைகளுடன், உள்ளுணர்வின்பாற்பட்ட வழிமுறைகளும் தேவைப்படும் என்பதில்
ஐயமில்லை"

நேரு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது எட்வினாவுடன் தனக்கு இருந்த காதல்
குறித்துதானா?- என்பது விளங்கவில்லை.

மக்களுக்காக உழைக்கும் சாதனை-யாளர்களை அவதார புருஷர்களாகப் பார்க்கும்
நமது மரபு வழிச் சிந்தனையில்தான் கோளாறு உள்ளது. தனி மனிதர்களின்
சரித்திரம்தான் நமக்கு உலக சரித்திரமாக கற்பிக்கப்-படுகிறது. அதனால்தான்,
"காந்தித் தாத்தா சுதந்திரம் வாங்கித் தந்தார்"- என்று இன்றைக்கும்
சொல்லிக் கொண்டிருக்கிறோம். தனி மனிதர்களின் சாதனைகளைக் கடந்து,
பரந்து பட்ட மக்கள்தான் மனிதகுல வரலாற்றை நகர்த்துகின்றனர் என்ற உண்மை
நமக்கு மறைக்கப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு இதில் எந்தப்பங்கும்
இல்லை என விதிக்கப்படுகிறது. அதனால்தான் நம்மில் பலர் தலைவர்களை கடவுளின்
அவதாரங்களாகக் கருதி, எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என
ஒதுங்கிவிடுகிறோம். அவர்கள் சாதாரண மனிதர்கள்போல் நடந்துகொள்ளும்போது
அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.

பலதார மணம், திருமணத்திற்கு முன்பும் பின்பும் பாலியலில் ஈடுபடுவது
போன்றவற்றில் நம்மில் பலரும் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால், அது வெளியில் தெரியாதவரை தவறில்லை என்று கருதுகிறோம். பாலியல்
குறித்து வெளிப்படையாகப் பேசுவதே பாவம் என்று கருதுகிறோம். இது எவ்வளவு
போலித்தனமானது.

அந்நியச் சுரண்டலிலிருந்து இந்திய மக்களை பாதுகாக்க, நம்நாடு அறிவியல்
தொழில் நுட்பத்தில் முன்னேறும் வகையில், வலுவான பொதுத்துறையை நேரு
உருவாக்கினார். மூன்றாம் உலக நாடுகளின் நலன் காக்க, அணிசேரா இயக்கத்தைக்
கட்டிக் காப்பதில் முன்னணி பங்கு வகித்தார். அவரின் இக்கொள்கைகளை
குழிதோண்டி புதைத்துவிட்ட காங்கிரஸ் அரசு, நேருவின் கற்பைப்
பாதுகாப்பதில் இவ்வளவு முனைப்பு காட்டுவதேன்? நேரு-எட்வினா காதலை விட
இதுதான் புரியாத புதிராக உள்ளது.

தமிழக அரசியல் வார இதழிலிருந்து........



வீரத் தமிழன் சீமான் கனடாவில் போலீசாரால் கைது!

http://www.alaikal.com/news/wp-content/seeman7.jpg

மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான்,

பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரùசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.

பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலைசெய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலைசெய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.

ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீயாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.

(2ம் இணைப்பு)

சற்று முன்னர் கிடைத்த தகவல்படி, உணர்வாளர் சீமானவர்கள் விசாரணையின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டதாகவும், தாம் அவரைக் கைதுசெய்யவில்லை, விசாரணைக்காகவே அழைத்துச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்தும் விசாரிக்கப்படு வருவதாகவும். அவரை தடுத்துவைத்து , நாடு கடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இன்று இரவு நடைபெறவுள்ள நிகழ்வில் சீமான் நடத்த உள்ள பேச்சுக் குறித்தும், அங்கு கூடவுள்ள மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுவது குறித்தும் அவரது சட்ட வல்லுநர்களுடனும் கலந்துரையாடவே கனடிய போலீசார் சீமானை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் கூறுகின்றது.

நேற்றைய தினம் மாணவர் நிகழ்வொன்றில் சீமான் அவர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசியிருந்தார். இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய இலங்கை அரசு, சில ஆதாரங்களைத் திரட்டி கனடிய பொலிசாரிடம் கொடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் கனடாவில் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் மற்றும் இன்று நடைபெற இருந்த தேசிய தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கில் இலங்கை அரசும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் கைக்கூலிகளுமே இவ்வாறு ஒரு ஈனச் செயலில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் மாவீரர் தினம் நடைபெற உள்ள இந்தவேளையில் இதனைக் குழப்பும் நோக்கில் இவ்வாறான செயல்களில் அந்நாட்டு அரசாங்கங்களைத் தூண்டும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. கனடா போன்ற பேச்சு, ஜனநாயகச் சுதந்திரம் மிக்க நாட்டில் தமது சொந்தக் கருத்துக்களை முன்வைப்போரை கைது செய்வது, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நடவடிக்கையாகும். அத்துடன் விசாரணை என்ற போர்வையில் இவர்கள் வாயை அடைக்க அரசு முயல்கிறது என்பது வருந்தத்தக்க விடையமாகும்.

http://kavishan.blogspot.com/2009/11/blog-post_3242.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FOYnN+(%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)









உண்டியல் பணத்தை திருடிய காஞ்சிபுரம் தேவநாதன் குருக்கள்










காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் காஞ்சீபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அர்ச்சகர் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் யார் யார் என்பது தெரிய வந்துள்ளது.

அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது.


கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பெரிய இடத்துப் பெண்கள் (தொழில் அதிபர்களின் மனைவிகள்) 3 பேரும் அர்ச்சகரின் வலையில் விழுந்துள்ளனர். 2 பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையும் தேவநாதன் நாசப்படுத்தியுள்ளார். விப சார அழகிகள் 3 பேரும் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார்.

இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.

இதற்கிடையே சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நேற்று இரவு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமயில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணயை தொடங்கியுள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21676





இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: புலிகளின் புதிய நம்பிக்கை












‘விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் ‘இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு’ என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில். இவ்வாறு தமிழகத்தின் வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.

ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரையின் முழுவடிவம்:-

நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு பரவிக் கிடந்தது!

‘தலைவர்’ தோன்ற மாட்டார்!

நான்காம் கட்ட ஈழப் போரில் புலிகள் பெரிதாக வீழ்ச்சியடைந்து, ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று இன்னும்கூட ஒரு தரப்பினர் சொல்லிவரும் நிலையில்தான் மாவீரர் தினம் வருகிறது. பிரபாகரன், பொட்டு அம்மான், யோகி என்று மாவீரர் தின உரையை நிகழ்த்தப் போகும் புலித் தலைவர் பற்றிய யூகப் பட்டியலையும் ஆளுக்கொன்றாக பலர் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களோ இதனை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலரிடத்தில் பேசினோம்.

”ஒவ்வொரு வருடமும் தாயகத்தில் மட்டுமே நடக்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இந்த வருடம் உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் கொண்டாடப்படுவதே புலிகளின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றிதான். இதற்கு காரணமே, மீண்டும் வலுவான ஆயுதப் போராட்டம் தலையெடுக்கும் என்று புலிகள் அறிவிக்காமல் இருப்பதுதான். தற்போதைய சூழலிலும் அப்படியொரு தோற்றத்தையே தொடர நினைக்கிறார்கள் புலிகள். அதனால் தற்போதும் உயிரோடிருக்கும் புலிகளின் முக்கியத் தளபதிகள் யாரானாலும், அவர்கள் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எதிர்ப்படும் விளைவுகள் எப்படியிருக்கும் என முன் கூட்டியே கணித்த பிரபாகரன், சமர்க்கள ஆய்வு மைய இயக்குநராக இருந்த யோகியை அப்போதே ஓர் ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். எதிர்காலத்தில் தான் வெளிப்பட முடியாத ஒரு பின்னடைவு உண்டானாலும்கூட, இயக்கத்தின் எதிர்காலக் கொள்கைகளை சூழலுக்குத் தகுந்தவாறு வெளிப்படுத்தும் அதிகாரத்தை யோகிக்கு மட்டுமே தலைவர் வழங்கியிருந்தார். யோகி தன்னை வெளிப்படுத்தினாலும், வெளிப்படுத்தாவிட்டாலும் மாவீரர் தினத்தில் வெளியாகப் போகும் கொள்கைகள் என்னவோ யோகி வகுத்தவையாகத்தான் இருக்கும்.

அதேசமயம், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது!” என்கிறார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!

மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ‘பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்’ என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமாக வலம் வருகிறதாம். ”இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.

”இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்ள்ஸ் அன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். ‘உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!’ என சார்ள்ஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்” என்று கூறும் குறுந்தகடு ‘விநியோகஸ்தர்’கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -

”போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆபிரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்டு படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய… இராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.

இருந்தாலும், இராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்” என்று கூறுகிறார்கள் இவர்கள்.

இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். ”பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்” என முடிகிறதாம் அந்த இரகசிய சர்க்குலேஷன் சி.டி!

இந்தியாவின் துணையோடு இலங்கையில் போர்!

‘விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் ‘இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு’ என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில்.

‘போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.

போர் முடியும்வரை இதற்கு தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்குத் தலையாட்டும் பொம்மையாகிவிட்டது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் டு முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷே, மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப் படுத்தத் தொடங்கியிருப்பதையும் எரிச்சலுடன் பார்க்கிறது.

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான ‘றோ’ மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.

வெடிக்கும் பொன்சேகா!

அதிபர் தேர்தலுக்குத் தயாராகிவரும் பொன்சேகா, சமீபத்தில், கொழும்பிலுள்ள ஒரு பத்திரிகைக்கு இப்படி பேட்டியளித்திருக்கிறார். ”எனது பாதுகாப்பு படையை 25 ஆட்களாகக் குறைத்தபோது, நான் எதிர்த்தேன். பின்பு 60 பேராக அதிகரித்தபோதும் பாதுகாப்பில்லை என தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்பு படையினரை ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் இது வரை நான் பார்த்ததுகூட கிடையாது. அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என சந்தேகிக்கிறேன்!” என பொன்சேகா கொந்தளிக்க, அவசரகதியாக அதனை மறுத்திருக்கிறது சிங்கள அரசு. ‘நாட்டுக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த என்னை, அரசு இப்படியெல்லாம் அவமானப்படுத்தலாமா?’ என பொன்சேகா எழுப்பியிருக்கும் கேள்வி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தைக் கிளப்பியிருக்கிறதாம்.

இதற்கிடையில் பொன்சேகாவே சில ஆட்களைவிட்டுத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு அரசாங்கத்தின் மீது பழி போடலாம் என்பதால், அவரது பாதுகாப்பை திடீரென உயர்த்தியிருக்கிறார்களாம். இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, கொழும்பு ரோயல் கல்லூரி அருகில் ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்கவிருக்கிறாராம் பொன்சேகா. பொதுவேட்பாளர் பற்றி வாய்திறக்காமல் இருந்து வந்த முக்கியக் கட்சியான ஜே.வி.பி-யும் தற்போது பொன்சேகாவை பொதுவேட்பாளராக களமிறக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது!

இந்தியாவுக்கு மூன்று புறம் ஏற்கெனவே சீனாவால் பலமான ஆபத்து உள்ளது. வடபகுதியில் இருக்கும் சீனா… மேற்கில் பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும், கிழக்கில் பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஒரே பகுதியாக இருந்து வந்த தெற்கிலும் தற்போது இலங்கையின் ஆதரவினால் கச்சத்தீவில் இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது.

மொத்தத்தில் இலங்கையில் தற்போது வரப்போகும் தேர்தலில் ராஜபக்ஷே, பொன்சேகா என யார் ஜெயித்தாலும் சரி… இந்தியாவுக்கு அது ஒருவகையில் தோல்வியாகவே முடியும் நிலை! இதெல்லாம், புலி ஆதரவாளர்களால் ஏற்கெனவே தீர்க்கதரிசனத்தோடு சுட்டிக் காட்டப்பட்ட எச்சரிக்கைகள்தான். இப்போது சூடு கண்ட நிலையில், தன் பார்வையை மாற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது இந்திய அரசு” என்று கூறும் புலி தரப்பினர்,

”இதையெல்லாம் ஊன்றி கவனிக்கிறார்கள் எஞ்சியுள்ள புலித் தலைவர்கள். இலங்கையில் மீண்டும் ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முனையும். அதற்கு தோதாக புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து, ஆயுதம் மற்றும் யுத்த தந்திர உதவிகளையும் இந்திய அரசு செய்வதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட, இலங்கையின் வரலாற்றுச் சக்கரம் ஆரம்பத்திலிருந்து சுழலும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு!” என்கிறார்கள்.

‘யுத்தத்தை யார் புலிகள் தரப்பில் நடத்துவார்கள்?’ என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதிலுண்டு!

”சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் இராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன். அப்போது ‘இராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க்குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்’ என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை.

அதன்படி, பொட்டு அம்மானில் தொடங்கி கதிர்காமத்தம்பி அறிவழகன், பாலசிங்கம், இராஜரத்தினம், அண்டு வேல்மன், இளங்கப்பிள்ளை, வீரசிங்கம், ரஞ்சித் பெர்ணாண்டோ, டேவிட் பூபாலபிள்ளை, லூகாஸ் பாலசிங்கம், நடராசா மதிதரன், ஜேம்ஸ் கருணாகரன், சதியன் குமரன், பாலச்சந்திரன், ஜெகன்மோகன் உள்ளிட்ட புலனாய்வுப்பிரிவின் முக்கியத் தளபதிகள் 57 பேர் உலக நாடுகள் முழுவதிலும் சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சமயம் பார்த்து வெளியில் வருவார்கள்” என்பதே இவர்கள் தரும் நம்பிக்கையான விளக்கம்!

நன்றி: ஜூனியர் விகடன்

http://www.meenagam.org/?p=17323


தமிழர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு எவிகேஎஸ் இளங்கோவன் !

http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/11/evks.jpg


காங்கிரசை தமிழகமண்ணைவிட்டு ஒழிப்போம் என்று முழங்கியர் பெரியார். அவரின் வம்சவழியில் வந்ததாககூறி நான்கு இனிசியலோடு நடமாடும் இளங்கோவன் தமிழனின் (எருமைமாடு போன்ற)பொறுமைக்கு ஒரு சான்றாக இருக்கிறார். பெரியாரின் வீட்டுபிள்ளை என்று காட்ட இவர் பெயருக்கு முன்னர்வரும் “எவிகேஎஸ்” இல்லையென்றால் இளங்கோவனுக்கு அரசியலில் முகவரியே கிடையாது. ஆனால் பெரியாரின் கருத்துக்கு சிறிதும் ஒவ்வாத காங்கிரசில் இருந்துகொண்டு பதவி சுகத்திற்க்காக தமிழினத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார் இளங்கோவன். கடந்த தேர்தலில் இவரின் தமிழினவிரோதபோக்கினால் ஈரோட்டு மக்களால் சவுக்கடி(செருப்படி என்ற வார்த்தை சபை நாகரீகம் கருதி தவிர்க்கப்பட்டு இருக்கிறது) கொடுக்கப்பட்டு மூலையில் உற்காரவைக்கப்பட்டு இருக்கிறார் இளங்கோவன்.

தனது அரசியல் இருப்பை நிலைநாட்ட தொடர்ந்து தனது தமிழினவெறுப்பை அரங்கேற்றிவருகிறார் பெரியாரின் இனிசியல் கொள்ளுபேரன். நாமும் வழமை போல பொறுமைகாத்து வந்தோம். உலகெங்கும் மாவீரர்நாள் நவம்பர் 27 இல் கண்ணீர் மழ்க நினைவுபடுத்தப்பட்டு “தமிழனுக்கு நாடு வேண்டும்!” என்று தங்கள் கடைசி மூச்சை நிறுத்தி கொண்ட அந்த மாவீரர்கள் நினைவில் நிறுத்தும் நாளில். மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு தமிழீழ உணர்வாளர்கள் ஈரோட்டில் வைத்திருந்த பதாகைகளை தனது கைத்தடிகள் துணையுடன் கிழித்து எறிந்திருக்கிறது இந்த கருங்காலி. அரசியல் செய்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கிறது அப்படி இருக்க மாவீரர்கள் பதாகைகளை கிழித்துத்தான் தனது அரசியல் நடத்தவேண்டும் என்று எண்ணும் இந்த இழிபிறவியை கண்டு இரத்தம் கொதித்து போயிருக்கிறோம்.

உங்களுக்கு மாவீரர்தினத்தில் உடன்பாடு இல்லையென்றால் ஒதுங்கி போங்கள் எதற்க்காக மாவீரர்கள் நினைவுபதாகைகளை கிழிக்க வேண்டும்?. முறையாக அனுமதிபெற்று ஈழ ஆதரவாளர்கள் வைத்த பதாகைகளை “நான் சோனியா விசுவாசி” என்று காட்ட கிழித்துபோட்டு இருக்கிறார் இந்த காங்கிரசுக்காரர். கேட்டால் “ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் அவர்களுக்கு நினைவு பதாகையா?” என்று பதிலளிப்பார்கள். அப்படி பார்த்தால் அமைதி படையை அனுப்பி பல்லாயிரம் தமிழர்களை கொன்றழித்த ராஜீவ் காந்தியின் நினைவுநாளில் நீங்கள் வைக்கும் பதாகைகளை நாங்கள் கிழித்து போடுவதா?

இளங்கோவன் அவர்களே வந்தாரை வாழவைத்து வாழவழியில்லாமல் அலையும் தமிழர்கள் என்று எங்களை சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள் போல. எங்கள் தொப்புள்கொடி உறவுகள் ஈழத்தில் அகதிமுகாம்களில் வாட கர்நாடகாவிலிருந்து பொருளாதார ஏதிலிகளாக வந்த நீங்கள் தமிழகத்தில் அனுபவிக்கும் வசதிகளை எண்ணிப்பாருங்கள். எவன் உண்மையான தமிழன் எவன் உண்மையான தமிழன் இல்லை என்று தமிழன் சிந்திக்க ஆரம்பித்தால் நீங்கள் காணமல் போய்விடுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.கடந்த தேர்தலில் உங்கள் சொந்த தொகுதிவரை வந்து உங்களை விரட்டி அடித்த உணர்வாளர்களுக்கு உங்களை தமிழகத்தை விட்டே அடித்து விரட்ட ரெம்ப நாளாகிவிடாது.கறைபடிந்த உங்கள் கரங்கள் எங்கள் மாவீரர்கள் படங்களை தீண்டியது கொண்டு கொதித்து போயி இருக்கிறோம். உங்கள் எஜமானியம்மா உங்களுக்கு எலும்பு துண்டுகளாக பதிவிகளை எடுத்து வீசலாம் தமிழன் விழித்து எழுந்தால் நீங்களோ உங்கள் காங்கிரசுகட்சியோ தமிழ்நாட்டில் இருக்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தால் தமிழ்நாட்டில் எங்காவது ஒரு மூலையில் வார்டு கவுன்சிலாராக வென்றுவிட்டு வாருங்கள்.

அது என்ன இந்திய இறையாண்மை?

நீங்கள் தற்போது சீமான் போன்ற தமிழ் இன உணவாளர்களுக்கு எதிராக கையில் எடுத்திருக்கும் துருப்பிடித்த ஆயுதம் இந்திய இறையாண்மை. அது என்னங்க இந்திய இறையாண்மை? எங்களை பொறுத்தவரை இறை என்பது பொய். நீங்கள் இந்தியாவிற்கு இருப்பதாக சொல்லும் ஆண்மையும் எங்கள் மீனவர்கள் சிங்களவனால் சுட்டு வீழ்த்தப்படும் கோரத்தை இந்தியாவால் தட்டி கேட்க்கமுடியாத பொழுதே பொய் என்று ஆகிவிட்டது. இப்படி இல்லாத ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் தோழர்களை நசுக்க முனைவது நியாயமா?

காவேரில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்ல ஒரு எஸ்எம் கிருஷ்ணாவால் முடிகிறது. தலைமையால் அவர்களுக்கு உத்தரவிட முடியவில்லை. ஆனால் நீங்கள் தமிழக நலனுக்காக சிறிதேனும் குரலை உங்கள் தலைவியிடம் உயர்த்தியது உண்டா? அப்போது இந்திய இறையாண்மை எங்கே போனது? தண்ணீர் பிரச்சனையில் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாதா? ஒகேனக்கல் நீர் தமிழத்தின் உரிமை என்று உங்களால் உரக்க சொல்ல முடியுமா? முல்லை பெரியாரில் புதிய அணைகட்ட ஆய்வினை மேற்கொள்ள உங்கள் காங்கிரசுகட்சி அனுமதிகொடுத்ததை பத்தி உங்கள் தலைமையிடம் கிசுகிசுக்கவாவது முடியுமா?

அது என்னங்க இந்திய இறையாண்மை தமிழனுக்கு மட்டும் தொடர்ந்து போதிக்கப்படுகிறது? இந்தியாவில் பிறவாத ஒருவரை இந்திய பிரதமராக்க நீங்கள் முயலும் பொழுது வெளிநாடுகளில் வாழும் தொப்புள்கொடி உறவுகள் எம் தமிழர்களுக்காக குரல்கொடுத்தால் அது குற்றமா?

—-

தமிழகத்திலிருந்து தமிழன்பன்

http://www.meenagam.org/?p=17518


http://www.meenagam.org/wp-content/uploads/2009/04/defeat-cong.jpg

தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி


[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

http://video.yahoo.com/watch/6494778



















1989_annai_tsm


http://www.meenagam.org/?p=17390

மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா…..?


6நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது, மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில். ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்தரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேசவில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா..?

மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளை பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற்றதை தமிழன் ஏன் கொண்டாடிக்கொண்டிருந்தான் இதே தமிழன் மும்பை குண்டு வெடிப்பிற்கு கண் கலங்குகிறான். நாமெல்லாம் வணிகக் குப்பைகளாகி விட்டோமா. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????

என் நண்பர்கள் அங்கே சண்டை உச்சத்தில் நடந்துகொண்டிருந்த போது அங்கே இந்திய அணி விளையாட சென்றதேன்? என் நண்பர்கள் அந்த சமயத்தில் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்…

நான் அவர்களை திட்டினேன்???பதிலுக்கு “நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??”
என்று வாதாடினான் என் நண்பன். நான் சொன்னேன் “வீட்டில் யாரோ இறக்கிறார்கள், அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?” என்றேன் அவன் பேசவில்லை ஆனால் தொலைக்காட்சி மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான். இது என்ன மனித நேயம்…

நாம் விளம்பரங்களுக்கு விலை பொய் விட்டோமா.ஊடகங்கள் ஒன்றை நன்றாய் காட்டினால் நாம் வருந்துகிறோம்.மும்பை குண்டு வெடிப்பை ஆங்கில தொலைக்கட்சிகள் நேரடியாய் ஒளிபரப்பின.ஆம் உடனே உப்பு சப்பில்லாத wednesday உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் வந்தன. கமலஹாசன் தான் யாருமே சொல்லாத கருத்தை சொல்வதாக தொலைக்காட்சியிலே கதைத்துக்கொண்டிர்ந்தார் . அடி மட்ட தீவிரவாதியை கொள்வதால் பிரச்சனை தீர்ந்ததா…..ஏன் மகேஷ் பட் மகன் மாட்டி உள்ளாரே அவரை encounter செய்ய முடியுமா. sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையை பிடித்து கேட்பாரா???????

முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.
ஈராக் செய்தால் அது தீவிரவாதம்,அமெரிக்கா செய்தால் அது தீவிரவாததிற்கு எதிரான புனிதப் போர் .கலைஞர் முதலாளியாய் கொடி பிடித்து, மௌனமாய் மட்டும் அழுவார்.

கமல் முதலாளிகள் இறந்தால் மட்டும் “வன்முறைக்கு வன்முறை தீர்வு ” என்று குரல் கொடுப்பார்……………….ஏன் இந்திய இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு….அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????

ஏன் மும்பையில் அமெரிக்காவில் செத்தால் தான் உயிர்களா ……………மத்ததெல்லாம் ………..?????
ஏன் வணிக குப்பையாகி விட்டோம் …………..மனித நேயத்திற்கு விளம்பரம் செய்தால் தான் குரல் கொடுப்போமா ….இல்லை முதலாளிக்கு மட்டும் குரல் கொடுக்கும் அடிமை உளவியல் நம்மில் இருக்கிறதா????

ஏன் லட்சக் கணக்கான குழந்தைகள் சாகும் போது நாம் மானட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம் ……….
மட்டை பந்து வீச்சு பார்த்துக்கொண்டிருந்தோம்,டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் …..

மும்பையை நியாபகம் வைத்து விளக்கு வைக்கும் தமிழ் பெண்களே,தமிழனுக்காக உயிர் கொடுத்த ,ஈழ பெண் மானம் காக்க உயிர் விட்ட பிரபாகரன் திலீபன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.செப்டம்பர் 11 என்றால் மட்டும் எப்படி மனித நேயம் பொத்துக்கொண்டு வருகிறது. எங்கு மனிதக்கொலை நடந்தாலும் என் மனம் வலிக்கிறது ….என் மனம் அமெரிக்கனுக்கு மட்டும் அழுகும் பக்குவத்திற்கு வர வில்லை ….!

—–

தமிழகத்திலிருந்து கார்த்தி

வெண்ணிற இரவுகள்.

http://www.meenagam.org/?p=17618



ராஜீவ்காந்தி கொலைவழக்கு,பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் கையளிக்காததினால் ஒத்திவைப்பு

சென்னையை அடுத்த சிறீபெரும்புதூரில் கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவருடன் பொட்டு அம்மான், அகிலா, நளினி, முருகன் உட்பட பலர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர்.

சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தனியாக அமைக்கப்பட்ட தடா நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.

பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் சி.பி.ஐ.யிடம் சிக்கவில்லை. எனவே வழக்கு பிரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நளினி, முருகன் உட்பட சிலர் மீதான வழக்கு மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் மீதான வழக்கு 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனியாகப் பிரிக்கப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதலாம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 17 ஆண்டுகளாக பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி நீதிபதியின் அறையில் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. முதலாம் தடா நீதிமன்ற நீதிபதி பி.ராமலிங்கம் விடுமுறையில் சென்றிருப்பதால், 6ஆவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆனந்தகுமார் அறையில் நேற்று காலையில் விசாரணை நடைபெற்றது.

சி.பி.ஐ. அதிகாரி மற்றும் வக்கீல் ஆஜராகி 4 மூலைகளிலும் சீலிட்ட கவர் ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பெப்ரவரி 3 ம் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. அவர்களின் இறப்பு சான்றிதழை சி.பி.ஐ. தாக்கல் செய்தால்தான் வழக்கு முடிவுக்கு வரும்.

நேற்றைய விசாரணையில் அவர்களின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்ற வட்டாரம் தெரிவித்தது. பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு கொடுக்க வேண்டும். எனவே இவர்களின் இறப்பு சான்றிதழைக் கேட்டு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது

http://www.meenagam.org/?p=17648



இளங்கோவன் வீடு மீது பெட்ரோல் குண்டு



http://1.bp.blogspot.com/_pcTG6Zyb_zk/Sqf4qdiOMJI/AAAAAAAABnw/c5JAx-YB-TY/s400/Banner.jpg
ஈரோட்டில் மாவீரர்நாள் சுவரொட்டிகள், தேசியத்தலைவரின் படங்களை காங்கிரஸார் அகற்றியதன் விளைவாக சென்னையிலுள்ள காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை அடையார் பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 11.30மணியளவில் மர்ம நபர்கள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மாவீரர் தினத்தையொட்டி ஈரோட்டில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரன் படங்களை காங்கிரசார் அகற்றிய இரவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு மீது தாக்குதல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டிற்கு பலத்த காவற்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.meenagam.org/?p=17600

தமிழீழ தேசியத்தலைவரின் படங்களை கிழித்த ஈ.வி.கே.எஸ். வீட்டின் மீது பெற்றோல்



http://video.yahoo.com/watch/6505916




[ஒலி] நேற்று இரவு இளங்கோவன் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக நாம் தமிழர் அமைப்பினர் மூவர் கைது. அது தொடர்பாக நாம் தமிழர் இயக்க தொண்டர் நம் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர் வைத்திருந்த பிரபாகரனின் படங்களை இளங்கோவன் தலைமையில் சென்ற காங்கிரஸ் குழுவினர் கிழித்தெறிந்ததையடுத்து அன்று இரவு 12 மணியளவில் இளங்கோவன் வீட்டின் மீது 3 பெற்றோல் குண்டு வீசப்பட்டது.

இது பற்றி தெரியவருவதாவது:-

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பிரபாகரனின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் இளங்கோவன் தலைமையில் அவ்விடத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்து எறிந்தனர்.

மேலும் பிரபாகரனின் பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இச்சம்பவத்தையடுத்து நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். சென்னை வீட்டில் காவலாளி மோசஸ் மட்டுமே இருந்தார்.

நேற்றிரவு 11.30 மணிக்கு காவலாளி மோசஸ் முன்பக்க கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் இளங்கோவன் வீட்டுக்கு 3 மர்ம மனிதர்கள் சென்று வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள்.

அது வீட்டு முன்பக்க அறை வாசலில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் தீ பிடித்து எரிந்தன. நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.

சத்தம் கேட்டு காவலாளி மோசஸ் முன் பக்க கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்ம மனிதர்கள் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.

இதுபற்றி ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு காவலாளி மோசஸ் தகவல் கொடுத்தார். பிறகு அடையார் பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.

அடையார் பொலிஸார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு மர்ம நபர்கள் குறித்து 50 க்கும் மேற்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின் பின்னர் பொலிஸார், சீமானின் உதவியாளரும் டைரக்டருமான மித்ரன், அருண், மணி என்ற நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.meenagam.org/?p=17652



அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!!











விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ்பேசும் மக்களே,

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம்.

இந்த விடயத்தில், ராம் மற்றும் நகுலன் ஆகியோரது முக்கியத்துவத்திற்கு அப்பால் அவர்கள் பற்றி வெளிவரும் கதைகளின் பின்னணியில் சிறிலங்கா அரசு எமது இனத்தின் மீது நடாத்த முயலும் பெரும் உளவியல் போரே முக்கியமானதாகும். அதனை நாம் விளங்கிக் கொள்வதே அவசியமானதாகின்றது.

அந்த உளவியல் போரின் ஆழ அகலத்தையும், அந்தப் போரின் விளைவாக சிறிலங்கா அரசு ஏற்படுத்த முனையும் தாக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு தளபதிகள் ராம் மற்றும் நகுலன் பற்றி வெளியாகும் கதைகளின் உண்மைப் பின்னணியை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதியான ராம், கடந்த மே மாதத்தின் பின்னர், தன்னுடனிருந்த போராளிகள் சிலருடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மறைவிடங்களில் மாறிமாறி இருந்து வந்தார். இவருடன் எமது இயக்கத்தின் இன்னொரு முன்னாள் தளபதியான நகுலனும் கூட இருந்தார். ஆனால், காலப்போக்கில், வீரச்சாவுகள், காணாமல் போதல்கள், சிங்களப் படையினரிடம் சென்று சரணடைதல் போன்ற பல்வேறு காரணங்களினால் ராம் மற்றும் நகுலனுடன் இருந்த போராளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது.

இந்த நிலையில், தனியாகத் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில் – மட்டக்களப்பில் இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சில புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய ராம், பின்பு அவர்களது ஏற்பாட்டில், அவர்களது உதவியுடன் மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச மறைவிடமொன்றில் நகுலனுடன் தங்கியிருந்தார். இந்த நேரத்தில், மே மற்றும் யூன் மாதங்களில் வெல்லாவெளி பகுதியில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தங்கியிருப்பதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை செய்திகளை வெளியிட்டது. இந்த செய்திகளை தொடர்ந்து அடிக்கடி பல தடவைகள் இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. இதனால், இவர்கள் இருவரையும் பாதுகாத்து வைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்களை புலனாய்வுத் துறைப் போராளிகளும், இவர்களை வைத்திருந்த ஆதரவாளர்களும் எதிர்நோக்கினர்.

இத்தகைய சூழ்நிலையில், இன்னொரு திருப்பமாக, இறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வந்து வவுனியா மறைவிடமொன்றில் தங்கியிருந்த புலனாய்வுத்துறையின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளர் பிரபா, மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு ராம், நகுலன் ஆகியோரைப் பாதுகாப்பாக வைத்திருந்த புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் ஏற்கெனவே தொடர்பு இருந்து வந்தது. அதன் காரணமாக அவர் ராம் மற்றும் நகுலனுடனும் தொடர்பில் இருந்தார். மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரபா, அற்குரிய உதவியைப் பெறுவதற்காக அப்போது திருகோணமலையில் இருப்பதாகக் காட்டிக்கொண்ட தவேந்திரன் என்ற புலனாய்வுத் துறைப் போராளியுடன் தொடர்பினை ஏற்படுத்தினார். இவற்றுக்கு அமைய தவேந்திரனின் உதவியுடன் தான் மட்டக்களப்புக்கு வந்து அவர்களைச் சந்திப்பதாக ராம் மற்றும் நகுலனிடம் பிரபா சொல்லியிருந்தார்.

தவேந்திரன், எற்கெனவே, முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான போராளிகளுடன் சிங்களப் படையினரிடம் சரணடைந்திருந்தவர். சிறிலங்கா தடுப்பு முகாம்களிலிருந்து வேறு வழிகளில் தப்பி வெளியேறிய போராளிகள் மூலமாக தவேந்திரன் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்குவதாக தகவல்கள் கசிந்திருந்தன. இருந்த போதும், அவர் எவ்வாறு சிறிலங்கா தடுப்பு முகாமிலிருந்து வெளியில் வந்தார் என்பது பற்றிய விபரங்கள் சரிவர ஆராய முடியாத சூழலில், தன்னையும், ஏனைய சில போராளிகளையும் மட்டக்களப்புக்கு நகர்த்தும் ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக பிரபா தவேந்திரனைத் தொடர்பு கொண்டிருந்தார்.

இந்த இடத்தில் தவேந்திரன் பற்றிய ஒரு பின்னணியைத் தெரிந்து கொள்ளுவது அவசியம். இவரது தந்தை ஒரு சிங்களவர். இவரது சகோதரர்கள் கூட முற்றாகச் சிங்களச் சூழலிலேயே வளர்ந்து, சிங்கள இனத்திற்குள்ளேயே திருமண பந்தங்களையும் ஏற்படுத்தியவர்கள். தவேந்திரன் கூட மிகச் சரளமாக, சிங்களவர் போன்றே சிங்கள மொழியைப் பேசக்கூடியவர். இந்தச் சாதகமான பின்னணிகள் காரணமாக, திருகோணமலையின் சிங்களக் கிராமங்களை அண்டிய பிரதேசங்களிலேயே முன்னர் அவருக்குப் பணிகளும் வழங்கப்பட்டிருந்தன.

இத்தகைய சிங்களப் பின்னணிகள் இவருக்கு இருந்ததாலும், இந்த சிங்களத் தொடர்புகள் மூலமாக முன்னர் அவரால் செய்யப்பட்டிருந்த வெற்றிகரமான வேலைகளின் பெறுபேறுகளை மனதில் வைத்துக்கொண்டுமே, அவை சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன், தான் மட்டக்களப்புக்கு நகருவதற்கான உதவி தேடிய பிரபா, தவேந்திரனை நாடினார். செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக , திருகோணமலையிலிருந்து வேறு சில சிங்களப் பொதுமக்களுடன் வாகனமொன்றில் வந்த தவேந்திரன், குறித்த நேரத்தில், குறித்த ஓரிடத்தில் வைத்து பிரபா குழுவினரை ஏற்றிச் சென்றார். வாகனத்திற்குள் ஏறிய பின்னர் தான், அதற்குள் இருந்தவர்கள் எல்லோரும் சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் எனபது பிரபாவுக்குத் தெரியவந்தது.

மட்டக்களப்பிலிருந்த ராம் மற்றும் நகுலனை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் மேற்கொண்ட முதல் நடடிக்கை இதுவாகும்.

இதன் பின்னர், பிரபாவைக் கையாண்டு மட்டக்களப்பில் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பாதுகாப்பிலிருந்த தளபதிகளான ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தொடர்புகளை ஏற்படுத்தினர். ஆனால், ராம் மற்றும் நகுலனிற்கோ அல்லது அவர்களைப் பாதுகாத்த எமது புலனாய்வுத்துறைப் போராளிகளுக்கோ பிரபா சிறிலங்கா படையினருடன் இருக்கும் விடயம் அப்போது தெரிந்திருக்கவில்லை. ராம் மற்றும் நகுலனை மிகப்பாதுகாப்பான வேறோர் இடத்திற்கு தான் நகர்த்தப் போவதாகத் தகவல் கொடுத்த பிரபா, குறித்த ஓரிடத்தில் வேறு சில ஆட்களுடன் “ஹயஸ்” வாகனம் ஒன்றில் வந்து அவர்களை ஏற்றிச் சென்றார். தவேந்திரனும் அவருடன் வந்திருந்தார். பிரபாவுடன் வந்தவர்கள் அனைவருமே சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் என ராம் மற்றும் நகுலனைப் பாதுகாத்திருந்த புலனாய்வுத்துறைப் போராளிகள் கருதிய போதும், அவர்கள் தவேந்திரனின் தொடர்புச் சிங்களவர்கள் என பிரபா நம்ப வைத்தார்.

இதன் பின்னர், எமது புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோர் திருகோணமலைப் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்பட்டது. வெளிநாடுகளில் இருந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்ட ராம், தான் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அதற்கு தனக்கு நிதி மற்றும் ஆயுதங்களை ஒழுங்கு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார். இதனை அவரது ஒரு வீரசெயலாகவும், பெரும் தியாகமாகவும் கருதி யாரும் கேள்விகுட்படுத்தாத வகையில், நன்கு திட்டமிட்டு சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் செயற்படுத்தினர்.

இந்த நேரத்தில், திரு. செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் எமது இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்தபோது, சிறிலங்கா அரசு அதனை ஒரு பெரும் அபாயமாக நோக்கியது. கே. பி அவர்களை விட்டு வைத்தால் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒழுங்குபடுத்தி விடுவார் என்று அஞ்சிய சிறிலங்கா அரசு ராம் அவர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவித்து கே.பி அவர்களை இலக்கு வைத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கே. பி. அவர்களின் தலைமையை ஏற்காது முரண்பட்டு இருந்த நேரத்தில், கே.பி. அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய ராம், அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கே. பி. அவர்களது தலைமையை ஏற்கும்படி கடிதங்களையும் எழுதினார். அதேநேரத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் இருந்த குழப்பங்கள், மோதல்கள், பிரிவுகளைச் சாதுரியமாகப் பாவித்த சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் ராம் அவர்களுக்கும் கே.பி. அவர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி நுட்பமாகக் காய்களை நகர்த்தி இறுதியில் கே. பி. அவர்களையும் கடத்தினர்.

இங்கு ராம் மற்றும் நகுலன் ஆகியோரை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தனித்தனியாகக் கையாண்டனரா அல்லது ஒன்றாகச் சேர்த்து வைத்து நாடகங்களை அரங்கேற்றினரா என்பது இன்னும் புலப்படவில்லை. ஆனால், இவர்கள் இருவரையும் வைத்து வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் வளர்த்து, இந்தச் செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாகப் புலனாகின்றது.

இந்த நிலையில், கடந்த செப்ரெம்பர் மாதத்திற்குப் பின்னர் ராம் அவர்கள் சிறிலங்காப் படையினரிடம் இருப்பது பற்றிய தகவல்கள் மெல்லக் கசியத் தொடங்கின. அதனால், அவரை வைத்து தாங்கள் நடாத்தி வந்த புலனாய்வுப் போர் இனிமேல் வெற்றியளிக்காது போய்விடுமோ என சிறிலங்கா புலனாய்வாளர்கள் விழி்ப்படைந்தனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி மின்னேரியா சிறிலங்கா படை முகாமிலிருந்து ராம் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும், பின்னர் அவர் நவம்பர் 10ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் திடீரெனச் செய்திகள் வெளியாகின. அந்த நேரத்தில், தான் தப்பி ஓடி வந்துவிட்டதாக ராம் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் எமது புலனாய்வுப் போராளி ஒருவருக்கு தொலைபேசி வழியாகச் சொன்ன கதைகள் நம்பும்படியானவையாக இருந்திருக்கவில்லை. உண்மையிலேயே ராம் அவர்கள் தப்பி ஓடியிருந்தாரா, அல்லது ராம் அவர்கள் தமது பிடியில் இருக்கும் தகவல் கசிந்த நிலையில் புதிய வியூகம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்தும் நோக்குடன் சிறிலங்கா படையப் புலனாய்வாளர்களே அவ்வாறான ஒரு கதையைப் பரப்பினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ராம் மற்றும் நகுலன் ஆகியோரை வைத்து சிறிலங்காப் புலனாய்வுத் துறையினர் ஆடி வரும் இந்தப் புலனாய்வுப் போரின் உச்சக்கட்டம் தான், வரும் மாவீரர் நாளன்று ராம் நிகழ்த்தப்போகும் கொள்கை விளக்க உரை. இதில், சிறிலங்கா படையப் புலனாய்வாளர்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய முக்கிய தலைப்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு.

தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு அகவணக்கம் செலுத்தத் துடிப்பவர்களை ஒரு புறத்திலும், மறுமுனையில், தேசியத் தலைவர் அவர்கள் உயிருடன் வாழ்கிறார் என்று வாதிடுபவர்களையும் அணி பிரித்து மோத வைக்க எதிரி புதிய வியூகங்களை வகுக்கின்றான். தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவு பற்றிய விடயம் இங்கே ஒரு கருவி மட்டுமே. அதன் உண்மையான நோக்கம், வெளிநாட்டுத் தமிழ்ச் சமுதாயத்தை இன்னும் குழப்பி, அவர்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாட்டை வளர்த்து, அவர்களைப் பலவீனப்படுத்துவதாகும்.

இவ்வாறாக, சிறிலங்கா அரசாங்கம் எம் மீது நடாத்த முனையும் பெரும் உளவியல் போருக்குப் பலியாகிவிடாமல் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாம் அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கதிர்காமத்தம்பி அறிவழகன்,
பொறுப்பாளர்,
வெளியகப்பணிப்பிரிவு,
புலனாய்வுத்துறை
http://www.meenagam.org/?p=17338



தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை












தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை 2009

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2009

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.

அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.

வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும், தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக் காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்பு, மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது. தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நிலஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக்கொண்டிருக்க, சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படைநடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர், கதிரவெளி, வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள், மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும், சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்பு, அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.

தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள், ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.

வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது.

காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது. இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் கூடுமிடங்கள், மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான், தரை, கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில், தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.

எமது மக்களின் இந்த இழப்புக்களையும், ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு நாம் பலதடவைகள் போர்நிறுத்த அறிவித்தல்களை மேற்கொண்டோம். அனைத்துலகச் சமூகத்திடம் பொதுமக்களை பெரும் இழப்புக்களில் இருந்து பாதுகாக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பினை நாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தமது நாடுகளின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தாயகத்தில் அல்லலுற்றுக்கொண்டிருந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுநின்று என்றுமில்லாத பேரெழுச்சியோடு கனவயீர்ப்புப் போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சாத்வீக வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். இதன் ஒருபடி மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரல்லாத வெளிநாட்டவர்களும் பங்குபற்றி வலுச்சேர்த்தார்கள்.

அதேநேரத்தில் எமது தமிழக உறவுகள் எம் மக்களின் மீதான இனப்படுகொலையைக் கண்டித்துக் கொந்தளித்தார்கள். அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அங்கே பேரெழுச்சியை ஏற்படுத்தின. உணர்வாளர்கள் பலர் அர்ப்பணிப்பின் உச்சநிலைக்குச் சென்று தம்மையே தீயிற் கருக்கினார்கள். முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ மேலும் பரவி ஜெனிவாவின் முற்றத்தில் முருகதாஸ் வரை மூண்டிருந்தது. ஈழத்தமிழரின் அழிவையும் அவலத்தையும் தடுக்க உலகெங்கும் தன்னெழுச்சியாக நிகழ்ந்த தமிழ்மக்களின் போராட்டங்கள் பலனற்றுப் போயின.

உலக நாடுகள் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பில் அக்கறை எடுக்காது பாராமுகமாக இருந்தன. கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட சில நகர்வுகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் தூக்கி வீசியது. அதேவேளை வன்னியில் எமது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. மக்கள் எங்குமே செல்ல முடியாதவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது சிங்கள அரசு. இதனால் சாவும் அழிவும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக உணவின்றி, மருத்துவ வசதிகள் இன்றி ஒரு குறுகிய இடத்திற்குள் இருந்து எமது மக்கள் வதைபட்டார்கள்.

சிங்கள அரச படைகளின் கையில் சிக்கினால் ஏற்படப்போகும் துன்பத்தை உணர்ந்த மக்கள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் செல்வதற்கே தயாராக இருந்தார்கள். அதுவரை எம்மக்களை சிங்கள அரசபடைகள் அணுகாதவாறு இறுதிவரை போராடினோம். சிறிலங்கா இராணுவ இயந்திரம் பாரிய ஆளணி வளத்தோடும் படைக்கலச் சக்தியோடும் தாயக மண்ணை ஆக்கிரமித்து முன்னேறியபோதும் தமிழரின் வீரமரபை நிலைநிறுத்திப் போர் செய்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் எழுச்சியான ஆதரவோடும் தம்மையே தகனம் செய்யும் எமது சகோதரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்போடும் வீறுடன் போர் செய்தோம். ஆனால் எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங்களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. அனைத்துலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே செயற்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிரான இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சமரசம் செய்து கொண்டிருந்தன. சிலநாடுகள் தமது அரசியல், இராணுவ அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தன.

இந்நேரத்தில் எமது மக்களை மிகப்பெரும் மனிதப் பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயற்பட்டவர்களும் முன்வைத்தார்கள். எமது போராட்டத்தையும் அரசியல் வேட்கையையும் புரிந்துகொள்ளாமல் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் எல்லோரும் செயற்பட்டார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கி வந்தோம்.

இறுதிநேரத்தில் எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கோடு சர்வதேச சமூகத்துடன் தொடர்புகொண்டு எம்மால் எடுக்கப்பட்ட உடனடி முயற்சிகளும் நாசகாரச் சதித்திட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன. மிகவும் அநீதியான முறையில் தான்தோன்றித்தனமாக சிங்களத் தரப்பு நடந்துகொண்டது. வல்வளைப்புக்குள் அகப்பட்ட மக்கள் பலரைக் கோரமான முறையில் கொன்றொழித்தார்கள். உலகில் எங்குமே நடந்திராத கொடுமைகளை எல்லாம் எம்மக்கள் மீது சிறிலங்கா அரசபடை நிகழ்த்தியது. இம்மனிதப் பேரழிவில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரச தரப்பும் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் தடுப்புமுகாம்களில் குடிநீருக்குக் கூட வழியின்றி அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆறுமாதங்களைக் கடந்தபின்னும் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டத்தோடு தோளோடு தோள்நின்ற மக்கள் பலர் இரகசிய தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதோடு இன்றுவரை அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமே வெளிவரவில்லை.

இதேவேளை சிறிலங்கா அரசபடையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் யுத்தக் கைதிகளைக் கையாளும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக நடாத்தப்படாமல் துன்பங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்கள் சரிவர வெளிப்படுத்தப்படாமல், உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படாமல், தொண்டு நிறுவனங்கள் அவர்களை அணுகவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலை துன்பகரமானது. அதிலும் பெண்போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முறையும் கையாளும் விதமும் கண்டிக்கத் தக்கவை. குறிப்பாக திருமணமான பெண்போராளிகளை அடைத்து வைத்திருப்பது, அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தடுத்து வைத்திருப்பது என்பன மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள். இவை தொடர்பில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தொண்டு நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் மெளனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாக இவ்வமைப்புகளும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஓர் அப்பட்டமான இன அழிப்புப் போரை, புலிகளின் பிடியில் இருந்த மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று கூறும் அரச பிரகடனம் வேடிக்கையானது. தமிழர் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் நடாத்தப்பட்ட நடவடிக்கை என்ற இலங்கை ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்கிடமானது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு பெரும் உயிரிழப்பு , சொத்திழப்பு, வாழ்விட இழப்பு, சுய கௌரவ இழப்பு என்பவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பொருண்மிய இழப்பை அளவிட முடியாது. எமது மக்களின் பொருளாதார வளம் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. எமது நிலங்களுக்குரிய மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் எமது இயற்கை வளங்களும் சொந்த நிலங்களும் சூறையாடப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலையை அடைந்துள்ளது.

எமது பாசமிகு தமிழ் மக்களே,
வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும் எமது அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும்கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் சிறிலங்கா அரசதரப்பு மிகக்கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளூடான நகர்வுகளைச் செய்ய முற்பட்ட எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் கடத்துவது, கைது செய்வது, கைது செய்து தரும்படி அந்நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்லமுடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கௌரவமான தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.

1956 இல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான இனப்படுகொலை 2009 இல் உச்சக் கட்டத்தையடைந்தது. சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செயற்பட்டவிதம், குறிப்பாக இப்பாரிய மனிதப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்களப் பேரினவாதம் நடந்துகொண்ட முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரிய மனிதப்பேரழிவைச் செய்து, தமிழர்களின் மனவுறுதியை உடைத்து, தாங்கள் நினைத்ததை தமிழர்கள்மேல் திணித்து இலங்கைத்தீவு முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலையும் வவுனியா நகரசபைத் தேர்தலையும் நடாத்தி தமிழ்த்தேசியத்தின் வீழ்ச்சியை உலகுக்குச் சொல்லலாமென எண்ணியது. ஆனால் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை தமிழீழ மக்கள் மீண்டுமொரு முறை தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

எம்மினத்தின் மேல் அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் கரிசனைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு சனநாயகப் பண்புகளை மதிக்கின்ற நாடுகளில் தாயக விடுதலையை முன்னெடுக்கும் அரசியற்கட்டமைப்புக்களை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு மக்களால் மக்களுக்காக அமைக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறமுடியும். இக்கட்டமைப்புக்கள் ஊடாக பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப்பெற்று எமது உரிமைப்போராட்டத்தை சர்வதேசரீதியில் வலுப்படுத்த முடியும். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டிலிருந்து விலகிப் போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதேநேரம், தாயகத்தில் நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட எமது மக்களின் கட்டுமானங்களைச் சீரமைத்து, இடம்பெயர்ந்த மக்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவேண்டிய பொறுப்பும் உலகத் தமிழர்களுக்கு உண்டு. அத்தோடு, மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவைக்கும் முயற்சியிலும், சிங்கள அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாக எமது உரிமைப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவைப் பெறும் முயற்சியிலும் அனைத்துலகத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
அதேநேரம், தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்தகாலத்தில் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலிலும் ஒற்றுமையோடும் தன்னலமற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். எமது இலட்சியப் பாதையில் அனைவரையும் அரவணைத்து, புதிய சூழல்கள், புதிய நட்புக்களைத் தேடி உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்தப் புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எமது போராட்டத்துக்கான ஆதரவை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியதோடல்லாமல் உலக அரங்கில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்து ஒலித்த எமது புலம்பெயர்ந்த உறவுகளை நன்றியோடு நினைவு கொள்கிறோம். புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்களின் நெறிப்படுத்தப்பட்ட பங்களிப்புக்களும் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அதேவேளை, எமது மக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து போராடிய தமிழகத்துச் சகோதரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான தமிழீழ மக்களே, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

http://www.meenagam.org/?p=17513




கோவில் அர்ச்சகர் செக்ஸ் லீலை மேலும் அதிர்ச்சி தகவல்









காஞ்சீபுரம் கோவில் கருவறையில் பூக்காரி உதவியுடன் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் ஆபாச லீலை நடத்தியதாக காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதனை ரகசியமாக காமிராவில் படம் பிடித்தார். இவரது ஆபாச படம் செல்போனில் பரவியது. தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் தேடினர். இதையடுத்து அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்த போது அவர் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்தார். அதில் தான் 8 பெண்களை மட்டும் ஆபாச படம் எடுத்ததாக கூறினார். அவர்களது பெயர்களை மாற்றி கூறியும், உண்மையான தகவல்களை கூறாமலும் போலீசாரை ஏமாற்றினார். இதையடுத்து தேவநாதனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. காஞ்சீபுரத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரிடம் தேவநாதன் நைசாக பேச்சு கொடுத்து நல்லவர் போல பழகி உள்ளார். அவரிடம் கருவறைக்குள் கண்ணை மூடி வேத மந்திரங்கள் சொன்னால் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று ஆசை காட்டி உள்ளார். மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். தேவநாதன் தனது மனைவியையும் ஆபாச படம் பிடித்து வைத்துள்ளார். என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது. தேவநாதனின் செயலுக்கு உடந்தையாக அந்த பகுதியை சேர்ந்த பூக்காரி ஒருத்தி இருந்துள்ளார். அவர் தேவநாதனை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார். இந்த வழக்கில் அவரை முக்கிய சாட்சியாக சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவள் கூறிய தகவல்படி 20க்கும் மேற்பட்ட பெண்களை தேவநாதன் ஆபாசமாக படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

http://beermohamedtamilgroup.blogspot.com/2009/11/blog-post_2454.html



சீமான் சென்னை விமான நிலையம் வந்தபோது கொடுத்த நேர்காணல்


http://www.mykathiravan.com/Breaking%20news%20of%20Kathiravan/Sep/_pic_ofthe_day.jpg

http://tamilthesiyam.blogspot.com/2009/11/blog-post_28.html

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட தமிழின உணர்வாளர் சீமான் அவர்கள் நேற்றைய தினம் இரவு சென்னை விமான நிலையத்தை அடைந்தபோது கொடுக்கப்பட்ட பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.
http://www.youtube.com/watch?v=LAUAdieoH_g










Photobucket






உயிர்த்து எழுவாயா பிரபாகரா....!















மௌனமாய் அழவில்லை .....
மண்ணுக்குள் புதைத்தான்
கழக கலக பெருச்சாளி அல்ல....
களப்போராளி........அவன்...!

ஒரு மகனுக்கு மத்திய அரசு ...
ஒரு மகனுக்கு மாநில அரசு ....
என் தலைவனின் மகன்களோ
மண்ணுக்குள்ளே மண்ணுக்காக...!

மூன்று நான்கு மனைவிகள்
இல்லை .....!
ஒரு மனைவி என் அண்ணி
எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை ..!

தமிழ் இனத்தலைவன் என்று சொல்லவில்லை ....
மகளை கவிஞர் என்று சொல்லவில்லை .....
இங்கே தலைவன் மானாட மயிலாட மார்பாட்டதிற்கு பேர் சூட்டும் போது....
என் தலைவன் மார்பை நிமிர்த்திக்கொண்டு சிங்களனின் துப்பாக்கி முன்பு உருமிக்கொண்டிருந்தான் ..!

இங்கே பெண் சிங்கத்திற்கு
கதை எழுதிக்கொண்டிருக்கும் போது .....!
என் புலி
பலி ஆனான்.......!

தமிழ் செம்மொழி மாநாடு நடத்தவில்லை ....
தலைவன் நடந்து வந்தாலே மாநாடு .......
இன்று மாவீரர் தினம் .....
என் தலைவன் உயிர்த்து எழுவானா .........????























இனம் காத்த வீரனே கடவுள்,
முனியாண்டி, ஐயனார் வீரர்களே.........
ரத்தம் சிந்தி கடவுள் ஆனான்
ஏசு.......!
கடவுள் பிரபாகரனே உயிர்த்து எழுவாயா?????
இல்லை சிலையாக எம்மை வழி நடுத்துவாயா ........

என்னால் உன்னை உயிருடன் கொண்டுவர
வைக்க முடியாது .....
உன்னைக் கவிதையால் மீட்டு எடுக்க முயற்சி செய்கிறேன்......
அழுகை வருகிறது ..... உண்மையிலேயே நீ இறந்து இருந்தால் .....
உன் தம்பி முத்துக்குமாரை கேட்டதாக சொல் .....
இப்படிக்கு நீ உயிர்த்து எழ காத்துக்கொண்டிருக்கும்
உன் தம்பி .......!

http://vennirairavugal.blogspot.com/2009/11/blog-post_25.html

Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...






smail


http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg


Update me when site is updated





http://3.bp.blogspot.com/_B8eiFOqb7q0/SwmRQA8fMyI/AAAAAAAADLE/R1Pa4piSsac/s1600/Nandri.jpg
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!