Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, June 4, 2009

♥ தமிழர் நிலை கண்டு கலங்கினேன்,சிங்கள தலைமை நீதிபதி ♥

 







தமிழர் நிலை கண்டு பதைபதைத்தேன்: இலங்கை தலைமை நீதிபதி

வன்னியில் அரசு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத மிகக்கொடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களை நேரில் பார்த்து நெஞ்சம் பதைபதைத்தேன் என்று இலங்கையின் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். 
 
இலங்கை நாட்டின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நீகோம்பு மாவட்டத்தில் மரவிலா என்ற இடத்தில் ஒரு நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்து விட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.


அப்போது அவர், வன்னிப்பகுதியில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்கள் இலங்கை நாட்டின் சட்டப்படி நீதியை பெற முடியாது. போரால் இடம் பெயர்ந்த தமிழர்களின் நலனில் இந்த நாட்டு சட்டம் எந்த அக்கறையும் செலுத்தாது. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இவ்வாறு நான் சொல்வதற்காக என்னை அதிகாரிகள் தண்டிக்கக் கூடும்.

நான் வன்னிப்பகுதி தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள "நிவாரண கிராமங்களுக்கு' சென்று பார்த்தேன். அவர்கள் படும்  துன்ப துயரங்களையும், வேதனைகளையும் என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. ஒரே ஒரு இனம் தான் நாட்டில் உள்ளது: பெரும்பான்மை என்றோ, சிறுபான்மை என்றோ எதுவும் கிடையாது என்றெல்லாம் நாம் கூறுவது பச்சை பொய்யாகும்.

போரால் இடம் பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் வசிக்கும் செட்டிக்குளம் முகாம்களுக்கு சென்று நான் பார்த்தேன். அவர்கள் சந்தித்து வரும் மிகப்பரிதாபமான நிலையை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நான் எந்த ஆறுதலையும் கூற முடியவில்லை. மிகக்கடுமையான துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்த்து வருகிறார்கள்.

மிக பிரம்மாண்டமான கட்டிடங்களை ஒருபுறம் நாம் கட்டி வருகிறோம். ஆனால் போரால் இடம் பெயர்ந்த இந்த தமிழர்கள் மிகச்சிறிய கூடாரங்களில் வசித்து வருகிறார்கள். ஒரே கூடாரத்தில் 10 பேர் வாழ்கிறார்கள். அந்த கூடாரத்தில் அவர்கள் நேராக நிற்கத்தான் முடியும். கூடாரத்திற்கு வெளியே செல்ல முயன்றால் அவர்கள் கழுத்தே உடைந்து விடும் என்று நிவாரண முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை உபாதைகளுக்கு செல்வதற்கு கூட 50 பேர், 60 பேர் என்று நீண்ட வரிசையில் நின்று அவர்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. செட்டிக்குளம் முகாமில் தங்கி உள்ள வன்னித் தமிழர்களின் வாழ்க்கை நிலைதான் இது.

அவர்களுக்கு போதுமான அளவிற்கு நாம் நிவாரணம் வழங்க வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அதற்கான பழியை நாம் தான் ஏற்க வேண்டும். இந்த நாட்டின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய துயர நிலைகள், நீதிமன்றத்திற்கு முன் கொண்டுவரப்படவில்லை. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்றும் சரத் என்.சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் இவர் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அந்த நாட்டின் தலைமை நீதிபதியே போரால் இடம் பெயர்ந்த வன்னித் தமிழர்களின் துயர நிலையை பகிரங்கமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9504

♥ பாதுகாப்பு வளையம் ? (முள் கம்மி வேலி) முகாம்களிலிருந்து 13,100 பேரை காணவில்லை! - இன்னர் சிட்டி பிரஸ் ♥

இடைத்தங்கல் முகாம்களிலிருந்து 13,100 பேரை காணவில்லை! - இன்னர் சிட்டி பிரஸ்


மனிதபிமான விவகாரங்களுக்கான ஐ.நாவின் ஒருங்கிணைப்பு குழுவினால் (OCHA), கடந்த மே 27 ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதிவரை, பெறப்பட்ட அறிக்கைகளின் படி, இடைத்தங்கள் முகாம்களில் இருந்து சுமார் 13,000 பேர் காணாமற்போயுள்ளதாக 'இன்னர் சிட்டி பிரஸ்' தெரிவித்துள்ளது.



யுத்த வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த 276,785 பொது மக்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக உத்தியோக பூர்வமாக தெரிவித்திருந்த OCHA, கடந்த மே 27 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், இத் தொகையில் 13,130 பேர் காணாமல்

போயுள்ளதாக தெரிவித்துள்ளது. இரு முறை எண்ணப்பட்ட போதும், மொத்த எண்ணிக்கையில் இவ்வித்தியாசம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

 பெரும்பாலான இளவயது ஆண்கள் தனியாக பிரித்து கொண்டு செல்லப்படுவதாகவும், இளம்பெண்கள் வேறு நோக்கங்களுக்காக பிரித்து கொண்டு செல்லப்படுவதாகவும், 'channel 4' தனக்கு கிடைத்த நேரடி செவ்விகளின் ஏற்கனவே மூலம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது காணமல் போயுள்ளவர்கள் பற்றியும் திட்டமிட்டு தகவல்கள் மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக 'இன்னர் சிட்டி பிரஸ்' தெரிவித்துள்ளது.

http://cache.daylife.com/imageserve/012b7xPd7MdVm/610x.jpg

http://cache.daylife.com/imageserve/04SR4gRgEh4qO/610x.jpg

http://cache.daylife.com/imageserve/0gDreLFeLdbMj/610x.jpg


http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3614:-13100-&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53

♥ பிரபாகரன் – நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா? ♥

பிரபாகரன் – நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா? – ஒரு இந்தியனின் பார்வையில்


LTTEleaderகடந்த இரு வாரங்களாக மன உளைச்சல். புலிகளின் பின்னடைவு கடந்த ஒரு வருடமாக புரிந்தாலும், பிரபாகரன் பற்றிய செய்தி மனதை விசனமாக்கியது உண்மை. அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்று விவாதம் செய்தால், முடிவில்லாமல் போகும் அளவுக்கு சாதக பாதக அம்சங்கள் உண்டு அவரிடத்தில். யார், எங்கிருந்து பேசுகிறோம் என்பதில் இருக்கிறது அவர் நல்லவரா இல்லையா என்று.

என்னை ஒரு வருடம் முன்பு கேட்டிருந்தால், சராசரி இந்தியன் போல 'என்ன சந்தேகம். புலிகள் சரியில்லை. பயங்கரவாதிகள். மேலும், என்ன ஒரு ஆணவத் துணிச்சல் – நம்ம முன்னாள் பிரதமரைக் கொலை செய்வதற்கு?' என்ற 'பொதுப் புத்தி' என்று சிந்தனையாளர்கள் சாடும் குணம் என்னிடம் இருந்தது.

இப்ப ஒரு வருடத்தில் என்ன நடந்து விட்டது? அவர்கள் – குறிப்பாக பிரபாகரன் – ஏன் இப்போது வேறு மாதிரி தெரியணும்? ஒரு இயக்கம் தேய்ந்து, அழிகிறது; ஒருவர் மரித்திருக்கக் கூடும் என்பதால் வரும் பச்சாதாபமா? என்றால், இல்லை என்றே சொல்வேன்.

நான் அறிந்த தமிழ் ஆர்வலர்கள், அரசியல், சமூக சிந்தனையாளர்கள் என்று பல்வேறு பிரமுகர்களின் வலைத் தளங்களைப் படிக்கும் வாய்ப்பும், முனைப்பும் கடந்த ஒரு வருடம் எனக்குக் கிடைத்தது. இதற்கு முன் என் தமிழார்வம் சராசரி தான். தமிழன் என்பதில் பெருமை. தொன்மையான மொழி மற்றும் கலாசாரம். ஆயினும், 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் கதாநாயகன் நேர்முகத் தேர்வில் சொல்லிக்கொள்ளும் 'தமிழ் பேசும் இந்தியன்' என்று சொல்லிக் கொள்ளவே விருப்பம் – இப்போதும், எப்போதும்;

நான் மதிக்கும் பலரும் இலங்கைத் தமிழர் விடயத்தில் புலிகளை ஒன்றுமே விமர்சனம் செய்யாத போது ஏன் இப்படி என்ற ஆர்வத்தில் படிக்கத் துவங்கியதில் ஈழ மக்களின் துயர நிலை, நியாயத்திற்கு அம்மக்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, அமைதி வழிவிட்டு ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் என்று இயக்கத்தின் பின்புலம் பற்றி ஒரு சிறிய புரிதல் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை 'அவர்கள்' ஆக இருந்தவர்களின் நியாயங்கள், தர்க்கங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கின.

எங்கே மூளைச் சலவை செய்யப் படுகிறோமோ என்ற பதட்டத்தில் சரிசமன் நிலையை நீடிக்கச் செய்ய, துக்ளக் முதல் டைம்ஸ் ஆப் இண்டியா, NDTV என்று வெகுஜன இந்திய ஊடகங்களின் கருத்துகளையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இவைகளின் குரலின் பின் தென்படும் வெறுமை, மேம்போக்குத் தனம் மற்றும் சில சமயங்களில் போலித்தன்மை இவற்றை இலகுவில் உணர முடிகிறது. உதாரணம்: பிரபாகரன் பற்றி செய்தி சொல்கையில் (ஹெட்லைன்ஸ் டுடே என்று நினைக்கிறேன்) 'இங்கயிருந்து போயிருக்கும் தமிழர்கள், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடி பணிந்து தான் நடக்க வேண்டும். மாறாக, குடியுரிமை, தனி ஈழம் என்பதெல்லாம் சிறிலங்கா எப்படி ஒப்புக் கொள்ளும்?' என்ற ரீதியில் அபத்தக் களஞ்சியமாக இருந்தது. இதைத்தானே தமிழரல்லாத இந்தியர்கள் உண்மை என எண்ணுவார்கள்? இப்படித்தானே கருத்தியல் அமைக்கப் படுகிறது. CNN-IBN ஏதோ தமிழர்களுக்கு பரிந்து பேசுவது போல "முல்லைத் தீவில் துன்புறும் மக்களின் நிறைய உறவினர்கள் தமிழ் நாடெங்கும் மிக வருத்தத்தில் உள்ளனர்' என்று இலங்கைத் தமிழர்களுக்கு NRI சான்றிதழ் கொடுத்தது.

உலகெங்கும் ஆங்காங்கே விடுதலை வேண்டி பல இனங்கள் போராட்டத்தில் இருந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். பழைய சோவியத் யூனியன், திபெத், காஷ்மீர், குர்டிஷ், செசென்யா, பாலஸ்தீனம், கொலம்பியாவின் பழங்குடிகள், I.R.A., போஸ்னியா, செர்பியா என்று அண்மைக்கால இரத்த வரலாறுகள் எங்கும் பரவி இருக்கிறது. ஒரு பொது நிலப்பரப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள்/இனங்கள் இருந்தால், பேரினம், சிறிய இனத்தை அடக்கி ஆளுவதும், முடிந்தால் அழித்து விட முயல்வதும் நாம் பார்க்கிறோம். சிங்கள, தமிழ் உதாரணங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

பேரினத்தைச் சார்ந்த அரசாங்கம், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள, இனவாத அரசியலைக் கையிலெடுக்கும் போது துவங்குகிறது இத்தகைய சிற்றின ஒழிப்பு. பிரசார உத்திகளால், பேரினத்தின் மிருக உணர்வுகள் தூண்டப்பட்டு, அவற்றுக்குத் தீனி போடப் படுகிறது.

இந்த இடத்தில் மிக முக்கியமான அம்சம் பொது பிரக்ஞை/மனச்சாட்சி போன்றவை. Collective conscience of the majority. மற்ற போராட்டங்களை உன்னிப்பாக கவனிக்கா விட்டாலும், ஹம்மாஸ் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டங்களைப் பற்றி கருத்து கூறும் அளவில் நிகழ்வுகளை கவனித்தவன் என்ற முறையில் எனக்குத் தோன்றுவது, யூதர்களும் சரி, சிங்களவர்களும் சரி – இந்த விடயத்தில் மனிதாபிமானம், மனசாட்சி இவைகளை முற்றிலும் துறந்து, அரசாங்கத்தின் அராஜக இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மௌன பச்சைக்கொடி காட்டி உதவி இருக்கிறார்கள்.

எப்போது ஒரு அரசே (அதிகாரம் என்று கொள்ளலாம்) தன் குடிகளின் ஒரு சாராரை விரோத மனப்பான்மையில் பார்க்கிறதோ, பேச்சு வார்த்தைகள் இந்தக் கால கட்டத்தில் பயனளிக்கும் என்று எதிர்பார்ப்பது நிராசைதான். யாருக்குமே கத்தியின்றி, இரத்தமின்றி நியாயம் கிடைக்குமெனில், ஏன் அவைகளைக் கையில் எடுக்கப் போகிறார்கள். அதனால், ஈழப் போராட்டம் அமைதி மார்க்கத்திலிருந்து, ஆயுதப் போராட்டமாக வெடித்ததற்கு புலிகளை மட்டும் குறை சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். அந்தக் கால கட்டத்தில் TELO, PLOT, TULF (எனது புரிதல் மிகச் சிறியது. ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்) போன்ற இயக்கங்களும் ஆயுத போராட்டத்தில் தான் குதித்தன. இந்த இயக்கங்களுக்குள் நடைபெற்ற போராட்டங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. இவைகளுக்குள் பெரிய வித்தியாசம் இருந்திருக்க சாத்தியக்கூறுகளுமில்லை. புலிகள் கை தாழ்ந்து, ஒரு பேச்சுக்கு TELO கை ஓங்கி இருந்தால், இன்று புலிகளைச் சாடும் நாம், TELO வைத் திட்டிக் கொண்டிருப்போம்.

இப்படியெல்லாம் நான் சொல்வதால் புலிகள் பக்கம் தவறு இல்லை என்று சொல்ல வரவில்லை. நான் பார்த்த வரையில் அவர்கள் செய்த தவறுகள்:

1. மிதவாதிகள் (அமிர்தலிங்கம் போன்றோர்) அனைவரையும் கொன்றது.

2. மற்ற போராட்ட இயக்கங்களை இராஜ தந்திர முயற்சிகளால் ஒருங்கிணைக்காமல், தீர்த்துக் கட்டியது.

3. காரணங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும் ராஜீவைக் கொலை செய்தது. இவர்கள் செய்த இமாலயத் தவறு இதுதான். தார்மீக அடிப்படையிலும், strategic அடிப்படையிலும் இது மன்னிக்க முடியாத பிழைதான்.

4. பொதுவாகவே, அவ்வப்போது கிடைத்த அமைதி வாய்ப்புகளை பயன்படுத்தாமல், ஆயுதக் குவிப்புக்கு அந்தத் தருணங்களை உபயோகித்துக் கொண்டது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தை என்ற கோணத்தில் புலிகளின் நம்பகத் தன்மை முற்றிலும் இல்லாமல் போனது.

5. அவ்வப்போது கிடைத்த ராணுவ வெற்றிகளால், தன் பலத்தை மிகையாக எண்ணத் துவங்கியது.

6.சிங்களப் பொதுமக்களை தொடர்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளால் அன்னியப் படுத்திக்கொண்டது. இந்தியாவிலும் சென்னை விமான நிலைய வெடிகுண்டு போடுவது வரை வந்தது.

இதெல்லாம் சரி. இவ்வளவு தவறு செய்த இயக்கத்திற்கு எதற்கு கண்ணீர் சிந்த வேண்டும் என்றால் – புலிகளைப் போல, இப்போது இந்தியா மற்றும் அதற்குள் தமிழ் நாடு செய்த தவறுகளை அலசினால்:

1. முதலில் இந்திரா காந்தி ஆட்சியில், அவர் இலங்கையில் இன்னொரு வங்காள தேசத்தை உருவாக்க முயன்றார். இலங்கை இரண்டாப் பிரிந்து, ஈழம் மலர்வது இந்தியாவுக்கு நல்லது. இந்தியா இன்னும் பெரிய நாடாகும் என்ற கோணத்தில். அதனால், தார்மிக, ஆயுதங்கள், பயிற்சி என்று உதவிகள் எல்லா விதங்களிலும் தரப்பட்டது. தமிழகமும் உற்சாகமாகப் பங்கேற்றது.

2. அப்போதே SAARC மாநாடுகளிலும், தொடர்ந்த பேச்சு வார்த்தைகளிலும் இந்தியாவின் மீது சிறிலங்கா அரசு இந்த விடயத்தில் குற்றம் சாட்டத் துவங்கி, காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் இவற்றுடன் சேர்ந்து இந்தியாவை விமர்சிக்கத் துவங்கியது.

3. ராஜீவ் காந்தி ஒரு நம்பிக்கை அடிப்படையில் (எனக்குத் தெரிந்த வரை அவருடைய நோக்கங்கள் நல்லவையாகவே இருந்தன) இரு சாராரையும் அமைதிப் பேச்சுக்குக் கொண்டு வரவைத்து, நிரந்தரத் தீர்வுக்கு முயன்றார். ஆனால், IPKF செய்த குளறுபடிகளாலும், அத்துமீறல்களாலும் அமைதி முற்றிலும் போய், ஈழ மக்கள் மனதில் ஆறாத வடுக்களையும், வஞ்சிக்கப்பட்ட உணர்வையும் தந்தது.

4. அவர் மறைவுக்குப் பின் இவ்வளவு நாட்கள் சும்மா இருந்த இந்திய அரசு இப்போது திடீரென்று புலிகளை முற்றிலும் ஒழிப்பதில் இவ்வளவு தீவிரம் காட்டுவதற்கு, எனக்குப் புரிந்த வரையில் இந்த காரணங்கள் இருக்கலாம்.

a) இந்தியப் பெருங்கடல் இராணுவ கோணத்தில் இப்போது மிக மிக முக்கிய இடமாகி விட்டது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் எல்லாமே இதில் அதிகாரக் கோலோச்ச முயல்கின்றன. இப்போது தமிழர்களைக் கைவிட்டு, சிங்கள அரசுக்கு உதவினால், அவர்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் முற்றிலும் சாய்வதைத் தவிர்க்கலாம்.

b) இந்தியாவுக்கும், காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் பிரிவினைவாதங்களை ராணுவ பலத்துடன் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம். அதற்கான தார்மிக பலம், பிரிவினை கோரும் ஈழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு உதவுதல்.

இதில் தமிழகம் செய்த தவறு இது தான்:

இந்திய அரசு உண்மையில் ஒன்றும் ஈழ மக்கள் பால் அக்கறை கொண்டிருக்க வில்லை. தமிழகம் எப்போதும் தந்த அழுத்தமான எதிர்ப்பால், இந்திய அரசு சிங்களப் பேரின வாதத்தைக் கண்டித்தும், ஈழத்தை ஆதரித்தும் வந்தது. இந்திய அமைதிப் படை வீரர்கள் சென்னை திரும்பிய போது அவர்களை கௌரவிக்க மறுத்த கலைஞரின் முடிவால் இலங்கையில் நடப்பது பற்றிய கண்ணோட்டங்களில் ஒரு பெரிய திருப்பமே ஏற்பட்டது. அந்த அளவு பொறுப்புணர்வுடனும், ராஜதந்திரத்துடனும் கலைஞர் தலைமையில் தமிழகம் ஈழப் பிரச்சனையைக் கையாண்டு வந்தது.

இப்போது என்ன காரணத்தினாலோ அந்த போர்க்குணத்தைக் காண இயலவில்லை. Mute spectator எனப்படும் ஊமைப் பார்வையாளராக மட்டுமே தமிழக அரசு செயல் படுகிறது. மாநில, மத்திய ஆட்சி, பதவி அளிக்கும் சுகங்கள், வசதிகள் என்றுதான் என்னுடைய 'பொதுப் புத்தி' சொல்கிறது.

தமிழக மக்களுக்கும் புலிகளின் பால் இருந்த உணர்வு பூர்வ உறவு, ராஜீவ் கொலையினால் பெருமளவு குறைந்தது. இது தற்போதைய தமிழ் தலைவர்களுக்கு மிக ஏதுவாகப் போய், வெறும் தேர்தல் சமய ஊறுகாய் விடயமாகிப் போனது ஒரு துன்பியல் நிகழ்வு.

ஆக, இன்றைய தமிழக ஆளுமைகள் தங்கள் சுகத்திற்காக கொள்கைகளைத் தளர்த்தியதாலும், இந்தத் தருணத்தை இந்திய மத்திய அரசு சரியாக தனது strategic காரணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாலும், ஈழ மக்களுக்கு ஒரு மாபெரும் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. சிறிலங்க அரசு இந்தத் தருணங்களின் மதிப்பை மிகத் துல்லியமாக எடை போட்டுப் பயன் அடைத்திருப்பது கண்கூடு.

ஒரு இந்தியனாக மிகவும் தார்மீக உயர்வில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, எனது புரிதலின் அடிப்படையில் இந்திய, தமிழக அரசுகளின் துரோகம் தரும் வலி அதிகம். மனித உரிமை மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. ஒரு விசாரணையும் தேவை இல்லை என்று அவசரமாக அறிக்கை தந்து more loyal than the king என்று இந்தியா நிருபித்துக் கொள்ள முயல்வது பார்த்து வரும் வலி.எதிரிகளை மன்னிக்கலாம். மன்னிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ளலாம். துரோகிகளை….ம்ம், அவர்களையும் புரிந்து கொள்ளலாம் – காலம் கடந்தாவது.

என்னைப் பொறுத்த வரையில் பெருங்குற்றவாளிகள் பாக் ஜலசந்திக்கு மேற்கிலும், வடக்கிலும் தான் இருக்கிறார்கள். பதிவின் துவக்கத்தில் உள்ள படத்தைப் பார்த்தாலே, ஈழத்தை உண்ண வரும் தமிழகம் போலத் தான் தோன்றுகிறது. உங்களுக்கு?

பிரபாகரனைப் பொறுத்த வரையில், ஒரு வீரனாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பெரிய போராட்டம் செய்தவராகவே தென்படுகிறார். All is fair in Love & War எனும் அடிப்படையில், தவறு என்றாலும், புலிகளின் பயங்கரவாதத்தின் காரணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. நேற்று பி.பி.சி. தளத்தில், இலங்கையில் இருந்து வெளிவரும் Island செய்தித் தாள், பிரபாகரன் பெரிய வீரன் என்றால், ஏன் ஓட ஒளிய வேண்டும்? சயனைட் குப்பி என்ன ஆயிற்று? என்று எள்ளலாகக் கேட்டதைப் படிக்க நேர்ந்தது.

அந்த அறிவிலிகளுக்குச் சொல்லிக் கொள்வது – அவர் கோழை என்றால், எப்போதோ இலங்கையை விட்டு வெளியில் இருந்து போராட்டம் செய்திருப்பார். இத்தகைய செயல், எல்லாராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டிருக்கும். ஏனென்றால், ஒரு போராட்டம் தொடர, தலைமை மறைவிடத்திலிருந்து செயல் படுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும், குடும்பத்துடன், வாழ்நாள் முழுதும் வனங்களில் செலவழித்து, குண்டடி பட்டு (அதுவும் தலையில் தான், புற முதுகில் அல்ல) இறந்தாக எண்ணப்படும் ஒரு வீரனை, இவ்வளவு கேவலப் படுத்துவதில் இருந்து அவர்களின் மன வக்கிரங்கள் புரிகிறது. ஈழ மக்களின் போராட்டத்துக்கான அடிப்படை சிங்கள பேரின வாதத்தின் முகமும் தெரிகிறது.

இதை நான் எழுதியது, என்னைப் போன்ற மிகக் குறைந்த அளவில் இந்த விடயம் பற்றி புரிதல் உள்ள இந்தியர்களுக்காக. இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காமலே, புலிகளைப் புரிந்து கொள்ளவும், ஈழ மக்களுக்காக கவலைப்படவும் முடியும் என்று புரிய வைப்பதற்காக மட்டுமே.

இதில் தகவல், கருத்துப் பிழைகள் இருந்தால் – ஒரு குழந்தையின் முதல் தவறை மன்னிப்பது போல விட்டு விடுங்கள்.

http://www.nerudal.com/nerudal.7395.html

♥ இது தான் தமிழனின் தேசியக் கொடிடா ;இதை தடை செய்ய நீ யாருடா? ♥

இது தமிழனின் தேசியக் கொடி; இதை தடை செய்வதற்கு எவனுக்கும் உரிமை இல்லை



குண்டு விழுந்தால் Tamil Eelam Song:
http://www.youtube.com/watch?v=JOduuNJbbf8




tiger

tamileelam_national_flag






புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டங்களைப் பார்த்து சிங்களமும் அதன் அருவருடிகளும் சற்று ஆடிப் போய்த்தான் கிடக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு ஒட்டு மொத்தமாக அனைத்து தமிழர்களும் திரண்டு நின்று நடத்துகின்ற போராட்டங்கள் பல நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றது.

வன்னியில் தமிழினத்தின் மீது இன அழிப்பு யுத்தத்தை மகிந்தவின் அரசு தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் அறப் போராட்டங்கள் வெடித்தன. புலம்பெயர் நாடுகளில் என்றைக்கும் இல்லாத அளவிற்கு தமிழர்கள் ஒன்று கூடினார்கள்.

இந்தப் போராட்டங்களை சிங்களமும் அதன் அருவருடிகளும் வேறு மாதிரிச் சித்தரித்தன. தேசியத் தலைவரின் படங்கள் இல்லாது, புலிக் கொடி இல்லாது ஊர்வலங்கள் நடந்ததாலேயே பெருந் தொகையான மக்கள் கூடினார்கள் என்றும், புலிகளுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் எழுதித் தள்ளினார்கள். சர்வதேச சமூகத்திடமும் இத்தகையை கருத்துகளை ஊட்டுவதற்கு இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

ஆனால் தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற அனைத்துப் போராட்டங்களிலும் புலிக் கொடிகளும், தேசியத் தலைவரின் படங்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஊர்வலங்களில் கலந்து கொள்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. புலிக் கொடிகளின் எண்ணிக்கைகளும் அதிகரித்துக் கொண்டு போகின்றன.

தமிழ் மக்களின் அணிவகுப்பை விட புலிக் கொடிகளின் அணிவகுப்பு சிறிலங்கா அரசை பதட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புலிக் கொடிகளை தடை செய்வதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தமிழிர்களின் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களம் போர் தொடுத்திருக்கின்ற இந்த நேரத்தில் தேசியத்தின் அடையாளமாக இருக்கும் புலிக்கொடியை உலகம் முழுவதும் தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பது இயல்பாக நிகழ்கின்றது. தமிழினத்தின் போராட்டத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது என்னும் செய்தியையே இந்தப் புலிக் கொடிகள் சொல்கின்றன.

இதுவே சிங்கள அரசின் பதட்டத்திற்கும் காரணமாக இருக்கின்றது.

பயங்கரவாத இயக்கமாக பட்டியிலிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கொடிகளை பயன்படுத்துவது சட்ட விரோதமானது என்னும் கருத்தை புலம்பெயர் நாடுகளின் ஊடகங்களில் பரப்புவதற்கு சிறிலங்காவின் தூதரகங்கள் கடும் முனைப்பைக் காட்டின. இதன் மூலம் மேற்குலகுக்கு அழுத்தங்களை கொடுத்து புலிக் கொடியை தடை செய்து விடலாம் என சிறிலங்கா அரசு கணக்குப் போட்டது. ஆனால் இது சிறிலங்கா அரசுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது.

புலிக் கொடியை கொண்டு செல்வதும், அதை ஏற்றுவதும் சட்ட விரோதம் அன்று என கனடிய காவல்துறையினர் அறிவித்து விட்டனர். புலிக் கொடி சட்டவிரோதமானதா என்று ஆய்வு செய்வதாகச் சொன்ன கனேடிய காவல்துறை கடைசியில் புலிக் கொடி சட்டவிரோதம் அன்று எனக் கூறி விட்டது. பிரித்தானியக் காவல்துறையும் புலிக்கொடி சட்டவிரோதமானது இல்லை எனச் சொல்லி விட்டது.

பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயரும் சேர்க்கப்பட்ட பின்பு பிரித்தானிய போன்ற நாடுகளில் புலிக் கொடிகளை காவற்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இருந்தும் கூட தமிழர்கள் அதைச் செய்யவில்லை. காவற்துறையோடு மோதற் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என்னும் சமரசக் கொள்கையோடு இருந்து விட்டனர்.

இதை விட காவற்துறையினர் சொல்லாது விட்டாலும் கூட எம்மவர்களும் தாங்களாகவே புலிக்கொடிகளை தவிர்த்துக் கொண்டனர்.

உலக நாடுகள் எம் மீது தடை போட்டால், அதற்கு மேலால் தமக்கு தாமே தடை போடுவதில் எம்மவர்கள் வல்லவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டதாகவும், அதன் அடிப்படையில் புலிக்கொடியும், தேசியத் தலைவரின் படங்களும் தடைசெய்யப்பட்டு விட்டதாகவும் தமக்கு தாமே கற்பனை செய்து கொண்டு அதன்படி நடக்கத் தொடங்கி விட்டார்கள்.

சட்டரீதியாகப் பார்க்கின்ற பொழுது ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒரு அமைப்பை தடை செய்வதற்கு பல படிமுறைகள் உள்ளன. ஒரு அமைப்பினால் தன்னுடைய நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்கின்ற போதுதான் அந்த அமைப்பை தடைசெய்வதற்கு அந்த நாடு முயற்சிகளை மேற்கொள்ளும். குறிப்பிட்ட அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளதாக உத்தியோபூர்வமாக அறிவிக்கும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை. வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு இயக்கத்தை தடை செய்வதற்கும், பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சேர்ப்பதற்கும் சட்டரீதியான வேறுபாடுகள் உள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கமே தடை செய்யப்படாத போது, புலிக் கொடி தடை செய்யப்பட்டதாக சிலர் கருதுவது வெறும் பிரம்மையே தவிர வேறு இல்லை.

இன்றைக்கு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் புலிக் கொடிகளை தாங்கியபடி வீதிகளில் இறங்கியதன் பின்பு, இந்த நாடுகளின் காவற்துறையினர் புலிக் கொடி சட்டவிரோதமானது அன்று எனும் உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். தமிழ் மக்களின் போராட்டமே இந்த உண்மையை வெளிக்கொணர்ந்தது.

விடுதலைப் புலிகளின் கொடிக்கும், தேசியக் கொடியான புலிக் கொடிக்கும் வித்தியாசம் இருப்பது கூட பலருக்கு தெரிவது இல்லை. விடுதலைப் புலிகளின் கொடியில் "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்னும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். தேசியக் கொடியில் அந்த எழுத்துகள் கிடையாது.

ஆயினும் இன்னமும் சில நாடுகளில் புலிக்கொடியை ஊர்வலங்களில் கொண்டு செல்வதை காவற்துறையினர் தடுத்து வருகின்றார்கள். இவர்கள் வெறுமனே புலிக்கொடியை தடை செய்யவில்லை. தமிழர்களின் அடையாளத்தை, தேசியத்தை, பண்பாட்டை தடை செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

புலிக் கொடி என்பது தமிழர்களின் இரத்தத்தோடு கலந்த ஒன்று. விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமேயே புலிக் கொடி தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. தமிழர்களின் வரலாற்றில் புலிக் கொடிக்கு முக்கியமான இடம் இருக்கின்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே சோழன் கரிகாற்பெருவளத்தான் இமயமலை வரை சென்று அங்கு தமிழர்களின் புலிக் கொடியை நாட்டினான். தொடர்ந்தும் தமிழர்களின் புலிக் கொடி பல வெற்றிகளை கண்டு தமிழினத்தின் பெருமைகளில் ஒன்றாக திகழ்ந்தது. கிபி 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் புலிக்கொடி தெற்காசிய முழுவதும் பறந்தது. பின்பு ராஜேந்திர சோழனின் காலத்தில் அதன் பரப்பு மேலும் விரிவடைந்தது.

இன்றைய இந்தியாவையும், ஈழத்தையும் தவிர வேறு பல நாடுகளையும் வென்ற தமிழர்களின் கொடி புலிக்கொடி ஒன்றுதான். தெற்காசிய கடல் முழுவதும் புலிக் கொடியோடு தமிழர்களின் கப்பற்படை வலம் வந்தது.

சங்க இலக்கியங்களும் புலிக் கொடியையும் புலிச் சின்னத்தையும் போற்றிப் புகழ்ந்திருக்கின்றன. இவ்வாறு புலிக் கொடி என்பது தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த ஒன்று. இதை தமிழர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. தமிழர்களின் வீரத்தையும், பண்பாட்டையும், தேசியத்தையும் அடையாளப்படுத்துவது புலிக் கொடி.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பொழுது எத்தனையோ இயக்கங்கள் இருந்தன. இந்த இயக்கங்களை சேர்ந்தவர்களை தங்களின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் தமிழீழ மக்கள் "பொடியங்கள்" என்று அழைத்தனர். தமிழ் நாட்டு மக்கள் அனைத்து இயக்கங்களையும் "புலிகள்" என்றுதான் அழைத்தனர். எந்த இயக்கத்தை சார்ந்திருந்தாலும் தமிழினத்தின் பண்பாட்டையும், தேசியத்தையும் காப்பதற்கு வீரமுடன் போராடுகின்ற அனைவரும் "புலிகள்" என்பதுதான் இதனுடைய அர்த்தம்.

தமிழர்களை சிங்களமும் "கொட்டியா" என்று அழைப்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

புலி, புலிக்கொடி போன்றன எந்த ஒரு அமைப்புக்கோ இயக்கத்திற்கோ மட்டும் சொந்தமானது அன்று. இவைகள் தமிழினத்திற்கு சொந்தமானவை. தமிழர்களின் பண்பாட்டிற்கும், தேசியத்திற்கும், தாயகத்திற்கும் சொந்தமானவை.

எமது பண்பாட்டையும், அடையாளத்தையும் தடை செய்வதற்கு ஐரோப்பிய நாடுகளின் காவற்துறையினருக்கு எவ்வித உரிமையும் இல்லை. அப்படி தடை செய்ய முயற்சிப்பது உண்மையில் சட்ட விரோதமானதும், மனித உரிமை மீறலும் ஆகும். புலிக் கொடியை தடை செய்ய முயற்சிப்பவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு வலுவான காரணங்கள் தமிழர்களுக்கு உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு தமது தாயகத்தை கோருவதற்கு உரிமை உண்டு. அந்த தாயகத்திற்கு ஒரு கொடியை வைத்திருப்பதற்கு உரிமை இருக்கின்றது. தமது வரலாற்றோடும், பண்பாட்டோடும் கலந்திருக்கும் புலிக் கொடியை தேசியக் கொடியாக தேர்ந்தெடுப்பதற்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைகளை தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

தமிழீழ தேசிய கொடிக்கு பிரித்தானியாவில் தடை இல்லை

http://www.nerudal.com/nerudal.7522.html


http://www.youtube.com/watch?v=RG7VtvyOHCU


♥ பிரபாகரன் செய்தது குற்றம் என்றால், அதை விட ஆயிரம் மடங்கு குற்றங்களை செய்தவன் , ராஜபக்ச! ♥

'போர் முடிந்தது, போர் வாழ்க!'--இந்திரா பார்த்தசாரதி


ஈழ விடுதலைப் போரின் அடையாளங்களாக எஞ்சி நிற்பன போராளிகளின் அஸ்தி, அப்பாவிமக்களின் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் குதறிப் போன பட்டினி உடல்கள்.

இவ்'வெற்றியை' க் கொழும்புவில் பிரும்மாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் சிங்கள வீரச் சிங்கங்கள். இலங்கையில் விபீஷணனின் வம்ஸம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளவர்களும் பிரபாகரனின் வீழ்ச்சியைக் கொண்டாடியிருக்கக் கூடும்.
இனி, பிராபகரன் செய்தது சரியா, தப்பா என்று ஆய்வதில் எந்தப் பயனும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான், மனிதாபிமானத்திலும், மக்களின் அடிப்படை உரிமைகளிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்ட உலகளாவிய மக்களை எதிர் நோக்கியுள்ள பிரச்சினை.

கொழும்புவில் பௌத்த பிக்குகளின் ஆசிகளுடன் சிங்களர்கள் இந்த 'மகத்தான வெற்றியை'க் கொண்டாடிய விதத்தை தொலைக் காட்சியில் பார்த்தபோது, நாம் இருண்ட மத்தியக் காலகட்டத்துக்குப் ( Dark medieval ages) போய்விட்டோமோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஆனால் இக்காட்சி ஒன்றை மட்டும் உறுதியாக உணர்த்தியது: சிங்களர்களும் தமிழர்களும் இலங்கையில் இனி எக்காலத்திலும் சம உரிமைகளுடன், ஒட்டு உறவு வைத்துக் கொள்ள முடியாது என்பதுதான். இதற்கு யார் காரணம் என்பது அவ்வளவு முக்கியமல்ல. நிதர்சன உண்மையைக் கண்முன் நிறுத்தி ,இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமும், பிரச்சினைக்குத் தீர்வும் காண முயல்வதுதான் உலகத் தமிழர்களுடைய கடமை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அநீதி இழைக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் உலகம் முழுவதும் பரவி, தங்கள் விடுதலைப் போராட்டத்தை அராபத் தலைமையில் நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்றைய அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் அரசியல், வியாபார ரீதியாக என்ன உறவு கொண்டிருந்தாலும், பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல், 'புலம் பெயர்ந்த பாலஸ்தீனிய சுதந்திர அரசாங்கத்துக்கு' அங்கீகாரம் அளித்தன. இந்தியாவும் இவ்வரசுக்கு அங்கீகாரம் அளித்ததினால், சுதந்திர பாலஸ்தீனிய தூதுவரகம் தில்லியில் இருந்தது.

ஆனால், அதே இந்தியா, இப்பொழுது, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக, சிங்களர்களுடைய, சிங்களர்களுக்காக, சிங்களர்களால் நடத்தப்படும் அரசாங்கம் கண்மூடித்தனமான கொலை வெறியுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவ்வளவு நடந்த பிறகு, ஒரு சமாதான நடவடிக்கை போல், இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் பேச தன் தூதுவர்களை அனுப்பி வைக்கிறது! ராஜபக்சவும் இனி இலங்கைத் தமிழர்களுக்குப் பொற்காலம் போல், வடக்கு, கிழக்கு ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப் போவதாக 'பாவ்லா'காட்டுகிறார். இச்' சுமுகச்' செய்தியை, ஏற்கனவே அரசியல் பேரத்தில் மனம்

நொந்திருக்கும் தமிழக முதல்வரிடம் சொல்ல வருகிறார் இந்திய அரசாங்கத் தூதுவர்! யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை.

வன்னியில் போர் முடிந்துவிட்டது. ஆனால் இனிமேல்தான் ஈழப்போர் உலக அரங்கில் தொடங்குகிறது. மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறை இப்பொழுது போர்க்கோலம் பூண்டிருப்பது நம்பிக்கை தரும் செய்தி. இனி இது இலங்கைத் தமிழர்களை மட்டும் சார்ந்த விவகாரம் இல்லை. உலகத் தமிழினத்தைச் சார்ந்த விவகாரம்.

ஆனால், இது வன்முறையைத் தூண்டும் கொரில்லாப் போராக மட்டும் இருந்தால், சர்வ தேச அரங்கில், நியாயத்தின் பக்கம் நிற்க விரும்பும் நேர்மையான மற்றைய இன மக்களின் ஆதரவைப் பெறுவதென்பது சிரமமான காரியம். இலங்கையில் இனித் தமிழின மக்கள் சிங்களர்களுடன் சரிநிகர் சமானமாக வாழ இயலாது என்பதைப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழின அறிவுஜீவிகளும், அவர்களுடன் தோள் நின்று மற்றைய நாட்டுத் தமிழர்களும் உலக நீதி மன்றங்களில் சித்தாந்தப் போர் நிகழ்த்தியாக வேண்டும். அயல் நாட்டுப் பத்திரிகைகளில், உலகச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற அறிஞர்களால் இப்பிரச்சினை பற்றி எழுதப்படும் நடுநிலை பிறழாத அறிவுசார் கட்டுரைகள் வருவதற்கான ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும். பிரபாகரன் மீது சுமத்தப் படும் வன்முறைக் குற்றங்களுக்கு ஆயிரம் மடங்கு அதிகமான அளவுக்கு, ஹிட்லர் யூதப் பிரச்சினைக்குக் கண்டது போல், தமிழ்ப்பிரச்சினைக்கு 'இறுதித் தீர்வு' காண, இனப் படுகொலை செய்திருக்கிறார் ராஜபக்ச. இந்தப் படுகொலைக்குத் துணை போயிருக்கிறது, மகாத்மா காந்தி பிறந்த பாரதத்திருநாடு! இச்செய்திகள் உலக அரங்கில் சரியான முறையில் அம்பலமாக வேண்டும்.

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறை, இந்திய அரசியல் கட்சிகள் இப்பிரச்சினையை அவைகளுடைய சுய நலத்துக்காகத்தாம் இது வரைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனவே தவிர, அவைகளுக்கு ஈழத்தமிழர் பற்றிய உண்மையான அக்கறை எதுவும் கிடையாது என்பதை உணர வேண்டும். இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்தப் போலி நாடகம் வெவ்வேறு வடிவமைப்பில் அரங்கேறி வருகின்றது.

ஈழத் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினருக்கு வெவ்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் ஏற்பட்டிருக்கும் தொடர்புகளின் காரணமாக, அளப்பரும் ஆற்றல்கள்

கைக்கூடியிருக்கும். அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இதுதான்.

நூற்றாண்டு நூற்றாண்டுக் காலமாகப் புலம் பெயர்ந்திருந்த ஓரினம், இரண்டாம் உலகப் போருக்குப் பின் தங்களுக்கென்று ஒரு தாய்த் திரு நாட்டைப் பெற்றதும், அதை எப்படி உலக அரங்கில் முன்னிலைப் படுத்தியிருக்கிறது என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3617:2009-06-03-03-33-51&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

♥ தமிழா உனக்கு மானம் இல்லாவிட்டால் இதை பார்! ♥

தமிழா உனக்கு மானம் இல்லாவிட்டால் இதை பார்!

photo1313.jpg

எமது மக்கள் படும் இன்னல்களையும,; போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளையும் இருட்டடிப்புச் செய்தும், எமக்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், களியாட்ட நிகழ்வுகளை வழங்கி மக்களை திசைதிருப்பியும் வருகின்ற ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

எமது மக்களின் அவலங்களை அம்பலப்படுத்தக் கூடிய, தமிழீழ மக்களிற்கு ஆதரவு திரட்டக் கூடிய வலுவும் வசதியும் இருந்தும் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றன இதற்கு மாறான வகையிலேயே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன

என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஈழத்தில் நடக்கின்ற அவலங்களை மட்டும் அன்றி, தமிழ்நாட்டில் எமக்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுகின்ற செய்திகளைக் கூட இந்தத் தொலைக்காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வருகின்றன.

அத்தோடு சிங்கள இனவாதத்தோடு கைகோர்த்து நின்று இன அழிப்பில் நேரடியாகப் பங்கெடுத்து வரும் காங்கிரஸ் அரசை நியாயப்படுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழின விரோதிகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று சித்தரிக்கும் கைங்கர்யத்தை எந்த வகையிலும் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.

எமக்காக வீதியில் இறங்கிப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தியும், அவர்களின் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்தும், சிங்கள இனவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கியும் வருகின்ற இந்த தொலைக்காட்சிகளை ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் ஆதரித்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இந்த தொலைக்காட்சிகளை நாம் புறக்கணிப்போம்

 

http://www.nerudal.com/images/2009/06/suntv.jpg


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3622:2009-06-03-05-41-39&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56


♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 4-தினமணி தொடர் ♥


கட்டுரைகள்
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 4. இலங்கை கொண்ட சோழன்


வட இந்தியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அம்மண்ணில் மனித சமூகம் வாழ்ந்துள்ளது. அவர்கள் இயல்பாகப் படிப்படியாக நாகரிகமடைந்துள்ளனர். அவர்கள் (பூர்வகுடிகள்) திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இத் திராவிடர்களின் காலமும், தென்னிந்தியத் தமிழர்களின் காலமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சான்றுகளின்படி இரு பகுதிகளினது சமூக நாகரிகமும் ஒத்தே உள்ளன. அப்பகுதி வாழ் மக்கள் குளங்களின் மூலம் விவசாயம் செய்யும்-குடியிருப்பு விவசாயம் மேற்கொண்ட நாகரிகச் சமூகமாகும்.

ஆக, இலங்கைக்கு ஆரியர்கள் (விஜயன்) வருவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் விவசாயத்தை அறிந்து இருந்தனர் என்பது தெளிவாகும். ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இந்தோ ஆரியர்கள்தான் இலங்கைத் தீவிற்கு வந்து விவசாயத்தை அறிமுகம் செய்தார்கள் என்று கூறுகின்றனர். மேற்காணும் சான்றுகளின் மூலம் அந்த வாதம் வரலாற்றைத் திரித்துக் கூறும் மிகப்பெரிய பொய் என்பது தெளிவாகும்.

இதைப்பற்றி இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி இயக்குநர் ஒருவர், "ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட எல்லாள மன்னன், கடவுளாக மதிக்கப்பட்டு வணங்கப்படுகிறான் என்றால், அவனது செல்வாக்கு அசாத்தியமானது' என்கிறார்.

மகாவம்சம் குறிப்பிடும் தமிழ் மன்னனின் புகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் மன்னனின் செல்வாக்கு, வீரம் ஆகியவற்றை மறைத்து, துட்டகாமினியின் செயலைப் புகழ்ந்து புத்தமத கலாசாரத்தின் சிறப்பம்சமாக, அதன் மேன்மையை வெளிப்படுத்துவதாக இந்நிகழ்ச்சிக்கும் புதிய விளக்கம் அளிக்கின்றனர்.
சிங்களவரின் வரலாறாகக் கருதப்படும் மகாவம்சம், எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கும் துட்டகாமினி என்ற சிங்கள
மன்னனுக்கும் நடந்த போரைக் குறிப்பிடுகிறது. * (1) இந்தப் போர் கி.மு. 161-இல் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மன்னர்கள் சார்பில் படைவீரர்கள் மோதுவது உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும். ஆகவே, இதைத் தவிர்க்கும் பொருட்டு இரு மன்னர்களும் யானை மீது அமர்ந்து மோதினர். எல்லாளன் யானை துட்டகாமினியின் யானையான கந்துலனைவிட உருவத்தில் சிறியது. உயரத்தில் பெரிய யானையான கந்துலன் மீது அமர்ந்து துட்டகாமினி வீசிய வேலால் தாக்குண்டு எல்லாளன் இறந்தான். எல்லாளன் எதிரி என்றும் கருதாமல், அவனது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு, அவனை அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றும் எழுப்புகிறான் துட்டகாமினி.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் மேலும் அதைப் பற்றிக் குறிப்பிடுவது என்னவென்றால், ""இளவரசர்கள் அனைவரும் அந்த நினைவுச் சின்னத்திற்குச் சென்று இன்றும் கூட அஞ்சலி செலுத்துகிறார்கள்'' என்பதாகும். இதன் மூலம் தெரிவது இரு சமூகக் குழுக்களும் ஆரம்ப நாட்களிலிருந்தே பகைமை கொண்ட சமூக குழுக்களா என்றால், இல்லை.

இரு மன்னர்கள் தங்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட யுத்தங்கள்தான் அவை. இரண்டு இனங்களிலும் அக்கம் பக்கமிருந்து சட்டம், சாதிமுறை, சமூக அமைப்பு முதலியவற்றில் ஒரே சீரான நடைமுறைதான் தொடர்ந்து பேணப்பட்டு வந்திருக்கிறது என்பது புலனாகும்.


அடுத்து, வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொண்டால் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் புலிகேசியுடன் போர் புரிந்தபோது இலங்கை அரசன் மானவர்மன் படைத் தலைவனாகச் சென்றதாக சரித்திரக் குறிப்பு ஒன்று கூறுகிறது.

இதற்குப் பிரதியுபகாரமாக நரசிம்ம பல்லவன் இலங்கை மன்னனான மானவர்மனுக்கு உதவியாக பெரும் படையொன்றை அனுப்பி, அவன் இழந்த நாட்டை மீட்டுத் தந்ததாக காசுக்குடிப் பட்டயம் கூறுகிறது.
சோழ அரசன் முதலாம் பராந்தகனுக்கும் பாண்டிய மன்னன் இராசசிம்மனுக்கும் நடந்த போரில் பாண்டியன் தோற்கிறான். அவன் தனது அரச முடியையும், அரசியின் முடியையும், இந்திர ஹாரத்தையும் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனிடம் அளித்துவிட்டு சேரநாடு ஓடுகிறான்.

பாண்டியனின் குலச்சொத்தை கைப்பற்றச் சோழ அரசர்கள் பலமுறை படையெடுப்பை நடத்துகிறார்கள். பராந்தக சோழனின் மகன் சுந்தரசோழன் ஆட்சியிலும், அவனது மகன் இராஜராஜசோழன் ஆட்சியிலும் கூட படையெடுப்பு நிகழ்கிறது. முடிவில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் சிங்களவரைக் கொன்றதோடு "முன்னவர் பக்கல் தென்னவன் வைத்த சுந்திரமுடியும், இந்திரஹாரமும் அங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்' திரும்பப் பெற்றதாக ஒரு கல்வெட்டு மூலம் பெருமை கொள்கிறான்.

சோழர்கள் இலங்கை கொண்ட சோழராக மாறி அந்நாட்டை ஒரே மண்டலமாக்கி அநுராதபுரத்தை தலைநகராக மாற்றி ஆட்சி புரிகின்றனர்.
மேலும் இலங்கையின் வரலாற்றுச் சான்றுகளை வைத்து மதிப்பீடு செய்த அறிஞர்,
"நேரிடையாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகம் உடையவர்களாகவும் குடியிருப்புப் பாசன விவசாயத்தை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர்.

இச்சமூக மக்கள் வட இந்திய மொழி பேசும் மக்களுக்கு முந்தைய காலகட்டத்து மக்கள் சமூகமாகும்' (டாக்டர் சுசந்தா குணதிலகா~"சாட்டர்டே ரிவ்யூ'~30, டிசம்பர் 1983) என்கிறார்.
இதன் மூலம் சிங்கள அறிஞர்கள் கூறும் ஆரியர்கள் குளநீர்ப் பாசன விவசாயத்தை இலங்கைத் தீவில் அறிமுகம் செய்தனர் என்பது தவறான கூற்றாகும் என்பது தெளிவு.

நாளை: சிங்கள மொழி உருவானது எப்படி?

* (1) ‘Bikku Rahula Who viewed Dutugamunus’ war as a ‘‘Great crusade to liberate Buddhism from foreign rule. His cry was not for Kingdom, but for Buddhism’’. The entire Sinhalese race was united under the banner of the young Gamini. This was the begining of nationalism among the Sinhalese. It was a new race with healthy young blood organized under the new order of Buddhism. A kind of religio-nationalism which almost amounted to fanaticism roused the whole Sinhalese people. A non-Buddhist was not regarded as a human (ibid).

-Prop.Ludowyk. E.F.C
‘‘The Story of Ceylon’’’’

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=68842&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81:+4.+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 3 -தினமணி தொடர் ♥




ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-3 : இலங்கையின் பூர்வ குடிகள் யார்?

பாவை சந்திரன்




மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும்.

மகாவம்சம், சிங்களவர்களின் பெருமை பேசவென்று எழுதப்பட்ட நூலானதால் குவேனியையும் அவளது சுற்றத்தாரையும் அமானுஷ்ய சக்தி கொண்ட, மனிதர்களைப் பிடித்துத் தின்னும் நாகரிகமற்றவர்களாகக் காட்டுகிறார்கள். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர். அழியாத குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி ஒப்பு நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும்.

புத்த மதம் வந்தபோது இருந்த மன்னன் யார்?

மகாவம்சக் கூற்றுப்படி இலங்கைக்குப் புத்த மதம் வந்தபோது அரசனாக இருந்தவன் யார் என்பது ஒரு பெரிய சந்தேகம். புத்த மதம் இலங்கைத் தீவுக்குள் நுழைந்தபோது இலங்கையை ஆண்ட மன்னன் மூத்தசிவனின் (மூத்த+சிவம்) மகன் தேவனாம்பிய தீசன். இவன்தான் மகிந்ததேரரை (அசோகனின் மகன் மகேந்திரன்-மகாவம்ச கூற்றுப்படி) வரவேற்றது. இவன் ஒரு தமிழ் மன்னன். இங்கு கூறப்படும் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் வேறு; அசோக மன்னனின் அடைமொழியைத் தன் பெயராக வைத்துக்கொண்ட தேவனாம்பிரிய தீசன் வேறு!

தேவனாம்பிரிய~என்றால் தேவனுக்குப் பிரியமான என்பதைக் குறிக்கும். இங்கு தேவன் என்பது புத்தரைக் குறிக்கிறது. தீசன் என்பது மோகாலி என்பவருடைய மகன் ஆகிறது. இந்த மோகாலி, அசோக மன்னனின் காலத்தில் இருந்த புத்தமகாசபையின் தலைவர் ஆவார்.

இக்குறிப்புகள் மூலம் சிங்கள வரலாற்று அறிஞர்கள் அசோகனின் மகனான மகிந்ததேரரை வரவேற்றது தமிழ் மன்னன் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் என்பதைத் திரித்து புத்த மகாசபையின் தலைவர் மோகாலியின் மகனான தேவனாம்பிரியதீசன் என்று உண்மைக்கு மாறாக வரலாற்றை உலகிற்குக் கூறுகின்றனர்.

இந்த திரித்தல் வேலை ஏன் நடைபெற வேண்டும்? விடை சுலபமானது. இந்த திரித்தல் மூலம் மகிந்ததேரரை வரவேற்றது தேவனாம்பிரியதீசன் என்று குறிப்பிட்டுவிட்டால் தமிழர்களுக்கு முன்பாகவே புத்தர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று வலியுறுத்த முடியும். அதற்காகவே தேவனாம்பியதீசன்~தேவனாம்பிரிய தீசன் ஆகிய இருபெயர்களிலும் இருக்கும் ஓர் எழுத்து (ரி) வித்தியாசத்தை மூடி மறைத்து தேவனாம்பிய தீசனுக்குப் பதில் தேவனாம்பிரிய தீசனை நுழைக்கிறார்கள். இப்படி நுழைப்பதன் மூலம் புத்தமத வாதத்திற்கு மேலும் வலுவிருக்கும் என்று நம்புகின்றனர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.

மேற்கண்ட தகவல்களுக்கு மகாவம்சக் கூற்றே மகா முரணாக இருக்கிறது. அது~

""இரண்டு சாம்ராஜ்யாதிபதிகளும், அதாவது தேவனாம்பிரியதீசனும் தம்மசோகாவும் ஏற்கெனவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை. இருப்பினும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நட்புக் கொண்டிருந்தார்கள்'' (மகாவம்சம் 11:19) என்பதாகும்.

இதிலிருந்து தேவனாம்பிரிய தீசனும் தம்மசோகாவும் (தர்ம அசோகர்) வேறுவேறு மன்னர்கள் என்பதும் அவர்கள் நட்புரிமையுடன் பழகி வந்தார்கள் எனவும் தெரிகிறது. சிங்கள அறிஞர்களின் கூற்றுப்படி மோகாலியின் மகன்தான் அசோகனின் மகனை வரவேற்றது என்பது உண்மையானால், அசோக மன்னனை அவன் சந்திக்காது இருந்திருக்க முடியுமா என்பது வரலாற்று அறிஞர்களின் கேள்வியாக இருக்கிறது.

சிங்கள வரலாற்று அறிஞர்கள் இத்துடன் நின்று விடவில்லை. சிங்கள இனத்தை ஆரிய இனமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேலும் பல திரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். தென்னிந்தியாவில் மதுரையையும் அதை ஆண்ட பாண்டியர்களையும் பற்றிய குறிப்புகளை (மகாவம்சத்தில் வரும்போது) யமுனை நதிக்கரையில் வாழ்ந்த பாண்டுவுடனும், முத்ராவுடனும் முடிச்சுப்போட்டு திரிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல; மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இலங்கைக்கு, இந்தியாவுடனான தெற்கத்திய தொடர்புகளைப் பற்றி ஏனைய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும், சிங்களவர்கள் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை, என்றும் பொருளாகிறது.

இப்படி யமுனை நதிக்கரைப் பாண்டுவோடும், முத்ராவோடும் விஜயனைத் தொடர்புப்படுத்தித் திரித்துக் கூறுவதன் மூலம் மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமதேரரைக் கேலிக்குரியவராக்குகிறார்கள் என்பதே பொருள்.

வேதகாலத்திற்குப் பின் குருவம்சம் மிகச் சிறப்பான ஒரு பழங்குடி வம்சம் என்று இந்திய வரலாறு (பக். 46-இல்) எழுதிய சின்ஹா~பானர்ஜி தெரிவிக்கிறார்கள். மிகச் சிறப்பான வம்சம் என்று கருதப்படும் குருவம்சத்துடன் விஜயன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் கீழான நாகரிகம் கொண்ட யமுனை நதிக்கரைப் பாண்டுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக மூல நூலான மகாவம்சம் கூறியிருக்க முடியுமா? (1) இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

மேலைநாட்டு அறிஞர் கால்டுவெல் கருத்துப்படி முதல்சங்க, இடைச்சங்க காலத்தில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பின் விளைவாக லெமூரியாக் கண்டத்திலிருந்து பிரிந்த நிலத்திட்டுத்தான் இலங்கை ஆகும். இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள புராதனத் தொடர்பை அறிய முடியும். மேலும், சின்ஹா~பானர்ஜி தமது இந்திய வரலாற்றில் குறிப்பிடுகையில் வரலாற்றுக்கு முந்தைய திராவிடர்கள் கடற்பயணம் மேற்கொண்டு அதன் மூலம் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள்; சிறந்த பயன் அடைந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதுபோலவே, ஆங்கில வரலாற்று ஆசிரியர் டியோலி கிழக்கத்திய மற்றும் தூரக்கிழக்கு நாடுகளோடு மிக நீண்ட காலமாகவே வணிகத் தொடர்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், வட இந்திய ஆரியர்கள் கடல் போக்குவரத்துப் பற்றிய தெளிவான அறிவினை கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரம் இல்லை. கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, சமீபத்தில் அங்கு நடந்த அகழ்வாய்வுச் சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது. அச்சான்றுகளை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்.

1. சிர்கா (Circa-Wintle and Oakley-1972)

குகை ஓவியம்

2. அநுராதபுரத்தைச் சேர்ந்த ""கிடுக்கி'' பகுதி அகழ்வாய்வுகள் ((Gadige-S. Deraniyagala-1972; S.Deraniyagala-1971))

3. பொன்பரப்பி (Ponbarippu) குருகல் கின்னா (Gurugal hinna) கதிரவெளி (Katiraveli) போடியகம்பளை (Podiya Gampala).

இப்பகுதியில் கிடைத்த சான்றுகள் தென்னிந்தியத் தொடர்போடு இலங்கைக்கிருக்கும் நெருக்கத்தை சுட்டிக் காட்டுகின்றன. (2)

முதல் பிரிவான சிர்கா மற்றும் குகை ஓவியச் சான்றுகளின்படி அவை சுமார் கி.மு. 4500-க்கு முந்தைய காலத்தைச் சார்ந்தன என அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இவைகளின் காலத்தை வரையறுக்கும்போது இச்சான்றுகள் ஸ்ட்ராட்டம்-1 ((Stratum-1) காலம் என மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் வரையறுக்கின்றனர்.

மனித சமூகம் காட்டுமிராண்டிக் கால நிலையிலிருந்து வேட்டையாடுவதை விட்டுவிட்டு, நாகரிகமடைந்து, ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயம் செய்யும் தொழிலில் இறங்கியது வரையிலான வளர்ச்சிக் காலத்தை, மானுடவியலாளர் ""ஸ்ட்ராட்டம்'' என்று குறிப்பிட்டு, அதன் வளர்நிலையைக் கணிக்கின்றனர். அதன்படி ""சிர்கா'' பகுதியின் காலம் முதல் பிரிவைச் சார்ந்ததாகிறது. மனித சமூகம் கல் ஆயுதத்தைப் பயன்படுத்திய காலம். இந்தப் பகுதியில் கல் ஆயுதங்கள் மற்றும் அக்கால மனித சமூகம் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தன.

அதேபோன்று இரண்டாவது பிரிவான அநுராதபுரத்தின் கிடுக்கிப் பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த ஆயுதங்கள், நாணயங்கள், ஓடுகள் ஆகிய சான்றுகளின் மூலம் இவைகளின் காலம் ஸ்ட்ராட்டம் ஐஐ-ன் காலம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் கிடைத்த நாணயங்களை மதிப்பீடு செய்த அறிஞர் மறைதிரு டாக்டர் எஸ். தனிநாயகம், ""குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பாவின் காலத்தை ஒட்டிய சிந்துவெளி நாகரிக வரலாற்றைச் சேர்ந்தவை'' என்கின்றார். அவை ஆரியருக்கு முந்தைய திராவிடர் நாகரிகத்தை ஒட்டியதாகும் எனவும் வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

மூன்றாவது பிரிவைச் சார்ந்த பொன்பரப்பி, குருகல்கின்னா, கதிரவெளி, போடிய கம்பளை, யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளின் அகழ்வாய்வுகளில் இரும்பாலான ஆயுதங்களும், அக் காலத்தைச் சேர்ந்த பொருட்களும் கிடைத்தன. இவை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆதித்தநல்லூரில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை ஒத்தும் தமிழ் எழுத்துக்களுடன் காணப்படுகின்றன (படம் காண்க). ஆகையால் அப்பகுதி மக்கள் இரும்புக் காலத்தைச் ((Megalithic Age) சேர்ந்தவர்கள் என கணிக்கப்படுகின்றனர். இந்தச் சமூக மக்கள் இரும்பைப் பயன்படுத்த தெரிந்துகொண்டு, அலைந்து திரியும் நாடோடிக் கூட்டமாக இல்லாது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்ந்தனர். விவசாயத்தை அறிந்து இருந்தனர். மூன்றாவது பிரிவைச் சார்ந்த அகழ்வாய்வுச் சான்றுகளின்படி இரும்பாயுதக் காலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இக்காலமே ஸ்ட்ராட்டம்-IIIA ஆகும். இந்த ஆய்வுகளின்படி கிடைத்த தகவல்களிலிருந்து பார்க்கையில் இவை தென்னிந்திய இரும்புக் காலத்தை (கி.மு. 800-100) ஒத்து உள்ளன. மேலும், இப்பகுதி வாழ் மக்கள், குடியிருப்பு விவசாயத்தை மேற்கொண்டிருந்தனர் என வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

இப்பகுதி மக்களின் காலமான ஸ்ட்ராட்டம்-ஐஐஐஅக்குப் பின்னரே வட இந்திய மெüரிய சாம்ராஜ்யம் வருகிறது என வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். ஆக மேற்கண்ட அகழ்வாய்வுகளின் மூலம் இலங்கை வாழ் பூர்வகுடிகள் அம்மண்ணில் குளங்களின் மூலம் பாசனம் செய்து விவசாயத்தை மேற்கொண்டதாக அறிய முடிகிறது. உதாரணமாக அநுராதபுரத்தில் கிடைத்த சான்றின்படி அப்பகுதியில் இருக்கும் குளமானது ஐம்பத்து நான்கு மைல் நீளமான கால்வாயுடன் இணைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சான்றுகளின்படி நான்கு விஷயங்கள் தெளிவாக உணரப்படுகின்றன. அவை:

(1)‘‘The Kurus were one of the most prominent tribes of the later Vedic period, but it is curious that Pandus are mentioned for the first time in Buddhist literature, when they are described as a hill tribe’’

-Sinha & Banerjee in History of India (1952) page 46.

‘‘A.L.Basham was inclined to think that this claim of the arrival of Vijaya and his followers was only a personification of the first Aryan contact. However, G.S.Mendis had rejected their Vijayan episode as a mere legend. There is no authentic record about the arrival of Vijaya except scanty references in the Chronicles especially the Mahavamsa...

The Mahavamsa is a puranic work heavily laden with legends and politico-religious fervour...’’

-Poson : It has historical significance too ..

By A.Thevarajan.

‘‘However, despite the weight of popular and semi scholarly acceptance of the Vijaya story itself is purely legendary, a myth of origin synthesized from various early Indian legends and to be understood in terms of the histographical objectives of the chroniclers rather than as actual historical records. The same historians however premise of the Vijaya story that civilization in Srilanka had its origins in the settlement and expansion of migrant colonists from the Indian mainland.’’

‘‘Ethnicity and Social Change’’

Dr. SenakeBandaranayake.

(2) (i) ‘‘To many the history of our country begins with the legend of Vijaya and Kuveni, itself a parallel, according to John Still, to the tale of Ulysses and Circe. Some declare there can be no Tamil homelands since the ruins of Buddhist Shrines have been unearthed in areas considered to be Tamil and because some Tamil places have Sinhala origins. But the burial mounds of ‘‘Anaikoddai’’ and the megalithic artifacts of ‘‘Ponbarippu’’ and other places in the North-western sector may well tell a different story.

It is reasonable to assume that some of the earliest settlers in the North Ceylon came from the South-Eastern part of the adjoining subcontinent.’’

- by S.K.Gnanamuttu.

‘‘Noses & Dravidian Kissingers’’, Saturday Review, 4th Aug, 1984

(ii) The physical basis for early Srilanka culture was in the village tanks associated with this South Indian megalithic culture.

- Dr.Susantha Gunathilake

‘‘Formation of Srilankan Culture’’

(iii) ‘‘Artifacts and remains of stone tool using man have been found in several sites of Srilanka with the site at Bellan-Bandi Pelassa being dated by thermoluminiscent testing of associated artifacts as circa 4500 BC (Wintle and Oakley 1972). Excavations at a carefully stratified basis at the Gedige area of Anurathapura (S.Deraniyagala 1972) has also brought out artifacts associated with this culture was wide spread in the country. But it is not with stone age man or his cultural products to whom one could possibly assign cave paintings (S.Deraniyagala 1971-page 38) that we are interested in, it is with the culture associated with settled agriculture.

However there is considerable evidence both direct and indirect that settled irrigated agriculture arose before independent of the coming of the North Indian language speakers.’’

- Dr.Susantha Gunathilake

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=69281&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-3+:+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 2 -தினமணி தொடர் ♥














இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது. இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது.

இத்தீவில் தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில் இருவேறு கலாசார மரபுகொண்ட இனங்களாகச் சிங்கள இனமும், தமிழ் இனமும் இருக்கிறது. பெரும்பான்மை இனம் என்கிற காரணத்தினால் நாட்டை ஆளும் பொறுப்பை சிங்களவர் எடுத்துக் கொண்டனர்.

பெரும்பான்மை இனமாகக் கருதப்படுகிற சிங்களவரின் வரலாறு என்பது மகாவம்சம் என்னும் புத்த காப்பியத்தை அடிப்படையாக வைத்துப் பேசப்பட்டும், எழுதப்பட்டும் இன்றுவரை இருந்து வருகிறது.

இந்த மகாவம்சம், செவிவழிவந்த நாட்டுப்புறப் பாடல்கள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றால் ஒழுங்குபடுத்தப்பட்டது. சிங்களவர்களின் பெருமையை மிகவும் உயர்த்திக்காட்டவென்றே எழுதப்பட்ட நூல் இது. இந்த மகாவம்சத்தை எழுதியவர் மகாநாமதேரர் என்னும் புத்தபிக்கு ஆவார். ஐந்தாம் நூற்றாண்டில் சிங்கள அரசனாக வாழ்ந்த தாதுசேனின் (கி.பி.463-479) மாமன் இவர். பாலி மொழியில், தமிழின் சில சொற்களைத் துணைக்கொண்டு கவிதை வடிவில் எழுதியுள்ளார். மகாநாமதேரரின் காலத்தில் வாழ்ந்த, அநுராதபுரத்திலிருந்த புத்தமடத்தின் உயர்குருவான உத்தரபிரவீணா இக்காப்பியம் சிறப்புற அமைய உரிய ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.

மகாநாமா தொடங்கி வைத்த இந்த மகாவம்சத்தில் சிங்கள அரசர்களின் பெருமைகளை 13, 14, 18-ஆம் நூற்றாண்டுகளில் அவ்வப்போது வாழ்ந்த கவிஞர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சிங்கள மன்னர்களின் வரலாறு இணைக்கப்பட்ட போதிலும் மூலநூலுக்கு ஏற்ற மொழி லாகவத்துடன் பிசிறு இல்லாது ஒரே நபரால் எழுதப் பட்டதற்கான தோற்றத்தை இந்நூல் பெறுகிறது.

சிங்களவர் வரலாறு என மகாவம்சம் கூறுவது என்ன?

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் ஓர் அரசன் இருந்தான். இவன் கலிங்க நாட்டு அரசனின் மகளை மணந்தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு உரிய வயது வந்ததும் பூப்பெய்தினாள்.

இளவரசி பருவமுற்றதும் சோதிடர்கள் கொண்டு அந்நாளைக் கணக்கிட்டு அவளுக்கு எந்த நாட்டு இளவரசன் கணவனாக அமைவான்; கல்வி, கேள்விகளில், வீரத்தில் அவனது தேர்ச்சி என்னவாக இருக்கும் என்று கணிக்க முற்பட்டனர். யாருக்கும் ஒழுங்கான விடை கிடைக்கவில்லை. எல்லாருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்- "இளவரசி மிகுந்த காமவெறி கொண்டவளாயிருப்பாள். மிருகராஜனைக் கூடுவாள்' என்று தலைமைச் சோதிடர் கூறினார். இது ஒழுக்கக் குறைவானதாக, அவமானமடையத்தக்கதாக இருந்தபோதிலும் மன்னனிடம் உண்மையைச் சொல்வதே முறை என்று அவன்முன் தங்களது கணிப்பை எடுத்து வைத்தார்கள்.

"இளவரசி காம இச்சை மிகுந்து சிங்கத்துடன் உறவு கொள்வாள்' என்ற செய்தி கேட்ட வங்க மன்னன் அதிர்ச்சிக்காளானான். இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்த மன்னன் தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான்.

இளவரசியின் நலனில் ஆர்வமற்றவனாக அவளது திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாதவனாக இருந்தான். அதுமட்டுமன்றி, அவளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது அவள் போக்கில் விட்டுவிட்டான். சுதந்திர வாழ்வின் சுகத்தை விரும்பியவளாக தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி. மகதநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த நாடோடிக் கும்பலுடன் அவர்கள் அறியாத விதத்தில் சேர்ந்து கொண்டாள்.

அடர்ந்த கானகத்தை நாடோடிக் கும்பல் கடந்து கொண்டிருந்தது. பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு நாடோடிக் கும்பலைத் தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இளவரசி மட்டும் சிங்கம் சென்ற பாதையில் சென்றாள்.

தனது எதிர்காலம் பற்றிச் சோதிடர்கள் கூறியது இப்போது அவள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் கூற்றுக்கு ஏற்பவே தான் வந்த நாடோடிக் கும்பலைச் சிங்கம் தாக்கியதை உணர்ந்தாள். தான் கூட வேண்டிய சிங்கம் இதுவே என்றும் நினைத்தாள். இந்த உறுதியுடன்தான் சிங்கத்தின் பாதச்சுவட்டைப் பின்பற்றி அதன் குகையை நோக்கி நடக்கலானாள்.

வழியில் சிங்கமோ உண்ட மயக்கத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. இளவரசி சிங்கத்தின் எதிரே வந்ததும் அது காமம் மிகக்கொண்டு வாலை ஆட்டியது. இளவரசி சிறிதும் பயப்படாமல் அதன் அருகே சென்று உடலைத் தட்டிக் கொடுத்தாள். தன்னை உடன் அழைத்துத் செல்லுமாறும் வேண்டினாள்.

ஏற்கெனவே இளவரசியைப் பார்த்த மாத்திரத்திலேயே காமம் மிகுந்திருந்த சிங்கம், அவளைத் தன் முதுகுமீது அமர்த்திக் கொண்டு தனது குகையை நோக்கிச் சென்றது.

குகையை வந்தடைந்ததும் இரவு பகல் பாராது சிங்கமும் இளவரசியும் கூடி மகிழ்ந்தார்கள். சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தைக்கு சிங்கபாகு என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி என்றும் பெயரிட்டாள். மகன் சிங்கபாகுவின் கைகளும் பாதங்களும் சிங்கத்தினுடையதைப் போல் அமைந்திருந்தன.

சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் கேட்டான். அவன் கேட்டது இதுதான்:

""அம்மா, நீயும் அப்பாவும் பெருத்த வித்தியாசத்துடன் இருக்கிறீர்களே. இது எப்படி நிகழ்ந்தது?''

இளவரசி அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, ""நாம் இந்தக் குகையை விட்டு ஏன் போய்விடக் கூடாது?'' என்றான்.

""போய்விடலாம். எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் மூடி இருக்கிறாரே!'' என்றாள்.

இது கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருக்கும் கல்லை நகர்த்தி, அதைத் தன் முதுகில் ஐம்பது யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை ஒரு தோளிலும், தங்கையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியே வந்தான்.

இளவரசியின் யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன் இளைப்பாறிக்கொண்டிருந்தான். அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின் படையில் ஒரு தலைவனாகவும் விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள்.

சத்தம் கேட்டு கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான். இளவரசி தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான்.

இளவரசியும் தனது முன்னாள் கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.

காட்டில் இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும் மனைவியையும் காணாமல் எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர் வருவோர் எல்லாரையும் தாக்கியது.

""சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை அதனிடமிருந்து காக்க வேண்டும்'' என்று குடிமக்கள் மன்னனிடம் முறையிட்டனர்.

தன்னிடமுள்ளவர்களில் சிங்கத்தின் கொட்டத்தை அடக்கும் நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. பரிசுத் தொகையை யானை முதுகில் வைத்து, ""சிங்கத்தைப் பிடித்து, சிங்கத்தைக் கொல்பவர்கள் இந்தத் தொகையை அடையலாம்'' என்று முரசு கொட்ட வைத்தான் அரசன்.

படை வீரர்களிலும் பொதுமக்களிலும் யாரும் முன் வராத நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில் சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன் தாய் தடுத்தும் கேளாது யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக் கொண்டான். பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினர்.

அரசனோ, ""சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்ஜியத்தையே தரச் சித்தமாயிருக்கிறேன்'' என்றான்.

சிங்கபாகு சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றான். தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது மைந்தன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நெருங்கி வந்தது. சிங்கபாகுவோ தான் எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து சிங்கத்தைக் கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் அம்பு சரியாகச் சிங்கம் மீது தைக்கவில்லை. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு சிங்கத்தை வீழ்த்தியது.

கொய்த தலையுடன் சிங்கபாகு அரண்மனையை நோக்கி வந்தான். பொதுமக்கள் அவனது தீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ராஜ்ஜியத்தைத் தருவேன் என்று கூறிய மன்னன் உயிருடன் இல்லை. இருப்பினும் இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின் பேரன்தான் என்பதைப் பொதுமக்களும், மந்திரிமார்களும் அறிந்த காரணத்தால் சிங்கபாகுவை அரசனாக்க முயன்றார்கள். எல்லாருடைய விருப்பத்திற்கிணங்க அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டு, பின் தனது தாயாரையும் அவளது புதிய கணவனையும் அழைத்து ராஜ்யத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தான்.

தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றான். அங்கே தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். தங்கையை (சிங்கவல்லியை) தனது மனைவி ஆக்கிக் கொண்டான். இவர்களுக்குப் பதினாறு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

இந்த முப்பத்திரண்டு குழந்தைகளில் மூத்தவனுக்கு விஜயன் என்றும், இரண்டாமவனுக்கு சுமிதன் என்றும் பெயர்களிட்டார்கள். உரிய வயது வந்ததும் விஜயனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டினார்கள்.

விஜயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று, ""உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.

சிங்கபாகு தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை கலந்தான். அவர்களும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள்.

வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள்.

அனைவரும் கரையேறியதும் விஜயனின் ஆட்களில் ஒருவன் தூரத்தில் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவள்.

குவேனி அவர்களது பசியைப் போக்க விருந்து படைத்தாள். தன்னைப் பதினாறு வயதுப் பருவப் பெண்ணாக மாற்றிக் கொண்டாள். நானாவித ஆடையாபரணங்களைத் தன்மேல் அலங்கரிக்குமாறு மந்திர சக்தியால் செய்து கொண்டாள்.

ஒரு மரத்தடியில் அழகிய வெண்கொற்றக் குறையுடன் கூடிய சிறந்த மஞ்சத்தைச் சிருஷ்டித்துக் கொண்டாள். சுற்றிலும் பாதுகாப்புக்கெனக் கூடாரம் ஒன்றையும் எழுப்பிக் கொண்டாள். விஜயனும் குவேனியின் அழகில் மயங்கி அவளை ஏற்றுக் கொண்டான். இன்பமாகப் பொழுதைக் கழித்தான்.

குவேனியின் புத்திமதிப்படியே விஜயன் இயக்கராஜனுடைய உடைகளை அணிந்து கொண்டான். தாமிரபரணி என்னும் நகரத்தை ஏற்படுத்திக் கொண்டான். குவேனியையும் முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான்.

ஆனாலும் அவன் தன்னை அரசனாக முடிசூட்டிக் கொள்ளவில்லை. உயர்குலப் பெண்ணொருத்தியை மணந்து அவளைப் பட்டமகிஷியாக்கிக் கொண்ட பிறகே தான் அரசனாக முடியும் என்று கருத்துக் கொண்டிருந்தான். அதனால் விஜயனின் மந்திரிமார்களில் சிலர் பாண்டிய நாடு சென்று அந்த மன்னனிடம் பெண் கேட்டார்கள்.

பாண்டிய மன்னனும் தனது மகளை விஜயனுக்குத் தரச் சம்மதித்து, விஜயனின் நண்பர்களை மணந்து கொள்ளவும், தனது மகளுக்குத் துணையாக இருக்கவும் என்று நூறு பாண்டிய நாட்டுப் பெண்களையும் அனுப்பி வைத்தான்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் பாண்டிய நாட்டு இளவரசியை மணந்து கொண்டான் விஜயன். பின் குவேனியை தனது நாட்டை விட்டே துரத்துகிறான். குவேனியின் மூலம் பிறந்த ஒரு மகன், ஒரு மகளையும் கானகத்துக்குத் துரத்தியடிக்கிறான் விஜயன். இந்த விஜயனே முதல் சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. இவனது வாரிசுகளே இன்றைய சிங்களவர்கள்!

நாளை: இலங்கையின் பூர்வ குடிகள் யார்?

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Headlines&artid=68025&SectionID=128&MainSectionID=128&SEO=&Title=

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!