Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, August 23, 2009

♥ பிரபாகரன் உருவத்தில் ஈழ வினாயகர் - திருப்பூரில் பரபரப்பு ♥

பிரபாகரன் உருவத்தில் ஈழ வினாயகர் - திருப்பூரில் பரபரப்பு

 [pillaiyar1234+copy.jpg]


வினாயகர் சதுர்த்தி ஞாயிறு அன்று கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி வினாயகர், சித்தி வினாயகர், கற்பக வினாயகர், செல்வ வினாயகர் என பல வகையான வினாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.

வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு வினாயகர் சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பிரபாகரன் உருவத்தோடு ஈழ வினாயகர் சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூசை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் திருப்பூர் போலீசாரும், உளவுத்துறையினரும் விழிப்போடு அந்த சிலை நிறுவப்படுவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.

இதே போல ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் நாளை இலங்கையை நோக்கி ஈழ வினாயகர் சிலையுடன் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முயற்சியை முறியடித்து அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டு வருகிறது.

காவல்துறையின் கண்காணிப்பை மீறி ஈழ வினாயகர் சிலையை நிறுவி அர்ச்சனை செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் திருப்பூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள். ஈஷா ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்படும் மரக்கன்று நடும் விழாவுக்காக வினாயகர் சதுர்த்தி நாளான ஞாயிற்றுக் கிழமை துணை முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் செல்லும் நிலையில் இந்து மக்கள் கட்சியினரால் தேவையற்ற பிரச்சனை உண்டாகிவிடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் திருப்பூர் போலீசார்.

http://www.thenaali.com/thenaali.aspx?N=2522

தினமணி டாட் காமில் காணாமல் போன ‘இலங்கை’!

இலங்கைத் தமிழர்கள் பிரச்னை, தமிழ் ஊடகங்களுக்கு ஏதோ சில வகையில் பொருளளவில் இலாபம் தரும் விவகாரமாகவே இருந்துள்ளது, இருந்து வருகிறது என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

ஆனால், இந்தப் பட்டியலில் ‘தினமணி’ இணைந்ததை தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நேரடியாக விஷயத்துக்கே வந்துவிடுகிறேன்.

இலங்கைத் தமிழர்கள், இலங்கை விவகாரங்கள் மீது நாட்டமும் அக்கறையும் இருந்ததன் காரணமோ அல்லது வெளிநாடு வாழ் தமிழர்களில், அதுவும் இணையதளத்தில் வலம் வரும் தமிழர்களில் இலங்கைத் தமிழர்களே மிகுதி; எனவே அவர்களுடைய கவனத்தையும் ‘ஹிட்ஸ்’யையும் பெறுவதற்கான உத்தியா என்பது தெரியவில்லை…. தினமணி டாட் காமில் ‘இலங்கைச் செய்திகள்’ என்ற பிரிவு இருந்து வந்தது. அதில், அச்சில் ஏறும் இலங்கைத் தமிழர் தொடர்பான செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன.

சில மாதங்களுக்கு முன்பு புதிய வடிவம் பெற்ற தினமணி டாட் காமில் ‘இலங்கைச் செய்திகள்’ என்ற பிரிவு இருந்தது.

ஆனால், இலங்கை போர் முடிவுக்கு வந்த பிறகு, பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்த பிறகு..?

தற்போது தினமணி டாட் காமில் ‘இலங்கைச் செய்திகள்’ என்ற பிரிவே காணாமல் போயுள்ளது. இலங்கை தொடர்பான செய்திகள், ‘உலகம்’ பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

வழக்கம் போல் இங்கே விடை தெரியா கேள்விகள் எழுகின்றன.

* தினமணி டாட் காமில் இட நெருக்கடி காரணமாக எடுத்துவிட்டார்களா? பார்த்தால் அப்படி தெரியவில்லை, மாவட்ட வாரியாக செய்திகள் தரப்பட்டுள்ளதே..! வேறென்ன காரணம்?

* இலங்கையில் எல்லாம் முடிந்துவிட்டதே என்ற எண்ணமா?

* இனி, இலங்கைச் செய்திகளால் ‘ஹிட்’டுகள் பெரிய அளவில் கிடைக்காது என்ற கணிப்பா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன…

உண்மையில் இன்றையச் சூழலில் தான் இலங்கைத் தமிழர்களைப் பற்றி மிகுதியாக செய்திகளைச் சேகரித்து, அதை உலகுக்கு தெரிவிக்கும் கடமை தமிழ் ஊடகங்களுக்கு உண்டென கருதுகிறேன்.

பிறந்த பூமியில் அகதிகளாய் அவதியுறும் தமிழர்களின் தற்போதைய நிலை தொடர்பான செய்திகளை திரட்டி வெளியிட்டு, அவர்களின் வாழ்வாதாரம் மீது உலகப் பார்வை பட வைக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது என்றே நினைக்கிறேன்.

வெறும் பரபரப்புக்காகவும், காசு பாப்பதற்காகவுமே இலங்கைப் பிரச்னையை சில அல்லது பல தமிழ் ஊடகங்கள் கையிலெடுத்திருந்தன என்பது அண்மைக் கால அப்சர்வேஷனில் புரிந்துகொள்ள முடிந்தது.

அங்கே எல்லாம் முடிந்துவிட்டதாக, பிரபாகரன் மறைந்துவிட்டதாக தகவல் கிடைத்த மறுநாளில் இருந்தே போட்டிக் போட்டிக்கொண்டு பத்திரிகைகள் ‘இலங்கைப் போராட்ட வரலாற்றை’ தொடராக போட்டு, போட்டுக் கொண்டு விளம்பரங்கள் செய்து காசாக்க முனைந்தன.

அதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அந்த வரலாற்றுத் தொடர்கள் இன்றைய இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்த உதவலாம் என்பதால்.

ஆனால், இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி அறிந்துகொள்ள பத்திரிகைகளில் புரட்டினால், அது குறித்த செய்திகள் எங்கேயும் சிங்கிள் காலத்தில் கூட கிடைப்பது இல்லை. மாராக, மன்னிக்கவும் மாறாக, சினேகா – ரம்பாக்கள் – சொனியா அகர்வால்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை முதல் பக்கங்களில் படிக்க முடிகிறது.

இது புலம்பலா என்று எனக்குத் தெரியவில்லை. இதைப் பற்றியெல்லாம் பலருக்கும் தெரிந்திருக்கும் என்பதும் எனக்குத் தெரிகிறது.

ஆனால்…

தினமணி டாட் காமில் இருந்து ‘இலங்கைச் செய்திகள்’ பிரிவு நீக்கப்பட்டது தான் ஆரம்பத்தில் கோபத்தையும், பிறகு வருத்தத்தையும் தந்துள்ளது.

கோபம் மட்டுமே இருந்திருந்தால், அதைப் பொறுத்துக் கொண்டு போயிருக்கலாம். ஆனால், வருத்தமே மேலிட்டதால், அந்த வருத்தத்தை இறக்கி வைக்க இங்கே ஒரு பதிவிட நேரிட்டுள்ளது.

தமிழ் பத்திரிகைகளில் சார்பு மற்றும் சில ‘பூச்சு’கள் இருப்பினும் கூட மனித நலன் (Human Interest) மீது அக்கறை கொண்ட பத்திரிகைதான் ‘தினமணி’. அதில், வர்த்தக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததே மரியாதையை மேலும் கூட்டும் விஷயம்.

அத்தகைய நாளிதழின் இணையதளத்தில் இருந்து ‘இலங்கைச் செய்திகள்’ பிரிவு நீக்கப்பட்டதன் நோக்கம், ‘இனி பிரயோஜனமில்லை’ என்பதாக இருந்திருக்கக் கூடுமோ என்பதால் தான், அதை வருத்தமுடன் இங்கேச் சுட்டிக் காட்ட விரும்பினேன்.

இதே வேறு ஏதாவது இணையதளம் அப்படிச் செய்திருந்தால், அதைக் கண்டு கொண்டிருக்கவோ – அதைப் பற்றி யோசித்திருக்கவோ மாட்டேன்.

இது ஒரு மிகச் சாதாரண விஷயம் போல் தோற்றமளித்தாலும், நான் ஏன் இந்த விஷயத்தில் மிகவும் டிஸ்டர்ப் ஆனேன் என்று தெரியவில்லை.

தமிழ் செய்தி அல்லது பல்கலை வலைத்தளங்கள் ‘ஹிட்’டுகளை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் உண்மையான சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.


பின் இணைப்பு : www.dinamani.com

http://globen.wordpress.com/2009/08/22/dinamanidotcom/

 


பாவம் பிள்ளையார்

படங்களைப் பார்த்த போது வருத்தமாகத் தான் இருந்தது.




இப்படிக் கடலில் கொண்டு போய் போடுவதற்கு எத்தனை அனுமதிகள், போக்குவரத்து நெரிசல்கள், மத மோதல்கள், குடித்து விட்டு பிள்ளையார் முன் குத்தாட்டம் போடுவது இப்படிப் பல பல.



வடக்கத்திய பண்டிகை, இந்த புதுக் கலாச்சாரம் தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது, என்ற ஆரம்ப கால எதிர்ப்புகளை மீறி ரவுடி ராஜ்ஜியத்துடன் பிள்ளையார் ஊர்வலம் நடக்கிறது.





இப்படி அவரை அவமானப்படுத்த வேண்டாம் என்று மற்றவர்கள் சொன்னால் "இந்துக்கள் மனதை புண்படுத்துகிறார்கள்" என்பார்கள்.

பிள்ளையாரை புண்படுத்தாமல் இருந்தால் சரி.



பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


http://kilvaanam.blogspot.com/2007/09/blog-post_15.html

♥ உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பயப்படவேண்டும் ? ♥


தமிழ் ஈழத்தை உருவாக்கியெடுத்த தேசிய தலைவர் பிரபாகரனின் படங்களை தமிழகத்தில் வைக்க கூடாது என்றும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேச கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது .

விடுதலை புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டோம் , விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொன்று விட்டோம் என சிங்கள இனவெறி அரசு கொக்கரித்து கொண்டிருக்கிறது . அதை நினைத்து பெருமை பட்டு கொண்டது இந்திய காங்கிரஸ் அரசு . தமிழக காங்கிரஸ் கட்சியினரோ பிரபாகரனை கொன்ற சோனியாவிற்கு நன்றி என சுவரொட்டிகள் அடித்து மகிழ்ச்சி கண்டனர் . இல்லாத பிரபாகரனுக்காகவும் இல்லாத விடுதலை புலிகளுக்காகவும் எதற்கு பயப்பட வேண்டும் .

இலங்கை அரசோ மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை முள் வெளி கம்பிகளில் அடைத்து வைத்திருக்கிறது போர் முடிவுற்றதாக அறிவித்து பல மாதங்கள் ஆன பின்னரும் விடுவிப்பதாக இல்லை . சிங்கள அரசால் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் போர் முடிந்த பின்னரும் கைவிட படுவதாக இல்லை . அதே நிலை தான் இங்கே தமிழக அரசும் செய்கிறது . தீவிர போர் நடைபெற்ற காலகட்டங்களில் ஈழ தமிழர்களுக்காக எழுந்த எழுச்சியை அரச இயந்திரங்களை கொண்டு காட்டு மிராண்டி தனமாக ஒடுக்கியது . கடைசி கட்ட ஈழ போரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சாவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் ஒரு காரணமாக ஆகி போனது .

இந்நிலையில் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு நம்பிக்கையிழந்த தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தமிழகத்தில் எழுச்சி கூட்டங்கள் நடைபெறுவதை பொறுக்க முடியாத தமிழக அரசு மீண்டும் தமிழ் உணர்வாளர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைகிறது . மக்கள் மனதிலிருந்து மாவீரன் பிரபாகரனை மற்ற முடியாது என நினைத்த தமிழக அரசு பொது இடங்களில் படங்கள் வைக்க கூடாது என எச்சரிக்கிறது .

பிரபாகரனோ விடுதலை புலிகளோ இனி வரமுடியாது என தினமும் தமிழர்களுக்கு எதிராகவே எழுதிவரும் தின மலர் கூட தமிழக அரசுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் செயல் படுகிறார்கள் என காட்டி கொடுக்கிறது . தினமலருக்கு என்ன பயம் உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பய பட வேண்டும் .

எழும் தமிழ் ஈழம் என தட்டி வைத்தால் காவல் துறையினர் அதில் உள்ள ஈழத்தை அழித்து விடுகிறார்கள் . தமிழ் ஈழத்திற்கான உலக தமிழர் பிரகடனம் வெளியிட்டால் வழக்கு போடுகிறார்கள் . விடுதலை புலிகள் இயக்கம் அழிக்க பட்ட பின்னரும் எதற்காக இந்த பயம் . தமிழ் ஈழம் என்பது விடுதலை புலிகளின் லட்சியம் மட்டுமில்லை தமிழர்களின் லட்சியமும் கூட . இங்கே விடுதலை புலிகளின் பெயர்களையோ பிரபாகரனின் படத்தையோ பயன் படுத்தினால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .
 
http://www.sureshkumar.info/2009/08/blog-post_23.html

♥ காங்கிரஸ் கட்சிக்கொடியை எரித்த தமிழுணர்வாளர் கைது ♥

  http://www.neruppu.com/wp-content/uploads/2009/04/soniya.bmp

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி தமிழகத்தில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை எரித்த சம்பவம் தொடர்பாக தமிழுணர்வாளர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ளது மாவட்ட காங்கிரஸ் அலுவலகம். இவ் அலுவலகத்தில் பறந்து கொண்டிருந்த கொடியையும், வளாகத்தில் இருந்த சோனியா காந்தியின் படத்தையும் யாரோ எரித்து விட்டனர்.

இச் சம்பவம் குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.நெடுஞ்செழியன் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பருதிவாணனை தமிழக பொலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த தமிழுணர்வாளர் பருதிவாணன், தமிழர் கழக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.


http://www.meenagam.org/?p=8227


http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/11/india-sri.thumbnail.jpg   http://1.bp.blogspot.com/_IHEYt68CXns/SdSmxJvWwvI/AAAAAAAAAaE/jGWTIdW8930/s320/he_meets_sonia_gandhi.jpg


♥ கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்-நக்கீரன் தொடர்...! ♥

கதற வைக்கும் காட்சிகள்! - ஜெகத் கஸ்பர்



அகப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா... சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா... என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின், நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும், விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், ""தாய், தகப்பன்...'' என்று ஆரம்பிக்கவே, ""எல்லாம் இப்போது நான்தான்'' என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். ""இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்'' என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் "அம்மா பசிக்குது... அம்மா பசிக்குது...' என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். ""அப்பா... எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா... தண்ணீர் விடாக்குது... கெதியா எழும்புங்கோ அப்பா...'' என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன்.

தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே...

""அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு'' என்று... அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே...
என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே...

""தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்...'' என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு... :

""ஐயா, ஒபாமாவே... கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே... வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே... ஏமாற்றி விட்டீர்களே....'' என்று மனம் புலம்பியது.

(நினைவுகள் சுழலும்)


http://tamilthesiyam.blogspot.com/2009/08/blog-post_22.html


தண்ணீர் தேசமானது கண்ணீர் தேசம்...! வீடியோ


http://www.youtube.com/watch?v=6qZudu4ag2c



♥ பூச்சி உண்ணும் தாவரங்கள் - அறிய புகைப்படங்கள்...♥

இந்த தாவரங்களிடம் மாட்டும் பூச்சிகள் உயிருடன் தப்புவதில்லை...










































































http://worldphotocollections.blogspot.com/2009/08/insect-eating-plants-rare-photos.html

[sms.jpg]

பர்மா அதிசயம்


பர்மாவில் எடுக்கப்பட்ட ,ஒரு அருவிக்கருகில் அமைந்த ,மலையடிவாரக் காட்சியை இந்தப் புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள். இதை எவரும் இலகுவாக எடுத்துவிட முடியாது. இந்தப் புகைப் படத்தை வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும், சூரியக் கதிர்கள் ஒரு குறித்த கோணத்தில் அந்த மலையில் படும்போது தான் எடுக்க முடியும். இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்று புரிகிறதா?
இப்போ உங்கள் தலையை இடது பக்கம் சரித்து , இந்தப் படத்தைத் திரும்பவும் பாருங்கள்........புரிகிறதா?
இதே படத்தை நான் நேராகத் திருப்பி இருக்கிறேன் பாருங்கள்.......





பிற்குறிப்பு.

இந்தப் படம் கொரியாவில் சிறுவர் புத்தகத்தில் வரையப் பட்ட ஒரு ஓவியம் என்பதும் இப்படி ஒரு மலையடிவாரம் கிடையாதென்பதையும் ஒரு வாசகர் எனக்கு அறியத் தந்த floraipuyal என்ற பதிவருக்கு என் நன்றி.
மேலதிக விபரங்களுக்கு
http://www.hoax-slayer.com/burma-rock-formation.html

http://maunarakankal.blogspot.com/2009/08/blog-post_19.html



பெண்கள் இவ்வளவு விரைவாக ஆடை

மாற்றுவார்களா?.... வாவ் வீடியோ !

இவ்வளவு விரைவாக ஆண்கள் ஆடை மாறுவதே கடினம். அதிலும் பெண்கள் இவ்வளவு அதி விரைவாக ஆடை மாற முடிந்தால் பெரு வாரியான வெளி செல்லும் நிகழ்வுகள் சுமுகமாகவே இருக்கும். என்ன சொல்கிறீர்கள்.


smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!