Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, June 28, 2009

♥ இந்தோனேசிய தீவில் பிரபாகரன்.... ♥

இந்தோனேசிய தீவில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்

[Untitled-1+copy.jpg]


பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே உலாவரும் மில்லியன் டாலர் கேள்வி.

பத்து நாட்களுக்கு முன் நார்வே நாட்டில் உள்ள தமிழர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். காரணம், நார்வே நாட்டில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது தான். புலித் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த சிலரிடம் கேட்டபோது,

"இந்தோனேசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகளில் மக்கள் அதிகமாகப் புழங்கும் பெரும் தீவுகள் 26 மட்டும்-தான். சில குட்டி, குட்டித் தீவுகளில் தீவிரவாத அமைப்புகள்

காலூன்றி உள்ளன. அவர்களிடம் நல்ல நட்புறவில் இருந்த பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் அந்தத் தீவுகளில் ஒன்றில் பத்திரமாக இருக்கிறார்கள்" என்கிறார்கள்.

ஈழ ஆதரவாளர்கள் இதைவிட இன்னும் சற்று சந்தோஷிக்கும் விதமாக ஒரு செய்தி உலா வருகிறது, "இலங்கையிலிருந்து மிக எளிதில் தப்பிக்க வாய்ப்பு உள்ள ஒரே இடம் தமிழ்நாடுதான். எனவே, அதிராம்பட்டினம் கடற்கரை வழியாக வந்த பிரபாகரன், தற்போது திருச்சி மையப்பகுதியில் ரகசியமான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்" என்ற செய்தியும் சமீப சில நாட்களாக உலா வரத் தொடங்கியிருக்கிறது.

"இல்லை, இல்லை மாசற்ற மாவீரன் பிரபாகரன் கோழையைப்போல் தப்பித்துச் செல்ல வாய்ப்பே இல்லை. லட்சக்கணக்கான தமிழ் ரத்த சொந்தங்களையும் ஆயிரக்-கணக்கான போராளிகளையும், மட்டுமல்ல தனது வீரமைந்தன் சார்லஸ் அந்தோணியையும் சிங்கள கொலைவெறிக்குப் பலி கொடுத்த பின்பு, தாய் மண்ணைவிட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை. இன்னமும் வன்னிகாட்டில் மக்களுடன் மக்களாக, மீண்டும் அவர்களை பாதுகாக்கும் உத்திகளுடன் பலத்த பாதுகாப்பு அரணுக்குள்தான் பிரபாகரன் இருக்கிறார்" என்றும் பேசுகிறார்கள்.

இச்சூழ்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு விடைதேடி புறப்பட்டோம். விடுதலைப்-புலிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் எப்போதுமே மிக நெருக்கமான தொடர்-புள்ள இடம் வேதா-ரண்யத்தை அடுத்த கோடியக்கரைதான்! பிரபாகரனும், மற்ற ஈழ விடுதலை அமைப்புகளும், ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொண்டதும் இங்குதான். மேலும் விடுதலைப்-புலிகளின் அதி நவீன விசைப்படகு இலங்கை-யிலிருந்து கோடியக்-கரைக்கு வந்து சேர வெறும் பன்னிரென்டு நிமிடங்கள்தான் ஆகும் என்பது ஆச்சர்ய-மான விஷயம். இத்தகைய அதிவேகப்-படகு இந்தியா, இலங்கை ராணுவத்திடம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் கள்ளக் கடத்தல் தொழிலாக இருந்து பிறகு, புலிகளுக்குத் தேவையான பொருள்களை சப்ளை செய்யும் தொழிலாக மாறி, அதனை செய்தவர்கள் வசிக்கும் பகுதியும், கோடியக்கரைதான். அத்தகைய தொழிலில் இருந்தவரும், இன்று-வரை புலிகளின் அசைவை அறிந்தவருமான முக்கியப் புள்ளி ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் நாம் பேசியபோது, 'நான் அறிந்த வரையில் தம்பி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவரைத் தெரிந்தோ, தெரியா-மலோ இலங்கை அரசு இறந்ததாக அறிவித்து ஓர் உடலையும் காட்டி நாடகத்தை முடித்துவிட்டது.

ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜியைப்போல, இலங்கையின் இனவெறியை எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்குப் போராடிய உண்மையான போராளியை சர்வதேச அளவில் கோழை மரணமாகச் சித்திரித்து அவமானப்படுத்தி-விட்டார்கள்.

இதுவும் போர்த் தந்திரத்தில் தம்பிக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது. படை-களை கலைத்து, ஆயுதங்களை மறைத்து மக்களுடன் மக்களாக புலிகள் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள் இலங்கை ராணுவத்தினர்.

தமிழகத்தில் ஒரு பழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதாவது மரணப்படுக்கையில் உள்ளவர்-களுக்கு 'உயிர் பால்' ஊட்டுவார்கள். அதுபோல், இலங்கைத் தமிழர்களை கொல்ல எல்லாவித உதவி-களையும் செய்துவிட்டு, இன்று அவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் 'உயிர் பால்' ஊட்ட முயற்சி செய்கிறது இந்திய அரசு. அதனை 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்று மேடைக்கு மேடை முழங்கிய தமிழக தலைவர்களும் வேடிக்கை பார்ப்பதுதான் வெட்கக்-கேடாக இருக்கிறது.

தமிழன் எரிவதையும், காடு அழிவதை-யும் காட்டுகின்ற இலங்கை ராணுவம், புலிகளின் நவீன ரக டாங்கிகளையோ, போர் விமானத்தையோ அல்லது பெருமளவில் ஆயுதங்களையோ காட்டவில்லை. ஏனென்றால் அவற்றை இன்னமும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை. உடைமைகள், உறவுகள், உறுப்புகள் என சகலத்தையும் இழந்து கையேந்தி வாழும் அவலத்திற்கு வந்துவிட்ட எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் வந்து சேரட்டும் என்பதற்காகவே, தம்பி தலைமறைவில் இருக்கிறார் என்றே எனக்குக் கிட்டும் செய்திகள் சொல்லுகின்றன" என்று கண்கள் மின்னச் சொல்கிறார் அந்தப் புள்ளி.

அடுத்து ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராம நாட்டாரான சேதுபதியைச் சந்தித்துப் பேசினோம். இவர் இலங்கைத் தமிழர்கள் பலரிடமும் நல்ல தொடர்பில் இருப்பவர். உணர்வுபூர்வமாகவே பேச ஆரம்பித்தார்.

"சிங்களவன் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் நம் நாட்டில் உள்ள மேற்கு வங்களாத்திலிருந்து சென்றவர்கள்தான். அந்த இன உணர்வில், அதே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்புதான், தலைமைக்குப் புலிகளைப் பற்றிய தவறான தகவலை தந்து, புலிகளை அழிப்பதாக எண்ணி, அப்பாவித் தமிழர்களை அழித்து-விட்டார்கள். போரில் வீரமரணம் அடைவது இயற்கைதான். அந்த வகையில் சார்லஸ் அந்தோணி, புலித்தேவன், நடேசன், குணா போன்றோர் இறந்திருக்கிறார்கள். ஆனால் பொட்டு அம்மான், சூசை போன்ற முக்கியத் தளபதிகளுடன் பிரபாகரன் நலமுடன், பாதுகாப்பாக இருக்கிறார் என்றே எனக்கு வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகையிலிருந்து கன்னியாகுமரி வரை மீனவக் கிராமங்களில் பிரபாகரன்தான் அவர்களின் மனம் நிறைந்த தலைவர். அவர் இறந்திருப்பது உண்மையென்றால் எங்காவது ஓரிடத்திலாவது ஒரு படம் வைத்து மாலை போட்டு அஞ்சலி செலுத்தியிருக்க மாட்டார்களா? இலங்கை ராணுவத்தால் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் நானூறுக்கும் மேற்பட்-டோர் பலியாகி, அவர்களது குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன. இந்தியக் கப்பற் படையால் நமது மீனவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எனவே, விரைவில் இங்கு முகாமிட்டுள்ள நேவியை எதிர்த்து பெரிய அளவில் கண்டன பேரணி நடத்தப் போகிறோம்" என்று முடித்தார்.

இறுதியாக இலங்கையில் நாற்பதாண்டு காலம் வசித்தவரும், பிரபாகரனிடம் 1980லிருந்து நல்ல அறிமுகத்தில் உள்ளவருமான சீத்தாராமனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

"எம்.ஜி.ஆர். டைரியில் என் பெயர் இருக்கும். அதுபோல் தம்பி மனதில் எனக்கு இடமிருக்கும். பதினெட்டு வயது தம்பியாக பிரபாகரனை சந்தித்தேன். அப்போதே அதிகம் பேசமாட்டார். வார்த்தைகளை தேவைக்கேற்பவே பயன்படுத்துவார். ஒப்பற்ற, ஈடு இணையற்ற மாவீரன் பிரபாகரன். வீரனுக்கு எப்போதுமே அழிவில்லை என்பது வேறு விஷயம். இதற்கு முன்பு இரண்டுமுறை 'பிரபாகரன் கொல்லப்-பட்டார். உடல் வந்து கொண்டிருக்கிறது' என்று அறிவித்தார்-கள். நானும்கூட அதனை நம்பி, கண்ணீர்விட்டு, போட்டோவிற்கு மாலை போட்டு அஞ்சலியும் செலுத்தி-யிருக்கிறேன்.

ஆனால் அந்த மாவீரன் ஒவ்வொரு முறையும் மாவீரர் தினமான நவம்பர் 27-ம் தேதியன்று வெளிப்பட்டிருக்கிறார். அதுபோலவே இப்போதும் வருவார் என்றே உறுதியாக நம்புகிறேன். கடந்த-வாரம் இலங்கை கவிஞர் காசி ஆனந்தனி-டம் பேசினேன். தம்பி நலமாக இருக்-கிறார் என்றே எனக்கும் எனது மனைவிக்-கும் நல்ல செய்தியைச் சொன்னார். அதையே தான் உங்களுக்கும் சொல்-கிறேன். நல்லதை நம்புங்களேன்" என்று முடித்த-போது, அவருடைய வயதை மீறிய உற்சாகத்தைக் காண முடிந்தது.

--தமிழக அரசியல்--

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=137:2009-06-26-11-45-55&catid=35:2009-06-20-00-24-54&Itemid=54




♥ ஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழன் தமிழனா இல்லை-சீமான் ♥

http://www.alaikal.com/news/wp-content/seeman7.jpg



ஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழ்நாட்டில் தமிழனாக இல்லாமல்
இருப்பதுதான் காரணம்: சீமான்


ஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழ்நாட்டில் தமிழனாக இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்று தமிழின ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.

இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார்.

திரைப்பட இயக்குநர் சீமான் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியின் முன்னதாக மகளிர் அணியினர் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.

பேரணியினை தொடக்கி வைத்து சீமான் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச போர்க் குற்றம் செய்து இருக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்போகும் போது அந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் பொருட்டு இந்தியா கையெழுத்திட்டதே, இதனை விட இலங்கை தமிழர்களுக்கு என்ன துரோகம் செய்யப்போகிறார்கள். இதை கேட்டால் நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள்.

இலங்கையில் இவ்வளவு அழிவை சந்தித்திருப்பதற்கு காரணம் தமிழன் இந்த மண்ணில் தமிழனாக இல்லை என்பதுதான். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. இனியாவது எனது தாய் தமிழ் உறவுகள் எல்லாம் தமிழன் என்ற ஒற்றை குடையின் கீழ் அணிதிரளாது போனால், இந்த இனத்தை காக்க யாராலும் முடியாது. மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு நம் இனம் காக்க போராட வேண்டும் என்றார் அவர்.


http://puthinam.com/full.php?2bZRvSe0dLh1L0ecMHc33a4waJl4d3kZc3cc2InX3d439UX3b024Rn3e

"பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்! இனி..." கொளத்தூர் மணி

பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!-- -மத்திய அரசை எச்சரிக்கை கொளத்தூர் மணி



[Untitled-1+copy.jpg]    http://www.sankathi.com/uploads/images/news/India/Kolaththur%20mani1.jpg



விடுதலைப் புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கடந்த மே 18-ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால் அதற்கு முன்பே அதே மே மாதம் 2-ம் தேதி இலங்கையில் போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, இலங்கைக்கு உதவுவதற்காக 92 வாகனங்களில் ராணுவத் தளவாடங்களையும், பீரங்கி டாங்கி-களை-யும்

இந்திய அரசு கொச்சின் வழியாக இலங்கைக்கு அனுப்புவதாகத் தகவல் பரவ, கோவையில் பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.-வினரும் அந்த வாகனங்-களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், அந்த வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்காக பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்-துறை, இதுவரை 75 பேரை கைது செய்துள்ளது. மற்றவர்களையும் தேடி வருகிறது. அது-மட்டுமல்லாமல் கையில் சிக்குபவர்-களையெல்லாம் கைது செய்து, இந்த வழக்கில் சேர்த்து வருவதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோவை மத்திய சிறையில் ராமகிருஷ்ணனைச் சந்தித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், இன்னும் போலீஸிடம் சிக்காமல் இருப்பவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாகவும் தகவல்கள் உள்ளன. ஈழத்திற்காகப் போராடி வந்தவர்கள், தற்போது ஈழ ஆதரவாளர்களுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், அதுவும் தமிழக அரசிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 'ஈழ ஆதரவாளர் விடுதலை கோரிக்கை மாநாடு' கோவையில் நடந்தது. மாநாட்டில் கொளத்தூர் மணி, சீமான், 'கற்றது தமிழ்' ராம், பாவாணன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கொளத்தூர் மணி பேசுகையில், "ஈழத்தில் சிங்கள அரசு இனவெறித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே நாம் இங்கே பொங்கியெழ ஆரம்பித்துவிட்டோம். ஈழ மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இந்திய அரசே துணை நிற்பதைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் முத்துக்குமார் தொடங்கி பதினைந்திற்கும் மேற்பட்ட ஈழ ஆதரவாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

ஈழம் அழிந்து வருவதைப் பொறுக்க முடியாமல் நாம் எல்லோரும் கொதித்துக் கொண்டிருந்த வேளையில், போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, எதற்கும் அஞ்சாமல் மத்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்பியது. கோவை வழியாக ராணுவ வாகனங்கள் சென்றபோது, மானமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி அந்த வாகனங்களை வழிமறித்தனர். 'எங்கள் வரிப்பணத்தில் எங்கள் இனத்தையே அழிப்பதா!' என்று மத்திய, மாநில அரசுகளை எச்சரித்தனர்.

மத்திய, மாநில அரசுகள் ஆற்ற வேண்டிய கடமையை அவர்கள் செய்யாததால், மக்களே செய்தனர். கடமையைச் சரியாகச் செய்த எங்களுக்குக் கிடைத்த பரிசு தேசிய பாதுகாப்புச் சட்டமா? இந்த அநீதியை இனியும் அனுமதிக்கக் கூடாது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, பெரியார் திராவிட கழகத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது. அறிவிக்கட்டுமே! பெயரை மட்டும்தானே அவர்களால் தடை செய்யமுடியும்? அப்படி மத்திய அரசு தடை விதித்தால் பெரியார் திராவிட கழகம், பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும்" என்றார் அதிரடியாக.

பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் மைக்கைப் பிடித்தார் சீமான். "இதுவரை ஈழ விடுதலைக்காகப் போராடினோம். ஆனால் இன்று ஈழ ஆதரவாளர்கள் விடுதலைக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நான் என்ன பேசினேன் என்பதற்காக தமிழக அரசு என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பேசியது புதுவையில். ஆனால் வழக்கு பதிவு செய்யப்-பட்டது பாளையங்-கோட்டையில். பிரபாகரனை அண்ணன் என்று கூறியது குற்றமா? இத்தாலியில் பிறந்த சோனியாவை அன்னை என்று கூறும்போது, என் மண்ணில் பிறந்த பிரபாகரனை அண்ணன் என்று கூறுவது குற்றமாகத் தெரிகிறதா நம் தமிழக அரசுக்கு?

இலங்கையில் நடக்கும் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. அதனால்தான் தமிழகத்தில் நாங்கள் போராடுகிறோம். இந்திய ராணுவமே எங்களுக்கு எதிராக வந்தாலும் வெறும் கையோடு அவர்களை விரட்டி அடிப்போம். தற்போது ஆஸ்திரேலியா, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டின் பாராளுமன்றங்களின் முன் ஈழ விடுதலைக்காக ஆர்ப்பாட்டங்-களை நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அதைப் பற்றிப் பேசக்கூட அனுமதி இல்லை. அது ஜனநாயக நாடா அல்லது இந்தியா ஜனநாயக நாடா?

ஈழத்திற்காகக் கதறினோம், கத்தினோம், புலம்பினோம். இது பிழையா? இதற்குக்கூட அனுமதி இல்லாத நாடு, என்ன நாடு? தமிழனாகப் பிறந்தது தப்பா? தமிழா இனி உனக்கு நாடில்லை. மத-மில்லை. ஜாதியும் இல்லை. இனி உனக்கென்று எதுவும் இல்லை. இனி தமிழனின் பொதுச் சொத்து சிறை மட்டும்தான். வேண்டுமென்றால் இனம் மாறிப்போய்விடு.

இந்திய தேசமே அழிந்துபோனாலும் பரவாயில்லை, ஒரு விடுதலைப் புலிகூட இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மத்திய அரசே, ஈழத்தை அழித்துவிட்டு இந்தியாவை-யும் அழிக்க வருவான் சிங்களன்.

ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் தமிழனுக்குச் சம உரிமை கிடைக்க வழி வகுக்கப்படும் என்று இலங்கை அரசு கூறுகிறது. பசிக்குச் சோறு தராத சிங்களனா, என் மக்களுக்குச் சம உரிமை தரப் போகிறான்.

பசியால் துடித்துக்கொண்டிருக்கும் என் மக்களுக்கு உணவு வழங்க 'வணங்காமண்' என்ற கப்பலை அனுப்பி வைத்தது சில நல்ல உள்ளங்கள். அதைக்கூட ஏற்க மறுக்கிறது ராஜபக்ஷே அரசு. சென்னை துறைமுகத்தில் நிற்கும் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசும், மத்திய அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் குண்டடி பட்டு செத்தது பத்தாதா, பசியிலும் சாக வேண்டும் என்று ஆசைப் படுகிறதா இந்த அரசுகள்?

ஐ.நா.சபையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில் இருந்தே தெரியவில்லையா, தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்பது? ஒரு மனிதனின் மரணத்திற்கு ஆயிரம் திரைக்கதை எழுதுகிறது, இலங்கை அரசு. நம் இனத்தின் சூரியன் அழியாது. தமிழ் ஈழ தேசக் கொடியை ஏற்றாமல் பிரபாகரன் தலை சாயாது" என்று ஆவேசம் குறையாமலேயே பேசி முடித்தார் சீமான்.

நன்றி:தமிழக அரசியல்

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=150:2009-06-27-05-39-12&catid=36:2009-06-20-00-25-22&Itemid=55

http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg   

♥ உலகத்திற்கு தமிழனைக் காட்டி பிச்சை கேட்கிறான்,சிங்களன் ♥

உலகிற்கு தமிழரை காட்டி பிச்சையெடுக்கும் சிறிலங்கா

http://www.athirvu.com/ca1.jpg  http://www.meenagam.org/wp-content/uploads/2009/06/banglore_07072009016.jpg



தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று விடுத்துள்ள அறிக்கையில் சிறிலங்காஅரசு நிதி நெருக்கடியில் திணறுவதாகவும் அதனை சரிக்கட்டும் முகமாக முகாங்களில் அடைத்து வைத்துள்ள தமிழர்களை உலகிலுள்ள நாடுகளில் காட்டி அவர்களை பராமரிக்க வேண்டும் என்று கூறி உலக நாடுகளிடம் பிச்சையெடுப்பதாக கூறினார். மகிந்த ராஜபக்சவும் நேற்று முன்தினம்  வெளியிட்ட அறிக்கையில் உலக நாடுகள் தமிழரை பராமரிப்பதிற்கு நிதியினை நேரடியாக அரசிடம் தரும்படியும் உலக நாடுகள் தொண்டு நிறுவனங்களிடம் பணத்தைகொடுப்பதைநிறுத்துமாறும்  கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஜரேப்பிய யூனியன் 840 மில்லியன் ரூபாவை  தொண்டு
நிறுவனங்கள் ஊடாகவே வழங்க உள்ளதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

http://eeladhesam.com/


http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/3577976220_6551920c3f_o.jpg

♥ விதைக்க அல்ல புதைக்க-சீமான் ♥

மீதமுள்ள தமிழனையும் கொல்ல துணைபோகும் எம்.எஸ் சுவாமிநாதன்: சீமான்



http://4.bp.blogspot.com/_gWe9zl8M1xw/SamLhE-Y4bI/AAAAAAAAAGw/X2oywfwog5s/S300/vanni_20090222009.jpghttp://1.bp.blogspot.com/_66r2YGdc6aI/SLU_07qWg2I/AAAAAAAAARg/HdKvqs9BuvM/S724/untitled.bmp


சிறீலங்கா அரசின் இன அழிப்பு சதிக்கு இந்திய வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் துணை போகிறார் என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை இதழில் அவர் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை:

"ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!" மகிந்த ராஜபக்சவிடம், ஜூன் 9 ஆம் நாளன்று 'இந்திய வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ்.சுவாமிநாதனால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகளாம் இவை.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண் விளை நிலங்களை எதற்கும் உதவாத தரிசு நிலங்களாக மாற்றி, உலகுக்கு உணவளித்த இந்திய விவசாயிகளை இலட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளியவர் என்ற விமர்சனங்களுக்கு உள்ளான எம்.எஸ்.சுவாமிநாதன் இப்படிச் சொல்லி இருந்தால் அது மிகப் பெரிய அவலம்!

சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமேயானால், ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்கண்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டது உண்டு. அந்த 'அறிவார்த்தமான' வாக்கியத்தை முதன் முதலில் கூறியவர் டொக்டர் ஜோசப் மெங்கெல் [Joseph Mengele] என்ற ஜெர்மானியர்.

பல்வேறு நபர்களின் தாடை எலும்புகளின் வடிவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியை மேதைமை படிப்புக்காக 1930-களின் இறுதியில் மேற்கொண்டவர் இவர்.

ஹிட்லரின் நாஜி இராணுவத்தின் மருத்துவராக 1940 இல் சேர்ந்தார். 1943 ஆம் ஆண்டு, மே 24 ஆம் நாளன்று ஆஸ்விட்ச் - பிர்கானாவ் சித்ரவதைக் கொட்டடியில் இருந்த 'நாடோடிகளுக்கான முகாமில்' [Gypsy Camp] மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

உயிருள்ள மனிதர்களின் மீது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. இரட்டைப் பிறப்புக்களின் மீது அவருக்குத் தனிப்பட்ட ஆர்வமிருந்தது. அதுபோல, குள்ள மனிதர்களும் அவருடைய பரிசோதனைகளுக்கு உவப்பான 'எலிகளாக'வே கணிக்கப்பட்டார்கள். அவருடைய ஆய்வுக்காக சுமார் 1,500 இரட்டை ஜோடிகள் பயன்படுத்தப்பட்டனர். தான் மேற்கொள்ளப்போகும் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பல்வேறு இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் நல்ல துணிகளையும், உணவையும் கொடுப்பார்.

இதனைப் பல மாதங்கள் தொடர்வார்..  'மெங்கெல் மாமா... மெங்கெல் மாமா...!' என்று குழந்தைகள் அவரை வளைய வரும்.  திடீரென ஒரு நாளில், அவர்களைத் தன் பரிசோதனைக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார்.  மயக்கம் ஏற்படுத்தும் சாக்லெட்டைக் கொடுப்பார். மயங்கிக் கிடக்கும் குழந்தைகளின் இதயத்தில், அவர்களை உடனே கொல்லும் விஷத்தை ஊசி மூலம் செலுத்துவார்.

குழந்தைகள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களின் அவயவங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பொறுமையாகப் படித்தறிவார். இரட்டையர்களை ஒன்றாக வைத்துத் தைத்து, அவர்களால் உயிர்வாழ முடிகிறதா என்ற 'மகத்தான' ஆய்வையும் அவர் மேற்கொண்டார்.

குழந்தைகளின் கண்களின் நிறத்தை மாற்றுவது எப்படி என்ற ஆராய்ச்சிக்காக பல்வேறு இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் அவர்களின் கண்களுக்குள் செலுத்திப் பார்த்தார். இப்படிப்பட்ட கொடூர ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள ஒரு இடமாக ஆஸ்விச் சித்ரவதைக் கொட்டடி உள்ளது என்பதை அறிந்தவுடன் பிறந்த உற்சாகத்தில், அவருடைய உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்தான்... 'ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!' என்பது.

எம்.எஸ்.சுவாமிநாதன் துணையுடன் சிறீலங்கா அரசாங்கம் நடத்தவுள்ள 'பரிசோதனை'யும் யூத இனத்துக்கு மெங்கெல் செய்த கைங்கரியம் போன்றதுதானா... புதிய விவசாயப் பரிசோதனையில் வன்னிப் பெருநில மக்கள் எலிகளாகப் பயன்படப் போகிறார்களா என்ற அச்சம் எழுகிறது!

வட ஈழ மக்களும் அவர்களின் அவலமும்...

சிறீலங்கா இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நான்காம் ஈழப் போரினால் வன்னிப் பெருநில மக்கள் அனுபவித்த - அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்ல முயலும்போது மொழியும் நம்மைக் கைவிட்டு விடுகிறது. 2007 இறுதியில் வட ஈழத்தின் மீது இலங்கை அரசு போர் தொடுத்தது. 2008 ஏப்ரலில் அது மன்னார் பகுதியை அடைந்தது.

அப்போது வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்து 3 ஆயிரம் ஆகும். போர் முடிந்த இன்றைய நாளில், 2008 ஏப்ரலில் வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்திருந்த 4 லட்சத்து 3 ஆயிரம் மக்களில் வெறும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 632 பேருக்கு மட்டுமே கணக்கு உள்ளது.

35 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதற்கு கணக்கு இல்லை. மே 27 ஆம் நாளன்று அளிக்கப்பட்ட ஐ.நா. சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கணக்கின்படி, அனைத்து அகதிகள் முகாம்களிலும் இருந்த வன்னிப் பெருநில மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 130 ஆகும். ஆனால், அந்த நிறுவனத்தால் மே 30 ஆம் நாளன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 லட்சத்து 77 ஆயிரம் ஆகக் குறைந்திருந்தது.

ஜூன் 15 ஆம் நாளன்று இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 லட்சத்து 62 ஆயிரத்து 632 என மேலும் குறைந்திருந்தது. மே 27-க்கும் ஜூன் 15-க்கும் இடைப்பட்ட 19 நாட்களில் மட்டுமே முகாம்களில் இருந்த 27 ஆயிரத்து 498 பேர் காணாமல் போயுள்ளனர் என்பதுதானே பொருள்? மே 23 ஆம் நாளன்று வவுனியாவின் மெனிக் முகாமில் உள்ள மக்களை ஐ.நா. சபையின் தலைவர் பான் கீ மூன் சந்தித்தபோது, 'என் வாழ்வில் இதுவரை இப்படிப்பட்டதொரு பேரவலத்தை நான் கண்டதில்லை!' என்று பெரிதும் வருந்தினார்.

சில நாட்களுக்கு முன்னதாக இதே மக்களை சந்தித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா, 'இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்!' என்றார்.

'வடக்கின் வசந்தம்' என்ற வஞ்சகத் திட்டம்! இந்த நிலையில்...

மே 7 ஆம் நாளன்று இலங்கை அரசு வன்னிப் பெருநிலத்தினை மீட்டுருவாக்கம் செய்வதற்கான செயற்குழு ஒன்றை அமைத்தது. 19 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தக் குழுவுக்கு இலங்கை அதிபரின் ஆலோசகரும் சகோதரரும் இனவாத கருத்துகளை அள்ளி வீசுவதில் முன்னணியில் நிற்பவருமாகிய பசில் ராஜபக்ச தலைவராக நியமிக்கப்பட்டார்.

மீதமுள்ள 18 பேரில் அதிபரின் மற்றொரு சகோதரரும், 'மருத்துவமனைகளின் மீது குண்டு வீசுவது சரியான செயலே' என்று திருவாய் மலர்ந்தருளிய இலங்கை இராணுவத்தின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவும் ஒருவராவார். உறுப்பினர்களில் 7 பேர் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்தவர்களாகவும் (இதில் இலங்கை ராணுவத்தின் தளபதியான சரத் பொன்சேகாவும் அடக்கம்) 10 பேர் இலங்கை அரசின் நிர்வாகத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர்.

இவர்களில் 18 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இஸ்லாமியர் ஆவார். வன்னிப் பெரு நிலத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தம் திட்டத்துக்கு இவர்கள் இட்டிருக்கும் பெயர்தான் 'வடக்கின் வசந்தம்'. ஒரு இஸ்லாமியரைத் தவிர்த்து, வேறு தமிழர்கள் யாருமற்ற இந்தக் குழுவினால் தமிழர்களுக்காக உருவாக்கப்படவிருக்கும் 'வசந்தம்' எத்தகைய மலர்ச்சியை யாருக்குக் கொண்டுவரும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

'போல்போட்' திட்டம்...'

அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை 180 நாட்களுக்குள் முடிப்போம்' என்று ஜூன் மாதத் தொடக்கத்தில் இலங்கை அதிபர் முழங்கினார். அதை அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறாரோ என்று உலகம் பார்த்திருக்க... நம்மூர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இலங்கை அதிபரின் கண்ணுக்குத் தெரிந்தார்.

ஜூன் 9 ஆம் நாளன்று ராஜபக்சவை சந்தித்து ஆலோசித்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். அப்போது, 'வேளாண் மீட்டுருவாக்கத்தில் ஈடுபட இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஜூலை மாதத்திலேயே தம் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டும்' என ராஜபக்ச, சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, 'வடக்கின் வசந்தம்' திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆண்களே இல்லாத ஈழத் தமிழினத்தை உருவாக்க சதி...

'போரில் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பட்ட சேதம் காரணமாக, வேலை செய்யக் கூடிய வலுவுடைய ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. வேளாண் தொழிலுக்குப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எனவே, வேளாண் ஆராய்ச்சியும் கல்வியும், அவற்றின் திட்டங்களும், பயிற்சி முறைகளும் பெண்களை மனதில் கொண்டே கட்டமைக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் சுவாமிநாதன்.

ஆண்கள் இல்லாத தமிழினத்தை ராஜபக்ச உருவாக்கியுள்ளார் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரத் தகவல் வேண்டும்? 'வவுனியாவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவன வளாகத்திலிருந்து இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் இலங்கையின் வேளான் விஞ்ஞானிகளுடனும், விவசாயிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும். இதில் முகாம்களில் உள்ளவர்களும் கலந்துகொள்ளவேண்டும்.

அக்டோபர் மாதம் விதைப்புக் காலமாகும். எனவே வேளாண் பயிற்சி, திறன் மேம்படுத்துதலுக்கான செயல்களை ஆகஸ்டில் தொடங்கியாக வேண்டும். மண் பரிசோதனை ஊர்திகள், விதைகள், ஊட்டச் சத்துக்கள், கருவிகள் ஆகியவை அனைத்து ஊர்களுக்கும் செப்டம்பருக்குள் சென்றடைய வேண்டும்' என்றும் கூறியுள்ளார் சுவாமிநாதன்.

வேளாண் விஞ்ஞானியின் ஆர்வமும், அதன் பின்னாலிருக்கிற இலங்கை அரசின் அவசரமும் கம்போடியாவை ஆண்ட கொடுங்கோலன் போல்போட் காலம், இலங்கையில் மீண்டும் திரும்பிவிடுமோ என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.

கம்போடிய கண்ணீர்!

1975 ஆம் ஆண்டு ஏப்ரலில் கம்போடிய நாட்டின் அதிகாரத்தை போல்போட் (சலோத் சார்) தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. நகரங்களில் இருந்த அனைவரும் கிராமப்புறங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பொதுமையாக்கப்பட்ட பண்ணைகளில் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாட்டின் வளர்ச்சிக்காக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்தப் பணிகளின்போது மட்டுமே சுமார் 17 லட்சம் மக்கள் மடிந்து போனார்கள். அதாவது, கம்போடியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 21% இல்லாமல் போய் விட்டார்கள்.

வன்னிப் பெருநில மக்களின் துன்பமோ இதை விடப் பெரிது. ஏற்கெனவே கடந்த 13 மாதங்களில் அவர்களில் 35% காணாமல் போயிருக்கிறார்கள். ஆண்கள் அனைவரும் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் முகாம்களில் உள்ள பெண்களையும், சிறுவர்களையும், வயோதிகர்களையும் கிராமப்புறங்களில் குடியமர்த்தி... எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரால் கடுமையாக வேலை வாங்குவதற்கு ராஜபக்ச திட்டம் வகுக்கிறார்.

உறவுகளை இழந்து பட்டினியாலும் நோயாலும் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்தப் பெண்களால், ஆகஸ்ட் மாதம் வேளாண் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு செயல்களில் எப்படிக் கலந்து கொள்ள முடியும்? இழப்புகள், மன உளைச்சல்கள், இடப்பெயர்வுகளால் ஏறத்தாழ நடைபிணங்கள் ஆகிவிட்டிருக்கும், பெண்களின் எஞ்சிய உயிரையும் பறிப்பதற்கான மாற்று ஏற்பாடாக இதை ஏன் கருதக் கூடாது?

போருக்கு உதவி செய்து தமிழினத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்த இந்தியா... இன்று மிச்சமிருக்கும் தமிழர்களையும் தந்திரமான ஒரு திட்டத்தின் மூலம் கொன்று குவிக்க முயலும் இலங்கைக்கு 500 கோடி ரூபாயை அளிக்கப் போகிறதா?  'வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் நோக்கம் ஈழத்தில் பயிர் பண்ணுவது அல்ல... இன்னும் மிச்சம் இருக்கும் தமிழர்களின் உயிர்களை மெள்ள மெள்ளக் கொல்வதுதான்' என்ற அச்சத்தைப் போக்குவதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் என்ன உத்தரவாதம் வைத்திருக்கிறார்? என கேள்வி எழுப்பினார் சீமான்.





                                                                       Www.eeladhesam.com

http://1.bp.blogspot.com/_qsdSxWwgNcY/SZzgrwHLW-I/AAAAAAAAAGc/SFkjm-THw6A/s400/untitled.bmp

♥ "விடுதலைப் புலிகள் கடும் பயிற்சியின் போது நிஜமாகவே சுட்டு சாவது உண்டு"-நக்கீரன் கட்டுரை ♥

உறங்காத கண்மணிகள் உருக்கமான கட்டுரை



http://www.tamilkathir.com/uploads/images/aaivu/2009/01/100108%2011.jpg        http://i39.tinypic.com/jghbh1.jpghttp://eelamvision.com/admin/gallery/news/5.jpg
 


உறங்காத கண்மணி களை அறிவீர்களா? இவர் களின்றி 2000-ம்ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் போ ராட்டம் சாதித்த மிகப்பெரும் ராணுவவெற்றிகள் ஒன்றுகூட சாத்தியப் பட்டிருக்காது.

விடுதலைப்புலிகளின் முன்னணிராணுவ புலனாய்வுப் பிரிவின் பிள்ளைகளுக்குப் பெயர்தான் "உறங்காதகண்மணிகள்'. நிலவு காயும் நாட்கள்தான் இவர்களது தீபாவளி. கனத்த இரவுகளில்
இவர்களுக்கு மட்டும் நூறு கண்கள் திறக்கும். காற்றோடு காற்றாய்ப் போவார்கள். கணப்பொழுதில் வெட்டி மறையும் மழை மின்னல்போல் எதிரியின் தளங்களை ஊடுருவி உட்புகுவார்கள்.

புலிகள் படைத்த ராணுவ வெற்றிகளுக் கெல்லாம் முக்கிய காரணம் அவர்களது
துல்லியமான திட்டமிடல். பிசிரற்ற திட்டமிடலுக்கு ஆதாரத் துணையாய் இருப்பது "உறங்காத கண்மணிகள்' கொண்டுவரும் உளவுத் தரவுகள். எழுத எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை நாம் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அதிசயங்களில் ஒன்று.

ஒரு ராணுவ முகாமை தாக்கி அழிக்கும் முடிவினை தலைமை எடுத்த பின்னர்
முதலில் புறப்படுவது உறங்காத கண்மணிகள். தாக்குதல் தொடங்குவதற்கு
ஓராண்டு, ஆறேழு மாதங்களுக்கு முன்னரே அவர்களது பயணம் தொடங்கும். பெரிய
முகாமென்றால் ஆயிரத்திலிருந்து, ஐந்தாயிரம் ராணுவத்தினர் வரை இருப்பார்கள்.. முட்கம்பி வேலிகள், கண்ணிவெடி வெளிகள், கண்காணிப்புகோபுரங்கள், ஐம்பது மீட்டருக்கு ஒரு காவல் அரண் இவை அனைத் தையும்கடந்துதான் ஓர் இரவுப்பொழுதில் ஊடுருவி உள் நுழைவார்கள்.

உள் நுழைந்தபின் அந்த முகாம் குறித்த முழு தகவல்களையும் திரட்டி வரைபடமாக்கி முடித்த பின்னரே அங்கிருந்து வெளியேறுவார்கள். எங்கெல்லாம் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருக்கின்றன, பீரங்கித் தளம் எந்த இடத்தில் இருக்கிறது, மின் இணைப்புகளுக்கான தலைமையிடம் எங்கிருக்கிறது, முன் அரணில் எத்தனை ராணுவத்தினர் நிற்கின்றனர், அவர்கள் என்ன ரக துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என அத்தனை தகவல்களையும் சேகரித்து முடிக்க பல வாரங்கள் ஆகும். எதிரியின் கண்களில் படாமல் அவர்களது நரம்பு மண்டலத்திலேயே குடியிருந்து இத்தனை நாட்கள் எப்படி அவர்களால் இயங்க முடிந்ததென்பதை அறிந்தால் நீங்கள் உங்களையுமறியாமல் வியந்து தலைபணிவீர்கள்.

இரவுகளில்தான் இவர்கள் இயங்குவார்கள். இயங்கவும் முடியும். பகலெல்லாம்
இவர்கள் எங்கு பதுங்கியிருப்பார்கள் தெரியுமா? இலங்கை ராணுவத்தினர்
பயன்படுத்தும் கக்கூஸ் கழிவுகள் வந்திறங்கும் மலக் கிணறுகளில், ஆயிரம்,
ஐந்தாயிரம் ராணுவத்தினர் இருக்கும் மலக்கிணறு பற்றி எழுதவே நாற்றம்,
அசிங்கமாக அருவருக்கிறது. நினைக்க குமட்டு கிறது. அக்கிணறுகளுக்குள்
நாட்கணக்கில், வாரக் கணக்கில் தங்கியிருப்பதென்றால் எந்தளவுக்கு இலட்சிய
உறுதியும், சுயம் அறுத்த அர்ப்பணமும் வேண்டுமென எண்ணிப்பாருங்கள். இதனை
எழுதுகின்றபோதே அந்தக் கண்மணிகள் காவி யங்கள் படைத்த தமிழீழத் திசைநோக்கி
விழுந்து தொழவேண்டும்போல் உணர்வெழுகிறது.

எதிரியின் பாசறைகளது கழிவுக் கிணறுகளில் பகல் முழுதும் நின்று
சாய்ந்துறங்கி இரவெலாம் கண்விழித்துப் படம்பிடிக்கும் இவர்கள், ஊடுருவி
உள்ளிருக்கும் நாட்களில் வாழ்வது வைட்டமின் மாத்திரைகளில். குடல்வற்றி
சுருங்கி ஒட்டிப் போகாதிருக்கவேண்டி பிஸ்கட்டுகளும் ரஸ்க்கும் கணக்கு
பார்த்துச் சாப்பிடுவார்கள். நன்றாகச் சிங்களம் பேசும் லாவகமும், கூடவே
சுட்டித்தனமும் கொண்ட கண்மணிகளென்றால் நள்ளிரவுவரை வேவுத் தகவல்கள்
சேகரித்துவிட்டு சிலமணிநேரம் ராணுவத்தினரின் கூடாரங் களிலேயே
படுத்துறங்கி வேடிக்கை செய்வதும் உண்டாம். இயக்கம் இட்ட பணி முழுமையாய்
முடிந்தபின் உள்துழைந்ததுபோல் ஓர் இறுக்கமான இரவில் வெளியேறுவார்கள்.
பிடிபட்டு கொடும் சித்ரவதைகளுக்குப்பின் கொல்லப்படும் துயரங்களும்
நடப்பதுண்டு.

உறங்காத கண்மணிகள் கொண்டுவரும் தரவுகளின் அடிப்படையில் எதிரியின் முகாம்
போலவே ஒன்றை கட்டியெழுப்பி உருவாக்கு வார்கள் புலிகளின் பயிற்சிப்
பிரிவினர். முன்பொரு கட்டுரையில் தமிழீழ வரலாறு தந்த ஈடு இணையற்ற
பயிற்றுவிப்பாளர் கடாஃபி அவர்களை கெஞ்சி மன்றாடி பயிற்சி முகாம் ஒன்றினைப் பார்வையிட்டது பற்றிக் குறிப்பிட்டி ருந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். எந்த இடத்தில் என்ற விபரக் குறிப்பை இங்கு தவிர்க்க விரும்புகிறேன்.

பயிற்சி முகாம் நுழைவாயிலில் அவர்கள் பொறித்து வைத்திருந்த இரு வசனங்கள்
மறக்க முடியாதவை.. வாயில் முகப்பில் அவர்கள் எழுதியிருந்தது: ""கடுமையான
பயிற்சி, இலகுவான சண்டை.'' எத்துணை பெரிய உண்மையை மின்னிடும் சொல்லாடல்.
கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை. காட்டுவெளி போன்ற புதர் பரப்பில் துண்டோ, பாயோ இன்றி தரையில் படுத்துறங்க வேண் டும். பாம்பு வரலாம், தேள் கடிக்கலாம், எதுவேண்டுமானாலும் தங்கள் மீது ஊரலாம். நள் ளிரவு 12 மணிக்குத் தான் படுத்திருப் பார்கள். மூன்று மணிக்கு விசில் ஊதப்படும். மின்னல் வேகத்தில் துடித்தெழுந்து ஆயுதத்துடன் முடை நாற்றமெடுக்கும் இடுப்பளவு சாக்கடைக்குள் குதித்து நிலை யெடுக்க வேண்டும். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு அசையாது அப்படியே நிற்கவேண்டும். உடலைவிட மன
உறுதிக்குத்தான் இங்கு பயிற்சி. பயமும், பணிந்து போகும் குணமும், தாழ்வு மனமும் இயல்பிலேயே கொண்டதொரு இனத்தினது மரபணுவில் போர்க் குணம் ஏற்றிப் புடமிடும் பாசறை!

பயிற்சி முகாம் நுழைவாயிலில் பொறித்து வைத்திருந்த பிறிதொரு வசனம்.
""ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.''
உபயம் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார்கள்..

""இந்த என் கையாலேயே எங்கள் செல்வங்களை ஏழு போராளிகளை நான்
கொன்றிருக்கிறேன்'' என்று கடாஃபி சொல்லும்போதே அவரது உடல் அதிர்ந்து
கண்கள் ஒருகணம் துயரத்தில் ஆழ்ந்ததை கவனித் தேன். "உறங்காத கண்மணிகள்'
கொண்டுவரும் தகவல்களின் அடிப்படையில் எதிரி முகாமையே "டம்மி' உருவாக்குவார்களென்று சொன்னே னல்லவா? ஆனால் பயிற்சியோ நிஜ சண்டையாக
இருக்கும்.. புலிகளே இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் சிங்கள
ராணுவம்போல் நிலையெடுப்பார்கள்.

உதாரணமாக, உறங்காத கண்மணிகள் தந்த தகவலின் படி எதிரி முகாமின் முன்
அரங்கில் மூன்று அரண் நிலை களும் அவற்றின் பின் முப்பது ராணுவத்தினர் ஏ.கே.47 துப்பாக்கிகளோடும் நிற்கிறார்களென்றால் அவ்வாறே இங்கும் புலிகள் அதே ஆயுதங்களோடு நின்று சுடுவார் கள். நிஜமாகச் சுடுவார்கள். அதனை எதிர்கொண்டு எப்படி அந்த அரண் நிலைகளை தாக்கி கைப்பற்றுவதென்பது தான் பயிற்சி. மின்னல் மழைபோல் பீறிப் பறந்து வரும் துப்பாக்கி ரவைகளின் தூரம்- வேகம் இவற்றை கணநேரத் தில் கணித்து தலையை தாழ்த்தியும் வலது இடது புறங்களில் வெட்டிச் சரிந்தும் தரையில் பொத்தென விழுந்து படுத்தும் அவர்கள்களமாடும் காட்சியினை இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்குகிற வலு உங்களதும்
எனதும் இதயங்களின் ரத்தக்குழாய்களுக்கு நிச்சயம் இல்லை.

கடாஃபி சொன்னார் : ""என்ட கையாலெ ஏழு போ ராளிகள் செத்தது தாங்கஏலா வேதனைதான். ஆனா அத்தகைய பயிற்சியாலெ நிஜ சண்டையில் எழுநூறு போராளிகளின் உயிரை நாங்கள் பாதுகாக்கிறோம்'' ஆம் கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.

இதுவரை எழுதிவிட்டு இரவு 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றேன். அதிகாலைவரை உறக்கம் வரவில்லை. குவார்ட்டர், பிரியாணி, கைப்பணம் இல்லாமல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக்கூட தொண்டர்கள் இல்லை என்ற அரசியல் களப்பணி காட்சியை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கண்ட எனக்கு உறங்காத கண்மணிகளின் நினைவு உயிரைப் பிழிந்தது. முன்பொருமுறை நான் குறிப்பிட்டதுபோல் சிலுவைப் போர்களுக்குச் சென்றவர்களுக்கும், ஜிகாத் போருக்குப் போனவர்களுக்கும் மரணத்திற்குப் பின் பரலோகப் பரிசு இருந்தது.

ஆனால் தமது தமிழ் தலைமுறைகள் ஒருநாள் விடுதலைபெற்று சுயமரியாதையுடன் தமது
தாயகத்தில் வாழ்வார்கள் என்பதைத் தவிர இந்த உறங்காத கண்மணிகளுக்கு வேறென்ன இருந்தது? இத்துணை அர்ப்பணமும், தியாக உணர்வும் கொண்டு வரலாற்றுப் பேரதிசயமாய் எழுந்த ஒரு விடுதலை இயக்கத்தை உலகின் அத்தனைபேரும் சேர்ந்து முற்றுகையிட்டு, வதைத்து தகர்த் திட தமிழ் இனம் என்னபாவம் செய்தது... நாமெல் லாம் கையாலாகாத வர்களாய் பார்த் திருக்கவல்லவா இக் கொடுமை நடந்தேறி யது... என்றெல்லாம் எண்ண மனம் உண்மையிலேயே ஆற்றுப் பெற முடியாமல் தவிக்கிறது.

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பில் இருந்தபோது போராளி ஒருவர் பகிர்ந்து கொண்ட பிறிதொரு பதிவு இதனை படிக்கிற உங்களால் மரணம்வரை மறக்க முடியாத
ஒன்றாய் இருக்கும். பெருமழை பெய்த ஒரு நாள். இடத்தின் பெயர் சரியாக ஞாபகம் இல்லை. கஞ்சிக்குடிச்சி ஆறு என்று நினைக்கிறேன். சிறியதோர் ராணுவ முகாம் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்துவிட்டு திரும்புகிறார்கள் 17 போராளிகள். திரும்பி வரும்வேளை அக்காட்டாற்றில் பெருவெள்ளம். கடக்க முடியாதென்ற நிலை. ஆற்றின் அப்பக்கமாய் இருந்த தம் தளத்திற்கு "வாக்கி-டாக்கி'யில் பேசி கயிறு கொண்டு வரச்செய்து எப்படியோ இருபுறமும்
இழுத்துக் கட்டி அதைப் பிடித்துக்கொண்டே ஆற்றைக் கடக்கிறார்கள். இவர்கள் நட்டாற்றை கடக்கையில் பிற முகாம்களிலிருந்து திரண்டு வந்த சிங்கள ராணுவத்தினர் கயிறை அறுத்துவிட 17 பேரையும் பெருவெள்ளம் அடித்துச் செல்கிறது. ஆற்றங்கரைகளை அறிந்தவர்களுக்குத் தெரியும், கரையோரங்களில் மரமும் இல்லை- செடியும் இல்லை என்பது போன்ற ஒருவகை புதர்கொடி இருப்பது. அப்படியொரு புதர்கொடியை ஒரு போராளி பற்றிப் பிடித்துக்கொள்கிறார். அடுத்த நிமிடம் வெள்ளம் அடித்துவரும் இன்னொரு போராளியும் அதே புதர்கொடியை பிடிக்க எத்தனிக்கிறார். முதலில் அக்கொடியை பிடித்து நின்ற போராளிக்குத்
தெரிகிறது இரண்டு பேரையும் தாங்கும் வலு அந்த புதர்கொடிக்கு நிச்சயம்
இல்லையென்பது. இரண்டாவது வந்த போராளி கொடியைப் பிடிக்க கையை நீட்டவும்
முதற்போராளி, ""நீ பத்திரமா போய் சேர்ந்திடப்பா'' என்று சொல்லிக்கொண்டே
தன் கையை எடுத்து பெருவெள்ளத்தோடு போகிறார். எங்கோ கடலுக்குள் போன அவரது
உடல்கூட கிடைக்கவில்லையாம்.

தமிழர்களே, நண்பர்களே! கேளுங்கள், உரத்துச் சொல்கிறேன். அருட்குருவாகிய நான் அந்த புதர்கொடியினை முதலில் பிடித்தவனாய் நின்றிருந்தால் நிச்சயம் இன்னொருவருக்காய் என் கைகளை எடுத்திருக்கமாட்டேன். நம்மில் பைபிள், குர்ரான், நாயன்மார்கள், ஆழ்வார் களையெல்லாம் படிக்கிற எத்தனைபேர்  இத்தகைய தியாகத்திற்குத் தயாராகியிருப் போம் என ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். கண்கண்ட எங்கள் தெய்வீகச் செல்வங்களே நீர் வாழ்ந்த திசை நோக்கி கரம் கூப்பினோம்.

ஜெகத் கஸ்பாரின் மறக்கமுடியுமா? நக்கீரன் வார இதழிலிருந்து




                                                                       Www.eeladhesam.coM

http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/02/pooralikal.jpg          http://www.defence.lk/presentation/Elephant/content/bin/images/large/Body_of_a_LTTE_terrorists_found_in_a_marshy_land.jpg


http://www.thedailyindian.com/wp-content/uploads/2009/03/ltte.jpg               http://www.instablogsimages.com/images/2009/04/06/ltte_forces_web_H4Dvp_3868.jpg




smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!