Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, October 30, 2009

♥ உயிர் தப்பினான், ராஜபக்சே...! ♥

அச்சில் ஏறாத இன்றைய செய்தி?




மாம் இந்த செய்தியை இன்று நீங்கள் எங்குமே படித்திருக்க முடியாது.

தென்னிந்தியாவில் கொடி கட்டிப் பறக்கும் டிவி சேனல் சன் டிவிக்கு டெல்லி உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.இதற்கு காரணம் பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான டி-சீரிஸ் நிறுவனம் தான்.

டி- சீரிஸ்(t-series) நிறுவனம் ஒரு புகழ் பெற்ற பொழுது போக்கு இசை நிறுவனமாகும். திரை ப்பாடல்கள், காட்சிகள்,ஆல்பங்கள் போன்றவை மட்டுமல்லாமல் டிவி,கேசட்,சிடிபிளேயர் போன்றவைகளையும் தயாரித்து வருகின்றன.


இதன் படைப்புகளை பல முன்னணி சேனல்களில் நாம் காணலாம்.அதை ஒளிபரப்ப அனுமதி மற்றும் ஒளிபரப்ப உரிமை ஒப்பந்தம் ஆகிய நடைமுறைகளுக்குப் பின்தான் ஒளிபரப்ப வேண்டும்.ஆனால் ஏராளமான சேனல்களில் இவை ஒளிபரப்பாகி வந்தன.

எவை உரிமை பெற்று செய்கின்றன,எவை அனுமதிக் காலம் கடந்தும் ஒப்பந்தக் காலம் கடந்தும் ஒளிபரப்புகின்றன என்று ஆய்வு செய்த போது விதிமுறைகளை மீறி சன் நெட் ஒர்க் ஒளிபரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

டி-சீரிஸின் தயாரிப்புகள்,பாடல்கள்,காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவை,இவற்றை விநியோகம் செய்து பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இந்நிலையில் விதிமுறைகளை மீறி டிவி சேனல்கள் ஒளிபரப்புவது சட்ட விரோதம் என்று சென்னையை தலைமை இடமாகக் கொண்ட சன் நெட் வொர்க் தலைமைக்கும் ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் 'என்டிவி' சேனலுக்கும் டி-சீரிஸ் நிறுவனம் பலமுறை நினைவூட்டுக் கடிதம் சட்டப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பு போன்றவை அனுப்பியும் அவை தங்களது இந்த உரிமை மீறலை தொடர்ந்து கொண்டிருந்தன.

இதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் டி-சீரிஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்ததுடன் இந்த வழக்கு தொடர்பான ஆடுக்கடுக்கான ஆதாரங்களையும் எடுத்து வைத்தது.

வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் உரிமை மீறி ஒளிபரப்பு செய்ய சன் நெட் வொர்க் மற்றும் என் டிவி 24 தெலுங்கு நியூஸ் சேனலுக்கும் இடைக்காலத்தடை ஆணை எண்கள் CS(OS)1742/2009.CS(OS)1459/2009 1A 10152/2009) மூலம் தடை விதித்துள்ளது.

இதனால் இனி மேற்கண்ட இரண்டு சேனல்களிலும் முறையான அனுமதி பெரும் வரை இனி டி-சீரிஸ் தயாரிப்புகளின் பாடல்கள்,காட்சிகள் என்பனவற்றை நாம் காண முடியாது.

இது குறித்து டி சீரிஸ் நிறுவனத்தின் டைரக்டர் திவ்யா கோஸ்லாகுமார் கூறும்போது...

எங்கள் நிறுவனம் இசையுலகில் நல்ல பெயர் பெற்றுள்ள ஒன்றாக விளங்குகிறது.'டி-சீரிஸ்' நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்தும் போது, உரிய கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுத்தான் ஒளிபரப்ப வேண்டும்.அப்படி செய்யாமல் ஒலி,ஒளிபரப்புவது காப்புரிமை சட்ட மீறலாகும்.எங்கள் பாடல்கள் மற்றும் காட்சிகளை நம்பி பல நிறுவனங்கள் மூதலீடு செய்துள்ளன இந்நிலையில் எங்கள் படைப்புகளை விதி மீறி ஒளிபரப்புவது,காப்பி எடுத்து பயன்படுத்துவது போன்றவைகளை எங்களால் அனுமதிக்க முடியாது என்றார்.

டெல்லி உயர்நீதி மன்றத்தின் இந்த இடைக்காலத்தடை காப்பியடிப்பதையே காப்பிரைட்ஸாக எண்ணிச் செயல்படுவோர்க்கு நல்ல பாடமாக இருக்கும் என்று
http://tamizhanban.files.wordpress.com/2009/10/karunanidhi-sonia1-300x293.jpg


கோணல் கலைஞர், நேர்மையான நேரு...!


"சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெற்று இறந்துபோன மனைவி கமலாவின் உடலைப் பார்க்க ஜவஹர்லால் நேரு சென்றார். அதற்குப் பக்கத்து நாடுதான் இத்தாலி. அந்த நாட்டின் கொடுங்கோலன் முசோலினி, இரங்கல் செய்தி கொடுத்தார். தன்னுடைய நாட்டுக்கு நேரு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் அபிசீனியா மீது போர் தொடுத்து, அந்த மக்கள் மீது நச்சுக் குண்டுகளை முசோலினி வீசியிருந்தார். 'ரத்தக் கறை படிந்த பாசிஸ்ட் முசோலினியின் அழைப்பை ஏற்று அவர் கரங்களைக் குலுக்க மாட்டேன்' என்று கம்பீரமாக மறுத்து சந்திப்பைத் தவிர்த்தார் நேரு. அந்த மனிதநேயத்தை கருணாநிதியிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த முன்மாதிரியைப் பின்பற்றும் பக்குவம் கருணாநிதிக்கு இருந்திருக்க வேண்டும்! அபிசீனிய மக்களுடன் நேருவுக்கு எந்த ரத்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களுடன் கருணாநிதிக்குத் தொப்புள்கொடி உறவு உண்டு. ரத்தக் கறை படிந்த ராஜபக்ஷேவின் அழைப்பை ஏற்க கருணாநிதிக்கு எப்படி மனம் வந்தது?..."

_பழ.நெடுமாறன்


http://www.tamilkathir.com/uploads/images/videos/Nedumaran.jpg


http://www.freewebs.com/thelark06/feminism04.gifhttp://gloryofwomen.files.wordpress.com/2008/11/woman-in-action.jpg


உயிரோசையில் பெண்களை பற்றிய ஒரு கட்டுரை

சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது...



சில நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன்.`சரித்திரத்தில் பெண்கள்` எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320பக்கங்களை கொண்ட இப்புத்த்கத்தில் சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. 'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை. என்று கூறும் நூலாசிரியர் அதற்கான காரணங்களை இந்நூலில் விவாதிக்கிறார்

4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது.எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை 'பாரோ' என நாம் அழைப்போம். 'பாரோ' என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்.

எகிப்திய சரித்திரத்தில் மீண்டும் இக்கொடுரம் ஏற்பட்டது. இம்முறை இரண்டாம் ராம்சேஸ் எகிப்திய 'பாரோ'வாக இருக்கிறான். அவன் ஒரு கொடுங்கோலன். ராம்சேஸின் மனைவியான 'ஆசியா' அவனை எதிர்க்கும் பொருட்டு அவளுக்கு பல கொடுமைகளை விளைவிக்கிறான். ஆசியாவை சிறையெடுத்துக் கொடுமைச் செய்கிறான். கடைசியாக குத்துயிரும் கொலை உயிருமாய் இருந்த அவள் மார்பில் ஈட்டியை எய்தி கொல்கிறார்கள்.

மனிதனுக்கு சிந்தனைத் திறன் இருந்தும் அவன் உணர்ச்சிக்கே அதிகமாக இடம் கொடுக்கிறான். நாம் நாகரீகத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்து இருப்பினும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு என அனைத்தும் குருட்டு நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.

நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன.ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.

கிரேக்க நாகரீகத்தில் ஏறக் குறைய கி.மு 850 முதல் 480க்குள் பரவலாக நடந்த சம்பவம் உள்ளது. அக்காலகட்டத்தில் பெண் குழந்தைகளை கொலை செய்வது சாதாரண ஒன்றாக இருந்தது. 'எதென்ஸ்' மக்கள் பெண் என்பவளை ஒரு மதிப்பற்ற பொருளாகவே கருதினார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாகவும், குழந்தைகளை பெற்றுப் போடவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள்.

கிரேக்கர்களின் பார்வையில், பெண்ணானவள் வீட்டு வேலை செய்பவளாகவும், திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்பவளாகவும் மட்டுமே தெரிந்தாள். கிரேக்க அரசாங்கமும் பெண்களை நாட்டின் சுமை எனக் கருதியது. இதற்கு காரணம் பெண்களால் போரிட முடியாமல் இருந்தது, அரசாங்கத்தை தேர்வு செய்ய ஓட்டு போடும் உரிமையும் பெண்களுக்கு இல்லை. இது போக சொத்துகளை வாரிசு வகிக்கும் தகுதியும் பெண்களுக்கு இல்லை. 'டெல்பி'யில் இருந்த 6000 குடும்பங்களில்1 சதவீகிதத்திற்கு குறைவான பெண்களே இருந்தார்கள்.

நபிகள் நாயகத்தின் தோன்றலுக்கு முன் அரேபிய மக்கள் பண்பினால் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அவர்களை ஜாஹிலியா காலத்து மக்கள் எனக் கூறுவார்கள். ஜாஹிலியா காலத்து ஆண்கள் மிகக் கொடுரமானவர்களாகவும், ஒழுக்கங் கெட்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பெண்களை தங்களது காம இச்சையை தீர்க்கும் போக பொருளாக பயன்படுத்தினார்கள்.

அவர்களின் உடல் பசியை தீர்த்துக் கொண்ட பின் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்துவார்கள். பல இன்னல்களுக்குப் பிறகு அப்பெண்ணிற்கு மிக மலிவான பணத்தைக் கொடுப்பார்கள்.அப்பணம் அவளது ஒருவேளை உணவை வாங்குவதற்கே போதுமானதாக இருக்கும். அடுத்த வேளை உணவுக்காக அவள் மீண்டும் ஆணை நோக்கி போவாள்.உடலை விற்பனை செய்து,கூடவே வேதனைகளையும் வாங்கிக் கொண்டு பணம் புரட்டுவாள்.

தனது சந்ததியினர் இப்படிபட்ட இழி நிலையினால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதையே பெற்றோர்களும் நினைப்பார்கள். அதனால் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துவிடுவார்கள்.

கி.மு 580களில் சீன தேசம் 'கம்பூசியஸ்' மதத்தின் ஆதிக்கத்தில் இருந்தது.அக்காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நாட்டின் முக்கிய தலைவர்கள் இறந்து போவாராயின் அவர் மனைவியை புதைக்க மாட்டார்கள் மாறாக அப்பெண்ணின் தொப்புள் முதல் தொடை வரை இரும்பு கலசங்களைக் கொண்டு பூட்டிவிடுவார்கள்.தனது வாழ்நாள் முடியும் வரை அப்பெண் மற்ற ஆடவரோடு எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை பொருட்டு இப்படி செய்வார்கள்.

'ஜேக் தீ ரீப்பர்' பல மர்மக் கொலைகளை செய்த ஆசாமி. 19ஆம் நூற்றாண்டில் பிரிடானிய அரசாங்கத்திற்குத் தலைவலி கொடுத்ததில்லாமல் மக்களையும் பீதியில் ஆழ்த்தியவன். யார் இவன்? 'ஜேக்' விலைமாது பித்தன் என அறியப்பட்டான். இவனே நவீன சரித்திரத்தில் முதன் முதலாக பல மர்மக் கொலைகளை செய்தவனாகவும் கருதப்படுகிறான். பெண்களை அனுபவித்த பின் அவர்களின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக நறுக்கி போட்டுவிடுவான்.

இதனை அடுத்தாற் போல் 'எட்வட் கெய்ன்' என்பவனும் பெண்களுக்கெதிராக பல கொடூர கொலைகளை செய்திருக்கிறான். அவற்றுள் இரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவனது மர்மமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு 'தீ சைக்கோ' மற்றும் 'சைலன்ஸ் ஆப் தீ லேம்ப்' எனும் இரு ஆங்கில படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

'கேய்ன்' இறந்த பெண்களைத் தோண்டி எடுத்து அவர்களின் உறுப்புகளை வெட்டி தனது அழகு சாதனமாக வைத்துக் கொள்வானாம். அவன் பிடிபட்ட சமயம் பெண்களின் மர்ம உறுப்புகளைக் கொண்டு அவன் உருவாக்கிய பல அழகு சாதனப் பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளார்கள். ஜேக் மற்றும் கேய்ன் இருவரும் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் பெண் வர்கத்தினருக்கு பெரும் கேடாகவே கருதப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பெண்களின் நிலையை சற்று அலசி பார்த்தோமேயானால் சோகத்தின் சாயல் அங்கும் ஒட்டி இருப்பதைக் காணலாம். பெண்களின் நிலை கேவலப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைப்படச் செய்கிறது. பல நூறு சீன, கொரிய மற்றும் பிலிபீன்ஸ் தேச பெண்கள் ஜப்பானிய இராணுவத்தின் காம பசிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.இதில் அதிகம் பாதிகப்பட்டது சீனர்களே. இதற்குக் காரணம் சீனர்கள் மீது ஜப்பானியர்களுக்கு இருந்த தனிபட்ட வீரோதமேயாகும்.

போரில் ஈடுபடுவது இராணுவமாக(ஆண்கள்) இருந்தாலும் அதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே உரித்ததாய் அமைந்தது. பிள்ளைகளுடன் கைவிடபட்ட தாய் வறுமையில் வாடினாள். அப்படிபட்ட தாய்மார்கள் கொலையுண்டபோது அவர்களின் பிள்ளைகளும் தவிப்புக்குள்ளாகினர்.

1993ஆம் ஆண்டு போஸ்னியாவில் நிகழ்ந்த இன ஒழிப்புப் போர், 'சேச்னீயயாவில் 1994ஆம் ஆண்டும் மற்றும் 1996ஆம் ஆண்டு'கோசோவோ'வில் நடந்த போர்களிலும் பெண்களே மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம்தான் என்ன? பெண்கள் அழிக்கப்பட்டால் சந்ததியனர் உருவாவதை தடுக்க முடியும் என்ற எண்ணமே முக்கிய காரணமாகும்.

இப்போர்களின் சமயம் பெண்கள் மீது வெடி குண்டெறிந்தார்கள், மாதமாய் இருந்தவர்களை உதைத்தார்கள், அவர்கள் வயிற்றைச் சுட்டும் வெட்டியும் கொன்று போட்டார்கள். உதாரணமாக போஸ்னிய போரின் போது பல போஸ்னிய பெண்களை சைபீரியர்கள் கற்பழித்தார்கள். பிறக்கும் குழந்தையின் உடலில் சைபீரியர்களின் இரத்தமும் கலந்திருக்க வேண்டும் என்ற இன வெறியே இதற்குக் காரணம்.

தமிழ் நாட்டில் சில கிராமப் பகுதிகளில் வரதட்சணை பிரச்சனை அதிகமாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொலைசெய்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கு விவசாய உரமோ அல்லது நெல் மணிகளோ கொடுப்பார்கள், முகத்தை ஈர துணியால் மூடிவிடுவார்கள், கழுத்தை நெறித்தும் அல்லது பசியால் வாட வைத்தும் சாக விட்டுவிடுவார்கள்.

சீன தேசத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பெண் சிசு கரு கலைப்பு அதிகம் நடந்தது.கருவிலேயே சாகடிக்கப்பட்ட சிசுவை சீன உணவகங்களுக்கு மருத்துவ உணவு செய்யும் பொருட்டு விற்பனை செய்துவிடுவது கொடுமையினும் கொடுமை.

2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாக்கிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.

இப்படியாக சரித்திரம் தொட்டே பெண்களுக்கெதிரான கொடுமைச் செயல்கள் நடந்து வந்திருக்கிறது. இப்போது நவநாகரிக உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும் பாலியல் கொடுமைகள் ஆங்காங்கெ நடந்த வண்ணமே உள்ளன. மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசாக ஒட்டிய பயத்துடனே பெண்கள் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினால் மிகையாகாது.

பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும்.மதிக்கப்பட வேண்டும்.



--
களத்துக்கு வந்தபின் காயம்படுமென கலங்குவது வீரத்துக்கு அழகில்லை...

நான் மறத்தமிழச்சி...

யவனராணி
yavanarani1989@gmail.com

http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/03/women-strugle.jpg http://islamhadhari.net/wp-content/feminism.bmp

நீங்க இன்னும் எத்தனை வருஷம் உயிரோட இருப்பீங்க...?


1991 ஆம் ஆண்டில் இந்தியரின் சராசரி ஆயுட்காலம் 57.9 ஆண்டுகள்.

1996 ஆம் ஆண்டில் 60 ஆண்டுகள்.

2001 ஆம் ஆண்டு 63 ஆண்டுகள்.

தற்போது ...?
65 ஆண்டுகள்!

http://www.eif.co.uk/files/images/Orchestra-of-the-Age-of-Enlightenment.jpg


"வீல்சேரும்" வெற்றிச் சிகரமாகும்...!

http://xavi.files.wordpress.com/2008/07/11.jpg
உண்மைச் சம்பவங்கள்

சம்பவம் 1 :

எனது நண்பர் ஒருவர் திருப்பூரில் Textile Industry நடத்தி வருகிறார். நல்ல வருமானம், கார், பங்களா, வாழ்க்கை இப்படி இருந்தபொழுது சோதனை, தோல்வி, தோல்வி, தோல்வி.

கடைசியில் வெறும் ஆளாக நின்றார். பங்களா பறிபோனது, கார்கள் போய்விட்டன. கடைசியில் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர வேண்டிய நிலைமையாகிவிட்டது. உலகமே சிரித்தது. உலகம் மதிக்கவில்லை. ஆனால் இவர் கலங்கவில்லை. ‘இப்பொழுது என்னிடம் ஒன்றும் இல்லை. ஆனால், எதிர்காலத்திலும் ஒன்றுமில்லை என்று பொருளில்லை. நான் இப்போதைக்கு இந்த வேலையைச் சரியாகச் செய்வேன்” என்று தீவிரமாக அந்தக் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார்.

இருந்தாலும் “வாழ்க்கை முழுவதும் இப்படியே இருக்கமாட்டேன். மீண்டும் வாழ்க்கையில் ஜெயிப்பேன்” என்றதீவிர எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டிருந்தார்.

இப்படியிருந்த போது Purchase Department-ல் பொருட்களை வாங்கும் பகுதியில் இவருடைய பொறுப்பு. இதில் பல இடங்களுக்குச் சென்று பல பொருட்களை ர்ழ்க்ங்ழ் செய்ய வேண்டும். வாங்க வேண்டும்.

இப்படி செய்து வந்த பொழுது ஒரு முக்கியமான அம்சத்தை இவர் கவனித்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் மிக அதிக விலைக்கு விற்பதை கண்டுள்ளார். அதற்கு அதிக போட்டியும் இல்லை. ஆனால் உண்மையில் அதன் உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு. ஆனால் விற்பனை விலையோ மிக அதிகமாக இருந்தது. இவருடைய எண்ணத்தில் “ஏன் இந்தப் பொருளை நாம் தயாரிக்கக் கூடாது” இந்த எண்ணம் மனதிற்கு வர வர அதைப் பற்றிய விபரங்களை எல்லாம் சேகரித்து வைத்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து ஒரு வாடகைக் கட்டிடத்தில் தனது தொழிலை ஆரம்பித்தார். ஏற்கனவே வேலையில் இருந்த போது நிறையத் தொடர்புகள் இருந்தது. நிறைய order இவருக்குக் கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து மீண்டும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆனார்.

அவர் என்னுடைய பயிற்சியில் ஈரோட்டில் கலந்து கொண்டபோது சொன்னார். “என்னுடைய முதலாளியுடன் விலை உயர்ந்த காரில் கம்பெனி கூட்டத்திற்காக சென்று கொண்டிருந்தேன். இதேபோல் விலையுயர்ந்த காரை மீண்டும் வாங்குவேன் என்று முடிவெடுத்தேன். இன்று உங்கள் பயிற்சிக்கு அந்தப் புதிய காரில் தான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். இது உண்மைச் சம்பவம்.

மீண்டும் உலகம் பாராட்டியது. நண்பர்களே! இவர் அடைந்தது தோல்வி; அடைந்தது வீழ்ச்சி. ஆனால், மனத்தை அத்துடன் நிறுத்திவிடவில்லை. மீண்டும் ஜெயிப்பேன் என்றஉணர்வு அவரை மீண்டும் ஜெயிக்க வைத்தது.

தொழிலில் எத்தகைய தடங்கல் வந்தாலும், சோதனை வந்தாலும் அதையும் வாய்ப்புகளாகப் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால் வெற்றி நிச்சயம். இதன் பெயர் Positive Thinking அதாவது உடன்பாட்டு எண்ணம் வேண்டும். அதேபோல என்ன சிக்கல், தடங்கல் வந்தாலும் அதிலும் ஏதேனும் செய்ய முடியும் என்றநேர்மறையான எண்ணம் வேண்டும். இந்த மனநிலை இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் வெல்வார்கள்.

சம்பவம் 2 :

ஒரு அமெரிக்க ஆசிரியப் பெண்மணி வாழ்க்கையில் நிகழ்ந்தது. தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை பெரிய கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று வைத்திருந்தார். பலர் அவரை கேலி செய்து கொண்டு இருந்தார்கள். ‘நீயோ ஆசிரியர், நீ எப்படி அவ்வளவுப் பணத்தை சம்பாதிக்க முடியும்’ என்று.

ஆனால், அவர்களைப் பொறுத்த அளவில் தன்னுடைய இலட்சியத்தில் தெளிவாக இருந்தார்.

இப்படி வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஒருமுறை ஒரு விபத்து ஏற்பட்டு ‘வீல்சேரி’ல் அமர வேண்டிய நிலைமையாகி விட்டது. அதாவது வீல்சேரில்தான் போகமுடியும், வரமுடியும். முழுமையாக பாதிப்பு. எல்லோரும் சொன்னார்கள் ‘இனி வாழ்க்கை முடிந்து விட்டது’ என்று. ஆனால், அந்தப் பெண்மணி ‘என் உடல்தான் முடங்கிவிட்டது. உள்ளம் முடங்கவில்லை. நிச்சயம் இந்த வாழ்க்கையில் என்னுடைய இலட்சியத்தை அடைந்தே தீருவேன்’ என்று தீர்க்கமாக இருந்தார்கள்.

இப்படி இருந்து கொண்டிருந்தபோது, இவர்களுக்குள் ஒரு சிந்தனை இந்த ‘வீல்சேர்’ வசதியாக இல்லை. நல்ல வசதியான ஒரு வீல்சேரை நாம் ஏன் தயாரிக்கக் கூடாது என்றஎண்ணம் ஓடியது. இதையே ஒவ்வொரு நாளும் சிந்தனை செய்து அந்தச் சேரில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ செய்து கடைசியில் ஒரு அற்புதமான வீல்சேரை உருவாக்கினார். அந்த ‘வீல் சேரை’ இரண்டு மூன்று வகைகளில் தயாரித்து மக்களிடம் சோதனைக்கு அனுப்பும்போது, இது மிக அற்புதமாக இருக்கிறது என்று படிப்படியாக ஆர்டர் வந்தது. இதை அவர்கள் ஒரு ஒர்க்ஷாப்பில் தயாரிக்க கொடுக்க ஆரம்பித்து, படிப்படியாக வளர்ந்து அந்த ‘வீல்சேர்’ மூலமே ஒரு பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.

இதுவரை வீல்சேர் தயாரித்தவர்கள் நல்ல நிலைமையில் இருந்தவர்கள். அவர்கள் தயாரித்த ‘வீல்சேர்’ அவ்வளவு வசதியாக இல்லை. ஆனால், அந்த வலியும், வேதனையும் உடைய இந்தப் பெண் தயாரித்ததால் அது மிகச் சிறந்ததாக – பொருத்தமானதாக இருந்தது.

சாதாரண மனிதர்கள் விபத்தானவுடன் முடங்கியிருப்பார்கள். ஆனால் விபத்தையே -பிரச்சனையையே ஓர் வாய்ப்பாகச் சாதனை யாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

“பாதைகளை வழிமுறைகளை மாற்றுவேன். ஆனால், இலட்சியத்தை மாற்றமாட்டேன். அடைந்தே தீருவேன்” என்றதீவிர எண்ணம், அசைக்க முடியாத ஸ்திரமான எண்ணம் கொண்டு விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்!

http://www.thannambikkai.net/2009/10/01/3034/


http://1.bp.blogspot.com/_CDZ8icXOCOA/SkuaniGda2I/AAAAAAAAAIk/c8mimuGlBBY/s400/thannambikai.jpg

http://2.bp.blogspot.com/_IHEYt68CXns/SkWvE1lrZcI/AAAAAAAABZs/jivVxvY5jTc/s320/Self01a.jpg

உயிர் தப்பினான், ராஜபக்சே...!

மகிந்த இராஜபக்சேவை கொலை செய்ய எத்தனித்ததாக ஒருவரையும் மற்றும் ஒருவரையும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சிறீலங்கா குற்றப்புலனாய்வு துறையினர், கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளனர்.

இவர் அச்சுவேலியை சேர்ந்தவர் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்றும் சிறீலங்கா புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மகிந்த இராஜபக்சேவை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி ஏற்கனவே, இராணுவ கேணல் ரஞ்சித் பெரேரா, அவரது மனைவி கரீமா ஹமீட், ராமசாமி பிரபாகரன் மற்றும் சானுக்க கலுதேரா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறீலங்கா இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் தகவல்களின்படியே யாழ்ப்பாணத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

http://www.meenagam.org/?p=14702


உடன் பிறப்பே!

http://3.bp.blogspot.com/_HlzI8HlQrEU/SrX1vpxZ89I/AAAAAAAAAcg/nuP8k_W_ciA/s400/karu2.jpg


போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.

பெரியாறு போனால் என்ன?

காவேரி காய்ந்தால் என்ன?

கச்சத் தீவு தேய்ந்தால் என்ன?

மீனவன் மடிந்தால் என்ன?

இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன?

கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்குக் கிடைத்த ஆயுதங்கள்.

தம்பி! தேர்தல் வந்துவிட்டால்
பம்பரமாய் பாடுபட்டு,

அடித்த பணத்தை அள்ளிக் கொடுத்து,
இலவசங்களை எடுத்து வீசி,
வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா!

என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே!

போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.


நன்றி
கழக காளை
தட்ஸ்தமிழ்

http://www.tamilspy.com/wp-content/uploads/2009/08/Vavuniya.jpg


http://www.maalaimalar.com/Articles/1f1f30b2-e26d-4783-98d6-6b4363bdd3dc_300_225secvpf.gif

http://www.vikatan.com/av/2009/may/27052009/p9.jpg



அதிர்வு இணையதளத்தில் தற்போதைய தலைவர் பிரபாகரன் போட்டோ

இந்த படம் சொல்லும் செய்தி என்ன என்று குறிப்பிட்டுள்ளார்கள். கண்டிப்பாக தற்போதைய பிரபாகரன் என்பது தெளிவாக தெரிகிறது. தலைவரை வெகு நாட்களுக்கு பின் காண்பது போன்ற ஒரு சந்தோசம் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்ட மாதிரி உள்ளது.


அதிர்வு இணையதளத்தித்கு செல்ல மேலே உள்ள இணைப்பினை அழுத்தவும், தலைவரை நீங்கள் அங்கு காணலாம்.


♥ அழகிய தமிழ் மகள் விஜய் ♥










விஜய் - யாரு? தெலுங்கு படத்த அப்படியே டிரஸ் காலர கூட மாத்தாம முக்கியமா, மகேஷ் பாபு படாத ரீமேக் பண்ணுற sorry xerox copy அடிகிறவன் பேர் தான் விஜய்


For Excellent vijay Getup see the last image at the end of this mail

Doctor 1 : என்ன ஆச்சு ?

Doctor 2: ! suicide atmpt.

விசமா இருந்தா கூட காப்பாத்திருக்கலாம் பட் அல்லு விவரமா "விஜய் " படத்த புள்ள பாத்து இருக்கன் !!!!!!!!!!!!


1. Life history of vijay

Totally 47 films

20 films REMAKE

5 films - Telgu movies utter flop

8 films - story copied

1 film - pokiri Xerox copy

5 films - Malayalam remake

39 films remake out of 47

Only 8 films had original script in which 5 were flop

He is the one & only copy star of Indian cinema

Inda naiku Doctor pattam vera

Illaya THALAVALI vijay, don't delete immediately




2. Bharathiyar Feelings

In heaven:

செல்லமா - அய்யய்யோ ..!! என்னங்க பண்றீங்க ?

பாரதியார் - பத தெரியல தூக்கு மட்டிக்றேன்

செல்லமா - நாம்தான் எஅர்கணவ செத்துடோமே !!

பாரதியார் - கண்ட ___ எல்லாம் என்ன மாத்ரி வேஷம் போட்டுட்டு வில்லு powerfullu nu பஞ்ச் டயலாக் பேசும்போது என்னகு marupadiyum சாவனும் பொல்லா இருக்கு



சாதனைகள்

Russians: We are living in 48 deg cool temp we are great

Africans: We are living in 48 deg heat v are great

Tamilan: We are living even after seeing 48 vijay films. Goyala yarkitta......



3.Blue cross:

Blue cross has put enquiry on vijay because lot of kuruvi has

attempted suicide for mis using their name.



4. CSK intro

vijay wants intro with CSK players.

vijay: Hai i am one of the top actor in tamil cinema.

Hyden: Ah Gud joke...அபஎ மச்ச ntini நீயும் ஹீரோ தண்டா

Dhoni: மச்சி ... ntiniku சந்தோசத்த பாரு ... பாலாஜி டூ உ க்நொவ் ஹிம் ??

Balaji: தெரியல மச்சான் தியேட்டர்ல TEa குடுகற பையன் மாறி இருக்கான் ..

Vijay: சத்தியமா நான் actor தண்டா .

Morkel : தம்பி joke adichacu podum .... poi tea eduthukutu vaa.

Fleming : Enaku sakara jasthia.

vijay(crying) : Dai naan actor than da nambunga da... Appa paru naba matrenganunga.

SA: Vidu magesh babu padathaium un padathium pottu kattu kandipa
nambuvanunga



6. Chess comedy:

Ajit - chess vilaiyaada povom varingala?

vijay - neega pou ground la wait pannunga naan sports shoe pottutu varean.

vijay rocks



7. Pava manipu:

Reporter: Oru padam mudicha piragu neenga enna pannuveenga?

vijay: Simple chruchla poi pava manipu kaepean.




8. Best comedy:

Vadivel : Nan than periya comedian

Vivek: Ella nan than periya comedian

Santhanam: Dai methuva peasunga pakkathula "vijay" irukkaru


9. National anthem:

Viajy to prabhudeva: Indha patu superah Iruke idha Namba Padathula
Remake panalama

Prabu Deva: Dei nasama ponavane Adhu Desiya Geetham da



10. Easy way to die:

Easy way to die:

1. Smoke daily - u will die 10 years early

2. Drink Daily - u will die 30 years early

3. Love a girl truly - u will die daily

4. But see vijay poster u will die suddenly

Yena koduma sir ithu


11 Diff between kamal and vijay

Difference between kamal & vijay:

Kamal acts in 10 diff role in one film(original).

but vijay acts in same role in 10 different dupping films.


12. Director comedy:

Director comedy :

Director - Vadivelu podalama, Illa karunas podalama

Vijay - Comedy kuda nane pannuran sir

Director - Comedy neenga than panringa nan hero yara podalamnu think panran


13. Doctor vijay:

Dr. vijay sslc goes 2 a shop & shouts where is the free gift with this
mineral water.

Seller: There is no free gift with this

Vijay: But on the lable its written bacteria free. I am doctor u can't cheat me

Enjoy non stop doctor vijay comedies

Driver - Sorry sir petrol mulusa dry aagidichi , inimel oru adi kuda munnadi nagarathu

Dogtor vijay - Hmm.. sari reverse edu veetukavathu pokalam


14. Exam hall:

Ajith & vijay writing semester exam:

vijay : Thala konjam answer kattunga

Ajit: Hindi paper da idhu unnaku tamil exam da

vijay: Parravala adha kattunga na tamila remake pannikuraen

Thala: Idhuku picha edukalaam

vijay: yevalavo panrom idhu panna maatomaa......


15. Exclusive vijay comedies

Exclusive vijay comedies:
1. How a police can wear boot cut and have style hair?(pokiri)

2. How to go to final match after losing semi finals?(Gilli)

3. How to become boxer in 1 day & 1 song? (Badri)

4.How to do uncle job perfectly?(shajahan)

5.How to come alive even after dying?(puthya geethai)

6. And finally having a long jump record for a half a KM in kuruvi....
Still to be continued :-) enna koduma sir idhu....


16. TV special:

Customer. Intha TV velai enna?

Salesman: 1,00,000 sir

Cus: Appadi enna special?

Salesman: Tv la "vijay" program vanda aduve thana vera channel maridum


17. Suntv:

vijay : Namma suntv mela case podanum

Manager : Ethukku sir

vijay : Ennoda aduthapadam hit aagumnu sonnatha vilayatu seithil la pottu irukanga



Azhagiya tamil magal ival………..!

Ladies getupla naan models vida romba alagaaaaaa irukkenla Azagia Tamil magal needan needan nae









பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...


http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg

Tuesday, October 27, 2009

♥ டேய்..! ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான். ♥

http://1.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sprv4YlDuXI/AAAAAAAABJs/PqCH4_1D1nc/s320/see.jpg





" இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்."

இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.

தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகமெங்கும் கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார் சீமான். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமம் தீலீபன் திடலில் நேற்று பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

அவர் கூறுகையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் முதன் முதலில் பேருந்துகளை ஓடவிடாமல் தடுத்து நிறுத்திய மண் இந்த வடகாடு மண். அது மட்டுமல்ல; இது பாவாணன் உலவிய மண். இந்த மண்ணில் நான் பேசுவதை பெருமையாக நினக்கிறேன்.

சுதந்திர இந்தியாதான். ஆனால் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? நம் இனம் சுதந்திரமாக இருக்கிறதா? இல்லையே. இது எப்போது மாறும்.

ஈழம் அவ்வளவுதானா. பிரபாகரன் செத்துட்டார் என்று சொல்வது உண்மைதானா என்று கும்பகோணத்தில் என்னிடத்தில் அழுதாள் ஒரு தமிழச்சி. நான் அவளிடம், கலங்காதே. ஈழக்கனவுகள் நிறைவேறும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஆண்ட பரம்பரை மாண்டு கிடக்கிறதே. இதைப் பேசுவது தேசப் பிழையா?. அமெரிக்காவில் கூட புலிகள் இயக்கத்தை பற்றி பேச உரிமை இருக்கிறது. அங்கே ஒரு கையில் புலிக் கொடியும் மறுகையில் பிரபாகரன் படமும் ஏந்தி போராட்டம் நடத்த முடிகிறது. ஆனால் இந்தியாவிலோ அது முடியவில்லை.

இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான். ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய். நீ எங்களைப் பார்த்து மிரட்டுகிறாய்.

அண்ணன் ப.சிதம்பரம் சொல்கிறார்...10 மாதத்தில் இலங்கை கடற்படையினரால் ஒரு தமிழக மீனவர் தாக்கப்படவில்லையென்று. இனிமேல் தாக்குபவர்கள் தயவு செய்து ப.சிதம்பரம் முன்பு தாக்குங்கள். அப்போதுதான் அவருக்கு தெரியும்.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்று எஸ்.எம்.கிருஷ்ணா சொல்கிறார். அது என் பாட்டன் சொத்து. இதை சிங்களவனுக்கு கொடுக்க நீ யார்?.

முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்படுகிறார்கள் என்று இங்கே ஆளாளுக்கு கதை விடுகிறார்கள். உறவினர்கள் இருப்பவர்ளை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை மட்டும் உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

தமிழர்களை அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பவில்லை. அதிலும், முகாம்களிலுருந்து அனுப்பப்பட்டவர்களில் பலரை வேறு இடங்களில் வைத்துக் கைது செய்து எங்கோ கொண்டு சென்று விடுகின்றனர்.

பொதுவாக தமிழர்களை வறண்ட பூமியில் தான் குடியமர்த்துகின்றனர். சிங்களர்களை வளமான பூமியில் குடியமர்த்துகின்றனர். இது என்ன கொடுமை. எம் மக்களுக்கு வறண்ட பூமி. சிங்களவர்களுக்கு வளமான பூமியா?.

அதிகம் நெல் விளைந்த பூமி கிளிநொச்சி. அங்கே எம் மக்களை இன்னும் குடியமர்த்தவில்லை. கண்ணிவெடி அகற்றுகிறோம் என்கிற பெயரில் நாடகமாடுகிறார்கள். கிளிநொச்சியில் கண்ணி வெடி என்பதே இல்லை. இருந்தால்தானே அகற்றுவதற்கு....

அரசியல் இயக்கமாக மாற்றும் நோக்கில்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறோம்.

2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். 2014ல் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். இயக்கத்தை பலப்படுத்துவதே முதல் நோக்கம். அது சட்டமன்ற தேர்தலுக்குள் முடியாது என்பதால்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று காங்கிரசை தோல்வியடையச் செய்ய வேண்டும். இரண்டாவது, தமிழனை தனித்துப் பிரிக்க வேண்டும். இதனால்தான் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

இந்த தேர்தலின் மூலம் தமிழன் இருக்கிறானா? இல்லையா? என்பது தெரிந்து விடும்.

காமராஜர்தான் உண்மையான காங்கிஸ்காரர். அவர் காலத்தில் நாங்கள் வளர்ந்தோம். காமராஜரை பார்க்காத இப்போதிருக்கும் காங்கிரஸகாரர்கள் காமாராஜரா?அது யார் என்று கேட்கிறார்கள்.

காமராஜரோடு காங்கிரஸ் அழிந்துவிட்டது. காங்கிரஸ் மீண்டும் வர வேண்டுமானால் காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் காமராஜர் ஆனால்தான் உண்டு. ஆனால் இது நடப்பது சாத்தியமில்லை.

காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜர் பெயரைக்கூட சொல்ல தகுயில்லை. ஒரு முறை தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்கையில் ஒரு குழுந்தை ஆற்றில் விழுந்திருக்கிறது. உடனே காமராஜர் தேசியை கீதத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு குழந்தையைக் காப்பாற்றினார்.


உயிருக்கு பிறகு தான் தேசியகீதம் என்கிறார். ஆனால், இலங்கையில் எத்தனை உறவுகள் மடிகின்றன. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினான் பாரதி. இன்று ஒரு இனமே அரை வயிறு சோற்றுக்காக கையேந்தி நிற்கிறதே. என்ன கொடுமை.

இலங்கை சென்று வந்த எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. அழகிரி, ’இலங்கையில் அமைதி நிலவுகிறது. தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆமாம், அமைதியாகத்தான் இருக்கிறார்கள். சுடுகாடு எப்போதும் அமைதியாகத்தானே இருக்கும் என்றார் சீமான்.



தமிழனைதேடிக் கொண்டிருக்கிறேன்: ராமதாஸ்

http://1.bp.blogspot.com/_G300mEFhsyg/ScozTtrmpXI/AAAAAAAAAVY/RS58DbB1VsY/s400/478275375_1eed2c7606.jpg


"டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னார் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது....
"



திண்டிவனத்தில் ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ‘’கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஈழபிரச்சினைக்காக இந்த இயக்கம் பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ஒரு ஆண்டாக நாம் போராடியபோதும் தமிழர்கள் ஒத்த குரல் எழுப்பவில்லை. தமிழனை தேட வேண்டியுள்ளது.

டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னார் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன்.

தாய் தமிழ்நாடே என்ன செய்கிறாய்? என உலகத் தமிழர்கள் கேட்கின்றனர். மேலும் அவர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளோம் என்கின்றனர்.

ஒவ்வெரு முறையும் நான் கடிதம் எழுதிய பிறகுதான் முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். டெல்லிக்கு தாங்கள் சென்று திரும்பியபின் இன்று வரை தலையை தாழ்த்தி கொண்டிருக்கிறோம். ஒன்றுமே நடக்க வில்லை என்பதால் தான் மக்களிடம் பிரச்சினையை கொண்டு செல்கிறோம்.

இலங்கை பிரச்சினைக்காக 16 பேர் தீக்குளித்தனர். ஆனால் 7 கோடி தமிழர்களிடம் எந்த சலனமும் எழ வில்லை.

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. விடுதலை போராட்டம் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. பிரபாகரன் தீவிரவாதி கிடையாது.

இலங்கை பிரச்சினையில் தமிழக அரசு எதுவும் செய்ய வில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது எதிர் கட்சியாக இருந்த தி.மு.க., இலங்கை பிரச்சினைக்காக எப்படியெல்லாம் முழங்கியது? பேரணிகள் நடத்தியது? ஆனால் இன்றைய நிலை என்ன?

விடுதலைப்போர் என்றைக்கும் முடிவுக்கு வராது. அரசியல் தீர்வுக்கு தயாராக இல்லை.

தமிழர்களிடையே ஒற்றுமை கிடையாது. பீகாரை சேர்ந்த ஒருவன் மும்பையில் தாக்கப்பட்டால் பீகார் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதே போல்தான் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

விரைவில் இலங்கை மண்ணில் தனிநாடு உருவாகும். அதற்காக நாம் பாடுபடுவோம்’’என்று தெரிவித்தார்.

http://www.tamilamutham.net/test/images/stories/sept09/Mann.jpg

மீனுக்கும்
மீனவனுக்கும்
ஒரே பாடை....
படகு!
_கவிஞர் தாமரை

http://4.bp.blogspot.com/_oJQaUAHT-5M/So06X39VoEI/AAAAAAAAAAM/vbQnN-YEr2w/s320/thamarai201.jpg



[Eelam.jpg]

[UN.jpg]

மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்







மரபணு பயங்கரம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்கள் சாம்பார் வைப்பதற்காக காய்கறியை எடுப்பதற்கு பிரிட்ஜை திறந்தால் அங்கேயிருக்கும் தக்காளி உங்களைப் பார்த்துவிட்டு தாவிக் குதித்து ஓடஆரம்பிக்கும். கத்தரிக்காய் ஜம்ப் பண்ணி ஓடிப்போய் டைனிங்டேபிள் அடியிலே ஒளிந்து கொள்ளும். முருங்கைக் காயைப் பிடித்து இழுத்தால் அது வராமல் முரண்டு பிடிக்கும். இதெல்லாம் கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் கூடியவிரைவில் இதுபோல நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கெல்லாம் காரணம் இந்த மரபணு மாற்றம் தான். மரபணு (DNA) குறித்து நமக்கு ஓரளவிற்குத் தெரிந்திருக்கும். ஆனால் அது என்ன மரபணு மாற்றம். ரொம்ப சிம்பிள். இப்ப ஒரு தவளையைப் பிடித்து அதன் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் செலுத்தி விட்டால் அது தான் மரபணு மாற்றம்.

அப்படி அந்த தவளையின் ஜீன் மூலம் உற்பத்தியாகும் தக்காளியை கீழேவிட்டால் அது குதித்து குதித்து ஓடஆரம்பிக்கும். இது கற்பனையல்ல. நிஜம்.தாவரவியலில் மெண்டல் சோதனை என ஒன்று இருக்கிறது. அதாவது அந்த சோதனையை செய்தவரின் பெயர் மெண்டல், அவர் மெண்டலா என்று நமக்குத் தெரியாது.அந்த ஆள் தான் முதலில் இந்த மரபணு சோதனையைச் செய்து வெற்றியடைந்தார். அதாவது பட்டாணிச் செடியில் குட்டை,நெட்டை ஆகிய ரகங்களை வைத்து அதன் மரபணுக்களை விதவிதமாகக் கலந்து பல புதிய‌ வெளியீடுகளை உருவாக்கினார். அதன் பின்னர் இந்த மரபணு சோதனை பல உயிரினங்களில் பரிசோதிக்கப் பட்டது. குறிப்பாக பசுமாட்டில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல புதிய புதிய கலப்பிணங்கள் உருவாக்கப் பட்டன.

ஜெர்சி,சிந்து (நடிகை சிந்து அல்ல) என பல விதமான இனங்கள் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக நம்ம நாட்டு மாடு, பொழுதுக்கும் புல்லைத் தின்றுவிட்டு மிஞ்சி மிஞ்சிப்போனால் 4 லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். அதை நம் குடியானவர் 8 லிட்டராக்குவது வேறு கதை. அதற்குப் பிறகு மரபணு மாற்றத்தோடு வந்த இந்த புதியமாடல் டெக்னாலஜி பசுக்கள் ஆவினுக்கு பால் ஊற்றும் டேங்கர் லாரியைப் போல மாறிவிட்டன‌.எத்தனை லிட்டருங்க? என்று கேட்டால் சும்மா 40 லிட்டர் தான் என சாதாரணமாகச் சொல்கிறார் விவசாயி. இத்தனைக்கும் இந்த மாடுகள் நாட்டு மாடுகளை விட குறைவாகத்தான் சாப்பிடுகின்றன. இது தான் மரபணு மாற்றத்தின் விளைவு. அதன் பலன் ஆரம்பத்தில் மிக நன்றாகத்தான் இருக்கும். பலன் மற்றதை விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் விளைவுகள் நமக்கு கடைசிவரை தெரியவே தெரியாது. அன்றைக்கு இருந்த நோய்களை விட பல மடங்கு இன்றைக்கு நோய்கள் அதிகமாகிவிட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம். உணவே மருந்து என்ற நிலை மாறி இன்றைக்கு மருந்தே உணவு என ஆகிவிட்டது.

இது போன்ற ஒரு மரபணு மாற்றம் செய்யப் பட்ட பருத்திவிதையை அமெரிக்கா கண்டிபிடித்து அதைச்சோதனை செய்வதற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது.விளம்பரம் செய்தால் போதும் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தைக் கூட சுத்தமான இளநீர் என குடிப்பார்கள் என்ற 23ம்புலிகேசியின் வாக்குப்படி என்ன கருமத்தையோ சொல்லி அந்தப் பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளிடம் தள்ளிவிட்டனர் அமெரிக்க ராசாக்கள்.. அவர்களும் அதை விதைத்து விட்டு பஞ்சி வெடிக்கும் .., பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சி அல்ல.., அவர்களின் நெஞ்சிதான். மஹாராஷ்டிரா,ஆந்திரா என விவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த நிலங்கள் வேறு பயிர் செய்வதற்கு ஏற்றாக இல்லாமல் விசமாக மாறியது.

அத்தோடு கொஞ்ச நாள் அடங்கிப்போயிருந்த அமெரிக்காவின் கொட்டம் இப்போது மீண்டும் அடுத்த சோதனைக்குத் தயாராகிவிட்டது. எத்தனை முறை ஏமாற்றினாலும் மறுபடியும் நம்புவார்கள் என்ற அமெரிக்காவின் நம்பிக்கை இந்தியாவிடம் வீண் போகவில்லை. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சோதிக்க முடிவெடுத்து களம் இறங்கிவிட்டது. மாண் சாண்டோ என்ற அமெரிக்க மாமாவின் டுபாகூர் கம்பெனி தயாரிப்பில் பி.டி (B.T) என பெயரிடப்பட்ட கத்தரி விதைகளை இந்தியாவிலே பரப்ப அனுமதி கொடுத்துவிட்டார் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே முல்லைப்பெரியாரு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் இந்த அதிபுத்திசாலி,இப்போது இந்தியாவிற்கே ஆப்பு வைக்கத் தயாராகிவிட்டார்.

இந்த கத்தரி விதைகளைப் பயிரிட்டால் அதைப் பூச்சி பிடிக்காதாம். காரணம் அந்த விதையில் செலுத்தப் பட்டுள்ள பாக்டீரியாக்கள் அதைத் தடுத்துவிடுமாம். அப்பறம் அந்த கத்தரி விதை பயிரிட்ட நிலத்தில் வேறு எதுவும் பயிரிட முடியாதாம். கத்தரி மட்டும் தான் பயிரிட முடியுமாம். அதுவும் அந்த நிறுவனத்தின் பி.டி விதைகள் மட்டும் தானாம். நாட்கள் செல்லச் செல்ல அந்தச் செடிகளைப் பூச்சிப் பிடிக்க ஆரம்பிக்குமாம்.

ஆனால் அதற்கான மருந்தையும்அவர்களே தந்துவிடுவார்களாம்.பின்னர் அவர்கள் வைத்தது தான் விலையாம். நாட்கள்போகப்போக தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளில் தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்வரும் போது இன்றைய கத்தரிக்காய் விலை நிலவரம் என்ற புதிய பகுதியும் வரவாய்ப்பிருக்கிறாம். ஆக இதுதான் நவீன விக்கிரமாதித்தனின் நவீன காலனி ஆதிக்கம்.
வெறும் 3 மாதங்கள் மட்டுமே பரிசோதிக்கப் பட்ட இந்தக் கத்தரிக்காய்களை சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் விளைவுகள் நம் மரபணுவையும் மாற்றி புற்றுநோய், காசநோய், ஈரல் பாதிப்புகள்,கிட்னிகளை செயலிழக்கச் செய்தல் போன்ற பலவிதமான வியாதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தும் என நம்மூர் இயற்கை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் இந்த கத்தரிக்காய்களை அறவே தடைவிதித்து விட்டனர்.ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் இதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.

நேற்று முன்தினம் உழவர் பேரியக்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கத்தரிக்காய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன. கேரளாவில் இந்தக் கத்தரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாள்வார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்படியே மரபணு மாற்றம், விஞ்ஞான ஏற்றம் என விதைகளின் வீரியம் அதிகமாக அதனால் பூச்சிகளின் வீரியம் அதிகமாக அதனால் மருந்துகளின் வீரியமும் அதிகமாகி இதே போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிற போக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும் என்பது நிதர்சனமான உண்மை.





http://etiroli.blogspot.com/2009/10/blog-post_28.html


போரின் இறுதிப் பத்து நாட்களில் 5,000 அதிகமான சிங்களப் படையினர் பலி! ஜெனரல் சரத்பொன்சேகா





வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 5000-க்கும் அதிகமாக படையிர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

அமெரிக்கா வாசிங்டனில் உள்ள புத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் போர் உக்கிரமடைந்த நிலையில் மே 7ம் நாள் தொடக்கம் மே 17ம் நாள் வரையிலான 10 நாட்களில் 5 ஆயிரத்திற்கு அதிகமான படையினர் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

http://kavishan.blogspot.com/2009/10/5000.html


மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளதா?


"கடவுளையே கண்டுபிடித்துக் கொடுக்க மனிதர்கள் (காவல்துறையினர்)தான் தேவைப்படுகிறார்கள்.
...."


நேற்று மாலை ஏடுகளில் ஒரு பரபரப்பான செய்தி.

50 கோடி ரூபாய் மதிப்புள்ள திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாம். இந்த மரகதலிங்கத்தை இந்திரனே பூஜித்து வந்தானாம். (இடையில் விட்டுவிட்டானோ!)

லிங்கம் என்றால் ஆண் குறி! அது மரகதத்தில் செய்யப்பட்டதாம்! ஆகா, எப்படிப்பட்ட பக்தி!

இன்னும் இந்த மரகதலிங்கத்துக்கு என்ன கூடுதல் விசேஷம்? (கதை அளப்புக்கு என்ன பஞ்சமா?).

அந்த மரகதலிங்கத்தை முசுகுண்ட சக்ரவர்த்தியிடம் கொடுத்து ஏழு பிரசித்திப் பெற்ற கோயில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருமாறு இந்திரன் கூறினானாம்.

இதன் பொருள் என்ன? இந்த மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளது என்பதுதானே இதன் அய்தீகம்.

இவ்வளவு சக்தி வாய்ந்த அதுவும் தேவர்களின் தலைவனான இந்திரனே வழிபட்டு வந்த லிங்கத்தை கொள்ளையர்கள் எப்படி திருடியிருக்க முடியும்?

அப்படி திருடியிருக்கிறார்கள் என்றால் இந்த லிங்கங்கள் தெய்வ சக்தி வாய்ந்தவை என்பதெல்லாம் அசல் டூப்பாக இருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதானே உண்மையாக இருக்கவேண்டும்.

நம் முன் நிற்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். மரகதலிங்கத்துக்குத் மகாசக்தி உண்டென்றால், அதனைத் திருடிச் செல்ல முடியுமா? அதனைத் திருடியிருக்கிறார்கள் என்பதிலிருந்து லிங்கத்துக்குச் சக்தியாவது, புடலங்காயாவது என்பதை மரியாதையாக, நாணயமாக ஒப்புக்கொள்ள வேண்டுமா இல்லையா?

இந்த சிவலிங்கத் திருடர்களைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி யார் தெரியுமா? காதர் பாஷா.

இது என்ன அநியாயம்? சிவலிங்கத் திருட்டை ஒரு சாயபு கண்டுபிடிக்கலாமா? என்று அக்ரகாரத்தார் அலறக்கூடும்.



கடவுளையே கண்டுபிடித்துக் கொடுக்க மனிதர்கள் (காவல்துறையினர்)தான் தேவைப்படுகிறார்கள்.

கடவுளை மற, மனிதனை நினை! என்ற பெரியார் வாக்கு பலித்ததா இல்லையா?

--------------- மயிலாடன் அவர்கள் 27-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

http://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_28.html

Sunday, October 25, 2009

♥ இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர் நக்கீரன் தொடர்....! ♥

அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன



இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.

இக் கொலைகள் எப்போது நடைபெற்றன என்ற விவரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆதலால் இந்தப் புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள், வாசகர்களே.

பெண்கள் உட்பட சுமார் 4நால்வர் இங்கு கொலைசெய்யப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் இவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கான சான்றுகள் இவர்கள் உடல்களில் இருக்கின்றன. எனவே இது குறித்த தகவல் யாருக்காவது தெரியும் என்றால் அதிர்வுடன் தொடர்புகொள்ளவும்.

athirvu@gmail.com







http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=712






இலங்கை மீதுள்ள போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா


இலங்கையில் இந்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை நடந்த யுத்தத்தில் 170 சர்வதேச சட்டமீறல் சம்பவங்கள் இடம் பெற்றன என்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இரு தரப்பாலும் கொல்லப்பட்டனர் என்றும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், செய்தி நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை தெரிவித்த பகிரங்கப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் செய்மதிப்படங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தயாரித்துள்ள 68 பக்க அறிக்கையிலேயே இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் அனுபவித்த அவலங்கள் குறித்து மிகவும் வேதனையளிக்கக்கூடிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அதிகாரிகள் தாம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்துவதாகக் கூறியுள்ளதால் அமெரிக்கா அதை ஏற்றுக்கொண்டு இலங்கையில் உண்மையில் பக்க சார்பற்ற விசாரணை நடக்கிறதா என பார்க்கபோவதாக இந்த அறிக்கைக்கான விசேட தூதர் ஸ்ரீபன் ரப் கூறினார். இதேவேளை அமெரிக்க ஒதுக்கீட்டு உபகுழுவின் தலைவரும் இந்த அறிக்கைக்கான அனுமதியை வழங்கியவருமான செனட்டர் பட்ரிக் ஜே.லீகே இலங்கையில் இரு தரப்பும் மிக மோசமான யுத்த மீறல்களில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் முழுமையாகத் தீர்ந்துபோயுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி யுத்தத்தின் போது தாக்குதல்கள், வன்முறைகள், பட்டினி, மருந்துப் பற்றாக்குறை போன்றவற்றின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களின் நிலையையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை ஒவ்வொரு மீறல் சம்பவங்களையும் திகதி வாரியாக விவரித்துள்ளது. அதிலுள்ள சில விடயங்களாவன:

- ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் பல தடவைகள் விடுதலைப்புலிகள் இளைஞர்கள் பலரை பிடித்துச் சென்றனர். ஆனால் இக்காலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை சரியாகக் கிடைக்கவில்லை.
- போர்க் காலத்தில் ஏற்பட்ட மரணங்கள், காயங்கள் குறித்த முக்கியமான பல விவரங்கள் பதியப்படவில்லை என்றபோதும், ஆனால் அரச படையின் பெருமளவு ஷெல் தாக்குதல் பாதுகாப்பு வலயத்தின் மீது இடம்பெற்றன.

- பொதுமக்கள் வெளியேற இரு தடவைகள் 48 மணித்தியால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், அந்தக் காலம் முடிவடைவதற்குள் அரச படைகள் மீண்டும் ஷெல் தாக்குதலை ஆரம்பித்தனர். அதோடு விடுதலைப் புலிகள் பெருமளவு பொதுமக்களை வெளியேற விடாமல் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்தனர்.

- இலங்கைப் படையினர் சட்டவிரோதப் படுகொலைகளை மேற்கொண்டனர்.

- மோதலின் இறுதிக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைவதற்காக சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்து, இணக்கப்பாடு ஏற்பட்ட போதிலும் கூட, அவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
எனக் கூறப்பட்டுள்ளது.

அதிர்வு இணையம் மீது கஸ்பர் அடிகளார் கடும் கோபம்














நக்கீரன் இதழிலும், இணையம் ஊடாகவும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் அதிர்வு குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பலர் இவர் எழுதுவதைப் இப்போது படிப்பது இல்லை என்றாலும், பொறுப்புள்ள இணையம் என்றவகையில் அதைப் படித்த சிலருக்கு நாம் விளக்கம் கூறியாகவேண்டும். அதிர்வு இணையத்தளம் நடத்துபவர் விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் எனவும், பின்னர் பொட்டு அம்மானால் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் கஸ்பர் புணைந்துள்ளார் ஒரு சிறுகதை. அத்துடன் அதிர்வு இணைய நிர்வாகி இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் சேர்ந்து பலகாலமாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள கஸ்பர் அடிகளார் , பின்னர் போர் உக்கிரமடைந்தக் காலத்தில் தேசியத்தலைவர் அதிர்வு நிர்வாகியை அழைத்ததாகவும் அவர் நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்ததாகவும் கூறியுள்ளார்.


இலங்கை புலனாய்வுத் துறையுடன் நீண்டகாலமாக சேர்ந்தியங்கும் ஒருவரை தேசிய தலைவர் ஈழத்திற்கு வருமாறு அழைப்பாரா ? அடிமுட்டாளான கஸ்பர் இப்போது இவ்வுலகில் இல்லை, கனவு லோகத்தில் சஞ்சாரம் செய்கிறார். யாரிடமோ விசாரித்துவிட்டு அதனை அப்படியே சிறு பிள்ளைத் தனமாக எழுதுகிறார். அதற்குப் பிரபல நாளிதழ் ஒன்று களம் அமைத்துக் கொடுக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டம் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ள இவ் வேளையில், அரசியல் போராட்டத்தில் எமது சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுக்க நாம் அரும்பாடுபடும் வேளையில், இந்திய மத்திய அரசின் உதவியுடன் அடிகளார் அதனைத் கவுக்கப் பார்க்கிறார்.


ஈழ விடுதலைப் போராட்டத்தை அதன் உன்னதத்தை விற்கவேண்டாம் என அதிர்வு வேண்டிக்கொண்டது, தமிழ் மக்களின் வாழ்க்கையோடு விளையாடவேண்டாம் என அது அவர்களைக் கேட்டுக்கொண்டது. அதில் பிழை எதுவும் இருப்பதாக நாம் கருதவில்லை. முன்னுக்குப் பின் பல முரணான தகவல்களுடன் மெகா சீரியல் எழுதுவதும், அதனை பரபரப்பாக்கி விற்றுச் சம்பாதிப்பதையும் நாம் நாளாந்தம் பார்க்கிறோம். அதிர்வு இணையத்தில் எழுதப்பட்ட கருத்துக்களால் ஆடிப்போயுள்ள கஸ்பர் அவர்கள் தற்போது புலம் பெயர் தமிழர்களின் இணையமான அதிர்வை நேரடியாகத் தாக்க முனைவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.


தடைப்பட்டுள்ள எங்கள் போராட்டங்களை முன்னெடுத்தல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராடுதல் என அதிர்வு இணையத்திற்கு பல பொறுப்புகள் இருக்கிறது, இவரைப் போன்ற விமர்சகர்களின் விமர்சனத்திற்கு நாம் முகம் கொடுத்து எமது காலத்தையும் நேரத்தையும், வீணடிக்க விரும்பவில்லை. யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்பதை இனி வரும் காலம் சொல்லும், கஸ்பரின் முகத்திரை கிழிக்கும் ... தெரு நாய் குரைக்கிறது என்று நாமும் குரைக்க முடியுமா ?

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=726


சடலங்கள்-எலும்புக்கூடுகள் மீது 9-வது உலகத்தமிழ் மாநாடு

http://adhikaalai.com/images/stories/users/karunabeard.jpg

ஈழத்தில் பூவும் பிஞ்சும் கருக்கப்பட்ட வாசம், உலகின் மூக்கில் நாறுகிறது. விருட்சங்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட பின்னரும், சல்லி வேர்களைத் தோண்டி அழிக்கும் மனித வேட்டைகள் தொடருகின்றன. சிங்கள வெறிச் சிப்பாய்கள் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு இரை கொள்வதை போராயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். முகாம்களிலிருந்து பிரிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள், 27 ஆயிரம் இளைஞர்கள் எந்த சிங்கத்தின் குகைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? வீடு எங்கே, ஊர் எங்கே, நிலம் எங்கே, வாழ்வு எங்கே என்ற மிகப்பெரிய கேள்விகளோடு மூன்று லட்சம் தமிழர்கள் வெற்று வெளியை நோக்கி வெறித்த, நிலைகுத்திய பார்வையுடன் துக்கித்து நிற்கிறார்கள். இந்திய வல்லாதிக்க அரசின் துணையோடு இலங்கை இனவெறிப்பாசிஸ அரசு, மறுபடி மறுபடி இரையெடுக்கப்பாய்கிறது. உலகத் தமிழர்களின் சிவந்த கண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

இங்குள்ள ஒருவர் - அவர் வேறு யாரோ அல்ல தமிழக முதல்வர் “இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தி அளிக்கிறது. மத்திய-மாநில அரசுகளைக் குறைசொல்ல வேண்டாம்” என்று அறிக்கை தருகிறார். (22.09.2009) மனிதம் மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க இந்திய நடுவணரசும் எதுவும் செய்யவில்லை; கடிதம் எழுதியே காலம் கழிக்கும் தமிழக அரசும் நேர்மையாய் நடக்கவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று நீர் உரிமைகள் பறிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் வறுமைப் பள்ளத்துக்குள் விரட்டப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டும் வாழ்வாதாராம் பறிக்கப்படுவது அன்றாடக் காட்சியாகி விட்டது.

வாழ்வியல் நெருக்கடிகளால் வீதிக்கு வரும் மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகள் கொதிநிலை அடைந்து கொண்டிருக்கிறபோது, தமிழர்களின் கவனத்தை திசை திருப்ப முதல்வர் கருணாநிதி கோவையில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டினை அறிவித்திருப்பது அரசியல் ஆதாயம் தேடும் தன்னல நோக்கமின்றி, வேறு என்ன? ஒரு இனத்தை அழிக்கத் துணை செய்தவர் அந்த இனம் பேசும் மொழி வளர்ச்சிக்கு உலகத்தமிழ் மாநாடு என்பது ஏமாற்று நாடகம். சேக்ஷ்பியரின் ‘மேக்பெத் நாடகத்தில்” தன்னுடைய சித்தப்பாவான ‘டங்கன்’ என்ற மன்னனை, ஆட்சியைக் கைப்பற்ற, கணவனுடன் கூட்டுச் சேர்ந்து கொலை செய்கிறாள் மேக்பெத். அந்தக் கொலை நினைப்பே தொடரும் வேதனையாகி தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு ஆளாகிறார்கள்.

தூக்கத்தில் நடந்துக் கொண்டே மேக்பெத் சொல்கிறாள்; “அரேபியாவின் வாசனைத் தைலங்களையெல்லாம் வைத்துக் கழுவினாலும் என் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை போகாது” அதுபோல் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாய் நடத்தி - தன்மேல் படிந்திருக்கிற ரத்தக் கறையை உலகத்தின் பாராட்டு மழையில் கழுவிட நினைக்கிறார் கருணாநிதி. ஒவ்வொரு தமிழறிஞராய் உள்ளிழுக்கப்பட்டு, வரவேற்பு அறிக்கை வாசிக்கிறார்கள். தன் குருதியிலேயே கலந்து விட்டிருக்கிற அரசியல் இயல்பாகிப் போன “விழா மோகம்” எனும் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளவும்; தமிழருக்கும், தமிழுக்கும் நேரும் எத்தகைய இழிவும் தனக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை நிரூபிக்கவும் நடக்கப் போகிறது இந்த மாநாடு.

தமிழ்மக்களே .....
தமிழ் உணர்வாளர்களே ...
தமிழ்க் கலை, இலக்கியவாதிகளே....
தமிழகத் தமிழறிஞர்களே...
அயலகத் தமிழறிஞர்களே...
மனச்சான்று நிறைந்த மாமனிதர்களே....

இந்த ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம். ஒவ்வொரு பகுதியிலும் ஒன்று திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்புவோம்.

உலகத் தமிழ் மாநாட்டைப் பார்க்காதீர்
உலகத் தமிழ் மாநாட்டைக் கேட்காதீர்
உலகத் தமிழ் மாநாட்டைப் பேசாதீர்...

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=692





















கூட்டாஞ் சோறு
சுவையில்லை
அகதி மண்

-ஜா.ஜெயராஜ்

இரா.இரவி
http://www.kavimalar.com


புதினம் இணையம் மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது









தமிழ் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்று பல காலமாக இயங்கிவந்த புதினம் இணையத்தளம் இன்று முதல் முடக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது. புதினம் இணையத்தளம் மே 17 வரை தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய இணையத்தளமாக இயங்கிவந்தபோதும், "வழுதி" போன்றோர் எழுதிய சில கட்டுரைகள் காரணமாக ஈழத் தமிழர்களின் எதிர்ப்புக்களையும், இதனால் பல சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தது. நாடு கடந்த தமிழீழ அரசின் செய்திகளை பிரசுரிக்கும் ஒரு முக்கிய இணையமாக விளங்கியது புதினம். இவ்வாறு காரணம் எதுவும் சொல்லாமல் தனது சேவைகளை அது முடக்கியதற்கான சரியான காரணத்தை வெளியிடவேண்டும்.

அத்துடன் வழுதி போன்றோரின் கட்டுரைகளை எழுதி தமிழ் மக்களைக் குழப்பி தற்போது திடீரென இவ்வாறு முடங்குவது, ஏன் எனத் தெரியவில்லை. விமர்சனங்கள் இல்லாமல் நாம் செயல்பட முடியாது. அதுபோல ஆழும் கட்சி என்றால் எதிர்க் கட்சியும் இருந்தாக வேண்டும். அந்த வகையில் நல்லது கெட்டதுகளை, மற்றும் விமர்சனங்களை அது முன்வைத்தது. இருப்பினும் புதினம் இணையம் இனிச் செயல்படாது என்ற அறிவிப்பை பார்ப்பதில் அதிர்வு இணையம் ஆச்சரியமடைவதுடன் தனது கவலையையும் தெரிவிக்கிறது.

புதினம் இணையத்தளம், அதன் உரிமையாளர்களால் முடக்கப்பட்டதா இல்லை, அதன் வலையத்தளத்தில் எவரேனும் ஊடுரு இவ்வாறு செய்திருக்கிறார்களா என இதுவரை சரியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் பல நேயர்கள் புதினம் ஏன் முடக்கப்பட்டது என எம்முடன் தொடர்புகொண்டு கேட்டதற்கமைவாக இச் செய்தியை நாம் பிரசுரிக்கிறோம்.

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=637

புலிகளுக்கு ஆயுதம் வழங்கி பலம் பெறச்செய்வோம் மாவோஸ்டுகள் இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது. இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது.

இந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாவோயிஸ்ட் நக்சலைட் இயக்க தலைவர் கணபதி அறிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.

அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.

தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.

சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என்று இந்திய மாவோஸ்ட் கட்சியின் தலைவர் கணபதி இவ்வாறு கூறினார்.


விண்ணகன்,
ஈழதேசம்.கொம்

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=1067:2009-10-22-09-44-16&catid=1:aktuelle-nachrichten&Itemid=50





அரசிலும் குழப்பம், நாட்டிலும் குழப்பம்... இப்பொழுது குடும்பத்திலும் குழப்பம்... இவர் தான் மகிந்த ராஜபாக்சே ..?










இப்போதுள்ள அரசியல் சிக்கல்களைத் தீர்க்கும் பொருட்டு, பசில் ராஜபக்சே மற்றும் கோத்தபாய ராஜபக்சே ஆகிய இரு சகோதரர்களையும் அரசியல் செயற்பாடுகளிலிருந்து எட்ட வைக்கும்படி மகிந்த ராஜபக்சே அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்சே கேட்டுள்ளார் என அலரி மாளிகை வட்டாரச் செய்திகள் கூறுகின்றன. இலங்கையின் முதற்பெண்மணியின் கருத்துக்கு மகிந்தாவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஜனாதிபதிச் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஒத்துப் பாடியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்தக் கருத்துக்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் ஷிராந்திக்கு வழங்கப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகாவுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகலுக்கு கோத்தபாய ராஜபக்சேவே காரணம், இது மஹிந்த ராஜபக்ஷவின் ராஜபக்சேவின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்குமாம். ராஜபக்சே குடும்பத்து உள்முரண்பாட்டையும் இந்த முறுகல் ஏற்படுத்தியுள்ளதால், பசிலையும் கோத்தபாயவையும் பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை அமைதியாக இருக்கும்படி மஹிந்த கேட்டுள்ளார்.

ராஜபக்சேவின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்குமாம். ராஜபக்சேவின் குடும்பத்து உள்முரண்பாட்டையும் இந்த முறுகல் ஏற்படுத்தியுள்ளதால், பசிலையும் கோத்தபாயவையும் பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை அமைதியாக இருக்கும்படி மஹிந்த கேட்டுள்ளார்.

இது குறித்து ஈழ அகதி கூறும் பொழுது, நாட்டை அழித்தீர்கள், நாட்டு மக்களை அழித்தீர்கள்...மூன்று லட்சம் மக்கள் விடும் கண்ணீர்....இது..! நாசமாகப் போக வேண்டும் உங்கள் குடும்பம்...என்றார் ஈழத்துக்காரர்..


விண்ணகன், ஈழதேசம்.கொம்

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=1048:2009-10-20-09-15-37&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

ஜெகத் கஸ்பர் நல்லவரா ? துரோகியா ?


ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா? அதிர்வு இணையதளம் ஏன் அவரைக் காய்ச்சி எடுக்கிறது?

முதல் கேள்விக்கு ‘நாயகன்’ பாணி ‘தெரியலியே…’தான் பதில்!

kasperஎனவே அடுத்த கேள்விக்குப் போய்விடலாம்…

ஜெகத் கஸ்பர் ராஜ் நக்கீரனில் மறக்க முடியுமா? தொடரை ஆரம்பித்த புதிதில் தமிழீழம், விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களோடு, பிற அனுபவங்களையும் அவர் எழுதி வந்தார். பின்னர் இறுதிப் போரின் இறுதிக் கட்டமான மே 17-ம் தேதிக்குப் பிறகுதான் தொடர்ந்து பிரபாகரன் குறித்த கட்டுரைகளை அவர் தீவிரமாக எழுதத் துவங்கினார்.

பிரபாகரன் பேட்டி என ஆரம்பித்தவர், 80 அத்தியாயங்களுக்கு இந்தத் தொடரை இழுப்பதற்காக இலக்கில்லாமல் பல விஷயங்களைச் சுற்றி வளைத்து எழுதுவதாகவே தமிழுணர்வாளர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இது மேலோட்டமான அவதானிப்புதான்.

ஆனால் ஜெகத் கஸ்பரின் உண்மையான முகம் என்ன என்பது இன்னும் பலருக்கு புலப்படவில்லை. பிரபாகரனை தேசியத் தலைவர் என்று உயர்த்திப் பிடிக்கும் இந்த மனிதருக்கு, இறுதி நாளில் நிகழ்ந்த துயரத்தில் ஏதோ ஒரு பங்கிருப்பதை புலம்பெயர் தமிழர்கள் உரக்கச் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இவரைப் போன்றவர்கள் பேச்சை நம்பித்தான் நடேசன், புலித்தேவன் போன்றோர் வெள்ளைக் கொடிகளோடு போய் சிங்களவனின் துப்பாக்கி குண்டுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள் என்ற உண்மையை கஸ்பரே சுற்றி வளைத்து ஒப்புக் கொள்கிறார்.

அந்த நாளில் சிங்களத்துக்கு உதவிய இந்திய அரசுக்காக, அல்லது இந்திய அரசின் சார்பில் இயங்கியவர்களுக்காக கனிமொழியுடன் இணைந்து சில வேலைகளைச் செய்துள்ளார் கஸ்பர் என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் பிரபாகரனை இவர் தமிழீழத்தில் சந்தித்தது வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே என்றும், இவருக்கு பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார் என்பதைத் தவிர வேறு தொடர்புகள் இல்லை என்றும் அதிர்வு கூறுகிறது. இந்த 6 நிமிடச் சந்திப்பை வைத்துக் கொண்டு, புலிகள் இயக்கத்துக்கே தான்தான் காட்பாதர் என்ற ரேஞ்சுக்கு கஸ்பர் பேசி, எழுதி வருவது ஏமாற்று வேலை என்பது அதிர்வின் வாதம்.

ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு போராடி சிறைவாசம் அனுபவித்த நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்களை விமர்சிக்கையில் ‘விபச்சாரம்’ போன்ற வார்த்தைகளை கஸ்பர் பயன்படுத்தியதோடு, ஈழப் போராட்டத்தையும் பிரபாகரனையும் தவறாக வழிநடத்தியவர்கள் என அவர்களைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஈழப் போராட்டத்தை இந்தியாவின் காலடியில் வைக்கும் கஸ்பரின் முயற்சி பலிக்காததால் வந்த ஆத்திரத்தின் விளைவு இது’ என்கிறது அதிர்வு.

ஆனால் ஜெகத் கஸ்பரோ, அந்த அதிர்வு தளமே இலங்கை அரசின் ஏஜென்ட் என்று ஒரே போடாகப் போடுகிறார். அதற்கு பல விளக்கங்களை இந்த வார நக்கீரனில் ‘இணைய தளப் புல்லுருவிகள்’ என்ற தலைப்பில் தந்துள்ளார். பிரபாகரன் தன்னுடன் எவ்வளவு நேரம் பேசினார் என்பதற்கு வீடியோவுடன் விரைவில் ஆதாரம் தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இது முறையான பதிலல்ல. லாவணி மாதிரிதான் தெரிகிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘ உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா… எடுத்து விடட்டுமா?’ என்று மிரட்டுவது அருட்தந்தைக்கு அழகல்ல.

தன்னைச் சுற்றிய பல சந்தேகக் கேள்விகளுக்கு கஸ்பர் பதில் சொல்லித்தானாக வேண்டும்.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது வேறு நடவடிக்கைகளில் சரியாக வரலாம். ஆனால் ஒரு இனத்தின் விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் தோழன், அவர்களை நசுக்கத் துடிக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களான கனிமொழி, கார்த்தி சிதம்பரத்துக்கும் நண்பன் என்ற தனது நிலைப்பாட்டின் வெளிப்படைத் தன்மையை அவர் தெளிவாகச் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இவருக்கும் ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்திய திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?

‘இந்தியாவின் உதவியோடு போர்நிறுத்தம் செய்து கொண்டிருக்க வேண்டும் புலிகள்’ என்று இப்போது சொல்கிறார் கஸ்பர்.

2008 மாவீரர் தின உரை தொடங்கி, போரின் இறுதிக் கணம் வரை ‘இந்தியாவே எமது நண்பன். இந்தியாவின் மூலம் போர் நிறுத்தம் வேண்டும்’ என்றுதானே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனும் கூறிவந்தார்கள். அதை இந்தியா குறைந்தபட்சம் செவிமடுக்கக் கூட தயாராக இல்லையே… மாறாக புலிகளை பயங்கரவாத இயக்கம் என்றுதானே கடுமையாகப் பேசினார்கள் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள்?

இறுதிநாளில், கஸ்பரும் சம்பந்தப்பட்ட அந்த சரணடைவு நிகழ்வில், அளிக்கப்பட்ட உறுதியை மீறி தமிழர் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள்?

கஸ்பர் கருத்து சொல்வது தவறல்ல… ஆனால் இங்கே அதோடு நிற்கவில்லை. அந்தக் கருத்து சொல்லலின் நீட்சி களப்பலியில் அல்லவா முடிந்திருக்கிறது!

இதற்கு மேல் எழுதினால் நம்மையும் ‘லிஸ்டில்’ சேர்த்துவிடுவாரோ என்னமோ!!

(பால் பழனி)

என்வழி

தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.

’தமிழீழ மக்கள் இந்தியாவால் கொல்லப்பட வேண்டும், அல்லது இந்தியாவுக்காக கொல்லப்பட வேண்டும்!’

-அம்பலமாகும் ஜெகத் கஸ்பர்-

http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_5711.html



இணையதள புல்லுருவிகள்! - ஜெகத் கஸ்பர்




""வதைமுகாம்களைத் திறந்து எமது மக்களை வாழவிடுங்கள்'' என்று முப்பதாயிரம்தமிழர்கள் கடந்த சனிக்கிழமையன்று லண்டன் வீதிகளில் முழக்கமிட்ட வாறுபுகழ்பெற்ற ஹைட் பூங்காவில் கூடினர். பேரி கார்ட்னர், கேத்வாஸ், எட்டேவி,ஜோஆன் ரியான், லீ ஸ்காட், கேத் பிரின்ஸ் உள்ளிட்ட பிரித்தானியாவின்முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். பாலஸ்தீன விடுதலைப்போராட்ட ஆதரவுக் குழுக்கள், லத்தீன் அமெரிக்க தோழமை குழுக்கள் உள்ளிட்டபத்துக்கும் மேலான முற்போக்கு ஆதரவு அமைப்புகள் பேரணியில் இணைந்திருந்தன.மிக முக்கியமான பிரித்தானியாவிலேயே பிறந்து வளர்ந்த இதுவரை விடுதலைப்போராட்டத்தில் அக்கறை மேற்கொள்ளாத இளைய தலைமுறை புதியதோர் உறுதியுடன்பங்கேற்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப்பயணத்தில் இது முற்றிலும் புதியதோர்பரிமாணம்.

இதேகாலகட்டத்தில் பிறிதொரு வெற்றி வடஅமெரிக்காவில் தமிழர்களுக்குக்கிடைத்திருக்கிறது. நிர்வாணம் செய்து கை, கால்கள் கட்டுண்ட நிலையில் தமிழ்இளைஞர்களை சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் கொடூரக் காட்சிகளைபிரித்தானியாவின் "சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அது உண்மை யானதல்ல-உருவாக்கப்பட்ட போலி என ராஜபக்சே அரசு உலக அளவில் பெரும்பணம் செலவிட்டுபிரச்சாரம் மேற்கொள்ளும்படி நிர்பந்தத்திற்குள்ளானது. ஆனால் ராஜபக்சேஅரசின் பொய்யை முறியடிக்கும் இலக்குடன் "இன அழித்தலுக்கெதிரான அமெரிக்கத்தமிழர்கள்' அமைப்பு மேற்கொண்ட விஞ்ஞான அடிப்படை யிலமைந்த முயற்சியின்விளைவாக அந்த ஒளிப்பதிவு உண்மையானது, உருவாக்கப்பட்டதல்ல என அமெரிக்க உயர்ஆய்வு மையம் ஒன்று உறுதி செய்துள்ளது.

அழிவின்இடர்பாடுகளின்று மீளும் வழி தேடி மூச்சுத் திணறும் தமிழர்களுக்கு இவையெல்லாம் மிகச் சிறிய வெற்றிகள்தான் -ஆயினும் நம்பிக்கைக்கு இன்னும்இடம் இருக்கிறது. தொடர்ந்து பயணிக்க லாம் என்ற மனபலம் தருகிற வெற்றிகள்.அதே வேளை நாம் கடக்க வேண்டிய தூரம் சிறியதல்ல, மிக நீண்டது.விடுதலைப்போராட்டம் மீது சார்த் தப்பட்ட பயங்கரவாதம் என்ற வஞ்சகத்திரைஇன்னும் அகற்றப்படவில்லை, யுத்த குற்றங்களுக்கான அனைத்துலக நீதி விசாரணைமுயற்சிகள் முன் நகர்வதாகத் தெரியவில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்களின் ஒன்றுபட்ட, இடைவிடாத முயற்சிகள் இவற்றையெல்லாம் சாதித்து விடக்கூடியவாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பினை சிதைத்திட ராஜபக்சே அரசு இன்று இருவிதமானதந்திரோபாயங்களை முன்னிறுத்தி முனைப்பாக இயங்கி வருகிறது.

முதல்வியூகம் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைத்து, அவர்களுக்குள் ஐயங்களையும் கருத்து மோதல்களையும் தூண்டி அவர்களை சலிப்புறச் செய்துபலவீனப்படுத்துவது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் களத் தலைமை வெளிப்படையாகஇயங்க முடியாத இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கிற அந்த இடைவெளியை இலங்கைவெளியுறவு மற்றும் ராணுவப் புலனாய்வு அமைப்புகள் இணைந்து இப்பணியைகச்சிதமாய் செய்து வருகின்றன.

அதற்குஓர் சிறு உதாரணமாக "அதிர்வு' என்ற இணையதளத்தின் செயற்பாடுகளை கூர்ந்துநோக்கி ஆய்வு செய்தாலே போதுமானது. விடுதலைப் போராட்டத்துடனான புலம்பெயர்தமிழர்களின் முக்கிய இழையாக "இணையம்' (Internet) இன்று திகழ்கிறது. மூத்ததளபதிபானு அவர்களைச் சுற்றியே இரண்டு துரோகிகளை ஊடுருவச் செய்ய முடிந்தஇலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு சொகுசான ஐரோப்பிய-வடஅமெரிக்கச்சூழலில் துரோகிகளை விலைக்கு வாங்குவதொன்றும் பெரிய வேலையல்ல.பெருமைக்குரிய தளபதி பானு அவர்களுக்கு தெரியாமலேயே அவரைச் சுற்றி நடந்தஊடுருவல் குறித்து பிறிதொரு இதழில் நிச்சயம் பதிவு செய்யப்படும்.

புலம்பெயர்தமிழர்களின் "உணர்வுகள்' பெருமளவு இணையத்தினூடாக (Internet) இயங்குவதையும்இயக்கப்படுவதையும் நன்றாக அறிந்த இலங்கை புலனாய்வுப் பிரிவு தமிழ்இணையங்களை ஊடுருவியுள்ளது, கூலி கொடுத்து இயக்குகிறது. முதலில் அவ்வாறுஇலங்கை புலனாய் வுப் பிரிவுகளால் உருவாக்கப்பட்ட தமிழ் இணையம் "ஏசியன்ட்ரிபியூன்' (Asian Tribune). இதன் நடத்துனர் ராஜசிங்கம், குழப்பநிலையிலிருந்த கருணம்மானை துரோக முடிவுக்கு திட்டமிட்டு நுட்பமாக உந்தித்தள்ளியவர்களில் முக்கியமானவர். தமிழீழ விடுதலை கருத்தாக்கத்தைசிதைப்பதிலும், குழப்பங்களை உருவாக்குவதிலும் இந்த "ஏசியன் ட்ரிபியூன்'முக்கிய பங்காற்றி வருகிறது.

"ஏசியன்ட்ரிபியூனை' தொடர்ந்து இலங்கை புலனாய்வுப் பிரிவுகள் தத்தெடுத் துள்ளது" அதிர்வு' என்ற இணையதளத்தை. இவர்களின் தந்திரம் மிகவும் எளிதானது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவான முகம் காட்டி இணை யத்தை நன்றாக வளர்ப்பார்கள். ஓரளவுக்கு வளர்ந்தபின் மக்களை குழப்பி பலவீனப் படுத்துவதற்குப் பயன்படுத்துவார்கள். அக்டோபர் 11-ந் தேதி இந்த இணையம் நக்கீரன்பத்திரிகைக்கெதிராகவும் அதில் என் எழுத்துக்களையும் விமர்சித்து ஓர்செய்திக் கட்டுரை வெளியிட்டி ருந்ததாய் நண்பர்கள் என் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள். பொதுவில் கட்டற்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை என எப்போதுமே கருதுவதால் விமர்சனம் நல்லதுதானே என விட்டுவிட்டேன். கட்டுரைஎழுதியிருந் தவரது பெயர் தமிழரசு என்றும் சொன்னார் கள். இரண்டுநாட்களுக்குப்பின் லண்டனிலிருந்து விடுதலைப் பணியில் நீண்ட காலமாய்ஈடுபட்டுவரும் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு "அதிர்வு' இணையதளம்நடத்துபவரது பெயர் கண்ணன் என்றும், தமிழரசு என்று எவரும் தாங்கள் அறிய"அதிர்வு' வட்டத்தில் இல்லையென்றும் கண்ணனும் குழுவுமே தமிழரசு எனபெயரிட்டு எழுதி யிருப்பதாகவும் சொன்னார்கள்.

விடுதலைப்போராட்டத்தோடு தொடர் புடைய எவரும் இக் கட்டுரையின் பின்னணியில் இல்லைஎனவும் கூறினார்கள். அப்போதும் நான் அக்கட்டுரையை முக்கியமானதாகக் கருதவில்லை.

லண்டனிலிருந்துஉணர்வாளர்கள் தொலைபேசிய இரண்டாம்நாள் அடையாளம் குறிக்க முடியாஇடத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று அலை பேசியில் பதிந்தது.

எடுத்தபோது"களத் தின் பிரதிநிதிகளாய்' பேசுவதாகக் கூறினார் கள். அதிர்வு கட்டுரைபற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள் என்று சொல்லவே அழைத்த தாகவும் கூறியஅவர்களது தகவல் சுருக்கம் இது தான்:

""அதிர்வுஇணைய தளம் நடத்துகிறவரது பெயர் கண்ணன். இவர் தமிழீழ விடுதலைப்புலிகள்இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். தவறான ஒழுக்கம் காரணமாக புலனாய்வுப்பிரிவுத் தளபதி பொட்டம்மான் அவர்களால் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டவர்.பின்னர் இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் ஏஜெண்டாக மாறி இப்போதுஐரோப்பிய கண்டத்தில் வசதியாக செட்டில் ஆகி யிருக்கிறார். தமிழ்நாட்டில்ஒருசில தலைவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார். அவ்வாறே போர் உக்கிரமடைந்தநாட்களில் தலைவர் நாட்டுக்கு அழைத்தும்கூட திரும்பி வராமல் ஐரோப்பாவில்தங்கி நின்ற சிலரோடும் பழைய போராளி என்ற கோதாவில் தொடர்புவைத்திருக்கிறார். அவர்களுக்கும்கூட இவரது நிஜமான குற்றப்பின்னணிதெரியாமல் இருக்கலாம். போராட்ட இயக்கமொன்றும் முற்றாக அழிந்து விடவில்லை.

நாட்டுக்கு அவர் திரும்பிவந்தால் என்ன தண்டனை என்பது அவருக்கே தெரியும். இத்தகைய புல்லுருவிகளுக்கெல்லாம் நீங்கள் பயப்படாதீர்கள்'' என்றார்கள். தொடர்ந்தும் அவர்தமிழகத்தின் சில தலைவர்களைப் பற்றி சொன்ன விஷயங்கள், ""கடவுளே...இப்படியுமா சுயநல அரசியலுக்காக துரோகம் செய்வார்கள்...'' என நெஞ்சம் பதறவைத்தது. தேசியத்தலைவர் அடிக்கடி கூறுவதுண்டாம் "துரோகிகளைவிட எதிரிகள்எவ்வளவோ மேலானவர்கள்' என்று. எதிரிகளை எதிர்கொள்ளலாம், துரோகிகளை...?

இத்தொலைபேசி அழைப்பிற்குப் பின்னர்தான், "சரி, என்னதான் எழுதியிருக்கிறார்களென்று பார்ப்போமே' என கட்டுரையைப் படித்தேன். நகைப்பே மிஞ்சியது. முதலில் கண்ணன்"தமிழரசு' என முகமூடி அணிய வேண்டிய அவசியம் ஏன் என்று புரியவில்லை. ஒன்றை, ஒருவரை விமர்சிக்கையில் சொந்தப் பெயரிட்டு சுய கௌரவத்துடன் எழுதும் நாணயம்இல்லாதவருக்கும் மஞ்சள் பத்திரிகை வியாபாரிகளுக்குமிடையே பெரிய வேறுபாடுஇல்லை.

கிளிநொச்சியில்இந்தத் தமிழரசுதான் என்னை தேசியத் தலைவரிடம் அழைத்துச் சென்றதாகவும் தேசியத் தலைவர் சரியாக ஆறு நிமிடம் மட்டுமே என்னிடம் பேசியதாகவும்அக்கட்டுரையில் அழுத்தமாய் கூறியிருந்தார்.

எனது பதில் : ""கவலைப்படாதீர்கள்தமிழரசு என முகமூடி தரித்த தவறான ஒழுக் கத்திற்காய் இயக்கத்திலிருந்துவிரட்டியடிக்கப் பட்டு இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவின் ஏஜெண்டாகி,புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியை குலைப்பதற்காய் அதேஏஜெண்டாய் ஐரோப்பாவில் வசதியாக வாழும் கண்ணன் அவர்களே... இன்னும் இரண்டொருவாரங்களில் தேசியத் தலைவருடனான மிக நீண்ட நேர்காணலின் ஒளிப்பதிவு இதே இணையத்தில் வெளிவரும். அது ஒன்றே போதுமான தாயிருக்கும் உங்கள் முகத்திரைகிழிய.

பாவம், நான்எழுதுகிற பாணியைப் பார்த்து ஒளிப்பதிவு இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் கதையை அவிழ்த்துவிட்டீர்கள்போல் தெரிகிறது. "ஏஜெண்டுகள்'எப்போதுமே இப்படித் தான். எவ்வளவு அழகாக நாடகமாடினாலும் சட்டென்று தங்களைகாட்டிக் கொடுத்து விடுவார்கள்.

இன்னொன்றுதமிழீழ விடுதலையை இனியில்லையென்று கொச்சைப்படுத்திய ஊடகங்களையெல்லாம்விட்டுவிட்டு தமிழகத் தில் லட்சக்கணக்கான உணர்வாளர்களுக்கு ஆறுதலாயும்நம்பிக்கை இழையாயும் நின்ற - நிற்கிற நக்கீரனோடு போர்புரிய வரிந்துநிற்பது யாருடைய வேண்டுதல் -அல்லது உத்தரவின் பேரில் என்றும் புரியவில்லை.

எதிரிகளோடுஉரையாடுவோம், துரோகி களோடு கடைசிவரை இல்லை. துரோகி ஒரு வனைப் பற்றிஇவ்வளவு வரிகள் வீணடித்திருக் கக்கூடாது. ஆயினும் விடுதலைப் போராட்டஇயக்கத்தின் போர்க்களப் பின்னடைவைப் பயன்படுத்தி புலம்பெயர் மக்களைகுழப்பப் புறப்பட்டுள்ள புல்லுருவிகளை அடையாளம் காட்ட வேண்டிய தேவைகருதியே இவ்வளவும் எழுதும் துரதிருஷ்டம் நேர்ந்தது.

சரி, ராஜபக்சே அரசின் இரண்டாவது தந்திரோபாயம்?
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18977


வடகாட்டில் சீமான் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் இயக்கம் துவங்கி தமிழ்நாடு முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான்.


இன்று (சனிக்கிழமை) மாலை 6மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு சீமான் தலைமையேற்று உரையாற்றுகிறார்.

இப்பொதுக்கூட்டத்திற்கு வரும் சீமானுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை முழுவதும் சுவரொட்டிகளும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

பிரபாகரன் படத்திற்கு போலீசார் அனுமது மறுத்துவிட்டனர். சீமான் படம் மட்டும் வைப்பதற்கு போலீசார் அனுமது அளித்துள்ளனர்.

அதன்படி திரும்பிய பக்கமெல்லாம் சீமான் படம் இருக்கிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=19159


மணி நேர "நாம் தமிழர்" வலைத்திரை

நம் இணைய தளத்தில் வலைத்திரை பகுதியில் (http://www.naamtamilar.org/valaiththirai.php) 24 மணி நேர நாம் தமிழர் வலைத்திரை தொடங்கப்பட்டுள்ளது.
இதில் நம் அண்ணன் சீமான் அவர்களின் எழுச்சி உரைகள், இயக்க கூட்டங்களின் காணொளிகளும் தொடர்ந்து ஒளிபரப்பாகும். நாம் விரும்பும் காணொளியை உடனடியாக பார்க்க ON-DEMAND சேவையை பயன்படுத்தவும். மேலும் இதில் இயக்க கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் பேட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உறவுகளே, இது நமக்கான ஊடகம். தமிழருக்கான ஊடகம். இதன் சேவைகள் இயக்க பணிகளுக்கு சிறப்புற பயன்படுத்த நம் தோழர்கள் அனைவரும் முன்வந்து ஆலோசனைகள் வழங்க வேண்டும்.


சத்தியம் தவறிய சத்யம் நிறுவனம்


இன்றைக்கு நாம் வேலையில் இருப்போமா? .. இதுதான் தனியார் அல்லது ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மனதில் ஒவ்வொரு நாள் காலையிலும் எழும் கேள்வி.

மனைவி, குழந்தைகள் என்று வாழும் ஒரு குடும்பத் தலைவனுக்கு திடிரென்று வேலை பறிபோனால் எழும் மனஉளைச்சல்கள்...பதட்டம்...இவற்றை வார்த்தைகளில் விளக்க முடியுமா?

குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்காத ஐ.டி நிறுவன ஊழியர்களே இல்லை எனலாம். வேலை போகும் பட்சத்தில் அவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்?

ஐதராபாத்திலுள்ள சத்யம் நிறுவனம் 6400 பேரை வேலை நீக்கம் செய்வதாக தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனத்தில் அதிபர் ராமலிங்க ராஜூ நிறுவனங்களில் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு சத்யம் நிறுவனத்தை மத்திய அரசு அமைத்த குழு நிர்வாகம் செய்தது. பின்னர் மகேந்திரா நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டரை வாங்கி விட்டது.
இதையடுத்து இந்த நிறுவனம் ஊழியர்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இங்கு வேலை பார்த்த 9 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் கட்டாய விடுமுறை அளித்து பணியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி இருந்தனர். அவர்களில் 1600 ஊழியர்களை திரும்ப அழைத்து கொண்டனர்.

இந்த நிலையில் மீதி உள்ள 6400 ஊழியர்களுக்கு நிர்வாகம் நேற்று இ.மெயில் ஒன்று அனுப்பி உள்ளது. அதில் உங்களை பணியில் தொடர வைக்க முடியாது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் உங்கள் கணக்குகளை முடித்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே 6400 ஊழியர்களும் திடீரென வேலையை இழந்துள்ளனர்

ஏற்கனவே வேலை வாய்ப்புகள் குறைவை உள்ள இந்த பொருளாதார சூழலில்..அவர்ளுக்கு வேறு சரியான வேலை எப்போது..எப்படி கிடைக்கபோகிறது?

"நிரந்தரம் இல்லாமையே நிரந்தரம்" என்னும் தத்துவம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கு நூறு சதம் பொருந்துகிறது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்களின் பாடல ஒன்று..பள்ளி நாட்களில் படித்தது.

"உழ‌வும் தொழிலும் இல்லாம‌ல் உல‌கில் ஒன்றும் செல்லாது"

எங்கு வேலை செய்தாலும்..எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு சுயதொழிலுக்கான முனைப்புகள், முதலிடுகள் மற்றும் சேமிப்புகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர வேண்டியதைத்தான் இந்த பாடலும், செய்தியும் உணர்த்துகிறது.

கடைக்காரர் கமெண்ட் :
என்னத்தை சொல்றது...நான் படிச்ச ஜோக்கு ஒன்னு உங்களுக்கு சொல்றேன்..


என் மூத்த மகன் கம்ப்யூட்டர் எஞ்சினியர்..ரெண்டாவது மகன் விமானம் ஓட்டுறான்...மூணாவது மகன் ஷேர் மார்க்கெட் பத்தி ஆலோசனை சொல்றவன்..ஆனா..நாலாவது மகன் டீக்கடை வச்சு இருக்கான்...

ஏன் அவனை மட்டும் படிக்க வைக்கலையா நீங்க...

அட நீங்க வேற...அவன் குடும்பத்தோட ..மூத்த பசங்க குடும்பத்தையும் சேர்த்து அவன்தான் இப்போ பாத்துக்கிட்டு இருக்கான்.

சொந்தமா,நமக்குன்னு ஒரு தொழில் இருக்கறதுதான் எப்போவும் நல்லதுன்னு தோணுதுங்க...

http://kadaitheru.blogspot.com/2009/10/blog-post_23.html





விவேக்கின் வில்லத்தனம்!


http://www.envazhi.com/wp-content/uploads/2009/10/vivek-padmashree.jpg

‘நான் உங்க ஜாதி… எனக்காகக் குரல் கொடுங்க!’ – விவேக்கின் வில்லத்தனம்


ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே…’ என்று ஒரு பழமொழி உள்ளது. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… விவேக்குக்கு நன்றாகவே பொருந்தும்.vivek-padmashree

திரையில் காமெடியனாக வந்து ‘சாதியில்லை, மதமில்லை, சாமியில்லை’ என்றெல்லாம் உபதேசம் பண்ணும் இவருக்குள் இத்தனை வில்லத்தனமா? என்று பலரையும் புருவம் உயர வைத்துள்ளது அவர் சமீபத்தில் செய்துள்ள ஒரு காரியம்.

சமீபத்தில், “பத்திரிகையாளர்கள் என் மீது வழக்குத் தொடர்கிறார்கள். பத்மஸ்ரீ விருதினை திரும்பப் பெற வைக்க சூழ்ச்சி செய்கிறார்கள். எனக்கு ஒரு அவமானம் என்றால் அது நான் சார்ந்த சாதிக்கே நேர்ந்த அவமானமல்லவா… எனக்காக நீங்கள் எல்லாம் களமிறங்க வேண்டும். ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டும்” என்று முழங்கியிருக்கிறார்.

அவர் முழங்கியிருப்பது, டாக்டர் சேதுராமன் நடத்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில். பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் 23-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் எதிரொலிதான் விவேக்கின் இந்தப் புலம்பல்.

அப்போதைக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்த சேதுராமன், ‘தனிப்பட்ட முறையில் யாராவது வழக்கு தொடர்ந்தால் தனது சாதிக் கட்சி சார்பில் குரல் கொடுப்போம்’ என்று கூறி அனுப்பினாராம். அதேநேரம், ஒட்டு மொத்த நடிகர்கள் மீதும் வழக்கு என்று வந்தால் அதில் நாம் தலையிடக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு கூறிவிட்டாராம்.

சாதி முகமூடியை அணிய விவேக் முற்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே சசிகலா நடராஜன் நெற்கட்டும்செவலில் நடத்திய முக்குலத்தோர் மாநாட்டில் கலந்து கொண்டு, தங்கள் சாதி ஆண்ட பரம்பரை என்றும், அந்த மரபைக் காக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்றும் பேசியவர்தான் விவேக். இந்த மாநாட்டில்தான் முக்குலத்தோர் இன நடிகர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.envazhi.com/?p=12696






Update me when site is updated
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!