Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, March 22, 2009

நெருப்பு நரி உலவியில் தரவிறக்க வேகத்தை அதிகரிக்க

 

http://www.tamilnenjam.org/2009/03/blog-post_19.html

 
 
 

இணைய உலவிச் சந்தையில் நெருப்பு நரி என செல்லமாக அழைக்கப்படும் Firefox அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வேகமாக இயங்குவதுடன் ஏராளமான நீட்சிகளை (addon) உடையதாகவும் இருப்பதால் இது உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏதேனும் கோப்புகளை இணையத்தின் ஊடாகத் தரவிறக்கம் / இணையிறக்கம் (download) செய்யும்போது மட்டும் பிற முடுக்கிகளின் (accelerator) அளவிற்கு இதன் வேகம் இருப்பதில்லை என்கிற குறை உண்டு.

தரவிறக்க வேகத்தை அதிகரிப்பதற்காகவே நெருப்புநரிக்காக ஒரு நீட்சி உள்ளது. இதை Firefox உடன் ஒருங்கிணைத்துவிட்டால் தரவிறக்க வேகம் 10 மடங்கு அதிகரிக்கிறது என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த நீட்சியை நிறுவுவதற்கு முன்னர் உங்கள் நெருப்பு நரி உலவியை மேம்படுத்திக் (update) கொள்ளவும்.

உலவின் வெர்சன் (version) 3.0+ ஆக இருத்தல் நலம்.

சுட்டி : http://www.fireaddons.com/iamchosen/

 

 

 

 

Posted: 18 Mar 2009 09:24 PM PDT
உங்களுக்கு மின்னஞ்சல் (e-mail) வாயிலாக உங்கள் நண்பர் பல கோப்புகளை (files) அனுப்பியுள்ளார். அவற்றில் சந்தேகமும் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம்.

ஆனால் அவர் அனுப்பியிருக்கும் கோப்புகளில் பல உங்களுக்குத் தெரியாத எக்ஸ்டென்ஸ்களில் (extension) உள்ளன.

உதாரணமாக மைக்ரோசாப்ட் வேர்ட் (MS Word) கோப்புகள் - .doc எனவோ .docx என்றோ இருக்கும்.

படக் கோப்புகள் பெரும்பாலும் .jpg, jpeg, .gif, .png என்பனவாக இருக்கும். ஆனால் நண்பர் உங்களுக்கு அனுப்பிய கோப்பின் எக்ஸ்டென்ஸன் (File Extension) எல்லாம் உங்களுக்கும் பரிச்சயமில்லாதவை. மேலும் உங்கள் இயங்குதளமான(OS) விண்டோஸுக்கும் பரிச்சயமில்லாதவை.

இந்த நேரங்களில் அவர் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்கச் சொல்லியும், அதில் சந்தேகமும் கேட்டுள்ளார்.

ஒவ்வொரு கோப்புகளையும் அவற்றிற்குரிய சரியான மென்பொருட்களைக் கொண்டுதான் திறந்து பார்க்க இயலும். ஆனால் குறிப்பிட்ட கோப்புகளை இயக்கிப் பார்க்கவோ / திறந்து பார்க்கவோ ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருட்கள் (Software Applications) உள்ளன.

உதாரணமாக .mp3 வகை கோப்புகளைத் திறந்து பார்ப்பதற்கு VLC மீடியா ப்ளேயரில் இருந்து, நம் விண்டோசுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மீடியா ப்ளேயர் (Media Player) வரை ஏராளமான மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.

இப்படி நமக்கும், விண்டோஸுக்கும் நன்கு அறியப்பட்ட கோப்புகளை இரண்டு முறை மவுசால் சொடுக்கினால் (Double Click) அதற்குரிய மென்பொருள் பயன்பாட்டின் வாயிலாக அந்தந்த கோப்புகளைத் திறந்து பார்த்து இயக்கலாம்.

ஆனால் இனம் கண்டறியாத கோப்புகளை இரண்டு முறை சொடுக்கினால் என்ன ஆகும்?

கீழ்க்கண்ட காட்சியைத் தான் காண்போம். ஒரு பிழைச்செய்தியுடன் தனி உரையாடல் பெட்டி திரையில் தெரியும்.

இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்போது நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையத்தளம் உள்ளது. அந்தத் தள முகவரி : http://www.openwith.org/

free programs to open any file extension


இந்தத் தளத்திலிருந்து அவர்கள் கொடுக்கும் ஒரு இலவசப் பயன்பாட்டை இணையிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.

பின் நண்பர் அனுப்பிய கோப்பின் மேல் மவுசை வைத்து வலது பட்டனை அழுத்தி "OpenWith.org - How do I Open This?" என்பதைச் சொடுக்கவேண்டும்.

இதன் பிறகு குறிப்பிட்ட கோப்பினைத் திறந்து பார்ப்பதற்காக எந்த வகையான மென்பொருள் பயன்படும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். பின் அந்த மென்பொருளை இணையிறக்கம் செய்து அதன் மூலம் நண்பரின் கோப்பினைத் திறந்து பார்த்து அவரது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கலாம்

 

 
 
 [ இந்த மின்னஞ்சல்  www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]

 
 www.beyouths.blogspot.com
         
           Thanks!  
 
ஆதிசிவம், சென்னை. நன்றி!...

தமிழ்ஷ் பட்டாம்பூச்சியின் செவ்வி (பேட்டி)

 http://tvpravi.blogspot.com/


வணக்கம் சகோதரி...முதல் முறையாக ஒரு வாசகி, தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு அளிக்கும் செவ்வி இது..(பேட்டி / சரியான தமிழ் வார்த்தை செவ்விதான்)...

உங்களை பற்றி சொல்லுங்க, எப்படி தமிழ் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பிச்சீங்க ?

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன்...அலுவலகம் முடிந்து வீட்டு சென்றபின் கணவர் வரும் வரையில் தினமலர் போன்ற தளங்களை மேய்வது வழக்கம்...அதன் மூலமாக தமிழ்ஷ் பழக்கமானது...கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ஷ் மூலம் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்...

எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கிறீங்க ? பிடித்த பதிவு எது ? எந்த எந்த பதிவுகளை எப்படி படிக்கிறீங்க ?

பொதுவாக சீரியசாக எழுதும் வலைப்பதிவுகளை கண்டால் தூர விலகி ஓடுவேன்...உங்களுடைய வீராசாமீ பதிவு பி.டி.எப் கோப்பாக வந்தபோது அட தமிழில் இப்படி கூட எழுதறாங்களா என்று ரசித்தேன்...அப்போது அது ஒரு வலைப்பதிவு என்று தெரியாது...ப்ராக்லி ஸ்பீக்கிங், நான் ரெகுலராக படிப்பது குசும்பன் வலைப்பதிவு தான்..ஆம்லேட் மூலமாக வயதை கண்டுபிடிப்பது எப்படி என்று அவர் ஒரு குசும்பு பதிவு போட்டிருந்தார்...அதில் இருந்து ரெகுலராக அந்த பதிவுகளை வாசிப்பேன்...

நான் தமிழ்ஷ் மூலமாக, தலைப்புகள் ஈர்க்கும்படி இருந்தால் கண்டிப்பாக போய் படிப்பேன்...சில சமயம் தலைப்புகள் ஈர்க்கும்படி வைத்துவிட்டு உள்ளே மொக்கையாக இருக்கும்...தமிழ்ஷ் இல் அதிக ஓட்டுகள் வாங்கிய பதிவுகள் படிப்பேன்...

<இடைமறித்து> எப்படி பதிவுகளுக்கு போறீங்க ?

தமிழ்ஷ் மூலமாக பொதுவாக போவேன், ஆனால் குசும்பன், ஜ்யோராம் சுந்தர், பரிசல்காரன் போன்றவர்கள் பதிவுக்கு நேரடியாக URL டைப் செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலமாக போவேன்...

தமிழ்மணம் பற்றி தெரியுமா ?

ஆங், அங்கங்கே லிங்க் பார்த்திருக்கேன் ஆனால் இன்னும் சென்றதில்லை, தினமும் தமிழ்ஷ் மூலமாக பதிவுகள் படிக்கிறேன்...

உங்களுக்கு பிடித்த பதிவர்கள் யார்?

குசும்பன், ஜ்யோராம் சுந்தர், வெண்பூ, பரிசல்காரன், அதிஷா போன்றவர்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்...உங்கள் பதிவும் படிக்கிறேன்...

எப்போதில் இருந்து படிக்கும் பழக்கம் ? பிடித்த எழுத்தாளர்கள் ?

சின்ன வயதில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்...வீட்டில் அம்மா மளிகை கடை பொட்டலம் வாங்கி வந்தாலும் அதை கொட்டிவிட்டு அசுரத்தனமாக அதில் என்ன இருக்கிறது, அது எந்த புத்தகத்தின் பகுதி என்று கொலைவெறியோடு படித்திருக்கிறேன்...

சுஜாதா பிடிக்கும்...தேவிபாலா படுவேகமாக எழுதுவார்...படு விறு விறுப்போடு படிப்பேன்...

சாரு நிவேதிதா பற்றி ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே ?

தனிமனித ஒழுக்கத்தோடு எழுதுங்கள் என்கிறார். இவர் ரொம்ப ஒழுங்கு. அவ்ளோதான்...

வலைபதிவுகள் படிப்பதால் என்ன நன்மை தீமை ?

பொதுவாக வலைப்பதிவுகள் ஒரு ஸ்ரெஸ் ரிலீப் என்று சொல்லவேண்டும்...வலைப்பதிவுகள் படிக்கும்போது மன அழுத்தங்கள் குறைந்து மனது லேசாகிறது...

பல்வேறு தகவல்களின் களஞ்சியம் என்றும் சொல்லலாம்...பொதுவாக செய்தி ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் கூட உடனுக்குடன் வெளியாகிது மிகவும் சிறப்பு...

எப்படிப்பட்ட பதிவுகள் வரவேண்டும் ?

நகைச்சுவை பதிவுகள் அதிகம் வரவேண்டும்...நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடுவது குறைய வேண்டும்...

தலைப்பு கவர்ச்சியாக வைப்பார்கள்...இங்கே க்ளிக் என்பார்கள்...உள்ளே சென்று க்ளிக் செய்தால் ஒரு மண்ணும் இருக்காது...இதுக்கு ஒரு பதிவு எதுக்கு ? டைம் வேஸ்ட் !!! போடும் மொக்கையை நல்ல மாதிரி, நகைச்சுவையா போடவேண்டும்...

வலையுலகின் எதிர்காலம் என்ன ?

இது ஒரு தொடர்பு ஊடகமாக, சோஷியல் நெர்வொர்க் ஆக, பிஸினஸ் நெர்வொர்க் ஆக உருவாக வாய்ப்பு உண்டு...மற்றபடி, பணிச்சுமை அழுத்தும்போது, மன அழுத்தம் குறைய வலைப்பூக்களை, நல்ல நகைச்சுவை வலைப்பூக்களை உபயோகிக்கலாம்...

உங்கள் குடும்பத்தினர் பற்றி / நீங்கள் வலைப்பூக்களை வாசிப்பதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ?

தகவல் தொழிநுட்ப துறையில் பணிபுரிகிறார் என்னுடைய கணவர், "அப்படி என்னதான் படிக்கிற அதுல" என்று ஆச்சர்யப்படுகிறார்..."அதெல்லாம் உங்களுக்கு தெரியாது" என்பேன்....

மொக்கை, கும்மி, பின்னூட்டம் என்பதெல்லாம் அவருக்கு புரியாத தமிழ் வார்த்தைகளாக உள்ளன...

வலைப்பூ ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா ?

கண்டிப்பாக...ஒரு அம்பது பதிவை எழுதி வைத்துவிட்டு, அதற்கு அப்புறமாக வலைப்பூவை ஆரம்பித்து ஒவ்வொன்றாக பதிவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை...இன்னும் ரெண்டு மாசம் போகட்டும், இன்னும் ஒரு அதிரடி பதிவரை சந்திக்கபோகிறது இந்த வலையுலகம்...

************************************************************************

சகோதரியை தமிழிஷிலும் தமிழ்மணத்திலும் வாக்களித்து வாழ்த்துக்கள்...கண்மணி அக்கா சகோதரி ராப் போல காமெடியில் கலக்க வாழ்த்துக்கள்...!!!!

 
 
 
 
 [ இந்த மின்னஞ்சல்  www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]

 
 www.beyouths.blogspot.com
         
           Thanks!  
 
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
 

Updated w3Tamil99 Keyboard released

வணக்கம் நண்பர்களே,

தற்போது நீங்கள் w3தமிழ் Widget களினை பயன்படுத்தி மிக இலகுவாக தமிழ்99 விசைப்பலகையினை உங்களது வலைப்பதிவிலோ அல்லது இணையத்தளத்திலோ இணைத்துக்கொள்ளலாம். 

மேலதிக விபரங்களை கீழ்வரும் முகவரியில் காணவும்.

பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையினைப்பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் அனுப்பிவைக்கவும்.

w3தமிழ் இணைய விசைப்பலகை பற்றி நீங்கள் ஏற்கனவே அனுப்பிய கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் இவ்விடத்தில் மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி.

இங்ஙனம்,
சிவா
 
 [ இந்த மின்னஞ்சல்  www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]

 
 www.beyouths.blogspot.com
         
           Thanks!  
 
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
 

ஊடகங்கள் அணிய வேண்டிய கண்ணாடிகள்

ஊடகங்கள் அணிய வேண்டிய கண்ணாடிகள்

(சென்னை பல்கலைக்கழகம் - மக்கள் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறை 16-3-2009 அன்று நடத்திய மா. சிங்காரவேலர் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவுக் கருத்தரங்கில் தமிழக ஊடகங்கள் மார்க்சியப் பார்வை என்ற தலைப்பில் சு.பொ. அகத்தியலிங்கம் ஆற்றிய உரை)


கருத்தரங்கின் தலைவர் அவர்களே! மேடையிலே வீற்றிருக்கும் மேனாள் துணைவேந்தர் ஜெகதீசன் அவர்களே! புலவர் ப.வீரமணி அவர்களே! ஊடகத்துறை பேராசிரியர்களே! மாணவ கண்மணிகளே! அனைவருக்கும் வணக்கம்.


தலைமையேற்று உரையாற்றிய துறைத்தலைவர் கோ.ரவீந்திரன் அவர்கள் வடசென்னையை பற்றிக் குறிப்பிட்டார். பிஅண்ட்சி மில் பற்றி குறிப்பிட்டார். வடசென்னை பின் தங்கியிருப்பது பற்றி குறிப்பிட்டார். ஊடக மாணவர்கள் வடசென்னையை பயில வேண்டும் என்றார். இது என்னுள் நச்சென பதிந்துவிட்டது அதையொட்டி சில கேள்விகளோடு என் உரையைத் துவங்க விழைகிறேன்.


பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் பணியாற்றிய பி அன்ட் சி மில் மூடிக்கிடக்கிறது. அதைப்பார்க்கிற போதெல்லாம் பத்தாயிரம் தொழிலாளர் வாழ்வை புதைத்த சமாதியாகவே எனக்கும் தோன்றுகிறது. அதுபோல் மெட்டல் பாக்ஸ், டன்லப், ஸ்டான்டர்ட் மோட்டார் (இத்தொழிற்சாலை வடசென்னை அல்ல எனினும் ) உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் ஒரு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். மக்கள் துணி கட்டுவதை நிறுத்தி விட்டார்களா? பின் ஏன் பி அன்ட் சி மில் மூடப்பட்டது. மக்கள் டப்பாக்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்களா? பின் ஏன் மெட்டல் பாக்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டது. டயர்கள், கார்களின் தேவை முடிந்து விட்டதா? பின் ஏன் டன்லப்பும், ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனமும் மூடப்பட்டது?


இந்த முதலாளிகள் திவாலாகி விட்டார்களா? இல்லை வேறு தொழிலில் கொழுக்கிறார்கள். ஆனால் அதில் பணியாற்றிய தொழிலாளிகள் சட்டப்படி பெற வேண்டியதைப் கூட பெறமுடியால் தெருவில்நிற்கிறார்கள். இது குறித்து எந்த ஊடகம் கவலைப்பட்டது? எதை எதையே புலனாய்வு செய்யும் புலிகள் உழைப்பாளிகள் வாழ்வு எப்படி சூறையாடப்பட்டது என்று எப்போதாவது புலனாய்வு செய்தார்களா?


அந்த முதலாளிகள் தரும் விளம்பரத்தில் பிழைக்கும் ஏடுகள்! ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார, சமூக பண்பாட்டு விழைவுகளை ஆய்வு செய்யுமா? புலனாய்வு செய்யுமா? செய்யாது? ஏன் பல்கலைக் கழகங்கள் கூட இது குறித்து ஆய்வு நடத்த மாணவர்களை நெறிப்படுத்த தயார் இல்லையே?
இந்த கேள்விகளின் கனத்தோடு நான் உரைக்குச் செல்கிறேன்.


தேநீர் கடைகளில்

ஊடகங்கள் இல்லாத உலகை இன்றைக்கு கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. நவீன வாழ்வில் ஊடகங்கள் இரண்டறக் கலந்து விட்டன என்பது மிகையல்ல. உண்மை.


தினத்தந்தியோ தினகரனோ அல்லது வேறு ஏதேனும் ஒரு செய்திப் பத்திரிகையோ இல்லாத ஒரு முடிதிருத்தும் நிலையத்தையோ தேநீர் கடையையோ தமிழ்நாட்டில் நீங்கள் காட்ட இயலுமா? தினந்தந்தி பற்றி எத்தகைய கருத்து இருப்பினும் அது தனி. ஆனால் சாதாரண மக்களுக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிய பெருமை தினந்தந்தியையே சாரும்.


மக்களின் எழுத்தறிவு வளர்ச்சியோடு பத்திரிகையின் விற்பனை பெருகுவதும்; நாள்தோறும் பல்வேறு ஊடகங்கள் பல்கிப் பெருகுவதும் நாமறியாததல்ல. இவ்வளவுக்குப் பிறகும் 1000 பேருக்கு 70 பேர் தான் செய்திப்பத்திரிகைகள் படிப்பவர்கள் என்பதும், இதிலும் பெண்கள் விழுக்காடு மிகப்பரிதாபகரமானது என்பதும் வருத்தமான தகவல்தான். எனினும் சரிபாதி வாசகர்கள் கிராமப்புற மக்கள் என்கிற செய்தி சற்றே ஆறுதலானது.
இன்று ஊடகங்கள் என்பது வெறுமே தின, வார, மாத, பருவ ஏடுகளோடு அடங்கி விடுவதல்ல. தொலைக்காட்சியும் கைபேசியும் வந்தபின்னர் உலகம் ரொம்பவே மாறிப்போய்விட்டது.


வெகுஜன ஊடகங்களின் பிறப்பு

வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் மன்னராட்சி காலத்தில் அவர்களின் தேவைக்கு ஏற்ப "கீழ்படிதலும் விசுவாசமும் உள்ள குடிமக்களை" உருவாக்க "நீதிநெறி போதனைகள்" தாம் முன் நின்றன; அதற்கும் மேல் ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வப்போது முரசறைந்து மக்களுக்கு சேதி சொல்லுதலே ஊடகமாக இருந்தது. எப்போதும் ஆளும் வர்க்கச் சிந்தனையை சமூகத்தின் பொது புத்தியாக்கிடவே பிரச்சார உத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கேற்பவே ஊடகங்கள் வடிவம் பெற்றன.


மக்களாட்சியின் தோற்றத்தோடுதான் இன்றைய வெகுஜன ஊடகங்களும் பிறந்தன. "ஊடகம் வெகுஜன ஊடகமாக மாறியதன் வரலாறு முதலாளித்துவம், ஜனநாயகம், அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குடன் பின்னிப் பிணைந்ததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலப்பிரபுத்துவத்திற்கும் மன்னராட்சிக்கும் எதிராக வெடித்த புரட்சிக் கனவிலிருந்துதான் முதலாளித்துவம் உயிர்த்தெழுந்தது. அதற்குமுன் அரசுவைகளிலும், மந்திராலோசனைக் கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை இல்லை என்ற ஆளும் வர்க்க அகங்காரம் நொறுங்கிய நேரம் அது. ஆளுபவர்கள் மக்களை அணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தை மக்களே உருவாக்கி விட்டிருந்தபடியால் அவர்களைச் சென்றடைய ஊடகம் தேவைப்பட்டது. இந்தத் தேவையை அறிவியல் வளர்ச்சி பூர்த்தி செய்தது" என்கிறார் ஆர். விஜய் சங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்.7)


பலரிடமிருந்து பலருக்கு...

அச்சு ஊடகம் என்ற கட்டத்தை தாண்டி டிஜிட்டல் உலகில் வேகமாக பயணிக்கிறோம். இணையதளமும், கைபேசிகளும், நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் கருவிகளும் தொலைக்காட்சியும் இதர மின்னணு ஊடகங்களும் விதைத்துள்ள பெரிய வாய்ப்பும் வலிமையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதுமட்டுமல்ல பழைய உலகில் தகவல் தொடர்பு என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, ஒருவரிடமிருந்து பலருக்கு பரவியது; புதிய உலகில் தகவல் தொடர்பு என்பது பலரிடமிருந்து பலருக்கு ஒரே நேரத்தில் பரவுகிறது. ஆக இன்றைய ஊடகங்களின் வீச்சும் வேகமும் நம்மை வியக்க வைக்கிறது.


இந்த வலிமைமிக்க ஊடகங்கள் எதைச் செய்கின்றன? எதைச் செய்ய வேண்டும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய கருத்தரங்கின் மைய இழை என நான் கருதுகிறேன்
நாம் தமிழ்நாட்டு ஊடகங்களைச் சுற்றியே பேசப்போவதால் அதன் தொடக்கம் குறித்து சில செய்திகளைக் கூறியாக வேண்டும்.


நமது பாரம்பரிய வேர்

"இந்திய விடுதலைக் கிளர்ச்சியும் தமிழ்ப்பத்திரிகைத் துறையும் இணைந்தே வளர்ந்தன. ஆம், ஏனெனில் அவை இரட்டைக் குழந்தைகள் என்பார் ம.பொ.சி. "அடக்குமுறைகளை தாங்கிக்கொண்டோ - எதிர்த்துக்கொண்டோ - பார்த்துக்கொண்டோ இந்திய இதழ்கள் வளர்ச்சி அடைந்தன. பூனை இருக்கும் வீட்டில் எலியும் போராட்டத்திற்கு இடையே குடும்பம் நடத்தி குட்டிகள் போடுவது போல" என க. திரவியம் `தமிழ் வளர்த்த தேசியம்' எனும் நூலில் குறிப்பிடுவார்.


ஆக, இந்திய ஊடகங்கள் விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்தைக் கொண்டவை. குறிப்பாக பத்திரிகைகளுக்கு அது நூற்றுக்கு நூறு உண்மை. இதர மின்னணு, ஊடகங்கள் சமீபத்தில் தோன்றினாலும் இன்னும் அந்தப் பாரம்பரிய வாசம் கொஞ்சம் இருக்கிறது. அதென்ன பாரம்பரிய வாசம்? "பாஷாபிமானம், சமயாபிமானம், தேசாபிமானம்" என அந்த நாட்களில் கூறுவர். அதாவது மொழிப்பற்று, மதப்பற்று, தேசப்பற்று இவையே இந்தியப் பத்திரிகைகளின் துவக்க காலப் பார்வையாக இருந்தது என்பார், இதழியல் குறித்து பல நூல்கள் எழுதிய அ.ம. சாமி, "ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்றுசேர்க்கும் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்" என்றே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் புகழ்ந்துரைப்பார். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்று உண்டு. "தமிழகத்தில் இதேகால கட்டத்தில் இதற்கு இணையாக சமூக சீர்திருத்த பார்வையும் வலுவாக தடம் பதிக்கத் துவங்கிவிட்டது" என்பதும், "பொதுவுடமை சிந்தனை ஊடகங்களில் தலைகாட்டத் துவங்கிவிட்டது" என்பதும்தான் அது.


"தேசியம் வளர்த்த இதழியல்", "திராவிடம் வளர்த்த இதழியல்", "பொதுவுடமை வளர்த்த இதழியல்" என தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்த மூன்று போக்குகளும் தமிழக ஊடகத் துறையில் அழுத்தமான தடங்களை பதித்துள்ளன என்பதை நாம் ஆழமாக மனதில் பதியவைக்க வேண்டும்.


(உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக்கனார் நினைவு அறக்கட்டளையும் இணைந்து இந்த ஆய்வுகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது)


அந்த பாரம்பரியத்தின் தொடர் கண்ணிகள் தமிழக ஊடகத்துறையில் முற்றாக அறுந்துவிடவில்லை. எனவேதான், "தமிழக ஊடகத் துறை "சில தனித்த போக்குகளும்", "இன்றைய உலக-தேசிய ஊடகத் துறையின் பொதுப்போக்குகளும்" இணைந்த கலவையாக காட்சி அளிக்கிறது.


கட்டளையிடும் எஜமானனாக

"வெகுஜன ஊடகங்கள் மக்களுக்குத் தொடர்ந்து செய்தி சொல்கின்றன. அவர்களுக்கு கேளிக்கையும் அளிக்கின்றன. அவற்றைப் படிக்கும் அல்லது பார்க்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நடத்தை முறைகளையும் விதைத்து சமூகத்தின் நிறுவனங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு இயங்குவதற்கான தகுதியுடையவர்களாக்குகின்றன. சொத்துக்கள் ஒரு பக்கம் குவிந்துள்ள, பெரும் வர்த்தக மோதல்களைக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்துடன் இயைந்து செல்லக்கூடியவர்களாக மக்களை உருவாக்க முயற்சிக்கின்றன. இவை தம்மிடையே போட்டியிட்டுக்கொண்டு அரசாங்க மற்றும் தனியார் ஊழல்களையும் அக்கிரமங்களையும் அம்பலப்படுத்தி பேச்சுரிமைக்கும் பொது நலனுக்கும் குரல் கொடுப்பதுபோல் தோன்றினாலும் அவை இந்த அமைப்புக்கு எதிராக மக்களைத் திருப்பும் அளவுக்குத் செல்லாமல் அடக்கியே வாசிக்கின்றன. என ஆர். விஜயசங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்4) வலுவாக வாதிடுகிறார். அமெரிக்க சிந்தனையாளர்களான எட்வர்ட் ஹெர்மன் மற்றும் நோம் சோம்°கி இவர்களை மேற்கோள் காட்டி, அவர்கள் எழுதிய "பொதுப்புத்தியில் கருத்து ஒப்புதலை உருவாக்குதல்" (ஆயரேகயஉவரசiபே ஊடிளேநவே) என்ற நூலை அடியொற்றி இவ்வாறு வாதிடுகிறார்.


நாம் எதை நம்ப வேண்டும்? எதை சந்தேகிக்க வேண்டும்? எதை நேசிக்க வேண்டும்? எதை வெறுக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எதை யோசிக்க வேண்டும்? எதை ரசிக்க வேண்டும்? எதை வாங்க வேண்டும்? எங்கு வாங்க வேண்டும்? எப்படி வாங்க வேண்டும்? எதை உண்ண வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? என நம் வாழ்வின் சகல அம்சங்களையும் அ முதல் ஃ வரை கட்டளையிடுகிற எஜமானனாக இன்றைய ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லவா?


ஒவ்வொரு மனிதனின் கருத்தையும் செதுக்குவதில் மீடியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன; உண்மையில் தனி மனிதனின் - சமூகத்தின் கருத்தை வடிவமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிப்பதை அமெரிக்க அறிஞர் நாம் சோம்°கி அவர் பாணியில் சொன்னாரென்றால்; தமிழகத்தில் தந்தை பெரியார் அவருடைய மொழியில் சொன்னார். "உலகம் உயர்ந்தோர் மாட்டே என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்னைப் பொறுத்தவரை உலகம் பிரச்சாரத்தின் மாட்டே" என்பார்.


கட்சி சார்பு ஏடுகள்

அந்தத் தெளிவு தமிழக ஊடகங்களுக்கு ஆதிமுதலே இருப்பதை அறியலாம். மற்ற எந்த மாநிலங்களையும் விட பகிரங்கமாகக் கட்சி சார்பாக ஏடுகளும், தொலைக்காட்சிகளும் செயல்படுவது தமிழ்நாட்டில்தான் அதிகம்.
முரசொலி, நமது எம்ஜிஆர், விடுதலை, தீக்கதிர், ஜனசக்தி, தமிழோசை ஆகிய தின ஏடுகளும், ஜெயா டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி, சன் டிவி என கட்சி சார்பு தொலைக்காட்சிகளும், கட்சி சார்பு வார, மாத, பருவ, இலக்கிய ஏடுகளும் பலப்பல. இதனால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.


கட்சி சார்பாக இருப்பதால் அதற்கேற்ப சில சமூகப் பொறுப்புகள் அவற்றுக்கு கட்டாயமாகின்றன. அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளடக்கத்தை பளிச்சென புரிந்துகொள்வது மிக எளிது. இது நல்ல அம்சம். ஆனால் கட்சி சார்பாக செயல்படுவதால் அதன் அனைத்து அம்சங்களையும் கட்சிக் கண்ணோட்டத்தில் வாசகர்கள் விருப்பு வெறுப்போடு எடைபோடுவதும் இயல்பாகிவிடும். ஆபத்தும் உண்டு.


கட்சி சாராத பிற ஏடுகள் நடுநிலை ஏடுகளாக கூறிக் கொள்கின்றன. சாராம்சத்தில் அப்படியாக உள்ளனவா? - இது அடிப்படையான கேள்வி.


மாமேதை காரல் மார்க்° கூறுவார்; "உற்பத்தி சாதனங்களையும் உற்பத்தி நடவடிக்கைகளையும கட்டுப்படுத்துகிற அதிகார வர்க்கம் அதே நேரத்தில் அறிவு ரீதியான உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே அறிவு ரீதியான உற்பத்தி சாதனங்கள் பெற்றிராதவர் பெற்றிருப்பவர்களின் கருத்துக்கு இலக்காகிறார்".


கட்டுப்படுத்தும் காரணிகள்

பச்சையாகச் சொல்லப்போனால் என்னதான் நடுநிலைமை, நேர்மை, பத்திரிகை சுதந்திரம் என்றெல்லாம் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் இறுதியில் சுரண்டும் வர்க்க நலன் காப்பதில்தான் போய் முடியும். வர்க்க சமூகத்தின் இயல்பு அதுதான்.


விடுதலைப்போராட்ட காலம்போன்றோ அல்லது 60களைப் போன்றோ பத்திரிகை துவங்குவது இன்று அவ்வளவு மலிவல்ல. அப்போதெல்லாம் குறைந்த முதலீட்டில் ஏடுகள் தொடங்கி சில ஆயிரம் பிரதிகள் விற்றால் போதும். அப்போதும் நட்டம் இருக்கும். ஆயினும் தனி நபரோ அல்லது சிலர் கூட்டாகவோ லட்சிய நோக்கில் தாங்கிக்கொள்ள முடியும். (உ.ம். திராவிட இயக்க ஏடுகள், பொதுவுடமை ஏடுகள்) அப்படி செய்யவும் செய்தன. ஆனால் இன்று பெரும் பொருட் செலவு மிக்கது ஊடகத்துறை. அச்சு ஊடகமாயினும் மின்னணு ஊடகமாயினும் இதுதான் நிலை. எனவே பெரும் வருவாய் ஈட்டாமல் ஊடகத்தை தொடர முடியாது. வருவாய்க்கு விற்பனை மட்டும் போதாது. விளம்பரமின்றி ஊடகங்கள் இன்று வாழாது.
எனவே இன்று ஊடகங்களை கட்டுப்படுத்துகிற காரணங்களில் 1) `ஊடக முதலாளிகளை' அடுத்து 2) `விளம்பரங்கள்' முக்கிய பங்கு வகிக்கின்றன. 3) வர்த்தகம் சுமூகமாக நடந்திட `எதிர்வினைகள்' பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. 4) அரசு மற்றும் ஏகபோக, பன்னாட்டு நிறுவனங்களின் நிபுணர்கள் யோசனையை கேட்க வேண்டியுள்ளது. இந்த நான்கு காரணிகளுக்கும் அடிநாதமாக சில சில்லறை கண்துடைப்பு நடவடிக்கைகளுடன் இந்த சமூகத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்து அடிநீரோட்டமாக இயக்கும். இதன் பொருள் `கம்யூனிச எதிர்ப்பு' என்பது இதன் மையமாக இருக்கும் என நோம் சோம்°கி சுட்டிக்காட்டுகிறார்.


எல்லாத் தத்துவங்களும் உலகை அதன் துன்ப துயரங்களை வியாக்கியானம் செய்வதோடு நின்றுவிடும். அதுவரை சுரண்டும் வர்க்கத்துக்கு ஆபத்து இல்லை. ஆனால் அதை மாற்ற முற்படும் போதுதான் பிரச்சனை. அதற்குரிய தத்துவம்தான் மார்க்சியம். ஆகவேதான் மார்க்சிய தத்துவம் - கம்யூனிச தத்துவம் சுரண்டல் வர்க்கத்துக்கு எதிராக இருப்பதால் இதனை முடிந்தவரை அடக்கிவைப்பதே ஊடகங்களின் தலையாயப் பணி. தமிழக ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமிழக ஊடகங்களின் "சமூகப் பொறுப்பும்", "அறிவியல் நோக்கும்" பெரும் கேள்விக்குறியாகி வருகின்றது.


நான்கு நோக்கங்கள்

ஆங்கிலத்தில் ஊடகங்களின் நோக்கமாக நான்கைக் கூறுவார்கள். (1) ஐசூகுடீசுஆ- தகவல் தெரிவித்தல் (2) நுனுருஊஹகூஐடீசூ - பயிற்றுவித்தல் (3) நுசூடுஐழுழகூநுசூ - விழிப்புணர்வூட்டல் (4) நுசூகூநுசுகூஹஐசூ - பொழுதுபோக்கு. இதில் `கடைசி' அம்சம் தமிழ் ஊடகத்துறையில் முதலிடம் வகிக்கிறது. தகவல் தெரிவித்தல் ஓரளவு நடைபெறுகிறது. (அதிலும் வர்க்க சார்பு உண்டு) மற்ற இரண்டிலும் பெரும் பள்ளம் நிலவுகிறது.


இவை தவிர ருவடைவைல ஏயடரந என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிற `பயன் மதிப்பு' இன்றைய ஊடக நுகர்வு கலாச்சாரத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. அதில் தமிழ் ஊடகங்கள் வர்த்தக நோக்கிலும், விளம்பர நோக்கிலும் செய்தாலும் அதில் ஆர்வம் காட்டுகிறது. உதாரணமாக 10ம் வகுப்பு வினா-விடை, பிள° 2 வினாவிடை, வேலைவாய்ப்புச் செய்திகள் பயிற்சிகள், கணினி தகவல்கள் பயிற்சிகள், மருத்துவ யோசனைகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் என பலவற்றில் ஏறத்தாழ எல்லா ஊடகங்களும் ஈடுபடுகின்றன. அவற்றின் தரம் மற்றும் அறிவியல் அணுகுமுறை இவற்றில் குறைபாடுகள் நிரம்பவே உண்டு. எனினும் இம்முயற்சிகளை பொதுவில் வரவேற்க வேண்டும்.


தகவல் தருவதில் அதாவது செய்திகள் அளிப்பதில் ஊடகங்களுக்கு இடையே கடும் போட்டியே நிலவுகிறது. எனினும் தகவல்களை / செய்திகளை வடிகட்டி தங்கள் வர்க்க சார்பை அவை காட்டிக்கொள்கின்றன.


பெரியார் பிறந்த மண்ணில்

கூடுதல் கவலை என்னவெனில் பெரியார் பிறந்த மண்ணில் சிங்காரவேலர் பிறந்த மண்ணில் பகுத்தறிவிற்கு கொள்ளி வைக்கிற காரியங்களை ஊடகங்கள் காலை முதல் இரவுவரை செய்கிறது என்பதுதான். சோதிடம், பேய், மந்திரம், வாஸ்து என சகல மூட நம்பிக்கைகளும் நவீன அறிவியலைப் பயன்படுத்திக் கொண்டு வேகமாகச் செய்யப்படுகிறது ஜோதிட ஏடுகள் பல்கிப் பெருவது கவலை அளிக்கிறது. பிள்ளையார் பால் குடிக்கிறார், மேரி மாதா ரத்தக்கண்ணீர் வடிக்கிறார், பேய் நடமாடுகிறது என பலவற்றை தொலை காட்சியும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு தரும். ஆனால் அவை அறிவியல் ரீதியாக அம்பலப்படும்போது மவுனம் சாதிக்கும். ஏன் இந்த அநீதி? அன்றாடம் பார்க்கிற அனுபவிக்கிற இதற்கு விளக்கம் தேவையா? சேது சமுத்திர திட்டம் முடங்கிப் போனது. தமிழகத்தில் நியாயமாக எழ வேண்டிய கோபம் - அறிவுபூர்வமான விழிப்புணர்வு ஏற்பட்டதா? ஊடகங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவா நடந்தன? உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.


ஜோதிட ஏடுகள் மலிந்துள்ளன அது மட்டுமல்ல மக்களின் ஜோதிட நம்பிக்கைகுள் புகுந்து மதவெறி பிரசாரமும் நடக்கிறது. உதாரணமாக குமுதம் ஜோதிடம் இதழில் ஒரு இஸ்லாமியராக மாறிய சகோதரியின் கேள்விக்கு பதில் அளித்த ராஜகோபால் அவர்கள், இந்துக்கள் கண்ணாக மதிக்கும் பசுவின் மாமிசத்தை உங்கள் கணவர் உண்பதால் தான் உங்கள் குழந்தைக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்கள் கணவரை அந்த பழக்கத்தில இருந்து மீட்டுடெத்தால் உங்கள் குழந்தையின் பார்வை சரியாகும் என்று பதில் அளித்ததன் மூலம் ஒரு வகையில் இந்துத்துவ மதவெறியர்களின் பசுவதை எதிர்ப்பு என்கிற கருத்தை திணிக்கிறார். மருத்துவ விஞ்ஞானத்தை மறைமுகமாக நிராகரிக்கிறார்கள்.


அது மட்டுமா கிரகப் பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் என்பதன் வாயிலாக அர்த்தம் புரியாமல் சமஸ்கிருத ஸ்லோகங்களை மன்னம் செய்ய வழிகாட்டுகின்றன. அதன் மூலம் தெய்வீக சக்தி தமிழுக்கு கிடையாது என்றும் சமஸ்கிரதத்துக்குத் தான் தெய்வீக சக்தி உண்டென்றும் மக்களை நம்பச் செய்கின்றனர்.


மேல் வர்க்க....மேல் வர்ண

ஊடகங்கள் தொலைத்துவிட்ட ஒன்று தலித் பார்வை . உத்தபுரம் `தீண்டாமை சுவர்' இடிக்கப்பட்டது என்பதைக்கூட எழுத /கூற தமிழ் ஊடகங்கள் தயங்கின. ஆனால் மேல்சாதியினர் மலையேறியதுதான் செய்தி. "தலித் மக்களின் சிறப்புகூறு திட்டம்" தமிழகத்தில் செயலிழந்து நிற்பதை பற்றி எந்த ஊடகம் கவலைப்படுகிறது? தீண்டாமை இன்று நிலவுவதை புலனாய்வு செய்து எந்த ஏடு வெளியிட்டது? சிலைகள் அவமதிக்கப்படுகிறபோது பரபரப்பு செய்தி தருகிற ஏடுகள்; நூற்றாண்டாய் அங்கு புரையோடிப் போயிருக்கிற சாதி ஆதிக்கம் குறித்து கனத்த மவுனம் சாதிப்பது ஏன்? இட ஒதுக்கீடு சட்டம் வந்தபோது எதிர்த்தும் ஆதரித்தும் சூடாக செய்தி விற்பனை செய்யும் ஊடகங்கள் அந்த இட ஒதுக்கீடு அமலாகாத இருட்டுப்பகுதிகளை பற்றிய அறிக்கைகளை ஆய்வுகளை இருட்டடிப்பு செய்வது ஏன்? ஊடகங்கள் இன்னும் "மேல் வர்க்க மேல்வர்ண" ஆதிக்கத்தில்தான் உள்ளது என சாய்நாத் ஆய்ந்து எழுதியது உண்மையே! தமிழ்நாட்டில் தங்களை மேல்நிலையாக்கிக் கொண்டு தன் சொந்த வர்க்கத்திற்கும் சொந்த வர்ணத்திற்கும் துரோகம் செய்கிற ஊடக நிறுவன முதலாளிகளுடன் அப்படி தான் என்பது கூடுதல் வேதனை. புலனாய்வு ஊடகங்கள் இந்த சமூக பிரச்சனை குறித்து காட்டிய அக்கறை என்ன?


பெண் நிலை/ பெண் மொழி

பெண்கள் பற்றிய பார்வையில் தமிழக ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊனம் மன்னிக்க முடியாதது. அதுவும் வேறு யாரையும் விட உரக்கவும் வெளிப்படையாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை பேசிய பெரியார் பிறந்த மண்ணில் பெண்களுக்கு ஊடகங்கள் செய்யும் தீங்கு அதிகம். மிக அதிகம். மகளிர் தினத்தன்று எங்கோ குடிக்கிற ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு இதுதான் மகளிர் உரிமை என்று ஏகடியம் பேசுகிற அளவுக்கு ஒரு ஏட்டுக்கு தலைக்கொழுப்பு உச்சத்தில் இருந்தது. பிற ஏடுகளும் சடங்காக சில செய்திகளை வெளியிடுவதைத் தவிர வேறு என்ன செய்தன? பொதுவாக மொழி என்பது வரலாற்று ரீதியாக ஆதிக்க சக்திகளாலும், ஆண்களால் கட்டமைக்கப்பட்டது. ஆகவே `பெண்கள் மொழி, ஒடுக்கப்பட்டவர் மொழி' என மொழியின் கட்டமைப்பிலேயே ஜனநாயகப்படுத்தல் தேவைப்படுகிறது என உணரும் காலம் இது.


ஆனால் தமிழக செய்தி ஏடுகளில் அந்த `பெண் மொழி' இல்லை. ஆண் மொழி மட்டுமல்ல ஆதிக்க மொழியுமே கோலோச்சுகிறது. கிரைம் செய்திகளில் இதைத்தூக்கலாகக் காணலாம். பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் கொடுமை சர்வ சாதாரணம். போலீ° மொழிதான் செய்தி ஏடுகளுடையதாகவும் இருப்பதைப் பார்க்கலாம். `குஷ்பு பேச்சு தொடர்பான விவாதத்தில் உணர்ச்சி கொம்பு சீவப்பட்டதே தவிர அறிவுபூர்வமான விவாதம் நடத்தப்படவே இல்லை. ஆணுறை வியாபாரிகள் தங்கள் விற்பனைக்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வே (அதுவே இட்டுக்கட்டப்பட்டது என்பதே உண்மை) அதையொட்டி நடிகைகள் பேட்டி என்பது வியாபார யுக்தி. ஆனால் பெரியார் பூமியில் பெண் விடுதலை சார்ந்து விவாதம் நடந்ததா? அல்லது `கட்டுப்பாடற்ற பாலுறவு' மற்றும் `கட்டுப்பெட்டியான பஞ்சாங்கப் பெண்' என இரு கோடிகளுக்கு இடையே விவாதம் அனல் பறந்ததா? உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.


கே° விலை கூடினாலும் குறைந்தாலும் குடும்பப் பெண்கள் கவலை அல்லது மகிழ்ச்சி என்றுதானே தலைப்பு போடப்படுகிறது. தொலைக்காட்சிகள் எம் கிராமத்து பெண்களின் கழிவறை வசதியின்மையைவிட சிகப்பழகில்தான் அக்கறை காட்டுகிறது. எம் பெண்களின் ரத்தசோகை குறித்தோ போஷாக்கின்மை குறித்தோ கவலைப்படுவதைவிட ஷேர் மார்கெட் சூதாட்டத்து பெண்கள் பற்றியே கவலைப்படுகிறது. சொல்லச் சொல்ல நீளும்.


ஐ°வர்ராயும் விவசாயிகள் தற்கொலையும்


ஐ°வர்யராய் திருமணத்தை நாட்கணக்கில் முதல் பக்கத்தில் தரமுடிந்த இந்திய ஊடகங்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை குட்டிச் செய்தியாக ஒதுக்கித்தள்ள முடிந்தது எதனால்? பிரசாந்த்-கிரஹலட்சுமி விவகாரத்து விவகாரம் (இதிலும் ஆணாதிக்க நிலையில்தான் தந்தார்கள் என்பது வேறு சங்கதி) குறித்து பல நாட்கள் செய்தி தந்த தமிழக ஊடகங்கள் கடன் தொல்லையால் சிறுநீரகத்தை விற்கும் நெசவாளர்கள் குறித்து தந்தார்களா? கஞ்சித் தொட்டி திறந்தபோது பரபரப்பு செய்தியாக்கியவர்கள் தாராளமய உலகமயக் கொள்கையின் விளைவு என்பதை சொன்னார்கள்?


அதுமட்டுமல்ல அரசியல் லாவணிக் கச்சேரிகள் நடத்த களம் அமைத்து சூடாக பத்திரிகை வியாபாரம் செய்யும் தமிழக ஊடக முதலாளிகள் தமிழக சமூக பொருளாதார நிலைமைகள் பள்ளத்தில் கிடப்பது குறித்து பகிரங்க உரையாடலுக்கு இடம் தந்தார்களா?


பிரதமர் வேட்பாளர் யார்?


தனிநபர் தாக்குதல் களமாக மாறிப்போயுள்ள ஊடகத்தில் கருத்து மோதல் - திறந்த உரையாடல்கள் விவாதம் என்பதற்கான இடம் எங்கே?


இந்தியா என்பது பல மொழி பேசுபவர்களை கொண்ட நாடு பல்வேறு மத நம்பிக்கைகள் உடைய நாடு. ஆயிரக்கணக்காண சாதிகளும் வர்ண அடுக்கு முறையும், தீண்டாமையும் உள்ள நாடு. இங்கே முதல்வரையோ, பிரதமரையோ, குடியரசுத்தலைவரையோ மக்களே நேரடியாகத் தேர்வு செய்வது சம நீதிக்கு உதவாது. நேரடியாக தேர்வு என்றால் ஆதிக்கமதம், ஆதிக்க இனம் ஆதிக்க வர்க்கம் இவைகளின் கையே ஓங்கும் . எனவே தான் டாக்டர் அம்பேத்கார் போன்றோர் பிரதிநிதித்துவ முறையை பரிந்துரைத்தனர். இந்துத்துவ சக்திகள் இதை மாற்ற முனைகின்றன. குடியரசு தலைவரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்ய வேண்டும் என குடியரசு தலைவர் தேர்தலின் போதுஊடகங்கள் பிரச்சாரம் செய்ததும், இப்போது பிரதமர் வேட்பாளர் யார் என எழுப்புவதும் ஆபத்தானது. அம்பேத்கார் வகுத்த நேர்பாதையை சீர் குலைப்பதாகும். இதைத்தானே ஊடகங்கள் செய்கின்றன.


சென்னை மயிலாப்பூர் அல்லது பெசன்ட் நகரில் சாலையில் சின்னச் சம்பவம் என்றாலும் பெரிதாகப் பேசும் ஊடகங்கள் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தாராளமயக் கொள்கையால் சீரழிக்கப்பட்டு கிடப்பதை என்றேனும் முன் நிறுத்தினார்களா?


நிலம்: வர்க்கபாசம்


கடந்த சட்டமன்றத் தேர்தலில் தலைக்கு 2 ஏக்கர் நிலம் வீதம் 50 லட்சம் தரிசு நிலம் 25 லட்சம் பேருக்கு வழங்க திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி தந்தது. அது சாத்தியமில்லை. அவ்வளவு நிலம் இல்லை என அதிமுக மறுத்தது. ஆனால் முந்தைய ஆட்சியில் ஆளுநர் உரையில் உள்ளதை கலைஞர் எடுத்துக்காட்டினார். அது அதிகாரிகள் சொன்னதை நம்பி தவறாக தரப்பட்டதாக அதிமுக தரப்பு விளக்கம் தந்தது. இந்தத் தகவல் எல்லாம் ஏடுகளில் வந்தன. ஆனால் "ஆளுநர் உரையில் சொன்னது பொய்" எனில் அதை அடுத்த உரையில் மறுத்தார்களா? மாற்றி தந்தார்களா? இல்லை. அப்படியானால் "ஆளுநர் உரையும் நம்பத்தகுந்தது இல்லையா?' 50 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே போனது? யாரும் கேட்கத்தயார் இல்லை - இடதுசாரிகளைத் தவிர. ஆனால் ஊடகங்கள் இதைக்கண்டு கொள்ளவே இல்லை. இதில் கிளைமாக்° என்னவெனில் இந்த நிலங்கள் யார் யாரால் அபகரிக்கப்பட்டு நூறு ஏக்கர், ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் என வேலிபோடப்பட்டுள்ளது என்கிற விபரத்தை சென்னையில் காமராஜ் அரங்கில் பெரிய மாநாடு நடத்தி பட்டியலை அச்சிட்டு கொடுத்தபோதும், எல்லா ஊடகங்களும் அந்த மாநாட்டிற்கு வந்திருந்தும் அதனை வெளியிடவில்லை. ஏனெனில் தங்களுக்கு விளம்பரம் தரும் பெரிய நிறுவனங்கள்தாம் அந்த காரியத்தை செய்துள்ளன என்பதால், வெளியிட மறுத்து விட்டன. இதுதான் தமிழக ஊடகங்களின் வர்க்க பாசத்திற்கு சரியான உதாரணம்.


இதேபோல பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இன்னொன்றை பார்ப்போம். குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் கிண்டி கிங் இன்°டிடியூட் மற்றும் குன்னூர் பா°டர் நிறுவனம் இவற்றை மத்திய அரசு மூடிவிட்டு தனியாரிடம் கொடுக்க முனையும்போது அதன் ஆபத்துகளைக் கூற இடதுசாரி ஏடுகளைத் தவிர வேறு இல்லை.


தேவையான கண்ணாடிகள்


தலித் பார்வை, பெண் பார்வை, உழைக்கும் மக்கள் பார்வை என அடிப்படையாக இம்மூன்றிலும் உலக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் அடியொற்றியே தமிழக ஊடகங்களும் செல்கின்றன.


தேர்தல் நேரம். ஆகவே பலவற்றை நான் இங்கு பகிரங்கமாக பேச முடியாது. ஆனால் மலையும் மடுவுமாய் சமூகம் மேலும் மேலும் பிளவுபட்டு வருவதை, சிறு பகுதியினருக்கான ஒளிரும் இந்தியாவும், பெரும்பான்மை மக்களுக்கு வறண்ட இந்தியாவும் என இரண்டு இந்தியாவாக பிளவுண்டதை ஊடகங்கள் சொல்லுமா? மதவெறியின் கோர விளைவுகளை - ராணுவத்தில் நீதித்துறையில் எங்கும் ஊடுருவிவிட்ட மத, சாதி ஆதிக்கத்தை ஊடகங்கள் தோலுரிக்குமா? புதிய பாதையில் தேசம் நடை போட வழி காட்டுமா? தனிப்பட்ட அமைச்சர்களின் செயல்திறன் குறைவால்தான் பிரச்சனைகள் புரையோடுவதாக மாற்றி மாற்றி குற்றஞ் சாட்டுபவர்கள்; கொள்கைக் கோளாறை முன்னிலைப்படுத்துவதில்லையே ஏன்? எதிரும் புதிருமாக கச்சை கட்டி நிற்பவர்கள் சாராம்சத்தில் ஒரே வர்க்க நலனைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுமா? கொள்கை மாற்றத்துக்கு குரல் கொடுக்குமா? நிச்சயம் ஊடகங்கள் அதைச் செய்யப்போவதில்லை. தனி நபர் மோதல்களாக - லாவணிக் கச்சேரியாக - உணர்ச்சி போராட்டமாக - தேர்தல்களம் மாற்றப்படும். ஊடகங்கள் அக்காரியத்தைத் தான் செய்யும் இன்னும் பேச தேர்தல் நடத்தை விதி குறுக்கீடு செய்வதால் இத்தோடு அமைகிறேன்.


ஒரே ஒரு வேண்டுகோள் இங்கே எம் உரை கேட்ட மாணவர்களில் ஒருவராவது ஊடகத்துறையில்/ பெண் பார்வையில்/ தலித் பார்வையில்/உழைக்கும் மக்கள் பார்வையில்/ கிராமத்துப் பார்வையில்/தொலை நோக்குப் பார்வையில்/ அறிவியல் பார்வையில் மொத்தத்தில் மார்க்சியப் பார்வையில் செயல்பட முனைந்தால் அதுவே எமக்கு வெற்றி


பெரியார் அணிந்த சமூகக் கண்ணாடியை - அம்பேத்கார் அணிந்த சமூகக் கண்ணாடியை - சிங்காரவேலர் - அணிந்த சமூகக் கண்ணாடியை - மாணவர்கள் அறிய வேண்டும். இன்றைய சமூகத் தேவையை - சமூக அறிவியில் கண்ணோட்டத்தில் - மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கப் பழக வேண்டும் என்பதே என் விழைவு. வேண்டுகோள்.


'மார்க்சிய கண்ணோட்டம்' என்பது சிலருக்கு ஏற்கத்தக்கதாக இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது நீங்கள் நாளை பணியாற்றப்போகிற நிறுவனத்தில் அதற்கு இடம் இல்லாமல் போகலாம். ஆயினும், காந்தியின் ஒரு அளவுகோலைப் பயன்படுத்த நீங்கள் முயன்றாலேகூட நன்மைகள் நிறைய விளையும்.
ஆம். மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார் "உன்னுடைய பேச்சு, எழுத்து, செயல் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கிற கடையனுக்கும் கடையனுக்கு சிறிதாவது பயன்படுமா, நன்மை தருமா என்று யோசித்துப்பார்" காந்தியின் இந்த அளவு கோலையாவது மனதில் எப்போதும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.


வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
சு.பொ. அகத்தியலிங்கம்
[ இந்த மின்னஞ்சல் www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]

Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...

திருமா இது தகுமா?


thiதிருமா இது தகுமா? -சு.தளபதி
மானமிகு திருமாவளவன் அவர்களுக்கு,
இந்த அடைமொழியுடன் உங்களை யாரும் இதுவரை அழைத்தார்களா என்று எமக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்ற நம்பிக்கையுடன் மடலைத் தொடர்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளாய் உங்களை இந்தத் தமிழகம் கூர்மையாகக் கவனித்து வந்திருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துச் சிறுத்தையாய் நீங்கள் வெளியே வந்தபொழுது இந்தத் தமிழகம் உங்களை ஆரத் தழுவி வரவேற்றது.
பெருமையுடன் உங்கள் அடையாளங்களை அரங்கேற்றியதும், அங்கீகரித்ததும் இந்தத் தமிழினம் தான். அதற்குக் காரணம் நீங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் அல்லது அந்த இனத்துக்காய் குரல் கொடுப்பவர் என்பது மட்டுமல்ல.அதையெல்லாம் தாண்டி எங்கெல்லாம் மனிதம் துன்புகிறதோ அங்கெல்லாம் உங்கள் ஆதரவுக் கரங்கள் நீண்ட காரணத்தினால்தான்.
சாதி அடையாளங்களைத் தாண்டி உங்களை ஒரு தலைவனாக உயர்த்திப் பிடிக்கத் தமிழர்கள் ஒரு போதும் தயங்கியதே இல்லை.
தமிழுக்கு முகவரி தர தமிழ்ப் பெயர்களை நீங்கள் சூட்டிய பொழுது தமிழ்ப் பகைவர்கள் உங்களை எள்ளி நகையாடினார்கள். ஆனால் தந்தைக்கே பெயர் சூட்டிய தனயன் என்று உங்களை இந்தத் தமிழ் மக்கள் பெருமையுடன் உச்சி முகர்ந்தார்கள்.
தமிழ் அடையாளங்களை காப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த நீங்களும் மரியாதைக்குரிய ராமதாசும் தமிழ் பாதுகாப்புக் குழுவை உருவாக்கி அரசியல் அரங்கில் ஒற்றுமை பேணிய போது உங்களை வராது வந்த மாமணியாய் நாம் அரவணைத்துக் கொண்டோம்.
பாப்பாபட்டி கீரிப்பட்டியில் ஆதிக்க சக்திகளை நீங்கள் அஞ்சாமல் எதிர்த்த போது உங்கள் கரங்களுக்கு தமிழர்கள் தாங்களாய் உரம் சேர்த்தார்கள்.
சங்கராச்சாரியாரின் பார்ப்பன பிதற்றலுக்கு ஒரு சரியான சவுக்கடியாக, ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் கையில் தண்ணீர் வாங்கிப் பருகச் சொல்லி கேட்டபோது இங்கு இருந்த பெரியார் தொண்டர்கள் எல்லாம் பூரித்துப் போனார்கள்.
சென்ற முறை திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் போது அவர்கள் ஆதரவில் நின்று வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறிந்ததில் அரசியல் அரங்கில் ஒரு வித்தியாசமான மனிதனைக் கண்ட பெருமை எங்களுக்கு.
உங்கள் பாதை தெளிவாய் இருந்தது, உங்கள் நடை நேர்மையாய் இருந்தது கண்டு, ஒடுக்கப்பட்டோர் மட்டுமல்லாமல் இன உணர்வாளர்கள் அனைவரும் உங்கள் தோளுடன் தோளாக நின்றார்கள். உங்களின் சுயமரியாதையும், இனமான உணர்வும் அவ்வப்போது எங்கள் இதயத்தில் நல்ல பதிவுகளாக பதிந்து போயின.
தவறைத் தவறு என்றும் சரியை சரி என்றும் சரியாகச் சொன்னதினால் தமிழ் அரசியல் வரலாற்றில் பத்தாண்டுகள் பலபடிகள் உங்களை உயர்த்திக் கொண்டு வந்தவர்கள் இந்த தமிழர்கள்.
அதிலும் மிக முக்கியமாக ஈழப் பிரச்சனையில் நீங்கள் எடுத்த நிலைப்பாடு உள்ளூர் தமிழர்களைத் தாண்டி உலகத் தமிழர்கள் மத்தியிலும் உங்களுக்கு என்று உயர்ந்த இடத்தை பெற்று தந்தது.
அய்யா நெடுமாறன், வைகோ ஆகியோரோடு நீங்கள் கொள்கை கூட்டணி கொண்டபோது ஈழத் தமிழனுக்காய் குரல் கொடுக்க ஒரு தன்மானத் தமிழன் எழுந்து விட்டான் என்றுதான் இந்த இனம் நம்பியது.
போர் செய்யும் சிங்கள அரசையும், போருக்கு உதவும் இந்திய அரசையும் பற்றி நீங்கள் போட்டுடைத்த உண்மைகளில் இந்த இனம் உன்னைத் இனமானத் தலைவனாய் உயர்த்திப் பிடித்தது.
மேடைமேடையாய் நீங்கள் முழங்கிய முழக்கங்கள் ஈழத்தமிழர் துயர் துடைக்கும் மருந்தாய், அவர்களுக்கு ஒரு விடியல் காட்டும் வெளிச்சமாய் இருந்ததில் உங்களை இந்த தமிழினம் நம்பியது.
ஈழத்தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த இந்த காங்கிரசு அரசு ஒப்புக்கெரள்ளும் வரை, போர் நிற்கும் வரை, நீங்கள் சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்ட போது எத்தனை தமிழர்கள் கண்ணீருடன் உங்கள் பின்னே காத்துக் கிடந்தார்கள் தெரி யுமா? உங்களின் ஒவ்வொரு இதயத் துடிப்புடன் எத்தனை கோடி துடிப்புகள் கலந்தன தெரியுமா?
உண்ணாவிரதம் முடிந்த போது உங்கள் நண்பர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஞாபகம் இருக்கிறதா? அவை உங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டவை அல்ல, எங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் கொடுக்கப்பட்டவை.
தமிழினத்தின் தலைவர் என அறியப்பட்டவர்கள் எல்லாம் இனத்தை இந்திய காங்கிரசுக்கு அடகு வைத்த போது எதிர்த்துக் குரல் கொடுத்து இலங்கை பாதுகாப்பு இயக்கம் என்று எல்லோரும் ஒருங்கிணைந்து வேலை நிறுத்தம், உண்ணா நோன்பு, மனிதச்சங்கிலி என போராட ஆரம்பித்த போது திருமா என்ற மூன்றெழுத்து தமிழோடும் தமிழ் மக்களும் இரண்டறக் கலந்து போனது.
தமிழின எதிரிகள் யார் என்பதை தெளிவாக அடையாளம் காட்டியதில் உங்கள் பங்கு மகத்தான ஒன்று என்பதை தமிழினம் எப்போதும் மறக்காது.
இந்திய அரசும் அதை நடத்துகின்ற காங்கிரசு கட்சியுமே ஈழம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் எதிரிகள் என்று நீங்கள் அறிவித்து அவர்களைத் தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்துவது என்ற கொள்கை முழக்கம் எடுத்தீர்கள்.
நம் எதிரிகள் ஏன் உங்களை கைது செய்யவில்லை என்று கரடியாய் கத்திய போது நாம் எடுத்த போராட்ட நடவடிக்கையால் சத்திய முர்த்திபவனே சற்று ஆடித்தான் போயிற்று.
மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து தற்கொடை அளித்த போது அவன் உதடுகள் உச்சரித்த கடைசி சொற்கள் பிரபாகரனும், திருமாவும்.
தொடர்ந்து இதுவரை ஒரே ஒரு லட்சியத்துக்காக, ஒரே ஒரு கோரிக்கைக்காக பதின் மூன்று உயிர்கள் தற்கொடை அளிக்கப்பட்ட போது ஒவ்வொரு இறுதி நிகழ்விலும் உங்கள் கண்ணீருடன் எங்கள் கண்ணீரும் விழுந்தது. அவ்வளவு ஏன் உங்கள் அரசியல் இயக்கத்திலிருந்தே மூவர் தீக்குளித்தார்கள்.
எல்லோரும் சேர்ந்து யாரை நம்பினார்களோ இல்லையோ உங்களை நம்பினார்கள். உங்கள் கைகளிலும் தொடர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகளை விட்டுப் போனார்கள்.
நாங்களெல்லாம் அதை நம்பினோம். யார் எப்படியோ திருமாவின் பார்வையில் தெளிவு குறையாதென்று உறுதியாயிருந்தோம்.
என்ன ஆயிற்று உங்களுக்கு, தேர்தல் வந்துவிட்டதா?
தேர்தல் எப்போதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரத்தான் செய்யும். அதற்காக துரோகிகளுடனும், எதிரிகளுடனும் கூட்டணி சேர்வதா?
எதுவும் மாறவில்லை இதுவரை. தினந்தோறும் குண்டு வீச்சும் ,செத்துமடியும் தமிழினமும், வீடின்றி, நாடின்றி தங்கக்கூட இடமின்றி அலையும் அவலமும் இன்று வரை குறையவில்லை.
குண்டு போடுவதை நிறுத்துங்கள் என்றால் காங்கிரசோ குண்டுவீச்சில் செத்தவர்கள் போக மீதமிருப்பவர்களுகு மருத்துவ உதவிகள் செய்கிறோம் என்கிறார்கள்.
ஆனால் போர் நின்று விட்டது போலவும், அமைதி திரும்பிவிட்டது போலவும், தமிழர்கள் பாதுகாப்பு அடைந்துவிட்டார்கள் என்று போலவும், நீங்களும் உங்கள் நண்பர்களும் பேசி வருகிறீர்களே?
நாங்கள் எந்த திருமாவை உண்மை என நம்புவது?
கொள்கையே உறுதியாய் நின்ற குன்றா விளக்கையா, இல்லை கொள்கையை எதிரிகள் காலடியில் ஒரு பாரளுமன்றத் தொகுதிக்காய் அடமானம் வைக்கும் இந்த திருமாவையா?
காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என்ற கொள்கை முழக்கத்தை துவக்கி வைத்த நீங்கள் இப்போது எந்த முகத்தோடு அதே காங்கிரசுடன் அணி சேர்ந்தீர்கள்.
திமுகவும் நீங்களும் ஈழப்பிரச்சினையில் ஒரே கொள்கை உள்ளதாக அறிவித்திருக்கிறீர்களே. அது எப்படி? திமுகவும், காங்கிரசும்தான் ஏற்கனவே ஒரே கொள்கை என்று அறிவித்தார்களாயிற்றே.
நீங்களும் காங்கிரசும் திமுகவும் ஒரு அணியில் வாக்கு கேட்டு எப்படி எங்களிடம் வருவிர்கள்? இதில் ராமதாசையும் வேறு அழைத்திருக்கிறீர்கள், அப்படியே அம்மையாரையும் மார்க்சியவாதிகளையும், முடியுமானால் விஐயகாந்தையும் உங்கள் அணிக்கே அழைத்துக் கொண்டு போய் விட வேண்டியது தானே. நாங்கள் ஒட்டு போட வேண்டிய தேவையே இல்லாமல் போகுமே.
மாவீரன் முத்துக்குமாருக்கும் அவன் பின்னே போன பதின்மூன்று பேருக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள்?
தன்மான சிங்கங்களெல்லாம் தேர்தல் அரசியலில் அசிங்கங்களாய் மாறிப் போனதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த சிறுத்தையும் இப்போது பூனையாய் மாறி மியாவ் என்பது எங்களையெல்லாம் அதிரவைக்கிறது.
விலை மகளிர் பலர் வேசித்தனம் செய்யலாம். ஆனால் ஒரு கண்ணகி சோரம் போவதில் எங்களுக்கெல்லாம் உடன்பாடு இல்லை.
உண்மைகளை உரத்துப்பேசிய குற்றத்திற்காக சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் போது நீங்கள் மட்டும் தேசிய நீரோட்ட சாக்கடையில் குதித்துக் களிப்பதா?
ஆறு கோடி தமிழ் இதய நாற்காலியை விட ஒரு எம்.பி நாற்காலி உங்களுக்கு அதிக அங்கீகாரம் அளித்துவிட்டதா? உங்களுக்கு அங்கீகாரம் தந்த தமிழ் மக்களை விடவா இந்த ஒரு பாராளுமன்றத் தொகுதி அதிக அங்கீகாரம் தந்துவிடப்போகிறது.
பொதுவாக சிதம்பரம் என்றாலே உடனே கூடவே நினைவுக்கு வந்து தொலைப்பது தமிழ் விரோதக் கும்பல் தான்.
புராணத்தில் பார்வதியை தோற்கடிக்க ஒரு காலைத் தூக்கி சிவன் ஆடி பெண்ணடிமைத்தனத்தை துவக்கி வைத்தது சிதம்பரத்தில்தான்.
நஞ்சைக் கக்கும் ஒரு உள்துறை அமைச்சர் சிதம்பரம் என்ற பெயருக்குச் சொந்தக்காரர்தான்.
தமிழே கூடாது என்று அடித்து விரட்டிய தீட்சிதர் கும்பலும் சிதம்பரத்தில் தான்.
இன்று ஒரு மக்களவைத் தொகுதிக்காக ஒரு இனமான தமிழன் சோரம் போனான் என்று வரலாறு எழுதப்போவதும் இந்த சிதம்பரத்தில்தான்.
ஈழத்தில் நல்ல தலைவன் கிடைத்திருக்கிறான், ஆனால் நாடு சொந்தமாயில்லை. தமிழ்நாட்டில் நாடு சொந்தமாயிருக்கிறது ஆனால் நல்ல தலைவர்கள் கிடைப்பதில்லை. அதனால்தான் இன்னும் சில அறியாக் கூட்டம் ரசினிகாந்தை கட்சி ஆரம்பிக்க சொல்லி பின்னால் அலைந்துகொண்டிருக்கிறது.
எது எப்படி ஆனாலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் திருமா.
நீங்களே தூக்கிப்பிடித்தாலும் சரி, இல்லை வேறு யாரையும் துணைக்கு அழைத்து பல்லக்கு தூக்கினாலும் சரி, இந்தத் தேர்தலில் மனிதத்தின் எதிரிகளான காங்கிரசு, பார்ப்பன கட்சிகளுக்கு கண்டிப்பாக நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை.
நீங்கள் தோற்றால் பரவாயில்லை, தமிழ் தோற்பதில் தமிழர்கள் தோற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
மீண்டும் மடலின் ஆரம்பத்தைப் பாருங்கள்.உங்களை அப்படி அழைக்கவே ஆசைப்படுகிறோம், இனிமேலும்..
எங்களைப் பொறுத்த வரையில் மாண்புமிகுவை விட மானமிகு உயர்வானது, உங்களுக்கு எப்படியோ..

http://sthalapathy.wordpress.com/2009/03/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/#கமெண்ட்ஸ்


ஹாலிவுட் திரைவிமர்சனங்கள்



Religulous (2008) [21+ Only]

டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும், இதன் பின்னூட்டங்களும் 21 வயதுக்குட்பட்டோருக்கு ஏற்புடையதாய் இல்லாமலிருக்கலாம். எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப்பதிவில் சந்திப்போம்.




எதற்காக... அல்லது எப்படி... அல்லது எப்பொழுதில் இருந்து 'சாமி' கும்பிட ஆரம்பித்தோம் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? நிச்சயமாக... எந்த கடவுளும் உங்கள் முன் வந்து என்னை வெள்ளிக்கிழமையோ ஞாயற்றுக்கிழமையோ கும்பிடு என சொன்னதில்லை. அப்படி சொல்லியிருந்தால்... அது நிச்சயம்.. ராத்திரி 'மப்பின்' மிச்சம்! பின்....? சிறுவயதிலிருந்து நம் தாத்தாவோ.. அம்மாவோ... 'கன்னத்துல போட்டுக்கோ இல்லீன்னா கண்ண குத்தும்' என்றோ... 'ஞாயத்துக்கிழமை சர்ச்சுக்கு போகலைன்னா அது மிகப்பெரிய பாவம்' என்றோ.. ஆரம்பித்து வைத்த பழக்கம்..., பச்சையாக சொன்னால்.. பயமுறுத்தல்! நாம் கொஞ்சம் கொஞ்சமாக... மூளைச்சலவை செய்யப்பட்டு, நாளாக நாளாக.... 'டைரக்டரே யோசிக்காத விசயங்களை விமர்சனத்தில் கண்டுபிடிப்பதை' போல புதிது புதிதாக... 'அறிவோமா ஆன்மீகம்' என ஆரம்பித்துவிடுகிறோம். மூளைச்சலவையை தொடங்கி வைப்பது... நம் குடும்பத்தவர் என்றால்.... அதை தொடர்பவர்கள்.... அதன் ஆணிவேர்?

நிற்க...! படம் பேசுவது... கடவுள் நம்பிக்கை பற்றியல்ல!!! ஆர்கனைஸ்ட் கம்பெனி..., ஆர்கனைஸ்ட் க்ரைம் போல... ஆனால் அவர்களை விட மட்டமான, கொடூரமான, கேவலமான ஆர்கனைஸ்ட் ரிலீஜியன் பற்றி. நம் நிஜமான கடவுள் நம்பிக்கையை... மத நம்பிக்கையாக மாற்றி..., இன்று கடவுளுக்கும்-மதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நம்மை வளர்த்துவிட்டவர்கள். நிஜ ஆணிவேர்! ரியல் பாஸ்டர்ட்ஸ்!

Fahrenheit 9/11, This Film is Not Yet Rated போல நம்மூரில் செய்ய முடியாத, ஆனால் அமெரிக்காவில் சாத்தியமாகும் இன்னொரு விசயம் 'மதத்தை' பற்றி படம் எடுப்பது. அதைவிட முக்கியம்.. அதை வெற்றிப்படமாக்குவது. பேசப்போகும் விசயம்... நிச்சயம் வெடிகுண்டுதான். பின்னூட்டத்தில் எத்தனை பேர் திட்ட ரெடி ஆகறீங்கன்னு தெரியலை. நான் ரெடியா இருந்துக்கறேன். :-))



இந்தியாவின் HBO- நிகழ்ச்சிகளை பற்றி தெரியவில்லை. ஆனால் அமெரிக்க HBO-வில் பில் மஹெர் மிகப்பிரபலம். ஸ்டேண்டப் காமெடி ஷோக்களை நடத்தியவர். இப்பொழுது உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். இந்நாட்டின் 'பேச்சுரிமை'யை முழு வீச்சில் பயன்படுத்துபவர்கள், ஸ்டேண்டப் காமெடியன்கள் மட்டுமே என்ற எண்ணம் எனக்குண்டு. பில் மஹெர் அதில் ஒன்று! (அட.. டி.ஆர் மாதிரி எல்லாம் பேசறேனே)

மஹெரின் அம்மா ஒரு யூதர், அப்பா கிறித்துவர்! பில்... நாதிக்கர்! மிகத்திறமையாக வாதிடக்கூடியவர்! 'மதத்தை' பற்றி பேச... அமெரிக்க நகரங்கள், லண்டன், வாடிகன், ஜெருசலேம், ஆம்ஸ்டர்டாம் என பல நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து, அங்கு செயல்படும் 'கடவுளின் பிரதிநிதி'களிடம் பேட்டி எடுத்து..., எதிரே உட்கார்ந்தவர்கள் தங்களின் அனைத்து துளைகளையும் 'தாழ்' போட்டுகொண்டு நிற்க வைக்கிறார்.

அமெரிக்காவில் ஒரு சிறிய சர்ச்சில் ஆரம்பிக்கும் பயணம், வாடிகனில் காவலர்களால் வெளியே துரத்தப்படுவதில் சூடுபிடிக்கிறது. அதன் பிறகு நான்-ஸ்டாப் திண்டாட்டம்தான், மதத்தை பரிந்து பேசுபவர்களுக்கு! எவ்வளவு வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான வழிபாட்டுத்தளங்கள், கடவுளை மதத்தால் வியாபாரம் செய்யும் வே.......ள், தன்னையே கடவுள் என சொல்லிக்கொள்ளும் ஒரு ஆண் விபச்சாரி, அவனையும் நம்பும் ஒரு லட்சம் மக்கள்!

பில் யாரையும் விட்டு வைக்கவில்லை. கையில் கிடைத்தவனை எல்லாம் துவைத்து தொங்க விடுகிறார். நல்லவேளை பில்.. இந்தியா வரவில்லை! வந்தால்.. எத்தனை 'சாமிங்களை' (ஆர்யா உட்பட) பேட்டியெடுக்க முடியும் என விட்டுவிட்டாரோ தெரியவில்லை! படத்தில் பேசப்படும் மூன்று மதங்கள் 'கிறித்துவம்', 'யூதம்' & 'இஸ்லாம்'. மூன்றுக்கும் உள்ள வழிதோன்றல் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

'யேசு'வின் கதையாக நாம் கூற கேட்டதற்கும், அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லப்பட்ட 'கிருஷ்ணரின்' கதைக்கும்(!) உள்ள ஒற்றுமைகள், அதற்கும் முன்பாக 1600 முன்னிருந்த 'ஹோரஸ்' என்ற எகிப்து கடவுளின் கதை (மிக அதிகமான)ஒற்றுமைகள், வாடிகனின் ஆடம்பர செல்வச்செழிப்பு என... இங்கு போட்டுத்தாக்க....,

வெள்ளி, சனியில் விரதமிருக்கும் போது, எந்த வேலையும் செய்யக்கூடாது என யூத மதம் சொல்லியிருக்க, அதை சாக்காக வைத்து, அதற்கேற்ற பொருட்களை தயாரித்து விற்கும் ஒரு வியாபாரியின் தந்திரத்தை தோலுறிக்க..., (ஐப்பன் சாமி, ஸ்பெஷல் டம்ளர், டாஸ்மாக், கோழிக்கறி, எல்லாம் ஃப்ளாஷ் அடிச்சா நான் பொறுப்பில்லீங்க)

'சல்மான் ருஷ்டி'க்கு ஒரு நியாயம்.. தனக்கொரு நியாயம் என, 'குரானை' துணைக்கு வைத்து பேசும் இன்னொருவனை பெண்டு கழட்டி..., நான் சொன்னதெல்லாம் கொஞ்சம்தான் சாமி! டாகுமெண்ட்ரிய பாருங்க! சிரிச்சி சிரிச்சி... வயறு வலிக்குது.



நிஜமாதாங்க...., டாகுமெண்ட்ரி ஃபுல்லா.. ஒரே சிரிப்புதான். Fahrenheit 9/11-ஐ விட மிக சீரியஸான தீமை..., ஒரு காமெடிப்படம் போல பில் கையாண்டுள்ளார். அதுவே.. பலம்.. அதுவே பலவீனம். Taken படத்தை விட 15 நிமிடம் அதிகம். ஆனால் அதைவிட சீக்கிரம் முடிந்தது போன்ற ஒரு ஃபீலிங்.

உண்மையை ஒப்புக்கொள்ளும் தைரியம் இருப்பவர்கள் மட்டும் பாருங்கள். 'பூனை கண்ணை மூடிகிட்ட' கதையை நம்புவர்கள்... மேல்யுள்ள எந்த குரங்கு பொம்மை உங்களோடு ஒத்துப்போகிறது என்று பார்த்துவிட்டு, இதோ... பின்னூட்டம் மாடரேட் செய்யப்படாமல் இருக்கிறது. அடிச்சி தூள் கிளப்புங்கண்ணா..!!! கெட்ட வார்த்தை மட்டும் பேசாதீங்கோ!!! :-))

என்னுடைய இந்த பதிவின் எண்ணம் எந்த மதத்தை பின்பற்றுவர்களையும் காயப்படுத்துவது அல்ல! நான் அந்தளவுக்கு பக்குவப்படாதவனும் அல்ல! (என் பர்சனல் கதை தெரிந்தவர்களுக்கு மட்டும் இது புரியும் ;-0)! மதத்தையும், அதை தவறாக போதிப்பவர்களையும் பற்றி மட்டுமே!!! அதையும் மீறி.. நண்பர்கள் யாராவது காயப்பட்டிருந்தால், மன்னிக்க வேண்டுகிறேன்!!!!

ஆனாலும் என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்குதானே...! மதம்... பிரச்சனைக்கு ஆணிவேரா... இல்லை கடவுளா? கடவுள் நிச்சயமாக இல்லை (இரண்டு அர்த்தத்திலும்)! அப்படி ஒன்று இருந்து, அதுதான் மதம் என்பது உருவாக்க காரணம் என்றால், இந்தியாவிலும், இலங்கையிலும், பாலஸ்தீனத்திலும் இன்னும் எங்கெங்கெல்லாமோ, சாமியை சாக்காக வைத்து சாகும்/சாகடிக்கப்படும் நம் சகோதர்ர்களுக்கு இந்த கடவுளும்.. அந்த மதமும்... அதை போதிப்பவர்களும்தான் காரணமென்றால்.... ஆணிவேர்.....

சாமி.... நீ எனக்கு மயிரா போச்சி போ..!
 
 
 
 
 
 
 [ இந்த மின்னஞ்சல்  www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]

 
 www.beyouths.blogspot.com
         
           Thanks!  
 
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
 
 



கதை


ஒரு பஸ் ஓட்டுநர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பேருந்தை இயக்க ஆரம்பித்தார். அவரது வழித்தடம் வழியாக பேருந்து சென்றுகொண்டிருந்தது. முதல் ஐந்து நிறுத்தங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆறாவது நிறுத்தத்தில் ஒரு பெரிய ஜாம்பவான் ஒருவன் பேருந்துக்குள்ளே நுழைந்தான். ஆரடி உயரமும் அகலமாக விரிந்த உடல்வாகையும், நீளமான கைகளையும் கொண்டவன் அவன்.

டிரைவரை எகத்தாளமாய் பார்த்து - "நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை", சொல்லிவிட்டு டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தான்.

அவனது தோற்றத்தைப் பார்த்த வண்டியின் ஓட்டுநருக்கோ இருப்புக் கொள்ளவில்லை. டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செஞ்சாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டார். எந்த வாக்குவாதத்துக்கும் அவர் தயாராக இல்லை. காரணம் - பெரியசாமியின் தோற்றம்.

அடுத்த நாளும் அதே நிகழ்ச்சி நடந்தேறியது. "குத்துச்சண்டை வீரனைப்போன்ற தோற்றம் கொண்ட பெரியசாமி வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிறகு - நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை" என்றான். டிரைவருக்கும், நடத்துநருக்கும் மனதுக்குள் பெரிய குற்ற உணர்ச்சி.

தொடர்ந்து 15 நாட்களாக இதே நிகழ்ச்சி தொடர்ந்தது.

"இந்த பெரியசாமியின் கொட்டத்தை அடக்கவேண்டும்" என இருவரும் திட்டம் போட்டனர்.

ஒட்டுநருக்கும், நடத்துநருக்கும் இரவுகளில் உறக்கமே இல்லாமல் போனது. எல்லாம் பெரியசாமியின் நினைவுதான். பெரியசாமியின் தொந்தரவில் இருந்து தப்பிப்பது பற்றியே எண்ணிக்கொண்டு தூக்கத்தைத் தொலைத்தனர்.

"தொடர்ந்து 15 நாட்களாக பணமே கொடுக்காமல் - டிக்கெட் எடுக்காமல் - நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லைனு ஒருத்தன் போக்குக்காமிச்சுக்கிட்டு இருக்கான். அவனை ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது", ஓட்டுநர்.

நடத்துநர் "அண்ணே! ஒரு ஐடியா. நாம ரெண்டு பேரும் ஜிம்முக்குப் போகி உடம்பத் தேத்தி, கராத்தே, ஜுடோ இதெல்லாம் கத்துக்குட்டு அவனைவிட பெரிய வீரர்களா ஆகிடுவோம். அப்புறம் அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம்" எனக் கூறினார்.

வெயில்காலம் முடிவடைவதற்குள் அவர்கள் இருவரும் சிறப்பு அனுமதி பெற்று ஜிம், கராத்தே, ஜுடோ எனப் பல பயிற்சிகளையும் பெற்று உடலைத் தேற்றி ஆஜானுபாகுவாக ஆயினர்.

அவர்களுக்குள் மகிழ்ச்சி கரை புரண்டது. "நாளைக்கு திங்கள் கிழமை. பெரியசாமியை உண்டு இல்லைன்னு ஆக்கிருவோம்" - முன் கூட்டியே திட்டமிட்டனர்.

திங்கள் அன்று வழக்கம் போல குத்துச்சண்டை வீரன் பெரியசாமி வந்தான். பேருந்தில் ஏறினான். வழமை போல குரல் கொடுத்தான் - "நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லை".

ஓட்டுநரும், நடத்துனரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுந்து வந்து பெரியசாமிக்கு எதிராகப் பயங்கரப் பார்வையுடன் "ஏன்? ஏன் பணம் கொடுக்க மாட்டாய்? என்ன தைரியம்" என முதல் முறையாக எதிர்த்துக் கேட்டனர்.

ஒரு ஆச்சரியமான முகபாவத்துடன் "எங்கிட்டே பஸ் பாஸ் இருக்கு. அதனால நான் பணம் தரத் தேவையில்லை" எனக் கூறி பஸ் பாஸை இருவரின் முன்னால் நீட்டினான்.

நீதி : பிரச்சினையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிறகுதான் தீர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் கற்பனை செய்யக் கூடாது
[ இந்த மின்னஞ்சல் www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]


Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...

புதுக்கவிதை


http://www.wtrfm.com/sub5.php?id=7213

வசன கவிதை,புதுக்கவிதை ஹைக்கூ கவிதைகவிஞர் இரா.ரவி


உலகத்தரம் வாய்ந்த என்ற விளம்பரங்களில் பல பொருட்களுக்கு போடுவார்கள். ஆனால் உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்த ஒரு பொருள் உண்டு என்றால் அது tnpl காகிதம் தான். "காகிதபுரம் வழங்கும் காகிதத்திற்கு இணையான ஒரு காகிதம், உலகில் நாம் எங்கும் கண்டதில்லை" என்று அறுதிட்டுக் கூறலாம். தரம் என்பது நிரந்தரம். பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல் வடிவம் தந்தவர்கள் காகிதபுரம் தொழிலாளர்கள். இங்கே காகிதம் மட்டும் உற்பத்தி செய்யவில்லை. மின்சாரமும் உற்பத்தி செய்கிறார்கள். உழைப்பின் மேன்மையை இங்கே தான் உணர முடியும். மனித ஆற்றலின் மகத்துவத்தையும் இயந்திரங்களின் விந்தையையும் உணர்த்தும் இடம் இந்த காகிதபுரம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது நமது தமிழ்மொழி. தமிழ்த்தாய்க்கு மகுடம் சூட்டும் விதமாக பயனுள்ள, காலத்திற்கேற்ப ஒரு மாபெரும் கருத்தரங்கை ஏற்பாடு செய்து, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து, நடமாடும் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர். இரா.மோகன் தலைமையில் எங்களை அழைத்தமைக்கு முதற்க்கண் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.

இலக்கியம் என்பது கவிதை : கவிதை என்பது இலக்கியம். கதை,கட்டுரை இவை எல்லாம் இலக்கியமன்று. துணை இலக்கியம்.இதை நான் சொல்லவில்லை. போராசிரியர் மறைமலை இலக்குவனார் சொன்னது. தமிழர்களின் வாழ்வில் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டு. தமிழர்களின் ஒழுக்கமான ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த வாழ்வியல் நெறியை பயிற்றுவித்தது இலக்கியம். உலக மனிதர்கள் யாவரும் ஓரினம் என "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என அய்நா மன்றம் வரை பதிவு செய்யப்பட்டது தமிழர் இலக்கியம். "கற்றது கைமண் அளவு கற்க வேண்டியது கடலளவு" என்ற அவ்வையின் கூற்று கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் இடம் பெற்றது. இப்படி தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழந்த கவிதை பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம்.

இது கணினி யுகம். இருபத்திஒறாம் நூற்றாண்டு இன்றைக்கும் மரபுக்கவிதைகள் மிகத்தரமாக கவிஞர்கள் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மரபுக் கவிதைக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.ஆனால் புதுக்கவிதை என்பது கற்காத பாமரர்களையும் சென்றடையும் விதமாக மிகச்சிறப்பாக வந்து கொண்டு இருக்கின்றது. புதுக்கவிதையுகம் என்றே சொல்லலாம். மகாகவி பாரதியார் கூட மரபுக்கவிதையும் எழுதி உள்ளார். புதுக்கவிதையும் எழுதி உள்ளார். வசன கவிதையும் எழுதி உள்ளார். கொக்கூ கவிதைகள் என ஐப்பானிய ஹைக்கூ கவிதை வகையினை அன்றே பாரதி அறிமுகம் செய்து வைத்தார்.

கவிக்கோ, அப்துல் ரகுமான்,புதுக்கவிதைத் தாத்தா மேத்தா, காலத்தால் அழியாத மகாகவி மீரா இப்படி தொடங்கிய புதுக்கவிதை பயணத்தில் இன்று எண்ணிலடங்கா புதுக்கவிஞர்கள் தோன்றி வருகிறார்கள். புதுக்கவிதையின் மீது பொறாமை கொண்டவர்கள் அல்லது புதுக்கவிதை எழுதத் தெரியாதவர்கள் சிலர் கேலி பேசுகிறார்கள். "மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட புதுக்கவிஞர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது" என்று. பதுக்கவிஞர்கள் பெருகுவதில் அப்படி என்ன? வருத்தம் என்பது புரியவில்லை. ஐப்பானில் ஹைக்கூ எழுதத் தெரியாதவர்களை மட்டமாக நினைப்பார்களாம். எனவே அங்கே ஒவ்வொரு மனிதனும் படைப்பாளியாக உருவெடுக்கின்றான். ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டால் தரை மட்டமான ஐப்பான் இன்று உலக அரங்கில் கொடி கட்டி பறக்குது என்றால் அதற்குக் காரணம் ஒப்பற்ற உழைப்பு அந்த உழைப்பை உணர்த்தியது ஹைக்கூ கவிதைகள், அவ்வளவு வலிiமை வாய்ந்த ஆயுதம் ஹைக்கூ.

கவியரசு கண்ணதாசன் வசன கவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை அனைத்தும் எழுதி இருக்கிறார்.

"போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்" இந்த வரிகளை உச்சரிக்காத மேடைப் பேச்சாளர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒரு காலத்திற்கு அனைத்து மேடைகளிலும் ஒலித்த வசன கவிதை இது.

கவியரசு கண்ணதாசனின் வசன கவிதைகள் இதோ.

காலக் கணிதம்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்
இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்
இவை தவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தலை அறிக
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்
பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சாட்டம்

இப்படி முடிக்கிறார்
கவியரசு கண்ணதாசனின் மற்றொரு வசன கவிதை
அழுவதில் சுகம்

தொழுவது சுகமா? வண்ணத்
தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா? உண்ணும்
விருந்துதான் சுகமா? இல்லை
பழகிய காதலை எண்ணிப்
பள்ளியில் தனியே சாய்ந்து
அழுவதே சுகமென் பேன்யான்
அறிந்தவர் அறிவாராக

இது ஒரு உணர்வுக் கவிதை, உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் விளங்கும் அற்புதக் கவிதை, உணர்ச்சிக் கவிதை உண்மைக் கவிதை,புதுக்கவிதைத் தாத்தா, சாகித்ய அகதெமி விருதினை பெற்ற கவிஞர் மேத்தா புதுக்கவிதை உலகிற்கு புதுப்பாதை வகுத்தவர். சமூகப் புரட்சிக்கான ஒரு ஆயுதம் புதுக்கவிதை என்பதை உணர்த்தியவர். " என்னுடைய போதி மரங்கள்" என்ற நூலில் அவரது புதுக்கவிதை.

கணக்கு

எத்தனை தடவை
கொள்ளையடிப்பது
ஒரே வீட்டில்
உன் கண்கள்

கவிவேந்தர் மேத்தாவின் வைர வரிகளில் இன்றைய வன்முறை கலாச்சாரத்தை ஆயுதக் கலாச்சாரத்தை விளக்கும் அழகிய புதுக்கவிதை

நாளை

உலக வீதிகளில்
ஊர்வலம் போகும்
ஆயுதங்கள்
வீடுகளுக்குள் ஒளிந்தபடி
எட்டிப் பார்க்கும்
மனிதன்
இதில் நாளை என்ற கவிதையின் தலைப்பை இன்று என்றும் மாற்றிக் கொள்ளலாம். பொருத்தமாக இருக்கும் சிலர் சமாதானம் என்ற பெயரில் பேச்சுவார்த்தை பலசுற்று நடக்கும் ஆனால் பிரச்சனை தீராது இதனைக் காட்டும் மேத்தாவின் புதுக்கவிதை.

சமாதானம்

வெள்ளைக்குடையை
விரித்து வைத்து
உள்ளே பார்த்தால்
ஆயிரம் ஒட்டைகள்

சாட்சி

எட்டிப்பாருங்கள் இதயத்தில் இருக்கிற காயங்களை உங்கள் முகம் கூட உள்ளே தெரியலாம்.

ஹைக்கூ

பழமொழிகளை ஒட்டியும் வெட்டியும் ஹைக்கூ எழுதலாம். அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையுமா? கேள்விப்பட்ட பழமொழி. அதை வெட்டி ஒரு ஹைக்கூ என்னுடையது

அய்ந்தில் வளையாதது
அம்பதில் வளைந்தது
முதியோர் கல்வி

அறுக்கமாட்டாதவன் இடுப்பில் அம்பத்தெட்டு அரிவாள். கிராமங்களில் கேள்விப்பட்ட புகழ்பெற்ற பழமொழி இதனை ஒட்டி நான் எழுதிய ஹைக்கூ

அறுக்கமாட்டதவன் இடுப்பில்
அய்ம்பத்தெட்டு அரிவாள்
அதிகபட்ச மந்திரிகள்

ஹைக்கூ கவிதைகளில் எதையும் உணர்த்தலாம், காதலையும் பாடலாம்

அமாவாசையன்று
நிலவு
எதிர்வீட்டு சன்னலில்

இன்று அரசியல்வாதிகளின் நிலையைப் பார்க்கும்போது மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பு வருகின்றது. அதனையும் உணர்த்தமுடியும் ஹைக்கூ கவிதைகளில்.

வண்ணம் மாறுவதில்
பச்சோந்தியை வென்றார்கள்
அரசியல்வாதிகள்

இப்படி உள்ளத்து உணர்வுகளை ஹைக்கூவாக வடித்து படிக்கும் வாசர்களின் உள்ளத்திலும் அதிர்வுகளை நிகழ்ந்திடும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு. வாசகர்களையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு மட்டுமே உண்டு. பெண்மைக்காக குரல் கொடுக்கும் ஹைக்கூ.

ஆண் நெடில் தொடக்கம்
பெண் குறில் தொடக்கம்
எழுத்திலும் அநீதி

ஆட்டிற்குப் பெண் மகிழ்ச்சி
மாட்டிற்குப் பெண் மகிழ்ச்சி
பெண்ணிற்குப் பெண் ஏன்? இகழ்ச்சி

இன்று மதங்களின் பெயரால் நடக்கும் வன்முறைகள் சொல்லில் அடங்காது. என்; தாய் சிறந்தவள் என்றால் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் என் தாய் உன் தாயை விட சிறந்தவள் என்றால் சினம் கொள்வார்கள். அது போல என் மதம் சிறந்த மதம் என்று சொல்வதை விட்டுவிட்டு உன் மதத்தை விட என் மதம் சிறந்தது எனும் போது தான் பிரச்சனைகள் வருகின்றது. எல்லா மதமும் அன்பைத் தான் போதிக்கின்றன. ஆனால் மத வெறியர்கள் தான் வம்பைப் போதிக்கின்றனர்.இதனையும் வலியுறுத்தும் ஹைக்கூ

அன்று நெறி
இன்று வெறி
மதங்கள்
வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றி 10 பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய செய்திகளை ஹைக்கூவில் 3 வரிகள் மட்டுமல்ல 3 சொற்களில் விளக்கும் என் ஹைக்கூ

அட்சயப்பாத்திரம்
திருவோடானது
பட்டச் சான்றிதழ்
வளரும் இன்றைய புதுக்கவிஞர்களின் புதுக்விதை

அம்மா சொன்னவள்

வெயிலில்
விளையாடிக்கொண்டிருக்கிறாயா?
வெகுளித்தனமாகச்
சிரித்துக்கொண்டிருக்கிறாயா?
இளையராஜாவின்
இசையில் இணைந்திருக்கிறாயா?
இளந்தூறல்
மழையின் நனைகின்றாயா?
களையெடுக்க
களத்துமேட்டுக்குச் செல்கின்றாயா?
மேற்படிப்புக்காக
மெட்ராசுக்குச் செல்கிறாயா?
பதினாறு புள்ளிக் கோலத்தை
வரைந்து பார்த்துக் கொண்டிருக்கிறாயா?
பக்கத்துவீட்டு அக்காவிடம்
கதைபேசிக் கொண்டிருக்கிறாயா?
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
உனக்காக ஒருத்தி பிறந்திருப்பாளென்று
சொன்னாள் அம்மா
என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்
நீ………..

துளிர்
ஆரப்பாளையம், மதுரை
அன்பே என் அன்பே…………

கால்விரல்களின் நகத்தை வெட்ட
காலை மடக்கி மாதம் தொட,
ஷாக்ஸ_ம், ஷ_ லேஸ{ம் கட்ட
கஐகர்ணம் போட வைக்கிறாயே!

ரேஷன் கடை க்யூவானாலும்

சினிமா டிக்கெட் எடுக்கும்
வரிசையிலும்
பேருந்து ஸ்டான்டிங்கில்
பயணிக்கும் போதும்
யோவ்! உனக்கு முன்னால
எவ்….. வளவு கேப் என பிறர்
முறைக்கப் காரணம் நீ தானே!

மல்லாந்து படுத்தால் மலை மாதிரியும்
பக்கவாட்டில் படுத்தால் அருகில்
பாப்பாவாகி
குப்புறப்படுக்க விடாமல்
கொடுமை செய்து
குலுங்கிச் சிரித்தால் பிறரையும்
குலுங்க வைக்கிறாயே!
இருப்பினும் உன்னால்
எனக்கு உதவிதான்,
இருக்கும் இடத்தில் உன்னை
டேபிளாகவும்,
இரு கைகளுக்கு ரெஸ்ட் ஸ்டாண்ட்
ஆகவும்,
ஹெல்மெட்டுக்கு நல்ல
ஷெல்பாகவும்….
ஐ லௌவ் யூ ஸோ மச் தொப்பை!

ஜேகா
இன்றைய புதுக்கவிதையில் ஆங்கிலச்சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும்
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!