Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, June 21, 2009

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 21 -"தினமணி" தொடர் ♥





"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 21: சட்ட வடிவிலான அடக்குமுறைகள்




புதிய அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் (1961)




சிங்களப் பேரினவாத மனப்பான்மையுடைய சிங்களவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் தங்கள் நலன்களுக்குப் பாதகமான சட்ட முன்வடிவங்களை ஆங்கிலேயர் வைக்கயில் அவை தமிழர்க்கு ஒரு சில சலுகைகளையே அளித்த போதிலும், அவற்றுக்கு முட்டுக்கட்டையிட்டு, தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் அவற்றுக்கு எதிராகத் தங்கள் மக்களின் எதிர்ப்புக் குரல்களை ஒன்றிணைக்க முயற்சித்தனர்.

தாங்கள் ஆட்சிக்கு வந்த பின் புதிய வடிவில் வேறு பல சட்டங்களைக் கொண்டு வந்து, பழைய சட்டங்களைத் தூக்கியெறிந்து தமிழர்களை ஒடுக்க நினைத்தனர்.

ஆரம்ப காலச் சிங்கள இனவாதம், சட்ட வடிவங்களை முன்வைத்தே தமிழர்களை ஒடுக்கியது.

1920-சட்ட நிரூபண சபைக்கான திருத்தம்:

மலையக மக்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு, டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசை அரசு அமலாக்க நினைக்கிறது. ஆனால் மலையக மக்களின், குறிப்பாக தமிழர்களின் வாக்குரிமையால் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்றும், அம்மக்களின் ஆதரவால் இடதுசாரிகளின் கை, பாராளுமன்றத்தில் ஓங்கும் என்பதால் சிங்களவர்கள் இதை அமலாக்குவதை எதிர்த்தனர்.

1931-"டொனமூர் சிபாரிசு' சில திருத்தங்களுடன் அமலாதல்:

அத்திருத்தங்களினால் யாழ் சிறுபான்மையினர் பாதிப்படைகின்றனர். யாழ் பகுதி மக்கள் கடுமையாக இதை எதிர்க்கின்றனர்.

1937-"உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமைச் சட்டம்':

இச்சட்டத்தால் உள்ளாட்சித் தேர்தலில் தோட்டத் தொழிலாளர் பங்கேற்காத வகையில், அவர்களின் நலன்களை அமலாக்காதபடிக்கு, அவர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் வந்தது. இதன் மூலம் பழைய ராணுவ முகாம் பாணியில் காலனிகளில் தமிழர்கள் பிற சமூக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

1940-"வாழ்விடத் தெரிவு பிரஜைகளை பதிவு செய்தல்' சட்டம்:

இச்சட்டத்தின் மூலம் தமிழர்கள் தாங்கள் எந்தப் பகுதி மற்றும் குடியிருப்புகளில் தங்கி வாழ்கின்றனர் என்பதைப் பதிவு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் நடமாட்ட விஸ்தரிப்பையும் இதன் மூலம் கட்டுப்படுத்துகிறது. இச்சட்டத்தில் சில விதிகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

1939-இல் இருந்ததை விட 57,000 பேர் தமிழர்களின் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டனர். மேலும் இச் சட்டத்தின் மூலம் 1943-இல் பெருமளவுக்கு வாக்காளர்கள் குறைக்கப்பட்டனர்.

1948-49 "குடியுரிமைச் சட்டம்':

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமான 15 லட்சம் மக்கள் தொகையுள்ள மலையகத் தமிழர்களுக்கு விழுந்த முதல் அடி இதுவாகும். தமிழருக்கான குடியுரிமை மறுக்கப்பட்டது. உலகில் எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு குடியுரிமைச் சட்டம் இது.

சில நாடுகளில் அம்மண்ணிலேயே பிறந்தவர்களுக்குக் குடியுரிமை உண்டு. வேறு சில நாடுகளில் சில காலம் வாழ்ந்தாலே குடியுரிமை பெறும் தகுதி கிடைத்து விடுகிறது. இன்னும் சில நாடுகளில் குடியேறியவர்கள் அங்குள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்து ஏற்றுக்கொண்டாலே போதுமானது.

ஆனால் தலைமுறை தலைமுறையாக இலங்கையிலேயே வாழ்ந்து, இந்தியாவுடன் தொடர்பினை இழந்த மக்களுக்கு; அதே நாட்டில் ஏற்கெனவே குடியுரிமை பெற்றிருந்தவர்களுக்கு, இச் சட்டத்தின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டது.

இது ஒரு விநோதமான சட்டமாகும். சிங்களப் பெயர் அமைந்திருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை உண்டு. குழந்தைகளுக்கோ உறவினருக்கோ தமிழ்ப் பெயர் இருக்குமானால் அவர்களுக்கு பிரஜா உரிமை இல்லை. இச்சட்டம் குடும்பங்களையே பிளவுபடுத்தியது. மேலும் இஸ்லாமியப் பெயர் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை இல்லை.

இதில் விசித்திரம் என்னவென்றால், "குடியேறியவர் லைசென்சு கொள்கை சட்டத்தின்' கீழ் ஏற்கெனவே சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள், இச்சட்டத்தின் மூலம் சட்ட விரோதமாகக் குடியேற்றியவர்களாகக் கருதப்பட்டனர்.

1949- "இந்திய பாகிஸ்தான் குடியிருப்பு சட்டம்':

இச்சட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள், பத்தாண்டுக்கு முன்பிலிருந்து தொடர்ச்சியாக அந்நாட்டிலேயே இருந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இது மேலோட்டமாகச் சாதாரண ஒரு நிகழ்ச்சியாகத் தெரியும்.

ஆனால் பத்தாண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருந்திருப்பதை நிரூபிப்பதில் கண்டிப்பான வழிமுறைகளும் சிக்கலான நடைமுறையும் பல அதிகார விதிகளும் உருவாக்கப்பட்டுக் குடியுரிமை பெறுவதை மேலும் சிக்கலாக்கின.

1948-49 "தேர்தல் திருத்தச் சட்டம்': (Elecltion Amendment Act:)

தமிழர்களுக்கு வாக்குரிமைப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது இச்சட்டத்தின் மூலம்தான். தொகுதிகளின் எண்ணிக்கையில் அதிகமான அளவிற்கு சிங்களவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

1. தோட்ட நிர்வாகிகள் உரிமையாளர்களின் நலன்கள் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டது. தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல; 1931-இல் அளிக்கப்பட்ட வாக்குரிமை பறிக்கப்படுகிறது. 1949-இல் உருவான குடியேற்ற மசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இறுதி வடிவம் பெறுதலும் இச்சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள். இச்சட்டப்படி 1951 ஆகஸ்டு 5 வரை பிரஜா உரிமைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

2,37,034 விண்ணப்பங்களில் குடும்பத்தவர் உள்ளிட்ட 8,25,000 பேருக்கு தமிழ் பிரஜா உரிமை கோரப்பட்டது. ஆனால் 1951-இல் இருந்து 1962 வரை 11 ஆண்டுகள் விண்ணப்பங்களை அரசு பரிசீலனை செய்வதிலேயே கழித்தது. 1962-இல் ஒரு லட்சத்து முப்பத்து நாலாயிரத்து நூற்று எண்பத்தெட்டு பேர் விண்ணப்பித்ததில் 16.2 சதவிகிதம் பேரே பிரஜா உரிமை பெற்றனர்.

1956-"ஆட்சி மொழிச் சட்டம், தனிச் சிங்கள மொழிச் சட்டம்':

இலங்கை முழுவதும் சிங்கள மொழி ஒரே ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் அரசாங்க நிறுவனங்கள், கல்வி, நீதிமன்றம் போன்ற துறைகளில் இதனை அமல்படுத்திய விதம், தமிழர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெரும் தொல்லைகளை அளிப்பதாக இருந்தது.

1957, 1965 ஒப்பந்தங்கள் ரத்து:

தமிழ் தலைவர்களுடன் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயகா 1956-லும், டட்லி சேனநாயகா 1965-ஆம் ஆண்டிலும் ஆட்சி மொழிச் சட்டம் மற்றும் பிற பாகுபாடுகளினால் ஏற்படும் விளைவுகளை ஒட்டி, தமிழர்களுக்கு ஏற்பட்ட குறைகளை நீக்கிட ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஆனால் இந்த இரண்டு ஒப்பந்தங்களுக்கு எதிராகச் சிங்களவரிடையே செல்வாக்கு மிக்க புத்த பிட்சுக்கள் மற்றும் தலைவர்களின் தலையீடு காரணமாக இவை ரத்து செய்யப்பட்டன. அவ்வப்போது தமிழர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் அறிவிப்புச் செய்து கொண்டே வந்தனர்.

அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அறிவிப்புகளை அளிப்பதும் சில அரசியல் பதவிகளை அளித்து அரசியல் லாபத்திற்காகச் சிறுபான்மையினரைப் பயன்படுத்திக் கொண்டும் வந்தனர். அது மட்டுமல்லாது தமிழை ஒரு மாநில மொழியாகவும் ஆக்கியது உள்பட, சிறப்பு வசதிகள் தமிழர்களுக்குச் செய்யப்பட்டன. ஆனால் சில நேரங்களில் சிங்கள இனவாதக் கொள்கை கொண்டவர்களால் இவை எதிர்க்கப்பட்டன.

சில நேரங்களில் அவர்களே பெரும் விளம்பரங்களை இச்செயல்களுக்குத் தந்தனர். ஆனால் இச்சட்டங்களை உண்மையிலேயே அமல்படுத்தியது மிகமிகக் குறைவே ஆகும்.

1960-61 "கல்வித் துறை தேசியமயம்':

பள்ளிகளை தேசியமயமாக்கியது, 2 ரோமன் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பிரிவினரை மிகவும் பாதித்தது. தனியார் பாடசாலைகள் பல தேசிய மயமாக்கப்பட்டன. வெளித் தோற்றத்தில் ஒரு முற்போக்கான அம்சமாக இது தென்படும். ஆனால், இதை அமலாக்கும்போது மதச்சிறுபான்மையினருடைய நிறுவனங்கள் அனைத்தும் அரசு மயமாக்கிச் சிங்களவருடைய நிர்வாகத்தின் கீழ் நிலைநிறுத்தப்பட்டது.

இதன் மூலம் மலையகத்தில் இருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் அனைத்தும் சிங்களப் பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டன. அங்கு சிங்கள மொழி முதன்மை பெற்றுக் குழந்தைகளின் தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் மலையக மக்கள் பெருமளவிற்குப் பாதிப்பு அடைந்தனர். மதச் சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்டது.

அதே நேரத்தில் 1964-இல் அக்டோபர் 30-ஆம் தேதி ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி சுமார் 6 லட்சம் பேர் குடியுரிமை இழந்து விடுகின்றனர்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=76852&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 20 -"தினமணி" தொடர் ♥







"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 20: திட்டமிட்ட புறக்கணிப்பு!



தேயிலைத் தோட்ட தமிழ்ப்பெண் தொழிலாளிகள்.



ஆங்கிலேயர்கள் 1948 பிப்ரவரி 4-இல் இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்தனர். அதன்பின் இலங்கை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த கொள்கைகளால் மிகவும் பாதிப்புக்குள்ளான சமூகம், தமிழ்ச் சமூகமே. இவர்களைப் பொருளாதார அடிப்படையில் பிரித்துப் பார்க்கையில்:-

1. இந்தியாவில் சொத்தும் இலங்கையில் தொழிலும் கொண்ட தமிழர்கள்.

2. நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் சொத்தும் தொழிலும் கொண்ட தமிழர்கள்.

3. நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் வளர்ந்து வந்த தொழில் நிறுவனத்தினைக் கொண்ட தமிழர்கள்.

4. வர்த்தக நிதி நிறுவனங்களில் பங்காற்றிய தமிழர்கள்.

5. மலையகத் தோட்ட உரிமையாளர் மற்றும் அவர்களோடு நெருக்கமாக உறவுகொண்ட தமிழர்கள்.

6. சிறு வியாபார நிறுவனங்களில் பங்காற்றிய தமிழர்கள்.

7. விவசாயத்தைத் தொழிலாகக்கொண்ட தமிழர்கள்.

8. மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட தமிழர்கள்.

இந்த எட்டு வகைத் தமிழர்களும் பொருளாதார நிலையில் மிகவும் மேலான வசதி கொண்டவர்களே. ஆனால் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய தமிழர்களை வரிசைப்படுத்தினால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் (குடியுரிமையற்றவர்கள்), விவசாயக் கூலித் தமிழர்கள், அரசு மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், நகர்ப்புறங்களில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் எனப் பிரிக்க முடியும்.

பிற இனங்களின் மீது சிங்களவர் எதிர்ப்பு கொள்ளும் நிலை 1930-இல் தீவிரமடைந்த காலத்தில் வர்த்தகத் துறையின் மீது அவர்கள் கவனம் திரும்பியது. வெள்ளையர் ஆட்சியில் சிங்களவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இதில் நிறைவு பெற முடிந்தது. இலங்கை சுதந்திரம் பெற்ற உடனே பல பொருளாதாரத் திட்டங்கள் உருவாயின. இதன் மூலம் கல்வி மற்றும் நிர்வாக அமைப்புகளில் பணியாற்றும் நடுத்தரத் தமிழ் வர்க்கம் பாதிப்புக்குள்ளானது.

அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் கட்டுமானத் தொழிற்சாலைகள் யாவும் சிங்களவர் பகுதிக்கே சென்றன. உதாரணமாக, குருவில்லாவில் நிறுவப்பட்ட இரும்புத் தொழிற்சாலை; களனியில் உள்ள டயர்த் தொழிற்சாலை; கல்ஓயாவில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலை; நாத்தாண்டியாவில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலை; எம்பிலிபிட்டியாவில் உள்ள காகிதத் தொழிற்சாலை; கண்டி, வியாங்கொடை, துல்கிரியா ஆகிய இடங்களில் அமைந்த பெரிய பஞ்சாலைகள்; சப்புகஸ்கந்தையில் உள்ள உரத் தொழிற்சாலைகள்; நித்தமடிவை, பிரியந்தலையில் உள்ள பீங்கான் தொழிற்சாலை; களனியில் உள்ள தொழில்பேட்டை; அனுப்பிட்டியாவில் உள்ள உரத்தொழிற்சாலை; புத்தளம், காலியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை ஆகிய அனைத்துத் தொழிற்சாலைகளும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியிலேயே உள்ளன.

பண்டாரநாயக்காவின் ஆட்சியில் இந்திய நிர்வாகிகளின் ஆதிக்கம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. 1977-லிருந்து 82 வரை 50 மில்லியன் டாலர் நிதி உதவிகள் அந்நிய நாட்டிலிருந்து பெறப்பட்டபோதிலும், தமிழர் வாழ் மாவட்டங்களுக்கு எந்தப் புதிய தொழிற்சாலையும் கிடைக்கவில்லை. கடந்த அறுபதாண்டு காலமாக இந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன.

குறிப்பாக யாழ் மாவட்டத்தின் தனி நபர் மூலதனச் செலவீடு ரூ.313. அதே நேரத்தில் தேசிய அளவிலான மூலதனச் செலவீடு 656 ரூபாயாகும்.

யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதும், அவ்விடங்களில் குறிப்பாக மன்னாரில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனம் உருவாக்கவும், மேலும் பல எண்ணெய்க் கண்டுபிடிப்புகளை நடத்துவதற்காகவும் ரஷியக்குழு சிபாரிசு செய்திருந்தபோதிலும் அவை கிடப்பில் போடப்பட்டன.

அதேபோன்று 1960-இல் உலக வங்கி, தீவு முழுவதும் ஆய்வு செய்து துணுக்காய் பூநகரிப் பகுதிகளில் மிகப் பெரிய சர்க்கரை ஆலையை நிறுவச் சிபாரிசு செய்ததோடு அதற்கு நிதி உதவி செய்யத் தயாராக இருந்ததாகக் கூறிய போதிலும் இன்னும் அவை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

காங்கேயன்துறை போன்ற இடங்களின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும் அதைப் பரிசீலிக்கக் கூட இலங்கை அரசு தயாராக இல்லை. அதே போன்று கிழக்குக் கடற்கரைத் திட்டங்களும் நிறுவப்படவில்லை. காரணம், இதுவும் தமிழர் வாழும் பகுதியில் இருப்பதே.

இதுபோன்ற புறக்கணிப்புக்கு என்ன காரணம்? இவை யாவும் தமிழர் பகுதியில் அமையப்போகும் திட்டங்கள். இவை நிறைவேற்றப்பட்டால் தமிழர் பகுதியிலுள்ளோர் வேலை வாய்ப்பினை அதிகம் பெறுவர். ஒரு தொழிலை அடுத்து அதன் உபதொழில்கள் பல தோன்றும். இதனால் தமிழரின் வாழ்க்கை வளம் பெறும். அதனாலேயே திட்டங்கள் யாவும் கிடப்பில் போடப்பட்டன. இதனால் தமிழர் பகுதியில் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்தது.

அடுத்ததாக, தேசிய மயமாக்குதல் கொள்கை உருவாக்கப்பட்டது. அதற்கான சட்டவரைவும் எழுதப்பட்டுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இது சர்வதேச நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் தமிழர் நிறுவனங்களுக்குப் பாதகமாகவும் அமைந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்திய மூலதனத்திற்கு எதிராக உருவான ஒரு தாக்குதலே இது. இதனால் இந்தியாவில் சொத்தும் இலங்கையில் தொழிலும் கொண்ட தமிழர்கள் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

தேசிய மயமாக்குதல் திட்டத்தினால் மலையகத் தமிழர்களும் பெருத்த பாதிப்புக்குள்ளாயினர். எப்படியெனில், மலையகத் தமிழரின் நகரப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடிபுகச் செய்தனர். நகர விரிவாக்கம் என்பதே திட்டமிட்டுச் செய்த சதி என்றுதான் சொல்ல வேண்டும்.

80,000 ஏக்கர் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பயந்து நடுங்கினார்கள். இருப்பினும் இவர்களுக்கெனச் சில சலுகைகள் கிடைத்தன. ஏற்கெனவே தோட்டத்துறையில் இருந்த அத்துமீறல் சட்டம் நீக்கப்பட்டது. சேமலாப வைப்புத் திட்டம் (உ.ட.ட.) உருவாக்கப்படுதலும் நடைபெற்றன. (இவை நடைமுறைக்கு வந்ததற்கான சான்று எதுவும் இதுவரை தெரியவில்லை).

இந்தத் தேசியமயமாக்கும் திட்டத்தால் மலையகத்தில் இருந்த இந்திய வம்சாவளி வர்த்தகர்கள் மலையகத்தை விட்டு வெளியேறினர். தோட்ட நகர்ப்புற பகுதி வர்த்தகர்கள் வட பிராந்தியப் (யாழ்) பகுதியிலிருந்து வந்தவர்கள். மலையகத்தில் வாழும் பிரஜா உரிமை பெற்ற ஒரு சில வர்த்தகர்கள் புதிய வர்த்தகக் குழாமில் சேர்ந்து கொண்டனர்.

இந்த வர்த்தகக் குழாம் சிங்களக் கூலிகளை மலையகத் தோட்டங்களில் ஈடுபடுத்தியது. இதனால் குடியுரிமையற்ற தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். அதனால் அவர்கள் அடைந்த இன்னல்கள் கணக்கிடலங்காது.

புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால் ரப்பர், தேயிலை ஏற்றுமதி 1968-இல் 1976 மில்லியன் ரூபாய் என்று இருந்த நிலைமை மாறி, 1978-இல் 13,176 மில்லியன் ரூபாயுமாக வருவாய் உயர்ந்துள்ளது. இப்படிப் பத்து மடங்கு வருவாய் உயரக் காரணமான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையோ நிச்சயமற்ற தன்மையாய் மாறியது.





நீர்ப்பாசன விவசாயத்துக்கும் எந்தத் திட்டமும் தமிழர் பகுதியில் நிறைவேற்றப்படவில்லை. 1977-இல் இருந்து அந்நிய நாடுகளின் உதவியோடு அணை கட்டவும், விவசாய நில வளர்ச்சித் துறைக்கும், விவசாயிகளின் மறுவாழ்வுக்கெனவும் பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.

இத்தொகையில் 0.001 சதவிகிதம் கூடத் தமிழ் பேசும் பகுதிகளுக்காகச் செலவழிக்கப்படவில்லை (கமிட்டி ஆஃப் நேஷனல் டெவலப்மெண்ட்-லங்கா கார்டியன் கொழும்பு - 1 நவம்பர் 1983-இல் வெளியிட்ட அறிக்கை).

சிங்கள வணிக வியாபாரத் தொழில் நிறுவனக் குழுக்கள் தங்களுக்குச் சாதகமாக இதை மாற்றி அமைத்துக்கொண்டு தமிழர்களையும் மற்றும் மதச் சிறுபான்மையினரையும் பொருளாதார ரீதியாக ஒடுக்க முற்பட்டன.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=76312&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ இலங்கை அகதி முகாமில் 12 ஆயிரம் தமிழர்களுக்கு சின்னம்மை நோய் ♥

இலங்கை அகதி முகாமில் 12 ஆயிரம் தமிழர்களுக்கு சின்னம்மை நோய்



கொழும்பு, ஜூன். 21-
 
இலங்கையில் வன்னி பகுதியில் நடந்த போரின் போது வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
 
அங்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. இதனால் அவர்களை பல்வேறு நோய்கள் தாக்குகிறது. தினமும் வயதானவர்களில் 30 பேரில் இருந்து 40 பேர் வரை உயிர் இழக்கிறார்கள்.
 
இந்த நிலையில் முகாம்களில் இருப்பவர்களை சின்னம்மை நோய் தாக்கி வருகிறது. இதுவரை 12 ஆயிரம் பேரை நோய் தொற்றியுள்ளது. தினமும் 40-ல் இருந்து 50 பேர் வரை புதிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.
 
சின்னம்மை நோய் வேகமாக தொற்றும் தன்மை கொண்டது என்பதால் இன்னும் ஏராளமானோருக்கு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே முகாம்களில் உள்ளவர்கள் 48 ஆயிரம் பேர் பல்வேறு நோய்களுக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

http://www.maalaimalar.com/2009/06/21104947/CNI0110210609.html

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 19 -"தினமணி" தொடர் ♥





"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 19: தமிழர் விடுதலைக் கூட்டணி!



அமிர்தலிங்கம்


அப்பொழுது புதிய புனரமைப்பு, சமூகத்தின் தேவையாக மாறியது. ஒருபக்கம் அப்பட்டமான சிங்களப் பேரினவாதம் சட்ட வடிவத்தில் வெளிப்பட்டது. மறுபக்கம் சிங்களக் குண்டர்களின் தலைமையில் சிங்களவர்களை அணி திரட்டி மதச் சிறுபான்மையினரை ஒடுக்கக் கூடிய வடிவம் ஓர் உச்சகட்ட அந்தஸ்தை அடைந்தது. அதுமட்டுமல்லாது அரசு இயந்திரமான போலீஸ், ராணுவம் ஆகியவற்றின் மூலமும் இனவாத அடக்குமுறையை நிகழ்த்தக்கூடிய சூழ்நிலை உருவானது.

ஆக இந்த மூன்று வடிவங்களையும் ஒருங்கே கையில் எடுத்துக்கொண்டு புத்தமதம், அரசு அங்கீகாரத்துடன் களத்தில் முன்னேறக்கூடிய சூழ்நிலை உருவாகியது.

புறநிலையில் இந்தத் தவிர்க்க முடியாத விளைவுகள் தமிழ் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கின.

தமிழ் அரசியல் சக்திகள் தங்களை ஒருங்கிணைந்த நிறுவன வடிவில் நிலைப்படுத்திக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ் தேசிய சுதந்திரத்திற்கான ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தைக் கட்டமைக்க நெருங்கி வந்தன.

இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது:

திருகோணமலையில் 1972-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தமிழர்கள் அனைவரும் ஒரு மாநாட்டினை நடத்தினர். இதில் மிக முக்கியமான மூன்று கட்சிகள் பங்கேற்றன.

ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தொண்டைமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சி ஆகியவை இம்மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தன.

இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் கூட்டணியை அன்று உருவாக்கின.

தமிழ் மக்களின் தேசியத் தனித்தன்மையை நிலைநாட்டவும், அரசியல் சுதந்திரத்திற்காகவும், தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் போராடுவது என்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் இது சுயாட்சியையே முன்வைத்தது. சத்தியாக்கிரக வடிவில் வன்முறையற்ற போராட்டங்களைக் கட்டமைக்க அது முடிவு செய்தது. எப்படி இருந்தபோதிலும் தமிழர்களுடைய போராட்ட வரலாற்றில் இந்த ஐக்கியப்பட்ட நிலை ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும்.

இதனுடைய அடுத்த கட்டமாக, சுதந்திரக் கட்சி ஆட்சியின் அடக்குமுறையை ஒருபுறமும், இளைஞர்களுடைய அதிருப்தியையும் வேதனையும் மறுபக்கத்திலும் இந்த அமைப்பு சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்தச் சூழ்நிலைதான் இந்த அமைப்பு வலுவாக வேரூன்றக் காரணமானது. 1976-இல் தமிழர் கூட்டணி இளைஞர்களின் வேகத்தின் முன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியாக (ப.ம.க.ஊ.) தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது.

இதன் தலைவர்களாக எஸ்.ஜே.வி. செல்வநாயகம், செü. தொண்டமான், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோரை வட்டுக்கோட்டையில் 1976-இல் நடந்த இம் மாநாடு தேர்வு செய்தது.

அம் மாநாட்டில் தொண்டமான் நேரடியாகப் பங்கேற்கவில்லை. இம் மாநாடு தனி நாட்டுக் கோஷத்தையும் வலியுறுத்தியது. தனி நாடு மலையகத் தமிழர்களுக்குத் தீர்வாக அமையாது என்று தனது கருத்தை மாநாட்டிற்கு எழுத்துபூர்வமாக அனுப்பி வைத்தார் தொண்டமான். அதனைத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொண்டதை அடுத்து, தொண்டமான் தொடர்ந்து கூட்டுத் தலைவர் பதவியை வகித்தார்.

1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாடு கோஷத்தை முன்வைத்துத் தேர்தலில் பங்கேற்றது. தமிழ் ஈழம் அமைக்க தமிழ் மக்கள் ஆணையிட்டனர். தேர்தலின் முடிவில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக தொண்டமான் யாரும் எதிர்பாராத நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்து, அமைச்சர் ஆனார்.

தமிழ் இளைஞர் பேரவை:

1973-இல் வடபகுதி (யாழ்) இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வையும், அவர்கள் மலையக மக்கள் மீது காட்டிய ஆர்வத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்தல் கண்ணோட்டமோ, சுயநல வெறியோ இன்றி நேர்மையாக இளைஞர் பேரவையைச் சார்ந்த 10 இளைஞர்கள் மலையகத்தின் பல பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒப்புதலுடன் பயணம் மேற்கொண்டனர்.

இவர்களின் ஒரே நோக்கம் மலையக மக்களின் வாழ்நிலையைப் புரிந்து கொள்வதுதான். இவ்வாறு பயணம் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரே காலம் சென்ற சிவகுமாரன் ஆவார்.

மலையக மக்கள் பட்ட கஷ்டங்களையும் கலவர காலத்தில் அவர்கள் அடைந்த பாதிப்புகளையும் அரசின் அடக்குமுறை விளைவுகளையும் நேரில் பார்த்த சிவகுமாரன் ""தமிழர்களின் பிரச்னைக்குத் தனி நாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆயுதப் போராட்டமே அதற்குத் தீர்வு'' என்ற கருத்தைப் பெற்றார். அதையே இளைஞர் பேரவைமுன் அவர் வைத்தார். 1973 நவம்பரில் மலையகப் பகுதியில் அம் மக்கள் வெற்றிகரமாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் இவர்களும் கலந்துகொண்டார்கள்.

இதை அடுத்து 1976-இல் மலையக மக்களின் போராட்டத்தில் சிவனு லட்சுமணன் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் நடத்திய வேலைநிறுத்தம், நிதி சேகரிப்பு இயக்கம் குறிப்பிட்டாக வேண்டிய இளைஞர் பேரவையின் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் ஆகும்.

இளைஞர் பேரவையின் இந்த நடவடிக்கைகளுக்கு அச்சாணியாக இருந்தவர்கள் இந்தப் பத்து இளைஞர்களும்தான்.

இத்தகைய நிகழ்ச்சிகள் யாவும் மலையகத்திற்கும், வடபகுதிக்கும் இடையில் நல்லுறவுப் பாலம் அமைக்கும் ஆரம்ப முயற்சிகளாக இருந்தன. இந்தச் சமயத்தில்தான் யாழ் பல்கலைக்கழகத்தில் மலையக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துத் தீவிர வன்முறைத் தாக்குதல்களை நடத்தும் போக்கு வெளிப்பட்டு வேகமடையத் தொடங்கியது. இந்த வேகம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்துத் தனி நாடு கேட்கும் போராட்ட இயக்கமாக வளர்ச்சி பெற்றது.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=75993&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 18 -"தினமணி" தொடர் ♥18






ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 18: புதிய அரசியல் சட்டம்



ஆறுமுக நாவலர்




இலங்கைத் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக, ஆறுமுக நாவலரால் 1853-இல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை' என்னும் அமைப்பைச் சொல்லலாம். இந்த சபை அந்நிய சக்திகளிடமிருந்து சைவத்தைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டபோதிலும், நிர்பந்தங்கள் காரணமாக தமிழர் உரிமைகளைப் பற்றியும் நாவலர் பேசினார். இந்த சபை இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் குறிப்பாக கொழும்பிலும் களம் கண்டது.

வெள்ளையரின் சட்ட நிரூபண சபையில் இன்னார்தான் தமிழர் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைமையையும் ஆறுமுகநாவலர் எடுத்தார். சட்ட நிரூபண சபைக்கு பொ. இராமநாதன் நியமனத்திற்காக ஆளுநருக்கு எழுதினார். இதன்மூலம் 50 ஆண்டுகள் தமிழர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு பொ.இராமநாதனுக்கு கிடைத்தது. ஆனாலும் பொ.இராமநாதன் ஆறுமுகநாவலரின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கவில்லை என்ற கருத்தும் பரவலாக இருந்தது. மாறாக, இராமநாதன் இலங்கை தேசிய சங்கத்தை நிறுவி ((Ceylon National Association)) அதன் தலைவராக அரசமைப்பு சீர்திருத்தத்திற்கும் அதன்மூலம் அதிக உள்ளூர் பிரதிநிதிகளை அரசியல் நிர்ணய சபையில் அங்கத்தினர்களாக்க பெரிதும் பாடுபட்டார். 13 ஆண்டுகள் பதவி வகித்த பொ.இராமநாதனுக்குப் பிறகு அவரது சகோதரர் பொ.குமாரசாமி வந்தார். இவரின் பதவிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு புகைவண்டி இருப்புப் பாதையை அதிகரிக்கப் பெரிதும் முயன்றார்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "ஹிந்து ஆர்கன்' மற்றும் அதன் தமிழ் பதிப்பான "இந்து சாதனம்' மட்டுமே தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்கும் விதமாகக் கட்டுரைகள், தலையங்கங்களை எழுதின. உதாரணமாக, இந்து சாதனம் நாளேட்டில் எழுதப்பட்ட தலையங்கத்தின் ஒருபகுதி வருமாறு:

""நாம் ஒன்றிணையவில்லை. நாம் பிரிந்து நிற்கிறோம். மறுபடியும் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகவும் கடினம். ஒற்றுமையின்மை காரணமாக ஏற்பட்ட அழிவின் பாதிப்புகளினால் நாம் வருந்துகின்றோம். ஒரு காலம் பெருமையுடன் நாம் ஆண்ட நாட்டை அந்நியருக்கு விட்டுக்கொடுத்து விட்டோம். எமது நாட்டின் பிரச்னைகளை எமது மக்கள் ஒன்று கூடிக் கலந்துரையாடுவது கிடையாது. எமது சுதந்திரங்கள் யாவற்றையும் நாம் சரணளித்துவிட்டு, சித்த சுவாதீனம் இழந்தவராய் நிற்கிறோம்'' இவ்வகை எழுத்துக்கள் மக்களை எழுச்சியுறச் செய்தன.

1905-ஆம் ஆண்டு இறுதியில் "யாழ்ப்பாணச் சங்கம்' என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுகுறித்து 1906-இல் வெளியான "ஹிந்து ஆர்கனி'ல், ""தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை அரசின் முன்வைத்து தீர்க்கும் விதமாக யாழ்ப்பாணச் சங்கம் உருவாகியுள்ளது. இது பூரண ஒற்றுமையுடனும், முழுமனதோடும், சாதி சமய பாகுபாடுகளின்றிச் செயற்படுமானால், அரசியல் அரங்கத்தில் அது பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மாத்திரமின்றி, சமூக நிலைகளிலும் பெரும் நன்மைகளைக் கொண்டு வரும் - ஒற்றுமையே பலம்.'' என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.

இதேவேளையில் முத்துக்குமாரசாமியின் மகனாகிய கலாநிதி ஆனந்த குமாரசாமி 1906-இல் யாழ்ப்பாணம் வந்தார். அவர் தனது ஆங்கிலேய தாயாருடன் லண்டனில் வளர்ந்தவர். சைவ பரிபால சபை சார்பில் 1906 மே 14-இல் இந்துக் கல்லூரியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தனது நன்றியுரையில், ""தமிழ்க் கலாசாரம், பாரம்பரியங்கள் என்பனவற்றைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மேற்கத்திய கலாசாரத்தை யாரும் பின்பற்றக்கூடாது. தமிழரின் கலாசார அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும். இதை தமிழர்களுக்கு எனது வலியுறுத்தலாகக் கூறிக்கொள்கிறேன்'' என்றார்.

* யாழ்ப்பாணத் தமிழர் சங்கத்தில் அங்கம் வகித்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் கும்பகோணம் கல்லூரி முன்னாள் ஆசிரியர் ஜேம்ஸ் ஹென்ஸ்மன். இவர் தலைவராகவும், வழக்கறிஞர்கள் ஹோமர் வன்னியசிங்கம், எஸ்.காசிப்பிள்ளை உப தலைவர்களாகவும் இருந்தனர். ஜேம்ஸ் ஹென்ஸ்மன் தலைசிறந்த ஆங்கிலப் பேராசிரியர் ஆவர். பின்னாளில் "வெள்ளி நாக்குத் தமிழர் ஸ்ரீநிவாசசாஸ்திரி' என்று போற்றப்பட்ட-‘Silver Tongue Srinivasa Sastry’ வரின் குரு. ஹென்ஸ்மனுக்கு இரு புதல்வர்கள். அவர்கள் இருவரும் சென்னையிலேயே பணிபுரிந்தனர். அவர்களும் ஹென்ஸ்மன் என்றே அழைக்கப்பட்டனர். அந்த ஹென்ஸ்மனில் ஒருவர் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருந்து அரும்பணியாற்றிய காரணத்தால், அவரது பெயரில் தியாகராயநகரில் ஹென்ஸ்மன் சாலை என்று ஒரு சாலைக்குப் பெயரிடப்பட்டது. இன்று அந்த சாலை கண்ணதாசன் சாலை என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

பின்னர் சமூக சீர்திருத்த சங்கம் (1906), ஐக்கிய நாணயச்சங்கம் (1913), யாழ்ப்பாண கூட்டுறவுச் சங்கம் (1918), திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கம் (1920), மட்டக்களப்பு சங்கம் (1920). முல்லைத்தீவு மகாஜன சங்கம் (1921) ஆகியவை உருப்பெற்று யாழ்ப்பாணச் சங்கத்துக்கு உதவியாகவும், ஆலோசனை கூறுகிற அமைப்புகளாகவும் அமைந்தன.

1921 ஆகஸ்டு 15-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட தமிழர் மகாஜன சபை, தமிழர்களின் பிற்கால அரசியல் ஆசைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

இந்தப் பின்னணியில் தமிழர் அரசியல் அமைப்புகளைப் பார்ப்போம்:

இலங்கைத் தமிழரசுக் கட்சி:

தமிழர்களின் ஒட்டுமொத்தமான தேசிய இன உணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் 1949-இல் இது உருவாகிறது.

தன்னுடைய தனித் தன்மையையும் பல பிரிவுத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் இது பிரதிபலித்துப் பலமுனைச் செயல்பாடுகளால் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான ஒரு கட்சியாக இது உருவானது.

சிங்கள வெறிக்கும் இனவாதத்திற்கும், பதில் கூறக் கூடிய வகையில் இது செயல்பட்டது. அதை நேருக்கு நேர் நின்று எதிர்த்தது. பரவலான மக்கள் இயக்கங்கள் அனைத்தையும் கட்டி எழுப்பியது.

தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக 1956-இல் உடனுக்குடன் ஒரு மிகப்பெரிய சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தியது.

இந்த எதிர்ப்பின் விளைவாகப் பணிந்த அரசாங்கம் கடைசியில் இந்தத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதுவே சரித்திரப் புகழ்பெற்ற பண்டாரநாயக்கா~செல்வா ஒப்பந்தமாகும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை அரசால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

காரணம், சிங்களர்களும், புத்த பிக்குகளும் அணி திரண்டு தீவிரமாக அதை எதிர்த்தனர்.

இதுபற்றி அன்றைய டெய்லி நியூஸ் கருத்துக் கூறுகையில், 200 அரசியல் பிக்குகள், 15,000 மக்கள் திரண்ட ஓர் ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கலந்துகொண்டு இதைக் கண்டித்துப் பேசுகின்றனர். ஜெயவர்த்தன புத்த பிக்குகளின் இந்தக் கண்டனக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக் கண்டியை நோக்கிப் பாத யாத்திரை செல்கிறார். இந்த ஒப்பந்தத்தைத் தூக்கி எறிய அரசை வலியுறுத்துவதற்காக இப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சில மந்திரிகளும் கூட இந்த ஒப்பந்தத்தைக் கண்டிக்கின்றனர்.

மந்திரிகள் கலந்துகொண்ட ஓர் ஊர்வலம் பிரதம மந்திரியின் வீட்டுக்குச் சென்று ஒரு மனுவை அளிக்கின்றது.

இந்த வகுப்புவாத நாடகத்தின் விளைவாகக் கடைசியில் இந்த ஒப்பந்தம் தூக்கி எறியப்படுகிறது.

அதிலிருந்து தொடர்ந்து 1958, 1961 வகுப்புக் கலவரங்களும், மோதல்களும் உருவாகின்றன. இது 1965 வரை தொடர்கிறது.

இதற்கிடையில் தமிழரசுக் கட்சி தலைமையிலான சிவில் ஒத்துழையாமை இயக்கம் (1961) மிக முக்கிய அரசியல் நிகழ்ச்சியாகும்.

பின்னர் 1965-இல் ஆட்சி மாற்றம். ஐக்கிய தேசிய முன்னணி U.N.P. அரசு ஏற்படுகிறது. சிங்களவர்கள் சில சலுகைகளைத் தமிழர்களுக்கு அளித்து ஒரு கூட்டுறவுத் தந்திரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக மாவட்ட சபைகளை உருவாக்கும் செல்வா-டட்லி ஒப்பந்தம் உருவாகியது. ஆனால் இந்த அமைதிச் சூழ்நிலை அதிக நாள் நீடிக்கவில்லை. சிங்கள இனவாதிகள் இதையும் அனுமதிக்கத் தயாராக இல்லை.

இதைத் தொடர்ந்து 1968-இல் தமிழரசுக் கட்சி அரசோடு ஒத்துழைக்காது வெளியேறியது. பின் 1970-இல் திரும்பவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்ரீமாவோ (சுதந்திரக் கட்சி) ஆட்சிக்கு வந்தன.

ஸ்ரீமாவோவின் ஆட்சிக் காலமான 1970-77-இல் நாடும் முழுவதும் கொந்தளிப்புகளும், குமுறல்களும், அரசு அடக்குமுறைகளும் மிகுந்த ஒரு காலமாகும்.

அப்போது இடதுசாரிக் கட்சிகளும் அரசில் பங்கேற்கின்றனர். சிங்கள இனவாதத்தின் முன்னே இடதுசாரிகளின் வேடம் அம்பலப்பட்டு அவர்களும் இனவாத நீரோட்டத்தில் கலந்து கரைந்து விடுகின்றனர். (லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி முதலியன)

1972-இல் ஸ்ரீமாவோ அரசு, இலங்கையைக் குடியரசாக அறிவித்தது. சிறுபான்மையருக்குப் பாதுகாப்பு அளித்த பழைய அரசியல் சட்டத்தின் 29-ஆவது ஷரத்தை நீக்கியது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி மற்றும் சில கட்சிகள் இந்த அரசியல் சட்ட மோசடியை எதிர்த்தும், தங்களின உரிமைகளைப் பேணவும், அரசோடு பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குகின்றன. (1971)

அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைகின்றது. கடைசியில் சிங்கள மொழியை ஆட்சி மொழி ஆக்கியும், புத்த மதத்திற்கு விசேஷ அந்தஸ்து அளித்தும் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. (1972).

* Sir, in the volume of ‘‘Connected Constitutional Papers‘‘ referred to by the Hon.Member for Kandy he would see that right at the very beginning, as early as 1909 or 1908 when several of us would not have been able to lisp in the English language, the Jaffna Association, under the Presidency of Mr.James Hensman, was asking for the introduction of the elective principle and for a degree of responsible governement in this country. Here you have the case of a Tamil Association that admittedly gave a lead to the political movement in this country. Happily Sir, that revered old man, who has given to India the Right Hon. Srinivasa Sastri, is yet spared to the Tamils of Ceylon in their day of travail; he is yet alive, and this is the message Mr.Hensman in the evening of his life, having seen all the various political facets, all the various political evolutions both in India and in Ceylon sent from his retirement in Jaffna. -Speech delivered in the State Council on the Reforms Dispatch by G.G.Ponnambalam M.Sc.

* (கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழர்')

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=75486&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%22%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+-+18:+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

♥ "நாங்கள் தோற்றாலும், புலிகள் தோற்கக் கூடாது..."வைகோ பேச்சு ♥

நாங்கள் தோற்றதில் வருத்தமில்லை;புலிகள் தோற்றதுதான் கவலையாக இருக்கிறது: வைகோ பேச்சு
http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/10/vai_ko.jpg http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_18141901494.jpg

நாங்கள் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைதான் இருந்தது. எனினும் அவர்கள் யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். புலிகளை அழிக்க முடியாது. இவ்வாறு சேலத்தில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் வைகோ சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டம் சேலம் ஜங்சன் அருகில் உள்ள பி.சி.சி. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கு.சீ.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வரவேற்றார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், ''மதிமுகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. வை அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க 50 கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கொளரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம்.

நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைதான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். புலிகளை அழிக்க முடியாது என்று பேசினார்.


http://tamilwin.com/view.php?2a36QVH4b3dt9Eq24d0SWnL3b02R7GQb4d3aYpD4e0dTZLukce0cg2h32cceHj062e


http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/4664_1136245296140_1527581102_30330403_4565593_n.jpg http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/n1527581102_30330398_7908176.jpg

♥ மொபைல், புகைப்படக்கருவிகள், எடுத்துச் செல்ல ஐ.நா அதிகாரிகளுக்கு சிங்கள அரசு தடை ♥

புகைப்படக் கருவிகள்,செல்லிடப்பேசிகள் இல்லாமல் இலங்கை முகாம்களில் குருடர்,செவிடர் நிலையில் ஐ.நா


இலங்கையில் ஐ.நா நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் ஐ.நா அதிகாரிகள் புகைப்படக்கருவி, செல்லிடப்பேசிகள் என்பன கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுவதன் மூலம்  ஐ.நா  குருடர் ,செவிடர் நிலையில் உள்ளது என இண்டர் சிற்றி பிறஷ் நேற்று முந்தினம் வெளியிட்ட செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது:

இலங்கையிலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு புகைப்படக்கருவிகள்,கமராக்களை எடுத்துச்செல்வதில் ஐ.நா அதிகாரிகள் தடுக்கப்பட்டமை தொடர்பாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம்  

பான்.கீ.மூனின் பேச்சாளர் இது  தொடர்பாக வெள்ளியன்று இண்டர் சிற்றி பிறஷிடம் கருத்து தெரிவிக்கையில் இதை ஐ.நா ஏற்றுக்கொள்ளும் என தான் கருதவில்லை என கூறினார்.

இவ்வருட ஆரம்பத்தில் ஐ.நா ஊழியர்கள் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டத்தை ஐ.நா ஏற்றுக்கொண்ட  நிலையில் முகாம்களில்  தான் அவதானித்த துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்துவதிலிருந்து அல்லது படம்   பிடிப்பதிலிருந்து தாம் தடுக்கப்பட்டால் அதை ஐ.நா ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை

இது குறித்து தாம் ஆராய்வதாக மேற்படி பேச்சாளர் தெரிவித்தார்.

இத்தகைய கட்டுப்பாடுகள் தொடர்பான செய்திகளுக்கு மத்தியில் ஐ.நாவின் மனிதாபிமான அதியுயர் அதிகாரியான ஜோன்ஷ் ஜோம்ஷ் தற்போதைய நிலையில் மேற்படி முகாம்களுக்கு சென்றுவருவதற்கு குறிப்பிடத்தக்களவு  அனுமதியை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அக்சன் பெயிம் தொண்டு நிறுவன ஊளியர்கள் 17 பேரின் கொலை தொடர்பான விசாரணையை அரசாங்கம் நிறுத்தியமை தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு கோரப்பட்டதற்கு இன்னும் பதிலளிக்காதவர் இவர்.

புகைப்படக்கருவி,செல்லிடப்பேசிகள் இல்லாத நிலையில் முகாம்களுக்கு சென்றுவருவதற்கான அனுமதி எத்தகையதாக இருக்கும்?

துஷ்பிரயோகங்கள் தொடர்பாக அறியக்கிடைக்கும்போது மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு
அலுவலகம் என்ன நடவடிக்கை மேற்கொள்கின்றது?

ஊளியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து தாம் நிதானமான நடவடிக்கை மேற்கொண்டதாக அந்த அலுவலகம் கூறியது ஆனால் இவ்விடயம் ஒரு தடவை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா வைபவம் ஒன்றில் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் பலர் இவ்வருடம் இலங்கையில் நடந்த விடயங்கள் குறித்து இன்னர் சிட்டி பிறசிடம் தமது கவலைகளை வெளியிட்டனர்.

பாதுகாப்பதற்கான கடமைப்பாட்டுற்கு என்ன நடந்தது? இறிதித் தாக்குதலுக்கு முன்னர் எவராவது அதை நிறித்தியிருக்கக் கூடாதா என மேற்கு ஆபிரிக்க பிராந்திய நாடொன்றிலிருந்து தூதுவர் ஒருவர் கெள்வி
எழுப்பினார்,

அது நல்லதல்ல என இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட நாடொன்றின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியான அத்தூதுவர் கூறினார்.

இந்த ஆபிரிக்க தூதுவர்கள் இரக்கமற்றவர்கள் போலவும் மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் கூடுதலான கரிசனை கொண்டவர்கள்
போலவும் சித்தரிக்கப்பட்டனர்.ஆனால் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்பதை அரசியல்தான் நிர்ணயிக்கின்றது

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=68:2009-06-21-05-23-10&catid=34:2009-06-20-00-23-44&Itemid=53




தமிழினப் படுகொலைதாரிகளை நீதியின் முன்நிறுத்துமாறு வலியுறுத்தி லண்டனில் மாபெரும் பேரணி: ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு
 [ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2009, 03:24.23 AM GMT +05:30 ]

http://tamilwin.com/view.php?2aSWnLe0dHj0W0ecQG7V3b4t9EW4d3g2h3cc2DpY3d426QV2b02ZLu2e

♥ " அகதியாக மீண்டும் வரமாட்டேன்" தமிழ்நாடு அரசு புதிய திடீர் உத்தரவு ! ♥

இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாடு அரசு திடீர் நிபந்தனை
 
தமிழ்நாடு அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்கள் இலங்கை செல்ல வேண்டுமானால், 'மீண்டும் வரமாட்டேன்' என கியூ பிரிவு பொலிஸாரிடம் உறுதியளிக்க வேண்டுமென தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.
லங்கையில் 1983ல் ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பின், ஏராளமானோர் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
தமிழகத்தில் 117 முகாம்களில் தங்கியுள்ள இவர்கள், வெளிநபர்களுடன் தொடர்பு வைத்துள்ளனரா என்பது குறித்து கியூ பிரிவு பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.
இதில், முகாமில் தங்கியுள்ள அகதிகள் சிலர் இலங்கைக்கு செல்ல விரும்புகின்றனர்.
இவ்வாறு செல்ல விரும்புபவர்கள், கியூ பிராஞ்ச் பொலிஸாரிடம் மீண்டும் முகாமிற்கு வரமாட்டேன் என்று உறுதிமொழி எழுதி கொடுத்து விட்டு, சான்றிதழ் பெற்று தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈழமக்கள் காப்பு அமைப்பு தமிழ்நாடு
த.கேசவன்

http://eeladhesam.com/

"கனவில் கூட சரணடைய மாட்டோம்"-விடுதலை புலிகள் .

தமிழீழ விடுதலை புலிகள் சரணடையும் எண்ணத்தை கனவில் கூட எண்ணாதவர்கள்

[Untitled-1+copy.jpg]

tamileelam12006 நவம்பர் மாதம் புலிகளால் கைது செய்யப்பட்ட 7 இலங்கைக் கடற்படையினரில் சமிந்த குமார ஹெவாஜ் என்பவரும் ஒருவர். வன்னியில் இறுதிக்கட்ட சண்டைவரை  இந்த 7 பேருக்கும் ஒரு ஆபத்தும் வராமல் பாதுகாத்த புலிகள், கடந்த மே 17 இல் அவர்களை விடுவித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அவர் பி.பி.சி இன் சிங்கள சேவைக்கு பேட்டியளித்துள்ளார்.

போர்க்கைதிகள் அனைவரும் சீமெந்தால் கட்டப்பட்ட பதுங்கு குழிக்குள் வைக்கப்பட்டிருந்த போதும், இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்களால் அவை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததாகக் கூறும் சமிந்த குமார, இறுதி நேரத்தில் துப்பாக்கி ரவைகள் சில தமது பதுங்கு குழிக்குள் விழுந்ததாகவும் கூறியுள்ளார்.
புலிகளால் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள் அனைவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் பதிவு செய்திருந்ததாகவும், புலிகள் அவர்களை ஒருவித சித்திரவதைக்கும் உள்ளாக்காமல் மரியாதையுடன் கவனித்துக் கொண்டதாகவும் கூறியுள்ள சமிந்த குமார தாம் இருந்த பதுங்கு குழிகளைச் சுற்றி புலிகளின் பல முகாம்கள் இருந்ததாகவும் கூறினார்.

போர்க்கைதிகள் எவரும் குடியிருப்புகளின் மீது ஷெல் வீழ்ந்ததைக் காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்ற அவர், பொதுமக்கள் குடியிருப்புகள் என்று தாம் அறிந்திருந்த பகுதிகளை அண்டி பல ஷெல்கள் வீழ்ந்ததை தம்மால் உறுதிப்படுத்த முடிந்ததாக மேலும் பி.பி.சி சிங்கள சேவைக்குக் கூறினார். எனவே தான் பொதுமக்கள் வன்னியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் சமிந்த குமார.

ஆரம்ப காலத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கிளிநொச்சி மாவட்ட கனகபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகள், பின்னர் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். "இடம் மாறும்போது புலிகளின் வாகனங்களில் எங்களைக் கொண்டு சென்ற புலிகள், பின்னர் ராணுவத்தினரின் தாக்குதல் அதிகரித்ததன் பின்னர் எங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் கால்நடையிலேயே கூட்டிச் சென்றார்கள்" என்று புலிகள் தம்மீது வைத்திருந்த அக்கறை பற்றி பெருமையாகக் கூறினார். பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது ஷெல் விழுந்து அவர்கள் பட்ட பல இன்னல்களைத் தாம் அறிந்துள்ளதாகக் கூறிய இவர் இறுதி நேரச் சண்டையின்போது நடந்த சில முக்கிய விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் எவருமே ராணுவத்தினரிடம் சரணடையும் நோக்கில் இருக்கவில்லை. புலிகளுக்கு இறுதி நேரச் சண்டைகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்கள் சில போதாமல் போன கட்டத்தில் கூட அவர்கள் இவ்வாறு சரணடையும் முடிவுக்கு வராமல் தம்மிடம் உள்ள ஆயுதங்களின் ஓசை தானாகவே அடங்கும் வரை ராணுவத்தினரை எதிர்த்துப் போராடி வீரமரணமடையவே விரும்பி இருந்தனர் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் சமிந்த குமார.

சயனைட் குப்பியை தமது மாலையாக அணிந்திருந்த புலிகளே சரணடைந்து விட்டார்கள் என்று மார்தட்டிய சிங்களப் படையினருக்கும், எமது மக்களின் சந்தேகத்துக்கும் இவரது பேட்டி சரியான பதிலளிக்கும் என நாம் நம்புகிறோம். கண்முன்னே இறந்து கொண்டிருந்த மக்களையும் அவர்கள் பட்ட அவலங்களையும் கண்டு சகிக்க முடியாத சில அரசியல் பிரிவினர்கள் சரணடைய முற்பட்டது கூட, புலிகள் அகிம்சை வழி தீர்வுக்குக்கூட தயார் என்று காண்பிக்கவும் மக்களைக் காக்க வேண்டிய தமது கடமையைச் செவ்வனே செய்வதற்குமே ஆகும்.
ஆனால் சண்டையில் ஈடுபட்ட தளபதிகளோ, போராளிகளோ ராணுவத்திடம் போய் மண்டியிட்டு சரணடையும் எண்ணத்தைக் கனவில் கூடக் கொண்டிருக்கவில்லை என்று அறியும்போது தமிழர்களாகிய நாம் என்றுமே கோழைகள் அல்ல…. எங்கள் நிலத்தைக் கைப்பற்றும் எமது தொடர் போராட்டங்கள் என்றுமே தொடரும்.

http://www.nerudal.com/nerudal.8357.html

♥ பத்மநாதனை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வரும் இந்திய உளவுப் பிரிவு ♥

பத்மநாதனை இந்திய "ரோ" உளவுப் பிரிவு பயன்படுத்தி வருகின்றது

nedumaran

கர்நாடக தமிழர் பேரவையின் ஆண்டுவிழா ஊப்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? இருந்தால் எப்போது வெளியே வருவார்?

பிரபாகரன் நலமாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது வெளியே வருவார். இதற்கு முன் பல தடவை பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு செய்திகளை பரப்பியது.

அந்த செய்திகள் எல்லாம் பொய்த்தன. அதேபோல இப்போது சிங்கள அரசு பரப்பும் செய்தியும் பொய்யான செய்தியாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னிலும் வீறுகொண்டு நடத்த பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்.

தமிழீழ இயக்கத்தில் உள்ள சிலரே பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்களே. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். உதாரணமாக பத்மநாதன் என்பவர் ஆயுதம் வாங்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

அதில் அவர் சில தவறுகளை செய்ததால் அவரை அந்த பொறுப்பில் இருந்து பிரபாகரன் நீக்கி விட்டார்.  அதன்பிறகு அவர் சர்வதேச செயலகத்தில் ஒரு பொறுப்பாளராக மட்டுமே இருந்தார். இவருக்கு மேல் பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அறிக்கை விடுவதற்கு பத்மநாதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்து இருந்தால் அதை அறிவிக்கும் அதிகாரம் அவருடன் களத்தில் நின்ற தளபதிகளுக்கு மட்டுமே உண்டு.

களத்தில் இல்லாமலும் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வருபவரும் எந்த கட்டத்திலும் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தலைமறைவாக இருப்பவருமான பத்மநாதனால், களத்தில் நடந்ததை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

இந்திய "ரா" உளவுத்துறை பிடியில் சிக்கி இத்தகைய அறிக்கைகளை அவர் வெளியிடுகிறார். உலக தமிழர்களின் மன உறுதியை குறைக்கவும், தமிழர்களை குழப்பவும் "ரா"  உளவுத்துறை அவரை பயன்படுத்துகிறது.


http://www.nerudal.com/nerudal.8542.html

♥ புகைப்பட ஒப்பீடு - தமிழர்களும் சிங்களனும் ♥


atsa00008.jpg



http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=70:2009-06-21-07-09-51&catid=34:2009-06-20-00-23-44&Itemid=53

♥ பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா? - நக்கீரன் கட்டுரை ♥

பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா? - நக்கீரன்

[Untitled-1+copy.jpg]

தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எமது தலைவர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை சிறிலங்கா படை யினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார்' என்று அறிவழகனின் அறிக்கை தெரிவிக் கிறது.


பிரபாகரன் பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை உட னடியாக மறுத்து அறிக்கை விட்டவர்தான் அறிவழகன். அவர் பத்மநாதன் வழியில் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதால் உலகத் தமிழினம் பதைபதைப்பும் குழப்பமும் அடைந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.

""இறுதிக்கட்டப் போரின்போது சிங்களப் படையினர் திணறிப்போகும் வகையில் ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப்போராட்டத்தைத் தொடர் வதற்காக வெளியேறினார் எங்கள் தேசியத் தலைவர். சிங்கள அரசோ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொண்டிருக்கும் பொய் எங்களுக்கு ஒரு வழியில் நல்லதுதான்.

உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குவதுதான் இப் போதைய எங்களின் முதல்பணி. பிரபாகரன் இல்லை என சிங்கள அரசாங்கமே சொல் லும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்துக் கான தடை தேவையற்றது என்ற வாதத்தை வைத்து நாங்கள் தடையை நீக்கப் போராடு வோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில்தான் அறிவழகனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுவும் விடுதலைப் போரின் ஒரு யுக்திதான்.

ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் ஆஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை கிடையாது. இப்போது அங்கும் தடை விதிக்கக் கோரியது இலங்கை அரசு.

ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக நீங்களே சொல்கிறீர்கள். பிறகு எதற்கு தடை. நாங்கள் தடை விதிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. இதே அடிப்படையில் மேற்குலக நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கப் பாடுபடுவோம்.

சிங்கள அரசின் மனிதஉரிமை மீறல்கள் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கி யுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கி, விடுதலைப் போராட் டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதுதான் தற்போதைய எங்கள் திட்டம். நாடு கடந்த தமிழீழத் தாயகம் என்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளோம்.

தற்போதைய நிலையில் தமிழீழக் குடியரசை வெளிநாட்டில் நிறுவுவது என்றும் அதன் மூலமாக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெருக்குவது, புலிகள் மீது தடையில்லா உலகத்தை உருவாக்கியபின், எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இலங்கை மீது போர் தொடுப்பது என நீண்ட திட்டங்கள் உள்ளன. இவை சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அறிவழகனின் அறிக்கை வெளியாகியுள்ளது.

புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த ஆஸ்திரேலியாவிலோ அல்லது புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் உள்ள கனடா விலோ நாடு கடந்த தமிழீழத் தாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை ருத்திர குமாரன் தலைமையிலான ஈழத்தமிழர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நேதாஜி இப்படித்தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். இன்று விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பலர் இதே முறையில் செயல்படுகின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் எங்களின் நாடு கடந்த தமிழீழக் குடியரசின் பணிகள் இருக்கும்'' என விரிவாகத் தெரிவித்தனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் எழுச்சி பெறச் செய் திருக்கிறது ராஜபக்சே அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல்.


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=74:2009-06-21-07-50-36&catid=35:2009-06-20-00-24-54&Itemid=54





கலைஞர் நாடகம்





http://www.thinakkural.com/news%5C2009%5C6%5C20%5Cimages/cartoon/cartoon-l.jpg

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=38&Itemid=56
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!