Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, July 31, 2009

♥ இணையத் தள தடை செய்யப்பட்டயும் ராஜபக்சேவின் பைத்தியக்கார செயல்! ♥

சிறி லங்கா கார்டியன் வலைத்தளம் தடை செய்யப்பட்டது பைத்தியக்கார செயல்
http://www.theyeshivaworld.com/wp-content/uploads/2008/05/internet%20ban.jpg

இலங்கையில் சிறி லங்கா கார்டியன் இணையத்தளம் தடைசெய்யப்பட்டுள்ளமை குறித்து அவ்விணையம் வெளியிட்டுள்ள பதிப்பில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயல் பைத்தியக்காரத்தனமெனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏசியன் டிரிபூன் அல்லது பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தை மட்டுமே வாசிப்பது உலக அறிவை ஜனாதிபதிக்குத் தரமாட்டாது, அவை மூளையை மழுங்கடிக்கவே செய்யும் என ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்தத் தடையானது அரசினால் செய்யப்பட்டிருப்பின், அது தவறான பாதையில் சென்று நாட்டை வளமற்றதாக மாற்றுகிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகிறது என்று கூறியுள்ளதோடு இந்த வலைத்தளத்தை கல்வியறிவு மிக்க பலர் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகமாகவும், புலிகளுக்கு எதிரான விளம்பரமாகவும் கூட பயன்படுத்தியிருக்கின்றனர் என்று கூறும் சிறி லங்கா கார்டியன், தற்போதைய அரசின் வெற்றிக்கும் இந்த தளம் மிகவும் பாடுபட்டுள்ளது என்று கூறியுள்ளது. எனவே இவ்வாறான தடைகளால், அரசு தமது வெற்றிக்கு கைகொடுத்தவர்களைக் கர்வத்துடன் தூக்கியெறிகிறது. இதேபோலத் தான் முன்னைய சிறி லங்கா அரசுகளும் செயற்பட்டு வந்தன என்பதற்கு வரலாறுகள் சாட்சியாக இருக்கின்றன.

தற்போது புலிகளைத் தோற்கடித்துவிட்டதால், தமது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பலம் பொருந்திய அரசாக இருப்பதாகவும் செருக்குக் கொண்டுள்ள இலங்கையரசின் இந்தப்போக்கானது அதை தப்பான வழிகளில் இட்டுச்செல்லப்போகிறது என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1248934934&archive=&start_from=&ucat=2&


http://www.thenee.eu/assets/images/_45643266_tamilssssss.jpg





http://www.thaaimann.com/wp-content/uploads/2009/07/seelanrygesye.jpg

♥ புலிகளின் வாக்கி டாக்கியை ஒட்டுக்கேட்ட சிங்கள் இராணுவத்தின் புதிய அதிர்ச்சி! ♥

"டங்கோ டங்கோ குருவி" புலிகளின் வோக்கியை ஒட்டுக்கேட்ட இராணுவத்தினர்
http://www.tamilnet.com/img/publish/2006/05/ltte_lt_col_veeramani.jpg








சமீபத்தில் புலிகளின் அதி சக்திவாந்த வோக்கி டோக்கியை ஒட்டுக்கேட்ட இராணுவத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் டங்கோ டங்கோ "குருவி" காயப்படவில்லை அகற்றும் நடவடிக்கைக்கு தயார் என்ற வாசகங்கள் இராணுவத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இந்தப் புனைபெயர் பொட்டம்மான் அல்லது சொர்னத்தைக் குறிக்கும் என்பதை இராணுவத்தினர் அறிந்துள்ளனர்.

காடுகளில் இன்னும் சில படையணிகளோடு புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருப்பது தற்போது இலங்கை இராணுவத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதேவேளை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா| என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களுக்கமைய, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு, வெள்ளவத்தை 33வது ஒழுங்கையில் உள்ள கட்டிடமொன்றின், 6வது மாடியை சோதனையிட இராணுவத்தினர் சென்றுள்ளனர். எனினும், அதற்கு முன்னரே, அங்கிருந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் சிலர் ஒளிந்திருப்பதாக கைதுசெய்யப்பட்ட நபரினால் தகவலளிக்கப்பட்டு சில மணி நேரத்திற்குள், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை நோக்கும் போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்தும் கொழும்பு நகரில் பலம் மிக்கதாக செயற்பட்டுவருவது உறுதியாவதாக இராணுவத் தகவல்கள் ஒன்று மேலும் தெரிவிக்கிறது.

எது எப்படி இருப்பினும் தாம் ஒட்டுக்கேட்ட செய்தியைவைத்து இராணுவம் தற்சமயம் தலையைப் பித்துகொண்டுள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1248971786&archive=&start_from=&ucat=3&

http://lh5.ggpht.com/_YpskrslrWe4/SY1ro_rA_UI/AAAAAAAAAWw/b1bQKsGM5qg/29_31_02_09_010%5B1%5D_thumb%5B4%5D.jpg


♥ ""பயத்தை மறைக்க நினைப்பவன் ......! ராஜபக்சே ♥

ஒரு முதியவர் தெரிவித்த திடமான கருத்து

""பயத்தை மறைக்க நினைப்பவன் நடுராத்திரியில் காட்டுவழியில் பாட்டு பாடிக்கொண்டே செல்வதுபோலத்தான் இருக்கிறது ராஜபக்சே அரசின் நடவடிக்கைகள்''

என்கிறார் அந்த ஈழத்தமிழர்.


கொழும்பில் வாழ்ந்து ஈழத்தில் உள்ள அரசாங்க வதை முகாம்களுக்குச் சென்று, அங்கு தமிழர்கள் படும்பாட்டை சகிக்க முடியாமல் வெளியே வந்து, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது பயோ-டேட்டாவைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் விரிவாகப் பேசினார்.

""தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த அளவுகூட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றித் தெரியாது. அந்தளவுக்கு முடக்கப்பட்டிருக்கிறார்கள். நக்கீரனில் வெளியாகும் தகவல்களை உறவினர்கள் மூலமா போன் வழியா தெரிஞ்சுக்குறாங்க. அதுதான் இப்ப அவர்களுக்கு ஒரே ஆறுதலும் நம்பிக்கையுமாகும். கொழும்பிலிருந்து புறப்பட்டால் செட்டிகுளம் தொடங்கி, வவுனியா வரைக்கும் முகாம்கள்தான்.

இதில் செட்டிகுளம் கதிர்காமர் முகாம் மட்டும்தான் சுத்தமாகவும் வசதியாகவும் இருக்கு. அதைத்தான் ஐ.நா. அதிகாரிகளுக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் காட்டி ஏமாத்திக்கிட்டிருக்காங்க.

எப்படியாவது சொந்த இடத்துக்குப் போகணும்ங்கிறது தான் முகாம்களில் இருக்கிற மக்களோட விருப்பம். சாப்பாடு, தண்ணீர், துணிமணி எதுவும் கிடைக்கிறதில்லை. நீர்கொழும்பு பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வந்த தமிழக மீனவர்கள் அதிகம். அவங்க நடத்தி வந்த 50 தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மூடியாச்சு. குடப்பாடுல உள்ள விஜயரத்னா பள்ளிக்கூடத்துல சிங்களம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. தமிழர்கள் பேசிக்கொள்ளும்போதும் சிங்களத்தில தான் பேச வேண்டிய நிலைமை. ராணுவத்துக்கிட்டேயிருந்து தப்பிக்கணுமே...

ஆமிக்காரங்களோ விசாரணைங்கிற பேரில் இளசுகளைப் பிடிச்சிட்டுப் போறாங்க. உறவினர்களைப் பார்க்க ணும்னு நான் முகாம்களுக்குப் போனப்பவும் இதே நிலைமைதான். இரண்டு நாள் கழிச்சி அந்த இளைஞர்கள் காட்டுப்பகுதியில் கை, கால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாங்க. அதே நேரத்தில், வவுனியா காட்டுப் பகுதிக்குப் போயிட்டுத் திரும்பும் ஆமி வாகனத்தில் 10, 15 ஆமிக்காரன் பொணமா வருவதையும் பார்த்தேன். எல்லாம் பொடியன்களின் (புலிகள்) அட்டாக்தான்.

யூலை 13-ந் தேதி, காட்டுப் பகுதியில் பொடியன்கள் இருக்காங்களான்னு கண்காணிக்கும் ஆமிக் காரங்களுக்கு 3 லோரியில் உணவுப் பொருள் போனது. இதை தெரிஞ்சுக்கிட்ட புலிகள் 10 பேர் ஜெயபுரம்-முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள காட்டுப்பகுதியில் லோரிகளை வழிமறிச்சு, அதிலிருந்த ஆமிக்காரங்களை கொன்னுபோட்டு , உணவுப் பொருளோடு அந்த லாரிகளை காட்டுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. இந்தக் கோபத்திலேதான் முகாமில் இருந்த 40 இளைஞர்களை இழுத்துக்கிட்டுப் போயி, காட்டிலே வெட்டிப் போட்டான்கள் ஆமிக்காரன்கள்.

காட்டுப் பகுதியில் புது விதமான பயிற்சிகளோடு ஆயத்தமாகிவிட்ட புலிகள், இலங்கையின் முக்கிய நகரங்களை குறி வச்சுத்தாக்கத் திட்டமிட்டிருக்காங்க. முக்கியமான அரசு அலுவலகங்களும் தாக்கப்படும். புலிகளின் தாக்குதல் தீவிரமானால் அப்பாவித் தமிழர்களை ராஜபக்சே அரசாங்கம் சித்திரவதை செய்யும். அதனால கொழும்பு, நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழர்கள் யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமா இடம்பெயர ஆரம்பிச்சிட்டாங்க. இதுவும் இயக்கத்தோட மறைமுக உத்தரவுதான்.

புலிகள் ஒரு பாரிய அளவிலான தாக்குதலை நடத்தப்போறாங்கன்னு ராஜபக்சே அரசாங்கத்துக்கும் தெரிந்திருக்கு. அதனாலதான் ஆமிக்கு ஆள் சேர்க்கிறார். ராணுவப் பயிற்சிக்கு இந்தியாவின் உதவியைக் கேட்டிருக்கிறார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதுங்கிற பேரில் இந்திய ராணுவத்தை அழைத்து, காட்டில் புதிய வியூகத்தோடு செயல்படும் புலிகளை அழிப்பதுதான் ராஜபக்சேவின் திட்டம். அதோடு, சொந்த மண்ணுக்கு எப்போது போவோம்ங்கிற ஏக்கத்தோடு முகாமில் இருக்கும் தமிழர்களை கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தவும் திட்டம் போடப்பட்டிருக்கு.

சொந்த மண்ணில் குடியிருக்கலாம்ங்கிற ஆசையோடு வரும் தமிழர்களை கண்ணிவெடிகளில் சிக்க வைத்து கொன்று குவிக்கும் கொடூரத் திட்டமும் போடப் பட்டிருக்கு.

முகாம்களில் மூன்றரை லட்சம் தமிழர்கள் இருக்கும் போது, 40 ஆயிரம் பேர்தான் இருக்காங்கன்னு ராஜபக்சே சொல்லி இருக்கிறார். மற்றவங்களை கண்ணி வெடியில் கொன்னுடலாம்ங்கிற கணக்கோடுதான் அவர் இப்படி சொல்கிறார். இதெல்லாம் உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கு. ராஜபக்சேவின் கொடூரத் திட்டங்களை பிரபாகரன் நொறுக்கிவிடுவார்னும் தெரியும். அதனாலதான் தன் நாட்டு மக்கள் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம்னு அமெரிக்கா எச்சரித்திருக்கு.

கண்ணி வெடி மூலமாகவும் முகாம்களில் உள்ள இளைஞர்களை கடத்திச் சென்றும் தமிழினத்தை அழிக்கும் அடுத்த திட்டத்தை ராஜபக்சே அரசாங்கம் தயார் பண்ணியிருக்கு. சிங்களன் இனி என்ன திட்டம் போட்டாலும் புலிகள் தரப் போகும் அடியைத் தாங்குவது கஷ்டம்தான். உலகத்தாரே... பார்க்கத்தான் போறீர்கள்'' என்றார் அந்த தமிழர்.

கொழும்பிலிருந்து எழில்

இந்த செய்திக்கும் ஈழதேசம்.கொம் இணையத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை இது ஒரு முதியவரின் தனிப்பட்ட கருத்தும் அவருடைய திடமான கருத்தும் ஆகும்

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=183:2009-07-30-15-38-57&catid=1:aktuelle-nachrichten&Itemid=50


http://www.athirvu.com/ca1.jpg

♥ செங்கல்பட்டு முகாமில் உண்ணாவிரதம் இருந்த 17 அகதிகள் விடுதலை ♥

Berlin Uurvalam



கடந்த இரண்டரை ஆண்டுகளாக செங்கல்பட்டு முகாமில் பரிதவித்து வந்த 17 இலங்கை அகதிகள் ஒரு வழியாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது என்று தமிழ்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது..

தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்களில் குற்றப் பின்னணி உடையவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இது முகாம் என்றாலும் கூட கிட்டத்தட்ட இது ஒரு சிறையைப் போன்றதுதான். தமிழகத்தில் உள்ள 117 முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் வெளியில் போய் வேலை பார்க்க முடியும். ஆனால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்களால் வெளியில் வர முடியாது.

இந்த முகாமியில் அடைக்கப்பட்டுள்ள 86 அகதிகள் தங்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல் வைத்திருப்பதைக் கண்டித்தும், அகதிகள் முகாமின் கொடூரமான சூழ்நிலையைக் கண்டித்தும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உண்ணாவிரதம் இருந்து வந்த சிலரின் உடல் நிலை மோசமானதால் நிலைமை மேலும் சர்ச்சையானது.

இந்த நிலையில், 18 அகதிகளை விடுதலை செய்ய நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பான உத்தரவை எடுத்துக் கொண்டு தாசில்தார் ஒருவர் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு வந்தார். இந்த உத்தரவு குறித்து முகாம் அதிகாரிகள், அகதிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து உண்ணாவிரதத்தை விலக்கிக் கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முதல் கட்டமாக நேற்று 17 அகதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இனி பொது முகாம்களில் தங்குவார்கள். அங்கிருந்தபடி மற்ற அகதிகளைப் போல வெளியில் போய் வேலை பார்க்க இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்கள் தவிர மேலும் 60 அகதிகளும் படிப்படியாக விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை உத்தரவு வந்ததைத் தொடர்ந்து முதலில் கிருபா, மோகன்தாஸ், முருகானந்தம், சேவியர், கண்ணன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களை அவர்களது உறவினர்கள் வந்து அழைத்துச் சென்றனர்.

மற்றவர்கள் அவர்களது உறவினர்களுக்காக காத்துள்ளனர்.

விடுதலையாகியுள்ள அகதிகளில் ஒருவரான சுகுமார் (49) முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கடந்த 2006ம் ஆண்டு அகதியாக தமிழகம் வந்தார். மண்டபம் முகாமில் தங்கியிருந்தார்.

அப்போது இலங்கைக்கு மளிகைப் பொருட்களை கடத்திச் சென்றபோது கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு முகாமில் அடைக்கப்பட்டார்.

சுகுமாரின் மனைவி யுவராணி, மூன்று குழந்தைகளில் 2006ம் ஆண்டு தாக்கிய சுனாமியில் சிக்கி பலியாகி விட்டனர். இதையடுத்தே அவர் முல்லைத்தீவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

மேலும் சுகுமாரின் நான்கு சகோதரர்களும் இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் பலியாகி விட்டனராம். தற்போது யாருமில்லாத அனாதையாக உள்ள சுகுமார் மீண்டும் முல்லைத்தீவுக்கு திரும்ப விரும்பவில்லை. இதேபோன்ற கதைதான் மற்ற 16 பேரின் நிலையும் உள்ளது.

வைகுண்டவாசன் (27) என்ற இன்னொரு அகதி கூறுகையில், நான் அகதியாகத்தான் இங்கு வந்தேன். எனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எனது சகோதரி போரில் கொல்லப்பட்டு விட்டார். எனது தாயார் வவுனியாவில் இருக்கிறார். நான் சென்னையிலேயே வசிக்க விரும்புகிறேன் என்கிறார்.

கிருபா என்கிற கிருபாகரன் மன நலம் குன்றியவர் ஆவார். இவர் உள்பட விடுதலையான அனைவருமே தாயகம் திரும்ப விருப்பமில்லாமல் உள்ளனர்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக எந்தவித விசாரணையும் இல்லாமல், குற்றச்சாட்டும் பதியாமல், வழக்கும் போடப்படாமல், உள்ளே அடைபட்டுக் கிடந்த இந்த அகதிகளுக்கு இன்று வெளிச்சம் கிடைத்துள்ளது. ஆனால் எதிர்காலம் என்னவோ இன்னும் இருள் சூழ்ந்ததாகவே உள்ளது.

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=171:----17--&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

♥ நல்லா கிழிச்சிங்கடா.......! ♥




http://www.tamiloosai.com/images/stories/LTTE/5001-8850.jpg

http://4.bp.blogspot.com/_PRWPmcFXhZY/SR3e-zTt7MI/AAAAAAAAA24/Wu6Z9o2-shg/s320/p6aew5.jpg






"பயத்தை விடு...!

இல்லை இலட்சியத்தை விட்டு விடு...!"

_தலைவன் பிரபாகரன்

http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/05/prabhakaran.jpg




http://cpmtataistfascist.files.wordpress.com/2009/01/mao-monument.jpg



போராட்டம் என்பது ஓரிருவர் சீறிப் பாய்வதல்ல,
மாறாக,
நாம் அனைவரும் சேர்ந்து ஓரடி முன் வைப்பதே!

-மாமேதை லெனின்.


http://3.bp.blogspot.com/_30QoyPHTopE/SZRNeE-g9fI/AAAAAAAAAOc/hSX-j2a05KE/s320/lenin.jpg


http://www.tamilkathir.com/uploads/images/aaivu/2009/01/02vikadan.jpg

4ல் ஒரு இந்தியர் பட்டினியால் தவிப்பு

 
இந்தியாவில் வறுமையில் வாடும் மக்கள் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பை சமீபத்தில் நவ்தான்யா டிரஸ்ட் நடத்தியது. அதில் இந்தியாவில் தினமும் சுமார் 20 கோடி பேர் பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 4ல் ஒருவர் பட்டினியால் தவிக்கிறார். பட்டினிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
 
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 5 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போதுமான உடல் எடை இல்லாமல் உள்ளனர்.
 
உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு எடை குறைவான குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மத்திய அரசு ஏழை எளிய வர்கள் நலனுக்காக பட்ஜெட் டில் 32 ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. என்றாலும் ஏழைகள் சாப்பிடும் உணவில் பலன் கிடைக்கவில்லை.
 
1991 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி ஒரு இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு தலா 186 கிலோவாக இருந்தது. 2001 ம் ஆண்டு இந்த உணவு அளவு 152 கிலோவாக குறைந்து போனது.
 
தற்போது உணவுப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் ஏழைகள் சாப்பிடும் உணவு அளவு மேலும் குறைந்துள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=13364

http://india.targetgenx.com/files/2007/10/64170.jpg


http://aruchuna.net/data/media/62/photo1.jpg

இந்த லட்சணத்துல சிங்களனுக்கு  ராணுவ உதவி வேற செஞ்சிங்களா ..நல்லா நாடாளுரிங்கடா ..

நல்லா கிழிச்சிங்கடா.......!






டி.ராஜேந்தர் வீடியோ "மூச்சுக்கு மூச்சு தமிழன் என்று சொல்லி முட்டாளாய் ஆக்கிவிட்டானே தமிழனை!"

"மூச்சுக்கு மூச்சு தமிழன் என்று சொல்லி முட்டாளாய் ஆக்கிவிட்டானே தமிழனை!"

--காணொளிhttp://www.envazhi.com/wp-content/uploads/2009/04/trajendar.jpg




http://www.youtube.com/watch?v=oVl7FnHC0O0

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!