Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, April 21, 2009

சவுக்கடி

"எனது உடலைக் கைப்பற்றி ஈழப் போராட்டத்தைக் கூர்மையாக்குங்கள்" என்று முழங்கி ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த வீரமகன் முத்துக்குமாரின் உடல் கொளத்தூர் மூலக் கொத்தளத்தில் கிடத்தப்பட்டிருந்த போது ஏற்பட்ட எழுச்சி தமிழகத்தின் தன்னெழுச்சி.

வழிநெடுகிலும் கண்ணீரும் கம்பலையுமாக மெழுகுவர்த்தியோடு அந்தத் தியாகியை வழியனுப்பிய மக்கள், இந்த எழுச்சி இத்தனை வேகத்தில் அடங்கிப்போகும் என எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

போராடிய வழக்கறிஞர்கள் மீது தாக்குதல், கல்லூரிகளுக்கு விடுமுறை என காங்கிரஸ், கருணாநிதி அரசு தொடுத்த அடக்குமுறைகளுக்கு பலியானது தமிழகம்.

ஆனால், ஈழத்துக்காக போராடிய போராடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் ஒன்றை கவனிக்கத் தவறுகிறார்கள்.

அதாவது, இந்தப் போராட்டங்களை இந்திய அரசியல் சட்டமோ அதனை நடைமுறைப்படுத்துகிற நீதிமன்றங்களோ தடுக்கவில்லை.

மாறாக இந்த ஈழத் தமிழர் எழுச்சிப் போராட்டத்திற்கு ஒருவிதமான சட்ட அங்கீகாரத்தை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தபோது, அதனை சட்டவிரோதம் என அரசு நிர்வாகத்தைக் கொண்டுதான் தமிழக முதல்வர் கருணாநிதி தடுத்தார்.

ஆனால் உச்சநீதிமன்றமோ "மக்களின் உணர்வுகளில் தலையிட முடியாது" என்று சொல்லி பணிப்புறக்கணிப்புக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. அன்றைய தமிழகம் தழுவிய பணிப்புறக்கணிப்புக்கு கிடைத்த சட்டப் பாதுகாப்பு.

அதுவே இன்று பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது என்று சொல்லிவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

இதோ இப்போது சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது செல்லாது எனச் சொல்லி அதை இரத்தும் செய்து விட்டது நீதிமன்றம். சீமான் இன்னும் இரண்டொரு நாளில் விடுதலையாகிறார்.

கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் என அனைவரின் விடுதலைக்குமே இத்தீர்ப்பு ஆதாரமான ஒன்றாக மாறியிருக்கிறது. வழக்கறிஞர்களைத் தாக்கிய வழக்கிலும் உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு சாதகமாக இல்லை.

இதெல்லாம் சட்டத்தின் நுணுக்கங்கள். ஆனாலும் ஒரு ஜனநாயக எழுச்சியை ஒடுக்க நினைக்கும் கருணாநிதி, காங்கிரஸ் கூட்டுக்கு தொடர்ந்து கிடைக்கும் சவுக்கடி.

aponnila@gmail.com


இந்திய மருத்துவர்களின் கொடூரம்


05_03_09_idp_vanni_05


புதுமத்தளான் பகுதியில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் புல்மோடையில் உள்ள இந்திய மருத்துவமணைக்கு செற்ற பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கை மற்றும் கால்கள் அனாவசியமாக அகற்றப்பட்டுள்ளதாக அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறு காயங்களுடன் காணப்பட்ட இவ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்காமல் அவர்களின் கைகள் கால்களை அகற்றிவருவதாக அங்கிருந்த மருத்துவத் தாதி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு அறியத்தந்துள்ளார்.

சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய காயங்களாக இருந்தாலும் மாறாக இந்திய மருத்துவர்கள் அதனை விடுத்து அவையங்களை அகற்றி வருவதாகவும் தெரிவித்த அவர், இதில் ஆளமான உள் நோக்கம் இருப்பதாக தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறு நடைபெறுவதாக கூறப்படுகிறது. சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வரும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கே இவ்வாறு அவையங்கள் அகற்றப்படுவதாக அறியப்படுகிறது.

இதில் கொடுமையான விடையம் என்ன எனில் தமிழ் மக்களை கொன்றொளிப்பதை ஒரு புறம் இலங்கை அரசு மேற்கொள்ள, தமிழர்களை முடமாக்கி அவர்களை மீண்டும் போராட்டத்தில் இணைவதை திட்டமிட்ட வகையில் இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொள்கிறது.

புனிதமான வைத்திய தொழிலை அவமதித்து உயிர்காக்க வேண்டிய மருத்துவர்களே இவ்வாறு செயல்படுவது இந்திய அரசின் தமிழர் விரோதப்போக்கை நன்றாக உணர்த்தி நிற்கிறது.

 

http://www.paristamil.com/tamilnews/?p=1718

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!