Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, May 29, 2009

வானிலிருந்து மண்ணில் ஒரு நரகம்...! வீடியோ படம்

வானிலிருந்து பார்க்கும் சவக்காலை--ரைம்ஸ் ஒன் லைன் காணொளி விளக்கம்



http://www.youtube.com/watch?v=vx1dd0tZQGg




போர்க்குற்றங்களுக்குரிய விசாரணைக்கான அழைப்புகளைப் புறக்கணித்து விடுதலைப் புலிகள் மேலான வெற்றிக்காக சிறிலங்காவைப் பாராட்டவைத்த மனித உரிமைகள் மன்றத்தின் வாக்கானது அவமானத்துக்குரியது என பிரித்தானியா

ரைம்ஸ் ஒன் லைன் பத்திரிகையின் மைக்கேல் பைனியன் தெரிவித்துள்ளார்.

இதுவானது, எங்கே தமது நடத்தைகளுக்கும் பலத்த விசாரணை வந்துவிடுமோ என்று பயப்படும் உள்நாட்டு கிளர்ச்சிக்காரர்களை முகம்காணும் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த

வெற்றயென்றும், ஒரு வெற்றியை அடைவதற்கு கிடைக்கக்கூடிய எல்லாவிதமான உபாயங்களையும் பாவிப்பதற்கு முழு ஆதரவையும் கொடுக்கிறது என்றும், மற்றும் சிறிலங்காவின் விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களுக்குச் செய்யபட்ட பயங்கரமான நம்பிக்கைத் துரோகம் என்றும் மேலும் ரைம்ஸ் இன்று தெரிவித்துள்ளது.



சிறிலங்காவில் பலத்த போர்க்குற்றங்கள் நடந்திருக்கக்கூடும் என்று கருதி அவற்றை விசாரிக்க ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 47 அங்கத்துவ நாடுகளில் உள்ள ஐரோப்பிய அங்கத்துவர்கள் ஒரு அவசர கூட்டம் ஒன்றைக் கோரியிருந்தார்கள். ஆனால், இதற்கு பதிலாக மனித உரிமைகள் மன்றமோ சிறிலங்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை விவாதித்துள்ளார்கள்.

இத்தீர்மானம், மக்கள்மீது நடாத்திய தாக்குதல்களைப் பற்றியோ, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் செல்ல வேண்டிய அவசர தேவைகளைப் பற்றியோ சிறிதும் குறிப்பிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலாவதாகவும் முக்கியமானதாகவும் வைக்கப்பட்ட ஒரு தேர்வில் ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் தோல்வியடைந்துள்ளது என்றே பல மேற்குலக விமர்சகர்கள் கருதிகிறார்கள். கடினமாக விமர்சிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான ஐ.நா. உரிமைக் குழுவுக்கு பிரதியூடாக 3 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டதே

இப்போதுள்ள மனித உரிமைகள் மன்றம் என ரைம்ஸ் செய்தி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய குழுவானது ஒரு பலம்குன்றிய அமைப்பாகவே பார்க்கப்பட்டது. தமது மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பாக வெளியுலகத்தின் விசாரணைகளுக்கு ஆர்வப்படாத பெரும்பான்மையான அங்கத்துவரின் வாக்குகளை வைத்தே எப்போதும் அந்தக்குழு முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

புதிய மன்றமானது, ஒரு புதிய நுட்பத்தை கொண்டு வந்தது. அதன்படி சகல 192 அங்கத்துவ நாடுகளினது மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகளும் கணிக்கப்படும்.

ஆனால், சிறிலங்கா மீதான வாக்கானது, மனித உரிமைகள் மன்றத்துக்கு எதிரான விமர்சனத்தை மீண்டும் பலப்படுத்தியுள்ளது, என ரைம்ஸ் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.


♥ "காலத்தின் கேவலமான கோலம்" - தினமணி செய்தி ♥

"ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை": 'தினமணி' குற்றச்சாட்டு


"ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை" என தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பஞ்சாப் பற்றி எரிகிறதே, அங்கே மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குகிறதா? சமீபத்தில் பஞ்சாபில் நடக்கும் கலவரங்களைக் கேள்விப்பட்ட பலருடைய எண்ண ஓட்டமும் இதுவாகத்தான் இருக்கிறது.

பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டிய கதையாக, எங்கோ ஐரோப்பாவில் உள்ள வியன்னாவில் நடந்த சம்பவம், இங்கே பஞ்சாபில் வன்முறையைக் கிளப்பியிருக்கிறதே, அது ஏன்? இந்தப் பிரச்னையின் பின்னணி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஜாதியத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்து சமுதாயத்தின்மீது ஏற்பட்ட அதிருப்தியால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில் ஒன்றுதான் சீக்கிய மதம்.

மனிதனை மனிதன் ஏற்றத்தாழ்வு கூறி பாகுபடுத்துவதை எதிர்த்து அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் முன் சரிசமம் என்பதையும், எங்கும் நிறைந்த அந்தப் பரம்பொருளுக்கு உருவமில்லை என்பதையும் நிலைநாட்டும் விதத்தில் குருநானக்கால் உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தின் அடிப்படை, ஆதாரம் எல்லாமே குருகிரந்த சாஹிப் என்கிற அவர்களது வேதம் மட்டுமே.

ஜாதியத்தின் தடைகளை உடைத்தெறிய மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் எப்படி வேறு சில மதங்களில் பழைய ஜாதிய கண்ணோட்டத்துடன் நடத்தப்படுகிறார்களோ அதே அனுபவம்தான் சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சந்த் ரவிதாஸ் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரலை உயர்த்தியவர். இவரது பல உபதேசங்கள் குருகிரந்த சாஹிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

உயர் ஜாதி சீக்கியர்கள் சந்த் ரவிதாஸ் குருநானக்கின் சீடராகக் கருதுகிறார்கள். ஆனால் ரவிதாஸின் சீடர்களோ அவரையே குருவாகக் கருதுகிறார்கள்.

1920-ல் மங்குராம் என்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஜாதி சீக்கியருக்கு எதிராக ரவிதாஸரை முன்னிறுத்தி ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நில உடைமையாளர்களாவது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது.

மங்குராமைத் தொடர்ந்து பல தாழ்த்தப்பட்ட சமுதாய இயக்கங்கள் தோன்றிவிட்டன. சச்கண்ட் என்று அழைக்கப்படும் இந்த இயக்கங்கள் தாழ்த்தப்பட்டவர்களை இணைப்பது மட்டுமல்லாமல், சீக்கிய மதத்திலேயே ஒரு தனி அமைப்பாகவும் கலந்துவிட்டிருக்கின்றன. சீக்கிய மதத்திலும் தேராசச்சாசௌதா, தேராசச்கண்ட் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.

ஜாதி சீக்கியர்களின் சபையாக இருப்பது எஸ்.ஜி.பி.சி. எனப்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி. இதுதான் எல்லா சீக்கிய குருத்வாராக்களையும் இணைத்து மேலாண்மை செலுத்தும் அமைப்பு.

அமிருதசரஸ் பொற்கோவிலில் தான் இதன் தலைமையகம். ஏறத்தாழ, வாட்டிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்றது இது எனலாம். இதில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் ஆங்காங்கே செயல்படுகின்றன.

அநேகமாக பஞ்சாபிலுள்ள எல்லா ஊர்களிலும் எஸ்.ஜி.பி.சி.யின் குருத்வாராவும் தாழ்த்தப்பட்டவர்களின் குருத்வாராவும் காணப்படுகின்றன.

இப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் ஜாதி சீக்கியர்களைப்போலவே வசதி பெற்றவர்களாகிவிட்டனர். உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றனர். இவர்களது வளர்ச்சி தங்களுக்குச் சவாலாக அமையும் என்று கருதுகிறது எஸ்.ஜி.பி.சி. காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் துணையுடன் இந்தத் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் மீது ஜாதி சீக்கியர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதுதான் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஞானி ஜெயில்சிங் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர் எவரும் அரசியல் முக்கியத்துவம் பெறவில்லை.

சமீபகாலமாக காங்கிரஸ் தனது அரசியல் எதிரியான அகாலிதளத்தை வீழ்த்த இந்த தேரா அமைப்புகளைத் தூண்டி விடுகிறது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆளும் அகாலிதளத்தின் ஆதரவுடன் எஸ்.ஜி.பி.சி. இந்தத் தேரா அமைப்புகளை ஒடுக்க நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இத்தனை நாளும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த ஜாதிப் பிரச்னை இப்போது எரிமலையாக வெடித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவு எளிதாக இந்த எரிமலை அடங்கிவிடாது. அரசியல் கட்சிகள் அடங்க அனுமதிக்கவும் மாட்டார்கள்.

எங்கோ வியன்னாவில் தேராசச்கண்ட் தலைவர் நிரஞ்ஜன்தாஸ் கொலை செய்ய காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. பிரதமர் பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 கிலோ மீற்றர் தூரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி அனாதைகளாய், சொந்த மண்ணில் அகதிகளாய் அல்லல்படுகிறார்கள். கேட்க நாதியில்லை. நமக்கும் கவலையில்லை; இது காலத்தின் கேவலமான கோலமல்லவா?" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


♥ "இந்தியாவுக்காகப் போரிட்டோம்: ராஜபக்சே - தினமணி செய்தி ♥

இந்தியாவுக்காகப் போரிட்டோம்: ராஜபக்சே





கொழும்பு, மே 29: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான் என இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு உள்நாட்டு அரசியல் நிலைமைக்கு ஏற்ப தீர்வு காணப்படும் என்கிறார் அவர்.

"தி வீக்' என்ற ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"இனப் பிரச்னைக்கு இலங்கை நிலைமைக்கு ஏற்ப, அரசியல் தீர்வு காணப்படும். இந்திய-இலங்கை ஒப்பந்தம் காரணமாகத்தான் இலங்கை அரசியல் சட்டத்துக்கு 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டு அதிகாரப்பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்திய நிலைக்கும் ஏற்ப புதிய தீர்வு காணப்படும். இலங்கையின் அனைத்து தரப்பினரின் யோசனைகளும், அச்சங்களும் அப்போது கருத்தில் கொள்ளப்படும்.

இந்தியாவுக்காக போரிட்டோம்:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான். 18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.

பயங்கரவாதத்துக்கு எதிராக தெற்காசிய நாடுகள் மேற்கொள்ள வேண்டிய போரை நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம். விடுதலைப் புலிகளை நாங்கள் கொன்றுவிட்டதால் இந்திய அரசு அதற்காகப் போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.


இந்தியாவுக்கு நன்றி:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி. மற்றெல்லாவற்றையும்விட இந்தியா என்ன நினைக்கிறது என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம். இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தோம்.


புலிகளுக்கு எதிராக என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியும் ஒரே சமயத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சிகள் தோற்றுவிட்டன; எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.


புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபட்ச.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=66724&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=





♥ "கொரில்லா போருக்கு விடுதலைப்புலிகள் திட்டம் பரபரப்பு தகவல்- மாலைமலர் செய்தி ♥







http://epaper.mmnews.in/2952009/showtext.aspx?parentid=4821&boxid=14496296

♥ "பிரபாகரன் வேடத்துக்கு நடிகர் தேர்வு - மாலைமலர் செய்தி ♥



♥ "எங்கள் உதவியால்தான் விடுதலைப்புலிகளை இலங்கை வென்றது: பாகிஸ்தான்"- மாலைமலர் செய்தி ♥


எங்கள் உதவியால்தான் விடுதலைப்புலிகளை இலங்கை வென்றது: பாகிஸ்தான் சொல்கிறது

LTTE%20fighters%20-%201.jpg


இஸ்லாமாபாத், மே. 29-
விடுதலைப்புலிகளுடன் போர் நடத்த இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவின.
இந்த நிலையில் பாகிஸ்தான் உதவியால்தான் இலங்கை ராணுவத்தால் விடுதலைப்புலிகளை வெல்ல முடிந்தது என்று பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
2008-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா பாகிஸ்தான் சென்று அந்த நாட்டு தளபதி பர்வீஸ் கயானியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கை போருக்கு பல்வேறு உதவிகளை அவர் கேட்டார். அதன்படி ஏராளமான உதவிகளை பாகிஸ்தான் ராணுவம் செய்தது.

பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதிகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்தது.

இந்த உதவிக்கு பிறகு தான் இலங்கை ராணுவம் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததாகவும் அந்த ராணுவ அதிகாரி கூறி யுள்ளார்.



http://www.maalaimalar.com/2009/05/29154352/CNI0430290509.html
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!