Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, April 17, 2009

அக்காக்களை அதிகம் நேசிப்பவர்கள் மட்டும்

அக்காக்களை அதிகம் நேசிப்பவர்கள்
தம்பிகள் மட்டுமே!
அக்காவின் ஆழ்மன உணர்ச்சிகள்
தம்பிகளுக்கு மட்டுமே
அதிகம் தெரிந்திருக்கிறது

அண்ணாக்களைப்போல அதிகாரம்
செய்வதில்லை அக்காக்கள்
என்பதாலேயே இழைந்து
நேசிக்கும் தம்பிகளை
அக்காக்கள் ஒருபோதும்
வெறுப்பதில்லை

கல்லாமண்ணா
ரைட்டா தப்பா
ஒருகுடம் தண்ணி ஊத்தி
ஒருபூ  பூத்தது
தாயம், அஞ்சுகல்லு ஆட்டம்
பல்லாங்குழிச்சோழி

ஊஞ்சல் ஓட்டம்
உல்லாசக்கண்ணாமூச்சி

அக்காக்களின் பிரத்தியேக விளையாட்டுகளை
ஆதரிப்பது தம்பிகளே!

 


கோயிலுக்குக்கூடவந்து
சிதறத்தேங்காய் உடைத்து'
சிரித்துப்பெருமையுடன் நிற்கும்
சின்னத்தம்பிகளை நினைத்தாலே
சிலிர்க்கிறது அக்காக்களுக்கு

பட்டுப்பூச்சிகளைத்
தொட்டுப்பிடித்து
மெல்லத்தலைசீவி
வண்ணச்சிறகுகளை
வலிக்காமல் வருடுவதுபோல
வளர்க்கிறார்கள் தம்பிகளை
அன்பான அக்காக்கள்

தங்கள் கனவுகளையும்'ஆசைகளையும்
சேமித்துக்காப்பாற்றும் தம்பிகளை
அக்காக்கள் மறப்பதில்லை


அக்காக்களின் கனவுகளுக்கு
விடிந்தபின்னும் தம்பிகள் மட்டுமே
விளக்கம் சொல்லுவார்கள்

அரைநிஜார் அணிந்த தம்பிகள்
அர்த்தராத்திரியில் கிற்றுக்கொட்டாய்
சினிமாபார்த்துத்திரும்புகையில்
சிங்கம்போல வழித்துணையாய்நடந்துவர
அங்கமேபூரித்துப்போகும்
அக்காக்கள் பலருக்கு!


மத்தாப்புச்சூடுகண்ட தம்பியின்விரல்நுனியும்
முதல்முத்தம்வாங்கிய பாண்டியாட்டச்சில்லும்
மயிலிறகைமறைத்துவைத்த கணக்குப்புத்தகமும்
வண்ணத்துப்பூச்சியைப்பிடித்து,
வால்பையன்களோடுசேர்ந்து
வத்திப்பெட்டியில் அடைத்தநிகழ்வும்
தாவணி அணிந்த முதல்நாளும்
தம்பிகளோடு கூடிக்களித்த நேரங்களும்
அக்காக்களின் அன்றாட வாழ்வில்
அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்!
 

ஒரு ரவுடியின் கதை

http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_8122980595.jpg http://www.indiadaily.org/images/m-k-azhagiri66_26.jpg


வணக்கம் நண்பர்களே.. தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது.. அண்ணன் அழகிரி தேர்தல் களம் காண்கிறார். அவரை பற்றி வலை நண்பர் ஒருவர் தந்த செய்தி. விறுவிறுப்பான நாவலுக்கு ஒப்பானது.. படிங்கள் .....

யார் இந்த அழகிரி ?


கோவில்களில் தேவதாசி முறை ஒழிக்கப் பட்ட பின் வந்த தலைமுறையினர் பிற ஜாதியினரைப் போல சாதாரணமான குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி, அடுத்த தலைமுறையினர் படித்து முன்னேறி இன்று சமூகத்தில் உயர் நிலைக்கு சென்று விட்டனர். இந்த ஜாதியினரின் முன்னேற்றத்தில் இதே ஜாதியில் இருந்து வந்த கருணாநிதியின் பங்கு முக்கியமானது.. அவர்கள் அனைவருக்கும் அவர் தெய்வம் போல. இன்று இந்த ஜாதியில் யாரும் தாசிகளாகவோ விலைமகளிராகவோ மாறுவது இல்லை. பெரிய சமூக சீர்திருத்தம் நடந்து விட்டது அவர்கள் இனத்தில் இருந்தாலும் அவர்கள் ஜாதியையைப் பற்றித் தெரிந்தவர்கள் அவர்களை மிகவும் கேவலமாக அழைக்கும், தாழ்வாக ஏளனம் செய்யும் நிலமை இன்றும் இருந்து வருகிறது. தமிழ் நாட்டின் முக்கியமான இரண்டு தலைவர்களான அண்ணா என்ற துரைசாமியும், கருணாநிதி என்ற தட்சிணா மூர்த்தியும் இந்த ஜாதியில் இருந்து வந்தது அவர்கள் பெரும் அளவில் முன்னேற வசதியாக இருந்தது, ஈ வெ ரா கூட இந்த இருவரையும் மோசமான வார்த்தைகளில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார். அண்ணாத் துரை ஐயங்காருக்குப் பிறந்தவர் என்பார்கள். இந்த ஜாதியில் இன்று பெரும்பாலோர் படித்து ஐ ஏ எஸ், ஐ பி எஸ், டாக்டர், இஞ்சினீயர் என்று முன்னேறி விட்டனர். கருணாநிதி அவர்களை மிகவும் பின் தங்கிய பட்டியலில் சேர்த்தது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
இன்று பலரும் முன்னேறி விட்டாலும் வெளியில் தங்கள் ஜாதியைப் பொதுவாக பிள்ளைமார்கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ஏளனத்துக்கு அஞ்சி தன் சொந்த ஜாதியையயச் சொல்லத் தயங்குவார்கள். தலித்களின் நிலமையய விட இவர்களின் நிலமைக்காக நான் பெரிதும் பரிதாபப் பட்டிருக்கிறேன், அவமானத்தைச் சிலுவையாக சுமக்க நேரிட்டவர்கள்.
இது போன்ற சமுதாயத்தில் மிக இகழ்வாகக் கருதப் பட்ட ஒரு பின்புலத்தில் இருந்து வந்த கருணாநிதிக்கு பல்வேறு தந்திரங்களும், திறமைகளும்,சூழ்ச்சிகளும் தானாகவே கை வந்த கலையாய் வந்து சேர்ந்தன. ஒரு மோசமான சமூகச் சூழ்நிலையில் பிறந்து ஆதிக்க ஜாதி பின்புலன்கள் இல்லாத கருணாநிதியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாகும். ப்ரூஃ ரீடர், சினிமாக் கம்பெனி எடுபிடி, வசனகர்த்தா, அரசியல் மேடைப் பேச்சாளர் என்று பல்வேறு வேலைகள் பார்த்து தி மு க வின் முக்கியமான நபர்களில் ஒருவராக மிகவும் தந்திரமும், குள்ளநரித்தனமும், அனைத்துக் கீழ்த்தர குணங்களும் நிரம்பிய ஒரு அபாயகரமான அரசியல்வாதியாக கருணாநிதி உருவெடுத்து தி மு க வின் பிற சீனியர் தலைவர்களைப் புறம் தள்ளி, தந்திரமாகத் தலைவர் பதவியைப் பிடித்து இன்று 50 வருடங்களாகின்றன.
இந்தக் கருணாநிதிக்கு மூன்று மனைவிகள் (வைத்துக் கொண்டவை கணக்கில் இல்லை) முதல் மனைவி பிரபலப் பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி. அந்த மனைவிக்குப் பிறந்தவர் மு க முத்து. இவரைத் தான் தன் வாரிசாகக் கொண்டு வரவேண்டும் என்று ஆரம்பக் காலத்திலேயே கணக்குப் போட்டுக் காய் நகர்த்தினார் கருணாநிதி. நல்ல முகவெட்டும், குரல் வளமும் இருந்த முத்துவை அன்று தி மு க வின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எம் ஜி யாருக்குப் போட்டியாகக் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி குள்ளநரித்தனமாகப் போட்ட தப்புக் கணக்கு அவருக்கு பெருத்த அடியாக விழுந்தது. மு க முத்துவும் எம் ஜி யார் பாணியிலேயே நடிக்க ஆரம்பித்தார். சமையல்காரன், வெள்ளிக் கிழமை, சொந்தக்காரன் போன்ற பல படங்களில் நடித்த மு க முத்துவின் திட்டமிடப் பட்ட வளர்ச்சி எம் ஜி ஆருக்கு பலத்த ஆத்திரத்தை வரவழைத்து கட்சியில் இருந்து வெளியேற வைத்தது அடுத்த 12 வருடங்களுக்கு கருணாநிதியின் அஸ்தமனத்துக்கு வழிவகுத்தது. எம் ஜி யார் சாகும் வரை கருணாநிதி தலை தூக்க முடியவில்லை. எம் ஜி யாருக்குப் போட்டியாக உருவாக்கிய கருணாநிதியின் மகன் போதைக்கு அடிமையாகி மீள முடியாத குடிகாரனாகி கருணாநிதியாலேயே புறக்கணிக்கப் பட்டு அநாதையாக மாறிப் போனார். பிற்காலத்தில் ஜெயலலிதா கருணாநிதியை அவமானப் படுத்த முத்துவுக்கு 5 லட்சம் நிதியுதவி அளித்தார். முத்து நடைப்பிணமாகிப் போக கருணாநிதியின் ஒரு கனவு சிதைந்தது. பின்னர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளின் மீது தன் கனவை மீண்டும் எழுப்பத் தொடங்கினார். மூன்றாவதாக சேர்த்துக் கொண்ட துணைவிக்கு ஒரு மகள். இரண்டாவது மனைவிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் என்று நினைக்கிறேன். யாரும் கருணாநிதி அளவுக்கு பிரகாசிக்கவில்லையெனினும், நம்பிக்கை இழக்காமல் தன் சாம்ராஜ்யத்தைத் தொடர இருக்கும் வாரிசுகளையே நம்ப ஆரம்பித்தார். அதில் தமிழரசு என்ற மகன் வங்கி வேலைக்குச் சென்று ஆரவாரத்தில் இருந்து ஒதுங்கி விட அரசியலில் ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்த ஸ்டாலினை மட்டும் தொடர்ந்து தன் வாரிசாக வளர்க்க ஆரம்பித்தார்.. ஸ்டாலின் அரசியல் வாரிசாக வளர்த்து விட்டதால் அழகிரி என்ற மகனுக்கு ஒரு வியாபாரத்தை அமைத்துக் கொடுத்து மதுரையில் கொண்டு போய் செட்டில் பண்ணினார்.
மதுரை திருநகரில் கோவிந்த சாமித் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்தப் பட்டார் இந்த அழகிரி. இவரது மனைவி மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த ஒரு தலித். மதுரை பஸ்ஸ்டாண்டில் ஒரு வீடீயோ, காசெட் கடையும், ஒரு டி வி விற்பனை ஏஜென்சியும் இந்த அழகிரிக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டது. ஒரு ஸ்கூட்டரில் திருநகரில் இருந்து கிளம்பி கடையில் போய் கடைக்கு வெளியே நின்று தம் அடித்துக் கொண்டிருப்பார். அவரை ஒரு சிலருக்கே கருணாநிதியின் மகன் என்று தெரியும். அவ்வளவு பிரபலம் கிடையாது. தெருக்காரர்கள் யாரும் பேசிப் பழகி பார்த்ததில்லை. எப்பொழுதாவது கருணாநிதி நீளமான காரில் வந்து போவார். அழகிரி அப்பா மாதிரியே காலுக்கு வெள்ளைக் கலர் செருப்புப் போட்டுக் கொள்வார். கார் கூட கிடையாது. அப்பொழுது மதுரையில் நெல்பேட்டை சீனி, பழக்கடைப் பாண்டி, மதுரை முத்து, என்று பல திராவிடக் கட்சிகள் ரவுடிகள் தங்கள் சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தனர். அதனால் புதிதாக ஒரு ரவுடி பெரிய அளவில் உருவாக வாய்ப்பு இருக்க வில்லை. மேலும் பழனிவேல்ராஜன் போன்ற ஜமீந்தார்கள் தி மு க வின் செல்வாக்கான நபர்களாக இருந்தமையாலும், லோக்கல் ஜாதியான தேவர்கள் இனத்தில் இருந்து வராததாலும் 90 வரை அழகிரி என்பவர் அடையாளமில்லாத சாதாரண ஒரு காசெட் கடை உரிமையாளராக மட்டுமே இருந்தார். 90ல் மீண்டும் கருணாநிதி ஆட்சியைப் பிடித்ததில் இருந்துதான் அழகிரியின் அசுர வளர்ச்சி ஆரம்பித்தது. கருனாநிதி அரசு கலைக்கப் பட்ட பொழுது இவர் தென் தமிழ் நாட்டின் முடிசூடா மன்னராக ஆட்சி செலுத்த ஆரம்பித்தார். தனது வீட்டையும் வாடகை வீட்டில் இருந்து மதுரை டி வி எஸ் நகரினில் உள்ள சத்தியசாய் நகர் பகுதிக்கு மாற்றிக் கொண்டார். எதிர் வீடு தினமலர் ஆசிரியர் லஷ்மிபதியின் வீடு. தினமலர் காரருக்குச் சனி பிடித்தது. மதுரையில் மெதுவாக ரவுடிகளின் தலமை அழகிரியிடம் இடம் பெயர்ந்தது. பழனிவேல் ராஜன் என்ற அரிஸ்டோகிராட் அரசியல்வாதி முதல் பழக்கடைப் பாண்டி போன்ற தேவர் இனத்து ஆட்களின் முக்கியத்துவம் குறைந்தது. அழகிரி ஒரு அதிகார மையமாக உருவெடுக்க ஆரம்பித்தார். கலெக்டர், கமிஷனர், எஸ் பி, எல்லோரும் அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடக்க ஆரம்பித்தனர். வரிசை வரிசையாக அழகிரியிடம் சிபாரிசுக்காகவும், பதவிகளுக்காகவும் படையெடுக்க ஆரம்பித்தனர். அழகிரியின் பிறந்த நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டன. அமைதியாக இருந்த டி வி எஸ் நகர்/சத்யசாய் நகர் பரபரப்பான அதிகார மையமாக மாறியது. அழகிரியின் பிறந்த் நாட்களின் பொழுதும், திருமண நாளின் பொழுதும், அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தங்கள் கப்பத்தைக் கட்டி விட்டுச் சென்றார்கள். கோடிக்கணக்கான பணம் புரள ஆரம்பித்தது. அழகிரியின் பெண் பெரிய பெண் ஆனது வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது, பல கோடிகள் வசூலாகியது. அடுத்த அடுத்த ஜெயலலிதா ஆட்சிகளின் போது அழகிரி சற்று அடங்கினாலும் அவரது செல்வாக்கு என்றும் அடங்கவேயில்லை. அவரது சாம்ராஜ்யம் பெரிதாக விரிந்தது, தனக்கென்று ஒரு லாயல் சர்க்கிள் உருவாக்கி தனக்கு ஒரு எம் எல் ஏ கோஷ்டியை உருவாக்கி வைத்துள்ளார். இன்றும் அவர் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்க்கலாம். இப்படி 89 வரை ஸ்கூட்டரில் பயணித்த ஒரு சாதாரண உதாவக்கரை பையன் இன்று பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி. பண பலம் ,அதிகார பலம், அதிகாரிகள் காலில் விழுந்து வணங்குகிறார்கள். ஜெயலலிதா ஏதோ ஒரு காரணத்தினால் வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அழகிரியை அடிக்காமல் விட்டு வைத்தார். இன்று மதுரையில் அழகிரி வைத்ததுதான் சட்டம், மதுரர முழுக்க ரியல் எஸ்டேட்டுகள் வளளத்துப் போட்டுள்ளார். ஏராளமான பினாமிகள். எதிர்க்கத் துணிந்த பலரும் கடுமையாகத் தாக்கப் பட்டனர். அவரது அதிகார மையத்தை தன் ஜாதி பின்புலம் கொண்டு எதிர் கொள்ள நினைத்த தா கிருஷ்ணன் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டார். தேவர் ஜாதி வீரம் , பெருமை வெட்டிப் பெருமை என்பது நிரூபிக்கப் பட்டது. அழகிரியின் கை மேலும் பலப் பட்டது. இன்று தமிழ் நாட்டை ஆட்டுவிக்கும் முக்கியமான அரசியல் சக்திகளில் ஒருவர் அழகிரி. ஒரு உதவாக்கரை மகனில் இருந்து தந்திரமும், ரவுடித்தனமும், கொலைவெறியும், பண வெறியும் நிரம்பிய ஒரு கருணாநிதியின் பல அம்சங்களைக் கொண்ட ஒரு வாரிசாக உருவாகியுள்ளார். இவரது மகன் துரை தயாநிதி மதுரையின் மத்தியில் மாபெரும் ஐ டி பார்க்கை தயா ஐ டி பார்க் என்ற பெயரில் கட்டி முடித்து விட்டார். இவரும் ஒரு சினிமா கம்பெனி துவங்கியுள்ளார். தமிழ் நாட்டில் புதுப் படங்கள் அனைத்தும் இவர்களுக்குத்தான் விநியோக உரிமை இவர்கள் சொல்லும் காசுக்குக் கொடுக்க வேண்டும் கொடுக்கா விட்டால் படத்தை தியேட்டரில் வர விட மாட்டார்கள். கம்பெர்னியின் பெயர் ரெட் சன் என்றோ என்னமோ அழகிய தமிழில் வைக்கப் பட்டுள்ளது. அழகிரியின் மகளை அரசியலில் அடுத்த தலைமுறை வாரிசாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார். வார்த்தை மாதிரியான பத்திரிகைகளில் கூடிய விரைவிலேயே அவரது நூறு பக்க நூதன பேட்டி வரலாம் படிக்கத் தவறாதீர்கள். இன்னொரு பெண் காதல் திருமணம் செய்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் பறந்து கொண்டிருக்கிறார். மனைவி காந்திக்கு மதுரையில் மாபெரும் ஜவுளிக் கடை, திருமண மண்டபம் எல்லாம் இருக்கிறது. வாரன் பஃபெட்டை விட இவர்களது சொத்து மதிப்பு அதிகம் இருக்கக் கூடும் என்று அதிகாரபூர்வமான கணக்குச் சொல்லுகிறது.
அந்தக் காலத்தில் வாரிசுகளுக்குள் நடந்த போர்களையும், கொலைகளையும் படித்துள்ளோம் வரலாற்றில். தமிழ் நாடு என்றும் மாறவேயில்லல. வரலாறு மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது. சமுதாயத்தால் பழிவாங்கப் பட்ட தாசி குலம் இன்று சமுதாயத்தைப் பழிவாங்குகிறது. கருணாநிதியின் அரஜாகங்களையும் அட்டூழியங்களையும் விட அவரது வாரிசுகளின் அட்டூழியங்கள் இன்னும் உக்கிரமமாக இருக்கப் போகின்றன. இதில் இருந்து எல்லாம் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் நாடு விட்டு விடுதலையாகி வருமா ? அழகிரி இன்று தி மு க வில் அசைக்க முடியாத சக்தி. அழகிரி, மாறன் குடும்பம் எல்லோரையும் அனுசரித்துதான் கருணாநிதியும் ஸ்டாலினும் பிழைப்பு நடத்த முடியும். இவர்களது ரவுடித்தனங்களும் , கொள்ளைகளும் மக்களை மெதுவாக விஜயகாந்த் பக்கம் தள்ளி விடும். அது தனிக் கதை. மொத்தத்தில் நம் தலையெழுத்து சரியாக இல்லை. ரவுடிகளின், அயோக்கியர்களின், அழகிரிகளின், ஸ்டாலின்களின், மாறன்களின் தயவில்தான் தமிழக மக்கள் உயிர் வாழ வேண்டிய கேவலமான சூழ்நிலையில்தான் இன்றைய தமிழகம் சிக்கியுள்ளது. இதிலிருந்து மீள்வது மிக மிக கடினம். அழகிரி போன்ற ஆட்களும், மாறன் போன்றவர்களுமே நம் தலைமுறைக்கு முன்மாதிரியாகி விட்ட கேவலமான கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.





இவன்தான் தலைவன்....!






வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம்

வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை யில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் ஏற்பட்ட போது தானே எழுந்து சென்று எவர்சில்வர் குவளையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இவையெல் லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால் போர்க் கள வெற்றிகளும், உலகத் தமிழரின் உள்ளங்களில் உயர்ந்து நின்ற தகைமையும், தன் கீழ் பல படையணிகள் -என ஆர்ப்பாட்டம் காட்டுவதற்கு அனைத்துமிருந்தும் அவர் இயல்பாயிருந்தார் என்பது மிகவும் பிடித்திருந்தது.

மிகவும் நகைச்சுவையான மனிதர்கூட 60 நிமிடம் பேசினால் 50 நிமிடம் கலகலப்பாக நகைச்சுவை ததும்பிடப் பேசும் ஆற்றல் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். அத்தகையோரை நமக்கு மனதாரப் பிடித்துவிடும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அப்படியொரு கதையாடி. தமிழ் சினிமா பற்றி பேச்சு வந்தபோது, ""எங்கட போராளிகளுக்கு ஹாலிவுட் சினிமா காட்டுவோம். ஆனா அந்த வெள்ளைக்கார பெட்டையளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ்ல தமிழ் உடுப்பு போட்டு விடுவோம்'' என்றார்.

பல்கலைக்கழகம் சென்று படிக்காத அவர், தன் முயற்சியால் ஆங்கிலம் படித்திருக்கிறார். நான் அவரை சந்தித்த காலத்தில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட புத்தகங்களைப் பற்றி தன் உரையாடலில் மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. புத்தகங்களெல்லாம் படிக்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?' என்று கேட்டேன். வேலை களையெல்லாம் எல்லோருக்கு மாய் பகிர்ந்து கொடுத்துவிட் டேன். எனக்கு பெரிய வேலை, காயம்பட்டு நிரந்தரமாய் படுக்கை யிலாகிவிட்ட போராளிகளை அவ்வப் போது பார்த்துக் கொள்வதும் புத்தகங்கள் படிப்பதும்தான்'' என்றார். என்னால் நம்ப முடியவில்லை. தலைசிறந்த நிர்வாகி தானே மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் செய்து களைத்துப் போகிறவனல்ல. தகுதியானவர் களை அடையாளம் கண்டு -வள்ளுவர் சொன்னது போல் - "இதனை இதனால் இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடும் ஒப்பிலா நிர்வாகியாய் அவரை நான் கண்டேன்'. உண்மையில் ""தலைவன் என்கிறவன் இலட்சியத்தை மேலாண்மை செய்கிறவன், தினசரி வேலைகளை நிர்வகிக் கிறவனல்ல'' என்ற புகழ்பெற்ற மேலாண்மை விதியை அவரிடத்தில் நிதர்சனமாய் பார்க்க முடிந்தது.

உணவு இடைவேளையின்போது பாட்டி ஒருவர் திடுமென உரிமையோடு உள்ளே வந்தார். பாதி பற்கள் போயிருந்த பாட்டி ஓய்வு பெற்ற ஆசிரியராம். சொத சொதவென வெற்றிலை பாக்கு சொதப்பிக்கொண்டே வந்தார். தலைவரிடம் வன்னி விளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். தலைவன்-மக்கள் உரையாடலாய் அவர்களின் பேச்சு இருக்கவில்லை. தாய்-மகன் போல், அக்கா-தம்பிபோல், குடும்பத்தில் ஒருவர்போல் உரிமையும், நேசங்களும் தோய்ந்த அந்த உரையாடலை இப்போது நினைக்க நெஞ்சம் நிறைந்து ஒரு வகையான ஏக்க உணர்வில் அடைக்கிறது.

உரையாடல் போக்கில் பாட்டியிடம் பிரபா கரன், "பாட்டி, உங்களிடம் எனக்கு எல்லாம் பிடிச் சிருக்கு. இந்த வெத்திலை பாக்கு பழக்கம் தவிர'' என் றார். பாட்டி பதிலெல்லாம் யோசிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த அதேபோக்கில் பொலபொல வென பொரிந்தார். ""தம்பி... இஞ்செ பாருங்கோ... உம்மகிட்டேயும் எனக்கு பல விஷயங்கள் பிடிச்சி ருக்கு. ஆனா இந்த வெத்திலெ பாக்கு விஷயத்திலெல் லாம் நீர் தலையிடறது எனக்கும் துப்புரவா பிடிக்கலெ''. ""வாழ்ந்தவர் கோடி, தாழ்ந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்?'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது. சாமான்ய மக்கள் எவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வாதிகாரியாகவோ, ஏன் போராளி இயக்கத் தலைவராகவோ கூட பார்க்கவில்லை யென்பதையும், தங்கள் தம்பியாக -அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதையும் வன்னியில் நான் சுற்றித் திரிந்த அந்நாட்களில் அறிய முடிந்தது.

புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். தலைவர் களுக்கு ரொம்பவே பிடிக்கும். வேலுப்பிள்ளை பிர பாகரன் அவர்கள் எந்த அளவுக்கு புகழ் போதைக்கு அடிமையென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை நான் நேர் கண்ட முக்கியமானவர்களில் மிகவும் நேர்மையான எளிமையோடு, தன்னுணர்வு சுயபிரக்ஞை இல்லாமல் அப்பட்டமான நேர்மை யோடு பதிலளித்த ஒரே மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான். ""தமிழீழ தேசியத் தலைவர் என்ற தகைமையை எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள்?'' என்ற எனது கேள்விக்கு அவர் தந்த பதில் காவியங்களைக் கடந்த வரலாற்றுப் பதிவாக நிற்குமென நினைக்கிறேன்.

இதோ பிரபாகரன் பேசுகிறார். ""பாருங்க ஃபாதர். இப்போ கனபேர் என்னைப்பற்றி கதை எழுதுறாங்கள். "பிரபாகரன் பிறப்பிலேயே வீரன், பதினைந்தாம் வயதிலேயே அவனுக்கு தமிழீழ கனவு பிறந்தது. பறவைகளை குறி தவறாது அவன் கொன்று வீழ்த்துவான். இப்படியெல்லாம் கதை எழுதுறாங்கள். உண்மையை சொல்லப்போனால் ஃபாதர் எனக்கு அந்த வயதில் தமிழீழமும் தெரி யாது, வடக்கு-கிழக்கும் தெரியாது. ஒண்ணும் பெரி தாகத் தெரியாது. வல்வெட்டித்துறை நூலகத்தில் நாளிதழ்களும் புத்தகங்களும் படிக்கிற மாணவர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ""தமிழ்பெண்கள் கற்பழிப்பு'', "சிங்கள காவல்துறை அப்பாவி தமிழர் மீது தாக்குதல், சித்ரவதை என்றெல்லாம் செய்திகள் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். மனம்கிடந்து தவிக்கும். எதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். ""சாகிறதுக்கு முன்னம் ரெண்டு சிங்கள ஆர்மிக்காரனையோ போலீசையோ சுட்டுப்போட்டு சாகணும்'' என்று தான் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.

எங்கள் இலட்சியம் அன்றைக்கு மிகச் சின் னது. தமிழர் படும் துன் பங்களுக்கெல்லாம் எங்க ளாலான சிறிய பதில் - ஓரிரண்டு பேரை பழி தீர்ப்பது. அப்படித் தான் புறப்பட் டோம். ஆனால் பயணமும் பாதை யும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது. தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத் தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.

"பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது' என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம்.

""இன்னும் ஒருபடி தெளிவாகச் சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தி லெல்லாம் நான் போராடவில்லை. உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டி ருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக் கிறேன்.''

அவரது பதிலை இன்று 7 ஆண்டுகளுக்குப்பின் நினைக்கிற போதும் சிந்தை சிலிர்க்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி அவர் கொண்டிருந்த யதார்த்தமான புரிதல் தெளிவுகாண வியப்புணர்வொன்று விரிகிறது. அம் மாமனிதன் இன்று களமாடி நிற்கும் முல்லைத்தீவு காடுகள் நோக்கி மனக்கண்கள் திரும்புகின்றன.


-நன்றி . நக்கீரன்-
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3072:2009-04-15-01-19-47&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54




தடை செயப்பட்ட புத்தகம் -2

சென்னை புத்தக அரங்கில் தடை செயப்பட்ட
"
பிரபாகரன்: ஒரு வாழ்க்கை" என்ற புத்தகத்தை இணையத்தில் வாங்க....

http://www.nhm.in/shop/978-81-8493-039-9.html


பிரபாகரன்: ஒரு வாழ்க்கை

Author: Chellamuthu Kuppusamy

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை

பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு அது. இன்று, தனியொரு அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் பிரபாகரன். காவல் துறை, நீதி மன்றம், தரைப்படை, கடற்படை, வான் படை என்று ஒரு தேசத்திடம் இருக்கவேண்டிய அனைத்தும் அவரிடம் உள்ளன.

பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மதிப்பீடு செய்வதற்கு முன்னால் இலங்கை இனப் பிரச்னையின் முழு வரலாறையும் புரிந்துகொள்வது அவசியம். சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இடைவிடாமல் நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்தின் ஆணி வேர் எது? யார் தொடங்கினார்கள்? ஏன்? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தத் தீ எரிந்துகொண்டிருக்கப்போகிறது? ராணுவ ரீதியாக மட்டும்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமா? யுத்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம்? தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வா? பிரபாகரனால் தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தர முடியுமா?

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்திருக்கிறது. தேடப்படும் முதன்மை குற்றவாளி, பிரபாகரன். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளன. யுத்தம் இப்போதைக்கு முடிவதாக இல்லை. இந்தச் சூழலில் விடுதலைப் புலிகளின் எதிர்காலம் என்ன? பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை.

Details
ISBN 978-81-8493-039-9
Weight 294.00 gms
Book Title Prabhakaran: Oru Vaazhkai
Pages 264
Format Printed Book
Year Published 2008
Price: Rs. 120.00


smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!