Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Monday, May 4, 2009

"நான் புலி புலிதான்!" மீண்டும் சீமான் ஆவேசப்பேச்சு

odumnathi.jpg



சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க...  -:சீமான் ஆவேசப்பேச்சு

திரைப்பட ஒளிப்பதிவாளர்  கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், கேமரா கவிஞர் பாலுமகேந்திர முதல் பிரதியை வெளியிட, தமிழ்க் குலம் தழைக்க தன்னையே எரித்துக் கொண்ட தியாகச் சுடர் முத்துக் குமரனின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.


''இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை... ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது.


காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே... யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல... என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்... புலிகள்தான்!

கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது.

பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அனுப்பியுள்ளார்கள். இத்தாலி சோனியாவை பாரதத்தின் அன்னை என்று அழைக்கும்போது, என் சொந்த ரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன்.

சர்வாதிகாரி, சகோதரயுத்தம் செய்தவன், பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறான், தன் புகழை வளர்க்க சண்டை போடுகிறான்.... இப்படி அவரைப் பற்றி எத்தனை அவதூறுகள்... பொய் பழிகள். ஆனால் அத்தனையையும் பிரபாகரன் எனும் பெரு நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிடும் என்பதை இவர்களுக்கு காலம் புரியவைக்கும். 

நான் உணர்ச்சிவசப்படுவதாகக் கூறினார்கள். எனக்கு உணர்ச்சி இருக்கு, வசப்பட்டு பேசறேன். பிரபாகரன் நாடு  கேட்டது அவருக்காகவா... உனக்கும் எனக்கும்... இந்த ஒட்டுமொத்த தமிழினத்துக்குமல்லவா... இறையாண்மை பற்றிப் பேசுகிறோமே... தவிச்ச வாய்க்கு பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணி தருகிறானா இந்த நாட்டிலே... எங்கே இருக்கிறது உனக்கான உரிமை?

தமிழகக் கடலில் மீன் பிடிக்க தமிழனுக்கு உரிமை இல்லை. எங்கள் மீனவனுக்கு சொந்தமான கச்சத்தீவை யாரைக் கேட்டு தாரைவார்த்துக் கொடுத்தீர்கள்? 430 தமிழ் மீனவனை சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்களர்கள். அதை ஏன் என்று கேட்க நாதியில்லை... அப்புறம் எங்கே வந்தது இறையாண்மை? எனக்கு இறைவனுமில்லை... இறையாண்மையுமில்லை.

தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்.... சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க...

அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேல் என்பதை நம்புபவர்கள் நாங்கள். 'மதுக்கடையிலும், திரையரங்க வாசல்களிலும் கூட்டம் கூட்டமாய் நின்று உணர்வை இழந்து கொண்டிருக்கும் என் சகோதரர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையே' என என்னிடம் வருத்தப்பட்டுக் கூறினார் அண்ணன் பிரபாகரன்.

கடலுக்கு அப்பால் உள்ள தமிழனும் சாகிறான்... இந்தப் பக்கம் உள்ள தமிழனும் சாகிறான். நாதியத்துப் போன கூட்டமாகிவிட்டோமே என்ற ஆற்றாமை என்னை பாடாய்படுத்துகிறது...

திபெத்திய தலாய்லாமாவுக்கு ஒரு நியாயம், ஈழத்துப் பிரபாகரனுக்கு ஒரு நியாயமா... பங்களாதேஷைப் பிரித்துக் கொடுக்க ஒரு நியாயம், தனி ஈழம் உருவாவதைத் தடுக்க ஒரு நியாயமா...

10 ஆண்டுகள் போராடி 3000 உயிர்களை இழந்த கொசோவோ இன்று தனிநாடு. ஆனால் அரை நூற்றாண்டுப் போர்... லட்சத்தில் உயிர்களை இழந்த ஒரு நாட்டை தனி நாடு என அங்கீகரிக்க ஏன் தயக்கம்... நண்பர்களே... பிரபாகரன் வேறு நாட்டை பிரித்துக் கேட்கவில்லை. காலகாலமாக, நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் பண்டார வன்னியன் காலத்திலிருந்து அரசாண்டு வந்த தன் சொந்த மண்ணை அந்நியர்களிடம் இழந்துவிடாமலிருக்கப் போராடுகிறான்.

இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது... ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், ராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து... என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ்.

அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும்... நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்'' என்று ஆவேசமாக பேசினார்   சீமான்.

என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை

http://www.youtube.com/watch?v=k4fJXe5zl44






CNN IBN காக இலங்கை தமிழ் யுவதி ஒருவர் மனம் திறக்கிறார்.

http://www.nankooram.com/lankan-tamil-survivor-appeals-to-mother-india-cnn-ibn#comment-452

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது பொய். இப்போதும் குண்டுவீச்சு தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று வன்னியிலிருந்து தப்பி வந்த இளம் தமிழ் பெண் கூறியிருக்கிறார். எங்களை பொறுத்த வரை பிரபாகரன் தலைசிறந்த வீரர் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தார்.

போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டதாக கூறி அவர் உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டார். ஆனால் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னிப் பகுதியிலிருந்து தப்பி புதுடெல்லிக்கு வந்துள்ள ஒரு தமிழ் பெண்ணும் இதனை உறுதி செய்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

இப்போது நான் நாடற்றவள். ஆனால் நான் இலங்கையில் உள்ள ஈழத்தை சேர்ந்தவள். என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஆகவே என்னுடைய உருவத்தை தொலைக்காட்சியில் காட்ட வேண்டாம். நான் திரும்பி எனது சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும்.

சாவதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் உயிரை பலி கொடுப்பதற்கு உரிய காரணம் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணத்திற்காக நான் உயிரிழக்க வேண்டும்.
இலங்கை வன்னிப் பகுதியில் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறுவது பொய். அங்கு இப்போது நடப்பது கொலை, கடத்தல்தான்.

இப்போது கூட வன்னியில் உள்ள எனது தோழியிடம் போனில் பேசினேன். நான் பேசிக் கொண்டிருக்கும் போதே குண்டுவீச்சு தாக்குதல் நடப்பது கேட்டது. விமானங்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளன. எந்தவித ஆதரவுமின்றி தமிழர்கள் சாலையில் படுத்துக்கிடக்கிறார்கள். பாதுகாப்புக்காக ஒவ்வொரு இடமாக அவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.

நாங்கள் ஒருபோதும் வாழ்க்கை நடத்தவில்லை. இந்த தீவில் எப்படியோ நாட்களை கடத்தினோம். நாங்கள் மகிழ்ச்சியோடு வாழக் கூடிய நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்காகத் தான் நாங்கள் இப்போது போரிட்டு கொண்டிருக்கிறோம்.

நாங்கள் பிரபாகரனை மதிக்கிறோம். அவர் எங்கள் தலைவர்; அவர் எங்களுக்காக போரிடுகிறார். அவர் சுதந்திர போராட்ட வீரர். இவ்வாறு அந்த பெண் கூறினார். பிரபாகரன் நீர்மூழ்கி கப்பல் மூலம் தப்பியிருக்கலாம் என கேட்டபோது, "அப்படி நடந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்'' என்றார்.

இலங்கையில் நடைபெறும் கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எங்கள் தாய்நாடான இந்தியாவை கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார். இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஆப்பிரிக்காவிலோ, மத்திய கிழக்கிலோ அல்லது பாலஸ்தீனத்திலோ பிறந்திருக்க வேண்டுமா? என்பதுதான் என்னுடைய கேள்வி என்றும் அந்த தமிழ்பெண் கூறினார்.

முத்தமிழ் வேந்தன்
சென்னை
http://www.muthutamil78.blogspot.com/

பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்!’ - காசி ஆனந்தன்

'பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்!' - காசி ஆனந்தன்


tn_karsi_seemaanஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.

திரைப்பட ஒளிப்பதிவாளர் (படம்: தூண்டில்) கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்தது.

கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், இயக்குநர் பாலுமகேந்திர முதல் பிரதியை வெளியிட, ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக் குமரனின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார்.

தலைமை உரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:

ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்கள். இல்லை… அது பிழையானது. இது போராட்டக் காலம். தமிழகத்தின் ஒரே தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த தமிழகமே எழுச்சியுடன் நிற்கும் காலம்.

உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத சிறப்பு ஈழப் போராட்டத்துக்கு உண்டு. வியட்நாம், தென் அமெரிக்கா, க்யூபா, சீனா, ரஷ்யா… என அனைத்து நாடுகளிலும் இன, நாடு விடுதலைக்கான போர் நடந்துள்ளது. ஆனால் அது அந்த மண்ணுக்குள்ளேயேதான் நிகழும்.

ஆனால் ஈழப்போர் மட்டும்தான், அந்த மண்ணிலும், மண்ணுக்கு வெளியேயும் பெரும் வீர்யத்துடன் நடக்கிறது.

உலகப் புரட்சிகளுக்கெல்லாம் அண்டை நாட்டு வல்லரசுகளின் ஆயுத, அரவணைப்புகள் கிடைத்தன. இன விடுதலை எளிதில் சாத்தியமானது. ஆனால் நமக்கு… நம்மைத் தவிர வேறு யார்?

இன்று உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள், உலகின் கவனத்தை தமிழர்பால் திருப்பியுள்ளனர்.

பிரபாகரன் ஈழம் முழுவதையும் வென்றிருந்தால் கூட, ஐநா சபை சபை பாதுகாப்பு மன்றம் வாய் திறந்திருக்காது. ஆனால் இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.

இன்று உலகம் தமிழன் இன விடுதலைப் பற்றி, தமிழ் ஈழம் பற்றி பேசுகிறது… அதுதான் நமது வெற்றி. நான் அடிக்கடி சொல்வதைப் போல, தமிழன் தன் புத்திசாலித்தனத்தால் ஈழம் வெல்லாவிட்டாலும், சிங்களவனின் முட்டாள்தனத்தால் அது கிடைக்கும்.

பயங்கரவாதி, சகோதரயுத்தம் நடத்தியவர் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் சிலர் பேசி வருகிறார்கள். பிரபாகரனை அழித்து விட்டுப்பேசலாம் என்கிறது இந்தியா. தாங்கொணாத வேதனையைத் தருகிறது அந்தப் பேச்சு.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிற பிரபாகரனை கொச்சைப்படுத்தும் வேலை இது.

32 ஆண்டுகள் களத்தில் தன் உயிரையும், உயிரனைய தோழர்களையும் பணயம் வைத்து போராடும் எங்கள் தலைவனை கொச்சைப்படுத்தாதீர்கள்.

துரோகிகளைக் களையெடுப்பது தவறல்ல…

எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் துரோகிகளைக் களையெடுப்பது தொன்று தொட்டு இருந்து வருவது.
இயக்கத்தைக் காத்து, இறுதி லட்சியத்தை அடைய அந்தத் தண்டனைகள் அவசியம். அவற்றைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இயக்கத்திலேயே சேருகிறார்கள்…

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் துரோகி ட்ராட்ஸ்கியை அமெரிக்காவிலும் துரத்தித் துரத்திக் கொன்ற ஸ்டாலின் பயங்கரவாதியா, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தலையெடுத்துவிட்ட துரோகிகளைக் களையெடுத்த ம சே துங் பயங்கரவாதியா… இவர்களை உலகின் மாபெரும் புரட்சித் தலைவர்கள் என்று உலகமே கொண்டாடவில்லையா… பிரபாகரன் செய்ததில் மட்டும் என்ன பயங்கரவாதம் வந்துவிட்டது?

பிரபாகரனை பழித்துப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது… இறந்த பிறகு மாலை மரியாதையுடன் தரப்படும் பட்டங்களால் என்ன பயன்… உயிருடன் இருக்கும் அந்தத் தலைவனை இப்போது பழித்துவிட்டு, அவர் காலத்துக்குப் பின் போற்றிப் பாடும் அதே வழக்கமான தவறை இப்போதும் செய்து விடாதீர்கள்.

இறந்தபிறகு மரியாதையுடன் புருஷோத்தம மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறீர்களே… அந்த மரியாதையை அவர் உயிருடன் இருக்கும்போது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

தமிழினத் துரோகி மேயர் துரையப்பாவை அழித்துவிட்டுத்தான் முன்பு தமிழகம் வந்தார் பிரபாகரன். அன்று அவரை இருகரம் நீட்டி பாசத்துடன் அரவணைத்தவை அன்னை இந்திராவின் கரங்கள். இந்த பிராந்தியத்தின் அசைக்கமுடியாத தலைவி அவர். அவருக்குத் தெரியாதா பிரபாகரன் இயக்கம் செய்த களையெடுப்பு வேலை? தெரியும்… ஆனாலும் அவர் பிரபாகரனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். புலிகளுக்குப் பயிற்சியும் கொடுத்தார்.

ஒரு இனத்தை வாழ வைக்க சிலவற்றை மறக்கலாம்…

ராஜீவ் காந்தியின் கொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியப் படைகள் ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்தை நாங்கள் எப்படி மறப்பது?

3000 தமிழ் தாய் - சகோதரிகளையும், 6000க்கும் மேற்பட்ட மக்களையும் கொன்ற இந்திய ராணுவத்தின் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?

புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே…

எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?
எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா… அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா?

எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்?

பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம். இந்தியாவை உண்மையாக நேசிக்கும் ஈழத் தமிழர்களில் ஒருவனாக இப்போதும் நாம் உடனடியாக வேண்டுவது:

முழுமையான போர் நிறுத்தம், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம், தமிழீழம் மலரச் செய்ய வேண்டும், என்றார் காசி ஆனந்தன்.


http://www.meenagam.org/?p=2307


சி.டி ரெய்டு...!


வெந்து கொதிக்கும் காங்கிரஸ்!

தோலுரிக்கும் சி.டி...

'இனியென்ன செய்யப் போகிறோம்?', 'கொலைஞர்', 'புதிய பராசக்தி' போன்ற தலைப்புகளில் உலவ விடப்படும் சி.டி-க்கள் காங்கிரஸ்-தி.மு.க-வின் தூக்கத்தைப் பறித்துள்ளன. இந்த சி.டி-க்களை மையம் கொண்டு எம்.நடராஜன் வீட்டில் ரெய்டு, தமிழ் உணர்வாளர்கள் சிலர் கைது என்று விவகாரம் பரபரப்பாகிற நிலையில்... காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவரான பழ. நெடுமாறனும் காங்கிரசுக்கு எதிராக சி.டி ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்! கடந்த 22-ம் தேதி 'இறுதி யுத்தம்' என்ற தலைப்பில் பகிரங்கமாக அவர் வெளியிட்டிருக்கும் சி.டி. 'ஈழத்துக் கொடூரங்களுக்குக் காரணமே காங்கிரஸ்தான்!' என்று நெஞ்சை உலுக்கும்படிச் சொல்கிறது.

நாமும் அந்த சி.டி. காட்சிகளைப் பார்த்தோம். 'கஞ்சிக்கு வழியின்றி கதறும்குழந்தைகள்... உயிர் பயத்தில் குழந்தை குட்டிகளோடு ஓடும் பொதுமக்கள்...


ரத்தகாயங்களோடு உயிர்நடுங்க அலறும் பெண்கள்...' என ஈழத்து சோகங்கள் காட்சிகளாக விரிய, 'இதற்கெல்லாம் யார் கார ணம்?' என்ற கேள்வி அதில் உரக்க எழுப்பப்படுகிறது. கூடவே, காங்கிரஸ் வேட்பாளர்களின் படங்களும் வரிசை கட்டுகின்றன. நெற்றி தெறித்த பச்சைக் குழந்தை ரத்தத்தோடு கிடக்க, அதே காட்சியோடு சேர்த்துக் காட்டப்படுகிறது சிரித்தபடி நிற்கும் மத்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்தின் படம். தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் கருகிய உடல் ஒரு பக்கம் கிடக்க... அதற்கு பக்கவாட்டில் கார் வேந்தன், நாராயணசாமி என காங்கிரஸ் வேட்பாளர்களின் படங்கள். அதோடு, ராஜ பக்ஷேவுடன் கைகோத்து நிற்பதுபோல் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி ஆகியோரையும் சேர்த்துக் காட்டியிருக்கிறார்கள் இந்த சி.டி-யில்!

ஈழத்து ஓலமும் ஒப்பாரியும் இவற்றின் பின்னணியில் ஒலிக்கின்றன. ராகுல்காந்தி வீர வாளோடு சிரித்தபடி நிற்க, 'தமிழினம் அழிய இவர்கள்தானே காரணம்?' என்கிற ஆவேசப் பேச்சும், ரத்தத்தில் துவைத் தெடுக்கப்பட்ட குழந்தையும் அடுத்தடுத்து தோன்றுகின்றன. கடைசியாக 'நம்மைக் கொன்றழிக்கும் இந்தக் கூட்டத்தை விரட்டி அடிப்போம்...' என்கிற வார்த்தைகள் ஒலிக்க 'கை' சின்னம் தலைகீழாகக் கவிழ்வதுமான காட்சியோடு சி.டி. முடிகிறது.

தற்போது தமிழகம் முழுக்க விநியோக மாகிப் பரபரப்பாக செய்திகள் அடிபட்டுக் கொண்டி ருக்கும் நிலையில்... சி.டி.யை உருவாக்கிய தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவினரிடம் நாம் பேசினோம்.

''ஈழத்துக் கொடூரங்களையும் அதற்குக் காரணமான காங்கிரஸ் தலைவர்களையும் ஒருசேரக் காட்டினால்தான், அது கிராமப்புற மக்கள் வரை போய்ச் சேரும். காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் இந்த சி.டி-யை பெரிய அளவில் விநியோகிப்போம். தங்கள் முகங்களைக் காட்டிக்கொள்ள விரும்பாத ஈழ ஆர்வலர்கள் நிறையப் பேர் இந்த சி.டி-யை லட்சக்கணக்கில் தயாரிக்கவும் விநியோகிக்கவும் பொறுப்பேற்றுக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு தொகுதிக்கு ஒரு லட்சம் சி.டி என விநியோகிக்க மொத்தமாக பதினாறு லட்சம் சி.டி-க்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சி.டி-க்களை பெரிய திரைகளில் படமாக ஓட்டிக் காட்டவும் தயாராகி வருகிறோம்...'' என்றார்கள் தயாரிப்புக் குழுவினர்.

இதற்கிடையில், இந்த சி.டி-க்களைத் தடுப்பதில் தீவிரமாகி இருக்கும் தமிழக அரசு, பெரி யார் திராவிடர் கழக நிர்வாகிகளின் வீடுகளில் புகுந்து அத்துமீறி செயல்படுவதாகவும் புகார் கிளம்பி இருக்கிறது.

இது குறித்து பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் பேசினோம். ''நாங்கள் வெளியிட்ட சி.டி-க்கள் சட்டத்துக்கு உட்பட் டவைதான். கருத்துச் சுதந்திரத்தை மீறி நாங்கள் செயல்படவில்லை. ஆனாலும், தமிழகம் முழுக்க இருக்கும் எங்கள் கட்சி அலுவலகங்களில் அத்துமீறி நுழைந்து சோதனை போட்டிருக்கிறது காவல் துறை. அதோடு, எங்களுக்கு சம்பந்தமில்லாத சி.டி-க்களை நாங்கள் தயாரித்தது போல ஜோடிப்பு காட்டும் வேலைகளிலும் போலீஸ் இறங்கி இருக்கிறது. எங்கள் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ராம இளங்கோ, கோவை கட்சி அலுவலகப் பொறுப்பாளர் கதிரவன் ஆகியோரை சம்பந்தமே இல்லாமல் கைது செய்திருக்கும் போலீஸ், அவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத வழக்குகளைப் புனைந்திருக்கிறது. இரு நாடுகளின் உறவுகளைக் குலைக்கும் விதமாகவும், ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத் தும் விதமாகவும் எங்கள் நிர்வாகிகள் செயல் பட்டதாக போலீஸார் பகீர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அத்துமீறலையும் ஜோடனையையும் வன்மை யாகக் கண்டிக்கிறோம். இதற்கு மேலும் சி.டி. விவகாரத்தில் போலீஸ் எங்கள் மீது நியாயமற்ற கெடுபிடிகளைக் காட்டினால், அதனைக் கண்டித்து, தமிழகம் முழுக்கப் போராட்டங்கள் நடத்துவோம்!'' எனச் சீறினார் விடுதலை ராஜேந்திரன்.

ஏற்கெனவே வெளியான சி.டி-க்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருக்கும் காங்கிரஸார், பழ. நெடுமாறனின் புதிய சி.டி-யால் இன்னும் உக்கிரமாகி, மறுபடியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறார் கள்.

காங்கிரஸ் தரப்பில் பேசியபோது, ''ஈழத்து சோகங்களை சி.டி-யாக வெளியிட்டதை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் பதினாறு பேருடைய படங்களையும் வரிசைப்படுத்தி, கூடவே அன்னை சோனியா, ராகுல்காந்தி, முதல்வர் கலைஞர் உள்ளிட்டவர்களின் படங்களையும் காட்டி தமிழர்களை நாங்களே கொல்வது போல சித்திரித் திருக்கிறார்கள். தேர்தலில் எங்களை வீழ்த்துவதற்காக நடத்தப்படும் இந்த சதியை தேர்தல் ஆணையமும் தமிழக காவல்துறையும் உடனடியாகத் தடுக்கவேண்டும்!'' என்றார்கள்.

நெடுமாறனிடம் பேசினோம். ''இன்றைக்குஎன்ன நடக்கிறது என்பதன் பதிவுதான் அந்த சி.டி. காங்கிரசும் தி.மு.க-வும் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்துக் கொஞ்சமும் கவலைகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதையே அந்த சி.டி சுட்டிக் காட்டுகிறது. ஈழத்தில் புண்பட்டுக் கிடக்கும் தமிழ் மக்களின் வேதனை நிலையை மிகுந்த நனிநாகரிகத்துடன் யார் மனமும் புண்படாமல் அதில் பதிவாக்கி இருக்கிறார்கள். சி.டி. விநியோகத்தைத் தடைசெய்ய காங்கிரஸார் மெனக்கெட்டால்... அதிலி ருக்கும் உண்மைகளுக்கு பயப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம்? சி.டி. முன்வைக்கும் கேள்விகளுக்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வால் என்ன பதிலை எடுத்து வைக்க முடியும்?'' என்றார்.

நன்றி ஜூனியர் விகடன்

ஆற்றின் மேல்.....

ஆஸ்ரமத்தில் ஒரு நாள் ...

''மாமா ஆஸ்ரமத்தில் ஜாலியா பேசிகிட்டே தியானம் பண்ண முடியாது நாம ஆத்துக்கு அந்தாண்ட போய் தியானம் பண்ணுவோம்டா'' என்றான் நம்ம சிஷ்யன்.

''ஓகே மச்சி'' என்று ஆமோதித்தான் பிரண்டு சிஷ்யன்.

இருவரும் அக்கரைக்கு போனதும் கரையில் அமர்ந்து தியானத்தை துவங்கினர். அக்கரையில் ஏற்கனவே இருந்த குருநாதர் இவர்களை கண்காணிக்கலாம் என முடிவெடுத்து மரத்துக்கு பின்னால் மறைந்து நின்றார்.

தியானம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பிரண்டு சிஷ்யன் ''மச்சான் நான் என்னோட பெட்டிய பூட்டாம வந்துட்டேன்டா , இரு மச்சி பூட்டிட்டு வந்துடறேன்'' என்று ஆற்று நீரின் மீது அட்டகாசமாக நடந்து அந்த பக்கம் போய் திரும்பி அதுபோலவே ஆற்றின் மேல் நடந்து வந்தான்.

மறைந்து பார்க்கும் குருவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இதையெல்லாம் நாம் சொல்லித்தரவே இல்லையே என்று அவருக்கு ஓரே குழப்பம். ஏனென்றால் அதெல்லாம் அவருக்கே தெரியாது.

மீண்டும் தியானம் தொடர்ந்தது. இந்த முறை நம்ம சிஷ்யன் '' மச்சான்.......மச்சான்..''

''என்னடா.. இப்பதான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ள''

''இல்லடா நான் ஜட்டி போடாம வந்துட்டேன் ,போய் ஜட்டி போட்டுட்டு வந்துடறேன்டா''

''போய் தொலைடா''

நம்ம ஆளும் அதே போல ஆற்றின் மேல் அநாயசமா நடந்து போய் திரும்பி வந்தான்.

குருவுக்கு கோபமே வந்துவிட்டது. இந்த சில்லரை பசங்கனாலயே முடியுதுனா என்னால முடியாதா .. என்று ஒடி போய் ஆற்றில் நடக்க முயன்றார். தொபுக் என மூழ்கிப்போனார்.

இதை சிஷயர்கள் பார்த்துவிட்டனர். நம்மாளு சிரிப்பு வந்து அடக்கிக்கொண்டிருந்தான்.

குருவுக்கு அவமானமாய் போய்விட்டது. இருந்தாலும் விடாமுயற்சியோடு மீண்டும் கரைக்கு வந்து மீண்டும் ஆற்றில் நடக்க முயன்றார். இம்முறையும் தோல்வி.

மூன்றாம் முறை, நான்காம் முறை.. நாற்பதாவது முறை என ஒரு முறை கூட அவரால் நடக்கவே முடியவில்லை.

இருட்டிவிட்டதால் சிஷ்யர்கள் இருவரும் அவர் கண் முன்னாலேயே ஆற்றின் மீது நடந்து அந்த பக்கம் சென்றனர்.

குருவுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது. இன்னும் ஒரு முறை என மீண்டும் மீண்டும் இரவெல்லாம் முயன்று கொண்டிருந்தார். கரைக்கு வருவார். உள்ளே நடப்பார். மூழ்குவார். குளிரில் உடலெல்லாம் நடுங்கியது.

அருகருகே படுத்திருந்த அந்த சிஷ்யர்கள் பேசிக்கொண்டனர்.

''மச்சான் பாவம்டா நம்ம குரு'' என்றான் நம்மாளு .

''நீ வேறடா இன்னா மாதிரி டார்ச்சர் குடுக்கறான் அந்தாளு... அனுபவிக்கட்டும் ''

''வேண்டாம் டா நாம போய் சொல்லிரலாம் ஆத்துக்கு நடுவுல எங்கலாம் கல்லு போட்டு வச்சிருக்கோம்னு .. பாவம்டா சாமி சரியான லூசு நாளைக்கு செத்தாலும் செத்துரும்...'' .


http://www.athishaonline.com/2009/05/blog-post.html
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!