Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, November 1, 2009

♥ கும்பிட்ட கைகளை, கொலை செய்....! ♥

வேட்டைக்காரனை வேட்டையாடு

http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/10/vijay.jpg

[1223333333.jpg]

விஜயின்.அவ்வ்வ்வ்.மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......


1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்


2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.


4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்

http://nitharsanam.net/wp-content/uploads/2008/03/04.jpg
5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.
-
-
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)


6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா?


7.விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்


8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.


9. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.


10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......


11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.

http://rajkanss.blogspot.com/2009/10/blog-post_31.html
http://pirabuwin.files.wordpress.com/2008/12/villu_shooting3.jpg


எதிர்ப்புக்கு மத்தியில் திருப்பதி விஜயம் செய்த ராஜபக்சே! இனப் படுகொலை செய்தவனுக்கு பூரண கும்ப மரியாதையா?!


rajapaksa-tirupati-200



இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இன்று திருப்பதிக்கு விஜயம் செய்து வெங்கசடாசபதியை தரிசனம் செய்தார்.

நேபாளத்தில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த ராஜபக்சே திருப்பதிக்கும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தப் பயணம் குறித்த தகவல் படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், நேற்று முன்தினம், இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் சித்தூர் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சேஷாத்திரியுடன் ராஜபக்சேவுக்கான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இன்று காத்மாண்டுவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ராஜபக்சே ரேணிகுண்டா வந்தார். பின்னர் கார் மூலம் அங்கிருந்து திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று பிற்பகலில் திருப்பதி கோவிலில் வெங்கடாசலபதியை அவர் தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கார் செல்லும் வழி நெடுகிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்…

இந்த நிலையில் ராஜபக்சேவின் திருப்பதி வருகையைக் கண்டித்து தமிழ் ஆர்வலர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘தமிழினப் படையணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 30 பேர் இன்று மதியம் 1 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன்பு திரண்டனர்.

ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சவிற்கு அனுமதி அளிக்காதே! திருப்பதி தேவஸ்தானமே ராஜபக்சவை திருப்பி அனுப்பு! என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் தேவஸ்தான கோயிலின் முன்பு மறியல் செய்தனர்.

கொலைக்கார ராஜபக்சவிற்கு திருக்கோயில் பரிவட்டமா?

இனப் படுகொலை செய்தவனுக்கு பூரண கும்ப மரியாதையா?

என்று முழக்கங்கள் இட்டுக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவலர்கள் அவர்கள் அனைவரையும் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

திருப்பதி கோயிலிற்கு ராஜபக்ச வருவதைக் கண்டித்து சென்னையில் நடந்த இந்த மறியல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.paristamil.com/tamilnews/?p=42579



மகிந்த ராஜபக்சே குறித்து வலைத்தளத்தில் கருத்துரை எழுதியவர் கைது
arrest_mouseசிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக வலைத்தளத்தில் கருத்துரைகள் எழுதினார் எனக் குற்றம் சாட்டப்பட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறீலங்கா குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட மேற்படி நபரை வரும் ஆறாம் திகதி வரை மறியலில் வைக்குமாறு மாத்தளை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி நபர் அலௌவாவைச் சேர்ந்தவர் என அறியப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களைப் பெறும்பொருட்டு சிறீலங்கா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிறீலங்காவில் இருக்கும் ஒரு நபர் இணையத்தளத்திற்குச் சென்று தனது கருத்தை, ஒரு பின்னூட்டத்தைக் கூட கொடுக்க முடியாத நிலையில் சிறீலங்கா இருக்கிறது. கருத்துச் சுதந்திரம், அடிப்படை உரிமை மீறல், இனவாதம், படுகொலைகள் யுத்தக் குற்றங்கள் நிறைந்த நாடாக சிறீலங்கா இருக்கிறது.


http://www.meenagam.org/?p=14909

மகிந்தவின் வருகைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்
[காணொளி] மகிந்தவின் வருகைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

நன்றி: பதிவு


கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்: மனோகணேசன் எம்பி அழைப்பு

"கும்பிட்ட கைகளை, கொலை செ
ய்ததது சிங்களப்படை..."
siva[காணொளி] கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

http://www.meenagam.org/?p=14796

கப்பலில் இருக்கும் 78 இலங்கையர்களையும் இந்தோனேசியா பலவந்தமாக இறக்காது: அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

Indonesia_flagஆஸ்திரேலியக் கப்பலில், இந்தோனேஷியத் துறைமுகத்தில் உள்ள 78 இலங்கையர்களையும் இறக்குவதற்குப் பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லையென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

அவர்கள் கப்பலிலிருந்து இறங்க மறுத்து வருகின்ற நிலையில் இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் மார்ட்டி நட்டலேகவா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்கள் ஏற்கனவே மிக நெருக்கடியான சூழ்நிலைகளைக் சந்தித்துள்ளனர். கடும் துயரங்களை சந்தித்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர், பலவந்தமான நடவடிக்கையின் மூலம் இந்த மக்களை இறக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கப்பலில் உள்ள அகதிகள் வெளியுலகத்துடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என ஆஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் செனட்டர் சரா ஹன்சன் யங் தெரிவித்துள்ளார்.

கப்பலில் உள்ளவர்களுக்கு என்ன நடைபெறுகின்றது எனத் தெரியவில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவிப்பதும் இந்தோனேஷியா சொல்வதும் முரணாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஓசியானிக் வைகிங் கப்பலில் உள்ள 78 இலங்கையர்களும் தாங்கள் பலவந்தமாக இறக்கப்படலாம் என அஞ்சுகின்றனர் என அவர்களுடன் தொடர்புகொண்ட ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் தெரிவித்தனர்.


http://www.meenagam.org/?p=14757

தோல்வியை தூக்கிப் போடு....!


http://wwwdelivery.superstock.com/WI/223/1558/PreviewComp/SuperStock_1558-03617.jpg
ரிச்சர்ட் ஸ்டோன் பிறவியிலேயே தன் பார்வையை இழந்தவர். பத்திரிக்கையாளர்களுக்கு ரிச்சர்ட் ஸ்டோன் அளித்த பேட்டியில் அவர் கூறியது :

நிருபர் : ரிச்சர்ச் ஸ்டோன் உங்கள் கையில் இருக்கும் கம்பு உங்கள் கண்களுக்கு தெரியாது. தடை கம்பி உங்கள் கண்களுக்கு தெரியாது. நீங்கள் தாண்டிய பிறகு விழும் இடம் உங்களுக்கு தெரியாது. பின்பு இந்த சாதனை எப்படி சாத்தியம்?

ரிச்சர்ட் ஸ்டோன் அதற்கு கூறிய பதில் முதலில் என் மனதை கம்பிக்கு அப்பால் தூக்கிப் போடுவேன் பிறகு என் உடலைத் தூக்கிப் போடுவேன்.

http://www.thannambikkai.net/2009/10/01/3035/


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...




http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg


Update me when site is updated

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!