Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, November 10, 2009

♥ நான் கடவுள் ♥

அதிரடி மன்னன் ஜாக்கிசான்!


http://www.tvgasm.com/newsgasm/images/newsgasm/nads/Jackie_Chan_654446.jpg

http://tamilvanan.com/content/wp-content/uploads/2008/08/jackie-chan.jpg



http://www.vipwallpaper.com/data/media/1231/Jackie_Chan_002.jpg


http://mimg.ugo.com/200901/8502/jackie-chan-supercop.jpg

http://www.filmschoolrejects.com/images/jackiechan_confused1.jpg


http://www.topnews.in/light/files/jackie-chan-TFK.jpg


அது ஒரு படப்பிடிப்பு அரங்கம்.

கதாநாயகனுக்குப் பதிலாக, வில்லன் நடிகருடன் சண்டை போட்டுக்கொண்டே, உங்கள் ஸ்டண்ட் நடிகர் பதினைந்து அடி உயரத்திலிருந்து, அதுவும் பின்பக்கமாக கீழே விழ வேண்டும் என்றார் இயக்குநர்.

இடுப்பில் கம்பியை கட்டுங்கள்! கீழே காலியான அட்டைப்பெட்டிகளைப் போடுங்கள்! என்று காட்சியமைப்பில் மும்முரமானார், ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர்.

இடுப்பில் கம்பி கட்டி குதித்தால் பொம்மை குதிப்பது போல இருக்கும் எனக்கு அப்படியிருக்கக் கூடாது.எந்த உதவியும் இல்லாமல், நிஜமாகவே குதித்துக் காட்ட வேண்டும் என்றார், இயக்குநர்.

அதிர்ச்சியடைந்தது, ஸ்டண்ட் குழு!

அது ஓர் ஆபத்தான வேலை என்பதால் வாக்கு வாதம் நீண்ட நேரம் நீண்டு கொண்டே இருந்தது, முடிவே இல்லாமல்...!

இதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த, அந்த ஸ்டண்ட் குழுவில் இருந்த பதினெழு வயது இளைஞன் மெல்ல மெல்ல தயங்கியபடி இப்படிச் சொன்னான்.

என் பெயர் யூன் லோ. என்னால் முடியும் என்று நம்புகிறேன். நான் முயற்சி செய்கிறேன் என்றான்.

இதைக் கேட்ட மிரண்ட ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர், அட முட்டாளே! உனக்கு உன் உயிர் மேல் ஆசையில்லையா? இல்லை என்னை முட்டாள் என்று நினைத்தாயா? என்று சீறினார்.

இல்லையே...
நானோ ஒன்றுமில்லாதவன்.யாருக்கும் என்னைத் தெரியாது.இது போல நான் எதுவும் செய்யாட்டா,நான் எப்போதும், யாருக்கும் தெரியாமலேயே போயிருவேன் என்றான், இளைஞன.

செய்து காட்டியே தீருவேன் என்ற இளைஞனின் பிடிவாதம் கண்டு இயக்குநர் கூட கொஞ்சம் ஆடிப்போய், பயந்து தான் போனார்.

இது தான் கடைசி இனிமேல் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காட்சிகளை படத்தில் வைக்க வேண்டாம்! என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார், சண்டை ஒருங்கிணைப்பாளர்.

யூன் லோ-வைப் பார்த்து ஏய் முட்டாளே! உடலை தளர்த்திக் கொள்.தரையைத் தொட்டதும் உருளத் தயாராகி விடு. என்னவானாலும் தலையாலோ, முதுகாலோ,தரையைத் தொட்டுவிடாதே!

உன்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் கல்லறைக்கு மட்டும் கொண்டு போக வெச்சிடாதே...! என்றார், ஒருங்கிணைப்பாளர்.



நடிப்புக்கு தேவையான உடைக்குள் மாறியிருந்தான் யூன் லோ. புருவத்துக்கு மேலே ரத்தக் கீறல் வரையப்பட்டது.

ஆக் ஷன்! என்று கத்தினார், இயக்குநர்.

வில்லன் நடிகர் அடிப்பதைப் போல பாவனை செய்ய, அடுத்த நிமிடமே பின்புறமாக விழுந்தான், யூன் லோ.

எல்லோரும் மூச்சுக்கூட வாங்காமல், நடக்கப் போகும் விபரீதத்தை, கண்களைக் கூட இமைக்காமல் பார்த்துக் கொண்டு,நின்றிருந்தார்கள்!

மனதிலே தூரத்தைக் கணக்கிட்டுக் கொண்டே முதுகை வளைத்து, காற்றிலே உடலைச் சுழற்றி, தரையைக் கண்டதுமே,தலையை மேலே தூக்கி, காலை கீழே கொண்டு வந்து மிகச் சரியான நேரத்தில் பாததத்தை தரையிட்டான்.சற்றே தடுமாறினாலும்,உடன் சுதாரித்து காலை ஒரு அடி முன் வைத்து,நேராக நின்றான். வெற்றி...! வெற்றி... என்று தனக்குத் தானே மனத்துள் சொல்லிக் கொண்டான்,யூன் லோ.

அந்த அதிசயத்தை நம்ப முடியாமல் சந்தோஷக் கூச்சலிட்டது, படப்பிடிப்புக் குழு.

ஒருங்கிணைப்பாளர் ஓடோடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். நீ தான்டா உண்மையான ஸ்டண்ட் மேன்! என்று கட்டிப்பிடித்துக்கொண்டார்.

தரையைத் தொடும்போது கொஞ்சம் தடுமாறிட்டேன்.இன்னொரு தடவை செஞ்சா,சரியா நிற்பேன் என்றான்,இளைஞன்.

இதைக் கேட்டீங்களா... ஒரு தடவ செஞ்சது போதாதாம் இவனுக்கு... என்றார்,ஒருங்கிணைப்பாளர்.

உற்சாகமான கூட்டம் சப்தமாக லுங்ஃபூ மோ சீ ! என்று குரல் எழுப்பினார்கள் சப்தமாக...

அந்த வார்த்தைக்கு சீன மொழியில் டிராகன் புலி என்று பெயர்.

அந்த டிராகன் புலியின் பெயர் தான்...

ஜாக்கிசான்...!





_மனிதன்.

http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg







http://www.davidpaulmorris.com/content/photos/jackiechan2.jpg

http://radiofreecruze.com/blog1/pics/chan.jpg


பேராண்மை அதிரடி விமர்சனம்




[Peraanmai-Wallpaper-Stills-0010.jpg]



பேராண்மை: சமூகநீதியின் வெற்றி!


தமிழ் அல்லது இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை காடுகளும் மலைகளும், மலை சார்ந்த பகுதியும் ஒன்று நாயகன் நாயகி காதல் காட்சிக்குப் பயன்படும் அல்லது, திகில் காட்சி, சண்டைக் காட்சிகளுக்குப் பயன்படும். அவ்வாறே, மலைவாசி பூர்வகுடி மக்கள் என்போர் "ஜும்பாலே.. ஜும்பாலே.." பாடியபடி நடனமாடி நாயகன் நாயகிக்கு மாலை சூடவோ, அல்லது நகைப்புக்குரிய மனிதர்களாக காட்டவோ பயன்படுவர்.

பேராண்மை' படமும், காட்டையும், காட்டு மக்களையும் சுற்றித்தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழ்ப் படங்கள் காணாத நாயகன், காணாத இடங்கள் என ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிற்கிறது படம். திரைத் தொழில்நுட்பமும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சமூக அக்கறையும் கொண்ட 'மக்கள் இயக்குநர்' ஜனநாதனின் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் 'பேராண்மை'.
என்.சி.சி. பயிற்சிக்காக மலைப்பகுதிக்கு வருகிறார்கள் கல்லூரி மாணவிகள். அவர்களின் பேராசிரியராக ஊர்வசி. அக்காட்டுப் பகுதிக்கு ரேஞ்சராக கணபதி ராம் என்ற கதாபாத்திரத்தில் பொன்வண்ணன். 2000 ஏக்கர் காட்டுக்கு பொறுப்பாளராகவும், மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மலைவாழ் சமூகத்திலிருந்து படித்து முன்னேறி பதவிக்கு வந்திருக்கும் இளைஞர் துருவனாக ஜெயம் ரவி. அலுவலகப் பணியாளராக வடிவேலு.


மாணவிகள் பயிற்சிக்கு வரும் வழியில், மலை வாழ் மக்களுடன், கோவணம் தரித்தபடி எருமை மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் துருவனைப் பார்க்கிறார்கள். பின்னர் அவரே தங்களுக்கு பயிற்சியாளராக வருவது கண்டு 'இந்தக் காட்டுவாசியா நமக்கு கற்றுத் தருவது? ரிசர்வேசன் கோட்டாவில படிச்சுட்டு வந்த இவனுக்கு என்ன தெரியும்?' என்று வெறுப்புக் கொள்கிறார்கள் அதில் சில மாணவிகள்.
எப்படியேனும் துருவனை தங்களுக்கு பயிற்சியளிப்பதில் இருந்து மாற்றிவிட வேண்டும்' என்று அய்ந்து மாணவிகள் புகார் அளிக்கவும், பழி சுமத்தவும் செய்கிறார்கள். ஏற்கெனவே துருவனின் மீது ஜாதி ரீதியாக வெறுப்பும் ஏளனமும் கொண்டிருக்கும் கணபதிராம் அதனைப் பயன்படுத்தி துருவனை மட்டம் தட்டவும், தண்டனை வழங்கவும் முன்வருகிறார். எதையும் பொறுமையுடன் சமாளிக்கும் துருவன், முதல் கட்டப் பயிற்சி முடித்து காட்டுக்குள் செல்லும் பயிற்சிக்காக மாணவிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, சரியாகப் பயிற்சி எடுக்காத அந்த அய்ந்து மாணவிகளுக்குத் தான் பயிற்சி தேவை என்று அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்.

அதே வேளையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இயற்கை வேளாண்மைக்கு உதவுவதற்காக பசுமை -1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த இருக்கிறது. இயல்பாகவே குறும்புத் தனமும், துருவன் மேல் அசூயையும் கொண்டுள்ள மாணவிகள் (துருவன் மீது நேசப் பார்வை வீசும் அஜிதா தவிர), துருவனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட்டதில், வந்த வாகனத்தையும் இழந்து, மாலையே பயிற்சியகத்திற்கு திரும்ப முடியாதபடி நடுக்காட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். அவ்விரவில், மனித நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில், இரண்டு வெள்ளைக்காரர்கள் உலாவுவதைப் பார்க்கும் ஒரு மாணவி அதுகுறித்து துருவனிடம் சொல்ல, அவர்கள் இருவரல்ல... 16 பேர் இருப்பதைக் காண்கிறார்கள். அவர்களின் திட்டம் ராக்கெட் ஏவுவதைத் தடுப்பதாக இருக்கும் என்பதை ஊகிக்கும் துருவன், மாணவிகள் அய்வரின் துணையுடன் அதை முறியடிக்கத் துணிகிறார்.

உடனடித் தொடர்போ, தகவலோ இன்றி, காட்டுக்குள் சென்ற துருவனும் மாணவியரும் திரும்பி வராததால், துருவன் மீது புகாரை வலிந்து பெற்றுக் கொண்டு, படையுடன் காட்டுக்குள் நுழைகிறார் கணபதிராம். மழைவாழ் மக்களின் இருப்பிடத்திலிருந்து அவர்களை விரட்டியும், தகவல் சொல்ல வந்து சேற்றில் சிக்கி இறந்து போன மாணவி அஜிதாவின் பிணத்தைக் காட்டி, துருவனை சுடுவதற்கு அனுமதி வாங்கியும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.

மறுபுறம் நான்கு மாணவிகளுடன் தன்னால் இயன்ற அளவு, சர்வதேச கூலிப் படையின் சதியைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் துருவன். இரண்டு மாணவிகளின் உயிரைப் பலி கொடுத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக துருவன் உள்ளிட்டோர் போரிடுகிறார்கள்; முடிவில் அவர்கள் முயற்சி வெற்றிபெறுகிறது.

கணபதிராம் வீரதீரச் செயல்களுக்கான விருது பெறுகிறார். அடுத்த கல்லூரி மாணவிகளின் பயிற்சியைத் தொடங்குகிறார் துருவன்.
ஒரு வேளை இந்தக் கரு விஜயகாந்த் கையிலோ, மற்ற இயக்குநர்கள் கையிலோ கிடைத்திருந்தால், சர்வதேச கூலிப்படை- பாகிஸ்தான் சதியாகியிருக்கும். நாயகன் மீதான வெறுப்பு கல்வி அறிவற்ற ஏழை என்ற அளவில் மொன்னையாக காட்டப்பட்டிருக்கும். நாயகிகளின் கனவுப் பாட்டு இரண்டு மூன்றாவது இருந்திருக்கும். அய்யய்யோ... இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்குமோ நினைக்கவே பயமாக இருக்கிறது.

சரி, ஒரு திரைப்படம் என்ற அளவில், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களின் பணியும் வியக்க வைக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என்று அனைவரும் வாயில் படம் எடுத்துக் கொண்டிருக்க, உண்மையில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான வியத்தகு காட்சிகளோடு, அதை சத்தமில்லாமல் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.

பொத்தாம் பொதுவான பார்வையில்லை. எல்லா ஆயுதத்தையும், எதற்கென்றே தெரியா மல் பயன்படுத்தும் படங்கள் மத்தியில், ஒவ்வொரு ஆயுதத்தையும் எதற்கு இது, எப்படிப் பயன்படுத்துவது என்பது வரை சொல்லிக் காட்டுவது ஒன்றே மற்றவற்றிலிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டிவிடும்.
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? நிச்சயம் இருக்கிறது.
உயிரியல் ஆயுதங்களைப் பரிசோதிக்கும் கூடமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஈ' படத்தில் சொன்னது போல, வளரும் நாடுகளை ஒழிக்க நினைக்கும் சர்வதேச முதலாளித்துவத்தை உரித்துக் காட்டும் சர்வதேச அரசியல் குறித்த சிந்தனை இருக்கிறது இந்தப் படத்தில்!

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இருக்கிறது இந்தப்படத்தில். ஆம். இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு வாழ்ந்துவரும் மலைவாழ் மக்கள் மீது, மண்ணின் மைந்தர்கள் மீது வந்தேறிகள் நடத்தும் வன்முறை பதிவாகியிருக்கிறது இந்தப் படத்தில்!
அடக்கி வைக்கப்பட்ட அறிவை வெளிக்கொண்டு வந்தாலும், அதன் மீது தங்கள் அதிகாரத்தைப் பாய்ச்சி நசுக்க நினைக்கும் அதிகார மனநோயாளிகளின் ஆரிய சர்வாதிகாரத்தின் உண்மை முகம் வெளிச்சமிடப்படுகிறது இந்தப் படத்தில்!

உழைப்பைச் சுரண்டிச் சுரண்டியே உயர்ந்து வந்த உலுத்தர்களின் அடையாளம் காட்டப்படுகிறது இந்தப் படத்தில்!

"செருப்புத் தைக்கிறவன் பிள்ளை செருப்பு தான் தைக்கணுமா? மலம் எடுக்கிறவன் பிள்ளை மலம்தான் எடுக்கணுமா? நாங்கள் லாம் படிச்சு அதிகாரியா வரக்கூடாதா?" என்று காலம் காலமாய் தேங்கி நிற்கும் கேள்வி உரத்து கேட்கப்படுகிறது இந்தப் படத்தில்!

ஒரு படத்தில் இத்தனையுமா? ஆம்.. இருக்கிறது... இன்னும் இருக்கிறது!

காரணம்... இதையெல்லாம் சொல்லத் தெரியும் என்பதையும், பன்னீர் செல்வம்' என்று பெயரிட்டு கறுப்பான ஆளைக்காட்டி லஞ்சப் பேர்வழி யாகவும், அங்கவை, சங்கவை என்று கறுப்பான மகளிரை நகைப்பிற்கிடமாகவும் காட்டும் அரசியல் சுஜாதாக்களுக்கு தெரியுமென்றால்...

கறுப்புச் சட்டை அணிவித்து ரவுடி அரசியல்வாதி என்று பாரதிராஜாவை நடிக்க வைக்கும் அரசியல் மணிரத்னங்களுக்கு தெரியுமென்றால்... அதே வழியில் 'டாக்டர் ராம கிருஷ்ணன்' என்று பன்னாட்டு மக்கள் விரோத அறிவியல் ரவுடிகளையும், 'கணபதி ராம்' என்று ஜாதி வெறியர்களையும் அடையாளம் காட்டும் அரசியல் எங்களுக்கும் தெரியும் என்று புரிய வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்!

"அகமும் புறமும் வென்றவன்' - இது தான் பேராண்மைக்கு ஜனநாதன் தந்த விளக்கம்" என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார். அப்படி ஒரு பாத்திரப் படைப்புதான் துருவன். 'நிர்வாணமாய் வரச் சொன்னான்' என்று திட்டமிட்டு குற்றம் சாட்டி, தண்டனை பெற்றுத் தரும்போதும் பொறுமை காத்து, தண்டனையை ஏற்றுக் கொள்ளும் துருவன், பின்னொரு கணத்தில் சொல்வார், "எங்க மக்களுக்கு தலைப்பிரசவம் பார்க்கிறதுக்கு என்னைதான் கூப்பிடுவாங்க.. என்னுடைய பார்வையில் நிர்வாணம்கிறதே வேற".

"அய்ந்து பெண்களை தனியாய் ஒரு ஆணுடன் அனுப்பும்போது நம்பிக்கையாய் அனுப்ப துருவனை விட்டால் யார் இருக்கிறார்" என்று கல்லூரிப் பேராசிரியையின் நம்பிக்கையும், துருவனை 'ரேப்பிஸ்ட்'டாக சித்தரிக்க முயலும் கணபதிராமிடம் "கற்பழிப்புங்கிறதே எங்க இனத்தில கிடையாது சார்" என்று பதறும் வடிவேலுவின் தவிப்பும் அகத்தை வென்ற துருவனின் பேராண்மையைப் படம் பிடிக்கின்றன.

மாணவிகளின் குறும்புத் தனத்தைக் காட்டவும், இன்றைய இளைய தலைமுறை யின் போக்கைக் காட்டவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. பொறுத்துக் கொள்ள முடியவில்லை; தவிர்த்திருக்கலாம்.

மலைவாழ் மக்கள் மீதுதான் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மை. பூர்வகுடி மக்களை, அவர்களின் மண்ணிலிருந்து விரட்ட அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு காட்சியில் உணர்த்தி விடுகிறார். துருவன் மீது பழிபோட்டு, அவனைத் தேடுகிறோம் என்று பழங்குடி மக்களை ஊரைக் காலி செய்யச் சொல்லும்போது அதிகாரம் நிகழ்த்துகிற வன்முறை கோபத்தையும், கண்ணீரையும் ஒருங்கே வரவழைக்கிறது. 'நீங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டா நாங்க என்னடா பண்றது?' என்று புத்தகங்களைத் தூக்கிப் போட்டு எரிக்கும்போது பார்ப்பனீயத்தின் விஷ நாக்குகள் எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பது புரியும்.

"படிக்கலைன்னா தான் அடிப்பாங்க... இவங்க படிச்சா அடிக்கிறாங்க" என்றபடி கரும்பலகையைக் காப்பாற்றும் குழந்தைகளின் வசனம், ஏதோ சாதாரணமானதல்ல... முதல் தலைமுறையார் படிக்க ஆவல் கொண்டு பள்ளிக்குப் போன ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனக் குழந்தையும் அனுபவித்த கொடுமை யின் வெளிப்பாடு. அத்தனை வன்முறையையும் நிகழ்த்திவிட்டு, "இப்போ தெரியுதாடா 'அரசு, அரசாங்கம், அதிகாரம்'ன்னா என்னன்னு?" என்று கொக்கரிக்கும்போதும், ஜாதியை வைத்து இழிவு செய்யும் போதும், துருவனின் வெற்றியத் திருடி கணபதிராம் விருது வாங்கும்போதும் திரையரங்கில் மக்களின் கோபத்தின் வெப்பத்தை உணர முடிகிறது. ஆங்காங்கே விளையாடியிருக்கும் சென்சாரின் கத்திரிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணத்தை பெட்டிச் செய்தியில் காண்க.

ஒவ்வொரு காட்சியிலும், ஏதாவதொன்றச் சொல்லிவிடும் தவிப்பு இருக்கிறது இயக்குநரிடம். ஆனால் பிரச்சாரம் என்ற பாணியிலன்றி, வெகு இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவுடைமையின் அடிப்படையை இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா? உழைப்புதான் அத்தனைக்கும் காரணம் என்பதை மிகமிக எளிதாக அரசியல் பொருளாதாரம் என்று வகுப்பாகவே எடுத்துவிடுகிறார். (போனஸ், படி உயர்வு பிரச்சினைகளைத் தாண்டி கம்யூனிஸ்டுகள் கூட இத்தனை ஆண்டுகளில் இதைச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகமே!)

"தமிழனோட வீரத்தை உலகமே பார்த்து வியக்குது" என்ற வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டு திரையரங்கில் ஆரவாரம் கேட்கிறது. இந்திய நாட்டைக் காப்போம் என்ற உறுதியெல்லாம், இங்கு வாழும் உழைக்கும் மக்களைக் குறிக்கிறது என்பதையும், இந்தியா வல்லரசாவதெல்லாம், விவசா யத்தை நம்பி வாழும் மக்களை விட்டுவிட்டு நடக்காது என்பதையும் உணர்த்துகிறார். இயற்கை வேளாண்மை, மலட்டு விதைகள், பசுமைக்காக ராக்கெட், உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்று இந்த வார்த்தைகளை யெல்லாம் கேட்டேயிராத இளைஞர்களின் காதுகளில் சங்காக ஊதி சர்வதேச அரசியலைப் படிக்கச் சொல்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "காட்டுப் புலி அடிச்சு" பாடலின் அந்தக் கடவுள் பொறக்கும் முன்னே இந்த பூமிக்கு வந்தவுக' உள்பட வரிகள் ஒவ்வொன் றும் குறிப்பிடத்தக்கவை.

"கிராமப் பெண்களுக்கு மாராப்பை விலக்கி விலக்கியே காலம் போச்சு; நகரத்துப் பெண்களுக்கு முடியை ஒதுக்கிவிட்டே காலம் போச்சு" என்று தந்தை பெரியாரின் குரல் தான் துருவன் வழி கேட்கிறது. காட்டின் ரகசியத்தை, போரியல் நுணுக்கங்களை சொல்லி வரும் போதும், கன்னிவெடி குறித்து மனிதநேயர் களின் கருத்தை விதைக்கிறார். தவறான கருத்து எங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநரின் அக்கறை புலப்படுகிறது. இன்னும் எடுத்துச்சொல்ல ஏராளம் இருக்கிறது.. பக்கம்தான் இல்லை!

இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் துருவன் காட்டும் பொறுமையை யாரேனும் கேள்விக்குள்ளாக்கலாம். காலமெல்லாம் தன் பிரச்சாரத்திற்கு வந்த எதிர்ப்புகளையும், தனக்கு வந்த இழிவுகளையும் பொறுமையாகக் கையாண்ட தந்தை பெரியாரின் பொது வாழ்க்கை முறையை எண்ணிப்பார்த்தால் துருவனின் நியாய புலப்படும். ஆனால், "ரிசர்வேசன் கோட்டாவில படிச்சு வந்த உங்களுக்கு என்ன தெரியும்?னு நினைச்சுட்டோம் சார். எங்களை மன்னிச்சுடுங்க" என்று சொல்ல வைக்கிறாரே அங்குதான் இருக்கிறது முழுமையான வெற்றி!

இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தியும், திரித்தும், விளங்காமலும் படங்கள் வெளிவந்துள்ள சூழலில் இடஒதுக்கீட்டின் பயனை, தகுதி-திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் வன்மத்தை எடுத்துக் காட்டி வெளிவந்திருக்கும் பேராண்மை படத்தை பார்ப்பதும், பரப்புவதும் சமூகநீதியிலும், ஒடுக்கப்பட்டோர் உரிமையிலும் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.


சென்சாருக்கு நன்றி!
ரிசர்வேசன் கோட்டாவில் படித்து வந்தவன் என்று கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு கணபதிராமும், மாணவிகளும் துருவனைப் பார்த்து கேலிசெய்யும் வசனங்களைப் பல இடங்களில் ஊமையாக்கி இருக்கிறது சென்சார் போர்டு. நீ எடுத்த மதிப்பெண் எவ்வளவு? என்று கேட்டு, மாணவிகள் மத்தியில் மட்டம் தட்ட நினைக்கும்போதும், இவங்கள்லாம் காட்டுமிராண்டித் தனமாத் தான் நடந்துக்குவாங்க என்று சொல்லும்போதும் அடுத்தடுத்த வசனங் களை வெட்டியிருக்கும் சென்சார் போர்டுக்கு, அவ்வசனங்கள் எம்மக்களை இழிவுபடுத்தும் என்பதல்ல அக்கறை. அவற்றையெல்லாம் கேட்டு விட்டால் எங்கே மக்களுக்கு கோபம் வந்து விடுமோ என்பது தான் கவலை. அந்த வகையில் சென்சார் போர்டுக்கு நாம் நமது நன்றியைச் சொல்லியே ஆக வேண்டும். காரணம், அப்படியே வசனங்கள் வந்திருந்தால் கூட காதில் விழாமல் போயிருக்கலாம்; கவனம் பெறாமல் போயிருக்க லாம். கத்திரிபட்டதால் வசனங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ளப் பட்டதாலும், அதை வெட்டியிருக்கிறார்களே என்ற கோபத்தாலும், திரையரங்குகளில் எதிர்க் குரல்களைக் கேட்க முடிகிறது.

'பராசக்தி'யில் "அம்பாள் எந்தக்காலத்திலடா பேசினாள்; அது பேசாது- கல்" என்று முழுதாய் சொல்ல விட்டிருந்தால் சிவாஜி கணேசன் மட்டும் தான் சொல்லியிருப்பார். ஆனால் 'கல்' என்ற வார்த்தைக்கு மட்டும் வெட்டுக் கொடுத்து, படம் பார்த்த அனைவரையும் 'கல்' என்று சொல்ல வைத்த பெருமை எப்படி சென்சாரையே சாருமோ அப்படித்தான் இந்தப்படத்திலும்! 'சுரணையற்ற எங்கள் மக்களுக்கு திரையரங்கிலும் கோபம் வருமா?' வரவைத்த சென்சார் துறைக்கு நமது நன்றியைச் சொல்லாவிட்டால் நாம் நன்றி கொன்றவர்களாவோம்...!

-சமா இளவரசன்



http://ulagacinema.blogspot.com/2009/11/blog-post.html




வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் வேண்டுகோள்: போரை தொடர்ந்து நடத்துங்கள்



http://www.tamilnet.com/img/publish/2004/08/ltte_rpg_force_3_27874_435.jpg
யாழ்ப்பாணம், நவ. 9-

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

ஈழத்தமிழ் இனம் மீது சிங்களர்கள் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து விட்டது வரலாற்று உண்மையாகும். தமிழர்கள் தொடர்ச்சியாக அரசியல் உரிமைகளை இழந்து விட்டனர். என வேதான் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய வீரப் போராட்டம், முள்ளிவாய்க்காலில் மானிட பேரவலம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டன. இத்தகைய சூழ் நிலையில் ஈழப் போராட்டத்தை தொடர்ச்சியாக தலைமை ஏற்று நடத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் என்ற இறை மையை சிதைக்கும் முயற்சி கள் நடந்து வருகின்றன. எனவே சுதந்திர தமிழ் ஈழத் துக்கான விருப்பத்தையும் அதற்கான சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும் ஈழத் தமிழர்கள் உலகுக்கு ஆணித்தரமாக சொல்லி உணர்த்த வேண்டும்.

விடுதலைக்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டியது ஈழத்தமிழ் மக்களின் உடனடி வரலாற்று கடமையாகிறது. வட்டுக் கோட்டை தீர்மானத்தை மீண்டும் வழிமொழிய வேண்டும். இந்த வழி மொழிவு ஈழத்தமிழரின் தேசிய அரசியல் போக்கை தீர்மானிக்கும் முதல் கட்டமாகும்.

தமிழ் மக்களின் உரிமைகளை நியாயப்படுத்த நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய கட்டாய தேவையாகும். ஈழத் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள்அவை உருவாக்கி விரிவுபடுத்த வேண்டும்.

வல்லரசுகளிடம் இருந்து நம் தேசிய அரசியலை பாதுகாக்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசின் அடி மட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

இதற்காக ஒன்றிணைந்து உழைப்பதுதான் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்க அஞ்சலியாக இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/2009/11/09154116/CNI0150901109.html




ராமேசுவரத்தில் இன்று பரபரப்பு: ராஜபக்சே தங்கை-மைத்துனருக்கு கறுப்பு கொடி; ம.தி.மு.க.வினர் உள்பட 7 பேர் கைது



ராமேசுவரம், நவ. 9-

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா. இவரது கணவர் திருக்குமரன்நடேசன். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். திருக்குமரன் நடசேன் தனது மனைவியுடன் கடந்த 7-ந்தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அங்கு இருந்து அவர்கள் நேற்று ராமேசுவரம் புறப்பட்டு வந்தனர்.

ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் ஓட்டலில் அவர்கள் நேற்று தங்கினர். இன்று காலை 6 மணி அளவில் திருக்குமரன் நடேசன் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். அதன் பிறகு ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினார்.

பின்னர் ஓட்டலுக்கு திரும்பிய திருக்குமரன் நடேசன் தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக தெற்கு ரதவீதியில் உள்ள ஒரு மண்டபத்துக்கு மனைவியுடன் காரில் வந்தார். காரை விட்டு அவர் இறங்குவதற்குள் அவருக்கு கறுப்பு கொடி காட்ட சிலர் முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி திருக்குமரன் நடேசனையும், அவரது மனைவியையும் மண்டபத்துக்குள் அழைத்து சென்றனர்.

தமிழர்களை கொன்ற ராஜபக்சே ஒழிக. திரும்பி போ... திரும்பி போ... தமிழகத்தை விட்டு திரும்பி போ... என்று கருப்பு கொடியுடன் கோஷம் போட்டப்படி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ம.தி.மு.க. நகர் இளைஞர் அணி அமைப்பாளர் இளங்கோ, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் சரவணன், நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலோன்குமார், காலின், ஜெகன், நம்புகுமார், வக்கீல் மயில்சாமி ஆகிய 7 பேரும் தொடர்ந்து கோஷம் போட்டப்படி இருந்தனர். அவர்களை சப்-இன்ஸ் பெக்டர்கள் சந்தனமோகன், சிலைமணி ஆகியோர் கைது செய்து ராமேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. கமலாபாய் நேரில் வந்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்தினார். மண்டப வாசல் முன்பு துப்பாக்கி ஏந்தி போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

http://www.maalaimalar.com/2009/11/09171516/MDU14091109.html


தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்

http://2.bp.blogspot.com/_oTEioi8kN7M/SF9Gxa4fhzI/AAAAAAAAAFE/6DuFenFMdvE/s320/bribery.gif


தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ஒரு துறை, 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறை உயிரோடு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள அவ்வப்போது, செய்தித் தாளில் “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது“, “லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது“ என்று சில செய்திகளை பார்த்துள்ளோம்.

விஏஓக்களும், தலைமைக் காவலர்களும், சர்வேயர்களும் மட்டும்தான் தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்குகிறார்களா ?

உயர் அதிகாரிகள் யாரும் வாங்குவதில்லையா ?

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாரும் தமிழ்நாட்டில் யோக்கியர்களா ?


அவர்கள் மீது ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பாய்வதில்லை ? இதை ஆராயும் முன் லஞ்ச ஒழிப்புத் துறை, தன்னுடைய செயல்பாடுகளில் நேர்மையாக இருக்கிறதா என்பதை முதலில் பார்ப்போம்.


மே 2008ல், தமிழக அரசு, ஒரு ஆணையின் மூலம், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மற்றும் விழிப்பு பணி ஆணையம் (Vigilance Commission) ஆகிய இரு துறைகளும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளித்து ஆணையிட்டது. இதற்கான காரணம் அந்த அரசு ஆணையில் “தற்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதால்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறு விலக்கு அளிக்கப் பட்டாலும், விலக்கு அளிக்கப் பட்டுள்ள துறைகளில் “ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்“ தொடர்பான தகவல்கள் கேட்கப் பட்டால், இந்த விதிவிலக்கு பொருந்தாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24 (4) கூறுகிறது.



கடந்த ஏப்ரல் 2009ல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பப் பட்டது. அந்த விண்ணப்பத்தில் “லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்து 31.12.2008ல் கே.நடராஜன், ஐபிஎஸ் என்ற அதிகாரி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகும், அவரது வீட்டில் TN-01-G-3939 என்ற அம்பாசிடர் கார் மற்றும் TN-07-G-2524 என்ற பொலிரோ ஜீப்பும் ஓடி வருகிறது. இந்த வாகனங்களை காவலர்கள் இயக்கி வருகிறார்கள். இவ்வாறு ஓய்வு பெற்ற அலுவலர்கள் வீட்டில், அரசு வாகனங்கள் பயன்படுத்துவது என்பது, லஞ்ச ஒழிப்புச் சட்டம் 13 (1) (c) r/w 13 (2) ஆகிய லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் என்றும் இந்த ஊழல் புகார் காரணமாக இந்த இரு வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர் பெயர், அவ்வாகனங்களுக்கு எவ்வளவு எரிபொருள் ஒரு மாதத்துக்கு செலவாகிறது, அந்த இரு வாகனங்களின் பதிவேடுகளின் நகல்கள் போன்ற பல விபரங்கள் கேட்கப் பட்டிருந்தன.


இந்த விண்ணப்பத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் மத்திய சரக காவல் கண்காணிப்பாளர் லட்சுமி, லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பதில் அனுப்பினார். இந்த பதிலை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையில் மேல் முறையீடு செய்ததற்கும் இதே பதில் தான் கிடைத்தது. இதை எதிர்த்து தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்ததன் பேரில், கடந்த வெள்ளியன்று, விசாரணை நடைபெற்றது.

இவ்விசாரணையில், மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். தனது வாதத்தில், சட்டத்தின் பிரிவு 24 (4), ஊழல் மற்றும் மனித உரிமை தொடர்பான விபரங்கள் கேட்கப் பட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டாலும் தகவல் கொடுத்தே ஆக வேண்டும் என்று வாதாடினார்.

மேலும், தனது வாதத்தின் போது, திடுக்கிடும் புகார் ஒன்றையும் கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டபின், வேறு ஒரு நபருக்கு தகவல் வழங்கப் பட்டிருப்பதாகவும், இவ்வாறு, ஒரு நபருக்கு தகவல் வழங்கி, இன்னொரு நபருக்கு தகவல் வழங்காமல் இருப்பதென்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 20ன் படி, தண்டனைக்குரிய குற்றம் என்றும், பொது தகவல் அலுவலர் மீது, துறை நடவடிக்கை எடுப்பதோடல்லாமல், ரூபாய் 25,000 அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தகவல் ஆணையர் பெருமாள்சாமி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.


அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் ஒரு மாதத்துக்கு 160 லிட்டரும், டீசல் ஒரு மாதத்துக்கு 90 லிட்டரும், உச்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இது போகவும், மாதத்துக்கு தலா 100 லிட்டர் வரை “எக்ஸ்ட்ரா கோட்டா“ உண்டு. மனுதாரர் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ள புகார்கள் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்துக்கு 160 லிட்டர் பெட்ரோலுக்கு 160 X 50 = 8000.

ஒரு மாதத்துக்கு 90 லிட்டர் டீசலுக்கு 90 X 35 = 3150. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள் உண்டு. ஒரு டிரைவருக்கு, காவலர் என்ற தரத்தில் வைத்துப் பார்த்தால் மாதம் 10,000 சராசரியாக ஊதியமாக இருக்கும். இரண்டு வண்டிகளுக்கு 4 டிரைவர்கள். மொத்தம் ரூபாய் 40,000. எரிபொருள், டிரைவர் ஊதியம் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மாதச் செலவு ரூபாய் 51,150. (இதில் எக்ஸ்ட்ரா கோட்டா சேர்க்கப் படவில்லை.)

இவ்வாறு, நடராஜன் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி மாதத்திலிருந்து கணக்கிட்டால், தகவல் கேட்ட ஏப்ரல் மாதம் வரை ரூ.2,04,600 ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

இந்தத் தொகை, யாருடைய பணம் ? குப்பனும், சுப்பனும் கட்டும் மக்கள் வரிப்பணம். இப்படி மக்கள் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கொள்ளை அடித்தால், இதர துறைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

இப்போது யோசியுங்கள். 300 ரூபாயும், 500 ரூபாயும் லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன யோக்யதை இருக்கிறது ?

லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்த ஒரு நபர், இப்படி மக்கள் வரிப்பணத்தை, ஊழல் செய்தால், பிற துறைகளில் இருக்கும் அதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள் !

எப்படி இருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கித்தனம்


http://www.nankooram.com/wp-content/uploads/2009/02/naan-kadavul-gallery-nankooram-6.jpg

பாலா தீவிரமான நாத்திகர்.ஆனால்,அவர் மனைவி எப்போது, எந்தக் கோயிலுக்கு அழைத்தாலும் மறுக்காமல் கிளம்பிப் போவார்!

ஈழத் தமிழர் மீது மிகுந்த அனுதாபம் உடையவர்.புலித் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகச் சொல்லப்பட்டபோது, மனசு தாங்காமல் அழுது கொண்டே இருந்தார்.ஆனால், பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறவர்களில் பாலாவும் ஒருவர்!

http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/director_bala04.jpg


http://3.bp.blogspot.com/_v193SHjWnrA/SZEfQgUNLsI/AAAAAAAAAgM/jieH1ueKxJQ/s400/Naan-Kadavul11.jpg



யாகத்தில் என்னதான் செய்வார்கள்?பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ?

[Yajna1.jpg]



யாகமாம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அண்மையில் வேள்விச் சாலை (யாகம்) நடத்தினார்கள். செலவு எவ்வளவு தெரியுமா? பதினாறு லட்சம்தான்.

அப்படி யாகத்தில் என்னதான் செய்வார்கள்? உணவுப் பொருள்களையும் (மிக முக்கியமாக நெய், பால் வகையறாக்கள்) பட்டுத் துணிகள் முதலானவற்றையும் தீயில் போட்டுக் கொளுத்துவார்கள். அதாவது மக்களுக்கு அன்றாடத் தேவையான உணவுப் பொருள்களைத் தீயில் போட்டுப் பொசுக்கி நாசப்படுத்துவார்கள்.

இவ்வளவுக்கும் இந்தியாவில் 50 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம் அடைகின்றனர். ஊட்டச்சத்து இல்லாத உலக மக்களில் 27 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனராம்.

இந்த நிலையில்தான் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் உள்ளிட்ட இன்றியமையாத பொருள்களை பக்தி என்ற பெயரால் ‘‘கிரிமினல் வேலையில்’’ ‘பிள்ளை விளையாட்டாக’ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த யாகத்தில் பொருள்கள் நட்டமடைந்தாலும், யாகப் புரோகிதப் பார்ப்பான் வயிற்றில் மட்டும் அறுத்துக் கட்டுவது ஏராளம்.

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்பார் நடிகவேள் ராதா இரத்தக்கண்ணீர் நாடகத்தில் அதுதான் நினைவிற்கு வருகிறது.

பாலில் நீர் கலந்தால் கலப்படக் குற்றத்தின்கீழ் கைது செய்யும் சட்டம் இருக்கிறது. ஆனால், நெருப்பில் உணவுப் பொருள்களைக் கொட்டினால், அது தெய்வ காரியமோ!

இதில் இன்னொரு கொடுமையும் கூத்தாடுகிறது. இந்த யாகத்தைச் செய்வதற்குமுன் பூமி பூஜை செய்யவேண்டுமாம்; அதைச் செய்யாமல் யாகம் செய்துவிட்டார்களாம். அது சாத்திரக் குற்றமாம்! நீதிமன்றம் எதற்கு இருக்கிறது?

இந்து மதவாதி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தார். கனம் நீதிமன்றம் சாத்திரங்களையெல்லாம் கரைத்துக் குடித்து சோதனை செய்து பார்த்து, ‘ஆமாம், ஆமாம் சாத்திரக்குற்றம்தான், எனவே, பரிகாரப் பூஜை செய்யவேண்டும்’ என்று ‘கறாராக’ தீர்ப்பு அளித்துவிட்டது.

இந்தப் பரிகாரப் பூஜைக்கு ஆன செலவு என்ன தெரியுமா? மறுபடியும் ரூ.17 லட்சமாம்.

பார்ப்பனிய அமைப்பில் சாத்திரப்படி நடந்துகொண்டாலும் அவாளுக்கு இலாபம் சாத்திரத்தை மீறி நடந்துகொண்டாலும் கொள்ளை இலாபம்.

இந்தத் தகடுதத்தம் மோசடியை உலகில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?

நியாயப்படி என்ன செய்திருக்கவேண்டும்? பூமிப் பூஜை செய்யாததால் ஏற்பட்ட நட்டத் தொகையை, அதற்குக் காரணமான புரோகிதர்களிடமிருந்துதானே பறிமுதல் செய்திருக்கவேண்டும்?

பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ?
-------------------- மயிலாடன் அவர்கள் 9-11-2009 "விடுதலை"

http://thamizhoviya.blogspot.com/2009/11/blog-post_3329.html

http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/thalaivar-5-640x425.jpg

நாற்காலி..

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை

நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.

வீடு தூங்க கட்டில்

நாடு தூங்க நாற்காலி


கோயில்..

செருப்புகளை வெளியே விட்டு

உள்ளே போகிறது அழுக்கு.


ஊரில் உங்கள் சுடுகாடு.

சுடுகாட்டில் எங்கள் ஊர்.

உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன்

http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg

பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...



http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg


Update me when site is updated
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!