Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, July 10, 2009

♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 36 -"தினமணி" தொடர் ♥




"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-36: ஜெயவர்த்தனாவின் அடக்குமுறைகள்



ஜெயவர்த்தனா



1977-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன் வைத்து நிற்கும் அதே வேளையில் தமிழர் மத்தியிலான எழுச்சி, உணர்ச்சி ஊட்டக்கூடியதாக மாறியது. அதேபோன்று சிங்கள வெறியர்களின் வெறியாட்டமும் வேகமடைந்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டுமே இனக் கலவரம் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதை ஒட்டியே 1977-ஆம் ஆண்டுக் கலகத்தை காண வேண்டும்.

1977-ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி அடைந்து ஆட்சியை அமைத்தது வெறிக் கூட்டத்திற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.

அநுராதாபுரம், குருனாகலை, கோகாலை, களனியா, கொழும்பு, கந்தளாய், அம்பாறை, திருகோணமலை, மூதூர், இரத்னபுரி, கண்டி ஆகிய மாவட்டப் பகுதிகள் கலவரத்தின் அடித்தளமாக விளங்கின. 1977-இல் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் மடிந்தனர். இக் கலவரத்தால் 77,000 தோட்டத் தொழிலாளர்கள் வீடிழந்து அகதிகளாயினர்.

அரசாங்கத்தின் தலைவர்கள் வெறிமிக்க வகையில் அறிக்கைகளை விடுத்தனர். "போர் என்றால் போர்' "சமாதானம் என்றால் சமாதானம்' என்று ஜெயவர்த்தன கொக்கரித்தார். "சிங்களவரோடு போரிட்டு மடியப் போகிறீர்களா அல்லது இணங்கி வாழப் போகிறீர்களா என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்' என்று வெளிப்படையாகவே அறிக்கை விடுத்தவர் ஜெயவர்த்தன.

தமிழ் ஈழத்திற்காகப் போராடுவோர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியே இந்த அடக்குமுறையைச் சிங்களவர்கள் கையாண்டனர்.

அரசு தரப்பில் உள்ள வெறியர்களாலேயே தமிழ் எதிர்ப்புப் பிரசாரம் செய்யப்பட்டது. அமைச்சர் சிறில் மத்தியூ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், ""பயங்கரவாதத்தைச் சட்டபூர்வமான வழிமுறைகளில் தடுத்து நிறுத்த முடியாது; யாரும் தடுத்து நிறுத்தியதும் இல்லை. பயங்கரவாதம், பயங்கரவாதத்தாலேதான் இதுவரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.*

இந்தக் கலவரத்தில் குண்டர்களை அணி திரட்டுவது என்பது போய், அரசே போலீசை அணி திரட்டி தாக்குதலை மேற்கொண்டது. இதில் இரண்டு வகைத் தந்திரங்கள் கையாளப்பட்டன.

சிங்களவர்கள் பெரும்பான்மையாய் உள்ள தென் பகுதியில், சிங்கள மக்களில் இருந்து குண்டர்களைத் திரட்டிச் சிறுபான்மைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால் வட பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், அரசின் காவல் துறையே ஆயுதமேந்தித் தாக்கியது. அரசு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் இக்கலவரத்தை முன்னின்று நடத்த வழிகாட்டியாய் இருந்த டி.ஐ.ஜி. கலவரம் முடிந்தவுடன் ஐ.ஜி. ஆகப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறார்.

1977-இல் நடந்த இந்த மோசமான கலவரத்தைப் பற்றி அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல்வேறு மனித உரிமைக் கழகங்கள் நிர்ப்பந்தித்தன. கலவரத்தைப் பற்றி விசாரிக்க அனா செனிவரத்தினாவையே அரசு நியமிக்கிறது. அவர் அளித்த அறிக்கையை 1983-இல்தான் அரசு வெளியிட்டது. அந்தச் சமயம் அவர் மலேசியாவில் ஹை கமிஷனராக பதவி பெற்றுப் போய்விட்டார்.

அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அவர் குறிப்பிடுகிறார்: "தேர்தல் நேரத்தில் நடந்த வன்முறையில் 7,817 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 78 துப்பாக்கிச்சூடும், 62 கொலைகளும், திருட்டு, கொள்ளை அடிப்பு, சூறையாடல், கற்பழிப்பு அனைத்தும் இதில் அடங்கும்.

மேலும் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரத்தில் 3,327 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 131 கொலைகளும், 74 கற்பழிப்புகள் உட்பட சூறையாடல்களும், தாக்குதல்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 77-ஆம் ஆண்டு முடிவில் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யும்போது மொத்தம் 83,082 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 76-ஆம் ஆண்டு கலவரத்தை ஒப்பிடுகையில் 48 சதவிகிதம் அதிகமாகி உள்ளது.

இன ரீதியான தாக்குதல்களின் விளைவாகத்தான் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு ஏற்பட்டு இந்த 48 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்பட்டது' என்கிறார்.

1978-ஆம் ஆண்டு ஜெயவர்த்தன புதிய அரசியல் சட்டத்தை அமல்படுத்துகிறார். இதற்கிடையில் அரசாங்கத்தினுடைய அதிரடி விசாரணைக் கைதுகளும், சித்திரவதைகளும் தொடர்ந்து நடக்கின்றன. சித்திரவதை புரிவதில் மிகச் சிறந்த திறமைசாலியாகப் பேர் எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை என்பவர் தீவிரவாத தமிழ் இளைஞர்களால் 25.4.78 அன்று (விடுதலைப்புலிகளால்) துப்பாக்கியால் சுட்டுச் சாகடிக்கப்படுகிறார். ("புலிகள் வரலாறு' 1975-1984)

அதோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக ஒரு போலீஸ் கோஷ்டியே தாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறது. (இன்ஸ்பெக்டர் பேரம்பலம், காவலர் பாலசிங்கம், போலீஸ் டிரைவர் ஸ்ரீவர்த்தனா ஆகியோர்)

உடனடியாக அரசாங்கம் பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவசரநிலைப் பிரகடனம் செய்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது.

6 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். பலர் சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். புதிய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிக்கு ஒட்டுமொத்தமான அதிகாரம் அளிக்கும் வகையில், புத்தமதமும், சிங்கள மொழியும் விசேஷ அந்தஸ்தைப் பெற்று, தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தீவிரவாதத் தமிழ் இளைஞர்களால், ஏர்சிலோன் கம்பனியின் ஆவ்ரோ விமானம் நொறுக்கப்படுகிறது. (7.9.1978-)

இந்நிகழ்ச்சி அரசுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும், தமிழ்ச் சுதந்திர இயக்கத்திற்கு ஓர் உத்வேகத்தை அளிக்கக்கூடியதாகவும் மாறுகிறது. இதற்கிடையில் பல வங்கிகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.

1979-இல் தொடர்ந்து வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜெயவர்த்தன பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமலாக்குகிறார். அரசியல் சட்டத்தில் மனித உரிமைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. எந்தவிதமான விசாரணையுமின்றி, யாரையும் கைது செய்யவோ, 18 மாதம் வரை காவலில் வைக்கவோ ஒரு தனி அதிகாரத்தை ராணுவம் பெறுகிறது. கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்குவதற்கு இது வழிவகுத்தது.

யாழ்ப்பாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணப் பகுதிக்கு ராணுவப் பட்டாளங்கள் மேலும் பல அனுப்பப்படுகின்றன.

பிரிகேடியர் வீரதுங்காவிற்குத் தனி அதிகாரம் அளிக்கப்பட்டு, "தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுங்கள்' என்ற ஜனாதிபதியின் கட்டளையுடன் அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுகிறார்.

6 மாதத்தில் தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று சூளுரைத்து, சட்டத்தால் தனித்த அதிகாரம் அளிக்கப்பட்டு, அரசால் ஊக்குவிக்கப்பட்டு யாழ் பகுதிக்கு அவர் வருகிறார். யாழ் பகுதியில் ஒரு பாசிச ராணுவ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறார்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் கைதும், சித்திரவதையும் மிருகத்தனமாக நடைபெறுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள் சாலையோரத்தில் தூக்கி வீசப்படுகின்றனர்.

லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமும் பல்வேறு சங்கங்களும் இந்தப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டிக்கின்றன. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டவுடனேயே வீடு புகுந்து கைது செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

இப்படி மறைந்து போனவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு சில மாதத்திலேயே மிக உயர்ந்த பட்சமாக வளர்கிறது. யாழ் நகரம் ஒரு மாபெரும் சுடுகாடாக ராணுவத்தால் ஆக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்த்துக் கேட்க ஆளில்லாத ஒரு நிலைமையும் தோன்றியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்துடன் ராணுவம் தொடர்ந்து தமிழர் பகுதியில் நிறுத்திவைக்கப்படவும் ஏற்பாடாயிற்று.

1979 ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை உலகம் கண்டிராத காட்டுமிராண்டித் தர்பார் யாழ் பகுதியிலே நடந்தது. 1980-ஆம் ஆண்டில் ராணுவத்தின் வெறித்தாக்குதல் நடக்கும் அதே நேரத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் மாவட்டங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க வழி ஏதும் இதில் இல்லை.

இதைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் 1981-ஆம் ஆண்டு வருகிறது.

இவ்வாண்டில் அரசுக் காட்டுதர்பாரின் பயங்கரத் தாக்குதல் உச்சநிலையை அடைகிறது. மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் நின்ற ஒரு ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும் இரு போலீஸôரும் தமிழ் இளைஞர்களால் கொல்லப்பட்டனர். ஒரு முஸ்லிம் போலீஸ்காரர் காயம் அடைந்தார். அதற்குமுன் நீர்வேலியில் ஒரு வங்கிக் கொள்ளை நடைபெறுகிறது. இதையொட்டி, பெருமளவில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு மிரட்டப்படுகிறார்கள்.

ராணுவத்தினர் திட்டமிட்ட முறையில் தாக்குதலை ஆரம்பித்தனர். இந்த சமயத்தில்தான் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகத்தின் ("பிரைட் ஆஃப் நார்த்' வடக்கின் பெருமை) என்ற கட்டிடப் பகுதி தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. இதில் பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட கிடைத்தற்கரிய விலை மதிப்பற்ற நூல்களும், தமிழ் இன வரலாற்று ஆதாரப் பொருட்களும் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகளும் சாம்பலாக்கப்பட்டன. இதன் மூலம் வடக்குப் பகுதியின் கெüரவத்தைக் கொளுத்திவிட்டதாக தமிழ் மக்கள் ஆவேச வெறி கொண்டனர்.

உலகின் அனைத்து முனைகளிலும் உள்ள அறிஞர்களும் இந்நூலக எரிப்பால் அதிர்ச்சி அடைந்தனர். இதுமட்டுமல்லாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகம், ஈழநாடு நாளிதழ் அச்சகம், யாழ்ப்பாணத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இல்லம், சுன்னாகம் பொதுக்கடை வீதி ஆகியவைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன!

கடைத்தெருவில் பொதுமக்கள் அனைவரும் தாக்கப்பட்டனர். அதில் பலர் காயமடைந்தனர். 5 பேர் மரணம் அடைந்தனர்.

இந்தப் பயங்கர சூழ்நிலையையும், குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் திட்டமிட்டபடி ஜூன் நான்காம் நாள் நடைபெற்றன. நிர்வாகக் குழப்பத்தைப் பயன்படுத்தி அரசு தேர்தலில் பயங்கர ஊழல்கள் மற்றும் தில்லுமுல்லுகளைச் செய்தது.

அன்று காலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஜெயவர்த்தனாவின் வேட்பாளர் அனைவரும் தமிழர் பகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.

யாழ் பகுதியில் நடந்த அச்சுறுத்தும் அரச பயங்கரவாத அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டறிந்து வெளி உலகிற்குத் தெரியப்படுத்த ங.ஐ.த.ஒ.உ. (ஙர்ஸ்ங்ம்ங்ய்ற் ர்ச் ஐய்ற்ங்ழ் தஹஸ்ரீண்ஹப் ஒன்ள்ற்ண்ஸ்ரீங் அய்க் உவ்ன்ஹப்ண்ற்ஹ்) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சார்லஸ் அபயசேகர உள்ளிட்ட உண்மை அறியும் குழு ஒன்று யாழ் பகுதியில் விசாரணை செய்தது. ஆனால் அவர்கள் தங்கள் அறிக்கையை கொழும்பில் வெளியிட முனைந்தபோது அரசு குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் வன்முறை பரவியது. இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பகுதிகளும் தாக்கப்பட்டு அவர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.

மட்டக்களப்பில் இந்துக்கோவில் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.

ஜூலை முதல் வாரத்திற்குள் அம்பாறை, பதுளை, வெலிஓயா, பண்டாரவளை, நீர்கொழும்பு, கேகாலை போன்ற இடங்களில் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. ஜாஎவை, பேலியாகொடை, அம்பிலிப்பிட்டி, பண்டாரகமை ஆகிய பகுதிகளில் நவீனவகை குண்டர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்த நவீன வகைத் தாக்குதலின் முதல் நிகழ்ச்சியாக, ஒரு புகைவண்டி வழியில் நிறுத்தப்பட்டுக் கொளுத்தப்படுகிறது. பல தமிழர்கள் வண்டியிலிருந்து பிடித்து வெளியில் இழுக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள். பல பிரயாணிகள் பலத்த காயமடைகிறார்கள். அவர்களில் தமிழ் எம்.பி.யும் ஒருவர்.

கலவரம் பல பகுதிகளில் பரவுகிறது. பண்டாரவளைப் பகுதியில் ஜூலை 11-ஆம் நாள் இரண்டாவது தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. இது நீர்கொழும்பையும், கெüனியாவையும் தொற்றுகிறது.

மலையகத் தோட்டப்பகுதியிலும் கலவரம் மூண்டு எட்டியாந்தோட்டை என்ற பகுதியில் மூன்று தமிழ் தோட்டத் தொழிலாளிகள் பேருந்திலிருந்து வெளியில் இழுக்கப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள். பின்னர் பேருந்திற்குத் தீ வைக்கப்பட்டு அதில் தமிழர்கள் எரிக்கப்படுகிறார்கள்.

இரத்தினபுரிப் பகுதியில் கடைகள் சூறையாடப்படுகின்றன; கடைகளைக் கொளுத்திய பின் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் தலைமையில் ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.

மதகுரு எதிரிலேயே ஒரு தமிழர் கொல்லப்படுகிறார். அதுமட்டுமல்ல, அங்குள்ள எஸ்டேட்டிலும் பல தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.

பயங்கரவாதம் ஒரு உச்சநிலைக்குச் சென்றது. இலங்கையே தீப்பற்றி எரியும் வகையில் இனவெறி மிக உச்சமான கோரத்தாண்டவம் ஆடியது.



நாளை: அடக்குமுறையின் உச்சகட்டம்

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&

♥ "இன்னொரு ஈழமாக கர்நாடகா ... ♥




மலேசியாவில் தமிழன் துயர்!

'நாயைவிடக் கேவலமா..?!'

''ஆ
ஸ்திரேலியாவில் சில இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர் என்பதற்காக தூதரகக் கண்டனம், அவசர அமைச்சரவைக் கூட்டம் என ஆர்ப்பரிக்கிறதுஇந்திய அரசு. ஆனால்... மலேசியாவில் பிழைக்கச் சென்று படாத பாடு படும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் விஷயத்தில் இந்திய அரசும், தூதரகமும் பாராமுகம் காட்டுகிறதே ஏன்? தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?'' காரசாரமாகக் கேள்வி கேட்கிறார் கலைவாணன்.

மலேசியாவின் பிரதான எதிர்க்கட்சியான 'மக்கள் நீதிக் கட்சி'யின் கடராம் மாநிலத் தலைவராக இருந்த கலைவாணன்... தற்போது அதில் இருந்து விலகி, 'மாற்று செயல் அணி' என்ற தமிழர் நலன் அமைப்பைத் தொடங்கியுள்ளார். மலேசிய தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக சென்னை வந்திருக்கும் அவரை சந்தித்தோம்.

''மலேசியாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் தமிழர்கள், வேலைக்கு வந்து முறையான


ஆவணங்கள் எதுவும் இன்றி, போலீஸ் கண்ணில் சிக்காமல், அங்கும் இங்கும் தலைமறைவாக இருக்கிறார்கள். இங்குள்ள ஏஜென்ட்டுகள் பணத்துக்கு ஆசைப்பட்டு, அவர் களை மலேசியா அனுப்பிவிடுகிறார்கள். இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கெஞ்சுகின்றனர். ஆனால், இந்திய தூதரகத்தில் தமிழர்கள் நாயை விட கேவலமாக நடத்தப்படுகிறார்கள். டர்பன் கட்டிய பஞ்சாபிகள் மற்றும் வட இந்தியர்கள், தமிழர்கள் என்றாலே அடித்து விரட்டாத குறையாகத் திட்டி அனுப்புகின்றனர். ஒரு நாளைக்கு 400 பேருக்கு விசா அளிப்பதற்காக ஒவ்வொரு நபரிடம் இருந்தும் 165 வெள்ளியை இந்திய தூதரகம் வாங்குகிறது. ஆனால், பாதிக்கப்படும் தமிழர்களைக் காப்பாற்ற அது தயாராக இல்லை.

இத்தனைக்கும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் மலேசியா செல்வது தமிழர்கள்தான். அவர்களுடன் பேசி, பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவதில்லை. எனக்குத் தெரிந்து 20 ஆண்டுக்கும் மேலாக இதே நிலைதான். இதை விடக் கொடுமை... சில சமயம், இப்படி வரும் தமிழர்களை இந்திய தூதரக அதிகாரிகளே மலேசிய போலீஸிடம் பிடித்துக் கொடுப்பதுதான். கடைசியில், அவர்கள் சிறையில் சித்ரவதை செய்யப்படுகின்றனர். அதன் பிறகாவது அவர்களை மீட்டு இந்தியா அனுப்ப முயற்சிக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இப்படி சிறைகளில் உயிரை விட்ட தமிழர்கள் ஏராளம்...'' என்ற கலைவாணன் தொடர்ந்தார்.

''இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகவும் ஏழ்மையான நாடு. ஆனால்... ஏமாற்றப்பட்டு புகார் அளிக்க வரும் வங்கதேசவாசிகளை போலீஸ் கையில் சிக்கா மல் காப்பாற்றுவதற்காக, ஒரு பெரிய கட்டடத்தையே வாடகைக்கு எடுத்துள்ளது வங்கதேச தூதரகம். பரிதவிக்கும் வங்கதேசவாசிகளை தங்க வைத்து உணவு வழங்குகிறார்கள். தேவைப்பட்டால், வங்கதேச தூதர் மலேசிய பிரதமர் வரை பேசுகிறார். ஆனால், இந்தியாவோ தன் நாட்டு தமிழர்களை காட்டிக்கொடுக்கிறது.

இதுவே ஒரு வட இந்தியனுக்கு பிரச்னை என்றால், விழுந்து விழுந்து சேவை செய்கிறது இந்திய தூதரகம். சில மாதங்களுக்கு முன்பு வட இந்தியக் குழு ஒன்று இப்படி மாட்டிக்கொண்டது. அவர்களை பத்திரமாகக் காப்பாற்றி இந்தியா அனுப்பி வைத்தது தூதரகம். இந்திய தூதர கத்தில் இதே ஒரு தமிழன் இருந்தால்... தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? எனவே, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழர்களையும் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். இதை வற்புறுத்தவும், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்திக்க சென்னை வந்தேன். ஆனால், யாரையும் சந்திக்க முடியவில்லை.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும், அல்லது சொந்த மக்களைக் காப்பாற்ற முடியாததற்காக அந்த தூதரகத்தை மூட வேண்டும்!' என முடித்தார் கலைவாணன்.

இந்த லட்சணத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் காக்க என தனி அமைச்சகம் வேறு!


- பா.பிரவீன்குமார்


தமிழா, தமிழா!

சர்வதேச அளவில் தமிழர்களின் நிலைமை இப்படி என்றால்... இந்திய அளவில்?

தமிழகத்தைத் தவிர்த்து, இந்தியாவின் எல்லா மாநில தமிழ் சங்கங்களும் கூடி, இந்திய தமிழ் சங்க கூட்டமைப்பை உருவாக்கி யுள்ளன. டெல்லியில் நடந்த இந்தக் கூட்டத் தில் தமிழக அரசுக்கு கண்டனங்களும் கோரிக்கைகளும் குவிந்தன.


இது குறித்து, இந்திய தமிழ் சங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவர், மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம்.

''இந்தியாவின் எல்லா மாநிலங்களில் வாழும் தமிழர்களும் பெரும்பாலும் இரண் டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். எத்தனையோ முறை தமிழக அரசிடம் மனுக்களும், கோரிக்கைகளும் வைத்த போதும்கூட இது வரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்ததில்லை!'' என்று கொதித்தார்.

பெங்களூர் தமிழ் சங்கச் செயலாளர் தாமோதரனிடம் பேசியபோது, ''ஈழத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகத் தில்தான் தமிழர்கள் அதிகளவில் இன்னலுறுகின்றனர். கர்நாடகத்தில் ஆண்டுதோறும் தமிழ் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. தமிழ் ஆசிரியர்களை நியமிப்பதே இல்லை, தமிழ் புத்தகங்களை வழங்குவதே இல்லை. இதை பல முறை கர்நாடக அரசை வலியுறுத்த தமிழக அரசிடம் கூறியும் இது நாள் வரை எந்த பலனுமில்லை. இதனால் தமிழர்களின் குழந்தைகள் தாய்மொழியை கற்கும் உரிமையைக்கூட இழந்துவிட்டனர். காவிரி பிரச்னையில் அடி, உதைபடும் தமிழர்களுக்கும், தமிழர் உடைமைகளுக்கும், தமிழ் திரையரங்குகளுக்கும் கூட நஷ்டஈடு கொடுக்க கர்நாடக அரசை வற்புறுத்துவதில்லை. கர்நாடக சிறைகளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன் றும் வாடுகின்றனர். இதற்காக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது? ஆனால், கர்நாடக அரசு வெளி மாநிலங்களில் வசிக்கும் கன்னடர்களுக்கும், கன்னட சங்கங்களுக்கும் ஆண்டுதோறும் நிதி உதவி செய்து வருகிறது. இதற்கென்று ஒரு தனி இயக்குநகரத்தை நியமித்து கர்நாடகத்தில் இருந்து பாடப்புத்தகங்களை வேறு மாநிலங்களுக்கு அனுப்புகிறது. ஆந்திராவோ, பிற மாநில ஆந்திர மக்களுக்காக தனி அமைச்சரவையே அமைத்து நலத் திட்டங்களை செய்து வருகிறது. ஆனால், தமிழக அரசு?'' என்று சலித்துக் கொண்டார்.

நவி மும்பை தமிழ் சங்கத்தின் செயலாளரான மகா தேவனோ, ''மகாராஷ்டிர அரசு தமிழ் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தும் தமிழ் புத்தகங்கள் இல்லாமல் தமிழை கற்க முடியாமல் போகிறது. இது குறித்து புத்தகம் அனுப்ப வேண்டினோம், அனுப்பவில்லை. இது நாள்வரை நாங்கள் வாடகைக் கட்டடத்தில்தான் சங்கம் நடத்துகிறோம், தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்காக பத்து பைசா கூட செல விடவில்லை!'' என்றார்.

கொல்கத்தா பாரதியார் தமிழ் சங்கச் செயலாளர் ஸ்ரீதரன், ''மேற்கு வங்காள அரசு ஆண்டு தோறும் வங்கமொழி மேம்பாட்டுக்காக பிற மாநிலங்களில் வசிக்கும் பண்பாட்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும்சலுகைகளையும் வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு இது நாள் வரை பிற மாநில தமிழர்களுக்காக தமிழின் நலம் பேண ஒரு கட்டடத்தையாவது கட்டித் தர வேண்டும்...'' என்கிறார்.

நம்மிடம் பேசிய ஒரு வெளி மாநில தமிழ்சங்கத் தலைவர், ''ஒரு முறை தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப் போனோம். அருகில் இருந்த ஒரு மூத்த அமைச்சர் 'பொழைக்கப் போன இடத்தில் அடி உதைனு வந்தா, அதையும் வாங்கித்தான் தீரணும், எங்களைக் கேட்டா போனீங்க..? இங்கே உள்ளவங்களுடைய பிரச்னையை தீர்க்கறதே பெரும்பாடா இருக்கு...'' என்று உதாசீனமாகப் பேசினார்!'' என வாடினார்.

தமிழுக்கு அமுதென்று பேர்... தமிழனுக்கு?

- இரா.வினோத்
--
Regards,
VIJAYSHANKAR,
PhD Research Fellow,
Insititute for Physics and Technology,
University of Bergen, Bergen,
Norway.
Mob: +4747954330,

நன்றி




http://www.tamilnet.com/img/publish/2004/04/geneva_conf_10_24513_435.jpg


♥ "உயிருடன் இருக்கிறார்" - திரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்வு ♥

"உயிருடன் இருக்கிறார்" - திரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்வு

Thalaivar

ராஜீவ்காந்தி படுகொலை, அதைத்தொடர்ந்து அதில் சம்பந்தப் பட்ட சிவராசன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் டேங்கர் லாரியில் பதுங்கி பெங்களூருக்கு தப்பிச் சென்று தற்கொலை செய்து கொண்டது வரையிலான சம்பவங்களை உள்ளடக்கி 'குப்பி-சயனைட்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து பரபரப்பேற்படுத்தியவர் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்! இப்போது '"காவலர் குடியிருப்பு' என்ற பெயரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் கர்நாடக மக்களையும், அங்குள்ள தமிழர்களையும் அதிரவைத்த ஒரு சம்பவத்தை படமாக்கி வருகிறார்! இந்த "போலீஸ் குவார்ட்டர்ஸ்' படத்திற்கு கர்நாடக போலீஸார் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு! தொடர்ந்து உண் மைச் சம்பவங்களையே படமாக்கிவரும் ரமேஷ், 'விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க் கையை "பிரபாகரன்' என்ற பெயரில் படமாக்குகிறார்.Image 

பெங்களூரிலுள்ள அவரை தொடர்புகொண்டு பேசினோம்!

''நான் பிரபாகரனைப் பற்றி படம் எடுக்க கடந்த ஆண்டே திட்டமிட்டுவிட்டேன்! "சயனைட்' படம் பார்த்துவிட்டு புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகராக இருந்த தமிழ்ச்செல்வன் என்னிடம் போனில் பேசினார்! நடுநிலையோடு படமெடுத்திருக்கிறீர்கள் என பாராட்டியதோடு பிரபாகரனும் படத்தைப் பார்த்து வியந்ததாகச் சொன்னார்! கடந்த வருட இறுதியில் புலிகளின் கலாச்சாரப் பிரிவு தலைவர் சேரன் என்னிடம் பேசினார்! அவர் கேட்ட முதல் கேள்வியே... "நீங்கள் தமிழரா?' என்பதுதான்! நான் கர்நாடகத்தை சேர்ந்தவன்! ராஜீவ் மரணமும், சிவராசன் மரணமும் எனக்கு வெவ்வேறு விதமான வலிகளை ஏற்படுத்தியது! அதனால்தான் கிட்டத்தட்ட 13 வருடங்களாக கதைக்கான மெட்டீரியல்களை தேடிப்பிடித்து படம் பண்ணினேன்' என்று சேரனிடம் சொன்னேன்! அப்போது உங்கள் நோக்கம் என்ன என்று கேட்டார் சேரன்! பிரபாகரன் சார் வாழ்க்கையை படமாக எடுக்க விரும்புகிறேன்' என்று சொன் னேன்! விரைவில் தொடர்பு கொள்வதாகச் சொன்னார்! அதன்பின் சில வாரங்கள் கழித்து என்னிடம் பேசிய சேரன், "இலங்கைக்கு எப்போது வருகிறீர்கள்? தலைவருடன் (பிரபாகரன்) 15 நாட்கள் நீங்கள் தங்கியிருக்கலாம்! இலங்கை வந்ததும் நீங்கள் எங்கள் பகுதிக்கு பத்திரமாக வர ஏற்பாடு செய்யப்படும்' என்றார்!

நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன்! அதன் பிறகு தகவல் இல்லை! "சயனைட்' படம் பார்த்து அதன் மூலம் நண்பர்களான வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு 'தற்சமயம் இலங்கையில் சூழல் சரியில்லை' என தெரிவித்தனர்! கொஞ்ச நாளிலேயே யுத்தம் தொடங்கிவிட்டது!'' என வருத்தம் தொனிக்கச் சொன்னார் ரமேஷ்!

கன்னடரான நீங்கள் பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்குவது ஏன்?

"பல லட்சம் மக்களை கவர்ந்த கம்பீரமான தலைவர்! அவர் வாழ்க்கை 30 வருட போராட்ட வாழ்க்கை! அவர் வாழ்க்கையில் அன்டோல்டு ஸ்டோரி எனப்படும் வெளியே தெரியாத பல கதைகள் உண்டு! அது என்னை பாதித்திருக்கிறது, வியக்க வைத்திருக்கிறது! அதனால் பிரபாகரன் கதையை படமாக்க திட்டமிட்டேன்! ராஜீவ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் சாருடன் நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன்! இலங்கை குறித்து, புலிகள் குறித்து பல அரிய விஷயங்களை அவரிடம் பேசி கலெக்ட் பண்ணியிருக்கேன்! ஓவர்ஸீஸ் நண்பர்களும் பல மெட்டீரியல் கொடுத்திருக்கிறார்கள்!

படத்தின் முடிவு எப்படி இருக்கும்?

"எனக்குள்ள பல்வேறு மட்ட தொடர்புகளிலும் கிடைத்த செய்தி பிரபாகரன் இருக்கிறார் என்பதே. நவம்பர் 27 புலிகளின் மாவீரர் தினம்! பிரபாகரன் அன்று வெளியே வருவார் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இதற்கேற்பதான் படத்தின் முடிவும்''

பிரபாகரனாக யார் நடிக்கிறார்கள்?

"பலகோடி மக்களின் மனதில் பதிந்திருக்கும் முகம் அது! பிரபாகரனாக ஒருவர் நடித்தால் அந்த உருவம் உண்மைக்கு மிக அருகாமையில் இருப்பதாக மக்களுக்கு தோன்ற வேண்டும்! எனவே அதற்கு சில திட்டங்களை வைத்திருக்கிறோம்! அதை இப்போது வெளியிட இயலாது!'' என பீடிகை போட்டார் ரமேஷ்!

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14891&Itemid=163


Sea Tigers



Martyrs Memorial


Black Tiger

"நான் பிரபாகாரனாக இருந்தால் கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருப்பேன்"-ராஜபக்சே ♥


நான் பிரபாகரணாக இருந்தால் கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருப்பேன் மகிந்த கூறுகிறார்

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமரச பேச்சுக்கு ஒரு போதும் வரமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது....

இந்தியாவின் தேசியப் பத்திரிகையான 'த ஹிந்து' பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார், இந்த நேர்காணலில் லலித் வீரதுங்கவும் உடனிருந்து சில கருத்துக்களை ஹிந்து ராமிடம் பகிர்ந்துள்ளார்

'த ஹிந்து' பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு இலங்கை ஜனாதிபதி கடந்த ஜூன் 30 ஆம் திகதி அளித்த பேட்டியை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்.

என்.ராம்: 2005 இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த பிரச்சனை பற்றி உங்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது? "எமது நாட்டின் சுதந்திரமே பிரதானமானது. நாடு பிரிக்கப்படவோ, இறையாண்மை பாதிக்கப்படவோ என்றுமே நான் அனுமதிக்க மாட்டேன்.... அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் மதிப்பு கொடுப்பேன், யார் மீதும் அழுத்தம் கொடுப்பதைத் தடுப்பேன், ஒவ்வொரு தனி நபரினதும் சமூகத்தினதும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் புதிய சமூகத்தைக் கட்டியெழுப்புவேன்" என்று கூறுகிறது உங்கள் 2005 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம். இந்தக் கொள்கையில் "பிரிபடாத இலங்கை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் "கௌரவமான அமைதி" என்பன உங்கள் 'அடிப்படை அரசியல் நோக்கங்கள்" எனக் குறிக்கப்பட்டுள்ளன. ஆகவே நீங்கள் பதவியேற்றபோது உண்மையில் உங்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது. ஒரு திட்டமுமே இருக்கவில்லையா, தாக்குதல் ஒன்றுக்கு போவது போல இருந்ததாக தோன்றுகிறதே.

மஹிந்த: நான் தமிழ் மக்களின் உணர்வுகளை நசிக்க விரும்பவில்லை. ஆனால் பயங்கரவாதம் பற்றி ஆரம்பத்தில் இருந்தே நான் மிகவும் தெளிவாக இருந்தேன். இதனால் தான், நான் வெற்றிகாணப் போகிறேன் என அறிந்துகொண்ட உடனும், கோத்தவைக் கூப்பிட்டு, " நீ இனி போக முடியாது. இங்கேயே தங்கிக் கொள்" என்று கூறினேன். வெற்றி காணுவதற்கு தயாராக இருந்தவர்களை படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளாகத் தேர்ந்தெடுத்தேன்.

அதன்பின்னர் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு செய்தி அனுப்பினேன். "நீங்கள் விரும்பும் எதனையும் நீங்கள் பெறலாம். அதற்காக ஏன் எதிர்த்து சண்டை பிடிக்கிறீர்கள், தேர்தல் வைக்கலாமா? இப்போது ஆயுதங்கள் வைத்துள்ள குழு நீங்கள் தான். தேர்தலில் உங்களைத் தேர்ந்தெடுக்கும்படி மக்களைக் கேளுங்கள். மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால் ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நபருடன் பேச்சுக்கு நான் தயாரல்ல" என்று புலிகளுக்குக் கூறினேன். அனால் பிரபாகரன் பெரியதொரு பிழையைச் செய்துவிட்டார். நான் ஒரு யதார்த்தவாதி, நடைமுறைக்கு ஒத்துப்போபவர் என்று அவர் கூறினார்.


லலித் வீரதுங்க (ஜனாதிபதியின் செயலாளர்; ல.வீ): மேன்மை தங்கிய ஜனாதிபதி நவம்பர் 19 இல் பதவியேற்றார். அவர் தனது பதவியேற்பு உரையில், அந்த மனுசனை பேச்சுக்கு அழைத்தார். பின்னர் பிரபாகரனின் நவம்பர் 27 மாவீரர் உரையில், ஜனாதிபதி ஒரு யதார்த்தவாதி, நடைமுறைக்கு ஒத்துப்போபவர் என்று குறிப்பிட்டார். இதை அவர் சொன்னபோது, ஜனாதிபதி ஒரு உரையில் "அந்த கடைசிக் கட்டம் வரை நடந்து செல்ல என்னால் முடியும்" என்று கூறினார். பின்னர், டிசம்பர் 5 இல், ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் தமது சகாக்களுக்கு சாப்பாடுகளைக் கொண்டுசென்ற அப்பாவிப் படையினர் 13 பேரை அவர்கள் தாக்கினார்கள். இப்படித்தான் இது தொடங்கியது.

மஹிந்த: அதன் பிறகும் நான் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அதன் பின்னர் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தேன். அதற்கப்புறம்தான் எனது பாதுகாப்பைத் தொடங்கினேன் என்றுதான் நான் சொல்லுவேன். அதன் பின்னர் நாங்கள் எங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோத்த கூறினார். நான் சொன்னேன்: "உனக்கு என்ன வேண்டும்? தயாராகு" என்று. ஆனாலும் அவர்கள் (புலிகள்) பின்னால் சென்று கெஞ்சினேன். ஆனால் அவர்கள் தெற்கில் ஒன்று கூடத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிந்து கொண்டேன். பிறகு, புலிகளை "இதைச் செய்ய வேண்டாம். என்னைச் சுவரில் மோத வைக்காதீர்கள்" என்று எச்சரித்தேன்.

லலித் வீரதுங்க: அதன்பின் அவர்களின் தலைவர் ஒருவரைச் சந்திக்கும்படி என்னை அனுப்பினீர்கள்.

மஹிந்த: நான் இவரை அனுப்பினேன். ஜெயராஜையும் (ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை) அனுப்பினேன்.

லலித் வீரதுங்க: 2006 இல், ஒரு சோதனைக்கும் என்னை உள்ளாக்காமல் பல சோதனைச் சாவடிகள் ஊடாகச் சென்றேன். ஜனாதிபதி அவர்கள் கூறினார்: "சும்மா போங்கள். உங்களை ஒருவருக்கும் அடையாளம் காட்ட வேண்டாம்" என்று. பிறகு அவர்களுக்கு இவர் கூறினார்: "நான் ஒருவரை அனுப்பினேன். அவர் யார் என்பதைக் கூட உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே" என்று.

மஹிந்த: நான் பாதுகாப்பு ஆட்களைக் கூப்பிட்டுச் சொனேன்: " ஒரு மனிதரை நான் அங்கு அனுப்ப என்னால் முடிகிறது என்றால், என்ன... உங்கள் பாதுகாப்பு? என்று. பல மாதங்கள் கழித்துத் தான் அவர்களிடம் கேட்டேன்: "இவர் தான் அங்கு போன ஆள். அது உங்களுக்கு தெரியுமா?" என்று.

லலித் வீரதுங்க: அந்த அளவுக்கு அவர் போய்விட்டார்.

என்.ராம்: பலவீனங்கள் என்ன என்று பார்ப்பதற்கு?

லலித் வீரதுங்க: இல்லை, சமரசப் பேச்சுக்கு.

மஹிந்த: சமரசத்துக்கும், பலவீனங்களைப் பார்ப்பதற்கும்! பிறகு ஜெயராஜை அனுப்பினேன். அவர்களிடம் சில உள்வீட்டு ரகசியங்களை அவர்களுக்கு விளங்கியிருந்த சிங்களத்தில் அவர் கூறினார். "நீங்கள் கொல்லப்படுவீர்கள்"

என்.ராம்: அதற்குப் பிறகு மாவிலாறு சம்பவம் நடந்தது.

மஹிந்த: அவர்கள் எனக்கு பச்சைக் கொடி காட்டிய நேரம் அது!

என்.ராம்: ஆனால் அதற்கு, அதாவது ஆகஸ்ட் 2006 இற்கு முன்னரே நீங்கள் நன்றாகத் தயாராகிவிட்டீர்கள்?

மஹிந்த: ஆம். ஆனால் அதற்கு முன்னர், அவர்கள் ராணுவ கட்டளைத் தளபதியைக் கொல்ல முயற்சித்தார்கள்.

லலித் வீரதுங்க: ஏப்பிரல் 2006 இல் அவர்கள் ராணுவ கட்டளைத் தளபதியை படுகொலை செய்ய முயன்றபோது, ஜனாதிபதி சொன்னார் "எச்சரிக்கை போல சும்மா ஒரு தடவை மட்டும் வெடி அடியுங்கள், பின்னர் அதை நிற்பாட்டுங்கள்" என்று.

மஹிந்த: ஆம், நான் சொன்னேன்: "ஒரே ஒருமுறை செய்யும் படி சொன்னேன்". நாங்கள் சரியான கவனமாக இருந்தோம். பேச்சுக்கள் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு எங்களால் முடிந்ததெல்லாவற்றையும் செய்தோம்.

லலித் வீரதுங்க: ஜெனீவாவிலும் மற்ற இடங்களிலும் ஒரு முமையான சமரசப்பேச்சுத் தொடர் நடந்தது. அவர்கள் குறைந்தது இந்தப் பேச்சுக்களில் பேசக்கூட விரும்பவில்லை.

மஹிந்த: எனவே இந்த ராணுவ நடவடிக்கையானது சமரசப் பேச்சுக்கள் இல்லாமலோ அல்லது ஒரு காரணமும் இல்லாமலோ வரவில்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நான் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராகிக் கொண்டுதான் இருந்தேன். எனக்குத் தெரிந்திருந்தது - நீங்கள் பாருங்கள், ஏனெனில் எனக்கு நிறைய அனுபவம் இருந்தது. அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமரசததைத் தொடங்க ஒரு போதும் வரமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது

லலித் வீரதுங்க: இது சம்பந்தமாக ஜனாதிபதி திரு சொல்ஹெய்முடன் நடத்திய சுவாரஸ்யமான உரையாடல் பற்றி உங்களுக்குச் சொல்ல என்னை விடுங்கள். அங்கே நானும் இருந்தேன், கிட்டத்தட்ட மார்ச் 2006 ஆக இருக்க வேண்டும், இவர் ஜனாதிபதி ஆகிய பின்னர், மேதகு ஜனாதிபதியைச் சந்திக்க திரு சொல்ஹெய்ம் வந்து பேசும்போது மற்ற விடயங்களுக்கு நடுவே அவர் சொன்னார்: "பிரபாகரன் ஒரு ராணுவ மேதை, அவர் செயல்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்" என்று. மேலும் அது இது என்று நிறையச் சொன்னார். ஜனாதிபதி சொன்னார்: "அவர் வடக்கில் உள்ள காடுகளில் இருந்து வந்தவர். நான் தெற்கில் உள்ள காடுகளில் இருந்து வந்தவன். பார்க்கலாம் யார் வெற்றி பெறுவார்கள் என்று!". இது ஒரு தீர்க்க தரிசனமான பேச்சு. பின்னர் நியூயோர்க்கில் அமைச்சர் சொல்ஹெய்மைச் சந்தித்த ஜனாதிபதி இந்த ராணுவ மேதை, வடக்கு தெற்கு காடுகள் மற்றும் யார் வெல்வது போன்ற பேச்சுக்கள் பற்றியெல்லாம் அவருக்கு நினைவூட்டினார். அந்த நேரம், அதாவது 2007 இல் கிழக்கு எமது கட்டுப்பாட்டுக்குக் கீழ வந்திருந்தது, எனவே ஜனாதிபதி "வடக்கில் என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள். இதேதான்" என்று கூறினார்.

என்.ராம்: புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள், நீங்கள் பாரிய அடி கொடுக்கக் கூடியதாக அவர்களின் சில விஷயங்களில் ஓட்டை உள்ளது என்ற எண்ணம் எப்போது முதன் முதலில் உங்களுக்கு வந்தது?

குறைத்து மதிப்பிடுவது இல்லை.

மஹிந்த: ஆரம்பத்தில் இருந்தே! படைப் பிடிவினர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு தேவையானது எல்லாவற்றையும் நீங்கள் கொடுத்தால் எங்கள் ஆட்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. ஏனெனில் புலிகள் காண்பிப்பது எல்லாம் உண்மையானவை அல்ல என்ற உணர்வு என்றுமே எனக்கு இருந்தது. ஆனால் ஒரு வழியில், நாங்கள் செய்தது பிழை. அவர்களிடம் நிறைய ஆட்கள் இருந்தார்கள், ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் இலங்கையை அல்ல தென் இந்தியாவையே தாக்கியிருந்திருக்கக் கூடும். அவர்கள் சேகரித்து வைத்திருந்த ஆயுதங்கள் சும்மா இலங்கையைத் தாக்கக் கூடிய அளவுக்கு மட்டுமல்ல! எங்கள் ஆயுதப் படையினர் கண்டுபிடித்துள்ள ஆயுதங்களின் அளவு நம்பமுடியாத அளவுக்கு உள்ளன. எங்கள் புலனாய்வாளர்கள் சொன்னார்கள், "அவர்களிடம் 15,000 பேர் மட்டுமே உள்ளார்கள்" என்று. எனக்கு அப்போதே தெரியும் இந்த எண்ணிக்கை பிழை என்று. நான் ஒரேயொரு மூலத்தில் தங்கியிருக்கவில்லை. அதைவிட எல்.டி.டி.ஈயினர் கூடுதலாக வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். எப்போதுமே நான் எல்.டி.டி.ஈயினரைக் குறைத்து மதிப்பிட்டதே இல்லை.

என்.ராம்: ஆகவே உலகிலேயே அவர்கள் ஈவு இரக்கமற்ற மிகவும் சக்திவாய்ந்த ஒரு பயங்கரவாத இயக்கமாக இருந்தார்கள் எனக் கூறுகிறீர்கள்.

மஹிந்த: ஆம், உலகிலேயே ஈவு இரக்கமற்ற அதிகூடிய செல்வம் மிக்க பயங்கரவாத இயக்கம். அதோடு நிறைய ஆயுதங்கள் கொண்டிருந்த, நன்கு பயிற்சி பெற்றவர்கள்.

என்.ராம்: அவர்களின் கடைசித் தந்திரம் என்ன என்று நினைக்கிறீர்கள்? எல்.டி.டி.ஈ தலைவர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் பிரபாகரன் ஒரு சிறு கடற்கரைப்பகுதியில் வளைக்கப்பட்டார். இது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது என்ன? அவர்கள் துணிகரமான எதிர்த் தாக்குதல் ஒன்றை நடத்த எண்ணியிருந்ததாக ஜெயராஜ் எழுதியுள்ளார்.

மஹிந்த: நான் நினைக்கிறேன், அவர்கள் தப்பிப் போகவேண்டும் என்றுதான் எதிர்பார்த்தார்கள் என்று. கடைசிக் கட்டத்தில், சிலர் வந்து தம்மைக் கூட்டிச் செல்வார்கள் என்று அவர்கள் காத்துக் கிடந்தார்கள். இல்லாவிட்டால், அவர்கள் அங்கு சென்றிருக்கவேண்டி ஏற்பட்டிருக்காது. ஏனெனில், அவர்களிடம் கடற்புலிகள் தளம் உள்ளது: கப்பல் ஒன்றை ஏன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக்கூட மிக அண்மையில் கொண்டுவரக்கூடிய ஒரே இடம் அதுவே. அவர்களுக்கான மிகச் சிறந்த இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்: ஒரு பக்கம் கடல், பின்னர் கடலேரி, அங்கு ஒரு சிறிய நிலத்துண்டு இருந்தது. ஆனால் பின்னர் அது அவர்கள் தெரிவு செய்த இடமாக இருக்கவில்லை: அவர்கள் அதைத் தெரிவு செய்திருந்தார்கள், ஆனால் படையினர் அவர்களை அங்கு செல்லப் பண்ணினார்கள். பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் படையினரால் அறிவிக்கப்பட்டன. கிளிநொச்சிக்குப் பிறகு, "பாதுகாப்பு வலயங்கள், எனவே அங்கு செல்லவும்" என்று அவர்கள் சொன்னார்கள். எனவே அனைவரும் அங்கு சென்றார்கள். ஐ.நாடுகளாலோ அல்லது வேறு யாராலுமோ குறிக்கப்பட்ட இடங்களல்ல இவை; இவை எங்கள் படையினராலேயே குறிக்கப்பட்டன. அனைத்து விடயங்களுமே அவர்களை ஒரு மூலைக்குக் கொண்டு வருவதற்கு எங்கள் படைகளால் திட்டமிடப்பட்டன. ராணுவத்தினர் வடக்கில் இருந்து தெற்குக்கும், தெற்கில் இருந்து வடக்குக்கும் அனைத்து பக்கங்களிலும் முன்னேறிக் கொண்டு இருந்தார்கள். ஆகவே எங்களின் தந்திரத்தாலேயே அவர்கள் ஒரு மூலைக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.

லலித் வீரதுங்க: 2009, ஜனவரி ஒன்றில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது. பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் மே 19 இல் முடிந்துவிட்டன. எனவே அதற்கிடையில் நிறைய நேரம் இருந்தது.

மஹிந்த: ஆம், பாரம்பரிய போர் ஒன்றில் ஏன் சண்டைபிடித்தார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. பிரபாகரன் பதுங்கு குழிக்குள் சென்றிருக்க முடியும். நான் தலைவராக இருந்திருந்தேன் என்றால், நான் பதுங்கு குழிக்குள் சென்றிருப்பேன், காடுகளுக்குள் இருந்திருப்பேன் - அதாவது கெரில்லா சண்டை. இதை அவர்களால் செய்ய முடியவில்லை, ஏனெனில் நாங்கள், எங்கள் ராணுவத்தினர் காடுகளைத் தம்வசப்படுத்தி இருந்தனர். இதில் அவர்கள் எல்.டி.டி.ஈயினரை விட கெட்டிக்காரர்கள். சிறப்பு அதிரடிப்படையினர், நீண்ட நாள் சண்டையில் ஈடுபட்ட படையினர், சிறிய குழுவினர் அதாவது குழு 8 ஆகியோருக்கு நன்றி. அது நன்கே வேலை செய்தது. மேலும் எங்கள் படையினரின் கண்ணியத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.

லலித் வீரதுங்க: உதாரணமாக, ராணுவத்தினர் பெண்களை பலாத்காரப்படுத்தியதாக அவர்கள் நடத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இல்லை.

மஹிந்த: அந்த பெண் சரணடைந்தபோது - அவர்களில் ஆறு அல்லது ஏழு பேர் - கூறிய வாக்குமூலத்தில்: "இறுதியில் இரண்டோ மூன்று பேர் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்; பின்னர் இரண்டோ மூன்று பெண்கள் "எல்லாம் சரி, நாங்கள் பார்க்கலாம், நாங்கள் கற்பழிக்கப்படுகிறோமா அல்லது நாங்கள் தற்கொலை செய்ய வேண்டுமா அல்லது கற்பழிப்பதன் மூலம் நாங்கள் கொல்லப்படுகிறோமா என்று இந்த ஆபத்தான முடிவை எடுப்போம்" என்று கூறினார்கள்" என்று குறிப்பிட்டுள்ர். படித்த பாடசாலை ஆசிரியையான இந்த பெண் சரணடைந்தார். ஒன்றுமே நடக்கவில்லை. அவளால் இதை நம்பவே முடியவில்லை. எங்களுடன் சண்டை பிடித்ததற்காக அவளுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது! இதற்கிடையில், இப்போது நாங்கள் அனைத்து அரச ஊழியர்களையும் எடுக்க இருக்கிறோம். எடுத்து "உங்களுடைய கடந்த காலத்தை மறவுங்கள். இந்த அமைப்புகளுக்காக நீங்கள் வேலை செய்யுங்கள், நீங்கள் சும்மா அங்கு காத்திருக்க முடியாது. நாங்கள் உங்களுக்கு சம்பளம் தருகிறோம்" என்று அவர்களுக்குக் கூறப்போகிறேன். இப்போது ஆசிரியர்கள் கட்டாயம் படிப்பிக்க வேண்டும், மற்றவர்கள் தங்கள் பதவிக்கு சென்று வேலை செய்ய வேண்டும்.

இவ்வாறு தனது பாலிய நண்பர் ராமுக்கு சனாதிபதி செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.

http://www.paranthan.com/index.php?option=com_content&view=article&id=2485:2009-07-09-19-00-48&catid=38:2009-04-30-04-36-59&Itemid=55




♥ தமிழினத் துரோகி கருணா(ய்)நிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்- ஆனந்தவிகடன் ♥

தமிழினத் துரோகி கருணா(ய்)நிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

http://1.bp.blogspot.com/_KkaMwmVkmoA/R8K6olQOAKI/AAAAAAAAAEU/ll2wSnTNSzc/s320/vikatan%2Blogo.jpg

ananda_vikatan11"இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு… தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன?

இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார இதழில் கருணாநிதிக்கு பகிரங்க கடிதம் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகிரங்க கடிதத்தின் முழு விபரம் வருமாறு:

தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை 'முள் கிரீடம்' தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.

'நீ இன்றி நான் இல்லை' படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. "கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்" என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்…

"போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!" என்று கோவில்பட்டியிலும்…

"உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக்கொள்ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்" என்று கோவையிலும் ஒரு காலத்தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான்.

சம்பத்தும் நெடுஞ்செழியனும் அன்பழகனும் கழக மேடைகளில் (உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக்கொண்டு இருந்தபோது… எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பைப் பெற்றீர்கள், சரியா? இப்போது ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன். "எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்… அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல் அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்" என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு!

30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் 'தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். இரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை இராஜினாமா செய்து… பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து… என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே!
 
எம்.ஜி.ஆர். நாலு கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துப் பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். "இந்தச் சண்டையை நடத்துவதே எம்.ஜி.ஆர்-தான்" என்று ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும் வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான் போராளி இயக்கங்கள் 'நம் பின்னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன.

"கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதிகளாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை" என்று நீக்குப்போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால் கோபமான பௌத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப் பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா?

"இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு… தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?" என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல் பேச்சு பேசாமல் இருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே?

இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தைவிட அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும் எஸ்.டி.சோமசுந்தரமும் பேசினார்களே! 'இந்தியா படை எடுக்க வேண்டும்', 'ஜெயவர்த்தனாவைத் தூக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இதை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக்கொடுத்தார்கள். புறநானூற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே சொன்னார், "அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாகப் பேச வரவில்லை."

பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், "மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்" என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும் வேண்டாத வீரமாகத் தெரிகிறது.

பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று! முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, 'சிங்களர்களைக் கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங்கைத் தூதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? வெள்ளை பொஸ்பரஸ் தூவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக்குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டு இருக்கும்போது, 'உங்கள் அதிகாரத்தை வைத்துத் தடுக்கக்கூடாதா?" என்றால், 'என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்" என்று தட்டிக்கழித்தீர்கள். "போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது" என்றபோதும் மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக்கொண்டபோது காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது 'மத்திய அரசு என்ன செய்ய முடியும், சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டித் தட்டிவிட்டீர்கள்.

நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றத்தை உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக்கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சித்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கிவிடுங்கள்!

இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன?

"மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து."

தமிழீழம் குறித்து உங்களது கருத்து என்ன?

"இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து தான் என் கருத்து".

பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்?

"ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்."

உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? 'தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போலத் தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில் நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். எட்டுத் தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? 'நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களைத் தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என்று கோத்தபய ராஜபக்ச சொன்ன பிறகும், காங்கிரசைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க முடியாமல், உங்களைப் பிடித்து இழுத்தது எது? அல்லது யார்?

"நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடியும்?" என்று ஈழத் தந்தை செல்வாவிடம் இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக்கொண்டு, மூத்திரப் பையைத் தூக்கிக்கொண்டு கடைசிக் காலத்திலும் கருவறைப் போராட்டம் நடத்திய 'தமிழின அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூடப் பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறையாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்களது ஆட்கள் மத்திய லகானைச் சுழற்றி வந்திருக்கிறார்கள். சோனியா உங்களைத் தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். கேட்ட பதவிகள் கிடைக்கின்றன. மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில்தான் லாண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என்றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணாவும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்குக் காட்டிக்கொடுக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத்தீவைத் தாரை வார்க்கும்போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்துவிட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும் 'விரும்பினால்தான் தண்ணீர் தருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது.

தெற்காசியாவின் அதிசயமாக பென்னி குக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப் பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லிவிடாதீர்கள். பாலாறு பிரச்னையைக் கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமரப் பேசலாம். எந்தத் திகதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரைமுருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது.

"பஞ்சாப் பொஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்" என்று புதுக் கல்லூரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகை ஈரமாகவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே… அதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச்சரத்தில் நெருடுகிறது…

ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் 'நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?

அன்புடன்,
ஈர விறகாக இருக்க முடியாத,

அரசியல் அறியாத் தமிழன்!

http://www.nerudal.com/nerudal.9192.html

Martyrs Memorial

♥ ஜெகத் கஸ்பாரின் குமுதம் வீடியோ பேட்டி ♥

(காணொளி) ஜெகத் கஸ்பார் அடிகளாரின் நேர்காணல்  (காணொளி)

ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்கள் குமுதம் இதழுக்கு வழங்கிய நேர்காணல். எமது போராட்ட வரலாற்றில் நடந்தது, நடக்கப் போவது பற்றி தனது மனம் திறந்து பேசும் வார்த்தைகள்.


http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/april/13.04.09/sweetdreams1.jpg

ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்கள் குமுதம் இதழுக்கு வழங்கிய நேர்காணல். எமது போராட்ட வரலாற்றில் நடந்தது, நடக்கப் போவது பற்றி தனது மனம் திறந்து பேசும் வார்த்தைகள்.

பகுதி 1

http://www.youtube.com/watch?v=6O9EVtuUQWA




பகுதி 2

http://www.youtube.com/watch?v=to2nou2mpqE




பகுதி 3

http://www.youtube.com/watch?v=AMF2QrJdap8



பகுதி 4
http://www.youtube.com/watch?v=OLc0hCdNBhY




பகுதி 5
http://www.youtube.com/watch?v=x4k6HlbMebM








http://athirvu.com/news/data/upimages/CON4.jpg

♥ புலிகளின் தலைவரின் மரணத்தை உறுதிப்படுத்துமாறு இந்தியா கோரிகை ♥

புலிகளின் தலைவரின் மரணத்தை உறுதிப்படுத்துமாறு இந்தியா கோரிகை





 
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ அறிவித்தலை தாம் இலங்கையிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய லோக்சபையில் நேற்று உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இந்த தகவலை வெளியிட்டார்.

முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் தொடர்பில் இந்தியா உத்தியோகபூர்வமாக இலங்கையிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாக கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில்  இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு 500 கோடி இந்திய ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனைத்தவிர வடக்கில் உள்ள நலன்புரி மையங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 2 ஆயிரத்து 500 கல்வனைஸ் இரும்பு தகரங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் புனர்வாழ்வை விரைவுபடுத்துவதற்காக நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நான்கு குழுக்களை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்த அவர் தமிழ்நாட்டிலிருந்து நிவாரணப்பொருள் தொகுதியொன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இராணுவ நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித்தீர்வு காணப்படவேண்டும் என்றும் கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.

♥ "பிரிகேடியர் பால்ராஜ்!"-மேலும் சில நினைவுகள்... ♥

பிரிகேடியர் பால்ராஜ்! அவரது சாதனைகளைப் போன்றே இழப்பும் கனதியானதுதான்.



 

லீமாவின் குரல் கேட்டால் போராளிகளுக்கு எங்கிருந்தோ ஒரு உற்சாகம் பிறந்துவிடும். யாராலும் எதனாலும் அசைக்க முடியாத அசாத்தியமான துணிச்சல் பிறக்கும். எந்த நெருக்கடியான, அபாயம் நிறைந்த சூழ்நிலையிலும் லீமாவின் குரலைக் கேட்டால் போதும், அவர்கள் அந்த நெருக்கடியையோ அபாயத்தையோ மறந்து விடுவார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தவும் மாட்டார்கள். இப்படியே சொல்லிக் கொண்டு போகிறார் ஒரு பெண் போராளி பிரிகேடியர் பால்ராஜைப்பற்றி.

இங்கே லீமா என்று அவர் குறிப்பிடுவது பிரிகேடியர் பால்ராஜையே. லீமா என்பது அவருடைய சங்கேதப் பெயர். போராளிகளிடத்தில் இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். பால்ராஜ் என்ற பெயர் விடுதலைப்புலிப் போராளிகளுக்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு ஆயுதமாகவே இருந்திருக்கிறது. அவர்களுடைய உளவியலில் இந்தச் சித்திரம் அப்படித்தான் பதிந்திருந்தது. அந்த அளவுக்கு அவர் புலிகளின் உளவுரணை வடிவமைத்திருந்தார். அல்லது புலிகளின் உளவுரணை வடிவமைக்கும் படியான ஒரு குறியீடாக காணப்பட்டார். இதற்காக அவர் தன்னை கடுமையான போர்க்கள வாழ்வில் ஈடுபடுத்தி இந்தப் புள்ளியைத் தொட்டிருந்தார். பால்ராஜின் போர்க்கள வாழ்வு அல்லது அதன் சாதனைகள் இந்திய இராணுவக் காலத்தோடு ஆரம்பித்தது. அப்போது அவருக்கு வயது, இருபத்தி இரண்டு. பதினெட்டு வயதில் போராட்டத்தில் இணைந்தவர் பால்ராஜ். அவருடைய கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கேயுள்ள கடலோரக்கிராமம், கொக்குத்தொடுவாய். மிகவும் பின் தங்கிய கிராமம்.

போதாக்குறைக்கு எப்போதும் சிங்களக் குடியேற்ற வாசிகளின் அச்சுறுத்தல் வேறு. கடற்றொழிலிலும் விவசாயத்திலும் அங்குள்ள மக்கள் ஈடுபட்டாலும் சிங்கள அச்சுறுத்தல் அவர்களை எப்போதும் பாதித்தது. இந்த நிலையில்தான் பால்ராஜ் தன்னைப் போராட்டத்துடன் இணைத்திருந்தார். மிக இளைய வயதில் அவர் தன்னுடைய போர்க்கள அனுபவங்களைத் திரட்டத் தொடங்கிவிட்டார். புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு பொதுவாகவே போர்க்கள அனுபவம் எப்போதும் பலமானது. அத்துடன் வளமானதும் கூட. அத்தகைய ஒரு வாய்ப்பினுடாக பால்ராஜ் தனக்கு கிடைத்த களத்தைப் பயன்படுத்தி தன்னை வளர்த்தார். இந்திய இராணுவக்காலத்திலேயே அவர் தலைவர் பிரபாகரனின் கவனத்தை ஈர்த்தார் என்று புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் சொல்கிறார்.

இந்திய இராணுவக்காலத்தில் மணலாற்றிலே தலைவருக்கு குறிவைத்து அல்லது அவருக்கான விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்ட பால்ராஜைக் குறிவைத்து இந்திய இராணுவத்தின் பரா துருப்பினர் ஒரு வழிமறிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். அந்தப் பரா துருப்பினரின் வழி மறிப்புத் தாக்குதலில், அவர்களால் அமைக்கப்பட்ட அந்தக் கொலை வலயம் என்று கூறப்படுகின்ற அந்தச் சூட்டு வலயத்துக்குள்ளே பால்ராஜும் அவரது அணியினரும் அகப்பட்டு விட்டனர். அந்த வேளையில் அவர் உடனடியாக ஒரு முறியடிப்புத் தாக்குதலை துணிகரமாக மேற்கொண்டார். இவர்களைக் குறிவைத்து அந்த இடத்திலேயே நிலைகொண்டிருந்த பராத்துருப்பினர் அழித்தொழிக்கப்பட்டனர். உண்மையிலேயே கொலை வலயத்துக்குள் அகப்பட்டு விட்ட ஒரு அணியானது அந்தப் பதுங்கித் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வது அரிதான விடயம். ஆனால், இங்கு அவர், தான் தப்பித்துக் கொண்டது மட்டுமல்லாது தங்களைக் கொல்ல வந்த அந்தப் பரா அணியினரை முறியடிப்புத் தாக்குதலில் அழித்தொழித்தார்.

தலைவரின் பால்ராஜ் மீதான கவனத்தை அந்தத் தாக்குதல்தான் பெறவைத்தது. அதுவே அவரை அடையாளம் காண வைத்தது அன்று.ஆனால், பால்ராஜின் கொடி பறக்கத் தொடங்கிய காலம் 1990களில்தான். இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை விட்டுப் போனபின்னர் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது. அப்போது வன்னியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் பால்ராஜ் ஈடுபட்டார். வன்னியில் அங்கும் இங்குமாக கேந்திர நிலைகளில் மையங்கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினரின் படை முகாம்களை பால்ராஜ் தலைமையிலான புலிகள் அணிகள் துடைத்தழிக்கத் தொடங்கின. அதுவரையுமில்லாத அளவுக்கு தொடர்ச்சியாக வன்னியில் பல முகாம்கள் புலிகளிடம் வீழ்ச்சி கண்டன. அவ்வாறு படைமுகாம்கள் வீழ்ச்சியடையும் தாக்குதல்களை பால்ராஜே வழிநடத்தியிருந்தார். இதில் என்ன விசேசம் என்றால், இந்தத் தாக்குதல்களை அவர் முற்றிலும் வேறான முறையில் நடத்தியதே. 'புல்டோசர்' பாணியிலான ஒரு வகை நடவடிக்கையாக அவர் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருந்தார். அப்படியே பெரும்புயலாகவோ அல்லது பேரலையாகவோ படையணி அல்லது போராளிகள் அடித்துக் கொண்டு உள்ளே இறங்கி முகாமையும் படையினரையும் சுத்தப்படுத்தும் நடவடிக்கை அது. இதில் முக்கியமானது மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல். தலைவர் பிரபாகரன் எதை எதிர்பார்த்தாரோ அதை பால்ராஜ் நிறைவேற்றினார். பிரபாகரனின் கனவுக்கு நல்ல வடிவத்தைப் பால்ராஜ் கொடுத்தார் எனலாம். மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் போராளிகளிடத்தில் பால்ராஜின் பெயரை ஆழமாக ஊன்றியது. பொது மக்களிடத்தில் சடுதியாக அந்தப் பெயர் மிகப் பிரபலமாகியது. அதேவேளை படையினர் மத்தியில் பால்ராஜ் என்ற பெயர் மிகப் பயங்கரமான ஒன்றாகியது. அதுவே அவர்களின் பல தோல்விகளுக்கும் புலிகளின் பெரும் வெற்றிகளுக்கும் காரணமாகியது பின்னாளில். படை வல்லுநர்கள், ஆய்வாளர்கள் எல்லோருக்கும் பால்ராஜ் ஒரு ஆச்சரியமாகவும் வியப்பூட்டும் தளபதியகவும் மாறினார். அந்த வியப்பு இன்னும் மாறவில்லை.இப்படி நிகழத் தொடங்கிய பால்ராஜின் போர்க்கள அனுபவங்கள் பிறகு இன்னும் இன்னும் வெவ்வேறு களங்களில் வெவ்வேறான அம்சங்களோடு விரிந்தன.

அதைப் பட்டியலிட்டால் அது இங்கே பெரும் பரப்பாக விரியும். கடந்த இருபது ஆண்டுகால புலிகளின் போர்க்களச் சாதனைகளில் பூநகரிப் படை முகாம் தாக்குதலைத் தவிர ஏனைய பெரும்பாலான களச்சாதனைகளில் பால்ராஜ் முதன்மைப் பாத்திரத்தில் கலந்திருக்கிறார். பூநகரித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டபோது பால்ராஜ் சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலில் காலில் காயம் பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.ஆனால், பால்ராஜின் போர்க்கள சாதனைகளை சரியாக மதிப்பிட்ட தலைவர் பிரபாகரன், புலிகளின் முதலாவது தாக்குதற் படையணியான சார்ள்ஸ் அன்ரனி படையணியின் தளபதியாக நியமித்தார். இது பால்ராஜின் ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த நல்ல வாயப்பாகும்.

ஏற்னவே 'புல்டோசர்' வகைத் தாக்குதலை சிறு அணிகளோடு நடத்திச் சாதனைகள் படைத்த அவருக்கு இப்பொழுது இப்படியொரு படையணி கிடைத்தால் எப்படியிருக்கும். பால்ராஜ் அந்தப்படையணியை பிரபாகரனின் விருப்பத்துக்கேற்ற மாதிரியும் தன்னுடைய திட்டத்துக்கு அமைவாகவும் வளர்த்தெடுத்தார். பின்னர் வந்த களமுனைகளில் சார்ள்ஸ் அன்ரனி படையணி பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. இது புலிகளின் போரியல் வரலாற்றிலும் பெருந்திருப்பங்களை ஏற்படுத்தியது. பால்ராஜ் இவற்றின் மையத்தில் நின்றியங்கினார்.இந்த வளர்ச்சி பால்ராஜை விடுதலைப் புலிகளின் துணைத்தளபதி என்ற நிலைக்கு உயர்த்தியது. தளபதியாக பிரபாகரனும் துணைத்தளபதியாக பால்ராஜும் இருந்தனர் அப்போது. பின்னர் இந்தக் கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் பால்ராஜ் வகித்த அந்தப்பாத்திரத்தை பிறகு எவரும் வகிக்க வில்லை.பால்ராஜின் முக்கிய அம்சம் அவரின் அசாத்திய துணிச்சல்தான். அவருடைய குரலிலேயே அந்த ஆளுமையைக் காணலாம். மிடுக்கான குரல். கட்டளையிடுவது போன்ற பேச்சு. கம்பீரம் தொனிக்கும் சத்தம். அவர் பேசும்போதே இதை யாரும் அவதானிக்கலாம்.

அவரைப் பொறுத்தவரை செய்ய முடியாதது என்று ஒன்றில்லை. அதாவது இராணுவ நடவடிக்கையில் எதனையும் சாதிக்கலாம். அதற்கு எப்போதும் இருக்கவேண்டியது துணிச்சலும் சரியான திட்டமிடலும், தகவலும் இதைச் சரியாக செயற்படுத்தும் ஆளமையும் என்பதே. அப்போது புலிகளின் போர்ச் செயற்பாடுகள் பெரும்பாலும் படை நடவடிக்கைகள் என்ற வகையில் பரிணாமம் பெற்றன. மரபுப் படையணியாக வளர்ச்சி பெற்றிருந்த சார்ள்ஸ் அன்ரனி படையணியும் அதைத் தொடர்ந்து பிற படையணிகளும் இந்த மரபு வழிச் சமர்களில் ஈடுபட்டன.ஆனால், இவை எல்லாவற்றுக்கும் தொடக்கமாக பால்ராஜின் நெறிப்படுத்தலுடன் கூடிய சார்ள்ஸ் அன்ரனி படையணியே இருந்திருக்கிறது.பால்ராஜ் புகழுக்குரிய கீர்த்தி நிரம்பிய படைத்தளபதியாக வளர்ச்சி பெற்றிருந்தார். அவர் நிற்கும் களமுனைகளில் படையினர் - எதிரிகள் உளவியல் ரீதியாக பின்னடைவு நிலையையே கொண்டனர். அவருடைய குரல் படையினரின் உற்சாகத்தில் பாதியைக் கரைத்து விடுவதாக பல படைத்துறை ஆய்வாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் படையினரின் தூக்கத்திலும் பால்ராஜின் எண்ணம் வந்து அவர்கள் தூக்கம் கலைந்ததாகவும் சிறீலங்காப் படைத்தளபதிகளின் கனவுகளில் பால்ராஜே வருவதாகவும் கூட பத்திரிகையாளர்கள் எழுதினார்கள். அந்தளவுக்கு அவர் களமுனையில் சக்தி மிக்கவராக திகழ்ந்தார். இதற்குக் காரணம் பால்ராஜின் அசாத்திய திறன்கள்தான். பொதுவாகவே புலிகளின் தளபதிகள் எல்லோரிடமும் அசாத்திய திறன்கள் உண்டு. அவர்களுடைய உருவாக்க முறைமை அப்படியானது. களத்தில் துணிச்சலை முதன்மைப்படுத்தும் பண்பை அவர்கள் எப்பொழுதும் ஒரு மரபாக பேணியும் தொடர்ந்தும் வருகிறார்கள். இதுவே அவர்களுக்கு அதிக வெற்றியையும் சாதனைகளையும் பெற்றுக் கொடுக்கிறது.

புலிகளின் தாக்குதல் மற்றும் போரியல் விசயங்களை தொடர்ந்து அவதானிப்போர் இவற்றை நன்றாக விளங்கிக் கொள்ளலாம். அநேகமாக புலிகள் தரப்பிலிருந்து தளபதி நிலையிலுள்ளவர்களின் வீரசாவுப் பட்டியல் அதிகமாக இருக்கும். ஆனால், படைத்தரப்பில் இது குறைவு. காரணம் புலிகளின் தளபதிகள் எப்போதும் களத்தில் முன்னுக்கு இறங்குவோராகவும் முன்னின்று போரிடுவோராகவும் இருப்பதே இதற்குக் காரணம். பால்ராஜ் இதில் இன்னும் ஒரு படிமேலானவர். அவர் நிற்கும்போது போராளிகளுக்கு பல மடங்கு பலம் வருகிறது என்றால் அவருடைய படை நடத்தும் பாங்கு ஒருபுறமும், கட்டளையும் முன்னுக்கு நிற்கும் அந்தத் துணிச்சலுமே பிரதானம். இதற்கு ஏராளம் உதாரணங்களுண்டு. குறிப்பாக ஆனையிறவுப் படைத்தளத்தை வெற்றி கொள்வதற்காக பால்ராஜ் ஆயிரத்து இருநாறு போராளிகளோடு படையினருக்குள் ஊடுருவி, கடல் வழியாக தரையிறங்கி போரிட்டமை.  யாரும் இத்தகையதொரு தரையிறக்கத்தையோ, படை நடவடிக்கையையோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதைப் பால்ராஜ் செய்தார். அதில் அவர் வெற்றி பெற்றார். அது அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. ஆனையிறவால் எப்போது எவர் பயணித்தாலும் பால்ராஜின் முகமே அப்போது நினைவுக்கு வரும். அதுதான் பால்ராஜ். யாராலும் மதிப்பிட முடியாத ஒரு அதிசய ஆற்றல் அவருடையது. அதனால் அவர் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் நட்சத்திர அந்தஸ்துடன் புகழ்பேற்றுத் திகழ்ந்தார்.

படைத்துறை ஆய்வாளர்களிடத்திலும் போரியலாளர்களிடத்திலும் பெரும் மதிப்பைப் பெற்றார். எதிரிகளும் வியக்கும் போர்த்திறனும் துணிச்சலும் அவருடையவை. பிரிகேடியர் பால்ராஜ் போர்த்திறன் வாய்ந்த மிக முக்கியமான ஆற்றலாளர். உலக இராணுவ வரலாற்றில் அவருக்கு என்றொரு தனியான அடையாளமுண்டு. தமிழ் வரலாற்றிலும் பால்ராஜைப் போன்ற இத்தகைய ஆளமைமிக்க திறனாளர் போர்த்துறையில் இல்லை. குறிப்பாக நவீன போர் வாழ்விலும் வரலாற்றிலும் தமிழர்கள் பால்ராஜைப் போன்றதொரு ஆளுமையைச் சந்தித்ததில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்தும் பால்ராஜைப் போன்றதொரு போரியலாளரை, போர்த்தளபதியை அவர்கள் கொண்டிருந்ததில்லை. புலிகளின் கடந்த முப்பதாண்டுகால போராட்டம் - போர் என்ற தொடரசைவில் பல நூற்றுக்கணக்கான போர்த்தளபதிகளும் போரியலாளர்களும் இருந்திருக்கிறார்கள். பலர் இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் இதிலெல்லாம் பால்ராஜ் முற்றிலும் வேறான ஒரு ஆளுமையே.

இப்போது இந்த ஆளுமை தமிழர்களை விட்டு மறைந்து விட்டது.  தமிழர்கள் பெரும் போர்த்தளபதியை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இதுபோலவொரு இழப்பு இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பால்ராஜ் தன்னுடைய இழப்பை ஒரு வெற்றிடமாக விட்டுச் செல்லவில்லை. பொதுவாகவே புலிகளின் மரபுப்படி எந்த இழப்பும் எத்தகைய வெற்றிடத்தையும் விடாது என்பதாக பால்ராஜின் இழப்பும் அத்தகைய வெற்றிடங்களை விடக்கூடாது என்பதற்காக அவரே அந்தச் சமநிலையை உருவாக்கியிருக்கிறார். இதை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்கள் சொல்கிறார். அவர் தனது இரு தசாப்த கால வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார். அதாவது இந்த விடுதலைப் போராட்டம் ஒர் இராணு ரீதியான வடிவம் பெற்றதில் இன்று அதிகாரிகளாக அல்லது படைத்தளபதிகளாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை முன்னகர்த்திக் கொண்டிருக்கும் போரியல் தளபதிகளை உருவாக்குவதில் அவர் தனது இருபது வருட காலத்திற்கு மேற்பட்ட போராட்ட வாழ்க்கையில் முழுமையாக உழைத்தார் என்று. இது மிகச் சரியான கூற்று. ஆனால் என்னதானிருந்தாலும் பால்ராஜைப் போன்றதொரு போரியல் ஆளுமையை தமிழர் தரப்பு பெற்றெடுப்பது அசாத்தியமே. இவருடைய இழப்பை யாராலும் மறக்க முடியாது. அவருடைய சாதனைகளைப்போலவே அதுவும் கனதியானது.

- மனோகரன்


http://www.tamilkathir.com/news/46/58//d,full_view.aspx






பிரிகேடியர் பால்ராஜ்! அவரது சாதனைகளைப் போன்றே இழப்பும் கனதியானதுதான்.



லீமாவின் குரல் கேட்டால் போராளிகளுக்கு எங்கிருந்தோ ஒரு உற்சாகம் பிறந்துவிடும். யாராலும் எதனாலும் அசைக்க முடியாத அசாத்தியமான துணிச்சல் பிறக்கும். எந்த நெருக்கடியான, அபாயம் நிறைந்த சூழ்நிலையிலும் லீமாவின் குரலைக் கேட்டால் போதும், அவர்கள் அந்த நெருக்கடியையோ அபாயத்தையோ மறந்து விடுவார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தவும் மாட்டார்கள். இப்படியே சொல்லிக் கொண்டு போகிறார் ஒரு பெண் போராளி பிரிகேடியர் பால்ராஜைப்பற்றி.

இங்கே லீமா என்று அவர் குறிப்பிடுவது பிரிகேடியர் பால்ராஜையே. லீமா என்பது அவருடைய சங்கேதப் பெயர். போராளிகளிடத்தில் இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். பால்ராஜ் என்ற பெயர் விடுதலைப்புலிப் போராளிகளுக்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு ஆயுதமாகவே இருந்திருக்கிறது. அவர்களுடைய உளவியலில் இந்தச் சித்திரம் அப்படித்தான் பதிந்திருந்தது. அந்த அளவுக்கு அவர் புலிகளின் உளவுரணை வடிவமைத்திருந்தார். அல்லது புலிகளின் உளவுரணை வடிவமைக்கும் படியான ஒரு குறியீடாக காணப்பட்டார். இதற்காக அவர் தன்னை கடுமையான போர்க்கள வாழ்வில் ஈடுபடுத்தி இந்தப் புள்ளியைத் தொட்டிருந்தார். பால்ராஜின் போர்க்கள வாழ்வு அல்லது அதன் சாதனைகள் இந்திய இராணுவக் காலத்தோடு ஆரம்பித்தது. அப்போது அவருக்கு வயது, இருபத்தி இரண்டு. பதினெட்டு வயதில் போராட்டத்தில் இணைந்தவர் பால்ராஜ். அவருடைய கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கேயுள்ள கடலோரக்கிராமம், கொக்குத்தொடுவாய். மிகவும் பின் தங்கிய கிராமம்.

போதாக்குறைக்கு எப்போதும் சிங்களக் குடியேற்ற வாசிகளின் அச்சுறுத்தல் வேறு. கடற்றொழிலிலும் விவசாயத்திலும் அங்குள்ள மக்கள் ஈடுபட்டாலும் சிங்கள அச்சுறுத்தல் அவர்களை எப்போதும் பாதித்தது. இந்த நிலையில்தான் பால்ராஜ் தன்னைப் போராட்டத்துடன் இணைத்திருந்தார். மிக இளைய வயதில் அவர் தன்னுடைய போர்க்கள அனுபவங்களைத் திரட்டத் தொடங்கிவிட்டார். புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு பொதுவாகவே போர்க்கள அனுபவம் எப்போதும் பலமானது. அத்துடன் வளமானதும் கூட. அத்தகைய ஒரு வாய்ப்பினுடாக பால்ராஜ் தனக்கு கிடைத்த களத்தைப் பயன்படுத்தி தன்னை வளர்த்தார். இந்திய இராணுவக்காலத்திலேயே அவர் தலைவர் பிரபாகரனின் கவனத்தை ஈர்த்தார் என்று புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் சொல்கிறார்.

இந்திய இராணுவக்காலத்தில் மணலாற்றிலே தலைவருக்கு குறிவைத்து அல்லது அவருக்கான விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்ட பால்ராஜைக் குறிவைத்து இந்திய இராணுவத்தின் பரா துருப்பினர் ஒரு வழிமறிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். அந்தப் பரா துருப்பினரின் வழி மறிப்புத் தாக்குதலில், அவர்களால் அமைக்கப்பட்ட அந்தக் கொலை வலயம் என்று கூறப்படுகின்ற அந்தச் சூட்டு வலயத்துக்குள்ளே பால்ராஜும் அவரது அணியினரும் அகப்பட்டு விட்டனர். அந்த வேளையில் அவர் உடனடியாக ஒரு முறியடிப்புத் தாக்குதலை துணிகரமாக மேற்கொண்டார். இவர்களைக் குறிவைத்து அந்த இடத்திலேயே நிலைகொண்டிருந்த பராத்துருப்பினர் அழித்தொழிக்கப்பட்டனர். உண்மையிலேயே கொலை வலயத்துக்குள் அகப்பட்டு விட்ட ஒரு அணியானது அந்தப் பதுங்கித் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வது அரிதான விடயம். ஆனால், இங்கு அவர், தான் தப்பித்துக் கொண்டது மட்டுமல்லாது தங்களைக் கொல்ல வந்த அந்தப் பரா அணியினரை முறியடிப்புத் தாக்குதலில் அழித்தொழித்தார்.

தலைவரின் பால்ராஜ் மீதான கவனத்தை அந்தத் தாக்குதல்தான் பெறவைத்தது. அதுவே அவரை அடையாளம் காண வைத்தது அன்று.ஆனால், பால்ராஜின் கொடி பறக்கத் தொடங்கிய காலம் 1990களில்தான். இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை விட்டுப் போனபின்னர் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது. அப்போது வன்னியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் பால்ராஜ் ஈடுபட்டார். வன்னியில் அங்கும் இங்குமாக கேந்திர நிலைகளில் மையங்கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினரின் படை முகாம்களை பால்ராஜ் தலைமையிலான புலிகள் அணிகள் துடைத்தழிக்கத் தொடங்கின. அதுவரையுமில்லாத அளவுக்கு தொடர்ச்சியாக வன்னியில் பல முகாம்கள் புலிகளிடம் வீழ்ச்சி கண்டன. அவ்வாறு படைமுகாம்கள் வீழ்ச்சியடையும் தாக்குதல்களை பால்ராஜே வழிநடத்தியிருந்தார். இதில் என்ன விசேசம் என்றால், இந்தத் தாக்குதல்களை அவர் முற்றிலும் வேறான முறையில் நடத்தியதே. 'புல்டோசர்' பாணியிலான ஒரு வகை நடவடிக்கையாக அவர் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருந்தார். அப்படியே பெரும்புயலாகவோ அல்லது பேரலையாகவோ படையணி அல்லது போராளிகள் அடித்துக் கொண்டு உள்ளே இறங்கி முகாமையும் படையினரையும் சுத்தப்படுத்தும் நடவடிக்கை அது. இதில் முக்கியமானது மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல். தலைவர் பிரபாகரன் எதை எதிர்பார்த்தாரோ அதை பால்ராஜ் நிறைவேற்றினார். பிரபாகரனின் கனவுக்கு நல்ல வடிவத்தைப் பால்ராஜ் கொடுத்தார் எனலாம். மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் போராளிகளிடத்தில் பால்ராஜின் பெயரை ஆழமாக ஊன்றியது. பொது மக்களிடத்தில் சடுதியாக அந்தப் பெயர் மிகப் பிரபலமாகியது. அதேவேளை படையினர் மத்தியில் பால்ராஜ் என்ற பெயர் மிகப் பயங்கரமான ஒன்றாகியது. அதுவே அவர்களின் பல தோல்விகளுக்கும் புலிகளின் பெரும் வெற்றிகளுக்கும் காரணமாகியது பின்னாளில். படை வல்லுநர்கள், ஆய்வாளர்கள் எல்லோருக்கும் பால்ராஜ் ஒரு ஆச்சரியமாகவும் வியப்பூட்டும் தளபதியகவும் மாறினார். அந்த வியப்பு இன்னும் மாறவில்லை.இப்படி நிகழத் தொடங்கிய பால்ராஜின் போர்க்கள அனுபவங்கள் பிறகு இன்னும் இன்னும் வெவ்வேறு களங்களில் வெவ்வேறான அம்சங்களோடு விரிந்தன.

அதைப் பட்டியலிட்டால் அது இங்கே பெரும் பரப்பாக விரியும். கடந்த இருபது ஆண்டுகால புலிகளின் போர்க்களச் சாதனைகளில் பூநகரிப் படை முகாம் தாக்குதலைத் தவிர ஏனைய பெரும்பாலான களச்சாதனைகளில் பால்ராஜ் முதன்மைப் பாத்திரத்தில் கலந்திருக்கிறார். பூநகரித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டபோது பால்ராஜ் சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலில் காலில் காயம் பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.ஆனால், பால்ராஜின் போர்க்கள சாதனைகளை சரியாக மதிப்பிட்ட தலைவர் பிரபாகரன், புலிகளின் முதலாவது தாக்குதற் படையணியான சார்ள்ஸ் அன்ரனி படையணியின் தளபதியாக நியமித்தார். இது பால்ராஜின் ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த நல்ல வாயப்பாகும்.

ஏற்னவே 'புல்டோசர்' வகைத் தாக்குதலை சிறு அணிகளோடு நடத்திச் சாதனைகள் படைத்த அவருக்கு இப்பொழுது இப்படியொரு படையணி கிடைத்தால் எப்படியிருக்கும். பால்ராஜ் அந்தப்படையணியை பிரபாகரனின் விருப்பத்துக்கேற்ற மாதிரியும் தன்னுடைய திட்டத்துக்கு அமைவாகவும் வளர்த்தெடுத்தார். பின்னர் வந்த களமுனைகளில் சார்ள்ஸ் அன்ரனி படையணி பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. இது புலிகளின் போரியல் வரலாற்றிலும் பெருந்திருப்பங்களை ஏற்படுத்தியது. பால்ராஜ் இவற்றின் மையத்தில் நின்றியங்கினார்.இந்த வளர்ச்சி பால்ராஜை விடுதலைப் புலிகளின் துணைத்தளபதி என்ற நிலைக்கு உயர்த்தியது. தளபதியாக பிரபாகரனும் துணைத்தளபதியாக பால்ராஜும் இருந்தனர் அப்போது. பின்னர் இந்தக் கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் பால்ராஜ் வகித்த அந்தப்பாத்திரத்தை பிறகு எவரும் வகிக்க வில்லை.பால்ராஜின் முக்கிய அம்சம் அவரின் அசாத்திய துணிச்சல்தான். அவருடைய குரலிலேயே அந்த ஆளுமையைக் காணலாம். மிடுக்கான குரல். கட்டளையிடுவது போன்ற பேச்சு. கம்பீரம் தொனிக்கும் சத்தம். அவர் பேசும்போதே இதை யாரும் அவதானிக்கலாம்.

அவரைப் பொறுத்தவரை செய்ய முடியாதது என்று ஒன்றில்லை. அதாவது இராணுவ நடவடிக்கையில் எதனையும் சாதிக்கலாம். அதற்கு எப்போதும் இருக்கவேண்டியது துணிச்சலும் சரியான திட்டமிடலும், தகவலும் இதைச் சரியாக செயற்படுத்தும் ஆளமையும் என்பதே. அப்போது புலிகளின் போர்ச் செயற்பாடுகள் பெரும்பாலும் படை நடவடிக்கைகள் என்ற வகையில் பரிணாமம் பெற்றன. மரபுப் படையணியாக வளர்ச்சி பெற்றிருந்த சார்ள்ஸ் அன்ரனி படையணியும் அதைத் தொடர்ந்து பிற படையணிகளும் இந்த மரபு வழிச் சமர்களில் ஈடுபட்டன.ஆனால், இவை எல்லாவற்றுக்கும் தொடக்கமாக பால்ராஜின் நெறிப்படுத்தலுடன் கூடிய சார்ள்ஸ் அன்ரனி படையணியே இருந்திருக்கிறது.பால்ராஜ் புகழுக்குரிய கீர்த்தி நிரம்பிய படைத்தளபதியாக வளர்ச்சி பெற்றிருந்தார். அவர் நிற்கும் களமுனைகளில் படையினர் - எதிரிகள் உளவியல் ரீதியாக பின்னடைவு நிலையையே கொண்டனர். அவருடைய குரல் படையினரின் உற்சாகத்தில் பாதியைக் கரைத்து விடுவதாக பல படைத்துறை ஆய்வாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் படையினரின் தூக்கத்திலும் பால்ராஜின் எண்ணம் வந்து அவர்கள் தூக்கம் கலைந்ததாகவும் சிறீலங்காப் படைத்தளபதிகளின் கனவுகளில் பால்ராஜே வருவதாகவும் கூட பத்திரிகையாளர்கள் எழுதினார்கள். அந்தளவுக்கு அவர் களமுனையில் சக்தி மிக்கவராக திகழ்ந்தார். இதற்குக் காரணம் பால்ராஜின் அசாத்திய திறன்கள்தான். பொதுவாகவே புலிகளின் தளபதிகள் எல்லோரிடமும் அசாத்திய திறன்கள் உண்டு. அவர்களுடைய உருவாக்க முறைமை அப்படியானது. களத்தில் துணிச்சலை முதன்மைப்படுத்தும் பண்பை அவர்கள் எப்பொழுதும் ஒரு மரபாக பேணியும் தொடர்ந்தும் வருகிறார்கள். இதுவே அவர்களுக்கு அதிக வெற்றியையும் சாதனைகளையும் பெற்றுக் கொடுக்கிறது.

புலிகளின் தாக்குதல் மற்றும் போரியல் விசயங்களை தொடர்ந்து அவதானிப்போர் இவற்றை நன்றாக விளங்கிக் கொள்ளலாம். அநேகமாக புலிகள் தரப்பிலிருந்து தளபதி நிலையிலுள்ளவர்களின் வீரசாவுப் பட்டியல் அதிகமாக இருக்கும். ஆனால், படைத்தரப்பில் இது குறைவு. காரணம் புலிகளின் தளபதிகள் எப்போதும் களத்தில் முன்னுக்கு இறங்குவோராகவும் முன்னின்று போரிடுவோராகவும் இருப்பதே இதற்குக் காரணம். பால்ராஜ் இதில் இன்னும் ஒரு படிமேலானவர். அவர் நிற்கும்போது போராளிகளுக்கு பல மடங்கு பலம் வருகிறது என்றால் அவருடைய படை நடத்தும் பாங்கு ஒருபுறமும், கட்டளையும் முன்னுக்கு நிற்கும் அந்தத் துணிச்சலுமே பிரதானம். இதற்கு ஏராளம் உதாரணங்களுண்டு. குறிப்பாக ஆனையிறவுப் படைத்தளத்தை வெற்றி கொள்வதற்காக பால்ராஜ் ஆயிரத்து இருநாறு போராளிகளோடு படையினருக்குள் ஊடுருவி, கடல் வழியாக தரையிறங்கி போரிட்டமை.  யாரும் இத்தகையதொரு தரையிறக்கத்தையோ, படை நடவடிக்கையையோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதைப் பால்ராஜ் செய்தார். அதில் அவர் வெற்றி பெற்றார். அது அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. ஆனையிறவால் எப்போது எவர் பயணித்தாலும் பால்ராஜின் முகமே அப்போது நினைவுக்கு வரும். அதுதான் பால்ராஜ். யாராலும் மதிப்பிட முடியாத ஒரு அதிசய ஆற்றல் அவருடையது. அதனால் அவர் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் நட்சத்திர அந்தஸ்துடன் புகழ்பேற்றுத் திகழ்ந்தார்.

படைத்துறை ஆய்வாளர்களிடத்திலும் போரியலாளர்களிடத்திலும் பெரும் மதிப்பைப் பெற்றார். எதிரிகளும் வியக்கும் போர்த்திறனும் துணிச்சலும் அவருடையவை. பிரிகேடியர் பால்ராஜ் போர்த்திறன் வாய்ந்த மிக முக்கியமான ஆற்றலாளர். உலக இராணுவ வரலாற்றில் அவருக்கு என்றொரு தனியான அடையாளமுண்டு. தமிழ் வரலாற்றிலும் பால்ராஜைப் போன்ற இத்தகைய ஆளமைமிக்க திறனாளர் போர்த்துறையில் இல்லை. குறிப்பாக நவீன போர் வாழ்விலும் வரலாற்றிலும் தமிழர்கள் பால்ராஜைப் போன்றதொரு ஆளுமையைச் சந்தித்ததில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்தும் பால்ராஜைப் போன்றதொரு போரியலாளரை, போர்த்தளபதியை அவர்கள் கொண்டிருந்ததில்லை. புலிகளின் கடந்த முப்பதாண்டுகால போராட்டம் - போர் என்ற தொடரசைவில் பல நூற்றுக்கணக்கான போர்த்தளபதிகளும் போரியலாளர்களும் இருந்திருக்கிறார்கள். பலர் இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் இதிலெல்லாம் பால்ராஜ் முற்றிலும் வேறான ஒரு ஆளுமையே.

இப்போது இந்த ஆளுமை தமிழர்களை விட்டு மறைந்து விட்டது.  தமிழர்கள் பெரும் போர்த்தளபதியை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இதுபோலவொரு இழப்பு இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பால்ராஜ் தன்னுடைய இழப்பை ஒரு வெற்றிடமாக விட்டுச் செல்லவில்லை. பொதுவாகவே புலிகளின் மரபுப்படி எந்த இழப்பும் எத்தகைய வெற்றிடத்தையும் விடாது என்பதாக பால்ராஜின் இழப்பும் அத்தகைய வெற்றிடங்களை விடக்கூடாது என்பதற்காக அவரே அந்தச் சமநிலையை உருவாக்கியிருக்கிறார். இதை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்கள் சொல்கிறார். அவர் தனது இரு தசாப்த கால வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார். அதாவது இந்த விடுதலைப் போராட்டம் ஒர் இராணு ரீதியான வடிவம் பெற்றதில் இன்று அதிகாரிகளாக அல்லது படைத்தளபதிகளாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை முன்னகர்த்திக் கொண்டிருக்கும் போரியல் தளபதிகளை உருவாக்குவதில் அவர் தனது இருபது வருட காலத்திற்கு மேற்பட்ட போராட்ட வாழ்க்கையில் முழுமையாக உழைத்தார் என்று. இது மிகச் சரியான கூற்று. ஆனால் என்னதானிருந்தாலும் பால்ராஜைப் போன்றதொரு போரியல் ஆளுமையை தமிழர் தரப்பு பெற்றெடுப்பது அசாத்தியமே. இவருடைய இழப்பை யாராலும் மறக்க முடியாது. அவருடைய சாதனைகளைப்போலவே அதுவும் கனதியானது.

- மனோகரன்


http://www.tamilkathir.com/news/46/58//d,full_view.aspx



♥ செய் அல்லது செத்துமடி-கவிதை ♥

நம்பிக்கை


உணர்வால் மதிமயங்கி உன்னை நீ அழிக்காதே உயர்வாகச் சிந்தித்து செய்து விட வேண்டியவை எவையென்று கண்டுணர்ந்து -உன்அறிவாலே வெற்றிகொள்க...

 

நம்பிக்கை கொள்க நம்பிக்கைக் கொள்க தமிழா!

முதுகெலும்பே முறிந்ததுபோல் படுத்தாயா?

இல்லை,முல்லைத்தீவிற்குள் முடிந்துவிடும் கதை என்று

தமிழன் என்ற: இல்லை, இல்லைதமிழன் என்றால் புலி என்றமுகம் மறைத்து வாழ்வாயா ?

கிலி பிடித்துஇனிமேல்எலி பிடிக்கக் கூடவழியற்றுப் போனோமேஎண்றெண்ணி அழுவாயா?

எமக்குப் பிடித்தசனி - இனிஒருபோதும் விலகாதுஎன்றேதான் - அந்தக்கடவுள்மேல் பழிபோட்டுதாடிவைத்து ஞானியெனநடைப்பிணம் போல் நகர்வாயா?

இயக்கம் என்று இனிமேல் யார்வரினும் கதவிற்குத் தாள்போட்டு இல்லையிங்கு யாருமென்று மௌனித்துப் படுப்பாயா?

கொடுத்த தெல்லாம்போயாச்சு அரசாய்க் கிடந்த நிலம் தரிசாயும் ஆனபின்னேஇவர்களுக்குஇனிமேல் ஏன் காசென்றுமனதிற்குள் சபிப்பாயா?

உலகின் அரசுகளே ஆயுதத்தைப் போட்டுவிட்டுப் பேசிடலாம் என்ற பின்னும் போர் என்ற ஒன்றின் மேல் நடாத்துவது சாத்தியமா?

நடவாது! திடமாய்நில்! மிக மிகவும் கவனம் கொள்! நம்பிக்கை தரும் நல்லசரித்திரங்கள் எண்ணிப்பார்...

என்றெண்ணி மனதெல்லாம் குழம்பி மந்திகைக்குப் போவாயா?

ஏழுமுறை சறுக்கிவிட்ட சிலந்திமறு முறையே தாவித்தன் இலக்கை அடைந்தது மேற்உலகறிந்த ஒரு வீரன் மீண்டும் கிளர்ந் தெழுந்து வென்றகதை நீயறிவாய்...

ஏன்கால்நூற்றாண்டைக்கடந்துவிட்ட எம் போரில்நாம் கடந்த சரித்திரங்கள்மிகவுண்டு எண்ணிப்பார் ...

சாதுர்யமாய்ச் சிலதைவிட்டுவைத்தேன்உனக்காய்:நீயாகச் சிந்தி ...

அயல்வீட்டுப் பையனோடு பகைக்காதே இடைக்கிடைதான் அவன் தங்கை சிரிப்பாளே பார்த்து அனுபவியேன் ...

நேரடியாய்ப் பகைக்காதே நட்பாகக் கைகொடு - ஆனால்உள்ளுக்குள் வைரம்கொள் வெல்வதொன்றே உனதிலக்கு ....

நீ புரிவாய் என்பதனால்நயமாகச் சிலது சொன்னேன்முறைதவறிப் புரிந்து நாதிகெட்டு அலையாதே!

இனமானம் மிகக் கொண்டதமிழ் நாட்டின் இளையவரே!உங்களது தியாகத்தைஎன்றோ நாம் கண்டுணர்ந்தோம்எமக்காக எத்தனை பேர்உம்முயிரை எரித்தீர்கள் ...

எரிக்காதீர் உம்முயிரை!ஏன்எதிரியவன் இலக்கும்அதுவேதான் ...

உணர்வாளன் இருந்தாலே அரசுகட்குத் தலைவலிதான் அதனாலே அவர்கள்  தானாக இறந்துவிட்டால் இனிமேல் நம் தலைவலிகள் தானாக முடிந்ததென்று மகிழ்வார்கள்......

நீங்கள் நினைப்பது போல் மனம் நொந்து நீதிசொல்ல வாரார்கள்....

உணர்வாளன் எவனோ?உயிரை எரிக்கவரும் அடுத்த தொரு தமிழ் மகனோ?உம்மை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நிற்க! நிதானிக்க!

அனியாயமாய் உயிரைஎரித்தழிக்க வேண்டாம் சிந்தை மிகவிரித்துபரந்துள்ள தேசமெல்லாம் உந்தன் உயிர் போகும்வரை எதுவெல்லாம் விடியலிற்காய் சாதிக்க முடியும் என்று காட்டு....

உலகத் தமிழ் மகரே!தம்பி,எறும்ப+ரக் கற்குழியும்என்பார்கள் -நீஎறும்பாய் ஊர்ஆனால்சோர்வகற்று ...

அனுபவத்தால் விவேகம் வரவேகம் வரும்.நில்லாதே - இறுதி இலக்கு வரை தொடர்க....

ஓ!எச்சில் நாய்களே! தொலைபேசி எடுத்தீராம் உங்களது ஆட்களதுகதை முடிந்து போனதினி நீங்களெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டுப்புறப்படுங்கள் என்றீராம்.

கோடரியின் காம்புகளே! பிணந்தின்னிக் கழுகுகட்கு சேவகங்கள்  சொய்வதன்றி வேறென்ன நீரறிவீர்?

உயிருள்ள உடம்பென்றால் அறிவுரைகள் கேட்கும் நடைப்பிணங்கள் நீங்கள் உமக்கெங்கு கேட்கும் யான் என்செய்வேன் - நீர்என்றோ இறந்து விட்டீர்கல்லறைக்குள் போகாமல்நாறுகின்றீர் - நாற்றம் பொறுக்காமல் நாறுகின்றீர் புலம்பி விட்டேன்...

உலகே! உலக வல்லரசுகளே...

காலம் காலமாய் சுதந்திரப் போர்களில் பாடம் படிக்கிறீர்கள் ஆனாலும்,இன்னும் எவ்வளவு பகற்கனவுகள் உம்மிடம்.....

தலைவலி உள்வன் யாரோ கொடுத்த பிழையான மாத்திரையை பாவித்துவிட்டு தலைவலி நின்று விட்டதாய் சொல்லி மகிழ்வானா?

நீங்கள் அதைத்தான் எல்லா நாடுகளிலும் எம்மிடமும் எதிர்பார்கிறீர்கள்.

நீங்கள்மாறுவீர்களோ இல்லையோ?

சுதந்திரம் வேண்டிப் போராடும் ஓர் இனம் சுதந்திரம் என்ற இலக்கில் மாறவே மாறாது,என்றும் இதைமனதிற்கொள்க ...

புத்தரே! மகிழ்வாகத்தூங்குகின்றீரா? உம்மை வணங்கும் சிங்கள இனத்தின்'ஜீவகாருண்யம்'எப்படித் தங்களை துயில்கொள்ள விடும்,

முடிந்தால் இன்னுமொரு பிறப்பெடுத்தாயினும் போதனை செய்க ஏனென்றால் பௌத்தத் துறவிகளே -உம் அடியொற்றிநடக்கவில்லையே...

சிங்கங்களே! வன்னியில் காலூன்றி விட்டதாய் கனவுகாணும் சிங்கள இராணுவமே!

கவனம், நீங்கள் தற்காலிகமாய்ப்பதித்த கால்கள் நிரந்தரமாய் -உங்கள் உயிர்களை அல்லவா பறிக்கப் போகிறது.

எத்தனை தடவை தான் நம் தலைவன்பிரபாகரனிடம் பாடம் படிப்பது

இன்னும் ஏன் சித்தியடையாமல் படித்த வகுப்பிலேயே மீண்டும் மீண்டும் தசாப்த காலங்களாய் நிற்கின்றீர்கள் என்ன செய்வது....

சிங்கள தேசத்தின்அரசியல் தலைவர்கள் அரச கதிரையை தமதாக்கிக் கொள்ளகாலம் காலமாய் உங்களை அல்லவா உரமாக்குகின்றார்கள்

சிப்பாய்களே! உங்கள் கும்பங்களின்அன்றாடத் தேவைகளால்...மாயைகளால் மனசு மயங்கவறுமையில் தொடங்கி வசதி தேடுவதுவரை...நீங்களும்புரிந்தும் புரியாமல்எரிந்து சாம்பலாய்...காலங்கள் கடந்துபுரிகின்ற ஞானத்தில்இலாபங்கள் ஏதுமில்லை.

எனவே காலம் கடக்க முன் ஞான மடைந்திடில் -உம்வாழ்வினை மீட்டிடலாம் வன்னியில் இருந்து இல்லை ஒட்டு மொத்தத் தமிழீழத்தில் இருந்தும் உங்கள் நாட்டிற்குஉயிரோடு போவதேஉங்கள்ஆசையா?இல்லை சவப்பெட்டிகளிலா?

தமிழ் மகனே! போத்துக்கல்,ஒல்லாந்து,இங்கிலாந்தார் வரமுன்னேநாம் இருந்தநிலை ஒருக்கால்எண்ணிப்பார்...

அதன்பின்னே தானிந்த இழி வாழ்வு...மிகச் சில நூற்றாண்டுகள் தூங்கினோம் தட்டிவிட யாரும் இல்லை ஏங்கினோம் ஏக்கம் தணிப்பதற்கும் யாருமில்லை கல்விவரலாற்றுப் படிப்பு...

எத்தனையாம் நூற்றாண்டுஎவனெவன் வந்தான் நம் நிலத்தில் எங்கெங்கு கால்வைத்தான் இன்னும் இன்னும் எத்தனையோ...

மனனம் செய்க பரீட்சை வினாத்தாளில் கேள்வி வரும் ஒரு பிழையும் விடமாட்டாய் நூற்றுக்கு நூறு வரும் -ஆனால் பெரும் பிழைதான் ஒன்றிருக்கும் ஏற்றமுடன் வாழ்ந்தவர் நாம் இப்படியாப் போனோமே.....

ஏன் மீண்டும்அப்படியாய் வாராமல் சாக்கடையாய் நாறுகிறோம் எனக்கேளாய்:

கேட்டாலும் பதில் தாரார் கேட்டார்சிலர் கேட்டார் -மட்டாகஅரசியலில் சிலர் கேட்டார்"ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள்வதில் என்னகுறை''எனக்கேட்டே தங்கள் வயிற்றை நிரப்பி காலத்தைக் கடத்தி விட்டுப்போய் முடிந்தார்.

இக்கதையை மாற்றிவைத்த பெருமகனே! பிதாமகனே! பிரபாகரன் என்னும்பெரும் தலைவன் அடுக்களைக்குள் இருந்தவரை அரியாத்தை ஆக்கிவைத்தான்,

கூனிக் குறுகி நின்றோர் குண்டேந்தி வெடிக்க வைத்தான்,இமயமென வெற்றிகளை உயர்வாகக் கொண்டு நின்றான்...

போர் என்ற ஒன்றில் ஏற்ற இறக்கங்கள் எது வரினும் தளம்பாத பெரும் தலைவன்ஆனால்,சில பேர்க்கு நம்பிக்கை வாராது போரில் நீர் பெருவெற்றி கண்டாலும் -தம்பி உம்மை இந்தஉலகென்றும் ஏற்காது என்பார்....

அவர் வாய்க்கு இன்றைய நாள் அவல்ப் பொரிதான்....இது ஒன்றும் புதியகதை இல்லை அப்பு....சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்துசேராது -என்றார்கள்அதையேதான் சொல்வார்கள் இன்னும் இன்னும் பழிப்பார்கள் வென்றுவிட முடியாதபோர் என்று உரைப்பார்கள்நிற்க,

இன்னும் பலவுண்டுஆனாலும் அதிலொன்று,உதவியவர் மன்னிக்க உதவாதோர் மனங்களிலே ஒருகீறு - ஆனால் ஆளமாய்! கிளிநொச்சி பிடித்துபத்து ஆண்டுகள்,ஆனையிறவடித்து ஒன்பதாண்டுகள்,மொத்தத்தில்எழுபது வீத நிலம்உனதான பெரும் கனவில் மீதம்முப்பது வீதத்தைப் பிடிப்பதற்குநேரகாலத்தில் கொடுப்பதற்கு மறந்து விட்டாய் அதனால்தான் இன்று நீ கட்டிவைத்த மனக்கோட்டைகள் வாடப் படுகிறது

நிரந்தரமாய் இல்லை -நீ சரியாகச் சிந்தித்தால் சரித்திரங்கள் உனைப் பாடும் இல்லை உலகமெலாம் தரித்திரமாய் அலைவது மெய்.மயங்காதே!

உந்தனது முகவரியை நீயாகத் தொலைக்காதே!களைக்காதே!விறைப்பாகச் சதிராடு....

களம் வெல்லும் என்றெண்ணி நிறைவாகப் போராடும் புலிமகர்க்கு கைநிறையக் கொடுத்துதவு.....

வெண்ணெய் திரண்டுவரும் வேளையது பார்த்திருந்து பானை உடைப்பதற்குப்போட்ட கதை நடக்கிறது....

உறங்காதே! உந்தனது இலட்சியத்தில் சற்றும் நீ இறங்காதே! தலைவனது காலடிக்குள் நிற்கும் நம் புலிமகர் போல் துடிப்போடு செயலாகு...

எழுபதுகள் தாண்டுகையில் -தமிழ்அரசியலார் சொன்னார்கள்'செய் அல்லது செத்துமடி' என்று நாம் மடியோம் செய்து முடித்தும் கிழர்ந் தெழுவோம்.....

புலிக்கொடியே வானில் அழகாகப் பறந்தாடும்கிலி ஏதும் இன்றித்தமிழ் நிலத்தில்நாம் நடப்போம்,

மாவீரர் நாமங்கள் நிலைத்துவிடும் தமிழ் நிலத்தில் தங்கத் தமிழ் மழலைவழ்கையிலே நாம் சிரிப்போம்,

புலியின் கொடியிருந்து மாவீரர் சிரித்திருப்பார்,வேங்கைகள் வெல்வார்கள் வெற்றி நமதாகும்.

ஒன்றுமட்டும் உண்மை நாம் களைத்து விட்டோம் இழந்தவை கொஞ்சமல்ல நெஞ்ச மெல்லாம் துயரம் -ஆனால் களைப்பிற்கு இடம் கொடுத்து பலிக்கடாக்கள் ஆவதா?

இல்லை களைப்பை மறந்து களத்தை வென்று பல்லக்கில் ஏறுவதா?

தமிழா! இனி எதை நோக்கி உனது நடை....

நம்பிக்கை கொள்க!

நம்பிக் கைக் கொள்க!

  






http://www.tamilkathir.com/news/1329/58//d,view_video.aspx
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!