இலங்கை அகதிகள் படிக்கத் தடை!
![](http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/august/16.08.09/srilankanrefuge.jpg)
""பனி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1079 மதிப்பெண்கள் வாங்கி யும் என் தங்கைக்கு அண்ணா யுனிவர் சிட்டி கவுன்சிலிங் கிற்கு அழைப்பு வரவில்லை அய்யா. என் தங்கச்சியோட உயர்கல்வி தடைபடாமல் இருக்க நக்கீரன்தான் உதவி செய்ய வேண்டும்'''என்ற கோரிக் கையோடு நம்மை சந்தித் தார் சென்னை விவேகானந்தர் கல்லூரி மாணவரான பிரியதர்ஷன்.
![](http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/august/16.08.09/srilankanrefuge1.jpg)
பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கு மேலான இடங்கள் காலியாக இருக்கும் என்று கவுன்சிலிங் நடத்தும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சொல்லிவரும் நிலையில் 1079 மதிப்பெண்கள் வாங்கிய மாணவி நிராகரிக்கப்பட்டது ஏன்?
""நாங்க இலங்கைத் தமிழர்கள் அய்யா. அங்கிருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள். இந்தியா வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. மூன்றாம் வகுப்பிலிருந்து என் தங்கை சென்னையில்தான் படித்தாள். ஆனாலும் இலங்கை அகதிகள் என்பதால் எங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக் கிறது'''என்ற பிரியதர்ஷன் தன் குடும்ப பின்னணி குறித்து நம்மிடம் விளக்கி னார்.
எங்கள் அப்பா நாங்கள் இலங்கையில் இருந்தபோதே தவறிவிட்டார். 1999ம் ஆண்டில் படகு மூலம் ராமேஸ்வரம் வந்தோம். அங்கே மண்டபம் முகாமில் சில நாட்கள் தங்க வைக்கப்பட்டி ருந்தோம். பிறகு சென்னையில் இருந்த அத்தை உதவியுடன் நாங்களும் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு பார்த்து வந்துவிட்டோம். அப்போது நான் ஐந்தாம் வகுப்பும், தங்கை ஜனனி மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம். அப்பாவும் இல்லாமல் வருமானம் இன்றி எங்கள் குடும்பம் அவதிப்பட்ட போது எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்தவர் எங்கள் அத்தைதான். அத்தை குடும்ப உதவியோடுதான் நாங்கள் பள்ளிப்படிப்பை முடித்தோம். நான் சென்ற ஆண்டு முதல் விவேகானந்தா கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து படிக்கிறேன். என் தங்கைக்கு படிப்பில் நிறைய ஆர்வம் உண்டு. என் தங்கையோடு வேலம்மாள் பள்ளியில் படித்த மற்ற நண்பர்களுக்கு எல்லாம் நல்ல கல்லூரிகளில் பொறியியல் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. ஜனனியின் கட் ஆஃப் மதிப்பெண் 200க்கு 176. இதைவிட குறைவாக வாங்கியவர்களுக்கு நல்ல கோர்ஸ் கிடைத்திருக்கிறது. இத னால் என் தங்கை மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக் கிறாள் அய்யா'''என்று கவ லையோடு பேசினார் பிரியதர்ஷன்.
![](http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/august/16.08.09/srilankanrefuge2.jpg)
அண்ணா பல்கலைக் கழக கவுன்சிலிங்கிற்கு அழைப்பு வராததால் தனியார் பொறியியல் கல்லூரிகள் சிலவற்றை அணுகியிருக்கிறது ஜனனியின் குடும்பம். அந்த கல்லூரிகளின் நிர்வாகங்களும், ""உங்களை கல்லூரியில் சேர்ப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று அண்ணா யுனிவர்சிட்டியில் ஒரு என்.ஓ.சி. வாங்கிட்டு வந்துடுங்க. நாங்க சேர்த்துக் கொள்கிறோம்'''என்று சொல்லியிருக் கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக வளாகத் துக்கு போய் சர்ட்டிஃபிகேட் பற்றி ஜனனி குடும்பம் விசாரிக்க... அப்படி எந்த சர்ட்டிஃபி கேட்டும் வழங்க வாய்ப்பில்லை என்று பதில் வந்திருக்கிறது.
""என் கணவர் மாரடைப்பால் இறந்தபிறகு நிரம்ப வேதனைகள் அனுபவித்துதான் இலங்கை யில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தோம். தமிழ்நாட்டில் நம் சொந்தங்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்தான் இங்கே வந்தோம். தமிழர்களாக இருந்தும் எங்களை அன்னியராக பார்ப்பது வேதனையாக இருக்கிறது'' என்று கலங்கினார் ஜனனியின் தாயார் வனஜா.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிய 5 நாட்களே இருந்த நிலையில் , ஜனனியின் பிரச் சனை குறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவகரிடம் பேசினோம். ""கேண்டிடேட்டை நேரில் வரச்சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவி களை நிச்சயம் செய்கிறேன்'''என்று அவர் சொல்ல...அன்று மாலையே ஜனனி குடும்பத் தோடு நாமும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்றோம். ஜனனியின் மதிப்பெண் சான்றிதழ், டி.சி. உள்ளிட்டவற்றை வாங்கி சரிபார்த்த மன்னர் ஜவகரிடம், தங்கள் பிரச்சனையை விளக்கமாக சொன்னார் ஜனனியின் அம்மா வனஜா.
""இப்படி ஒரு பிரச்சனை என் கவனத்துக்கு வருவது இதுதான் முதல்முறை. நீங்கள் தொலைபேசியில் தகவல் சொன்ன உடனேயே அட்மிஷன் அதிகாரிகளிடம் இது பற்றி விசாரித்தேன். "அப்ளி கேஷனில் வெளிநாட்டை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தால் அது நிரா கரிக்கப்பட்டிருக்கும்' என்று சொன் னார்கள். அகதிகளாக உள்ள இலங் கைத் தமிழர்களை என்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க வைப்பதற்கு சட்டப்படி இடம் இல்லை. கவுன்சிலிங் நடத்துகிற பொறுப்பை மட்டுமே தமிழக அரசு எங்களுக்கு ஒப்படைத்திருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறி முறைகளை அரசாங்கம்தான் வகுக்கிறது. எனவே அந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்பதான் நாங்கள் கவுன்சிலிங் நடத்தமுடியும். அண்ணா பல்கலைக்கழக சீட்டில் வேண்டுமானால் வெளிநாட்டவர்களுக்கான ஒதுக் கீட்டில் சீட் பெற இவர்கள் விண்ணப்பிக்கலாம்'''என்று சொன்ன துணைவேந்தர் கவுன்சிலிங் அதிகாரிகளையும் வரவழைத்தார். அவர்களும் ""தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் தகுதி சட்டப்படி ஜனனிக்கு இல்லை'' என்றே சொன்னார்கள்.
""அப்படியானால் இதுவரை பொறியியல் கவுன்சிலிங் கில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வாய்ப்பே வழங்கப்பட்ட தில்லையா?'' என்று நாம் கேட்க"கவுன்சிலிங் முறை கொண்டுவரப்பட்ட 1997-ம் ஆண்டில் இருந்து, எந்த இலங்கை அகதிக்கும் கவுன் சிலிங்கில் பங்கேற்கும் வாய்ப்பு இருந்திருக்காது'''என்றார் கவுன்சிலிங் அதிகாரியான ரெய்மெண்ட்.
![](http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/august/16.08.09/srilankanrefuge3.jpg)
""கடந்த ஐந்தாறு ஆண்டு களில் சில இலங்கை தமிழர்கள் தனியார் கல்லூரிகள் சிலவற் றில் படித்திருக்கிறார்களே? என்ற நம் கேள்விக்கு விளக்க மளித்தார் மாணவர் நலன் களுக்கான இயக்குனர் கணேசன், ""நீங்க சொல்வது உண்மைதான். அவர்கள் மேனேஜ் மெண்ட் கோட்டாவில் சேர்ந்திருப் பார்கள். ஆண்டுக்கு 10 மாணவர்கள் வரை இப்படி படித்திருப்பார்கள். சென்ற ஆண்டு வரை டைரெக்டரேட் ஆஃப் டெக்னிக்கல் எஜுகேஷன் அனுமதி பெற்று குறிப்பிட்ட மாணவர் களுக்கு என்.ஓ.சி. கொடுத்தோம். ஆனால் இந்த ஆண்டு அரசிடம் இருந்து வந்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின் விதி எண் 7-ல் இலங்கை மாணவர்களையும் ஃபாரின் நேஷனலாகத்தான் பார்க்க வேண்டும் என்று குறிப் பிட்டு சொல்லியிருப்பதால் இந்த ஆண்டு அப்படிப்பட்ட என்.ஓ.சி. வழங்கமுடியாத நிலை இருக்கிறது'''என்றார் கணேசன்.
""நீங்கதான் எப்படியா வது முயற்சி எடுத்து எங்க பொண்ணுக்கு என்ஜினியரிங் படிக்கிற வாய்ப்பை உருவாக்கித் தரணும் அய்யா. நல்லா படிக்கிற பொண்ணு... அகதிகளா இருக்கிற எங்களுக்கு படிப்பு மட்டும்தாங்க பெரிய சொத்து''' என்று ஜனனியின் அம்மா வனஜா மீண்டும் துணை வேந்தர் மன்னர் ஜவகரிடம் கோரிக்கை வைத்தார்.
""உங்க பிரச்சனையை எழுத் துப்பூர்வமாக கொடுங்க... நிச்சயம் நான் உயர்கல்வித்துறை உயரதிகாரி கள் பார்வைக்கு இதைக்கொண்டு போய் உங்க மகளோட பிரச்சனைக்கு தீர்வு காண எல்லா முயற்சிகளையும் எடுக்கிறேன்'''என்று நம்பிக்கையூட்டினார் துணைவேந்தர்.
குஜராத், மகாராஷ்டிரா, பீகார் என்று பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து ஐந்து வருடங்களுக்கு குறையாமல் படித்திருந்தால் அவர்களை தமிழ்நாடு கோட் டாவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறது தமிழக அரசின் நெறிமுறைகள். அதே போன்று ஐந்து அல்லது ஐந்து வருடங்களுக்கு அதிகமாக தமிழகப் பள்ளிகளில் படித்த இலங்கைத் தமிழர்களையும் தமிழக கோட்டாவில் சேர்க்கலாம் என்று விதியை உருவாக்கினால் போதும். அகதிகளாக இங்கிருக் கும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் பொறியியல் படிக்க முடியும் என்கிறார்கள் கல்வி யாளர்கள். இலங்கைத் தமிழ் அகதிகளின் வாரிசுகள் உயர் கல்வி பெற தேவையான நடவடிக் கைகளை எடுக்குமா தமிழக அரசு?
http://suthumaathukal.blogspot.com/2009/08/blog-post_18.html
http://www.youtube.com/watch?v=2k1PHU9zoTk
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com