Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, August 21, 2009

♥ ஈழம் என்ற சொல் இனி தமிழ்நாட்டிலும் இல்லை. ♥

ராஜபக்சே ஆணை: ஈழம் என்ற சொல் இனி தமிழ்நாட்டிலும் இல்லை.

http://www.thaaimann.com/wp-content/uploads/2009/05/mahindasurender.jpg

சென்னையில் 17-ம்தேதி நடைபெற்ற விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தமிழ் எழுச்சி விழாவையொட்டி காணபட்ட சுவரொட்டிகளில் 'ஈழம்' என்ற சொல்லையும், தலைவர் பிரபாகரனின் படத்தையும் தமிழக பொலிசார் அழித்தனர்
. இந்த விழாவுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலானோர் திரண்டனர். இந்த விழாவிற்கு 'எழும் தமிழ் ஈழம்' என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

விழா நடந்து கொண்டிருந்த போது சென்னை முழுதும் சுமார் 2000 சுவரொட்டிகளிலும் டிஜிடல் பானர்களிலும் இது போல காணபட்ட ஈழம் என்ற சொல்லை வெள்ளைத்தாள் ஒட்டி பொலிசார் அழித்தனர். பிரபாகரனின் படத்தின் மீதும் இதுபோல வெள்ளைத்தாள் ஒட்டி அழித்தனர்.இது போன்ற சுவரொட்டிகள் கடந்த 10 நாட்களாகவே தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டிருந்த போதும் நேற்று பொலிசார் மேற்கொண்ட இந்த 'அழிப்பு' நடவடிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை கோபமடையச் செய்தது. அவர்கள் அங்கங்கே தன்னியல்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவரொட்டிகளில் மட்டுமின்றி சுவர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களிலும் ஈழம் என்ற சொல்லை பொலிசார் அழித்தனர். இதனை மாநகர உயர் பொலிசு அதிகாரிகள் பார்வையிட்டனர். சிறீலங்கா அரசு திட்டமிட்டு தமிழர்களை அழித்து வருவதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 'ஆயுதம் தாங்கா விடுதலைப்புலிகளா'க செயல்படும் என்றார். (கருணாநிதி ஒருபக்கம் ஈழம் என்னும் பெயரே தமிழகத்திலும் இருக்க கூடாது என்று ராஜபக்சே சகோதரர்களை திருப்திபடுத்த நினைக்க, 2011-ம் ஆண்டு தேர்தல் வரும் வரையிலும் திருமாவளவனுக்கு வேறு போராட்ட கருத்துக்கள் கிடைக்காது என்பது உறுதி. தேர்தல் வந்தவுடன் மௌனச்சாமியாராகி விடுவார். அது வரை ஈழ விடுதலைக்காக இடி முழக்கம் செய்வார்).

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய அரசியல் சட்டத்திற்கு கட்டுபட்டது என்றாலும், தமிழர்கள் அழிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு தமது கட்சி சும்மா இருக்க முடியாது என்றார் திருமாவளவன் (அப்புறம் அண்ணா?). பொலிசார் ஈழம் என்ற சொல்லை தங்களது சுவரொட்டிகளிலிருந்தும், பானர்களிலிருந்தும் அழித்ததைக்குறிப்பிட்ட திருமாவளவன் மக்களின் இதயங்களிலிருந்து ஒருபோதும் விடுதலை உணர்வை அழிக்க முடியாது என்ற உலக உண்மையை வெளியிட்டார். விடுதலைசிறுத்தைகள் எழுவதை இது போன்ற செயல்களால் தடுத்து விட முடியாது என்றார் திருமா (ஏனென்றால் அவர்கள் மாநாட்டரங்கில் மட்டுமே எழுவார்கள்).

நேற்றைய 'எழும் தமிழ் ஈழம்' விழாவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. ஒன்று: முட்கம்பி வேலிகளுக்கு பின்னே தடுத்து வைக்கப்பட்டுள்ள சொந்தங்களை விடுவிக்க வேண்டுமென்பது. இரண்டு: இந்திய மற்றும் அமெரிக்க அரசுகள் விடுதலிப்புலிகள் மீதான தடையை நீக்கவும், பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து நீக்கவும் வேண்டும். மூன்று: பத்மநாதன் கைதிலுள்ள உண்மைகளை வெளிப்படுத்தி அவரது உயிருக்கு ஐ.நா. அவை பாதுகாப்பு தரவேண்டும்.

நேற்று பல இடங்களில் திருமாவளவன் கைது செய்யப்பட்டதாக பொலிசார் வதந்தியை பரப்பினர். இதனால் குழப்பமடைந்த சிறுத்தைகள் பாயத்தொடங்கும் முன்பே அது வதந்திதான் என்பது உறுதியானது. பாய்ச்சல் தவிர்க்கப்பட்டது. இந்த வதந்தியை பொலிசார் பரப்பியதன் நோக்கம் பல இடங்களிலிலுருந்தும் சென்னைக்கு செல்லவிருந்த சிறுத்தைகூட்டத்தை கலையச்செய்து விடலாம் என்பதே.

கருணாநிதி அரசு திருமாவளவனை கையில் வைத்துக் கொண்டு கடந்த மேமாதம் அமைதிபூங்காவாக தமிழகத்தை துலங்கச் செய்து இன்று அவரது கட்சி மாநாட்டின்போதே இவ்வளவு தண்ணி காட்டி விட்டது. ஆனாலும் சொன்னார் திருமா:"நாங்கள் கூடுமானவரை தி.மு.க. அரசுக்கு தொல்லை தராமல் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. தமிழ் ஈழம் என்பதில் மாற்றம் இல்லை".

ஈழதேசம்.கொம் நிருபர் நிலவரசு கண்ணன்

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=385:2009-08-18-14-00-11&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!