
கொழும்பு, ஆக. 19-
இலங்கையில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள 251 பேரை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தற்போது, இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வன்னியில் உள்ள தமிழர்களின் முகாம் களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு சிறுவன் உள்பட 5 பேர் பலியானார்கள். அங்குள்ள “செப்டிக் டேங்க்” வெள்ளத்தில் அடித்து செல் லப்பட்டது. இதையடுத்து அந்த குழிக்குள் விழுந்து சிறுவன் பலியானான். மற்ற 4 பேரும் கடும் குளிர் தாங்காமல் இறந்துள்ளனர்.
முகாம்களில் சேறும், மனித கழிவும் சேர்ந்துள்ளது. சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வவுனியா, செட்டிகுளம் பகுதிகளில் உள்ள முகாம் களில் பெருமளவுக்கு தொற்று நோய் பரவுகிறது. செட்டிகுளம் பகுதியில் உள்ள 13 முகாம்களில் வயிற்றுப்போக்கு நோய் அதிக அளவில் பரவியுள்ளது.
அங்குள்ள முகாம்களில் 735 பேர் வயிற்று போக்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 251 பேர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிற்றோட்டத்துடன் 120 பேருக்கு அம்மை நோய் பரவியுள்ளது.
http://www.maalaimalar.com/2009/08/19111230/CNI070190809.html

இலங்கை கடற்படை தாக்குதல் எதிரொலி: ராமேசுவரத்தில்; மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்; கடற்கரை இன்று வெறிச்சோடியது

ராமேசுவரம், ஆக. 21-
ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி துன்புறுத்தி வருகின்றனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் விரட்டியடிக்கின்றனர். நேற்று முன் தினமும் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
எனவே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தொடர் தாக்குதல் நடவடிக்கையை கண்டித்தும் பாக்ஜலசந்தி, மன்னார் கடல் பகுதியில் தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி உரிமையை பெற்று தர கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தினை தொடங்கினர். சுமார் 800 விசைப்படகுகளும் மீன்படி தொழிலை சார்ந்த 25 ஆயிரம் பேரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
மீன்பிடி தொழிலை நம்பி இருந்த ஐஸ் கம்பெனிகள், லேத் பட்டறைகள் மூடப்பட்டன.
http://www.maalaimalar.com/2009/08/21161925/MDU03210809.html

பச்சைத் தமிழா ஒன்று படு வென்று விடு தமிழீழ எழுச்சிப் பாடல்கள்
http://www.youtube.com/watch?v=pH6qdqiHIcs
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com