Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, June 17, 2009

♥ தமிழ்வின்.காம் விடும் புதுக்கரடி ! ♥

தமிழ்வின் தொடரும் விஷமத்தனம்!

http://tamilwin.com

இது வரை நாளும் தலைவர் இறந்து விட்டதாக கதைகட்டி வந்த தமிழ்வின்
குழுவினர் இன்று புது கரடி ஒன்றை அவிழ்த்து விட்டனர். அது என்னவெனில்
விடுத்லைப்புலிகள் இயக்கத்திற்கு தற்போது பொட்டு அம்மான் த்லைமை
தாங்குகிறார் என்பதுதான். பொட்டு அம்மான் தலைவருக்கு நம்பிக்கையானவர்தான்
என்ற போதிலும் துரோகக்குழுவினர் அவரையே தலைவர் என்று கூறுவதன் மூலம்
தலைவர் இறந்து விட்டார் என்று தமிழர்கள் அனைவரும் நம்பி விடுவார்களாம்!
இச்செய்தியை ஒரு இந்திய இணைய தளம் வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ள
தமிழ்வின் அது எந்த தளம் என்று கூறவில்லை. மேலும் பலவாறாக
கதைத்திருக்கும் தமிழ்வின் செய்தி பொட்டுஅம்மானை பத்மனாதனுக்கு எதிரான
ஒரு ஆளுமையாகவும் காட்டுகிறது. இதன் மூலம் பத்மனாதன் குழுவினர்
விடுதலைப்புலிகளின் தலைமையை எதிர்ப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
கடைசியாக தமிழ்வின்னின் புதுக்கரடியானது பொட்டுஅம்மானின் தலைமையிலான
புலிகளின் உளவுப்பிரிவே 3-வது ஈழப்போரை முன்னின்று நடத்தும் என்றும்
கூறுகிறது. இனி வரப்போவது 3-வது ஈழப்போரில்லை, ஐந்தாவது ஈழப்போர் என்பதை
நான் என் கட்டுரையான 'சரணாகதியை முறியடித்தல் -புதிய காலக்கட்டத்தினுள்
புகுமுன்பாக' என்ற கட்டுரையில் விளக்கியிருந்தேன். தமிழ்வின் தொடர்ந்து
விஷமத்தில் ஈடுபடுவதையே அதன் தொடர்ந்த துரோகத்தைக் கக்கும் செய்திகள்
காட்டுகின்றன.

திருமாவளவன் தொடங்கும் ஐந்தாவது ஈழப்போர்!

'காங்கிரசை வேரோடு சாய்ப்பதே என் முதல் வேலை' என்று சூளுரைத்த
திருமாவளவன்  அதே கையோடு காங்கிரசார் காலில் விழுந்து சரணாகதி அடைந்து
ஈழக்கொடுமைகள் பற்றி பேசுவதை விடுத்து தன் ஒரே ஒரு நாடாளுமன்ற
பதவையைபெற்றவர், தற்போது மீண்டும் ஈழப்போர் பற்றி பேச முன்வந்துள்ளார்.

தற்போது விரைவில் ஐந்தாவது ஈழப்போர் தொடங்கும் என்று திருமாவளவன்
அறிவித்துள்ளார். ஆனால் எப்போது, எங்கே என்று சொல்ல வில்லை. ஒருவேளை அவர்
ஐந்தாவது ஈழப்போரினை சத்தியமூர்த்திபவனில் தொடங்கலாம் போலும் என்றும்
கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை
வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்று கவலை
வெளியிட்டுள்ள திருமாவளவன் பல ஆயிரம் தமிழர்களும் போராளிகளும் மே 18-ம்
தேதியன்று கொல்லப்பட்டபோது தேர்தல் வெற்றிக்களிப்பில் மூழ்கியிருந்தார்
என்று சொல்கிறார்கள். அதே நேரத்தில்தான் அவர் ஈழத்தமிழர்களை அன்னை சோனியா
காப்பாற்ற வேண்டும் என்றும் அறிக்கை விட்டார் என்று
நினைவுபடுத்துகின்றனர் கட்சி வட்டாரத்தினர். அன்னை சோனியாவை மீறி ஒரு
ஐந்தாவது ஈழப்போரினை திருமாவளவன் தொடங்க முடியுமா என்பதை அவர்தான் விளக்க
வேண்டும் என்றும் கட்சியினர் கூறுகின்றனர்.

நிலவரசு
கண்ணன்




இதோ அந்த விஷமச் செய்தி

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவரா? இந்திய இணையத்தளம்

இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள இராணுவம் தெரிவித்துள்ள நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக பொட்டு அம்மான் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இன்று இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள இராணுவம் சொல்கிறது. ஆனால் பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், சில மாதம் கழித்து அவர் வெளியில் வருவார் என்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதனால் பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக பொட்டு அம்மான் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொட்டு அம்மான், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். புலிகள் அமைப்பில் உளவுப்படையை தோற்றுவித்தது இவர்தான்.

உலகம் முழுக்க விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வலுவான கிளை அமைப்புகளை ஏற்படுத்தியதில் இவரது பங்கு அதிகமுள்ளது. அந்த வகையில் உலகம் முழுக்க உள்ள ஈழத்தமிழர்களுடன் பொட்டு அம்மானுக்கு பழக்கமும், நெருக்கமும் உள்ளது.

பொட்டு அம்மான் கொல்லப்பட்டதை சிங்கள இராணுவம் இதுவரை உறுதிபடுத்தவில்லை. பொட்டு அம்மானையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள இராணுவம் அதற்கான ஆதாரத்தை இதுவரை வெளியிடவில்லை. கடைசி கட்ட போரில் தப்பிச்சென்று விட்ட பொட்டு அம்மான் இப்போதும் வன்னிப்பகுதியில்தான் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் ஈழப் போரின் 3-வது கட்டத்தை இந்த உளவுப்பிரிவே முன்னெடுத்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த இணையத்தளம் செய்து வெளியிட்டுள்ளது.


http://tamilwin.com/view.php?2a36QVH4b3dt9Eq34d0SWnL2b02R7GGb4d3aYpD4e0d5ZLukce0cg2h32ccevj0W2e

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!