இலங்கை அகதி முகாம்களில் தினமும் 30 பேர் மாயம்: மனித உரிமை ஆணையம் தகவல்
இலங்கையில் போரின் போது வெளியேறிய மக்களை பல்வேறு முகாம் களில் அடைத்து வைத்துள்ளனர். இந்த முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அவர் களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்க வில்லை. ராணுவத்தினர் முகாமுக்குள் நுழைந்து அத்து மீறல்கள் செய்கின்றனர்.
இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணையம் ஒரு அறிக்கை
வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
அகதி முகாம்களில் இருந்து தினமும் 30-க்கும் மேற்பட்டோர் விசாரணைக் காக அழைத்து செல்லப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளோடு, தொடர்பு உள்ளவர்கள் என்று கூறி அழைத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்புவது இல்லை. அவர்கள் என்ன கதி ஆகிறார்கள் என்றும் தெரியவில்லை.
முகாம்களில் தங்கி இருப்பவர்களை வலுக்கட்டா யமாக வெளியே கொண்டு செல்வதால் ஆட்கள் காணாமல் போவதை தடுக்க முடிய வில்லை.
எனவே முகாம்களில் யார்-யார்? இருக்கிறார்கள்? என்பது பற்றி முறையாக பதிவுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
http://maalaimalar.com/2009/06/17111239/CNI0180170609.html
http://maalaimalar.com/2009/06/17111239/CNI0180170609.html




























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com