Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, June 13, 2009

♥ விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி போலி அறிக்கைகள், ஊடகவியலாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்! ♥

உலகத் தமிழ் ஊடக வலையமைப்பில் றோ ஊடுருவல்! விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி போலி அறிக்கைகள் – தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்!



RAWஉலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில – தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான றோ நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு றோ நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் – ஆங்கில பத்தி எழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்ற கருத்தியலை விதைக்கும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முரண்பாடுகள் நிலவியமை போன்ற கருத்துக்களையும், தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்களில் உடைவுகள் ஏற்பட்டிருப்பது போன்ற செய்திகளையும் வெளியிடும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை, த நேசன், த சண்டே லீடர், த ஹிந்து, புறொன்ட் லைன் போன்ற ஆங்கில ஊடகங்களில் ஆய்வுப் பத்திகளை எழுதி வந்த கனடிய தமிழ் ஊடகவியலாளரின் உதவியுடன், றோ நிறுவனம் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் வெளிப்பாடாகவே, இதுவரை காலமும் புலிச் சாயத்துடன் இயங்கி வந்த சில தமிழ் இணைய ஊடகங்கள், தமது முன்னைய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து அந்தர் பல்டி அடித்து, மாற்று அரசியல் தீர்வுகள், இராசதந்திர உறவாடல்கள் போன்ற குழப்பகரமான செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதனிடையே, தென்தமிழீழ மாவட்டங்களில் தலைமறைவாக செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் இன்றி போலியான அறிக்கைகள் சிலவற்றை சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கி வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிடுவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக தென்தமிழீழத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்களுடன் எமது செய்தியாளர் தொடர்பு கொண்ட பொழுது, கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் தமது அரசியல்துறைப் போராளிகள் எவரும் எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் எம்மிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

http://newsx.com/files/images/LTTE_AFP.jpg



Www.eeladhesam.coM



புலிகளின் பன்னாட்டு வலையமைப்பை சிதைக்க சிறீலங்கா முயற்சி





தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னலை சிதைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் அலுவலகங்களில் கைப்பற்றட்ட ஆவணங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்துவரும், சிறீலங்கா அரசின் புலனாய்வுப் பிரிவினர், அவற்றைக் கொண்டு வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

வெளிநாடுகளில் இயங்கும் சிறீலங்கா அரசின் தூதரகங்கள் கடந்த சில வருடங்களாக தமது வழமையான பணியை ஒத்தி வைத்துவிட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பரப்புரைகளிலும், வெளிநாட்டில் விடுதலைப் புலிகளை முடக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வந்திருந்தன.

இந்த செயற்பாட்டை விரிவுபடுத்தி வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புக்களையும், அதன் வலைப் பின்னலையும் சிதைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு தற்பொழுது ஈடுபட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தல் தூதரங்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன், தூதரகப் பதவிகளில் சில சிறப்பு நியமனங்களும் இடம்பெற்று வருகின்றன. பரப்புரைக்கு ஏதுவாக வெளிநாடுகளிலுள்ள மேற்குலக ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் விலைக்கு வாங்குவது அரசின் திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனின் ஈவினிங் ஸ்ரான்டட் பத்திரிகையில் "அமர் சிங்" என்ற செய்தியாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களது துணைவியார் அடேல் அம்மையார் பற்றி எழுத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.



No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!