Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, October 4, 2009

♥ சாகப் பிறந்தவன் தமிழன்… அடிச்சுக் கொல்லுங்க தமிழனை...! ♥

தமிழன் சாகப் பிறந்தவன்… இந்தியனுக்கு இலங்கை தூதரகத்தின் பூத்தொட்டியைக் காக்கும் தலையாய கடமையிருக்கிறது!


சாகப் பிறந்தவன் தமிழன்… அவனுக்காக இலங்கைத் தூதரகத்தின் பூத்தொட்டி உடைவதை வேடிக்கைப் பார்க்கலாமா!

லைநகர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் உணர்வாளர்கள் சிலர் நேற்று தாக்கியிருக்கிறார்கள். சின்ன சேதம்தான். எந்த சிங்கள உயிருக்கும் பாதிப்பில்லை.

INDIA-SRI LANKA-GANDHI-RAJAPAKSE

ஆனாலும் விழுந்தடித்துக் கொண்டு தன் கவலையை, அக்கறையைத் தெரிவித்த இந்திய அரசு, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. இலங்கைத் தூதரகத்துக்கு காவல்துறைப் பாதுகாப்பைப் பலப்படுத்தியது.

நாம் இதைக் குற்றம் சொல்லவில்லை. செய்ய வேண்டியதுதான். ராஜாங்க உறவுகளைப் பேணிக் காக்க இந்த மாதிரி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதுதான்.

ஆனால், இந்திய எல்லையிலிருந்து வெறும் 16 கிலோமீட்டர் தொலைவில் சிங்களர்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு இனம். ஒரே நாளில் இருபதாயிரம்பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். இன்றும் தினம் தினம் வெளியில் தெரியாத தமிழர் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளன.

இந்த கொடூரத்தை கொஞ்சமாவது தடுத்து நிறுத்துமாறு தீக்குளித்து தங்கள் கோபத்தையும் ஆற்றாமையையும் காட்டினார்கள் இந்தியப் பிரஜைகளான தமிழர்கள்…

ஆனால் காதிருந்தும் செவிடாய் வேடிக்கை பார்த்ததோடு நில்லாமல், அந்த இனப் படுகொலைக்கு கிரியா ஊக்கியாக நின்று ஆயுதங்களும் ஆதரவும் வழங்கியது இந்தியா. இன்னும் கூட சிங்களவர்களின் தோன்றாத் துணையாக நின்று தமிழர்கள் கொடூர சித்திரவதைகளை அனுபவிக்கக் காரணமாக உள்ளது. நடந்த கொடுமைகளை மூடிமறைத்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவாதத்தின் கயமைத்தனத்துக்கு ஐநா வரை பாதுகாப்பாய் போய் வருகிறது இந்த பாழாய் போன பாரத தேசம்.

இன்னொரு பக்கம் இந்தியர்களான தமிழக மீனவர்கள் கிட்டத்தட்ட தினசரி தாக்கப்பட்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கான மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு இலங்கை சிறைச்சாலையில் அடைபட்டு மீண்டுள்ளனர்.

இந்திய கடல் பகுதிக்குள் கூட மீன் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதை இதுவரை இந்திய அரசு உறுதியுடன் தடுத்து நிறுத்தவில்லை. மிகக் கடுமையான முறையில் ஒரு எச்சரிக்கையைக் கூட இதுவரை விடவில்லை. இந்திய தூதரகம் ஒப்புக்குக் கூட இலங்கையிடம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

அட அவ்வளவு ஏன், இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களான தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை- ஒரு உயிருக்குக் கூட - இந்திய அரசின் சார்பில் நிதியுதவியோ அல்லது வேறு வகையான உதவிகளோ செய்யப்படவில்லை - குறைந்தபட்சம் ஆறுதல் கூட தெரிவிக்கப்பட்டதில்லை.

ஆனால் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், போலீஸ் பாதுகாப்பு என்ன… தீவிர விசாரணை என்ன… வெளியுறவுத் துறைச் செயலாளரே வருத்தம் தெரிவிப்பதென்ன…பிரதமர் பேசுவதென்ன… அடடா.. புல்லரிக்குது இவர்கள் வேகம். ஆனால் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது வெற்று ஆறுதல் வார்த்தைகளுக்குக் கூட பஞ்சமாகிவிட்டிருந்தது இந்திய அரசுக்கு.

Attack on Delhi Lankan embassy

இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கடிதம் கடிதமாக எழுதினார்… எழுதிக் கொண்டிருக்கிறார். அந்தக் கடிதங்களை எடைபோட்டிருந்தால் கிடைத்த பணத்தில் பட்டினியால் தவிக்கும் ஒரு தமிழனின் ஒரு நாள் பொழுது கழிந்திருக்கும். ஆனால் அந்தக் கடிதங்களுக்கும் கூட ஒரு பதிலும் இல்லை, டெல்லி மகாராஜா / ராணியிடமிருந்து.

தமிழன் என்று வரும்போது மட்டும் இந்திய அரசுக்கு பேதமே தெரிவதில்லை போலும். 'அது ஈழத் தமிழனோ… இந்தியத் தமிழனோ… உணர்வுகளைக் கொல்லுங்கள்… முடிந்தால் உயிரையும்' என்பதுதான் சிங்கள - இந்திய கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் போலிருக்கிறது!

சாகப் பிறந்தவன் தமிழன்… கேவலம் அவன் உயிருக்காக இலங்கை தூதரகத்தின் பூத்தொட்டிகள் உடைவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியமா… அடிச்சுக் கொல்லுங்க அந்த 'உணர்வாளர்களை'!

குறிப்பு: இருக்க இடம், உண்ண உணவு, பாதுகாப்பான சூழல்… இதைவிட என்ன வேண்டும் ஒரு குடிமகனுக்கு… உணர்வுகள் மதிக்கப்பட்டால் என்ன… காலில் போட்டு மிதிக்கப்பட்டால் என்ன என்ற சிந்தனை கொண்டவர்கள் இதைப் படிக்காமலேயே கூட விட்டுவிடலாம்!

-ஷங்கர்

http://www.envazhi.com/?p=12146

வாழும் பிரபாகரன் - உறுதியாய் கூறும் ஒரு தமிழிச்சி




பிரபாகரன் இருக்கிறாரா ? இந்தக் கேள்வி பல தளங்களில் ஒலிக்கப்படுகின்ற கேள்விதான். ஜெயா தொலைக்காட்சியில், நடிகர், இயக்குனர், விசுவின் மக்கள் அரங்கம் மேடையிலும் ஒலித்தபோது, அதில் கலந்து கொண்ட ஈழத்தமிழ்ப்பெண் எந்தவிதமான தயக்கமுமமின்றிச் சடாரெனப் பதில் தருகின்றார்.

அவர் அளிக்கும் பதிலில், மறைந்துகிடப்பது பிரபாகரன் எனும் தனிமனிதவிருப்பா..? அல்லது ஈழத் தமிழர் மனங்களின் நீறு தனல் நெருப்பா..? .நிகழ்ச்சியை பொறுமையாக இறுதி வரை பாருங்கள், நீங்களே முடிவு கொள்ளுங்கள்...

http://video.yahoo.com/watch/6025002


http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-45-39/tvradio/3437-pirapakaran-eelam-jayatv-show

"ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கிட்டதட்ட 18 வருஷமா தேடிக்கிட்டு இருக்கிற பிரபாகரன்,பொட்டுஅம்மன்,இருவரையும் இதுவரை பிடிக்க முடியவில்லை. அவங்க மேல இருக்கிற வழக்கை வாபஸ் வாங்குவீங்களா?..........."



குற்றவாளி சிக்கா விட்டால் C.B.I விட்டு விடும்!

ஒரு அட்டகாசமான நாடகம் அரங்கேறியிருக்கிறது.அதுவும் 23 வருடமாய் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நாடகத்தின் Climax காட்சி அத்தனை பரபரப்பாய் இல்லை.ஆம் போபர்ஸ் பீரங்கி பேரத்தில் குற்றம் சாட்டபட்ட இத்தாலிய ஆயுத வியாபார இடைத்தரகர் ஒட்டாவிய குவத்ரோஸி மீதான வழக்கை வாபஸ் பெற CBI முடிவெடுத்து நீதிமண்றத்திடம் மனு தாக்கல் செய்துள்ளது.அதற்கு கூறப்படும் காரணம் மனுஷனை பிடிக்க முடியவில்லை என்பதுதான்.

அண்ணன் வடிவேல் பாணியில சொல்ல போனால "சின்னபுள்ளதனமாவுல இருக்கு" என பாமரர்கள் கூட கமெண்ட் அடிக்கிறார்கள்.

சின்னவயசுல "கப்-ஐஸ்"-னு ஒரு வெளையாட்டு விளையாடுவோம்.அதுல பாருங்க ஆட்டத்துல கலந்துகிட்ட அத்தனை பேரும் போயி ஒளிஞ்சுக்குவானுக! ஒருத்தன் மட்டும் அவுங்களை எல்லாம் கண்டுபிடிக்கனும்! அப்படி ஆட்டத்துல் சிலபேரு ஒளிஞ்சுகிறேன்னு சொல்லி அப்படியே கெளம்பி போயி அடுத்த ஊருக்கு பகலாட்டம் பார்க்க போயிருவானுக! சிலபேரு கண்டுபிடிச்சிடுவாணோன்னு பயந்து மாட்டு கொட்டகை யில ஏறி விட்டத்த பிடிச்சு அப்படியே வவ்வாளோட வவ்வாளா தொங்கிக்கினு இருப்பானுக!

இவனுகளை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நம்மாளும் முடிஞ்ச மட்டும் தேடி ஒன்னு ரெண்டு பேரை கண்டுபிடிப்பான்.அப்புறம் தேடி தேடி அலுத்து போகும்போதுதான் அவனுக்கு தெரியும் "ஆஹா சிலபேரு சிங்கிள் சிங்கிளா கெளம்பி சினிமாவுக்கு போயிட்டானுகனு".

ஒடனே நம்மாளுக்கு பீதியாயிடும்."அத்தனை பேரையும் கண்டுபிடிக்காட்டி மீதியிருக்கவனுக சும்மாயிருக்க மாட்டய்ங்களேடானு!. ஒடனே போடுவாம் பாரு நம்மாளு ஒரு பிட்ட " எங்க ஆத்தா கூப்புடுது,நான் ஆட்டைக்கு வ(ர)ல்ல!"-னு.அந்த பிட்டுல அந்தர் ஆகி மீதியிருக்கிற பசங்க அவனை விட்டுட்டு அடுத்த ஆட்டத்துக்கு தயாராயிடுவானுக!

அந்த மாதிரித்தான் இருக்குது.இப்ப எந்த (இத்தாலி) ஆத்தா கூப்பிட்டதோ தெரியல! CBI இப்ப " நான் ஆட்டத்துக்கு வரலை" னு ஜஹா வாங்குது.

உலகின் நான்ங்காவது பெரிய வல்லரசு! சகல நவீன வசதிகள் கொண்ட உளவு துறை! அமெரிக்காவையே இலங்கை விஷயத்தில் அடக்கி வாசிக்க வைக்கும் அயலுறவு துறை! எத்தனை அதிகாரம்,வசதிகள்,இத்யாதி.....அத்துனை இருந்தும்.....கேவலம் ஒரு குற்றவாளியை பிடிக்க முடியவில்லை என கேஸை வாபஸ் வாங்குவது எவ்வளவு பெரிய அசிங்கம் இந்த அதிகாரவர்க்கத்திற்கு!

குற்றவாளியை பிடிக்க முடியாமல் போவது இயல்பான ஒன்று! மறுப்பதற்கில்லை! ஆனால் அதனாலேயே அவன் மீதான வழக்கை வாபஸ் பெறுவது என்பது மிக கேவலமான செயல் என்பது CBI க்கு தெரியாதா?

"இதன் மூலம் குற்றம் சாட்டபட்டவன் அகப்படாமல் டிமிக்கி கொடுத்து விட்டால் ஒரு கட்டத்தில் அவன் மீதான குற்றசாட்டு விலக்கபட்டு நிரபராதி ஆகி விடுவான்"-என்ற புதிய சித்தாந்தம் உருவாக்கபடுகிறது.

CBI-வேண்டுமானால் இது செலவு பிடிக்கும் விஷயம்! கால விரயம்! என என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும்! ஆனால் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக சொல்ல படும் ஒரு காரணம்
"ஏஜென்டாக செயல்படுபவர் மீது வழக்குப் பதிவு செய்ய புலனாய்வு நிறுவனத்துக்கு அதிகாரம் இல்லை" என்பது தெரிய வந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குவாத்ரோஸி-ய குற்றவாளியா சேர்ப்பதற்கு முன் இவ் விஷயம் உங்களுக்கு (CBI) தெரியவில்லையா? அல்லது 23 வருஷமா விஷாரணை செய்து "அதிகாரமில்லை"ங்கர விஷயத்தைதான் கண்டுபிடித்தீர்களா?

அத்தணையும் மக்கள் வரிப்பணம்! ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் இணைந்தால் எது வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் என்ற ஆணவத்தின் வெளிப்பாடா இது?

"போபர்ஸ் பீரங்கி ஊழல்"-இது என்ன சாதாரண விஷயமா?....இந்திய துணைகண்டத்தில் அரசியலில் சூராவளியை உருவாக்கிய விஷயம்!
அது மட்டுமல்ல!
அண்டை நாட்டில் ஈழம் எனும் சொந்த மண்ணுக்காக போராடிய ஒரு இனத்தினை,இயக்கத்தினை,மண்ணோடு மண்ணாக,வேரோடும்,வேரடி மண்னோடும் நசுக்க வித்தான முதல் விஷயமே இந்த "போபர்ஸ்" ஊழல் தான் என்பது அரசியல் அவதானிகளுக்கு தெரியும்.(அநத கதை தனி பதிவாக வெளியிடபடும்).

இத்துனை முக்கியதுவம் வாய்ந்த வழக்கினை "எங்க ஆத்தா கூப்பிடுது,நான் வீட்டுக்கு போறேன்னு" சொல்லிட்டு ஆட்டத்திலிருந்து CBI விலக காரனமெண்ன?
ஆர்பரித்து எழ வேண்டிய எதிர்கட்சிகளும்,ஊடகங்களும் அடக்கி வாசிப்பது ஏன்?

இத்தாலியை சேர்ந்த "குவாத்ரோஸி"-யை காப்பாற்ற முயற்சிப்பது யார்?
சர்வதேச அரங்கில் இந்த வழக்கு காரணமாக இந்தியாவிற்கு நேரிடும் அவப்பெயருக்கு யார் காரணம்?.......

CBI -க்கே வெளிச்சம்.ஆனால் நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒன்றுதான்!

20 வருஷமா குவாத்ரோஸியை பிடிக்க முடியவில்லை ! கேஸை வாபஸ் வாங்குகிறீர்கள் ! சரி!
அப்போ! ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கிட்டதட்ட 18 வருஷமா தேடிக்கிட்டு இருக்கிற பிரபாகரன்,பொட்டுஅம்மன்,இருவரையும் இதுவரை பிடிக்க முடியவில்லை. அவங்க மேல இருக்கிற வழக்கை வாபஸ் வாங்குவீங்களா?...........
எவனாவது ஒரு அப்பாவி இந்திய தமிழனின் இந்தமாதிரி கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்வீங்களா?இல்லை லோக்கல் போலீசை விட்டு பிட்டு கேஸை போட்டு உள்ள தள்ளி பெண்டெடுப்பீங்களா?.......

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!