Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, July 4, 2009

♥ சீமான் " சூரியன் மறைவது.... உதிக்க..." ♥

புலிகளை தடைசெய்த ஐரோப்பிய நாடுகள் போராட்டம் நடத்த அனுமதிக்கையில், இந்தியா மட்டும் முடக்குகிறது: இயக்குனர் சீமான்


http://www.alaikal.com/news/wp-content/seeman7.jpg    http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/seeman1.jpg




விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கிறது. ஆனால் இந்தியா முதுகெலும்பு இல்லாமல் முடக்குகிறது. என திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.

பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிட கழகம் மற்றும் மதிமுகவினர் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே டைரக்டர் சீமான் மேற்கண்டவாறு பேசினார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது:-
 
வீரத்திற்கு பெயர் பெற்றவர்கள் நம் தமிழ் இன மக்கள். தமிழர்கள் வாழும் இலங்கையில் நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களுக்காக பல முறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லை. அதில் ஒன்றரை இலட்சம் இலங்கை தமிழர்கள் குண்டடிப்பட்டும், பசியாலும், மருந்தின்றியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
நாம் ஆறரை கோடி தமிழ் இன மக்கள் வாழ்ந்து என்ன பிரயோஜனம்.  சீக்கியன் அடிப்பட்டால் நாடே ஸ்தம்பிக்கிறது. தமிழன் அடிப்பட்டால் கேட்க நாதியற்றவனாக அனாதையாக இறக்கிறான்.
 
இந்தியா, சீனா பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் கைக்கூலியாக இலங்கை அதிபர் ராஜபக்ச செயல்பட்டு வருகிறார். 5000 கோடி டொலருக்கு ராஜபக்ச விலை போய்விட்டார். கச்சதீவில் இராணுவ முகாம் அமைக்கவும், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் மறைமுகமாக இலங்கை உதவி செய்தும் வருகிறது.
 
இந்தியா பேராபத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவின் மெளனம் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை குடித்து கொண்டுள்ளது.
 
அன்று வெள்ளையனுக்கு எதிராக கப்பல் ஓட்டினார் வ.உ.சி. ஆனால் இன்று சிங்களனுக்கு எதிராக விமானம் ஓட்டினார் பிரபாகரன்.

நாம் தவறு செய்யும் போது நாடு கேட்கும். ஆனால் நாடே தவறு செய்யும் போது தட்டி கேட்டால் எனக்கு தேசிய பாதுகாப்பு சட்டமாம். தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களையே தாக்குவது என்ன நியாயம்.
 
உலகம் முழுக்க பத்து கோடி தமிழர்கள் இருந்தும் நம் இரத்த உறவுகளையும் தாய்மொழியையும் காப்பாற்ற முடியாமல் அவல நிலையில் தவிக்கிறோம். தமிழின மக்களே நம் நாட்டு தலைவர்களை நம்ப வேண்டாம். சூரியன் (பிரபாகரன்) மறையுமே ஒழிய ஒரு போதும் மரணிக்காது. மீண்டும் மீண்டும் உதிக்கும். அதுபோல விடுதலை புலிகள் இயக்கத்தை யாரலும் அழிக்க முடியாது.
 
இவ்வாறு அவர் பேசினார்.


                                                                       Www.eeladhesam.coM

[Untitled-1+copy.jpg]



http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/banglore_07072009003.jpg


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!