அமெரிக்கர்கள் இலங்கை செல்ல வேண்டாம்: ஒபாமா
![http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/sri_lanka_ceasefire_0701_a_aap_1199653626.jpg](http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/sri_lanka_ceasefire_0701_a_aap_1199653626.jpg)
அமெரிக்க அரசு இலங்கை செல்லும் அமெரிக்கருக்கான ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டிருப்பதாக இலங்கை அரசு அறிவித்து இருந்தாலும் அங்கு விடுதலைப்புலிகளின் குழுக்கள் தொடர்ந்து இருக்கிறது. அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன.
எனவே அமெரிக்கர்கள் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே அங்கு இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல கூடாது. இங்கு கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாமல் இருக்கின்றன. ஆயுத குழுக்களும் திடீர் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் பெருமளவு கூடுமிடம், அரசியல் பேரணிகள், படை முகாம்கள், அரசு அதிகாரிகள், ராணு வத்தினர் வாகன அணி வகுப்பு, உயர் பாதுகாப்பு பகுதி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
பொதுபோக்கு வரத்து வாகனங்களில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். இலங்கையில் குடியிருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11147
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com