கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்….செய்தோம்….
வீடியோ படம்http://www.youtube.com/watch?v=glcYvmjCK6w
http://www.nerudal.com/nerudal.6948.html
புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து
கவலைகளை நீ நீக்கு
உன் கடமைகளை நீ நோக்கு
தமிழினத்தை கரை சேர்க்க
துடுப்புகளை நீ தூக்கு…
தோல்விகளா நீ பெற்றாய்
நம் தலைவனிடம் எதை கற்றாய்..?
தணலிலே எரிந்தால் தான்
ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்…
துவண்டுவிட நீ வாழை மரமா…?
இல்லை.! இரும்பு தெறிக்கும் வீர மரம்..!
உன் நிலத்தில் வாழ்வில்லையென்றால்
என் நிலத்தில் உன் வாழ்விருக்கும்….
கலங்கரை விளக்கத்தால்
உனக்கு வழிகாட்டத்தான் முடியும்…
அந்தவழி தொடராவிட்டால்
இருள்தானே உன் வாழ்வில் மிஞ்சும்…
எடுத்த உன் ஆயுதத்தால்
உன் வீரம் சொல்லி நின்றாய்…
இப்போது உன் கடமை
அகிம்சையில் உரிமை வென்றிடுவாய்….
இதை விட்டுவிட்டால் செத்திடுவாய்
உன் இனம் இனி மிஞ்சாது…
உன் உரிமை இழந்துவிட்டால்
உன் புதை நிலங்கூட மிஞ்சாது..
புலிப்படையின் பொறுப்பினிலே
நீ ஓய்ந்துவிட்டாய் பலவருடம்….
உன்கையில் பொறுப்பு இப்போ
புலிகள் ஓய்வெடுக்கட்டும் சிலவருடம்….
தருணத்தில் செய்யாத
கடமையதும் தோல்வியது…..
உன் கடமை முடித்துவிட்டு
அதன் பின்னர் ஓய்வு எடு…
அறிவில் சிறந்தவன் நீ…
அன்பிலும் சிறந்தவன் நீ…
அடையாளமாம் உன் இனத்தின்
அதரப்பழசு வாய்ந்தவன் நீ….
ஆனாலும் ஓர் குறை
ஒற்றுமையில் குறைந்தவன் நீ…
அதையும் சரி செய்துவிட்டால்
உலகத்திலும் சிறந்தவன் நீ…
அதன் பின்னால் திரும்பிப்பார்
உலகத்துக்கே முதல்வன் நீ…
துரோகிகளின் சமன் பாடு
உன் உரிமைப் போரிலே அதை நீக்கு
அவரை எதிரிகளே முடித்திடுவார்
அவர்பேச்சை நீ நீக்கு…
நிற்காதே உன் பின்னால்
நெருப்பு எரிகிறது….
அணைக்கத் தவறாதே
உன் அனைத்துரிமை எரிகிறது…
உன்னால் முடியுமென்று
உறுதியுடன் போராடு….
உன் உரிமை கிடைத்ததுமே
எழுச்சியுடன் நீ பாடு…
- இளங்கவி
http://www.nerudal.com/nerudal.7057.html








 
 

 
 

 


 

 


 

 




 
 
 
 
 
 
 
 
 

 
  
 
 






 
   
 
 
 
 
 


 
 
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com