Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, September 18, 2009

♥ முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்-காணொளி ♥

முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்-காணொளி


http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/damilvany-gnanakumar460276_001.jpgவன்னிக்குச் சென்ற பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி என்பவர் இறுதிவரை முள்ளிவாய்க்கால் பகுதில் இருந்து பின்னர் தடைமுகாமில் இருந்து தற்போது மீண்டு பிரித்தானியா வந்துள்ளார்.

அவர் பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

http://www.youtube.com/watch?v=JL9xAFv78KU




“இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை வந்தால் சாட்சியம் கூற தயார்”: தமிழ்வாணி

kalaiஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக போரின் இறுதிகாலத்தின் வன்னிப் பகுதியில் தங்கியிருந்த லண்டனில் இருக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் பெண்மணி தமிழ்வாணி ஞானகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் முடியும் வரை வன்னிப் பகுதியிலும், அதன் பின்னர் இம்மாதத்தின் முதல் வாரம் வரை வடக்கே வவுனியாவில் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தாகக் கூறும் அவர் அப்போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து தனது கருத்தினை தமிழோசையிடம் வெளியிட்டார்.

தனது உறவினர் ஒருவரை சந்திக்க விஸ்வமடு பகுதிக்கு விடுமுறைக்காக சென்றதாக் கூறும் அவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாக் காலம் முடிந்த பிறகும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகக் கூறுகிறார்.

போர் இடம் பெற்ற காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற கடுமையான மோதல்களில் பல மக்கள் உயிரிழக்க நேரிட்டதை தான் நேரில் கண்டதாகவும், காயப்பட்ட மக்களுக்கு உதவ முடியாமல் மருத்துவமனைகள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

மருத்துவ துறையில் ஓரளவு பயிற்சி உள்ளதாக கூறும் அவர், போர் காலத்தில் அங்கு இருக்க நேரிட்ட சமயத்தில் அங்கு காயப்பட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்ததாகவும் கூறுகிறார்.

போர் இடம் பெற்ற சமயத்தில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தன்னால் சரியான கணக்கு தரமுடியாது என்றும் தெரிவிக்கிறார்.

விடுதலைப் புலிகளால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை தான் பார்க்கவில்லை என்று கூறும் தமிழ்வாணி, ஆனால் மருத்துவமனைக்கு வந்தவர்கள் அனைவருமே ஷெல் தாக்குதலால்தான் காயப்பட்டு வந்தார்கள் என்று தெரிவிக்கிறார்.

வன்னி யுத்தத்தில் மக்களை மனிதக்கேடயங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை என்று, முள்ளிவாய்க்காலில் இருந்து இலண்டன் மீண்டிருக்கும் செல்வி ஞானகுமார் தமிழ்வாணி என்ற யுவதி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சிக்கு இன்று (16.09.2009) இரவு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு செல்வி தமிழ்வாணி குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மக்களின் வாழ்விடங்களை இலக்கு வைத்து சிறீலங்கா படைகள் நிகழ்த்திய தாக்குதல்களில் நாள்தோறும் பெரும் தொகையில் மக்கள் பலியானதை சுட்டிக் காட்டியிருக்கும் செல்வி தமிழ்வாணி, உலக சமூகத்தின் மீது தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்து நம்பிக்கையிழந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் மீதான தாக்குதல்களை சிறீலங்கா படையினர் நிகழ்;த்தினார்கள் என்பதை எவ்வாறு அறுதியிட்டுக்கூற முடியும் என்று சனல்-4 செய்தியாளர் வினவிய பொழுது, அதற்குப் பதிலளித்த செல்வி தமிழ்வாணி, வன்னி மக்களுடன் வாழ்ந்து அவர்களுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள், மக்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக விளக்கமளித்தார்.

மக்களை மனிதக்கேடயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சனல்-4 செய்தியாளர் வினவிய பொழுது, அதற்குப் பதலளித்த செல்வி தமிழ்வாணி, தான் அறிந்தவரையில் மக்களை மனிதக்கேடயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதில்லை என்று மீண்டும் உறுதிபடக் கூறினார்.

இறுதி நாளில் முள்ளிவாய்க்காலை விட்டு தான் வெளியேறிய பொழுது, இறந்த குழந்தையின் உடலத்தை அடக்கம் செய்வதா? அல்லது எடுத்துச் செல்வதா? என்று செய்வதறியாது அங்கு பரிதவித்து நின்ற தாய் ஒருவரை தான் கண்ணுற்றதாகவும், இப்படியான பேரவலத்தையே வன்னி மக்கள் எதிர்நோக்கியதாகவும் செல்வி தமிழ்வாணி சுட்டிக் காட்டினார்.

அத்துடன், தமிழ் மக்களை உலகம் சமூகம் ஏமாற்றியிருப்பதாகவும், தனது செவ்வியில் செல்வி தமிழ்வாணி மேலும் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவை தனது வதிவிடமாகக் கொண்ட உயிரியல் மருத்துவ பட்டதாரியான செல்வி தமிழ்வாணி, கடந்த 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வன்னி சென்று, மக்களுக்கான பொதுப்பணிகளில் ஈடுபட்டதோடு, முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்த மக்களோடு கூடப்பயணித்து, அவர்களின் துன்ப துயரங்களில் பங்கேற்று, முள்ளிவாய்க்கால் பகுதியை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து மக்களோடு மக்களாக அங்கிருந்து வெளியேறி, வவுனியா மனிக்பார்ம் வதைமுகாமில் நான்கு மாதங்கள் சிறைப்பட்டு, தற்பொழுது பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!