| நாங்கள் தோற்றதில் வருத்தமில்லை;புலிகள் தோற்றதுதான் கவலையாக இருக்கிறது: வைகோ பேச்சு | 
|    | 
|  நாங்கள் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைதான் இருந்தது. எனினும் அவர்கள் யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். புலிகளை அழிக்க முடியாது.  இவ்வாறு  சேலத்தில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் வைகோ சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். | 
| சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டம் சேலம் ஜங்சன் அருகில் உள்ள பி.சி.சி. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கு.சீ.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வரவேற்றார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது அவர், ''மதிமுகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. வை அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க 50 கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கொளரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம். நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைதான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். புலிகளை அழிக்க முடியாது என்று பேசினார். http://tamilwin.com/view.php?2a36QVH4b3dt9Eq24d0SWnL3b02R7GQb4d3aYpD4e0dTZLukce0cg2h32cceHj062e    | 
♥ காதல் தீ..! ♥
                      -
                    
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
15 years ago








 
 

 
 

 


 

 


 

 




 
 
 
 
 
 
 
 
 

 
  
 
 






 
   
 
 
 
 
 


 
 
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com