புகைப்படக் கருவிகள்,செல்லிடப்பேசிகள் இல்லாமல் இலங்கை முகாம்களில் குருடர்,செவிடர் நிலையில் ஐ.நா
இலங்கையில் ஐ.நா நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் ஐ.நா அதிகாரிகள் புகைப்படக்கருவி, செல்லிடப்பேசிகள் என்பன கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுவதன் மூலம் ஐ.நா குருடர் ,செவிடர் நிலையில் உள்ளது என இண்டர் சிற்றி பிறஷ் நேற்று முந்தினம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
இலங்கையிலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு புகைப்படக்கருவிகள்,கமராக்களை எடுத்துச்செல்வதில் ஐ.நா அதிகாரிகள் தடுக்கப்பட்டமை தொடர்பாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம்
இவ்வருட ஆரம்பத்தில் ஐ.நா ஊழியர்கள் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டத்தை ஐ.நா ஏற்றுக்கொண்ட நிலையில் முகாம்களில் தான் அவதானித்த துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்துவதிலிருந்து அல்லது படம் பிடிப்பதிலிருந்து தாம் தடுக்கப்பட்டால் அதை ஐ.நா ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை
இது குறித்து தாம் ஆராய்வதாக மேற்படி பேச்சாளர் தெரிவித்தார்.
இத்தகைய கட்டுப்பாடுகள் தொடர்பான செய்திகளுக்கு மத்தியில் ஐ.நாவின் மனிதாபிமான அதியுயர் அதிகாரியான ஜோன்ஷ் ஜோம்ஷ் தற்போதைய நிலையில் மேற்படி முகாம்களுக்கு சென்றுவருவதற்கு குறிப்பிடத்தக்களவு அனுமதியை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
புகைப்படக்கருவி,செல்லிடப்பேசிகள் இல்லாத நிலையில் முகாம்களுக்கு சென்றுவருவதற்கான அனுமதி எத்தகையதாக இருக்கும்?
துஷ்பிரயோகங்கள் தொடர்பாக அறியக்கிடைக்கும்போது மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு
அலுவலகம் என்ன நடவடிக்கை மேற்கொள்கின்றது?
ஊளியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து தாம் நிதானமான நடவடிக்கை மேற்கொண்டதாக அந்த அலுவலகம் கூறியது ஆனால் இவ்விடயம் ஒரு தடவை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா வைபவம் ஒன்றில் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் பலர் இவ்வருடம் இலங்கையில் நடந்த விடயங்கள் குறித்து இன்னர் சிட்டி பிறசிடம் தமது கவலைகளை வெளியிட்டனர்.
பாதுகாப்பதற்கான கடமைப்பாட்டுற்கு என்ன நடந்தது? இறிதித் தாக்குதலுக்கு முன்னர் எவராவது அதை நிறித்தியிருக்கக் கூடாதா என மேற்கு ஆபிரிக்க பிராந்திய நாடொன்றிலிருந்து தூதுவர் ஒருவர் கெள்வி
எழுப்பினார்,
அது நல்லதல்ல என இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட நாடொன்றின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியான அத்தூதுவர் கூறினார்.
இந்த ஆபிரிக்க தூதுவர்கள் இரக்கமற்றவர்கள் போலவும் மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் கூடுதலான கரிசனை கொண்டவர்கள்
போலவும் சித்தரிக்கப்பட்டனர்.ஆனால் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்பதை அரசியல்தான் நிர்ணயிக்கின்றது
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=68:2009-06-21-05-23-10&catid=34:2009-06-20-00-23-44&Itemid=53
தமிழினப் படுகொலைதாரிகளை நீதியின் முன்நிறுத்துமாறு வலியுறுத்தி லண்டனில் மாபெரும் பேரணி: ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2009, 03:24.23 AM GMT +05:30 ]
http://tamilwin.com/view.php?2aSWnLe0dHj0W0ecQG7V3b4t9EW4d3g2h3cc2DpY3d426QV2b02ZLu2e




























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com