Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, August 9, 2009

♥ வயிறு பற்றி எரிகிறது ! கருணாவே !ஈமெய்லில் வந்த செய்தி ♥

வயிறு பற்றி எரிகிறது ! கருணாவே !ஈமெய்லில் வந்த செய்தி

கணம் அமைச்சர் கருணா அவர்களுக்கு! நான் ஒரு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன் என்பதாலும் இம்மடலை எழுதும் தார்மிக உரிமை எனக்கு உண்டு என்பதால் இம்மடல்... என்னக்கு தாங்களில் எந்த விதமான தனிப்பட்ட போலி முகங்களோ, கோப தாபங்களோ, பொறாமைகளோ இலலை நான் தராக்கி சிவராமும் அல்ல புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எழுத அரசை குறைக்கூருவதும் எனது நோக்கம் அல்ல இந்த விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாதவர்களும் (அல்லது புரிதல் இருந்தாலும் அரசை திட்ட வேண்டும் / அரசாங்கத்தை குறை கூற வேண்டும் / அரசு நடைமுறைகளின் மேல் சேறிறைக்க வேண்டும் என்ற "அரிப்பு" இருப்பவர்களும்) ஊடகங்களில் இது குறித்து வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி (கைக்கு வந்ததை எல்லாம் தட்டச்சு செய்து) பல கட்டுரைகள் எழுதியதை நான் படித்தேன் . கிழக்கில் இன்று என்ன நடக்கின்றது என்பதை விளக்க இம்மடல் உதவும் என்ற ஒரு சிரு நப்பிக்கைதான் சிறு நம்பிக்கை என்றால் இது ஒரு சிறு தீக்குச்சிதான் சிறு தீக்குச்சிதான் ... பெரும் நெருப்பை உண்டாக்கும் என்பதில் எனக்கு அளவு கடத்த நம்பிக்கை தாங்கள் 2004 மார்ச் 03- கிழக்கு மாகான புலிகளின் தளபதியாக இருத்து பிரிந்து வந்த பொழுது உங்களை அளவு கடந்து ஆதரித்தவன் நான்... காரணம் உண்டு சுயநலம். சுயநலம் என்பதைவிட பொது நலம் என்பது சாலட்சிறந்தது பாசிசப்புலிகளை துடைத்து எறியவேண்டும் என்ற வெறி அது மாற்ருக்கருத்துக்கொண்ட அனைவர் மனதிலும் இருந்த் தீ அதை அணைக்க தாங்கலை துருப்பு சீட்டாக என்னீனோம் இது தவறு அல்ல அபடியே அது நடத்து முடிந்தது முதலில் மகிந்த ராஜபக்ச அரசுக்கு நன்றி கூரவேண்டும். அனால் தாங்கலும் தாங்கள் அமைப்பும் முப்பது வருடங்களாக நடத்திய சர்வாதிகார சாம்ராச்சியம் காட்டுதர்பார்கள் எங்கள் மனங்களில் தீயாக எரிந்து கொண்டுதான் இருக்கும் இல்லை என்றால் அது உங்களால் படுகொலை செய்யப்பட்ட எங்கள் அனைவருக்கும் செய்யும் துரோகம்.

நீங்கள் கிழக்கின் தளபதியாக இருத்த பொழுது நடந்த சிலவற்றை மறக்க முடியாது நிங்கள் ஒரு போட்டியின் போது கூறுகின்றீர்கள் பிரபாகரன் எந்த தாக்குதலுக்கும் வந்ததில்லை என்றும் பொட்டு அம்மானும் பிரவாகரனும் ஒருவரை ஒருவர் சந்தித்தால் அடுத்தது யாரை போட்டுத்தள்ளுவது என்றுதான் கதைப்பார்கள் அதனால்தான் நான் அந்த இயக்கத்தில் இருத்து வெளியில் வந்தேன் என்றும் அப்படியானால் கிழக்கில் நடந்த உங்களால் நடத்தப்பட்ட நீங்கள் கேணல் கருணா அம்மனாக இருந்த பொழுது நடத்த கொலைகளுக்கு பொட்டு அம்மான்தான் காரணம் என்று நீங்கள் தப்பிக்கொள்ள நினைப்பது தவறு.

கிழக்கு சிறுவர் சிறுமிகளை பிடித்து வன்னிக்காடுகளில் வன்னிப்புலிகலை பாதுகாககவும் அங்குள்ள முகாங்களில் சமைக்கவும் வன்னியில் பூநகரி இராணுவமுகாம் அழிப்பிலும் மாங்குளம் இராணுவமுகாம் அழிவிலும் ஆனையிறவு இராணுவமுகாம் தகர்ப்பிலும் எங்கள் கிழக்கின் விடிவெள்ளிகள் மாவிரர் ஆனதும் யாரால் ஆனையிறவு இராணுவமுகாம் தகர்ப்பு தமிழர்களது வரலாற்றில் மிகப்பெரிய வரலாறாகப் பதிவு செய்யப்படுமளவுக்கு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இதற்குப் புலிகள் கொடுத்த விலை கொஞ்சமல்ல. ஏறத்தாள நான்கைந்து மாதங்கள் நடைபெற்ற மோதல் அது. இறுதியில் இயக்கச்சியிலிருந்து இராணுவமுகாமுக்குப் போன குடிநீர்த் தொடர்பைப் புலிகள் துண்டித்ததன் மூலம் இலகுவாக வெற்றியை ஈட்டினார்கள் அந்த கோரக்கொடுமைளுக்கு முன்நின்று புலிக் கொடி ஏத்தியது யார் ?

ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள் அதில் ஒன்று பிரவாகரன் மற்றையது நீங்கள் கிழக்கில் நடந்த அனைத்து கொடுமைகளுக்கும் நீங்கள்தான் காரணம் 1987 இல் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் தோல்வியடையத் தொடங்கியதும் போரில் பங்கெடுத்த புலிகள் தமது படைகளில் பெண்களையும் சேர்த்துக் கொண்டு "சுதந்திரப் பறவைகள்" எனும் பெண்கள் படைகளை உருவாக்கினர்.முதலில் பெண்கள் படையனி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இருந்த பொது யாழில் பெண்களுக்கு என்னடி இயக்கங்களில் வேலை என்று குட்டித் துரத்திய அதே புலிகள் பெண்கள் படையணியை அமைத்தார்கள் அப்போது இயக்கங்களின் இலக்குகள் யாழ்பாணத்தின் மையங்கொண்டிருந்தாலும் காலப்போக்கில் யாழ்ப்பாணத்துக்கு வெளியே புலிகளின் ஆட்சேர்ப்பு இலக்குகள் நகரத் தொடங்கியது. இதற்கு மேற்கு நாடுகளை நோக்கி யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தினரில் அதிகமானோர் ஓடத்தொடங்கியமை டெலோ இயக்கத்தவர்களை யாழில்தான் கிட்டு ஊத்தை ரவி, கிட்டுவின் மெய்ப்பாதுகாவளர் ரஹீம் இவர்கள் டயர் போட்டு எரித்தகொமைகள் நடந்தன அதைப்பர்த்த யாழ்ப்பாணத்துசனம் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு ஓடவைத்தார்கள் இதற்கு ஒரு காரணமாகும்.

இந்நிலையில் தங்களுக்கான ஆள்திரட்டல்களில் (கிழக்கு மாகாணமே) இந்த மட்டு அம்பாறை பிரதேசங்களை நோக்கி புலிகளின் பார்வை திரும்பியது. அப்போதுதான் ஆண்களைவிட மிகமிக அதிகமான சிறுமிகள் இந்த போருக்குள் சிக்கவைக்கப்பட்டனர். இது இம்மாவட்டங்களின் பெண்களது கல்விநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதொன்றாகும்1990.இன் பின்பு வடக்கு கிழக்கு போர்முனைகளில் நிறுத்தப்பட்டவர்களில்; அதிகமான வீதத்தினர் இந்த அம்பாறை மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த பெண் சிறுமிகளே என்பது கவனிக்கவேண்டியது. இது போன்ற போக்குகள் இந்த மாவட்டங்களின் ஆரம்பக் கல்வியில் இருந்து ஒரு சந்ததியையே சீர்குலைத்தது. அதுமட்டுமன்றி 1998களில் புலிகளினால் ஆரம்பிக்கப்பட கட்டாய ஆள்பிடிப்பு எந்தவிதமான சமூக எதிர்ப்புமின்றி (வாழைச்சேனை மகாவித்தியாலயம், கறுவாக்கேணி மாகாவித்தியாலம் போண்ற பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்களால் காட்டப்பட்ட சிறிய எதிர்ப்பும் புலிகளினால் அடித்து நொருக்கி அடக்கப்பட்டது) இப்பகுதிகளில் நிறைவேற்றப்பட்டது. 10 - 15 வயது சிறுமிகள் ஆயிரக்கணக்கில் புலிகளினால் பிடித்து பயிற்சி களங்களுக்கும், போர்முனைகளுக்கும் அனுப்பப்பட்டனர். மேலும் பூபதியம்மாவின்சாகும் வரை உண்ணாநோன்பு மட்டக்களப்பு "கோணேஸ்வரி பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டு" சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட நிகழ்வு அது தந்த துன்பியல் உணர்வைவிட பிரச்சார உத்திக்கே மிகமிக அதிகமாக புலிகளால் பயன்படுத்தப்பட்டது. அதாவது ஆயுதம் தாங்காத பெண்களுக்கு இப்பிரதேசங்களில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையெனும் உணர்வு மாபெரும் சமூக உண்மையாக கட்டமைக்கப்பட்டது. இதனுடாக புலிகளது கட்டாய ஆள்பிடிப்பில் சிறுமிகள் வேட்டையாடப்பட்டு சண்டைகளில் பலியிடப்படுவது நியாயப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட மட்டு அம்பாறைப் பகுதிகளில் மட்டும் இந்த காலகட்டத்தில் சுமார் 4000 சிறுமிகள் கட்டாய கைது மூலம் வீடுகளிலும், பாடசாலைகளிலும், தெருக்களிலும் புலிகளினால் கைதாகியிருந்தனர். இது பற்றிய புகைகூட மட்டக்களப்பை விட்டு வெளியே கசியவிடாமல் அங்கு பணியாற்றிய பத்திரிகையாளர்கள் யாவரும் தொண்டாற்றியிருந்தனர். [கருணாவால் கொல்லப்பட்ட நடேசன் ] சிவராம், துரைரெட்ணம் என்போர்கள் இந்த நாலாயிரம் சிறுமிகளினதும், அவர்களது பெற்றோர்களதும் கண்ணீரைக் கண்டும் கலங்காதவர்கள்;. இதனால் இப்பிரதேச சிறுமிகளின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்டதுடன் அவர்களது சமூக வாழ்க்கை நிலையும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளபட்டுள்ள அதேவேளை 1993 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழும் 16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட விதவைகளின் எண்ணிக்கை 6000 ஆக இருந்தது. இது இன்றைய நிலையில் இப்பொலுது 26000 ,தாண்டிவிட்டது . இப்பெண்களினது வாழ்க்கையும் சீர்குலைக்கப்பட்டு எவ்வித எதிர்காலமும் இன்றி நிற்கின்றது. போராட்ட சூழலில்தான் இதுபோன்ற அழிவுகளும் இழப்புகளும் எற்பட்டு வந்தது என்றால் சமாதான சூழலும்கூட அதற்கு மாறாக எதையும் செய்யவில்லை. சமாதான ஒப்பந்தம் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட பல பெண்சிறுமிகளுக்கு புதுவாழ்வழிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது இதற்கு எதிர்மாறகவே நடந்துகொண்டிருக்கின்றது. கிழக்கின் விடிவெள்ளிகள் எனக்கூரும் எவரும் எதையும் செய்யவில்லை பெண்களுக்கான கல்வியறிவு, பெண்ணடிமை குறித்த விழிப்புணர்வு, கிழக்கின் விதைவைக்களுக்கு ஈ.பி.டி.பியின் கட்சியினருக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உதவிகள் புரிகின்றார் ஏன் நீங்கள் கேணல் கருணா அம்மனாக இருத்த பொழுது உங்கள் அமைப்பால் கொலை செய்யப்பட்ட மாற்ருக்கருத்துக்கொண்ட கிழக்கின் விதைவைக்களுக்கு உதவக்கூடாது மறுவாழ்வுத்திட்டங்கள், பெண்களுக்கான சமவுரிமைக் கோரிக்கைகள் என்று குறைந்த பட்சம் ஏதாவது கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு. வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய இன்றைய சூழலில் அதைவிடுத்து இப்பிரதேச சிறுமிகளின் எதிர்காலம் இன்னும் இன்னும் சூனியமயமாக்கப்படுவதே தொடர்கிறது.

தாங்கள் கூரும் நொண்டிச் சாக்கு ஏற்று கொள்ளமுடியாது இம்மடலை நான் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கவிதை பார்த்தேன் 1990.08.03 அன்று புலிக் கொலைஞர்களால் காத்தான்குடி புனித பள்ளிவாசலிலே அரங்கேற்றப்பட்ட வெறித்தனத்தின் நினைவு நாளையொட்டி இக் கவிதை வடிக்கப்பட்டுள்ளது)

சில வரிகள். வயிறு பற்றி எரிகிறது !
வணங்கிக் கொண்டிருந்த எம் சோதரங்களை
வக்கற்ற மிருகங்கள்
வதைத்து விட்ட அந்த நாளை எண்ணுகையில்
வயிறு முழுக்க பற்றி எரிகிறது !!
வருடங்கள் இருபது ஓடித்தான் போயிடினும்
விம்மியழுத எம் சோதரங்களின்
விடியாத அந்த இரவு தான் - இன்னும்
வி (வ) ழி நெடுகிலும் ரத்தக் கண்ணீராய்
வடிந்து கொண்டிருக்கிறது.

இதற்கு யார் காரணம் 1990 ஓகஸ்ட் 11- ஏறாவூரில் 103 முஸ்லிம்களைப் புலிகள் தூக்கத் தின்போது கொலை செய்தனர்
1992 ஏப்ரல் 29- அழிஞ்சிப் பொத்தானைக் கிராமத்தில் 69 முஸ் லிம்கள் புலிகளினால் கொல்லப் பட்டன 1992 ஜுலை 15- கிரான்குளத் தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளினால் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் .இருவதில் பொலநருவை முஸ்லிம் கிராமத்தில் நூறஎண்பத்தீரன்ருபெர் படுகொலை சம்மாந்துரை மல்வத்தை படுகொலைகள் முஸ்லிம் கிராமஙகள் மட்டுமா சிங்கள அப்பாவிகள் ௧௯௯௦. மே விசாக் தினத்தில் தககொலை தாக்குதலில் இருவத்திமுன்று கொலைகல் சிங்கள எல்லைக்கிராமங்களில் புகுத்த புலிகள் சிறுவர்கள் பெண்கள் உட்பட படுகொலை இன்னும் எத்தநைஜோ அடிக்கிக் கொண்டே போகலாம் முஸ்லிங்கலும் சிங்களமக்களும் மரந்து விடுவார்கள் என நினைப்பது முட்டாள்தனம் பள்ளிவாசல் படுகொலையின் எதிரொலியாக
அம்பாறை வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் முஸ்லிம் இழஞ்சர்களால் படுகொலை செய்யப்பட்ட 150ட்கு மேற்பட்ட
தமிழர்கள் .
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் முஸ்லிம் இழஞ்சர்களால்படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்கள் .
ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் முஸ்லிம் இழஞ்சர்களால் படுகொலை செய்யப்பட்ட 100ட்கு மேற்பட்ட தமிழர்கள் .
மீரவோடை தமிழ் கிராமத்தில் முஸ்லிம் இழஞ்சர்களால் படுகொலை செய்யப்பட்ட 30ட்கு மேற்பட்ட தமிழர்கள் .
மஞ்சன்தொடுவாய் கிராமத்தை எரித்து சுடுகாடாக்கிய முஸ்லிம் இழஞ்சர் கூட்டம்.

நாவக்குடா சந்தை பிரதான வீதியில் இருந்த தமிழரின் கடைகள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிய முஸ்லிம் இழஞ்சர் கூட்டம். இவைகள் ஆனைத்துக்கும் புலிகல்தான் காரணம் முஸ்லிம் மக்கலைக் கொலை செய்த்த புலிகள் ஏன் தமிழலர்கலை பாதுக்ககவில்லை இரு இனத்தில்குள்ளும் சன்டையை மூட்டிவிட்டு குளிர் காய்ந்தார்கள் முஸ்லீம் இன மக்கள் மிகவும் மோசமான முறையில் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டமை குறித்து மிகவும் வேதனை அடைகின்றோம். எந்தத்தவறை அரச சிங்களப் படைகள் அன்று தமிழினத்திற்கு செய்தனவோ அதே செயலை மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், விடுதலைக்காக போராடும் வீரர்கள் என்றும், தமிழர்கள்தான் புலிகள் - புலிகள் தான் தமிழர்கள் என்று தம்மை தாமே கூறிடும் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டங்களில் கூடிய பங்கேற்ற முஸ்லீம் மக்களின் உயிர்களைப்பறிக்க கங்கணம் கட்டிய புலிகளுக்கு விடுதலைவரலாறு தெரியாமல் இருக்கலாம் ஆனால் வரலாறு தெரிந்த அறிஞர்கள் பலர் முஸ்லீம் மக்களாக இருப்பதும், இன்றும் இவர்கள் இப்படியான குரோத மனப்பாங்கை வளர்த்தாலும், தமிழ் மக்களோடு கூடியே வாழவேண்டும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள முஸ்லீம் சகோதரர்களையும் எம்மால் பகைத்துக் கொள்ளமுடியாது. அந்த எண்ணமும் எம்மத்தியில் எழாது. ஒற்றுமையே பலம் என்று இளவயதில் நாம் படித்த பள்ளிப்பாடங்கள் என்றும் எம் நெஞ்சில் நீங்காது இருக்கின்றது. அதாவது முஸ்லீம்களை மட்டுமல்ல தமிழ் சிங்கள அப்பாவிப் பொதுமக்கள் அறிஞர்கள் தலைவர்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சரியான நீதி வழங்கப்படவில்லை. இவையனைத்தையும் முஸ்லீம் சகோதரர்கள் உணர்ந்து நீண்ட காலம் அன்பில் இணைந்த நாம் ஒன்று படவேண்டும் முஸ்லிகள் என்பது யார் சின்னத்தம்பி[க்] [காக்கா] .நல்லதம்பிக்காக்கா. வெல்லைதம்பிக்காக்கா. இவர்கள் அனைவரும் எங்கள் சைவத்தமிழர்கள் இவர்கள் மதம் மாறியதால் மதம் மாறி முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொண்டதால் முஸ்லிம்கள் ஆனார்கள் இவர்களின் வாரிசுகள்தான் முஸ்லிம் தமிழ் என்று சண்டை இடுகின்றார்கள் மதம் தான் வேறு இவர்கள் பேசும் மொழி என்ன தமிழ் எத்தனை எத்தனை பொலிஸ் அதிகாரிகளின் படுகொலைகள் 1990 ஜூன் மாதங்களில் புலிகளிடம் சரன் அடைந்த 600 மேற்பட்ட பொலிசாரின் கொலைகள் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் கொல்லப்பட்ட மாற்று இயக்கத்தவர்கள் எத்தனை 1987ல் புலிகளின் பேச்சு வர்த்தைக்கு என்று அழைத்து நிராயுதர்களாக வந்தத தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) ) மத்தியகுழு உருப்பினர்களை கிளைமோர் குண்டை வைத்து கொலை செய்ததும் அதில் உயிர் தப்பி தண்ணீர் கேட்ட போராளிக்கு வாய்க்குள் சுட்டதும் ஏன் உங்கள் முகாமில் மாற்று கட்சி உறுப்பினரை தொங்கவிட்டு துப்பாக்கி பயிர்ட்சி எடுத்தும் ஏன் நீங்கள்.2004 மார்ச் பிரிந்து வந்ததின் பின் நடந்தது என்ன?மட்டு-அம்பாறையில் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக செயலாற்றிய கௌசல்யன் அவர்களையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் சில புலிகளையும் கிளிநொச்சியில் சுனாமி புனரமைப்பு பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கண்ணிவெடி வைத்து 8 பெப்ருவரி 2005 இரவு 7.15 மணியளவில் கொன்றது 2005 டிசம்பர் திங்கள் 25ம் நாள் நள்ளிரவில் மட்டகளப்பில் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமைப் போராளி) புனித மரியாள் தேவாலயத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் நற்கருணை பெற்று திரும்பும் போது, வழிபாட்டில் வைத்து மனைவிக்கு அருகில் வைத்து இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர், கருணா, குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாற்றுக் கருத்துக்கொண்ட பத்திரிகைகள் தொடக்கம் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வரை தடைசெய்யப்பட்ட காலங்கள் இருந்தன. புலிகளது செய்தித் தாள்களும் புலிகளது சஞ்சிகைகளுமே வாசிக்க முடயும் அதே பானியில் இன்றும் ஊடக சுதந்திரம் மிரட்டப்படுகின்றது உங்கள் ஊடகச் செயலாளராகிய நியூட்டன் அல்லது யூலியன் என்கிற ஞானப்பிரகாசம் என்பவரால் ஒரு ஊடகத்துக்கு விடபட்ட சிறுபிள்ளைத்தனமான அட்சுறுத்தல் கேட்டேன் அந்த புலிகளின் பாணியில் இருந்து சற்றும் மாரவேயில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விடையம் புலிகளில் இருந்து அவர்களின் ஜனநாயக் விரதப்போக்கால் வெளியேறிய நீங்களும் உங்கள் கட்சியினரும் அதே போக்கை கடைப்பிடிப்பது முறையா? அது உங்கள் எதிர்காலதை பாதிப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சிக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை கருணாவுக்கும், கருணா இன்று வகிக்கும் அரசியல் பாத்திரத்தை ஆதரிக்கும் எமக்கும், மேற் சொன்ன கூற்றுக்குள் பெரிய செய்தி காத்துக்கிடக்கின்றது. சில கேள்விகளும் எம் நோக்கி எழுப்பப்படுகிறது. கருணா எதற்காக அரசியல் செய்கிறார்? அவரது கச்சியின் எதிர்காலம் என்ன? நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்? இன்று ஏன் கட்டாயம் அதை ஆதரிக்க வேண்டும்? இவை சில முக்கிய கேள்விகளாகும். கருணா புலிகளில் இருந்து பிரிந்து வந்தாலும் அவர் இன்னொரு பிரபாகரன் போலவோ, அவரது குழு பொட்டம்மானினது வழிகாட்டலில் இயங்கிய மோசமான கொலைகாரக் கும்பலைப் போன்ற மற்றொரு கும்பலாகவோ மாறுவதை மனதார விரும்பாதவர்கள்
கருணாவுக்கும், முதல் அமைச்சர் பிளையனுக்கும் நடக்கும் சட்சரவுகளும் ஏர்புடயதல்ல எங்களுக்கு முக்கிய தேவை ஒற்றுமைதான் அதைவிடுத்து உங்களுக்குள் நடக்கும் யுத்தத்தை ஏல்லோர் கவத்தையும் திசை திருப்பாதீர்கள். எனக்கு நாபகம் வருவது எல்லாம் தமிழ் நண்டு கதைத்தான். எல்லா போத்தல்களிலும் இரண்டு இரண்டு நண்டுகள் போட்டார்கள் அதுவும் நமது நாட்டில் உள்ளபடி இரண்டு இரண்டு நண்டுகளாக
எல்லா நண்டும் வெளியில் வந்துவிட்டன ஆனால் இரண்டு நண்டுகள் மட்டும் வெளியில் வரமுடியாமல் ஒன்றை ஒன்று கலை வாரி கொன்டிருத்தது கலைவாரிய இரண்டும் தமிழ் நண்டுகள். நமக்குள் இல்லாத ஒற்றுமைதான் இரு கைகள் தட்டினால்தான் ஓசை வரும் என்பதை உணர மறுத்த எமது தமிழ் தலைவர்கள் விட்ட தவறு இன்றைய தமிழ் மக்களின் அவலம்
அதுதான் புலிகளின் இன்றைய அழிவுக்கும் காரணம் டைனோசர் வாழ்க்கை .டைனசோர்கள். தம் பெருத்த உடல்களைத் தூக்கிக் கொண்டு புழுதி பரவ கர்ணகடூரமாக பேரொலி எழுப்பிக்கொண்டு ஓடி ஏறி மிதித்துத் துவைத்துப்போட்டுக்கொண்டிருப்பவர்கள். மாற்றுக்கருத்தை மதிக்கவேண்டுமென்ற விவஸ்தையே இல்லாது வெறி பிடித்து அலைபவர்கள். சர்வசாதரணமாக ''புனா சுனா'' "வேசிமகன்" என்று சக மனிதனையே தூஷணை செய்பவர்கள்.டைனோசர் இன்று அந்த இனம் உலகில் இல்லை புலிகளுக்கும் அதே நிலைதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரை மாற்ற அக்கட்சி தீர்மானித்துள்ளது என்று தெரிவித்து இருபது வரவேற்கவேண்டிய ஒன்று விடுதலைப் புலிகள் என்ற பெயர் மாற்றபட்டு த்மிழ் மக்கள் என்ற பெயரில் எதையாவது ஒன்றை தெரியு செய்யலாம் தமிழ் மக்களின் கட்சி தமிழ் மக்கள் என்ற உரிமையை விட்டுக்கொடுக்காமல் கட்சியின் பெயரை வைப்பது தவறல்ல ஈழம் என்ற கட்சிகளுக்கு எதிர் காலத்தில் தடைகள் வரலாம் இன்னொரு பக்கம் பல கட்சிகளின் பெயர்கள் மாற்றப்பட வேண்டிய நிர்பந்தத்தை அரசு ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுவதை இங்கே நான் சொல்லியே ஆகவேண்டும்.
காரணம்..

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு பரபரப்புக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.
"யுத்தத்தில் ஈழம் என்ற கொள்கையை நாம் (இவ்வளவு காலமும் அரசாங்கம் என்ன செய்தாலும் எதிர்த்தவர்கள் இவர்கள்) தொர்கடித்திருக்கிறோம்.. இப்போது அரசியல் ரீதியிலும் தோற்கடிக்கவேண்டும்.
கட்சிப் பெயர்களில் ஈழம் என்பதைக் கொண்டுள்ள கட்சிகள் அனைத்தும் தடை செய்யப் படவேண்டும். இல்லாவிட்டால் என்றோ ஒருநாள் மீண்டும் தனிநாடு என்ற பிரிவினை எண்ணம் தோற்றுவிக்கப்படக் கூடும்"அதற்க்கு பதில் தந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஈழம் என்பது எமது தேசியகீதத்திலும் உள்ளது ஈழம் என்று சொல் இலங்கையையும் குறிக்கும் எனக் கூரினார் அதனனால் எந்த பிரசனையும் வராது எனவும் உறுதியளித்தார். அப்படியானால் கருணா அம்மான் எனபது உங்கலுக்கு புலிகள் வைத்த பெயர் அம்மான் என்ற பெயர் இனி உங்களுக்கு பொறுந்தாது இப்பொழுது நீங்கள் அமைச்சர் புலிகள் இல்லாதபோது புலிகள் சூட்டிய மகுடம் எதற்கு அதனாலதான் அம்மான் என்று எழுதாமல் அமைச்சர் கருணா என எலுதினேன் யாரை புலிகள் துரோகிகள் என்று சுட்டுத்தள்ளினார்களோ இன்று அவர்கலே மக்களுக்கு துரோகம் செய்து மறைந்து விட்டார்கள். மக்களுக்கு இது ஒரு பாடம் மக்கள் முள் கம்பி வேலிளுக்கப்பால் எப்பொழுது விடியும் என ஏக்கத்தில் யாரையும் நம்பமுடியாமல் பாதுகாக்க வேண்டியவர்கள் பாடையில் எத்தி விட்டு மறைந்து விட்டார்கள். அந்த ஏக்கமும் கனவும் முகங்களில். இப்போது உங்களைத் தேடி ஓடிவந்திருக்கும் எங்கள் மக்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துங்கள். அவர்களின் கல்விக்கு உதவுங்கள். எந்த தலைவராவது அவர்களின் நிலைமை யோசித்துப் பார்த்திருப்பீர்களா? அவர்களின் வாழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்து அதற்காக அரசிடம் குரல் கொடுத்திருக்கிறீர்களா?
நீங்களாவது உங்கள் தெருத் சண்டைகளை விட்டு விட்டு இந்தமக்களை மிட்க்கப்பாருங்கள் இதுதான் இனரைய் காலத்தின் தேவை கிழக்கு முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த்தப்பதவிக்கு தகுதியற்றவர் என்று கூருவது முறையல்ல அடுத்தவர் எழுதிக் கொடுத்த மாவீரர் உரையை வாசித்து இந்த உலகத்தை ஏமாத்தியவர்களின் பின்னால் 22, வருடங்கள் இருந்த உங்களுக்கு இப்படிக்கூரும் உரிமை இல்லை அது மக்கள் எடுக்க வேண்டிய முடிவு நீங்கள் உங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை ஆரபித்து அதை நம்பி வந்தவர்களையும் நடுத்தெருவில் விட்டு விட்டு உங்கள் உயிரை காப்பாத்த ஓடினீர்கள் அந்தகட்சியை அக்கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தூக்கி நிறுத்தி இன்று அந்தக்கட்சியின் சார்பில் ஒரு முதல்வர் இருக்கின்றார் நீங்கள் நாட்டுக்கு திரும்பிய பின் மக்களால் தெரிவு செய்யப்படாமல் மகிந்த்த கொடுத்த நன் கொடை இன்று தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ரபதவியில் இருக்கிறிர்கள் நீங்கள் ஏன் கிழக்கு மகானத்துக்கு1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வழங்கபட்டுள்ள அதிகாரங்களை வழங்கக் கூடாது எனக் குறுவது நல்லதல்ல கிழக்கு மாகாணத்துக்கு என்று ஒரு அரசு உண்டு அது மக்களால் நல்லதோ கெட்டததோ கள்ளவாக்கோ நல்லவாக்குகலோ ஜனநாயகம் மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட. அரசு அதில் நீங்கள் தலையிடுவது முறையல்ல முதல் அமைட்சர் தவறும் பட்சத்தில் மக்கள் அடுத்த தேர்தலில் தூக்கி எறிவார்கள் முதல்வர் ஒரு போட்டியில் கூருகிரார் எனக்ககு எனது அதிகாரங்களை பயன் படுதமுடியாமல் இருப்பாதாக நீங்கள் அமட்சர் பதவியில் இருதுகொண்டு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து உங்கள் நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சிக்கு ஏனைய கட்சியில் இருப்பவர்களை உங்கள் கட்சியில் இணையும் படி கூருவது முறையல்ல கட்சி மாறுபவர்களும் நன்று சிந்திக்க வேண்டும் மக்கள் உங்களுக்கு வாகளித்தது உங்கலை பிரதிநிதபடுத்திய கட்சிக்காக அது உங்களுக்கு அல்ல. நீங்கள் மக்களுக்கு நனமை செய்ய நினைத்தால் அது எந்த்க் கட்சியிலும் இருத்து கொண்டு செய்யலாம் மக்கள் கொடுத்த வாக்கை மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்கையும் காப்பாத்துங்கள் ஏன் பாரிய முதல்லிடுகலில் கவனம் செலுத்தும் அதே நேரம் பாமரமக்கள் என்ன வக்கற்றவர்களா. சகோதரர்களே ஏழையின் வாழ்வையும் ஒரு கணம் சிந்யுங்கள் ஏழையின் சிறிப்பில் இறைவனை கான்பிர்களோ எனக்குத்தெரியாது அடுத்த ஏலக்சனில் கலக்சனைக் [அறுவடை] கான்பிர்கள் இல்லை என்றால் வீடுசெல்ல தயார் ஆகுங்கள் அமைட்சர்ராக இருந்தால் என்ன முதல் அமைசராக இருந்தால் என்ன முன்னாள் கேணல் கருணா என்பதுபோல முன்னால் அமைட்சர் ஆகாமல் இருக்கு வேண்டும் என்றால் கிழக்கின் கொடுமைகளுக்கு காரணமானவர்கள் பிராயட்சித்தம் செய்துதான் ஆகவேண்டும் உப்பை தின்றால் தன்னீர் குடிக்கணும். தென்றலாய் வாழ ஆசைப்படும் தமிழ் மக்களுக்கு புயலை கொடுக்காதீர்கள் நீண்டகாலமாக எனக்கு இருந்த மனக்குமுறல் தான் இது இம்மண்ணில் பெருக்கெடுத்தோடிய செங்குருதியும் கண்ணீரும் இனியும் வேண்டாம். இம்மண்ணில் சகோதரத்துவத்தையும், இன ஐக்கியத்தையும் சீர்குலைத்து அநாதைகளையும், விதவைகளையும் உருவாக்கி இம்மண்ணையே சுடுகாடாக்கிய கொடிய யுத்தமும் அதன் தூதுவனான பயங்கரவாதமும் இங்கு மீண்டும் வரக்கூடாது. நாம் அனைவரும் கரம் கோர்த்து வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக, நியாயமாக ஒருவரின் உரிமையில் இன்னொருவர் தலையிடாமல்[கருணா மற்றும் பிள்ளையான் ] வளமான கிழக்கு மாகாணம் என்ற பொது இலக்கை நோக்கி செயற்படுவோமாக இருந்தால் பயங்கரவாதமும், கொடிய யுத்தமும் இங்கு மீண்டும் தலைகாட்ட முடியாது. எனது எழுத்தில் அல்லது கருத்தில் அல்லது நான் சொன்ன விதத்தில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். நான் தங்களை புண்படுத்தும் நோக்கில் இதனை சொல்லவில்லை.
நீண்டகாலமாக எனக்கு இருந்த மனக்குமுறல் இந்த இயற்கை பூமி இம்சை பூமி ஆனதற்கு யார் காரணம் சற்றே சிந்யுங்கள் என்

அன்பு நண்பர்களே அபுடன் அ.ஜெயக்குமார் [ஜோதி

http://sannthi.blogspot.com/2009/08/blog-post_4983.html

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!