Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, August 9, 2009

♥ தாலி என்னும் தரித்திரம் ♥


தாலி என்னும் தெரித்திரம்




தாலி என்னும் தரித்திரத்தை நினைத்தாலே எனக்கு கோபம் வரும். பழங்காலங்களில் அடிமைகளை குறிக்க அவர்களின் கழுத்தில் ஒரு வளையம் போடுவார்கள். அந்த வளையத்தை அவர்கள் எப்போதும் அணிந்து கொண்டிருக்க வேண்டும். அடிமையாய் இருப்பவனுக்கு தான் எப்போதும் அடிமை எஜமானர்களுக்கு அடங்கி போக வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்கும் எஜமானர்களுக்கு இவன் நமக்கு அடிமை இவனை நசுக்கலாம் என்று உற்சாகமூட்டுவதற்குமாக கொண்டு வரப்பட்ட வழக்கம் தான் மாறி பெண்களை அடிமை பார்வை பார்க்க ஆண்கள் உருவாக்கி வைத்தனர் - தாலி.

அப்படி சங்கிலி பிணைக்கப்பட்ட அடிமை என்ன செய்யவேண்டும் தெரியுமா...எஜமானர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் - இது பெண்கள் விஷயத்தில் பெண் பார்க்க வரும் போதே தொடங்கிவிடுகிறது.

அடுத்து அவர்களின் அழுக்கு துணிகளையும் கழிப்பறையையும் சுத்தம் செய்ய வேண்டும். - வீட்டு வேலை பெண்கள் செய்ய வேண்டியது என வற்புறத்தப்பட்டு காலம் காலமாய் பெண்ணை ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் மாற்றிவிட்டார்கள்.

எஜமானர்களை எதிர்த்து நாம் எதுவும் செய்துவிட முடியாது - பெண்கள் ஆண்களை எதிர்த்து பேசக்கூடாது. கணவன் அடித்தால் திருப்பி அடிக்க கூடாது. மண் சோறு சாப்பிட வேண்டும். நோன்பு இருக்க வேண்டும். அந்த அடிமை வளையத்தில் அதாவது தாலியின் கும்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டுமாம். ஆண் என்ன கடவுளா. அப்படி கடவுளையே பகுத்தறிவு என்னும் ஆயுதம் கொண்டு எதிர்க்கும் காலகட்டத்தில் ஒரு சாதாரண மனிதன் ஒரு ஆண் என்பதால் அவனை கடவுள் என பாவிக்க யார் சொல்லி கொடுத்தது. ஆண்கள். அவர்கள் தான் அடிமை விலங்கு என தாலியை கட்டி இனி மேல் நீ என் அடிமை என கூவி அவர்களை அவர்களாஎ கடவுளாக்கிக்கொண்டார்கள். எத்தனை சிரிப்பு வரவைக்க கூடிய விஷயம் பாருங்கள்.







அழகான பெண்கள் அழைத்தால் ஆண்கள் இப்படி வரவும் தயார்.








அடுத்து எஜமானர்கள் தின மிச்சத்தை சாப்பிட வேண்டும். - கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் மனைவி சாப்பிட வேண்டுமாம். இது எத்தனை வக்கிரம் பாருங்கள். தான் தின்ற எச்சிலை மனைவி சாப்பிட வேண்டும் என விரும்பும் ஆண் ஹிட்லரை விட சாடிஸ்ட் என்று தானே சொல்ல வேண்டும். ஆண் என்றல்ல ஒரு சமுதாயமே அதை விரும்புகிறது. அப்படி தான் பெண் சாப்பிட வேண்டும் என்று பண்பாட்டு போர்வையில் அடிமை தனத்தை திணிக்கிறது. அதற்கெல்லாம் சங்கிலி போட்டாற் போல ஒரு தாலியை கழுத்தில் கட்டிவிட்டால் போதும். யோசித்து பாருங்கள் பெண் என்பவள் உங்களை போல் ஒரு ஜீவராசி. இந்த பூமியில் பிறந்தவள். அவளை உங்கள் சுக போதைக்கு அடிமை போல் வளர்த்து மிகவும் கீழான ஆண் வர்க்கத்தை மேலாக காட்ட வேண்டும் என்பதற்காக பெண்களை அடிமை படுத்தி பார்த்த உங்களை என்ன சொல்வது.

பிறகு எஜமானர்களுக்கு கால் அமுக்கி விட வேண்டும் விசிறி விட வேண்டும். இதுவும் பெண்கள் மேல் திணிக்கப்பட்ட அடிமை பணிகள். இப்போது அப்படி இருக்கிறதா தெரியாது ஆனால் நம் அம்மா அப்பா காலத்தில் நிச்சயம் இருந்திருக்கும். பிறகு எஜமானர்களின் செக்ஸ் தேவைகளை அடிமைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அது தான் காட்டு யானை போல் வந்து விழுகிறீர்களே ஆண்களே. தாலி ஒன்றை கட்டிவிட்டு அப்படா இனி எல்லாம் ஓசி என்று மனைவியின் விருப்பம் இல்லாமலே அவளை தொட்டு உங்கள் ஆண்மையை நிலைநாட்டுகிறீர்கள். இது எந்த வகையில் வீரம் ஆண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் தொட்டு புணர்ந்து இன்பம் கண்டு விட்டு அதை ஏதோ பெரிய ஆண் சிங்கம் செய்யும் சாகச ச்யல் போல் மீசையை முறுக்கி விட்டுக்கொள்வது எந்த ஊர் வீரம் என்று புரியவில்லை. வெட்கப்படுங்கள் ஆண்களே. வெட்கம்.

இப்படி அடிமை சின்னமான தாலியை பெண்கள் கழுத்தில் கட்டி அவர்களை அவமதிப்பதை இந்த சமுதாயம் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த தாலி என்னும் திரு விலங்கை ஆண்கள் தங்கள் சட்டைக்கு மேல் அணிந்துகொள்ளும் காலம் வரும். வாழ்க்கை ஒரு சக்கரம். வரலாறில் வென்ற நாடுகள் தோற்றும் இருக்கின்றன. தோற்ற நாடுகள் வென்றும் இருக்கின்றன. நம் நாள் வரும் பெண்களே.....கலங்காதீர்கள்.


-----------------



போன பதிவை பாராட்டி நிறைய கடிதங்கள் வந்தன. குறை சொல்லியும் எழுதி இருந்தார்கள். நீங்கள் ஒரு அண்ணனாய் ஒரு தந்தையாய் அந்த பெண்ணை பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் அந்த ஏமாற்றிய கயவனை கொல்ல வேண்டும் என ஆத்திரம் வரும். அதே கோபமும் ஆத்திரமும் தான் எங்களுக்கு வந்தது. நாங்கள் தண்டித்தால் உங்களுக்கு அது கொடூரமாக இருக்கிறது அல்லவா. எத்தனை குடிசைகளில் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியின் தலை முடியை கொத்தாய் பிடித்து அடித்திருப்பான். அப்போது எல்லாம் இந்த ஆண் குஞ்சுகள் எங்கே போயிருந்தன என்பது தெரியவில்லை.


சமுதாயத்தில் உங்கள் உரிமையை எப்போதும் விட்டு கொடுக்காதீர்கள். ஆண்கள் உங்களை ஒரு கேலி பொருளாக பார்க்க விடாதீர்கள். ஆண்களுக்கு பெண்கள் மீது ஒரு பயம் வர வேண்டும். நம்மை ஒரு பயபக்தியோடு ஒரு பிரமிப்போடும் அணுக வேண்டும். நம்மிடம் மிகுந்த மரியாதையோடு தான் பேச வேண்டும். எந்த இடத்திலும் ஒரு ஆண் வல்லவன் என நினைத்துவிடாதீர்கள். நாம் தான் இந்த உலகத்தில் இறைவனின் சிறந்த படைப்பு என்பதை எபொபதும் மனதில் கொள்ளுங்கள்.

பொது இடங்களில் ஆண்கள் உங்களுக்கு தொல்லை கொடுத்தால் பணிந்து போகாதீர்கள். எதிர்த்து கேளுங்கள். பணிந்து போகவேண்டியவர்கள் ஆண்களே அன்றி நீங்கள் அல்ல. பெண்கள் எதிர்த்து கேட்டால் நொறுங்கி போகும் அளவுக்கு பலவீனமானவர்கள் தான் ஆண்கள். குடித்துவிட்டு கெட்ட வார்த்தையில் திட்டுவதை தான் வீரம் என்றும் ஆண்மை என்றும் நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் அவர்கள். விடாதீர்கள். உங்களை நோகடித்தால் புகார் கொடுங்கள். தண்டனை வாங்கிக்கொடுங்கள். சட்டமும் சமுதாயமும் உங்கள் பக்கம்.

---------

பெண் வீட்டின் தலைவியாகவும் ஆண் அடிமையாகவும் வாழ பிரியப்படும் ஒரு தம்பதியினரின் சுவார்ஸ்யமான கடிதமும் பதிலும் அடுத்த பதிவில்.


உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் எனக்கு எழுதுங்கள்.

உங்கள் தோழி
வின்சி

vincyontop@gmail.com

http://womenrules-menobeys.blogspot.com/2009/08/blog-post_03.html


பொங்கியெழும் கணவர்கள்!

"ரௌத்ரம்" - ஆம், அநியாயத்தை எதிர்த்துப் பொங்கியெழும் நியாயமான கோபம்!

இதைத்தான் காண்கிறோம் அவர்களின் கண்களில்!

ஆண்களை வதைக்கும் கொடுங்கோன்மை சட்டங்களைக் கைக்கொண்டு தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கி, வயதான பெற்றோர்களுடன் சேர்ந்து கைதாகி சிறைக்குச் சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்து நிற்கும் பாதிக்கப்பட்ட கணவர்களின் கண்களில்!

ஆம். அவர்கள் முடிவெடுத்து விட்டனர். அவர்களுக்கு விடுதலை இல்லை. சுதந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான சட்டங்கள் களையப்படும் வரை. அவை 100% துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கெடுமதியும் கள்ளக்காதல் வெறியும் பிடித்து அலையும் பல பெண்கள், அவர்களுக்குத் துணை போகும் சில பெண்ணியவாதிகள், சில பணத்தாசை பிடித்த வக்கீல்கள் மற்றும் பல மேட்டுக்குடிப் பெண்டிரைக் கொண்ட பெண்கள் இயக்கக் கும்பல் - இவர்கள் ஒன்று சேர்ந்து பல லட்சங்களைக் கொள்ளையடிக்கும் (extortion and legal terrorism) இந்த நடைமுறை தடுக்கப்படும் வரை அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.


அதனால் வரும் ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று இத்தகைய பாதிக்கப்பட்ட கணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோர், உடன்பிறப்புகளுக்காகப் பாடுபடும் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family Foundation) முடிவெடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியை அவ்வியக்கத்தின் சென்னைப் பிரிவின் அமைப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


நம் நாட்டின் பல இடங்களில் இத்தகைய கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பட்டால் பொய் வழக்கு போடப்பட்டு சீரழியும் ஆண்கள் மற்றும் அவர்களுடைய் பெற்றோர் துயர் களைய இந்த இயக்கம் பாடுபடுகிறது. இத்தகைய சட்டங்களில் முக்கியமானவை இந்திய குற்றவியல் சட்டம் 498A பிரிவு (IPC Sec 498A) மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act) ஆகும்.


திரு. சுரேஷ் மேலும் கூறுகிறார்:-


ஆண்களுக்கு எதிராக ஒருதலைப் பட்சமான சட்டங்கள் பல நம் நாட்டில் இருக்கின்றன. உதாரணமாக கள்ளக்காதலில் ஒரு ஆண் ஈடுபட்டால் அது குற்றம். அந்த ஆண் உடனே கைது செய்யப்படுவான். ஆனால் ஒரு பெண் சோரம் போனால் அது சட்டப்படி குற்றமில்லை. அதாவது உங்கள் மனைவி உங்கள் எதிரிலேயே இன்னொருவனுடன் கலவியில் ஈடுபட்டால் அந்த மனைவியின்மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் கணவன் இது போல்
செய்தால் உடனே கைது. அவன்மேல் அத்துணை சட்டங்களும் பாயும். இதுதான் இந்திய சட்டங்களின் ஒருதலைப் பட்சமான கட்டமைப்பு (Blatant discrimination against men).


அதே போல் குடும்ப வன்முறைச் சட்டம் மனைவிக்கு எத்தகைய வன்முறையிலும் ஈடுபட சுதந்திரம் கொடுத்திருக்கிறது. ஏனெனில் கணவன் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவான் என்று கூறுகிறது அந்தச் சட்டம். அதன்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாலோ அது குற்றம்; அந்த மனைவி உடனே கிரிமினல் கோர்ட்டில் புகார் கொடுத்து அந்தக் கணவன்மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஆனால் அந்த மனைவி கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கண்டபடித் திட்டலாம், உணவு கொடுக்க மறுக்கலாம், அடிக்கலாம், அனைத்து வன்முறைகளிலும் ஈடுபடலாம். அவை குற்றமேயில்லை, இந்தச் சட்டத்தின்படி!



இப்படி ஒரு பாலருக்கு மட்டும் எத்தகைய குற்றமும் புரிய முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டு, அனைத்து ஆண்களையும் அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படும் நிலை இந்தியாவில் இன்று இருக்கிறது (It is a crime to be born a male in India!).



இந்தச் சட்டங்களின் அடிப்படையில் ஆண்களுக்கு மட்டும் பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவனை விட்டுப் பிரிந்தபின்னும் அவனது முன்னாள் மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஆம், விவாகரத்து பெற்ற பின்னும் கூட மாஜி மனைவிக்கு மெயிண்டெனென்ஸ் என்ற பெயரில் பணம் கொடுத்து அழவேண்டும்! ஆனால் மனைவிக்கு மட்டும் எவ்விதப் பொறுப்பும் கிடையாது, கடமையும் கிடையாது! மனைவிக்கு இருப்பது உரிமை மட்டுமே, கணவனுக்கு இருப்பதெல்லாம் கடமை மட்டுமே, எவ்வித உரிமையும் கிடையாது! என்ன அநியாயமய்யா இது! இப்படித்தான் இந்திய திருமணச் சட்டங்களும் குற்றவியல் பிரிவு 125 (Sec 125 of CrPC) போன்ற பல சட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


பெற்றோர் இருவருடைய அரவணைப்பும் குழந்தைகளுக்குத் தேவை என்பதற்காகப் பாடுபடும் இயக்கமான "Children's Rights Iniative for Shared Parenting" (CRISP) என்னும் அமைப்பின் தலைவர் திரு. குமார் ஜாகீர்தார் (இவர்தான் கிரிகெட் விளையாட்டுக்காரர் அனில் கும்ப்ளேயின் மனைவியுடைய முந்தைய கணவர் - தான் பெற்ற குழந்தையை கண்ணால் காணும் உரிமையைக் கூட நீதிமன்றங்களின் மூலம் பெற இயலாமல் தவிப்பவர்) இன்னொரு மிகவும் பரபரப்பான சிக்கலைப் பற்றிச் சொல்கிறார்:


"இந்திய ஜனத்தொகையில் 40% குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளின் நலத்தை கவனிக்க ஒரு தனி அமைச்சகம் கிடையாது. குழந்தை என்றாலே பெண்கள்தான் அவர்களின் போஷகர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். தந்தைகளின் உரிமைகளைப் பற்றியோ, அந்தத் தந்தையின் அரவணைப்பு குழந்தைகளுக்கு கட்டாயம் தேவை என்பதைப் பற்றியோ இந்தச் சமுதாயமும் சட்டங்களை இயற்றுபவர்களும் சிந்திப்பதில்லை. பெண்களின் தேவைகளும் குழந்தைகளின் தேவைகளும் ஒன்றல்ல. விவகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்துகொள்வது அந்தப் பெண்ணின் நோக்கில் தேவையாக இருக்கலாம். ஆனால் அது அந்தக் குழந்தைக்கு நன்மை விளைவிக்கக் கூடியதா என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் தம்பதிகள் பிரியும்போது குழந்தைகளை பெரும்பாலும் பிரிந்து சென்ற மனைவியின் வசம்தான் நீதிபதிகள் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் கணிப்பில் ஒட்டுமொத்த ஆண்கள் சமுதாயமும் கிரிமினல்கள், பொறுப்பற்றவர்கள் போலும்! இயற்கையின் நியதிப்படி ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பங்களிப்பை தாய் ஈடு செய்யமுடியாது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு கணிசமானது. அது இந்தக் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது."


இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் வரும் ஆகஸ்டு 15 அன்று மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் பற்றி திரு. சுரேஷ் விளக்கினார்:


"அன்றைய தினம் காலையில் சென்னையில் நாங்கள் எங்கள் பிரச்னைகளைப் பற்றியும், இன்றைய சமூகத்தில் இத்தகைய ஆணெர்ப்புச் சட்டங்களால் நம் குடும்ப வாழ்வு முறையே எப்படிச் சிதறிப்போகின்றது என்பதைப் பற்றியும் இந்தச் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்கள் செய்யவேண்டிய கட்டயம் பற்றியும் விளக்கும் துண்டுப் பிரசுரங்களை மெரீனா கடற்கரையில் வினியோகிக்கப் போகிறோம். மேலும் தமிழக ஆளுனர் அவர்களிடமும் சட்ட அமைச்சரிடமும் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அளிக்க இருக்கிறோம்.


அன்றைய தினம் நாடு தழுவிய அளவில் எங்கள் போராட்டம் நிகழவிருக்கிறது. ஆகஸ்டு 15, 16 தேதிகளில் சிம்லாவில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் இந்த இயக்கத்தின் தொடர்புள்ள 14 அரசு சாரா குழுமத்தினர் வந்து கூடி இரண்டாவது தேசிய மகாநாட்டை நடத்துகிறார்கள்."


இதுபற்றி Save Indian Family Foundation இயக்கத்தின் உறுப்பினர் திரு. விராக் அவர்கள் கூறுகிறார்:-


"இந்த அமைப்பின் முதல் மாநாடு கோவாவில் சென்ற ஆண்டு நடந்தது. இந்த ஆண்டின் மாநாட்டில் இந்த அமைப்பைச் சார்ந்த 14 அரசு சாரா இயக்கங்களிலிருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சுமார் 100 செயல் வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரங்கள்யும், பெற்றோர் நலத்தையும் பாதிக்கும் இந்த மாபெரும் பிரச்னைகளை நாங்கள் எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள் பற்றியும், ஆண்கள் நலத்திற்காக ஒரு பிரத்தியேக ஆணையம் மற்றும் அமைச்சகம் - National Commission for Men and a seperate ministry for men's welfare (பெண்களுக்கு இருப்பது போலவே) கொண்டு வரவேண்டிய கட்டாயத்தை உணர்த்துவது பற்றியும் விவாதித்து செயல் திட்டங்களை வகுத்து முடிவெடுக்க இருக்கிறோம்.
இந்த மாநாட்டிற்கு சென்னையிலிருந்து 9 உறுப்பினர்கள் கலந்து கொள்ள விருக்கிறார்கள்.


வெகு நாட்களாக தங்கள் மேல் சுமத்தப்படும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் மௌனமாக தாங்கிக் கொண்டிருந்த ஆண்கள் கடைசியில் இனிப் பொறுக்கமுடியாது என்று பொங்கியெழுந்துவிட்டனர்!

(செய்தி மற்றும் படம் உதவி - டைம்ஸ் ஆஃப் இந்தியா)

http://tamil498a.blogspot.com/2009/08/blog-post_06.html




தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் இப்படி ?



தமிழ் சினிமாவை பொறுத்தவரை எல்லாமே காமெடிதான் . பின்ன என்னங்க

கில்லின்னு சொல்றாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுறாரு .

போக்கிரில போலீஸ் ன்னு சொல்லிட்டு
(watchman) காட்டுறாங்க.


அழகிய தமிழ் மகன்னு சொன்னாங்க ஆனா கடைசிவரை அது யாருன்னு காட்டவே இல்லை.என்ன கொடுமை சார்.




இதுகூட பரவாயில்லை குருவின்னு சொன்னாங்க ஆனா
தியேட்டர்ல ஒரு காக்கா கூட இல்லை .





வில்லுனு சொன்னாங்க ஆனா தியேட்டர் ல கல்லு பறந்தது தா நிஜம் சத்தியமா நா டாக்டர் .விஜய் ய கிண்டல் பன்னலைங்கோ

பின் குறிப்பு;
இதெல்லாம் நான் கேள்வி பட்டது இப்படி ரிஸ்க் எடுத்து இந்த படங்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

எப்படி எல்லாம் எஸ்.எம்.எஸ் ரூம் போட்டு யோசிச்சி அனுப்புறாங்க பாருங்க .

( நகைச்சுவைக்காக மட்டுமே )

எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் இது . தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் தங்கள் சுய நலத்திற்க்காக ரசிகர்களை இப்படி தூண்டி விட்டு தங்கள் வளர்ச்சியடைவதை நிறுத்துவார்களோ தெரிய வில்லை .

அவர்களுக்காக இப்படி கேவலமாக யோசிக்காமல் நல்ல சிந்தனைகளை எஸ்.எம்.எஸ் அனுப்பலாமே. ரசிகர்கள் திருந்தாதவரை இது மாறப்போவது இல்லை .


http://saidapet2009.blogspot.com/2009/08/blog-post_6851.html



வாவ்! இந்த பெண் வரைவது என்ன?

நடனத்துடன் அனாயாசமாக இந்த பெண் வரைவது என்ன என்பதை உங்களால் யூகிக்கமுடிகிறதா?

http://www.youtube.com/watch?v=wGB3HoQVVSk






http://www.premkg.com/2009/08/blog-post.html


cid:image001.jpg@01C9FB3B.617CA250


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!