Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, May 17, 2009

மே-17, குண்டு மழையில் மரண பூமி

இடைவிடாது குண்டு மழை பொழியும் சிறிலங்கா படையினர்: மரண பூமியாக மாறியுள்ள முள்ளிவாய்க்கால்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு புறங்களிலும் சுற்றிவளைத்துள்ள சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய பகுதி மீது இடைவிடாது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருப்பதாக இன்று காலை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடைவிடாத குண்டு மழையினாலும், தொடர்ச்சியாக உணவோ குடிதண்ணீரோ இல்லாமல் பதுங்குகுழிகளுக்குள் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இருப்பதாலும் பெருமளவு தமிழர்கள் உயிரிழக்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனைவிட நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், உடல் உறுப்புக்களை இழந்து மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் இரத்தம் பெருகிய நிலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டுமிருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினர் நான்கு புறங்களிலும் இருந்தும் மேற்கொள்ளும் கனரக தாக்குதல்களை சில நிமிட நேரம் கூட இடைநிறுத்தவில்லை எனவும், கடுமையான காயங்களுக்குள்ளாக ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்கான வசதிகள் எதுவும் இல்லாமல் மரணிக்கும் தறுவாயில் இருப்பதாகவும் அப்பகுதியில் இருந்து மரண ஓலங்களே கேட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்று காலை கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களின் உடலங்களும், படுகாயமடைந்த நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களையும்தான் அந்தப் பகுதி எங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது. தாக்குதல்கள் தொடர்வதால் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு உடனடி உதவிகளைக் கூட செய்ய முடியாத நிலையில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் கூட இருக்கின்றனர்.

முள்ளிவாய்காலின் அனைத்துப் பகுதிகளிலும் மிகவும் நெருக்கமாக நேருக்கு நேரான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.puthinam.com/full.php?2b1VoUe0dycYe0ecAA4e3b4g6DL4d3f1e3cc2AmS3d434OO3a030Mt3e


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!