Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, August 23, 2009

♥ உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பயப்படவேண்டும் ? ♥


தமிழ் ஈழத்தை உருவாக்கியெடுத்த தேசிய தலைவர் பிரபாகரனின் படங்களை தமிழகத்தில் வைக்க கூடாது என்றும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேச கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது .

விடுதலை புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டோம் , விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொன்று விட்டோம் என சிங்கள இனவெறி அரசு கொக்கரித்து கொண்டிருக்கிறது . அதை நினைத்து பெருமை பட்டு கொண்டது இந்திய காங்கிரஸ் அரசு . தமிழக காங்கிரஸ் கட்சியினரோ பிரபாகரனை கொன்ற சோனியாவிற்கு நன்றி என சுவரொட்டிகள் அடித்து மகிழ்ச்சி கண்டனர் . இல்லாத பிரபாகரனுக்காகவும் இல்லாத விடுதலை புலிகளுக்காகவும் எதற்கு பயப்பட வேண்டும் .

இலங்கை அரசோ மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை முள் வெளி கம்பிகளில் அடைத்து வைத்திருக்கிறது போர் முடிவுற்றதாக அறிவித்து பல மாதங்கள் ஆன பின்னரும் விடுவிப்பதாக இல்லை . சிங்கள அரசால் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் போர் முடிந்த பின்னரும் கைவிட படுவதாக இல்லை . அதே நிலை தான் இங்கே தமிழக அரசும் செய்கிறது . தீவிர போர் நடைபெற்ற காலகட்டங்களில் ஈழ தமிழர்களுக்காக எழுந்த எழுச்சியை அரச இயந்திரங்களை கொண்டு காட்டு மிராண்டி தனமாக ஒடுக்கியது . கடைசி கட்ட ஈழ போரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சாவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் ஒரு காரணமாக ஆகி போனது .

இந்நிலையில் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு நம்பிக்கையிழந்த தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தமிழகத்தில் எழுச்சி கூட்டங்கள் நடைபெறுவதை பொறுக்க முடியாத தமிழக அரசு மீண்டும் தமிழ் உணர்வாளர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைகிறது . மக்கள் மனதிலிருந்து மாவீரன் பிரபாகரனை மற்ற முடியாது என நினைத்த தமிழக அரசு பொது இடங்களில் படங்கள் வைக்க கூடாது என எச்சரிக்கிறது .

பிரபாகரனோ விடுதலை புலிகளோ இனி வரமுடியாது என தினமும் தமிழர்களுக்கு எதிராகவே எழுதிவரும் தின மலர் கூட தமிழக அரசுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் செயல் படுகிறார்கள் என காட்டி கொடுக்கிறது . தினமலருக்கு என்ன பயம் உயிரோடில்லாத பிரபாகரனை கண்டு ஏன் பய பட வேண்டும் .

எழும் தமிழ் ஈழம் என தட்டி வைத்தால் காவல் துறையினர் அதில் உள்ள ஈழத்தை அழித்து விடுகிறார்கள் . தமிழ் ஈழத்திற்கான உலக தமிழர் பிரகடனம் வெளியிட்டால் வழக்கு போடுகிறார்கள் . விடுதலை புலிகள் இயக்கம் அழிக்க பட்ட பின்னரும் எதற்காக இந்த பயம் . தமிழ் ஈழம் என்பது விடுதலை புலிகளின் லட்சியம் மட்டுமில்லை தமிழர்களின் லட்சியமும் கூட . இங்கே விடுதலை புலிகளின் பெயர்களையோ பிரபாகரனின் படத்தையோ பயன் படுத்தினால் நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அங்கே முள் வேலிக்குள் சிறைபிடிக்க பட்ட தமிழர்களை விடுவிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற கொள்ளுங்கள் .
 
http://www.sureshkumar.info/2009/08/blog-post_23.html

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!