Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, August 2, 2009

♥ பார்த்திபன் - வடிவேலு ! ♥

 பார்த்திபன் - வடிவேலு !


http://www.aaraamthinai.com/cinema/cini-news/2005/images/14aug-parthiban-vadivelu.jpg   



(வடிவேலு பார்த்திபனை இன்டர்வியூவில் கேள்வி கேட்கிறார்)

வடிவேலு : முதல் கேள்வி ஆபில், வாழைப்பழம், திராட்சை இதுல எது இனிபாஇருக்கும்?
பார்த்திபன்: எதுமே இனிப்பு கிடையாது... எல்லாமே பழங்கள் தான்.
வடிவேலு : ரொம்ப புத்திசாலி....

வடிவேலு : நான் உங்க கிட்ட பத்து சுலபமான கேள்வி கேக்கட்டா ? இல்ல ஒரு கஷ்டமான கேள்வி கேக்கட்டா ? யோசிச்சு சொல்லுங்க...
பார்த்திபன்: கஷ்டமான ஒரு கேள்வியே கேளுங்க...

வடிவேலு : நல்ல யோசிங்க... கேள்வி ரொம்ப கஷ்டமானது...
பார்த்திபன்: (கேள்வி கேக்குறது நீ தானே... கேனத்தனமா கேப்ப கேளு)... கேளுங்க சார்...

வடிவேலு : எது முதல வரும்.... இரவு இல்ல பகலா...?
பார்த்திபன்: (அட மடையா) ....ம்ம்ம்... பகல் சார்...

வடிவேலு : எப்படி சொல்லுறீங்க ?
பார்த்திபன்: நீங்க ஒரு கஷ்டமான கேள்வி தா கேட்பேனு சொன்னுனீங்க....ரெண்டவது கேள்வி கேக்குறீங்க...

வடிவேலு : ( அஆ... மடகிட்டானே ! ) உனக்கு இங்க வேலை இல்ல...
பார்த்திபன்: வேலை இல்லன பரவாயில்ல... மாசமான சம்பளம் தாங்க....

வடிவேலு : ஐயோ.... உனக்கு வேலையே கிடையாது
பார்த்திபன்: சரி சார்.... நீங்க சொன்னதுக்கு அப்புறம் நான் வேலையே செய்யமாட்டேன். எப்போ ஆபாய்ண்ட் மென்ட் ஆர்டர் எப்ப தருவீங்க....
வடிவேலு : ???


*****

(வடிவேலு உடம்பு குறைக்க ஜிம்முக்கு போய் ஜிம் மாஸ்டர் பார்த்திபன் கிட்டஐடியா கேக்குறாரு )

வடிவேலு : நான் உடம்பு குறைக்கனும்...
பார்த்திபன் : உடம்பு குறைக்காது.. நாய் தான் குறைக்கும்

வடிவேலு : நா அத சொல்லல்ல... உடம்பு இலைச்சு சிம்ரன் மாதிரி சிலிம்மா இருக்கனும்...
பார்த்திபன் : எவ்வளவு கிலோ இலைக்கணும்... 5 கிலோவா..10 கிலோவா...

வடிவேலு : 5 கிலோ இலைக்கணும்
பார்த்திபன் : கவலையே படாத.. மரத்த இலைக்கிர மாதிரி இலைசிடுறோம்..

வடிவேலு : ஏய்.... எஃஸ்ஸைஸ் பண்ணி உடம்ப இலைக்கனும்
பார்த்திபன் : சரி... தைரியமா உள்ளே போ...

வடிவேலு : ( என்ன இவன் தைரியமா உள்ளே போ சொல்லுறான்... எதாவச்சு ஆப்பு வைக்க போறானா...)

வடிவேலு உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகான பெண் நின்றுக்கொண்டுஇருந்தாள்.

அழகான பெண் : நீ என்னை பிடிச்சா... நான் உனக்கு தான்.

அந்த பெண் ஒட...வடிவேலு அவளை துறத்தி ஒடினான்.

வடிவேலு : ச்சே... ரொம்ப கிட்ட பொய்ட்டேன்... இன்னும் கொஞ்சம் வேகமா ஓடியிருந்தா.. அவளை பிடிச்சிருப்பேன்.
பார்த்திபன் : என்ன... உடம்புள... 5 கிலோ குறைஞ்சதா...!

வடிவேலு : ஆ.....இப்போ நான் 10 கிலோ உடம்பு இலைக்கனும்
பார்த்திபன் : சரி... தைரியமா உள்ளே போ...

வடிவேலு : ( பொண்ண பிடிக்கிறதுக்கு எது தைரியம்....வேகம் இருந்தா போதும்...இப்போ எப்படியும் அந்த போண்ண பிடிச்சிடனும் )

வடிவேலு உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய சிங்கம் நின்றுக்கொண்டு இருந்தது.

பார்த்திபன் : இப்போ... அந்த சிங்கம் உன்ன பிடிச்சா... நீ அந்த சிங்கத்துக்கு தான்...
வடிவேலு : ஐயோ.... வழக்கம் போல ஆப்பு வச்சிடானே....

*****

(பாத்திபன் - மளிகை கடையில் வேலை செய்றான். வடிவேலு வாங்க வராரு....)

வடிவேலு : அரை கிலோ சக்கர கொடு...
பாத்திபன் : அரை கிலோ எல்லாம் வராது... ஒரு கிலோக்கு தான் சக்கர கிடைக்கும்

வடிவேலு : அதெல்லாம் முடியாது... எனக்கு அரை கிலோ தான் வேணும்....
பாத்திபன் : இரு முதலாளிக்கிட்ட பேசிட்டு வரேன்..

வடிவேலு : சரி போய்ட்டு.. சிக்கரம் வந்து அரை கிலோ சக்கர கட்டு..
பாத்திபன் : முதலாளி.... ஒரு மடையன், முட்டாள் பைய... அரை கிலோ சக்கர தரமாட்டோம்னு சொல்லியும் போகாம அடம் பிடிக்கிறான்....

(பாத்திபன் முதலாளி கிட்ட பேசிட்டு திரும்பும் போது வடிவேலு பின்னாடி நிற்க்கிறான்)

பாத்திபன்: அப்புறம்.... இன்னொரு அரை கிலோ சக்கரையே... இந்த பெரிய மனுஷர் கேட்டாரு...
வடிவேலு : திட்டுரது எல்லாம் திட்டிடு... பெரிய மனுஷனு சொல்லுற... எனக்கு சக்கரையே வேண்டாம்....

பாத்திபன் : அத தான்... தர முடியாது அப்போவே சொல்லிட்டேனே...
வடிவேலு : யோவ் ! இந்த மாதிரி ஆளு வேலைக்கு வச்சா... கடை விளங்குனமாதிரி தான்... அவன வேலைய விட்டு முதல்ல எடு...

பாத்திபன் : அவரால என்ன வேலைய விட்டு அனுப்ப முடியாது...
வடிவேலு : ஏன் ?

பாத்திபன் : ஏன்னா.. நான் இந்த கடை முதலாளி....


http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post.html


http://www.tamilvaasal.com/wp-content/uploads/2008/11/vadivelu.jpg



M.R.ராதாயணம்


கேலியும் கிண்டலுமாய் பகுத்தறிவு கருத்துக்களை அள்ளித்தெளித்து அனாயாசமாய் வாழ்ந்து போயிருக்கிறான் ஒரு மாபெரும் கலைஞன். எம்.ஆர்.ராதா என்ற இந்த கலையுலக போராளியை பற்றிய ஒரு சிறந்த டிரைலரே M.R.ராதாயணம். எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் சில முக்கியமான கணங்களை முகில் நமக்கு அருமையாய் தொகுத்தளிக்க கிழக்கு பதிப்பகம் அதனை வெளியிட்டு உள்ளது. 200 பக்கங்களை கொண்டு ஒரே இரவில் படித்து விட கூடிய புத்தகம்.

"கண்ணீரும் ரத்தமும்" என துவங்கும் முதல் தலைப்பிலேயே நம் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து, "ரத்தமும் கண்ணீரும்" என்ற பதினோறாவது தலைப்பு முடியும் போது ஏதோ நெருங்கிய உறவுக்காரனை இழந்த வெறுமையை தந்து விடுகிறது முகிலின் எழுத்துகள். அதோடு இணைந்து வரும் பின்னிணைப்புகளும் எம்.ஆர்.ராதாவின் ஆளுமையை நமக்கு பறைசாற்றி நிற்கின்றன.

போலித்தனமான மத கோட்பாடுகளை தனது நாடக மேடைகளில் மட்டும் அல்ல வாழ்வில் மொத்த பயணத்திலும் தன் நகைச்சுவை உணர்வோடு சாடி தீர்த்தவர் எம்.ஆர்.ராதா. இதோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஏற்கனவே ஒரு சிலர் காலைக்கடனுக்காக ஒதுங்கியிருந்தார்கள். ஒரு புதருக்குப் பின் கொஞ்சம் வயதானவர் ஒருவர் இருந்தார். முக்கல் சத்தம் 'ஷ்ஷ்.... அப்பா முருகா...' அந்த வார்த்தைகளை கேட்டதும் நின்று விட்டார் ராதா. சிரித்தபடியே தன் பாணி கமெண்ட் ஒன்றை உதிர்த்தார்.

'எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சு. முருகன் கையில் வேல் எதுக்கு இருக்குதுன்னு? இப்பத்தான் புரியுது தன்னோட ஆளுகளுக்கு நோண்டி விடுறதுக்குன்னு'

சிறு வயதிலேயே தந்தையை இழந்து படிப்பும் ஏறாமல் அம்மாவிடம் கோபித்து ஊரை விட்டு ஓடி நாடக கம்பெனியில் கால் பதித்து "பால கிருஷ்ணன்" வேடம் ஏற்ற போது இந்த எம்.ஆர்.ராதா என்ற மெட்ராஸ் ராஜகோபால நாயுடுவின் மகன் ராதா கிருஷ்ணனின் வயது 7.

எப்போதும் ஒரு கலகக்காரனாகவே எம்.ஆர்.ராதா இருந்தார். மனிதர்களிடம் மட்டும் அல்ல கடவுளிடம் கூட. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

கடவுள் நம்பிக்கை இருந்த காலத்தில் திருப்பதி ஏழுமலையானை சந்திக்க அதிகாலையிலேயே கிளம்பி இருக்கிறார். கல்லும் முள்ளும் குத்தி களைப்போடு கோயில் வந்து சேர "தரிசனம் காலையில் இல்லை மாலையில் தான்" என தகவல் சொல்லியிருக்கிறார்கள். தான் இவ்வளவு கஷ்டப்பட்டு தரிசனம் பார்க்க வந்தால் தன்னை மீண்டும் மீண்டும் கடவுள் காக்க வைக்கிறானே என ஏழுமலையானிடம் கோபித்து கோயிலையே வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டார். திட்டமிட்டதும் அல்லாது தானே அந்த வெடிகுண்டை தயாரிக்கவும் செய்தார். கோயிலை தகர்க்க தயாரித்த குண்டு எதேச்சையாய் அதற்கு முன் வெடித்தது தனி கதை.

சவால்... என்று வந்துவிட்டால் எம்.ஆர்.ராதாவுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவது மாதிரி. ஒரு நாடக காண்டிராக்டர் பிடியில் இருந்த யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடக குழுவினரை பரமகுடி சென்று தனி ஆளாக மீட்டிருக்கிறார். இவரால் மீட்கப்பட்ட நாடக குழுவில் இருந்த பின்னாளைய பிரபலம் கணேசன் என்ற சிவாஜி கணேஷ்.

திராவிட இயக்கத்திற்காக பின்னாளில் எத்தனையோ மேடைகளில் முழங்கிய எம்.ஆர்.ராதாவின் ஆரம்ப கால நாடகத்தை பெரியார், அண்ணா, ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் தரையில் உட்கார்ந்து பார்த்தனர் என்பது ஆச்சரியமான தகவல். "நாம் நடத்தும் நூறு திராவிட மாநாடுகளும் சரி, எம்.ஆர்.ராதா நடத்தும் ஒரு நாடகமும் சரி" என அதே நாடக மேடையில் புகழ்ந்தார் அறிஞர் அண்ணா.

நாடகங்களில் நடிபபதை ஒரு தொழிலாக செய்யாமல் அதையே காதலித்தார். தன் நாடக குழுவில் இருந்தோரையும் அவ்வாறே நடத்தினார். தூங்கும் போது 'நாடக நடிகர்கள் எல்லாம் தூங்கவே கூடாது. தூங்குறப்ப கூட காலாட்டிட்டே தூங்கணும். இல்லேண்ணா செத்துப் போயிட்டான்னு வேற யாரையாவது போட்டிருவாங்க' என்று தன் நாடக குழுவில் இருந்தோரிடம் அடிக்கடி சொல்வார்.

ராதாவுக்கு சமையலில் ஆர்வம் அதிகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழுவினருக்கு மட்டன் சமைத்து தானே பரிமாறுவார்.

நாடகமாகவும் பின் சினிமாவாகவும் உருவாகிய "இரத்தக்கண்ணீர்" மக்களிடையே எம்.ஆர்.ராதாவுக்கு பெரும் புகழை உருவாக்கியது. பெண்களுடன் தவறான உறவு வைத்திருந்தால் குஷ்டம் வரும் என்று மக்கள் நம்பும் அளவுக்கு எம்.ஆர்.ராதாவின் நடிப்பின் பாதிப்பு அமைந்தது.

சினிமாவில் நடித்தாலும் அதனை அவர் விரும்பி ஏற்கவில்லை என்பதே உண்மை. தன்னை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளரிடம் "நான் நாடக நடிகன். கேமாரவின் இஷ்டத்துக்குத் திரும்பித் திரும்பி நடிக்க மாட்டேன். என் இஷ்டத்துக்குத் தான் கேமரா திரும்பித் திரும்பி என்னை படம் பிடிக்கணும்..... என்ன சொல்றீங்க?" என்று கேட்டு அசர வைத்தார். தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி ஒப்பந்தம் செய்தார்.... வேறு வழி!

கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் காமராசர், ஜீவா, அண்ணா போன்ற தலைவர்களுடன் பெரும் நட்போடு இருந்தார். திராவிட கழக மாநாடுகளில் நாடகம் நடத்தி பகுத்தறிவு கொள்கைகளை பரப்பி வந்தாலும் கடைசி வரை திராவிட கட்சியில் உறுப்பினராக இருக்கவில்லை.

புது இம்பாலா கார் வாங்கி அது நிறைய வைக்கோல் கட்டுகளை நிரப்பி நகரத்தை வலம் வந்து தனக்கு கார் தர மறுத்த சிவாஜி கணேஷையே கடுப்படித்தார். காசை அவர் எப்போதுமே ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் வாழ்க்கையை துச்சமாக நினைத்தவர் எம்.ஆர்.ராதா. M.G.R-ஐ சுட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்து தோற்று மருத்துவமனையில் இருந்த எம்.ஆர்.ராதா எதிர்பாராத விதமாக அங்கே வந்த டைரக்டர் நீலகண்டனிடம் அசால்டாக கேட்டது,

"வாய்யா நீலகண்டா! ராமச்சந்திரனை சுட்டேன். அவனும் சாவலை. என்னை சுட்டுக்கிட்டேன். நானும் சாவலை. என்னையா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க? இந்த துப்பாக்கியை வச்சிக்கிட்டு தான் சைனாக்காரனை ஓட்டப்போறாங்களா?"

சிறைக்கு போய் வந்த வாழ்க்கையை கூட சிறிய ஓய்வாகவே எண்ணினார் எம்.ஆர்.ராதா.

தன் வலக்கையால் கொடுப்பதை இடக்கைக்கு தெரிய கூடாது என்பதை கடைசி வரை கடைப்பிடித்தவர் எம்.ஆர்.ராதா.ஏழை பங்காளனாக, கதாநாயகனாக வெள்ளித்ததிரையில் நடிக்கும் வேஷதாரிகளின் மத்தியில் வில்லனாக திரைப்படங்களில் தோன்றினாலும் நிஜ வாழ்வில் ஏழைகளின் தோழனாகவே வாழ்ந்து மறைந்தான் இந்த பெரும் கலைஞன்.

எம்.ஆர்.ராதா பற்றி திரைப்படங்கள், கட்டுரைகள் வழியாக நான் தெரிந்து வைத்திருந்தது வெகு சிலதே. ஆனால் M.R.ராதாயணம் படித்து முடித்த இந்த இரவை என்னால் மறக்க முடியாது. ஒரு பகுத்தறிவு ராட்சஷன் என்னில் குடிகொண்ட உணர்வு. தமிழ் நாடக உலகில், சினிமாவில், தமிழக அரசியலில் எம்.ஆர்.ராதா ஓர் தவிர்க்க முடியாத வரலாறு. ஒப்பற்ற ஒரு ஆளுமை திறமை உள்ள கலகக்காரனை பின்பற்றி வரும் பகுத்தறிவு சமுதாயம் அனைத்தும் இப்புததகத்தை படிக்க வேண்டும்.

இந்த புத்தகத்தை வாங்க கீழே சொடுக்கவும்.

http://nhm.in/shop/978-81-8368-636-5.html

http://stalinfelix.blogspot.com/2009/07/blog-post_31.html


குருவை மிஞ்சிய குழந்தை - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwTosGkM8vbTyJfDByIg9mrPpWxNjxKTz25hM6esLz2BFxA1cP9rV61J8mNxPFteFd5rkwwpglW_DlaqmniH_0HkzHG7vY4EBv_QcHd75QEt2L63iyeGQB3S7Y2ymghnMmkVWs_gSm1G91/s320/PatKalyanImage.gif
செங்கப்படுத்தான் காட்டில்
எழுந்த
செங்கொடி

பொதுவுடைமை
பா வடித்த
புரட்சியாளன்

உள்ளம்
கொள்ளை கொள்ளும்
ஒளிப்பாவலன்

சிரிக்கவும் வைத்து
சிந்திக்கவும் வைத்த
சீனா கல்கண்டு
நின் பாட்டு

பாத்துகள்களை
அணுவாக்கிய
ஞானி

பாவேந்தனின்
படைத்தலைவன் நீ

எழுதியது
எளிய நடை
இலக்கியம்

நடையின்
அழகோ
நறுந்தேன்

நின் பாக்கொடை
பைந்தமிழ்க் குடை

அலுக்காத
நின் பாட்டு
வெளுக்கும்

இழையோடும்
கிராமத்து நதியல்ல
தென்றல் தவழும்
ஓடை

புரையுடிய
புற்று நீக்கப் பிறந்த
புடம் போட்ட
தங்கம் நீ

குருவை மிஞ்சிய
குழந்தை நீ
குறுகிய காலத்தில்
உனை
இழந்தோமே






அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பாட்டுக் கோட்டையாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் விழா, தமிழ் கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்களின் சிறப்புரையோடு வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அது சமயம் வெளியிடப்பட்ட சிறப்புமலரான "கழனிக்கல்வி மலரில்" வெளிவந்த எனது பாச்சரம்.

http://jothibharathi.blogspot.com/2009/08/blog-post_01.html

http://www.aaraamthinai.com/cinema/cini-katturai/images/16may-cinikatturai01.jpg

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!