Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, July 11, 2009

♥ சிங்கள அகதி முகாம்களில் வாரம்தோறும் 1,400 தமிழர்கள் சாவு ♥

இலங்கை அகதி முகாம்களில் வாரம்தோறும் 1,400 தமிழர்கள் சாவு: பட்டினி, நோயால் மடியும் அவலம்




லண்டன், ஜூலை.11-
ஈழமண்ணில் விடுதலைப்புலிகளை தோற்கடித்த சிங்கள ராணுவம் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களையும் கொன்று குவித்தது. போர் முடிந்த பிறகும் மீதமுள்ள தமிழர்களை காக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கையின் வடக்கு பகுதியில் பல அகதி முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் தமிழர்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்த பிறகும் தமிழர்களை தங்கள் வீடுகளுக்கு செல்ல இலங்கை ராணுவம் அனு மதிக்கவில்லை.
கண்ணி வெடிகள் ஆங்காங்கே புதைத்து வைத்திருப்பதாக கூறி அவர் களை முகாம்களை விட்டு வெளியேற விடவில்லை. சொந்த நாட்டில் 2? லட்சம் தமிழர்கள் அகதிகளாக தவிக்கிறார்கள். இந்த முகாம்களில் நிலவும் அவலங்களை லண்டன் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அகதி முகாம்களில் அள வுக்கு அதிகமானவர்களை தங்க வைத்துள்ளனர். சுகாதாரமான குடிநீர், கழிப் பறை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. விடுதலைப்புலிகளை அடை யாளம் காண்பதாக சொல்லி இலங்கை ராணுவம் தமிழர் களை சித்ரவதை செய் கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த வர்களை பிரித்து தனித்தனி முகாம்களில் அடைத்துள் ளனர். இதனால் உடன் பிறந்தோர், பெற்றோர் கதியை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.
போரில் காயம் அடைந்த பலருக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை. சுகாதாரமான குடிநீர், உணவு கிடைக்காமல் திண்டாடு கிறார்கள்.
நிவாரண முகாம்கள் அனைத்தும் மரண முகாம் களாக மாறி வருகிறது. வாரம்தோறும் 1,400 தமிழர்கள் பட்டினியாலும், தொற்று நோயாலும் செத்து மடிவதாக தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குளம் முகாமில் தண்ணீருக்காக 3 நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான வந்தனா சந்திரசேகர் என்பவர் 3 நாட்கள் வரிசையில் காத்திருந்த பிறகு அவருக்கு 100 லிட்டர் தண்ணீர் கொடுத்துள்ளனர். ஒட்டு மொத்த குடும்பமும் குடிக்க, குளிக்க, துணி துவைக்க இந்த தண்ணீர்தான்.
தண்ணீருக்கு மட்டுமல்ல கழிவறைக்கு செல்லவும் மணிக்கணக்கில் காத்து இருக்கிறார்கள்.
முகாம்களில் நடக்கும் அவலங்கள் வெளிஉலகுக்கு தெரியாமல் இருப்பதற்காக பத்திரிகையாளர்களையும் இலங்கை அரசு அனுமதிப்பது இல்லை.
நிவாரண முகாம்களில் சுகாதாரத்தை பேண உரிய நடவடிக்கை எடுக்குமாறு செஞ்சிலுவை சங்கம் இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மேற் கொண்டுள்ள மனிதாபி மான உதவிகளையும் குறைக்குமாறு இலங்கை அரசு வற்புறுத்தி வருகிறது. இதனால் மொத்த தமிழன மும் கூண்டோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2009/07/11105901/CNI060110709.html

1 comment:

  1. http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6676792.ece

    இந்தப் பதிவில் பார்க்கவும்.

    ReplyDelete

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!