Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, July 11, 2009

♥ "உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்"- தினமணி தலையங்கம்♥

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz3qkhuge70NlVdV4-k-oQUllcVqjyCSZBs1Lb1cZ7gnumLuEluiJr0r4myRdkLj_oJzq_Ktz4tSmAfCGUBSAmedKSqsjchKBRL3PBzJ1DjNnddO-z9Q7-yoetSvCciikBYZd3kavgrdo/s400/SRI_LANKA_(F)_-_Refugee_(500_x_375).jpg



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnDpGviWIX14X_pw7PDiY2vu_zTiI7-excR5w_FRjOQ4BvsgDQfEYpZzh6aqcnPGckiYWIUWiFrQ-h5vBxWVJPRe6jrf0YivbR1OZbTlU97PikE6AEwxpiIF8gaYnGoL3Y9aWbeodXtps/s320/refugee_day_-1.jpg http://www.socialist-alliance.org/img/refugees.jpg

http://naanchithan.files.wordpress.com/2009/04/28724179-wardisplaced-tamil.jpg


தலையங்கம்:
வாளாவிருத்தல் நியாயமில்லை!




சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.

எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி!

அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது.

மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?

பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?

வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.

முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.

நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!

நம்மை வழி நடத்துவது "காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=

http://www.thenral.org/wp-content/uploads/refugee_camp_1.jpg



தலையங்கம்:இது உரிமைக் குரல்!







நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கேட்டால், எங்கள் எல்லைக்குள் வந்து மீன் பிடித்தார்கள் என்று காரணம் கூறப்படுகிறது. ஆழ்கடலில் மீன்பிடிக்கப் போகும் அப்பாவி மீனவர்கள், எல்லைக்கோடு எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேலி இருக்கிறதா, எல்லைக்கோடுதான் இருக்கிறதா?

இத்தனை நாள்களும் விடுதலைப் புலிகள் இவர்களை சுட்டுவிட்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றும், இந்த மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் இலங்கை அரசு தனது செய்கைகளுக்கு நியாயம் கற்பித்தது. இப்போதுதான் இலங்கை அரசின் கூற்றுப்படி விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அந்த நாடே சிங்கள அரசின் ஆளுமைக்குள் வந்துவிட்டதே. பிறகும் ஏன், இந்த அப்பாவி மீனவர்கள் துன்புறுத்தப்பட வேண்டும்?

சேது சமுத்திரத் திட்டம் தொடங்கியது முதலே தமிழகக் கடல் எல்லைக்குள்ளும், வெளியேயும் மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறைபாடு மீனவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. வங்காள விரிகுடாவிலிருந்து பெரிய அளவில் மீன்கள் இந்து மகா சமுத்திரப் பகுதிக்குச் சென்று விட்டதாகக் கூறுகிறார்கள். அதனால், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதில் நாம் குற்றம் காண முடியாது. அதிலும் குறிப்பாக, கச்சத்தீவு பகுதியில்தான் அதிகமாக மீன்கள் கிடைப்பதாகத் தெரிகிறது.

ஆதாரபூர்வமாகக் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தமான இடம் என்பது தெளிவு. 1974-லும், 1976-லும் இந்திய அரசு சரியான வழிகாட்டுதலைப் பெறாமல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டது என்பதும் உண்மை. ஆனால், அந்த ஒப்பந்தத்திலும்கூட, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் வலைகளைக் காயப் போடும் உரிமையும், கச்சத்தீவு அந்தோனியார் கோயிலில் திருவிழா நடத்தும் உரிமையும் இந்திய மீனவர்களுக்கு மறுக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஒப்பந்தங்கள் என்பது மீறப்படக் கூடாது என்பது ஒரு சிலரின் வாதமாக இருக்கிறது. ஒரு நாட்டின் எல்லையோ, அல்லது ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமோ மறுபரிசீலனைக்கும், மறு சீரமைப்புக்கும் உள்பட்டதுதான் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும்.

மக்மோகன் எல்லைக் கோடையும், அருணாசலப் பிரதேசத்தையும் இந்தியாவின் பகுதியாக சீனா ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. என்றோ இருந்த இஸ்ரேல் என்கிற நாட்டை, மேலை நாடுகள் இரண்டாம் உலகப் போரில் அடைந்த வெற்றியைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்கி நிலைநிறுத்த முடிந்த பிறகும், சர்வதேச எல்லை, சர்வதேச ஒப்பந்தம் என்று பேசிக் கொண்டிருப்பது நாட்டு நலனைவிட அயல்நாட்டு சிநேகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியாகத்தான் இருக்கும்.

கச்சத்தீவில் அன்னிய நாடுகள் இராணுவ தளங்களை அமைக்க விடமாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி கூறிவிட்டது என்று இந்திய அரசு மகிழ்ச்சி அடைகிறது. ஆனால், கச்சத்தீவில் இலங்கை அரசு கண்காணிப்பு கோபுரங்களை அமைக்கிறதே, அதைப்பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தால் எப்படி? இதற்கு முன்னால் இந்தக் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தால், விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அமைக்கிறோம் என்று இலங்கை சமாதானம் சொல்லியிருக்கும். இப்போது அமைக்கிறதே எதற்காக? நமது மீனவர்களைக் கண்காணிக்கவா? இந்தியாவையே கண்காணிக்கவா?

இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் எந்தவோர் அரசும் இன்னொரு நாட்டுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட முடியாது. இந்தியாவின் எல்லைகளையும், இறையாண்மையையும் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் ஒருவர் பதவி ஏற்கவே முடியும். அப்படியே சர்வதேச ஒப்பந்தம் ஏதாவது செய்யப்பட வேண்டுமானாலும்கூட, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தாக வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல், கச்சத்தீவு 1974-ல் தாரை வார்க்கப்பட்டதே அது ஏன், எப்படி என்றெல்லாம் இப்போது ஆராய்ச்சி நடத்துவதை விட்டு விட்டு, அதை மீட்பதற்கு வழிகாண்பதுதான் புத்திசாலித்தனம்.

கச்சத்தீவை மீட்காமல் போனால், அங்கே இந்தியா தனது உரிமையை நிலைநாட்டாமல் போனால், 1974 ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு, அந்தத் தீவின் மீதான இந்திய உரிமை மீண்டும் நிலைநாட்டப்படாமல் போனால், அதன் விளைவுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே பேராபத்தாக இருக்கும் என்பதை மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து செயல்பட வேண்டும். இதற்காக, சர்வதேச நீதிமன்றத்தை அணுகினாலும் சரி; இல்லை, ராஜபட்ச அரசிடம் கண்டிப்புடனும் கறாருடனும் ராஜதந்திரமாகப் பேசி நல்லதொரு முடிவை எட்டினாலும் சரி. கச்சத்தீவை மீட்டே தீர வேண்டும.

1974-ல் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவால் கச்சத்தீவு விஷயத்தில் குரலெழுப்ப முடிந்ததே தவிர, அன்றைய இந்திரா காந்தி அரசு எடுத்த முடிவைத் தடுக்க முடியவில்லை. இன்றைய நிலைமை அப்படி அல்லவே. 1989 முதல் பல மத்திய அரசுகள் திமுகவின் தயவில் ஆட்சியில் அமர்ந்தும், தமிழகத்தின் உரிமைப் பிரச்னையான கச்சத்தீவைப் பற்றிய கரிசனம் அந்தக் கட்சித் தலைமைக்கு இல்லாமல் போனதன் காரணம்தான் என்ன என்பது புரியவில்லை.

எல்லோரும் ஆதரித்தால் கச்சத்தீவு பற்றிய தீர்மானத்தைத் திமுக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார் என்கிறார் முதல்வர் கருணாநிதி. அந்தத் தீர்மானத்தை யார் எதிர்க்கப் போகிறார்கள்? முன்னால் நின்று தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய முதல்வர் மற்றவர்களை முன்நிறுத்தி விட்டுப் பின்னால் இருந்து வழிமொழியலாமா?

கட்சி மனமாச்சரியங்களைத் தூக்கி எறிந்துவிட்டுக் கச்சத்தீவுக்காக ஒத்த குரலில் குரல் கொடுக்க நாம் தயாராகாவிட்டால், "நாமமிது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ, சொல்வீர்?'

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=85380&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=


http://www.kelvi.net/wp-content/uploads/2008/08/610x.jpg


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!