Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, July 9, 2009

♥ இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கை அவலம் ஏற்பட்டிருக்காது ♥

இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்  : பழ.நெடுமாறன்


http://www.orunews.com/wp-content/uploads/2009/05/pala-nedumaran.jpg

இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் அவலம் ஏற்பட்டிருக்காது என தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சங்க கூட்டரங்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்:

அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. இராணுவ உடன்பாட்டு நாடுகள் உருவாக்கப்பட்டது. 3ஆம் உலகப்போர் வரும் என்ற அச்சம் நிலவிய போது அணிசேரா நாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்தினார் ஜவஹர்லால் நேரு. இதனால் 3ஆம் உலகப்போர் தடுக்கப்பட்டது.

ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்கும் போது குரல் கொடுத்தது அப்போதைய இந்தியா. நேருவை தொடர்ந்து இந்திராகாந்தியும் அணிசேரா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்தார். வாஜ்பாயும் பின்பற்றினார். ஆனால் ராஜிவ்காந்தி காலத்தில் கொள்கை அடியோடு மாற்றப்பட்டது.

இலங்கையில் சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காலூன்றி விட்டன. இலங்கை அரசின் இராணுவ வெற்றிக்கு 20 நாடுகள் உதவி செய்ததே காரணம் என்று அந்த நாடு கூறியுள்ளது. இலங்கையில் சீனா ஆயுத கிடங்கை திறக்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது



உறுதியாக சொல்கிறேன்....பத்திரமாக இருக்கிறார் பிரபாகரன்: நெடுமாறன் பேச்சு

http://www.tamilkathir.com/uploads/images/videos/Nedumaran.jpg

''இலங்கையில் போரை நிறுத்த கோரி தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலமாக அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தியது. போரை நிறுத்த கோரி தமிழகம் உள்பட பல்வேறு நாடுகளிலும் 18 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு பின்னரும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் கூட்டணியாக சேர்ந்து போரை நடத்தி சிங்கள அரசு வெற்றி பெற்று இருப்பது வெற்றி அல்ல. இது தற்காலிக வெற்றிதான்.

இப்போது இலங்கையில் சீனா ஆயுத கிடங்கும் அமைத்து வருவதோடு, பெட்ரோல், எண்ணை கிணறு அமைக்கும் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங்காலையோ, சோனியா காந்தியாலையோ தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்பதை உறுதியாகவும், திட்டவட்டமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறேன். இதற்கு முன்பு பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் 4 முறை வெற்றி பெற்றது. அதுபோல மீண்டும் வெற்றி பெற்று பிரபாகரன் தலைமையில் தமிழ்ஈழம் அமையும். இது உறுதி. விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல.

தீவிரவாத இயக்கம் என்றால் மக்களை குண்டுவீசி கொன்று இருக்க வேண்டும். ஆனால் விடுதலைப்புலி இயக்கம் அப்படி செய்யவில்லை. சிங்கள மக்கள் மீது குண்டு வீசினார்களா? இல்லையே விடுதலைக்காக தான் போராடி இருக்கிறார்கள். ஆனால் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்சே அரசுதான் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி கொன்றது. இதில் யார் தீவிரவாதி..'' என்று பழ.நெடுமாறன்  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!