Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, May 3, 2009

கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்திய இராணுவ ஆயுதங்கள் ஏற்றிவந்த 5 லாரிகள் தமிழக தமிழர்களால் சேதம்

கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்திய இராணுவ ஆயுதங்கள் ஏற்றிவந்த 5 லாரிகள் தமிழக தமிழர்களால் சேதம்
 
[ சனிக்கிழமை, 02 மே 2009, 09:07.35 AM GMT +05:30 ]

ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது.

ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.

தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.

அப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ராக்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

இதற்கிடையே மதுக்கரை இராணுவ முகாமில் இருந்து 30க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் போராட்டக்காரர்களை தாக்க வந்ததாகவும்> இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.

இந்த மோதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதாகவும்> அந்த இடமே ஒரு போர்க்களம் போல காட்சியளித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கோவை இராமகிருஷ்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்> அதன் பிறகு அங்கு சிதறிக் கிடந்த ஆயுதங்களை இராணுவத்தினர் அப்புறப்படுத்தி மதுக்கரை முகாமிற்கு கொண்டு சென்றுதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் மதிமுக வினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!