செப்.3: மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய, மாநில அரசுகள் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி கோரி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மீனவர்கள் கடந்த 21ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, 5 மாவட்ட விசைப்படகு மீனவர்கள், மீனவர்கள் சங்க தலைவர் போஸ் தலைமையில் ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். இதன்முடிவில், பாரம்பரியமாக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய, மாநில அரசுகள் மீட்டுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் 3ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15243





No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com