Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, July 4, 2009

♥ ஒரு மனித குல விரோதிக்கு துணை போகும் மார்க்சீய முகமூடி ♥

http://commentisfree.guardian.co.uk/editors/site_imagery/ramblog.jpg   



http://images.onesite.com/blogs.telegraph.co.uk/user/peter_foster/rajapakse.jpg

http://chennaidailyfoto.files.wordpress.com/2008/04/cdf-the-hindu.gif


இந்து ராமின்

மார்க்ஸ்சிஸ்ட் முகமூடி

மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்

. கண்காணிப்பு முகாம்களுகள் என்று இலங்கை அரசாலும் இந்து ராமாலும் அழைக்கப்படும் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அன்றாடம் பாலியல் கொமைகள் அதன் விளைவாய் தற்கொலைகள் என்று ஒரு இனமே அழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு பாசிச கொடூர மிருகங்களிடம் சிக்கியிருக்கிறது. முகாம்கள் குறீத்து அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடகவியளார்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை மனித உரிமை அமைப்புகளையோ தொண்டு நிறுவனங்களையோ முகாம்களுக்குள் அனுமதிக்க மறுக்கிற இலங்கை அரசாங்கம். அங்கு அன்றாடம் கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் கேள்விக்கிடமின்றியும் சாட்சியங்களின்றியும் நடத்தி வருகிறது. உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடவியளார்களை அனுமதிக்காத இலங்கை அரசு முகாம்களைக் பார்க்க அழைத்துச் சென்றது. யாரைத் தெரியுமா? மார்க்சிஸ்ட் முகமூடியை அணிந்து முற்போக்கு பேசிவரும் இந்து ராமை...பார்ப்பன வெறி பிடித்த இந்து ராம் இப்போது முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு இலங்கை அரசிற்கும் ராஜபட்சேவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

அந்த செய்தி இதோ

,

 

சர்வதேச

ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன - இந்து ராம் கூறியதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது:

இந்தியாவின்

பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ள என்பதை இதன் போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.


சர்வதேச ஊடகங்கள் முகாம்களுக்கு சென்று உண்மை நிலைமையை அறிக்கையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக முகாம்களில் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மக்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றுவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


இந்து பத்திரிகையின் ஆசிரியர் கடந்த காலம் முதல் இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமான முனைப்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை ஆட்சியாளர்களுடன் நெருங்கி தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.


கம்யூனிச ஆதரவாளர் என தன்னை இனங்காட்டிக் கொள்ளும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்பாளராக கருதப்படுகிறார். அவர் தனது பத்திரிகையில் இலங்கை தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்து

பத்திரிகை தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுவதாக தமிழகத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகள் குற்றம்சுமத்தி வருவதுடன் கடந்த காலங்களில் இந்து நாளிதழை தீயிட்டும் கொளுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

நன்றி

வாங்குன காசுக்கு

sorry சந்திரிகாவிடம் வாங்குன விருதுக்கு ரொம்பதாண்டா? கூவுறான்...கொய்யா.... என்று போய் விடலாம். ஆனால் நம் மௌனம் அப்படி அமைதியடைய மறுக்கிறது.

ஒரு இனமே அழிந்து கண்ணீரிலும் இயலாமையிலும் தவித்துக் கொண்டிருக்கும் போது கொலைகார இராணுவத்துக்கும் கொடூர ராஜபட்சேவிற்கும் சான்றிதழ் கொடுக்கும் இம்மதிரி மனுவாதிகளை மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்துங்கள்

.

நன்றி

Muthamizh
Chennai







                    http://www.tamilnation.org/images/democracy/rajapakse1.jpg                          http://www.tamilnation.org/images/democracy/rajapakse_karunanidhi.gif

♥ புலிகள் தாக்கியதில் சிங்கள ராணுவ வீரர் ஒருவர் பலி ♥

புலிகள் தாக்கியதில் இலங்கை ராணுவ வீரர் ஒருவர் பலி



http://3.bp.blogspot.com/_mu-eIzrnSTM/RyWj67CUeqI/AAAAAAAAAII/RQaFEQxix1o/s400/China.jpg

இலங்கை மட்டக்களப்பு அருகே விடுதலைப் புலிகள் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மட்டக்களப்பு கடலோரப் பகுதி அருகேயுள்ள கீரங்குளம் என்னுமிடத்தில் இச்சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த 2 ராணுவ வீரர்களும் விடுதலைப் புலி ஒருவரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இத்தகவல்கள் இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகியுள்ளன.



   http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/pooralikal-158-copy1.jpg


Tiger

Tiger






♥ சீனாவே எங்களுக்கு வாழ்நாள் நண்பன்: சிங்கள அரசு அறிவிப்பு ♥

சீனாவே எங்களுக்கு வாழ்நாள் நண்பன்: இலங்கை அறிவிப்பு

   http://transcurrents.com/tc/MRHJTC0328.jpg

பீஜிங், ஜூலை. 4-

இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ரோகித போகல்லாகம் சீனநாட்டுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். பீஜிங்கில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
 
இலங்கை அரசுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சீனா தான் உதவியாக இருந்தது. எங்களுக்கு எல்லாவித ஒத்துழைப்பு கொடுப்பது சீனா மட்டும்தான்.
 
சீனா மட்டும்தான் எங்களுக்கு வாழ்நாள் நண்பனாக உள்ளது. வேறு எந்த நாடும் அப்படி இல்லை.  இன்று உலகில் சீனா மிக முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது. ஆசிய மண்டலத்திலும் சீனாதான் ஆளுமை மிகுந்த நாடாக உள்ளது.
 
சீனா ஆதிக்கம் தற்போது மிகுந்துள்ளது. இதன்மூலம் சீனா எப்போதும் எங்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மேலும் பலப்படுத்தப்படும். அந்த நோக்கத்துடன்தான் நான் சீனாவுக்கு 5 நாள் பயணம் வந்துள்ளேன்.

இவ்வாறு இலங்கை வெளியுறவு மந்திரி ரோகித போகல்லாகம கூறினார்.

http://www.maalaimalar.com/2009/07/04111907/CNI011040709.html


http://web.njit.edu/~kd28/blog/1china.jpg

♥ முள்கம்பி முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்ற முயற்சி ♥

தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நிரந்தரமாக்க சிங்கள அரசு ஆலோசனை











http://www.nerudal.com/nerudal.8556.html

பிரான்சில் நடைபெற்ற உலக அகதிகள் தினத்தில் பெருமளவு மக்கள்





கொழும்பு, ஜூலை. 4-

இலங்கையில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதி களாக்கப்பட்டனர்.  அவர்கள் 35க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் ஆடு, மாடு போல அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
 
உறவினர்களை பிரிந்து முகாம்களில் மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களை விரைவில் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூறியது. இதையடுத்து 6 மாதத்தில் முகாம்களில் உள்ள தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை கூறியது. ஆனால் தற்போது சிங்கள அரசு ஓசை இல்லாமல் வேறு ஒரு திட்டத்தை அரங்கேற்ற தொடங்கி உள்ளது.
 
தமிழர்கள் பகுதியில் சீரமைப்பு பணி முடிய 3 வருடமாகும் என்று சிங்கள அரசு சொல்கிறது. கண்ணி வெடிகளை அகற்ற இந்த கால அவகாசம் தேவை என்று சொல்கிறார்கள். இந்த பணி முடிய 5 ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்றும் சிங்கள அதிகாரிகள் சொல்லியபடி உள்ளனர்.
 
இந்த நிலையில் உலக நாடுகள் எதிர்ப்பை சமாளிக்க முள்வேலிக்கு பதில் சுவர் கட்ட தொடங்கி உள்ளனர். முகாம்களில் ரகசியமாக சில கட்டுமான பணிகளும் நடக்கின்றன. இதன் மூலம் ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட சிங்கள அரசு சதி திட்டம் தீட்டி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் தமிழர்களை விரட்டி விட்டு, அந்த பகுதிகளை முழுமையான சிங்களர்கள் குடியிருப்புகளாக மாற்றும் சதி திட்டமாக இது கருதப்படுகிறது. எனவே அகதிகள் முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றும் முயற்சிக்கு தமிழர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

http://www.maalaimalar.com/2009/07/04105629/CNI08040709.html


♥ "வணங்கா மண்" கப்பலில் சென்றோர் தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பு ♥

வணங்கா மண்" கப்பலில் சென்றோர் தமிழ்நாட்டில் உள்நுழைய அனுமதி மறுப்பு



"வணங்கா மண்" கப்பலில் சென்ற போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், ஐஸ்லாந்து குடியுரிமை உள்ளவருமான கிறிஸ்ஜன், மற்றும் பிரித்தானியக் குடியுரிமை பெற்றவரான உதயணன் ஆகியோரை தமிழ்நாட்டில் உள்நுழைய குடிவரவு அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து கப்பல் கப்ரன் அலி பேர்த்தெட், மற்றும் பணியாளர்களுடன் இவர்கள் இருவரும். கல்கத்தா துறைமுகத்திற்குச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


சென்னை சென்ற "வணங்கா மண்" கப்பலை இந்திய காவல்துறையினர், புலனாய்வுப் பிரிவினர், குடிவரவு அதிகாரிகள், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஆகியோர் மோப்ப நாய்கள் சகிதம் சோதனையிட்டு, கடும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அழுத்தம், மற்றும் ஒரு சில தமிழ்நாடு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் காரணமாகவே, "வணங்கா மண்" கப்பல் பொருள்களை ஏற்றுக்கொள்ள இந்திய அரசு சம்மதம் தெரிவித்திருந்தது.


http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1015&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

♥ சொல்லாமல் போக மாட்டார் எம் தலைவர்... ♥

சொல்லாமல் போகார் எம் தலைவர்




தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார்.

எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென்றெடுப்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் காலப்பணியாக இருக்கவேண்டும்.

ஆனாலும், தங்களது சுய நலன்களுக்காக தலைவரை இந்திய, சிறீலங்கா அரசுகளைவிட பலமுறை தங்கள் அறிக்கைகளில் கொன்றுகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இங்கே சில கருத்துக்களை நான் முன்வைக்கலாம் என்ற உணர்விலேயே பால்ராஜ் அண்ணையின் இந்தத் தொடரின் ஊடாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில விடயங்களை எமது மக்களோடு இந்தக் கால நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

தலைவர் எப்போதும் தன்னையொரு தலைவராக வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒரு போராளியாக வாழவே அவர் எப்போதும் விரும்புபவர். ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு போராளியாக களமுனையில் எதிரியுடன் மோதி வீரச்சாவைத் தழுவுவதே கௌரவமான சாவு என்று கருதுபவர்.

இதற்கு பல ஆதரங்களை இங்கே முன்வைக்க முடியும். 1987ம் ஆண்டுகளில் அனுபவ ரீதியாகக் கண்ட சில விடயங்களை இந்த இடத்தில் ஆதாரமாக வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் டில்லியில் அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அங்குவைத்து இந்திய அதிகாரிகள் தலைவரிடம் எச்சரித்தே கூறியிருந்தனர். வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து தலைவர் போராளிகளுக்கு அறிவிக்கவேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், அவர்களின் கைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்தபோதும் அங்கு காவலுக்கு நின்ற கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் ஊடாகவே தலைவர் தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார்.

அந்தத் தகவலில் அவர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். அதாவது,

'தான் நேரில் வராமல் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அவ்வாறு ஒலி நாடாவில் எனது குரலோ, அல்லது ஒளிநாடாவிலோ நான் கதைத்த பதிவுகளை யாராவது கொண்டுவந்து தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம்.

நான் நேரில் வந்து உங்களிடம் சொல்லும் வரைக்கும் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அதனையும் மீறி இந்திய இராணுவத்தினர் வந்தால் தாக்குதலைத் தொடங்குங்கள். அவ்வாறு இந்திய இராணுவத்தினருடன் மோதுவதற்கு விருப்பம் இல்லாதவர்கள், ஆயுதங்களை வைத்துவிட்டு போகலாம்'

என்பதையும் இந்தியாவின் முற்றுகைக்குள் இருந்துகொண்டும் தலைவர் உறுதியாக அறிவித்திருந்தார்.

பின்னர், தலைவர் நேரில் வந்து அறிவித்ததன் பின்னரே ஆயுத ஒப்படை நிகழ்ந்தது என்பது வரலாறு.

இப்படிப்பட்ட தலைவர், எந்த மக்களுக்காக போராடுகின்றாரோ அந்த மக்களுக்கு எந்தவொரு கருத்தையும் நேரிலோ, ஒளிப்பதிவாகவோ சொல்லாமல், முகம் தெரியாத ஒருவரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டு சென்றுள்ளாரா என்பதை இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இதேவேளை, தலைவரின் பாதுகாப்பு எப்போதும் தலைவரின் கையில் இருந்ததில்லை. இதனை அடுத்துவரும் வாரங்களில் பார்ப்போம்.

ஈழமுரசு இதழில் முன்னாள் போராளி ஒருவர் எழுதிவரும் தொடரில் இடம்பெற்றுள்ள ஆக்கம் இது.

நன்றி - ஈழமுரசு


http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1017&cntnt01origid=52&cntnt01returnid=51


[Untitled-1+copy.jpg]


♥ சீமான் " சூரியன் மறைவது.... உதிக்க..." ♥

புலிகளை தடைசெய்த ஐரோப்பிய நாடுகள் போராட்டம் நடத்த அனுமதிக்கையில், இந்தியா மட்டும் முடக்குகிறது: இயக்குனர் சீமான்


http://www.alaikal.com/news/wp-content/seeman7.jpg    http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/seeman1.jpg




விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கிறது. ஆனால் இந்தியா முதுகெலும்பு இல்லாமல் முடக்குகிறது. என திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.

பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிட கழகம் மற்றும் மதிமுகவினர் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே டைரக்டர் சீமான் மேற்கண்டவாறு பேசினார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது:-
 
வீரத்திற்கு பெயர் பெற்றவர்கள் நம் தமிழ் இன மக்கள். தமிழர்கள் வாழும் இலங்கையில் நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களுக்காக பல முறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லை. அதில் ஒன்றரை இலட்சம் இலங்கை தமிழர்கள் குண்டடிப்பட்டும், பசியாலும், மருந்தின்றியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
நாம் ஆறரை கோடி தமிழ் இன மக்கள் வாழ்ந்து என்ன பிரயோஜனம்.  சீக்கியன் அடிப்பட்டால் நாடே ஸ்தம்பிக்கிறது. தமிழன் அடிப்பட்டால் கேட்க நாதியற்றவனாக அனாதையாக இறக்கிறான்.
 
இந்தியா, சீனா பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் கைக்கூலியாக இலங்கை அதிபர் ராஜபக்ச செயல்பட்டு வருகிறார். 5000 கோடி டொலருக்கு ராஜபக்ச விலை போய்விட்டார். கச்சதீவில் இராணுவ முகாம் அமைக்கவும், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் மறைமுகமாக இலங்கை உதவி செய்தும் வருகிறது.
 
இந்தியா பேராபத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவின் மெளனம் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை குடித்து கொண்டுள்ளது.
 
அன்று வெள்ளையனுக்கு எதிராக கப்பல் ஓட்டினார் வ.உ.சி. ஆனால் இன்று சிங்களனுக்கு எதிராக விமானம் ஓட்டினார் பிரபாகரன்.

நாம் தவறு செய்யும் போது நாடு கேட்கும். ஆனால் நாடே தவறு செய்யும் போது தட்டி கேட்டால் எனக்கு தேசிய பாதுகாப்பு சட்டமாம். தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களையே தாக்குவது என்ன நியாயம்.
 
உலகம் முழுக்க பத்து கோடி தமிழர்கள் இருந்தும் நம் இரத்த உறவுகளையும் தாய்மொழியையும் காப்பாற்ற முடியாமல் அவல நிலையில் தவிக்கிறோம். தமிழின மக்களே நம் நாட்டு தலைவர்களை நம்ப வேண்டாம். சூரியன் (பிரபாகரன்) மறையுமே ஒழிய ஒரு போதும் மரணிக்காது. மீண்டும் மீண்டும் உதிக்கும். அதுபோல விடுதலை புலிகள் இயக்கத்தை யாரலும் அழிக்க முடியாது.
 
இவ்வாறு அவர் பேசினார்.


                                                                       Www.eeladhesam.coM

[Untitled-1+copy.jpg]



http://www.envazhi.com/wp-content/uploads/2009/06/banglore_07072009003.jpg


♥ மீண்டும் போர்! ஓயாத புலிகள்! அதிர்ச்சியில் சிங்கள ராணுவம்! ♥

இன்று மாலை தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா அரச படையினருக்கும் கடும் மோதல்
04.07.2009
ஈழதெசம்.கொம் இணைய நிருபர் காணகன்


http://www.nankooram.com/wp-content/uploads/2009/04/5001-8702.jpg




இன்று மாலை தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு..... படையணிகள் நகர்ந்து சென்று கொண்டிருந்த போது ஒட்டிசுட்டான் பகுதியில் இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு..... படையணிகளுக்கிடையில் எதிர்பாராத‌ கடுமையான சமர் இடம் பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு... .படையணி அவ்விடத்தை விட்டு சென்றதை தொடர்ந்து சிறிலங்கா அரச படையினரால் அப்பகுதிகளை நேக்கி பல முனைகளில் இருந்து கடுமையான ஆட்லறி பிரியேகம் மேற்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.


வவுனியா மாவட்டத்தில் இந்த செய்தி நேற்று தொடக்கம் மக்களால் பேசப்படுவதாக ஈழதேசம்.கொம் நிருபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஈழதேசம்.கொம் இணையத்தால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Www.eeladhesam.coM



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2GRr3Itubfv2oe18O15AQFfU-RZkNB5v5hiYLkbGIAuB9txS57LMMJpRc_s6RkMKrmioSSyTwoS6WrOeJVHhI1xXvccBSSlXdh8CYkMQ2SH6nwsne4stTo-MFi2T_cnVYz6UgqJlveErC/s400/London070409-11.jpg



smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!