Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, March 29, 2009

தமிழ் நண்பர்களே!

தமிழ் நண்பர்களே!
இதோ இந்திய தலைவர்களின் மின்ன்ஞசல்-கள்:
Hon. Mrs. Sonia Ghandhi,
soniagandhi@sansad.nic.in
Hon. Chief Minister, Mr. M. Karunanidhi,
cmcell@tn.gov.in
Hon. Prime Minister Mr. Manmohan Singh
manmohan@sansad.nic.in
Hon. BJP Leader L.K. Advani
advanilk@sansad.nic.in
 
http://www.rahulgandhi.us/php/showGuestBook.php - Rahul Gandhi
அவர்களிடத்தில் கொடுரமாக கொல்லப்பட்ட குழந்தைகளின், பெண்களின், தமிழர்களின் புகைப்படங்களை இணைத்து இதயம் இருக்கிறதா?...இல்லை இறந்து போய்விட்டதா?..இல்லை இதயம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டதா? என்று கேளுங்கள்....
ஒரு பெண் தன் கருப்பையில் இருந்த குழந்தையோடு குண்டு வீச்சில் சிதைக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்துமா கருணை வரவில்லை?...
இந்தியா உதவியதால்தான் இந்த வெற்றியை பெறமுடிந்தது என்று இலங்கை அமைச்சர் சொல்கிறான்...
இங்கே இந்தியா மவுனமாக இருக்கிறது. உதவி செய்ததை மன்மோகன் மறுக்கவில்லை..
தமிழக ஊடகங்களும் மிக முக்கியமாக "சன் குழுமம்" இலங்கை நிலவரத்தை கண்டுகொள்ளவே இல்லை.. ஏன் என்றால் தாத்தா-வின் ஆட்சி-க்கு எதிராக மக்கள் மனம் மாறிவிடுமோ என்று.....
தமிழக செய்தி நிறுவனங்களின் மின்ன்ஞசல்கள்:
admin@jayanetwork.in 
admin@makkal.tv 
av@vikatan.com 
editor@nakkheeran.in 
feedback@kalaignartv.co.in 
imayamtv@hotmail.com 
ipo@rajtvnet.in 
jv@vikatan.com 
nakkheeran2003@yahoo.com 
news@jayanetwork.in 
queries@sunnetwork.in 
reporter@kumudam.com 
Webmaster@vikatan.com 
webmaster@maalaimalar.com 

கேளுங்கள்...நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அவர்களுடைய மனசாட்சியை உலுக்க வேண்டும்... மனசாட்சியை உறுத்தவேண்டும்...
கீழ்கண்ட இணையதள முகவரிகளையும் புகைப்படங்களையும் இணைத்து அனுப்புங்கள்.
http://www.tamilwin.com/view.php?2a26QVH4b34Z9E834dbSWnPeb0217GGc4d2iYpD3e0dBZLumce02g2hF2ccdPj0o0e
 
http://sathirir.blogspot.com/2009/02/blog-post_11.html
 
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1937&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
 
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2426&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=5
 
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2302&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
 
http://www.pathivu.com/news/999/54/112-210.aspx
 
முத்தமிழ் வேந்தன்
muthamil78@gmail.com
சென்னை
 
 

மனிதம் கொன்று... மனம் தின்று...ஈழம் இன்று!

 
மனிதம் கொன்று... மனம் தின்று...ஈழம் இன்று!
 
கவனமாகக் காலை வையுங்கள்... கண்ணி வெடிகள் இருக்கலாம்' என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. 'பாதங்களைப் பார்த்து வையுங்கள்... பிணங்கள் தட்டுப்படலாம்' என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது அழுவதில்லை.
 
'கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்' என்பது ஆறுதல்! குண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது. 'அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப் பெரும் பாதிப்பில் சிக்கி இருக்கிறார்களே... அதைப் பற்றி யார் பேசப் போவது?' என்று கண்ணீர் வார்த்தைகளால் கேட்கிறார் யாழ் மாவட்டப் பாதிரியார்களில் ஒருவரான ஜெபனேசன் அடிகள்.
 
ஒரு நாள் இரவு மின்சாரம் இல்லையென்றால், மறுநாள் வாழ்க்கையே வெறுக்கிறது. பால்காரர் வராவிட்டால், வேலைக்காரம்மா லீவு போட்டால், கேபிள் கட்டானால் இங்கே பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடுகிறது. சில கல் தொலைவில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல், கிடந்து துடிக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை, உணவில்லை, மாற்று உடையில்லை, மருந்து இல்லை. எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமன், ஈழத்தில் மட்டும் ஏரோபிளேன் ஏறி வந்து குண்டுகள் வீசுகிறான்.
 
 உயிர் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பதைத் தவிர, சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ''81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள்' என்று புள்ளிவிவரம் சொல்கிறார், முல்லைத் தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன். மாத்தளன் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வந்து இறங்கியபோது, 'எங்களக் காப்பாத்தச் சோறு போடுங்க', 'எம் புள்ளைகளைக் குணப்படுத்த மருந்து கொடுங்க' என்று மொழி தெரியாத மனிதர்களிடம் பிச்சை கேட்டு ஆணும் பெண்ணுமாகக் கதறிய கோலம் காணச் சகிக்காதது. குண்டடி பட்டுச் செத்தவர்கள் போக, பாம்புக் கடி, நாய்க் கடியால் இறந்தவர்களும் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து இல்லாமல் மறைந்த வர்களும் அதிகம்.
 
18 பேர் நான்கு நாட்களில் தொடர்ச்சியாகச் செத்து விழுக, விநோதமான வியாதி ஏதாவது பரவிஇருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறது கொஞ்சம் அக்கறையுள்ள மருத்துவக் குழு. அவர்களால் காரணத்தை வெளியில் சொல்ல முடியவில்லை. 'உணவின்மை, ஊட்டச் சத்து இல்லாதது, நோய் எதிர்ப்புச் சக்தி இழந்தது என மூன்று காரணங்களால் நிறையப் பேர் தூங்கிய நிலையில் இறந்துகிடக்கிறார்கள்' என்கிறது மருத்துவர் குழு. 'பிள்ள சாப்பிட்டே மூணு நாள் ஆகியிருக்கும் போல இருக்கே' என்று கேட்கிறார். தூக்கி வந்த அம்மா, அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்கிறார். துக்க மிகுதியில் அழுவதற்கு உடலில் கண்ணீர் மிச்சம் இல்லாததே அவரது மயான மௌனத்துக்குக் காரணம்.
பால் வளம் இழந்த மார்பின் காரணம் அறியுமா குழந்தை? சபேசன் சிந்து, சிவராசா சக்தி கணேசன் ஆகிய இரண்டு குழந்தைகள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். அம்மையிடம் பால் இல்லாமல் செத்த பிள்ளைகள். இனி, உலகில் வறுமைக்கு சோமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை. நமது சொந்தங்களே இருக்கிறார்கள்.
தன் வளர்ப்பு மகனைத் தேடி, தயா தங்கராசா என்பவர் வன்னி மருத்துவமனைக்குப் போகிறார். அவர் சொல்லும் காட்சி... ''வைத்திய சாலைக்குள் அனைவரும் உறுப்புகளை இழந்தவர்களாக இருந்தார்கள். யாரையும் பார்க்க அவ்வளவாக அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகளுக்குத் தங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. தங்களது வலியின் காரணமாகவும் கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவு முழுவதும் கத்திக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தார்கள். இரண்டு கால்களையும் கைகளையும் இழந்த ஒரு கர்ப்பிணித் தாய், தாதியை அழைத்து தான் சாவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கதறிக்கொண்டு இருந்தாள். ஒரு தாய் வெறுமையுடன் உட்கார்ந்திருந்தாள். குண்டு விழுந்து அவள் ஓடத் தொடங்கியபோது அவளது குழந்தை கொல்லப்பட்டதாம். ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி குழந்தையைப் புதைக்கும் துணிவு அவளுக்கு இருந்திருக்கிறது. தனது குழந்தையின் உடல் காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை அவள் விரும்பவில்லை. இதைச் சொல்லும்போது அவள் அழவில்லை. உளவியல் பிரச்னைக்கு அவள் உட்பட்டிருந்தாள் என்பது உறுதி!''
சாவைச் சட்டை பண்ணாமல்... ரத்தத்தை அலட்சியப்படுத்தி... சதைகள் பிய்ந்து தொங்கும்போது உணர்வில்லாமல் பார்த்து... குப்பைமேட்டைக் கொளுத்துவது போல மனித உடல்கள் எரிவதை வெறுமனே வேடிக்கை பார்க்க மக்கள் பழகிவிட்டால், அந்த மனம் என்னவாகும்?
குழந்தைகளுக்கு விருப்பமே விமானம் பார்ப்பதுதான். ஆனால், ஈழத்துக் குழந்தைக்கு அதுதான் எமன். 30 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் இருந்து வாங்கி வரப்பட்ட விமானம்தான் குண்டு போடுவதைத் தமிழ்ப் பகுதிகளில் தொடங்கிவைத்தது. அதனுடைய கிர் ஒலியைக் கேட்டாலே, மக்களுக்குக் கிறுக்குப் பிடித்தது. அதிலிருந்து தப்பிக்கப் பதுங்கு குழிகள் வெட்டி, அதில் வாழப் பழகினார்கள். வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசும் அளவுக்குப் பலரது வாழ்க்கை பதுங்கு குழிக்குள் கழிந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் டன் குண்டுகள் விமானங்களின் மூலம் போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் பெருமையாக அறிவித்துள்ளது. சமீபகாலமாகப் பயன்படுத்தப்படும் பீரங்கிக் குண்டுகள் ஏற்படுத்தும் சத்தம் காது சவ்வு மற்றும் தொப்புள் ஆகிய இரண்டையும் கிழிக்கிறதாம். இதனால், காது வழியாக ரத்தம் வடிந்த நிலையில் வாழ்வோரும் தொப்புள் வெடித்து வேறு எந்தக் காயமும் இல்லாமல் மரணிப்போரும் அதிகமாகி வருகிறார்களாம்.
கொடூரங்களைச் செய்வதைவிட அதைப் பரப்புவதையும் சரியாகவே சிங்கள ராணுவம் செய்து வருவதாகச் சொல்கிறார்கள். மக்களை மனரீதியாகப் பலவீனப்படுத்துவதில் ராணுவம் இறங்கி உள்ளது. கற்பழிப்புக் கதைகளை ராணுவம் இதனால்தான் அதிகம் பரப்பி வருகிறது. 100 பேர் சாவு, 200 பேர் சாவு என்ற தகவல்களைப் பரப்புவதை 'உளவியல் யுத்தம்' என்கிறார்கள். அதனால்தான் கடுமையான போர் ஆரம்பமாவதற்கு முன், கடந்த ஜூலை மாதம் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரைத் தொடுத்துள்ளான். வதந்திகளைப் பரப்பி மனங்களைக் குழப்பி வருகிறான்' என்று எச்சரித்தது.
கற்பழிக்கப்படும் பெண்களது உடல்களைப் பொது இடங்களில் போட்டுவிட்டுப் போவது அப்படித்தான். பெண்களையும் சிறுவர்களையும் இது அதிகமாகப் பாதிக்கிறது. இழப்புகள், சோகங்கள், இடப் பெயர்வுகள் பல மாதங்களாகத் தொடர்வதால் தலைவலி, உடல் சோர்வு, அதிகக் கோபம், உணவில் விருப்பமின்மை, கவலை, சோகம், அச்சம், வேதனை என அத்தனை உளவியல் பாதிப்புகளும் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.
இந்த மனித மனங்களை மீண்டும் தட்டியெழுப்ப முடியுமா என்று மனநல மருத்துவர் ருத்ரனைக் கேட்டோம். ''நம் வீட்டில் ஒரு சாவு விழுந்தால், அது அதிகபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் நம் மனச் சிறையில் உட்கார்ந்து கிடக்கும். அந்தச் சோகம் மெள்ள மெள்ள மறைந்து, நாம் அடுத்த வேலைக்குத் தாவிவிடுவோம். நம் வீட்டிலேயே அடுத்தடுத்து மரணங்கள் சம்பவித்தால், மறுபடி மறுபடி நமது சோகம் தட்டியெழுப்பப்படும். அது மாதிரிதான், நிமிஷத்துக்கு நிமிஷம் நாள்கணக்கில், மாதக்கணக்கில் மரணங்கள் நடந்தால், அழுவதற்கு நம்மிடம் கண்ணீர் இல்லை. பழகிப்போகும். அப்படித்தான் மரணத்தைப் பார்த்து அம்மக்கள் மனசு பழகிப் போய்விட்டது.
அழுகை என்பது மனதின் தற்காப்பு. சொல்லிப் பயனில்லாததை அழுவதன் மூலமாக அறிவிக்கிறோம். அது எப்போதாவதுதான் சாத்தியம். தொடர்ச்சியாக அழ முடியாது. இவ்வளவு பேர் செத்து விழும்போதும் அம் மக்களால் அழ முடியாததற்குக் காரணம், அதைப் பார்த்து அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால்தான்.
குண்டு வீச்சையும், பீரங்கி வருகையையும் முதல் தடவை பார்க்கும் தலைமுறையாக இருந்தால், அவர்களுக்குப் பதற்றம் இருந்திருக்கும். 30 ஆண்டுகளாகப் பார்த்துச் சலித்துப்போன சத்தம். சென்னையில் குண்டு விழுகிறது என்றால், ஏற்படும் பதற்றம், அச்சம் அந்த மக்கள் மனதில் இல்லை. ஏனென்றால், அச்சத்தை நித்தமும் எதிர்பார்த்துதான் அவர்களது வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. 'நாளை நலமடைவோம்' என்று அவர்கள் நினைப்பதில்லை. 'இன்றிருந்ததைவிட நாளை இன்னும் மோசமாகும்' என்ற எதிர்பார்ப்புடனே மறுநாளை எதிர்கொள்கிறார்கள். பதற்றம் என்ற வார்த்தைதான் உளவியலில் ஆரம்பமான அளவு. ஆனால், அவர்களது மனதில் பதற்றம் அப்படியே பதிந்துபோய்விட்டது. போர்ச் சூழலில் கஷ்டப்படும் மக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஏனென்றால், அவர்களது பயமே மரணத்தைப் பார்த்துத்தான். அதனால், தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள். ஆபத்து, மரணம், துயரம் ஆகிய மூன்றையும் எதிர்பார்த்து வாழும் வாழ்க்கைதான் ஈழத் தமிழருடையது. அதனால்தான் அவர்கள் அழுவதில்லை. சோகமாவதில்லை. நிம்மதியற்ற அரசியல் சூழ்நிலை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழும் மக்களுக்கு இதுதான் தலைவிதி.
ஒருவனின் வாழ்க்கையை அவனது அனுபவம்தான் தீர்மானிக்கிறது. இவர்களுக்கு அனுபவமே அச்சம் கலந்ததாக இருக்கிறது. நிம்மதியான கடந்த காலம் இல்லாததால் நம்பிக்கையான எதிர்காலத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதைச் சொல்ல இயலவில்லை.
குழந்தைகள்கூட தொடர்ந்து இந்தச் சம்பவங்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். அவர்களுக்கு உடல் காயங்களால் வலி இருக்கலாம். அதிர்ச்சி குறைந்து போயிருக்கும். தனது தாய்-தகப்பனைத்தான் குழந்தைகள் தனது பாதுகாப்பாக நினைக்கும். ஆனால், இலங்கையில் யார் யார்கூடவோ ஓடி, வாழ்ந்து பழகியதால் சமூகத்தைத் தனது பாதுகாப்பாக நினைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தை இழந்த குழந்தைக்குச் சமூகமே குடும்பமாக ஆகும். படிப்பை இழந்த பிள்ளைகள் மனதில் ஏற்பட்ட வெறுமைக்கு அளவு இல்லை. இது இரண்டு தலைமுறைகளைப் பாதிக்கும். பணத்தால் வரும் தைரியம் கொஞ்ச நாள்தான். கல்வியால் வரும் தைரியம் ஆயுள் வரை இருக்கும். எனவே தைரியமற்ற, எந்தச் சிந்தனையுமற்ற, கோழையான, வெறுமையான மனிதர்களாக்கும் கொடுமையே அங்கு நிகழ்கிறது.
அங்கு ஓர் அரசியல் தீர்வு வரும் என்று வைத்துக்கொண்டாலும், போருக்குப் பின் அந்த மக்களை மறுபடியும் உடல், மன ஆரோக்கியத்துடன் கட்டமைக்கிற பணி மிகப் பெரிய சவால்!'' என்கிறார் ருத்ரன்.
சூனியம் ஓர் இனத்தைச் சூழ்வதும் அதன் சொந்தங்கள் சும்மா இருப்பதுமான சூழல் வேறு இனத்தில் நடக்காது. நாற்காலி யுத்தத்தில் தமிழகம் மும்முரமாகிவிட்டது. ஆனால், ஈழ மக்கள் வாழ்வோ உளவியல் யுத்தத்தில் உயிர்விட்டுக்கொண்டு இருக்கிறது.
- ப.திருமாவேலன்-
நன்றி:  -ஆனந்தவிகடன்-
 
 
 

முத்தமிழ் வேந்தன்
muthamil78@gmail.com
சென்னை
 
 
 

Saturday, March 28, 2009

முத்துக்குமாரின் மரண வாக்குமூலம்! (in english)


முத்துக்குமாரின் மரண வாக்குமூலம்!

MUTHUKUMARAN
 
Va'nakkam! I am sorry at having to meet you at this juncture when you are hurrying to work. But there is no other option. My name is Muthukumar. I am a journalist and an assistant director.
Right now, I am working in a Chennai-based newspaper. I am also one like you. I am just another average person who has been reading newspapers and websites of how fellow Tamils are daily being killed, and like you I am unable to eat, unable to sleep, unable to sleep and unable to even think. While his ancient land of Tamils lets anyone coming here, like the Seths, to flourish, our own blood, the Tamils in Eelam are dying. When we lend our voices to say the killings should be stopped, Indian imperialism maintains a stony silence and does not give out any reply. If India's war is really a justifiable one, they can wage it openly... Why should they do it stealthily?
The Indian ruling class is eager to annihilate a very large population by using the hollow excuse of Rajiv Gandhi's assassination in order to satisfy the vengeful and selfish goals of a few individuals.
The Liberation Tigers of Tamil Eelam were not the only ones charged with the murder of Rajiv
Gandhi. The Jain Commission Report held that the people of Tamil Nadu were also guilty of this
murder. If so, are you also the murderers who killed Rajiv Gandhi?
They say the British killed people in Jallianwallahbagh, but what are they doing in Mullaiththeevu and Vanni? Look at the children being killed there. Aren't you reminded of your children? Look at the women being raped? Don't you have a sister in that age? When Rajiv Gandhi was killed why where frontline leaders of the Congress not with him? Why did Jayalalithaa, an alliance partner, not go to take part in such a massive rally that Rajiv took part in? Such questions are not being raised, and they are not being answered by them either. People, please think. Are they your leaders? What is the guarantee that these people--who indulge in politics through their money and muscle power--will not target us tomorrow? If they turn against tomorrow, who will be on our side?
Kalaignar [Karunanidhi] ? Even at that point of time, he will make an announcement that the
members of parliament will resign. Then, he will understand (?!) the Central Government. Then,
he will once again request for a right decision, and pass a resolution in the Legislative Assembly-- like actor Vadivel's comedy in the film Winner where he claims that no one has touched him until a particular month, a particular week, a particular time. People! A paper will not achieve anything!
Now, the Election-time Tamil Kalaignar, who wants to be the leader of the worldwide Tamils and
who desires to transfer all the money in Tamil Nadu to the coffers of his family, has hidden himself in the hospital afraid of bearing the brunt of people's anger. This paper tiger staged such major fights in order to get the required cabinet portfolios for his ministers, but truthfully, what has he done for Tamil or for the Tamils? He has himself admitted once, "Will the honey-gatherer remain without licking the back of his hand?" If we look at his puppet-shows, it looks as if he has done a lot of licking...
Law college students who have entered the field through your hunger strike...
As a fellow Tamil, I wish you all success. I also regret that I am unable to join you. Not only the
Eelam Tamils problem, but even the protests seeking water for Cauvery, any protest in support of Tamil Nadu, you, and lawyers, are the first ones to fight. Even this time, only these two sections were the first to voice their protest even four months back. I have a suspicion that only in order to destroy your Tamil feeling, the Indian intelligence would have systematically instigated castefeelings among you and paved the way for the skirmish that occured at Ambedkar law college. It is the caste of students that takes the initiative in people's revolutionary struggles all over the world. Likewise, even in Tamil Nadu, an earlier generation of students in similar circumstances took to the streets before the Indian repulic day and chased away national parties, including the Congress from the Tamil land.
So, an historically important juncture has again reached your hands. Normally, such things don't take place in world history. Like it happened last time, don't let selfish people steal the fruits of your labour. The DMK that came to power riding high on the efforts of your struggle, first made a law that students should not take part in politics. After capturing power, it blunted Tamil feelings, and turned the entire Tamil population into a petitioning tribe. Smash that tradition. Don't believe anybody who asks you to submit a petition. This is the juncture when we should burn the differences of caste and religion between us. Throw away your fasting and enter the field. In reality, the Indian military's role in Sri Lanka is not just against the Tamils. It is against all Indians.
They tried the sexual techniques they learnt from Sinhalese soldiers with innocent Assamese
women! They learnt the strategies of how to crush the Tamil Tigers from the Sinhalese and they
applied it to crush the fighters in the north-eastern states! As if this were not enough, what do we learn from the fact that the Indian and Sri Lankan peacekeeping forces were deported from Haiti because of sexual misdemeanour? That the India-Sri Lanka alliance is not an ideological alliance, but a sexual one! So, because the alliance between the Indian and Sri Lankan armies is against the fundamental human rights of the Indian people, try to rally students and democratic organizations towards your cause on a national level.
It is possible for people to do all this. However, they lack the right leadership. Make leaders from among yourselves. Change this protest from law college students, to students of all colleges. Let your frenzy and people's fury change the history of Tamil Nadu. Thrash and throw away muscle power, money power and power craze. This is possible only by you. "We are Tamil students, we are the life of Tamil Nadu. If Tamils are allowed peace, we will read magazines. Otherwise, we will surge like volacanoes." Convert these lines of poet Kasi Anandan into your intellectual weapon.
The police force will try to lay my body to rest. Don't allow them to do that. Capture my dead body, don't bury it, and use it as a trump card to sharpen your struggle. Students of the Tamil Nadu medical colleges who will treat me, or conduct my post-mortem, I should have done some virtuous deed to be cut at your hands. Because, while upper-caste medical students in the rest of India were fighting against reservation, you were standing alone and fighting in support of reservation in medical education. What you do to me can remain aside. What are you going to do for our brothers, the Eelam Tamils, from your side?
Tamil Eelam is not the need of Tamil Eelam alone, it is the need of Tamil Nadu also. Because of the fishermen of Rameswaram. There are laws in the world to protect goats and cows.
But, are the Tamils of Rameswaram and the Tamils of Eelam lower than cows and goats? The
Indian media carries on a systematic campaign that Tamil fishermen who cross [maritime]
boundaries are attacked because of the suspicion that they might be Tamil Tigers. Don't they ever read newspapers? Often, Taiwanese fishermen are arrested at Chennai because they lost their way at sea. If it is possible for people from Taiwan, which is thousands of kilometers away to lose their way, can't they believe the fact that the Tamil fisherman from Rameswaram, which is just 12 miles away from Lanka strays away from his route?
Brothers of other states who are living in Tamil Nadu...
You will have known from experience that Tamil Nadu is the only state where you can enjoy
greater peace and protection when compared even with your home-state. Today, we are facing a major crisis. Our government is killing our brothers in Eelam by using our name, our Indian
identity. The Indian government wants us to be isolated in this struggle. We don't want that to
happen. So, please tell the Central Government that you too support our brothers who are
fighting. It is my opinion that this will not only strengthen the hands of your leaders who are part of the Government at the Center, but is will also prevent the danger of a Navnirman Sena, or a Sena from being formed within Tamil Nadu in the future.
Youth belonging to the Tamil Nadu Police Force...
I have great respect for you. Irrespective of what other people did for the sake of Tamil, you are
making Tamil live by using Tamil words in everyday contexts, such as calling employees as 'ayya'.
I believe that you would have joined the police force with noble intentions of serving the people
and weeding out anti-social elements. But, does the ruling class allow you to do that? By allowing you to commit minor mistakes, the ruling class hides its major crimes. It converts you into its trained henchmen, and makes you fight against the same people whom you wanted to serve. It is the Tamil Nadu police who guard Delhi's Tihar Jail. One of the oldest police forces in India, the Tamil Nadu police is one of the very best. But, are you given that respect by the Indian government? When Union Minister Chidambaram returned to New Delhi following his Chennai visit, Central Government security agencies have refused to handover his security arrangements at the Chennai airport to you. When asked why, they have derided your capabilities and said that they are aware of how you protected Rajiv Gandhi. While it is true that the Tamil Nadu police could not save the life of Rajiv Gandhi, it is equally true that the majority of those who died with him were only innocent policemen. Your dedication is unquestionable. But it was later exposed that this Indian intelligence had been careless even after coming to know that there were threats to Rajiv's life... Even if you have been against innocent people all this while, you are one of the pride of Tamil Nadu. At this historical juncture, only if you stand on the side of the people, you can regain the respect that you have lost among the people. Just once try to dedicate yourself to the fellow Tamils. They will carry you in golden plates. The feeling of gratitude among Tamil people is immeasurable. Because somebody spent his own money and built a dam, the Tamils on the Mullai river in Madurai built a temple and name their children after that man. All that you have to do is, when Tamil Nadu is boiling, you should refuse to cooperate with the Central Government officials, and you should reveal to the Tamil people who are the ones working for R.A.W and CBI.
Do at least this. The people will take care of the rest.
People of Tamil Eelam, and Liberation Tigers....
All eyes are now in the direction of Mullaiththeevu. Tamil Nadu is also emotionally only on your
side. It also wants to do something else. But what can we do? We don't have a true leader like
you have... Please don't leave hope. Such a leader will emerge from Tamil Nadu only in such
desperate times. Until then, strengthen the hands of the Tigers. Because the 1965 anti-Hindi
agitation was placed in the hands of a few selfish people, the history of Tamil Nadu has been
dragged to the stone ages. Please don't do that mistake.
Dear International Community, and our hope Obama...
We still have hope on you. But, there is no guarantee that a sovereign republic will not torture its people through ethnic discrimination. It is possible to cite instances from America's own history.
After all, boxing hero Muhammed Ali said, "The little white in my community would have come
only through rape..." As long as you remain silent, India will never open its mouth. Perhaps India may break its silence after all the Tamils have been killed. Until then, are you going to keep looking at India's mouth? They say that the war in Vanni is against the Liberation Tigers of Tamil Eelam. They say that the Tigers are using the people as a human shield. If that is true, why do they come into the safety zone declared by the Government and kill people? This one evidence is enough that irrespective of whether the Tamil people are dependent on the Tigers or on the Government, they are going to be killed for the sole reason that they are Tamils. Is this not genocide? If India, Pakistan and China are supplying arms, Japan is giving economic aid, and moreover India is bullying Sri Lanka and thus killing Tamils, why don't you realize that you are also committing the same murder by your silence and your blindness? Nobody becomes a terrorist simply by taking up arms. Our Thiruvalluvar has said: Arathirke anbucar penpa ariyaar/
marathirkum akthe thunai (The ignorant say that affection is appropriate only to righteousness, but it will also inspire heroism to be restrained).
Jayalalitha says that the Tigers should lay down arms--as though the problem arose because the Tigers took up arms. In reality, the Tigers were formed because of the genocide of Tamils in
Eelam, and they are not the reason for it. They are not the reason, just an outcome.
As long as Indian Government's involvement was not exposed, it kept saying that this problem
was an internal affair and that India could not interfere. It also said that it was aiding Sri Lanka in order to prevent China, Pakistan and America from gaining supremacy in Sri Lanka. Yet, to kill Tamils, it joins hands with Pakistan that has killed scores of Indians and was responsible for the attack on the Indian Parliament, the serial-blasts in Mumbai and the recent strikes in Mumbai. If that is so, we suspect that Pakistan's terrorism in India is a mutually agreed-upon concept created by both sides in order to exploit and squander their respective citizens. Now, they say that the LTTE is a terrorist organization, hence the war. It says they killed Rajiv Gandhi. Rajiv Gandhi is not a councillor or a district secretary. When a Sinhalese attempted to kill him in Sri Lanka, he was not interrogated. One of my demands is that the Sinhalese soldier who tried to kill him earlier must also be included in the list of the accused and he must be interrogated again. The Tigers might have been sad with Rajiv, but they wouldn't have been angry with him. Because Rajiv was Indira's son. Indira, is next to MGR among the small gods who populate Tamil Eelam.
It has been clearly exposed that India is opposed to justice form the fact that it often changes the explanations that it offers. In such a situation, Sri Lanka said, Why don't you directly interfere, the Tigers are making use of the ceasefire to stock up weapons. Chandrika, or Ranil, or Mahinda were not gods in the past, they have not even behaved as human beings. Just because they agreed to the ceasefire in view of their compulsions, how could it be argued that the fighters should lay down their arms, or that they should not involve themselves in reconstruction activies.
Only by bringing about the faith and confidence that you will behave honestly and truthfully, you
can make the fighters lay down their weapons. No government in the past has honoured their
promises. For instance, Ranil-Karuna. But the Tigers have not used the ceasefire to simply
acquire weapons, but they have created a governmental administrative structure. Is this terrorism in the eyes of the world? India is trying to ingratiate itself by saying that it is fighting in order to save the innocent Tamils. Only sophisticated weaponry and spy planes from India are going to Sri Lanka; can they show a single paracetomol tablet that has gone from India? In such a state, they want us to believe that the Sri Lankan government will provide all the amenities for the people of Eelam, and that India will support this endeavour.
Now, they are attacking the ambulance of the International Commitee of Red Cross, are they also Tamil Tigers? They killed 17 aid workers from France, were they Tamil Tigers? China's tanks, India's spy planes, Pakistan's artillery... not only these kill our people, but the silence of the International Community also kills them. When will you realize this--after a people who greatly desire justice are totally wiped away from the face of the earth? If you are interested in adding us to the list of Aborigines, Maya and Inca peoples, each day one of us will come in front of you and kill ourselves, as it comes in one of our myths.... Please leave our sisters and our children alone.
We are unable to bear this. We are fighting with the sole hope that one day we will watch them
laugh whole-heartedly. Even if we accept for the sake of rhetoric that the LTTE should be
punished, we must realize that both India and Sri Lanka lack the moral ground to hand out any
punishment.
Justice derailed is worse than justice denied.
1. The International Community must condemn India and force it to immediately withdraw its
troops from Sri Lanka, and be prevented from helping Sri Lanka through satellites and radars.
Even unimportant discussions between the Governments of India and Sri Lanka should take place through the International Community. India should publicly apologize before the people of Tamil Nadu and the people of Tamil Eelam scattered across the world.
2. Because the UN Secretary General Ban Ki Moon is always functioning with a bias towards his homeland China, he must not be given the power to take any decision regarding Eelam.
3. All the countries who have banned the LTTE based on the request from Sri Lanka should
immediately revoke the ban and unconditionally release all those who have been arrested
because they belong to the LTTE.
4. Members of the LTTE should be forgiven for their passport related mistakes, and they should
be immediately released.
5. The industries which have been banned based on the allegation that they are connected to
the Tigers, should be given the licenses once again, and they should also be adequately
compensated.
6. Rajiv Gandhi's murder should be investigated by the InterPol and the real guilty must be
exposed.
7. Pranab Mukherjee, Gotabhaya Rajapakse, Chandrika, Udayanakkara, Kekaliya
Rambukawela, Basil Rajapakse, Mahinda and Fonseka should be subjected to narco-analysis.
8. While the International Community shall have the right to recognize Tamil Eelam which is
going to be formed, only the people of Tamil Eelam shall have the right to decide under whose
leadership it should be formed.
9. When the Tigers were weakened militarily, the Upcountry Tamils were targetted, and it is
feared that in the future that area might be subjected to a major genocidal pogrom. So, a
referendum must be conducted among the Upcountry Tamils to know whether they want to join
Tamil Eelam. In this matter, the decision of the Upcountry Tamils shall be final.
10. Douglas Devananda, who was punished by the courts for firing at innocent Tamil people in
Chennai escaped to Sri Lanka before the period of imprisonment was completed. He must
therefore be arrested and handed over to the Tamil Nadu police.
11. Everyone responsible for the murder of journalist Lasanta should be punished.
12. The Sinhalese journalists who have sought refuge in Tamil Nadu must be given adequate
protection.
13. The Sinhalese couple who came as refugees to Tamil Nadu must be recognized as
refugees, and the charges of passport-doctoring against them must be dropped.
14. The livelihood of families of Tamil fishermen shot dead should be secured.
With eternal love,
Your brother against injustice,
Ku. Muthukumar, Kolathur, Chennai 99.
Dear Tamil people, in the struggle against injustice our brothers and children have taken up the
weapon of the intellect. I have used the weapon of life. You use the weapon of photocopying. Yes, make copies of this pamphlet and distribute it to your friends, relatives, and students and ensure that this support for this struggle becomes greater. Nan'ri.


முத்துக்குமாரின் மரண வாக்குமூலம்!


முத்துக்குமாரின் மரண வாக்குமூலம்!

29 01 2009

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் தீக்குளித்து மரணமடைந்த நம் அருமைச் சகோதரன் முத்துக்குமாரின் மரண வாக்குமூலம் இது.

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையே அவரது மரண வாக்குமூலமாய்…

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும்.

தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா'னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.

இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது.

அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களே…

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.

ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது.

ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே…

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.

தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்தியா மீதான பயங்கரவாதமென்பது, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.

உதாரணம் ரணில்- கருணா.

ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்?

நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத் தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


போட்டோஷாப் கற்க 12 தளங்கள் & 5 மென்னூல்கள்



போட்டோஷாப் கற்க 12 தளங்கள் & 5 மென்னூல்கள்

 

 


Adobe Photoshop ரசிகர்களுக்காக Photoshop பயன்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கு உதவும் 12 தளங்கள்.

http://psdtuts. com/

http://www.good- tutorials. com/tutorials/ photoshop

http://www.tutorial ized.com/

http://photoshoptut orials.ws/

http://www.photosho proadmap. com/Photoshop- tutorials

http://www.pegaweb. com/tutorials/ web-design- and-adobe- photoshop- tutorials. htm

http://www.photosho pstar.com/ tutorials- page/

http://www.blog. spoongraphics. co.uk/

http://www.photosho plady.com/

http://www.tutorial kit.com/

http://photoshopcon test.com/ tutorials/ photoshop- tips.html

http://www.sketchpa d.net/photoshp. htm

போட்டோஷாப் பற்றிய 5 மென்னூல்கள்:

http://www.freephot oshopbook. com/

http://www.dailyfre eupload.com/ download. php?file= 8ff63ba218bb9799 eb239b3ad118e9bd

http://www.prophoto secrets.com/ free-photoshop- book1.htm

http://morris- photographics. com/photoshop/ shortcuts/ #pscs4

http://help. adobe.com/ en_US/Photoshop/ 11.0/photoshop_ cs4_help. pdf

ஒளிக்களஞ்சியம் : BBC விருதினை வென்ற சென்னை-லண்டனைச் சேர்ந்த சுசீலாராமனின் இசைப்பாடல்கள்
 

 

 

50 இலவச மென்பொருள்கள் உங்களுக்காக

 



ஒரே பொட்டலமாக (zipped file) 90 MB அளவுக்குள், 50 விதமான இலவச மென்பொருட்கள் உங்களுக்காக.

இதற்கு Computer Repair Utility Kit எனப் பெயரிட்டுள்ளனர். Ipod, Flash Drive, USB கருவிகளில் இந்த Pack ஐ எடுத்துச் சென்று கணினிகளில் வன்பொருளில் (hardware) ஏற்படும் தவறுகளைச் சரிசெய்யலாம்.

hardware engineerகளின் அத்தியாவசியப் பயன்பாடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும்.

மேலும் பொதுப்பயனர்களின் கையடக்கக் கருவிகளிலும் (hand held devices) அவசியம் இருக்கவேண்டிய தொகுப்பு இது.

கோப்பு மேலாண்மை (File Management)
தகவல் அறிதல் (Information)
கெட்டதைச் சரிசெய்ய (Repair Tools)
இழந்த தகவலை மீட்க (Recovery Tools)
வைரசு நீக்குவதற்கான கருவிகள் (Virus and malware Removal)
வலைப்பின்னல் கருவிகள் (Network Tools)
இதர வகை (Miscellaneous)
புத்தாக்கம் (Tweaks)
Scripts எனப் பலதரப்பட்ட தலைப்புகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு

தரவிறக்கம் (Download) செய்யக் கீழேயுள்ள முகவரியில் சொடுக்கவும்.

http://www.technibb le.com/computer- repair-utility- kit/

thanx

கணினி வரைகலைப் பணியாளர்களுக்கு உதவ ஒரு இணையத்தளம்

கணினி வரைகலைப் பணியாளர்களுக்கு உதவ ஒரு இணையத்தளம்


கணினி உலக வரைகலைப் பணியாளர்களாக (Web Graphics Designer) நமது நண்பர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒரு உதாரணம் நண்பர் ஜிம்ஷா. அவர்தான் இங்கே மேலே தெரியும் தமிழ்நெஞ்சம் என்கிற ஒரு logo வை உருவாக்கி மின்னஞ்சலில் தந்தார்.

அவரைப்போன்ற Web Designerகளுக்கு உதவுவதற்கான ஒரு இணையத்தளம் ஒன்றைக் கண்டேன்.

Adobe Flash,
Action Script,
Illustrator,
Fireworks,
Dream Weaver,
XML,
PHP,
CSS,
Javascript,
Photoshop,
After Effects,
Indesign
 

முதலிய மென்பொருட்களைக் கற்றுக்கொள்வதற்கு உதவும் சுட்டிகளையும், அவைகளுக்கான புத்தகங்களை வாங்குவதற்கான Amazon தளச்சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்கள்.



தளமுகவரி : http://www.thelearn list.com

தகவலை வழங்கியவர் : திரு. கார்த்திகேயன், திருப்பூர்

இலவச கோப்புப் பகிர்வான் சேவை வழங்கிகள்


இலவச கோப்புப் பகிர்வான் சேவை வழங்கிகள்

 

 



http://www.mediafire.com/

http://www.adrive.com/

http://skydrive.live.com/

http://www.megashares.com/

http://www.orbitfiles.com/

http://www.4shared.com/

http://www.esnips.com/

http://myvirtualdisk.permissionresearch.com/Home.aspx

http://www.divshare.com/

இத்தனை இலவச கோப்புப்பகிர்வான் தளங்கள் உள்ளன.
இவற்றில் நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள்?
ஏதேனும் இங்கே விடுபட்டுள்ளதா?
மிகச்சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
அல்லது எதையுமே பயன்படுத்தவில்லையா?

உங்களிடம் இருக்கும் கோப்புகளைப் பிறருடன் பகிர்வதற்காக இந்த இலவச கோப்புப்பகிர்வான் தளங்கள் உதவுகின்றன. இதனால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.

அளவுக்கு மீறினால் அமுதமும் விசமே. உங்கள் வாக்குகளை ஒரு பின்னூட்டத்தில் இட்டுச் செல்லுங்கள். அப்போதுதான் சிறந்த ஒன்றைப் பெற இயலும்.

வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்

தமிழ்நெஞ்சம்
(ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் ஓராண்டுக்கும் அதிகமாக 4shared.com தளத்தையே பயன்படுத்தி வந்துள்ளேன். 2GB ஏற்றினேன். அதை 400GB வரை நம் மக்கள் தரவிறக்கியுள்ளனர். இதைவிட சிறந்ததாக ஒன்று இருந்தால் அதைப் பயன்படுத்தலாமே என்கிற நோக்கில் எழுதப்பட்ட பதிவு இது.)

 
 
நன்றி!...
 
 

300+ இலவச மென்பொருட்கள் உங்களுக்காக

கோப்புகளை ஆன்லைனில் சேமிக்க
 
கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு பகிரவென பல சேவைகள் இருந்தாலும் அவை அளந்து அளந்தே ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களை கொடுக்கின்றன. ஆனால் நான் சமீபத்தில் அறிய வந்த தளம் www.mybloop.com இது Unlimited space கொடுப்பதுடன் ஏற்றம் செய்யப்படும் ஒரு கோப்பின் அளவு அதிக பட்சமாக 1Gig வரைக்கும் இருக்கலாமென சுதந்திரம் கொடுத்திருக்கின்றார்கள். அதாவது ஒரு முழு திரைப்படத்தையே நீங்கள் ஏற்றம் செய்யலாம். Images can be hotlinked. இப்போதைக்கு சில நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கத்தினராக முடிகின்றது. எப்படி காசு பண்ணுகிறார்களோ தெரியவில்லை.

 
 
 
 
இன்றைய இணைய உலகில் மின்னஞ்சலும், அரட்டையும் - நூற்றாண்டின் மிகச்சிறந்த ஊடகங்களாகும்.

ஒலி,ஒளி,புகைப்படம்,ஆவணங்கள் போன்றவற்றை தினமும் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இவை பயன்படுகின்றன.

ஆனால் மின்னஞ்சல் சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவுக்கு மேல் இணைப்புகளை ஏற்பதில்லை.

மின்னஞ்சலுடன் இணைக்கப்படும் இணைப்புகளின் கொள்ளளவுக்கு வரையறை விதித்திருக்கிறார்கள்.

இதனால் என்ன செய்கிறோம் ஒரு பெரிய அதிகமான கொள்ளளவு கொண்ட கோப்பு ஒன்றை சிறு சிறு கூறுகளாக்கி அதைத் தனித்தனியாக ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்புகிறோம்.

அல்லது ஏதேனும் ஒரு கோப்புப்பகிர்வான் தளத்தில் ஏற்றி அதன் சுட்டியை எதிர்முனையில் இருப்பவரிடம் தருகிறோம்.

1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒரு புதிய இணையத்தளம் புறப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் அப்படியே மின்னஞ்சலில் இணைப்பாக இணைத்து அனுப்ப இயலும்.

http://www.dropsend.com/
 
 
 

300+ இலவச மென்பொருட்கள் உங்களுக்காக

 
ஒவ்வொரு மென்பொருளாகத் தனித்தனியாக அறிமுகப்படுத்தி வந்திருக்கிறேன். அந்த வரிசையில் பொங்கல் சிறப்பு அதிரடி முழக்கமாக 300+ இலவச மென்பொருட்கள் உங்களுக்காக - அனைத்துமே சிறந்ததெனெ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.

அவற்றை ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். அதன் சுட்டியைக் கீழே தருகிறேன்.

Office,Archive managers,Internet
P2P,Chat,Security
Network,Servers,Audio
Video,Image,3D
Developers,CD/DVD,Codecs
System Ulilities,UI Enhancements,Hardware monitoring/Benchmarking
Games,Education,Miscellaneous
Wallpapers


இத்தனை வகையான இலவச மென்பொருட்கள் அனைத்திற்கான சுட்டிகளை ஓரிடத்தில் தொகுத்துத் தந்த பாராட்டுக்கு உரியவர்கள் :

http://www.winaddons.com/top-300-freeware-software/


 
 



கடவுச்சொற்களைப் பராமரிக்க இலவச மென்பொருள்

 


எத்தனையோ இணையத்தளங்களில் நாம் பயனர் கணக்கு (user name & password) வைத்திருப்போம். ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வேறு வேறு கடவுச்சொற்களை (password) உருவாக்கி இருப்போம். ஒவ்வொரு பாஸ்வேர்டையும் தனித்தனியாக பாதுகாப்பது கடினம் எனத் தோன்றியவர்கள் - அனைத்துத் தளங்களுக்குமே ஒரே பயனர்கணக்கையும், ஒரே பாஸ்வேர்டையுமே வைத்திருப்போம்.

இது மிகமிகக் குழப்பமான - கடினமான செயல். இதை எளிமைப்படுத்த உதவும் மென்பொருள்களில் மூன்றை கீழே சுட்டிகளில் (links) தரவிருக்கிறேன்.

இந்த மென்பொருட்களின் உதவியுடன் எந்தத்தளங்களில் என்ன username, என்ன password பயன்படுத்துகிறோம் என்பதை ஒரு தரவுத்தளமாக(Database) பதிவு செய்யவேண்டும்.

இறுதியில் இந்த மென்பொருளை இயக்குவதற்காக மட்டும் ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டைத் தேர்வு செய்து அதை மட்டும் மனதில் ஏற்றிக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.

யாருக்காவது உங்களது பாஸ்வேர்ட் தெரிந்துவிட்டால் உடனே மாற்றிவிடுங்கள். அல்லது குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறையாவது பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருங்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் பெரிய கம்பெனியில் உலகம் சுற்றும் வாலிபன் பொறுப்பில் இருக்கிறார். அவருடைய பாஸ்வேர்ட் ஆறு ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கிறதாம் - பெருமையாகச் சொல்வார். மேலும் அதன் பாஸ்வேர்டை பல நண்பர்கள் சூழ வெளிப்படையாக இதுதான் பாஸ்வேர்ட் என்கிறார். அது என்னவெனில் அவருடைய மாற்றுப்பெயர். அருண் என்கிற நண்பர் அவர். அவரது மாற்றுப்பெயர் (nick name) சரவணன். அவர் அதையே பாஸ்வேர்டாக வைத்து ஆறு ஆண்டுகளாக மாற்றாமல் இருப்பதாகப் பெருமை வேறு தேடிக்கொள்கிறாராம். அவரை மாதிரி ஆட்களை ஒவ்வொரு நிறுவனங்களிலும் காணலாம். அவரைப்போல மிகமிக பிசியாக இருப்பவர்களுக்காகவே இந்த மென்பொருட்கள் உதவுகின்றன.

பாஸ்வேர்ட் விவகாரத்தில் எப்போதும் கவனம் தேவை. அதற்காகவே இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட சுட்டிகளைச் சொடுக்கவும்.

http://keepass.info/

http://www.zeraha.org/dload.php?action=license&license_id=2&file_id=42

https://www.steganos.com/us/products/data-security/locknote/overview/


நன்றி!...
 

Useful Websites

 

Useful Websites -

GREETINGS



www.batkhela. com
www.specially4u. net
www.bemine.com
www.cgreetings. com
www.arkworld. com
www.riversongs. com
www.all4love. net
www.1lovecards. com

Tamil kavithai
www.nilacharal. com
www.kavimalar. com
www.intamm.com
www.tamilworld. com
www.thinnai. com

EDUCATION
http://education. nic.in

Schools

http://planetvidyas chools.com

College

www.collegesintamil nadu.com

Scholarships

www.educationsuppor t.nic.in

Employment
www.employment. tn.gov.in

WORLD CURRENCY RATES
http://www.xe. com/ucc
http://money. wn.com

WORLD TIME LIST
www.timeanddate. com
www.worldtimeserver .com

ENTERTAIMENT WEBSITE

www.alltamil. com
www.tamilsee. net
www.tamiljet. com
www.lankasri. com
www.kathala. com
www.thuvi.com
www.kalapam. com
www.tamilblood. com
www.tamilbird. com
www.levikay. com
www.vaddakkachchi. com
www.tamilmasala. net
www.tamilflame. com
www.wisetamil. cjb.net
www.tamilsfront. tk
www.tamilnetlinks. com
www.tamilpoonga. com

INDIAN Maps
www.mapsofindia. com
www.chennnaivision. com
Indian Temples
www.templenet. com
www.indiantemplespo rtal.com
www.murugan. org
INDIAN BABY NAMES
www.babynamesindia. com
www.indianchild. com
Public Library
www.connemarapublic librarychennai. com
www.nlindia. org
Information and Broadcasting
http://mib.nic. in
Indian Railways
www.indianrail. gov.in
www.srailway. com
Pincodes
www.sysindia. com
www.chennaivision. com
www.chennai- madras.com
TAMIL Audio News
www.worldtamilnews. com
www.ibctamil. net
www.bbc.co.uk/ tamil
www.thendral. com
Sachin Tendulkar
www.sachin-tendulka r.biz.ly
www.sachintendulkar .5u.com
TAMIL MP3 SONGS
www.Tamilbeat. com
www.tamilmasala. net
www.mohankumars. com
www.raaga.com
Tamil paper
www.dailythanthi. com
www.dinamani. com
www.dinamalar. com
www.dinakaran. com
www.maalaimalar. com
www.thinaboomi. com
www.thatstamil. com

www.vikatan. com
www.ambalam. com
www.kumudam. com
www.kumudam. com
www.maalaisudar. com
www.nakkheeranbiwee kly.com
www.thinnai. com


மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில்

மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில்

இதை படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் கைபேசியில் காதல் டிப்ஸ்களுக்கு LOVE என டைப் செய்து ஏதாவது ஒரு எண்ணிற்கு அனுப்பசொல்லி SMS வரலாம் அதற்கு வெறும் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம். இவை காதலுக்கு மட்டும் இல்லை இது போல தினசரி உங்களுக்கு SMS மூலம் உங்கள் கைபேசிக்கு வரும் தகவல்கள் ஏராளம். இப்படி ஒவ்வொரு வகை செய்திக்கும் நீங்கள் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கைபேசி பில் ஏகிறிவிடும்.


இந்த அனைத்து சேவைகளும் உங்களுக்கு இலவசமாக www.mytoday.com என்ற முகவரியில் உங்களுது கைபேசி எண்ணை பதிந்துவிட்டால் போதும். நீங்கள் விரும்பும் சேவையை இலவசமாக பெறலாம்.


என்னடா தலைப்பை பற்றி எழுதாமல் என்னமோ சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறான் என்று நினைக்கிறீர்களா??? இது ஒரு இலவச சேவை அதனால் இந்த தலைப்பில் இந்த செய்தி இலவசமாக.


மேலே சொன்ன அதே www.mytoday.com வலைத்தளம் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்களை உடனுக்குடன் உங்கள் கைபேசிக்கு SMS மூலம் தகவல் அனுப்புகிறது. இந்த சேவையை www.m3m.in வலைத்தளம் உங்களுக்கு வழங்குகிறது.


அப்பாடா இனிமேல் நீங்கள் எதிர்பார்க்கும் மின் அஞ்சல் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வந்துள்ளதா என்று இணைய வசதி இல்லாதோர் பிரௌசிங் சென்டர் தேடி உங்கள் பணத்தை செலவிட அவசியம் இல்லை.


இதற்கு www.m3m.in என்ற முகவரியில் உங்களை மின் அஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்ணையும் பதிவு செய்யவும். உடனே உங்கள் கைப்பேசி எண்ணிற்கு கடவு சொல் அனுப்பிவைக்கப்படும். உடனடியாக உங்கள் கைப்பேசிற்கு ஒரு மின் அஞ்சல் முகவரி தரப்படும். அது உங்கள் கைப்பேசி எண்ணை ஒட்டியே இருக்கும். உதாரணமாக உங்கள் கைப்பேசி எண் 9842112345 என்றால் உங்களுக்கு கொடுக்கப்படும் மின் அஞ்சல் முகவரி 919842112345@m3m.in என்று இருக்கும்.


இந்த மின் அஞ்சல் முகவரிக்கு(919842112345@m3m.in) உங்கள் மின் அஞ்சல்களின் பிரதிகளை (Copy) Forward செய்யுமாறு உங்கள் மின் அஞ்சலில்(name@gmail.com) செட் செய்யவேண்டும். அவ்வளவுதான் இனிமேல் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கைப்பேசியில் உடனுக்குடன் வந்துவிடும்.


ஆனால் இந்த சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக. ஒரு வருடம் கழித்து வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். பிறகு பார்த்துக்கொல்லாம்.


மேலே உள்ள இரண்டு சேவைகளும் இந்தியாவில் உள்ள கைப்பேசி எண்ணிற்கு மட்டுமே. NRIகள் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்த நீங்கள் இந்தியா வரும் போது ஒரு Lifetime கார்டையும் ஒரு Second hand or குறைந்த விலை கைப்பேசியையும் வாங்கிகொண்டு சென்றால் உங்களுக்கு பயன் தரும். (ரோமிங்க்கில் இன்கம்மிங் SMS இலவசம்)

நன்றி!...

Thursday, March 26, 2009

பெண்ணுரிமை நூல் இணையத்தில்

வணக்கம் தோழர்
தந்தை பெரியாரின் பெண்ணுரிமை குறித்த சிந்தனைகள்
தொகுத்து வெளியிடப்பட்ட நூல் இணையத்தில்
முழுவதுமாக தரவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
நேரம் இருக்கும் போது வாசித்து பாருங்கள்.
தோழமையுடன்
தமிழச்சி
tamizachi@gmail.com
http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=197




தந்தை பெரியாரின் திராவிடர் - ஆரியர் உண்மை என்ற
சிறிய நூலை வாசிக்க விரும்புபவர்கள் இணையத்தில் காண்க :





கோமிய (மூத்திர) குளிர்பானம் விரைவில் அறிமுகம்




கோமிய (மூத்திர) குளிர்பானம் விரைவில் அறிமுகம்


எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு?



சோற்றுக் கற்றாழை, சுவையான பழங்கள், மற்றும் பசு கோமியம் (சிறுநீர்) சேர்க்கப்பட்ட குளிர் பானம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

பசு கோமியம் (மாட்டின் மூத்திரம்) தெய்வீகமானதாக இந்துக்களால் கருதப்படுகிறதாம். கிருமிகளைக் கொல்லும் சக்தி உள்ளதாம். கோமியத்துடன் மூலிகைகள், பழங்களைக் கலந்து அதை குளிர்பானமாக விற்பனை செய்யும் முயற்சியில் ஒரு நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக கான்பூரில் பசு கோமிய குளிர்பான ஆலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் ராமனுஜ் மிஸ்ரா கூறியதாவது.

பசு கோமிய குளிர் பானம் தயாரிக்கும் முறை உறுதியாகிவிட்டது. உடலுக்குக் குளிர்ச்சி தரும் சோற்றுக் கற்றாழை உட் பட பல மூலிகைகளும், பழங்களும் இதில் சேர்க் கப்படஉள்ளன.. உடலுக்குக் கேடு விளைவிக்கும் பல்வேறு ரசாயனப் பொருள்கள் மேல்நாட்டு பானங்களில் இருக்கும்; ஆனால் அவை இதில் இருக்காது. 2 முதல் 3 மாதங்கள் வரை ஆய்வு நடத்தப் பட்டு அதன்பின் குளிர் பானம் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கூறினார்.


---------------- நன்றி: "விடுதலை" 8-3-2009
 
 
 
 
 

 

கடவுளும் மிஸ்டர். எக்ஸும் : ஐந்து நிமிடம் காத்திருக்கவும்

மிஸ்டர் எக்ஸ். கடவுளைச் சந்தித்தார். "கடவுளே!, உங்களை ஒரு கேள்வி கேட்லாமா?", என்றார்.

"தாராளமாகக் கேட்கலாம்", கடவுள்.

"நீங்கள் நெடுங்காலமாக இருக்கிறீர்கள். உங்கள் கண்ணோட்டத்தில், 1000 வருடங்கள் என்பது என்ன?"

"1000 ஆண்டுகள் என்பது சுமார் 5 நிமிடம் மட்டுமே", கடவுள் சொன்னார்.

"சரி. அப்படியெனில் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு என்ன?".

"ஒரு கோடி ரூபாயின் மதிப்பு வெறும் 50 பைசாதான்".

"ஆ. அப்படியா, எனக்கு ஐம்பது பைசா கொடுத்து உதவ முடியுமா", மிஸ்டர் எக்ஸ்.

கடவுள் சற்றும் தயக்கமின்றிப் புன்னகையுடன் கூறினார், "என் அருமை மகனே! ஒரு ஐந்து நிமிடம் மட்டும் காத்திரு. உனக்கு உன் கண்ணோட்டத்தில் ஒரு கோடி ரூபாயை - என் கண்ணோட்டத்தில் 50 பைசாவைத் தருகிறேன்".

மனிதம் வெல்லும்....!


தெரிந்தோ,தெரியாமலோ கம்யூனிஷம் நம்மை நம்மை ஆட்சி செய்கிறது.

8 மணி நேர வேலை ஒரு சின்ன உதாரணம்!

மேற்கு வங்கத்தில் 40 வருடங்களுக்கு மேலாக கம்யூனிஷம் ஆட்சி செய்கிறது.

ஆட்சி மாறாமல் இந்தியாவில் ஒரே ஒரு அரசியல் கட்சியின் ஆட்சி இருக்கிறது என்றால், அந்த தகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உண்டு.வேறு எந்த அரசியல் கட்சிக்கும் அந்த தகுதி கிடைக்க வில்லை.
உலகத்தில் எல்லா நாடுகளிலும் இருக்கிற ஒரே அரசியல் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் என்பதை அடக்கத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கம்யூனிஷம் வெறும் அரசியல் தத்துவம் மட்டுமன்று,எல்லா தளங்களிலும் இயங்கி மனிதகுலத்தை மேம்படுத்துகிற ஒரு மக்கள் சக்தி

கம்யூனிஷ தத்துவம் கண் மூடும்போது... மனித குலத்தை மண் மூடும்...!

ஆதிசிவம், சென்னை. நன்றி!...

www.beyouths.blogspot.com

Thanks!

Tuesday, March 24, 2009

கலைஞர் தமிழினக் கொலைஞர்

கலைஞர் தமிழினக் கொலைஞர் வீடியோ

http://www.youtube.com/watch?v=tjk4Tbwv6kE




பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. "உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்" என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.

(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).


ஆய்வு:முத்தமிழ் வேந்தன்(சென்னை)








SMS or CHATTING shortcuts

SMS Short Cuts:
1dRfl - wonderful
2 - to/too/two
2dA - today
2moro - tomorrow
2nite - tonite
3dom - freedom
4 - for
4get - forget
4N - foreign
ADN - any day now
AFAIK - as far as I know
AFAIR - as far as I recall
ASAP - as soon as possible
ATM - at the moment
B - be
B4 - before
B4N - bye for now
BB - bye-bye
Bf -boyfriend
BG - big grin
BION - believe it or not
BK - big kiss
BTDT - been there, done that
BTW - by the way
By - busy
C - see/sea
CB - call back
CUL - see you later
CWYL - chat with you later
DUZ - does
DUZNT - doesn't
F2F - free to talk?
G2G - got to go
Gf - girlfried
Gr8 - great
Grr - angry
H2 - how to
HUH - have you heard?
IC - I see
ICCL - I couldn't care less
IK - I know
ILU (or ILY) - I love you
in4ml - informal
KISS - keep it simple, stupid
KUTGW - keep up the good work
@ "At"
MSG "Message"
W "With"
ATB "All the best"
NE "Any"
W/O "Without"
B "Be, Bee"
NETHNG "Anything"
WKND "Weekend"
BCNU "I'll be seeing you"
NE1 "Anyone"
XLNT "Excellent"
BWD "Backward"
NO1 "No-one"
XOXOX "Hugs and kisses"
B4 "Before"
OIC "Oh, I see"
YR "Your"
C "See, Sea"
PCM "Please call me"
1 "One, Won"
CU "See you"
PLS "Please"
2 "Too, To, Two"
DOIN "Doing"
PPL "People"

:) Original smiley
:-) Classic smiley
;-) Wink
:-)) Very happy
|-) Hee-hee
:-D Laugh loud
:-o Amazement
:^D" Great! I like it!
:-* Kiss
<3 I love you
:-s Confusion
{} No comment
:-C Totally unbelievable
:-X Big wet kiss
:-9 Licking lips
%-) Confused
*:* Fuzzy face
:-@ Screaming
:-7 Wry remark
:-p Sticking out tongue
:-( Frown
:> Develish grin
(:-|K- Dressed to kill
:-|| Angry
::=)) Seeing double
:-> Hey
|:-0 No explanation
#:-) Hair in a mess
>;-(' I am spitting mad
#-) Partied all night
:-| Hmmm
:-& Tongue-tied
L8 - late
L8r - later
LMK - let me know
M8 - mate
MOF - matter of fact
MT - empty
MTE - my thoughts exactly
NAGI - not a good idea
Ne - any
Ne1 - anyone
No1 - no one
nrg - energy
OIC - Oh I see
OK - okay
ONNA - oh no, not again!
OTT- over the top
PCM - please call me
Pls - please
Ppl - people
PTL - praise the Lord
R - are
Re - regarding
RUOK - are you okay?
Spk - speak
Sry - sorry
SWAK - sealed with a kiss
THX - thanks
TTYL - talk to you later
TXT - text
U - you
U@ - you at? (where are you?)
UOK - you okay?
UR - your/you're
Usu - usually
W8 - wait
W84M - wait for me
W/ - with
Wan2 - want to
wn - when
WMF - works for me
XLNT - excellent
Y - why
YM - you mean
YR - yeah, right
GONNA "Going to"
SUM1 "Someone"
3SUM "Threesome"
GR8 "Great"
STRA "Stray"
4 "For, Four"
H8 "Hate"
THNQ "Thank you"
:-) "I'm happy"
L8 "Late"
THX "Thanks"
:-o "I'm surprised"
L8R "Later"
U "You"
:-( "Sad face"
LUV "Love"
UR "You are "
d:) "Baseball cap "
MOB "Mobile"
WAN2 "Want to?"
;-/ "Confused"
2DAY "Today"
F2T "Free to talk"
RUOK "Are you okay?"
2MORO "Tomorrow"
FWD "Forward"
RGDS "Regards"

(:-... Heart-broken
%-) I'm tipsy but happy
#:-o Oh no!
:-# My lips are sealed
8-) Sender wears glasses
:+( I'm hurt by that
:*)? Are you drunk?
<:-0 Eeek!
:-e I'm disappointed
(-: Sender is left-handed
<:-) Dumb question
~o~ Bird
:@ Ouch!
:-(*) Sick comment
(:-) Bald
:// Frustrated
:3-< Dog
d:-) Hats off to your great idea
:-$ Put your money where your mouth is
:-{) Sender has moustache
|-| Going to sleep
:@) Pig
\o/ Praise the Lord
*<:o) Clown
:-{)} Sender has moustache & beard
:=8) Baboon
8^ Chicken
~#:-( Bad hair day
:'-( I am crying
:*) I' tipsy
:-o Oh
O:-) Innocent
&:-) Sender has curly hair
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!