Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, June 14, 2009

♥ சிரி சிரி... ஆச்...ஆச்ச்ச்...ச் ... ♥

நன்றி : திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=70905281&format=html


http://teamsuperforest.org/superforest/wp-content/uploads/2009/05/smile.jpg


வயதாகியும் பொடியன்கள்
----------------------
- அப்துல் கையூம்

நடுத்தர வயது ஆசாமிகளுக்கு ஒரு பொது அறிவு போட்டி வைத்து "இந்தியா,
இலங்கை, மலேயா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றது
எது?" என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் "கோபால் பல்பொடி" என்ற சரியான
பதிலைச் சட்டென்றுக் கூறி விடுவார்கள்.

அதேபோன்று "காரம், மணம், குணம், நிறைந்தது எது?" என்று கேட்டால் T.A.S.
ரத்தினம் பட்டணம் பொடி என்ற பதில் பொடிப்பொழுதில் மன்னிக்கவும்
நொடிப்பொழுதில் நமக்கு கிடைத்துவிடும்.

யார் செய்த புண்ணியமோ மூக்குப் பொடி போடும் வழக்கம் சிறுகச் சிறுக 'கோமா'
நிலமையை எட்டி விட்டது ஆமா!. இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே 'பொடி'யன்கள்
யாருமேயில்லை என்று மூக்கை உயர்த்திச் சொல்லலாம். வயதான பொடியன்களைத்தான்
இன்று காண முடிகிறது.

பேருந்து வண்டியிலோ, தொடர்வண்டியிலோ பிரயாணம் செய்யும்போது மூ.பொ.
(மூக்குப் பொடி) ஆசாமிகள் வந்து நம் பக்கத்தில் அமர்ந்து விட்டாலோ நம்
பிரயாணம் அதோகதிதான். மூக்கின் உட்புறத்தில் அந்த கண்றாவி சமாச்சாரம்
திட்டுத் திட்டாய் அப்பிக்கொண்டு இருப்பதை பார்க்கும்போது நாஞ்சில்
பி.டி.சாமியின் கதை போன்று ஒரு திகில் உணர்வை நமக்கு அது ஏற்படுத்தும்.

மூக்கு இருப்பது சுவாசிப்பதற்காகவே என்று நாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம். இவர்களைப் பொறுத்தவரை அது வெறும் பொடி போடுவதற்காகவே
என்று தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கிறார்கள்.

மூ.பொ. ஆசாமியின் மூக்கை க்ளோசப்பில் 7 பிக்ஸல் டிஜிட்டல் கேமராவில் படம்
பிடித்து பார்த்தோமேயானால் நாம் வாழ்க்கையே வெறுத்துப் போய் விடுவோம்.

அம்மாடியோவ்.. ..! மூக்கா அது? 'குணா' குகை போலிருக்கும். பீரங்கியினுள்
வெடி மருந்தை திணிப்பதைப்போல் அவர்கள் மூக்குப்பொடியை மூக்குக்குள்
திணிக்கும்போது நமக்கு பீதியும் பேதியும் ஒருசேர கிளம்பிவிடும்.

'ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்ற பழமொழிக்கு ஏற்றார்போல்
பொடிப்பிரியர்கள் நம் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே அந்த மூக்குத்தூள்
துர்வாசனை நம் மூக்கைத் துளைத்து அவர்களது வருகையை நமக்கு அறிவித்து
விடும்.

ஒருகாலத்தில் 'பொடி' என்ற பெயரே அலர்ஜி ஆகிப்போய் இட்லிப்பொடி,
காரப்பொடி, ஓமப்பொடி சாப்பிடுவதைகூட நான் நிறுத்திவிட்டிருந்தேன்.
தொண்டரடி பொடி ஆழ்வாரின் கவிதையை படிப்பதைக்கூட தவிர்த்து விட்டேன்
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எங்களூர் கணக்கு வாத்தியார் சம்பந்தம் சார் பொடி போடும் பழக்கமுடையவர்.
அவர் தும்மினால் மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் சாக்பீஸ், டஸ்டர்,
ஸ்கேல் உட்பட எல்லாமே அதிரும். அக்காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாரின்
பெயர் மிகவும் பிரசித்திப் பெற்றிருந்த நேரம். பசங்களெல்லாம் சேர்ந்து
வாத்தியாருக்கு வைத்த பட்டப் பெயரோ 'தும்மல் சம்பந்தம்'.

'பொடி'வைத்து பேசுபவர்களையாவது நாம் மன்னித்து விடலாம். ஆனால் பொடி
போட்டு பேசுபவர்களை மன்னிக்கவே கூடாது. (இந்த புதுமொழியை "Quotable
Quotes" –ஆக யாராவது தங்கள் வலைப்பதிவில் சேர்த்தாலும் எனக்கு ஆட்சேபணை
எதுவும் இருக்கப்போவதில்லை)

நான் 'பொடி'ப்பயலாக இருந்த காலத்தில், மூ.பொ.ஆசாமிகள் இருவருக்கிடையில்
உட்கார்ந்து ரயில் பிரயாணம் செய்த அந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட
எனக்கு தும்மல் வந்து விடுகிறது.

ரயில் பெட்டியில், முதலாம் ஆசாமி பொடி மட்டையை பிரித்தபோதே, அதிலிருந்து
சில துகள்கள், சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியின் உபயத்தால் சீறிப்
பாய்ந்து வந்து என் மூக்கைப் பதம் பார்த்தது.
http://tamilvanan.com/content/wp-content/uploads/2008/04/vadivel.jpg




ஆ.. .. .. அச்.. ச்ச்சு!

என் கண்களில் நீரை வரவழைத்த அந்த காட்டுத்தும்மலை இவர்கள் ஒரு
பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் காதுக்கு அது ஒரு இனிமையான கானமாக
இருந்திருக்குமோ என்னவோ எனக்குத் தெரியாது.

பரத நாட்டியத்தில் பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து முத்திரை
காண்பிப்பது போல ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை எடுத்து கையிலே வைத்துக்
கொண்டார் அந்த நபர். பேருக்குத்தான் ஒரு சிட்டிகை ஆனால் அதில் ஒரு நான்கு
சிட்டிகைக்குரிய கொள்ளளவு தாராளமாகவே இருந்தது.

மனுஷன் சிட்டிகையை கையில் எடுத்ததுதான் எடுத்தார் மூக்கில் திணித்துத்
தொலைய வேண்டியதுதானே? ஊ..கும். அப்போதுதான் அவருக்கு சுவராஸ்யமாக ஏதாவது
பேச்சைத் துவங்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும் போலும்.

"என்ன ஓய்.. பேசாம இருக்குறீர்?" என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட பத்து
நிமிஷம் ஊர்வம்பு சம்பாஷணை தொடர்ந்து எடுத்த சிட்டிகையை இன்னும் மூக்குக்
குகைக்குள் நுழைத்தபாடில்லை.

இரண்டு மூன்று தடவை கையை உதறிவிட்டு ஒருவழியாக வெடிமருந்தை சாரி
பொடிமருந்தை அந்த பீரங்கி மூக்குத் துவாரத்தில் ஏற்றியாகி விட்டது.
உதறியபோதும் சில துகள்கள் காற்றில் பரவி மீண்டும் எனக்கு

ஆ.. .. .. அச்.. ச்.. .. சூ… உ. .."

மூக்கே கழன்று விழுந்து விடும் போலிருந்தது.

உண்மையான பீதி எனக்கு இப்போதுதான் ஏற்பட்டது. "நேத்து சேஷாத்திரி
ஆத்துலே.." ன்னு ஆரம்பிச்சவர் மூக்கு மடலை விடைத்துக் கொண்டு வாயையும்
மூட இயலாதவண்ணம், பாதிக் கண்களை மூடிக்கொண்டு எந்த நேரத்தில் தும்முவாரோ
என்ற சஸ்பென்ஸ் ஒருபுறம், மனுஷன் சீக்கிரம் தும்மித் தொலைத்தாவது நமக்கு
நிம்மதி கிடைக்குமே என்ற கவலை மறுபுறம் என்னை ஆட்டிப் படைத்தது.

இப்போது நான் எதிர்பார்த்தபடியே அந்த பொக்ரான் தும்மல் படுபயங்கர
சப்தத்துடன் வெடித்தது. என் கையிலிருந்த பத்திரிக்கையில் திட்டுத்திட்டாக
அந்த மூக்குப் பொடி சமாச்சாரத்தின் மழைச்சாரல் வேறு.

ஒருத்தர் பொடி போட்டால் மற்றவருக்கும் மூடு வந்து விடும் போலும்.
எதிரில் அமர்ந்திருந்த இவரது பார்ட்னர் ஜிப்பாவில் கையை விட்டு ஒரு
வெள்ளி டப்பாவை எடுத்தார். "இந்த வீணாப்போன சமாச்சாரத்தை
பத்திரப்படுத்துவதற்கு வெள்ளி டப்பா ஒரு கேடா?" என்று என் மனதுக்குள்
திட்டித் தீர்த்துக் கொண்டேன்.

பித்தளை, வெள்ளி, தங்கம், மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு, காண்டாமிருகக்
கொம்பு, ஒட்டகை எலும்பு, யானைத்தந்தம்  போன்றவற்றால் செய்யப்பட்ட அலங்கார
பொடிடப்பிகளில்கூட இந்த மேற்படி பொக்கிஷத்தை இருப்பு வைத்திருப்பார்கள்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இரண்டாவது நபரும் பொடி டப்பாவை கையிலே ஏந்தி அவரது 'மிஷனு'க்கு ஆயத்தம்
ஆக, வரப்போகிற பூகம்பத்தை ஊகித்து அங்கிருந்து நைஸாக நழுவி வேறிடத்திற்கு
இடம் பெயர்ந்தேன். பொடியனாக இருக்கையில் என் மூக்கில் ஏறிய அந்த கார
பொடிநெடி இன்றளவும் என்நாசி நரம்புகளில் படிந்திருக்கிறது.

இசைக் கலைஞர்களுக்கும் மூக்குப் பொடிக்கும் இடையேயான உறவு பிரசித்திப்
பெற்றது. மனம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யர், பட்டணம் சுப்ரமண்ய ஐயர்,
அரியக்குடி இராமனுஜ ஐயங்கார், நாகஸ்வரச் சக்கரவர்த்தி இராஜரத்னம் பிள்ளை,
செம்மங்குடி சீனிவாச ஐயர், 'சங்கீத கலாநிதி' டி.எம்.தியாகராஜன் என்று
மூ.பொ. ஆசாமிகளின் பட்டியல் அனுமார் வாலைப்போல் நீண்டுக் கொண்டே
போகிறது.

மூச்சு விடாமல் வேண்டுமானாலும் கூட இவர்கள் இருந்து விடுவார்கள் ஆனால்
மூக்குப்பொடி போடாமலிருந்தால் மூர்ச்சையாகி விடுவார்கள்.

"ஒயின் அருந்துவது எப்படி?" என்று பிரஞ்சுக்காரர் ஒருவர் ஒரு பத்தகம்
எழுதி வைத்திருக்கிறார். ஒயின் பாட்டிலை எப்படி திறப்பது என்பதற்கே
தனியாக ஒரு அத்தியாயம். கோப்பைக்குள் ஒயினை மெதுமெதுவாக ஊற்ற வேண்டுமாம்,
ஊற்றியபின் அதேயே கொஞ்ச நேரம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க
வேண்டுமாம், பிறகு அதனை முகர்ந்து பார்த்து அந்த நறுமணத்தை(?) மனதுக்குள்
அசை போட வேண்டுமாம், அதன்பின்னர் பிறகு கோப்பையை மெதுவாக வாயருகே
கொண்டுச்சென்று லேசாக உறிஞ்ச வேண்டுமாம், உறிஞ்சியதை வாயில் வைத்துக்
கொண்டு முழுங்காதவண்ணம் அதன் சுவையை அனுபவிக்க வேண்டுமாம், அதைத்
தொடர்ந்து சொட்டு சொட்டாக தொண்டைக்குள்  லயித்த மேனிக்காய் முழுங்க
வேண்டுமாம் -  இப்படியாக ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி வைத்திருக்கிறார்.

மூக்குப்பொடி போடுபவர்களும் இதுபோன்று சில வரைமுறைகளை
சொல்லிவைத்தாற்போல்  அவர்களுக்குள்ளாகவே வகுத்து வைத்திருக்கிறார்கள்.
பொடி ஆசாமிகள் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான கோட்பாடுகள்/ வழிமுறைகள்/
நடைமுறை பழக்கங்கள் இருப்பதைக் காண முடிகிறது.  "பொடி போடுவது எப்படி?"
என்ற ஆய்வு நூலை எந்த பிரகஸ்பதியாவது இதற்குமுன் எழுதி வைத்துப்
போயிருப்பாரோ என்னவோ?

பொடி மட்டையை சூசகமாக திறப்பது; அதிலிருந்து ஒரு சிட்டிகையை பதுசாக
கையிலெடுப்பது; இரு விரல்களுக்கிடையில் இறுக்கமாக வைத்துக் கொண்டு சில
மணித்துளிகள் உரையாடுவது; பிறகு சர்..ரென்று மூக்கால் உறிஞ்சுவது; கையை
உதறுவது - இவை யாவற்றிலும் ஒரு நளினம்/ தொழில் நுட்பம்/ லாவகம் இவர்கள்
கையாள்வதை நாம் பார்க்கலாம்.

'நாசிகா சூர்ண'த்தை மூக்குக்குள் திணித்து மூக்கைத் தடவி விட்டுக்
கொள்ளும் அவர்களது பாணியே ஒரு பிரத்தியேக ஸ்டைல். சிலபேர்கள்
கைக்குட்டையை இரண்டு ஓரத்திலும் பிடித்துக் கொண்டு ஷூ பாலிஷ் செய்வதுபோல்
மூக்கை பாலிஷ் செய்துக் கொள்ளும் யுக்தியைக் கடைபிடிப்பார்கள். அந்த
மூக்குக்கு மட்டும் வாயிருந்தால் 'ஓ..வென்று" கதறியிருக்கும்.

இந்த மூக்குப்பொடி சமாச்சாரம் சில நூற்றாண்டுகளாக நம் மக்களிடையே இருந்து
வந்திருக்கிறது.

பேரரசர் அக்பர் ஒருமுறை அரசவையில் "பிறருக்கு எதையேனும் வழங்கும்போது
கொடுப்பவர் கை உயர்ந்தும், பெறுபவர் கை தாழ்ந்தும் இருப்பதுதான் வழக்கம்"
என்று கூற "எல்லா நேரத்திலும் இப்படி இருப்பதில்லை" என்ற பீர்பால் மூக்கை
நுழைக்க அவையோர் மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள்.

''மூக்குப் பொடி கொடுப்பவரின் கை கீழாகவும், அதைப் பெற்றுக் கொள்பவர் கை
மேலாகவும் இருக்கும்'' என்று பீர்பால் மேலும் விளக்கிக் கூற பேரரசர்
அக்பர் மூக்கின் மேல் விரல்வைத்து அவரது அபார அறிவுத்திறனை ஆஹா ஓஹோவென்று
புகழ்ந்தாராம்.

எனது ஒண்ணு விட்ட கொள்ளுத் தாத்தா ஒரு பொடிப்பிரியர். பொடியின்றி
நொடிப்பொழுதும் இருக்க மாட்டார். "பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்.
மற்றெல்லோர் இடிவிழுந்து சாவார்" என்று புதுக்குறள் வேறு சொல்வார்.

நான் பொடியனாக இருந்த காலத்தில் அவரது பொடி டப்பாவை எடுத்து ஒளித்து
வைத்துவிட என் கன்னத்தில் ஒண்ணு விட்டதை மறக்கவே முடியாது, 'ஒண்ணு விட்ட
கொள்ளுத் தாத்தா' என்ற உறவை மெய்ப்பித்துக் காட்டியவர் அவர்.

மாலை நேரத்தில் வாக்கிங் போவதைக்கூட "பொடி நடையாக போய்விட்டு வருகிறேன்"
என்றுதான் சூசகமாகச் சொல்வார். அந்த பொடிநடையின் போது எத்தனை தடவை பொடி
ஏற்றுவார் என்பது எனக்குத்தான் தெரியும்.

N.V.S சண்முகம் பட்டணம் பொடி - இந்த தயாரிப்புக்கு இவர்தான்
நியமிக்கப்படாத, அதிகாரப்பூர்வமில்லாத Brand Ambassador. காரணம்
அவரிடமிருந்த அந்த மஞ்சள் பை, தகர டப்பா, ஹேண்ட்பேக் எல்லாவற்றிலும் இந்த
விளம்பரத்தைத் தாங்கிக்கொண்டு நடமாடும் விளம்பரப்பலகையாக நகரை வலம்
வந்துக் கொண்டிருந்தார்.

தன்னிடம் ஓசிப்பொடி கேட்கும் ஆசாமிகளுக்கு கொஞ்சம் கூட மூக்கைச்
சுழிக்காமல் அள்ளி அள்ளி கொடுக்கும் பொடிவள்ளல் அவர். பவ்யமாக ஓசிப்பொடி
வாங்கிகொண்டு தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டிக் கொண்டு போகும் அந்த
ஓஸிபீஸா ஆசாமிகளைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

ஒரு சிலபேர்கள் நமது பக்கத்திலேயே அமர்ந்து ஜாலியாக பேசிக்
கொண்டிருப்பார்கள். அவர் எப்போது பொடியை கையிலெடுத்தார், எப்படி போட்டார்
என்றே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அந்த வாசனை  அவரை எட்டப்பனாக
காட்டிக் கொடுத்து விடும்.

அறிஞர் அண்ணா இவ்விஷயத்தில் பலே கில்லாடி என்று சொல்வார்கள். மேடையில்
ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே யாரும்
அறியாத வண்ணம் தனது காரியத்தை கச்சிதமாக முடித்து விடுவாராம்.

சைனஸ், மூக்கடைப்பு, நீர்க்கோர்வை,  மண்டைச்சளி இதுபோன்ற உபாதைகளுக்கு
இது நல்ல மருந்து என்பது மூ,பொ. ஆசாமிகளின் அசையாத நம்பிக்கை.

புகையிலை, சுண்ணாம்பு, நெய் இவைகளின் ஆபத்தான கலவைதான் இந்த
மூக்குப்பொடி. சுண்ணாம்பு = காரம், நெய் = மணம், புகையிலை = போதைகுணம்.
இதனால்தான் இது காரம், மணம், குணம் நிறைந்ததாக விளம்பரம் செய்கிறார்கள்.

குடிப்பழக்கத்திற்கும் பொடிப்பழக்கத்திற்கும் அதிக வேறுபாடு கிடையாது.
ஒருவித சிலிர்ப்புத்தன்மையும், மூளை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி
ஏற்படுத்துவதாகவும் ஒரு மாயை. அவ்வளவுதான். இந்த கொடிய பழக்கத்தினால்
இரத்த அழுத்தம், புற்று நோய், பக்கவாதம்,  நுரையீரல் மற்றும்
சுவாசக்குழாய் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் உண்மை.

ஒருகாலத்தில் புகையிலைதாசர்களுக்கும் மூக்குப்பொடிதாசர்களுக்கும் இடையே
"எது சிறந்தது?" என்ற போட்டா போட்டி நடந்திருக்கிறது. திருப்பதி
வெங்கடாசலபதி காட்டும் அபயக்கரம் 'உள்ளங்கை அகலத்து புகையிலையை
போடுங்கள்' என்று அட்வைஸ் கொடுப்பதாக புகையிலைப் பிரியர்கள் கொக்கரிக்க,
தட்சிணாமூர்த்தி தன் வலதுகரத்தால் காட்டும் சின்முத்திரை மூக்குப்பொடி
போட அட்வைஸ் கொடுப்பதாக மூ.பொ. பிரியர்கள் எசப்பாட்டுப் பாட தெய்வங்களை
விளம்பர மாடல்கள் ரேஞ்சுக்கு களமிறக்கி விட்டார்கள்.

இந்த போட்டியை இவர்கள் இலக்கியத்திலும் காட்டியிருந்தால் தேவலாமே என்று
நினைக்கத் தோன்றுகிறது. "புகையிலை விடு தூது" என்ற நூலைப்போன்று
"மூக்குப்பொடி விடு தூது" என்று ஏதாவது இவர்கள் எழுதி வைத்திருந்தாலாவது
தமிழுக்கு கிடைத்த தூது இலக்கியங்களின் எண்ணிக்கை ஒன்று கூடிப்
போயிருக்கும்.

நம்மவர்கள் உற்சாகத்திற்கு நெப்போலியனை ஏற்றிக்கொள்கிறார்கள். ஆனால் அந்த
மாவீரன் நெப்போலியனே உற்சாகத்திற்கு மூக்குப்பொடியை ஏற்றிக்கொண்டதாக
சரித்திரக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.

மூன்றாவது ஜார்ஜ் மன்னரின் மனைவி அரசி சார்லட், போப் பெனடிக்ட் XII,
போன்ற பிரபலங்கள் கூட மூக்குப்பொடிக்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள்.

இந்த புள்ளி விவரங்கள் மூ.பொ.ஆசாமிகளின் கண்களில் படாமலிருப்பது நலம்.
ஏனென்றால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு பொடிமட்டையை மடியில்
கட்டிக்கொண்டு, கைக்குட்டையும் கையுமாக இவர்கள் அலையக் கூடும்.

கைக்குட்டை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. மூ.பொ.ஆசாமிகள் பயன்படுத்தும்
கைக்குட்டையைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறா விட்டால் இந்த கட்டுரையே
பூர்த்தியாகாது.

8" x 8" சைஸில் ஒரு தடிமனான துணியில் பிரத்யேகமாக தைக்கப்பட்ட கைக்குட்டை
இவர்கள் வசமிருக்கும். மூக்குப்பொடியைச் சிந்தி சிந்தி அதன் ஒரிஜினல்
கலர் மாறி மரக்கலராய் அது உருமாறி போயிருக்கும், திட்டுத் திட்டாய்
ஆங்காங்கே இலங்கை வரைப்படம் போன்று நனைவுச் சின்னங்கள் பதிந்திருக்கும்.

ஆ.. .. .. அச் .. .. ச்.. ச்.. ச்.. சூ .. ஊ. .. ஊ.. ஊ.. ஊ..

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-13/nsket4.jpg

♥ ரிசர்வ் வங்கி இணைய தளம் தமிழில்....! ♥

தமிழில் ரிசர்வ் வங்கி இணைய தளம்


இந்திய ரிசர்வ் வங்கி இந்திய மொழிகளில் தன்னுடைய இணைய தளத்தை வெளியிட்டுள்ளது.(இது பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாதர்களுக்கு உதவட்டும்). நம் தமிழ் மொழியிலும் இணைய தளத்தை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி முக்கியமான தகவல்களையும் தனது அறிவிப்புகளையும் தமிழிலே வெளியிட்டுள்ளது வரவேற்கக்கூடிய விஷயம்.

இத்தளத்தில் ரிசர்வ் வங்கியின் பணி மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், ரிசர்வ் வங்கியின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் , பத்தரிக்கை குறிப்புகள் ,வங்கியின் கடன் விகிதங்கள், வங்கிகளின் சேவைக்கட்டணங்கள், இந்தியாவில் உள்ள் பொதுவுடமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என, குழந்தைகள் மற்றும் புதியவர்களுக்கென நிதிசார் கல்விகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்தளத்தில் செய்திகள் உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு தளம்.

http://www.rbi.org.in/commonman/Tamil/Scripts/Home.aspx


♥ ஹிட்லரின் நாஜிப் படையும்,தமிழீழ எழுச்சியும்..... ♥

யூத வழியில் தமிழீழம்



1939-ஆம் ஆண்டு - ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு.

 

 

பூங்குழலி

அதற்கான முதல் படியாக அய்ரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும், கண்மூடித்தனமானப் படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின.

இந்த தடுப்பு முகாம்கள்தான் பின்னர் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக ஹிட்லரின் நாஜிப் படையினர், யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்தி முடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஹோலோகாஸ்ட் என்றால் 'ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டது" என்று பொருள். அதுதான் யூத இனப்படுகொலையை குறிக்கும் சொல்லாக இன்றும் வழங்கப்படுகிறது.

1945 வரை நீண்ட இரண்டாம் உலகப் போரில் மிக அதிக அழிவுக்குண்டான இனம் யூத இனம். ஆனால் மூன்றே ஆண்டுகளில், அதாவது மே 14 1948-ஆம் ஆண்டு யூதர்கள் தங்களின் மரபு வழித்தாய் நாடான இஸ்ரேலின் விடுதலையை அறிவித்தனர். எண்ணிக்கையில் யூதர்களை விடமிக அதிகம் உள்ள, அரபிய நாடுகள் இஸ்ரேலின் விடுதலைக்கு எதிராக அணி திரண்டு போரிட்ட போது, அதனை எதிர்த்து 'விடுதலைக்கானப் போரை" நடத்தி யூதர்கள் வெற்றி கண்டனர்.

எப்படி அது அவர்களுக்கு சாத்தியப்பட்டது?ஏறத்தாழ 3000 ஆண்டுகள் வரலாற்றினை உடைய யூத இனத்தினர், அவர்களின் சொந்த மண்ணான இஸ்ரேல் மீதான உரிமையினை சிறிது சிறிதாக இழந்தனர். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேல் மாறியது. அதுவும் இஸ்ரேல் என்ற பெயரில் அல்ல. பாலஸ்தீனம் என்ற பெயரில். மண்ணை இழந்து, மண்ணின் மீதான உரிமைகளை இழந்து, தங்கள் தாய் மண்ணின் மரபு வழிப் பெயரான இஸ்ரேல் என்பதும் மறைந்து பாலஸ்தீனமான நிலையில், வரலாற்றின் தொடர்ந்த காலக்கட்டங்களில் பல்லாயிரக்கணக்கான யூத மக்கள் இஸ்ரேலைவிட்டு அய்ரோப்பாவிற்கும், வடக்கு ஆப்ரிக்காவிற்கும், பிற நாடுகளுக்கும் குடி பெயர்ந்தனர்.

எங்கு சென்றாலும் அவர்கள் அந்நாட்டு மக்களுடன் இணைந்த ஒரு வாழ்வை அமைத்துக் கொண்ட போதிலும், சிலவற்றை விட்டுக் கொடுக்காது இருப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டனர்.முதலாவதாக, எந்த நாட்டில் எந்தச் சூழலில் வாழ்ந்த போதும் தங்களின் மொழியான ஹீப்ருவை அவர்கள் மறக்கவில்லை.தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியை கற்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றனர். மொழி தங்களின் அடையாளம்.

தங்கள் இனத்திற்கான குறியீடு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.இரண்டாவதாக, தங்களின் மத நம்பிக்கையையும், மத பழக்க வழக்கங்களையும் மிக கண்டிப்பாகப் பின்பற்றினர்.மூன்றாவதாக, தங்கள் இனத்தின் வரலாற்றினை, பெருமிதம் பொங்கவும், தங்கள் இனம் சந்தித்த அவலங்களை மறைக்காமலும் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். வரலாற்றினை அறியாமல் உணர்வூட்ட இயலாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

நான்காவதாக, பொருளாதார ரீதியாக தங்களை மிக அழுத்தமாக வளர்த்துக் கொண்டனர். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரத்தில் யூதர்களுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. கடும் உழைப்பின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் இதனை அவர்கள் சாதித்தனர்.இவை எல்லாம், இரண்டாம் உலகப் போருக்கு முன். இரண்டாம் உலகப் போரில் தங்கள் இனத்தின் மீது மிகப் பெரிய இனப் படுகொலை நடந்தேறிய போது, அது உலகெங்கும் உள்ள யூத மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதில் வியப்பில்லை.

ஆனால் அந்த அதிர்ச்சி அவர்களை உறைய செய்துவிடவில்லை. மாறாக அவர்களுக்குள் ஒரு உறுதியை ஏற்படுத்தியது.உலகின் எந்த மூலையில் வாழும் யூதன் ஆனாலும், அவனுடைய வாழ்க்கைச் சூழல் எதுவாக இருந்தாலும், அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எத்தகையதாக இருந்தாலும், ஒன்றில் அவர்கள் ஒத்த கருத்தினை, உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தனர்.

'யூதர்களுக்கு என ஒரு நாடு வேண்டும். அது அவர்களின் மரபு வழி தாய் நாடான இஸ்ரேலாக இருக்க வேண்டும்"இதுவே அவர்களின் ஒரே இலட்சியமாக இருந்தது. இந்த இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை அவர்கள் திட்டமிட்டனர்.முதலாவதாக, இரண்டாம் உலகப் போர் மற்றும் இனப் படுகொலையினால் சீர் கெட்டிருந்த தங்களின் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்கும் முன் பொருளாதார வளம் பெற்றிருந்த போதிலும் செய்யாத ஒன்றை தற்போது திட்டமிட்டு செய்தனர்.

தங்களின் பொருளாதார நிலையினை கொண்டு தாங்கள் வாழும் நாட்டின் அதிகார வர்க்கத்தின் நட்பைப் பெற்றனர். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர்.இரண்டாவதாக, உலகெங்கும் பல நாடுகளில் வாழும் யூத மக்களிடையே ஓர் அடிப்படை ஒருங்கிணைவை ஏற்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம்.

ஆனால் இலட்சியம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒருங்கிணைவு எத்தனை பலமாக இருந்தது என்றால், உலகெங்கும் இருந்த அத்தனை யூதர்களும், ஒரே திசையில் சிந்தித்தனர். ஒவ்வொருக் கட்டத்திலும் ஒரே திசையில் அடியெடுத்து வைத்தனர்.இந்த இரண்டின் அடிப்படையிலும் அறிவுப் பூர்வமாக காய்கள் நகர்த்தி, மூன்றே ஆண்டுகளில் தங்கள் நாட்டின் விடுதலையை அறிவிக்கும் அளவிற்கு பலம் பெற்றனர். அவர்களின் 'விடுதலைக்கானப் போர்", நாட்டு விடுதலையை அறிவித்தப் பிறகே நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

நாட்டின் விடுதலையை தன்னிச்சையாக அறிவிப்பது என்பது விளையாட்டு அல்ல. அது கேலிக் கூத்தாக போகாமல் இருக்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் ஒரு நாடாவது இந்த விடுதலையை அங்கீகரிக்க வேண்டும். அந்த நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.இந்த இடத்தில் தான் யூத மக்கள், அவர்கள் வெளியேறி வாழ்ந்த நாடுகளில் பெற்றிருந்த பொருளாதார பலமும், அதிகார மட்டத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் பயன்படுத்தப்பட்டது.

பல நாடுகள் இஸ்ரேலையும், அதன் விடுதலையையும் அங்கீகரித்தன.இதன் விளைவாக, யூதர்களுக்கென ஒரு நாடு, இஸ்ரேல், மீண்டும் பிறந்தது.யூதர்களைப் போலவே தமிழர்களும் 3000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்களைப் போலவே மரபு வழியாக தங்களுக்கென நிலப் பகுதிகள் இருந்தும், அவற்றை ஆண்ட வரலாறு இருந்தும், இன்று அதன் மீது உரிமை அற்றவர்களாக நிற்கின்றனர்.

'இஸ்ரேல்" என்ற தொன்மைப் பெயர் உலக வழக்கிலிருந்து மறைந்து பாலஸ்தீனம் ஆனது போலவே, 'தமிழீழம்" என்ற தமிழர்களின் தாய் நிலத்தின் தொன்மைப் பெயரும் உலக வழக்கிலிருந்து மறைந்து சிறிலங்கா என்ற பெயரே வழங்கப்படுகிறது. யூதர்களைப் போலவே இன்று தமிழர்களும், மண்ணை இழந்தவர்களாக, மண்ணின் மீதான உரிமையை இழந்தவர்களாக உலகெங்கிலும் சிதறி வாழ்கின்றனர்.

கடந்த மே மாதத்தில், ஈழத்தில் 'கடற்கரைப் படுகொலை" என்ற பெயரில் நடந்திருப்பதும் மற்றொரு ஹோலிகாஸ்ட்டே. சொல்லப் போனால் யூதர்கள் மீதான இனப்படுகொலையையும் மிஞ்சிய இனப் படுகொலை நடந்தேறி உள்ளது. அதனை விட மோசமாக எஞ்சியுள்ள மக்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். ஹிட்லரின் தடுப்பு முகாம்களில் நடந்ததை விட கொடிய சித்ரவதைகளும், உளவியல் கொடுமைகளும் இங்கு நடக்கின்றன.

இந்த மக்களை காப்பதிலும், தமிழர்களுக்கு என ஒரு நாடு, தமிழர்களின் மரபு வழித் தாயகமான தமிழீழ நாடு, தமிழர்கள் வசப்படுவதிலும் தங்களின் கடமை என்ன என்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் யூத வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களில் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நம்முடைய மொழியையும் உண்மை வரலாற்றினையும், அண்மை வரலாற்றினையும் நாம் எந்த அளவிற்கு அறிய தந்திருக்கிறோம் என்ற கேள்வியை நாம் எமக்குள் கேட்க வேண்டிய தருணம் இது.

விடுதலைக்கான போர் என்பது ஒரு தலைமுறை இரு தலைமுறைகளோடு நிற்பதில்லை. இறுதி வரை அதே உறுதியுடன் அது எடுத்துச் செல்லப்பட வேண்டுமெனில், வரக் கூடிய ஒவ்வொரு தலைமுறையினரும் வரலாற்றினை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். வரலாற்றினை கற்பிப்பதன் மூலமாக மட்டுமே இன உணர்வினை எழுப்ப இயலும். போராட்ட உணர்வினை விதைக்க இயலும்.

வழி வழியாக போராட்டத்தை கைமாற்ற முடியும். நாடு விடுதலைப் பெற்றப் பிறகும், நாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்தப் பிறகும் நாட்டை கட்டமைப்பதற்கும், அதற்கு பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு நாட்டினை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கும் வரலாற்று அறிவு மிக முக்கியமானது. அதுவே நாட்டின் மீதானப் பற்றையும் இனத்தின் மீதான அக்கறையையும் ஏற்படுத்தும்.

அப்படி இல்லையேல் ஒரு கட்டத்திற்கு பிறகு, ஈழத்தில் இன அழிப்புப் போரினால் நம் மக்களை இழந்ததைப் போல, புலம் பெயர் நாடுகளில், மொழியையும் வரலாற்றையும் மறந்த மக்களாக, இன உணர்வு அற்ற மக்களாக, உயிருடன் நம் இளைய தலைமுறையினரை நாம் இழக்க நேரிடும்.அடுத்ததாக, இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் அறிவாற்றலாலும் கடும் உழைப்பாலும் தாங்கள் வாழும் நாடுகளில் ஓரளவு பொருளாதார வளம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

அந்த பொருளாதார வளம், பொருளாதார பலமாக மாறவேண்டும். அந்த பலம், அதிகார செல்வாக்காக உருப் பெற வேண்டும். அதற்கானத் திட்டமிடல் வேண்டும்.அவ்வாறு நடந்தேற வேண்டுமெனில் அதற்கு தனி மனித உழைப்பு, அறிவாற்றல், உறுதி மட்டும் போதாது. அவற்றிற்கு மேலாக ஒருங்கிணைவு வேண்டும். அனைவரும் ஒரே திசையில் சிந்திப்பவர்களாக, ஒரே திசையில் அடியெடுத்து வைப்பவர்களாக மாற வேண்டும்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள், செயல்முறை வேறுபாடுகள் இருந்த போதிலும், இனம் எதிர் கொண்டு நிற்கும் இந்த சவாலான தருணத்தில், தமிழினத்திற்கான தமிழீழ நாடு பெறுவதே ஒற்றை இலட்சியமாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் சகோதரர்களுக்கு இடையிலானவை. அவற்றை சுதந்திர தமிழீழ நாட்டில் நிதானமாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு அதிகபட்ச ஒருங்கிணைவுடன் செயல்பட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.இதற்கு மேல் நம் இனத்திற்கு இக்கட்டானத் தருணம் வேறு ஒன்று வந்து விடாது. அப்படி ஒன்று வந்து விடக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்தெழ வேண்டும்.


http://www.tamilkathir.com/news/1471/58//d,full_view.aspx



♥ புலிகளிடம் சிக்கிய சிங்கள சிப்பாய்... பீ.பீ.சிக்கு பரபரப்பு பேட்டி ♥

புலிகளிடம் போர்க்கைதியாக இருந்த கடற்படை சிப்பாய் பீ.பீ.சிக்கு பரபரப்பு வாக்குமூலம்

http://www.thaaimann.com/wp-content/uploads/2009/03/still0902_00004.jpg





2006 நவம்பர் மாதம் புலிகளால் கைது செய்யப்பட்ட 7 இலங்கைக் கடற்படையினரில் சமிந்த குமார ஹெவாஜ் என்பவரும் ஒருவர். வன்னியில் இறுதிக்கட்ட சண்டைவரை  இந்த 7 பேருக்கும் ஒரு ஆபத்தும் வராமல் பாதுகாத்த புலிகள், கடந்த மே 17 இல் அவர்களை விடுவித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அவர் பி.பி.சி இன் சிங்கள சேவைக்கு பேட்டியளித்துள்ளார்.

போர்க்கைதிகள் அனைவரும் சீமெந்தால் கட்டப்பட்ட பதுங்கு குழிக்குள் வைக்கப்பட்டிருந்த போதும், இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்களால் அவை தொடர்ந்து அதிர்ந்து

கொண்டிருந்ததாகக் கூறும் சமிந்த குமார, இறுதி நேரத்தில் துப்பாக்கி ரவைகள் சில தமது பதுங்கு குழிக்குள் விழுந்ததாகவும் கூறியுள்ளார்.

புலிகளால் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள் அனைவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் பதிவு செய்திருந்ததாகவும், புலிகள் அவர்களை ஒருவித சித்திரவதைக்கும் உள்ளாக்காமல் மரியாதையுடன் கவனித்துக் கொண்டதாகவும் கூறியுள்ள சமிந்த குமார தாம் இருந்த பதுங்கு குழிகளைச் சுற்றி புலிகளின் பல முகாம்கள் இருந்ததாகவும் கூறினார்.

போர்க்கைதிகள் எவரும் குடியிருப்புகளின் மீது ஷெல் வீழ்ந்ததைக் காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்ற அவர், பொதுமக்கள் குடியிருப்புகள் என்று தாம் அறிந்திருந்த பகுதிகளை அண்டி பல ஷெல்கள் வீழ்ந்ததை தம்மால் உறுதிப்படுத்த முடிந்ததாக மேலும் பி.பி.சி சிங்கள சேவைக்குக் கூறினார். எனவே தான் பொதுமக்கள் வன்னியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் சமிந்த குமார.ஆரம்ப காலத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கிளிநொச்சி மாவட்ட கனகபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகள், பின்னர் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

"இடம் மாறும்போது புலிகளின் வாகனங்களில் எங்களைக் கொண்டு சென்ற புலிகள், பின்னர் ராணுவத்தினரின் தாக்குதல் அதிகரித்ததன் பின்னர் எங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் கால்நடையிலேயே கூட்டிச் சென்றார்கள்" என்று புலிகள் தம்மீது வைத்திருந்த அக்கறை பற்றி பெருமையாகக் கூறினார். பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது ஷெல் விழுந்து அவர்கள் பட்ட பல இன்னல்களைத் தாம் அறிந்துள்ளதாகக் கூறிய இவர் இறுதி நேரச் சண்டையின்போது நடந்த சில முக்கிய விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் எவருமே ராணுவத்தினரிடம் சரணடையும் நோக்கில் இருக்கவில்லை. புலிகளுக்கு இறுதி நேரச் சண்டைகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்கள் சில போதாமல் போன கட்டத்தில் கூட அவர்கள் இவ்வாறு சரணடையும் முடிவுக்கு வராமல் தம்மிடம் உள்ள ஆயுதங்களின் ஓசை தானாகவே அடங்கும் வரை ராணுவத்தினரை எதிர்த்துப் போராடி வீரமரணமடையவே விரும்பி இருந்தனர் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் சமிந்த குமார.

சயனைட் குப்பியை தமது மாலையாக அணிந்திருந்த புலிகளே சரணடைந்து விட்டார்கள் என்று மார்தட்டிய சிங்களப் படையினருக்கும், எமது மக்களின் சந்தேகத்துக்கும் இவரது பேட்டி சரியான பதிலளிக்கும் என நாம் நம்புகிறோம். கண்முன்னே இறந்து கொண்டிருந்த மக்களையும் அவர்கள் பட்ட அவலங்களையும் கண்டு சகிக்க முடியாத சில அரசியல் பிரிவினர்கள் சரணடைய முற்பட்டது கூட, புலிகள் அகிம்சை வழி தீர்வுக்குக்கூட தயார் என்று காண்பிக்கவும் மக்களைக் காக்க வேண்டிய தமது கடமையைச் செவ்வனே செய்வதற்குமே ஆகும்.

ஆனால் சண்டையில் ஈடுபட்ட தளபதிகளோ, போராளிகளோ ராணுவத்திடம் போய் மண்டியிட்டு சரணடையும் எண்ணத்தைக் கனவில் கூடக் கொண்டிருக்கவில்லை என்று அறியும்போது தமிழர்களாகிய நாம் என்றுமே கோழைகள் அல்ல.... எங்கள் நிலத்தைக் கைப்பற்றும் எமது தொடர் போராட்டங்கள் என்றுமே தொடரும்... என்று கூறுவதில் தமிழுணர்வாளர்கள் நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்படுகின்றனர்.


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3765:2009-06-14-12-38-33&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54


http://www.thaaimann.com/wp-content/uploads/2009/03/still0902_000141.jpghttp://www.thaaimann.com/wp-content/uploads/2009/03/still0902_00012.jpg




♥ தமிழீழப் படுகொலைக்கு.... உன் எதிர்வினைதான் என்ன?-'குமுதம்' ♥

தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய, தமிழக அரசுகளின் எதிர்வினை என்ன?: 'குமுதம்' வார ஏடு கேள்வி


தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய, தமிழக அரசுகளின் எதிர்வினை என்ன? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் பிரபல வார ஏடான 'குமுதம்' கேள்வி எழுப்பியிருக்கின்றது.

இது தொடர்பாக 'குமுதம்' வார ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. இலங்கை முகாம்களில் இடம்பெயர்ந்திருக்கிற தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களால் விளக்க முடியாது'' இப்படிப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருப்பவர் இலங்கைத் தலைமை நீதிபதியான சரத் என். சில்வா.

"வெற்றியால் மகிழாமல், பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கு மருந்திடுங்கள்" என்கிறார் இலங்கை சென்று வந்தவரான ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன்.

பிரிட்டனும், ஐரோப்பிய நாடுகளும், சர்வதேசப் பத்திரிகையாளர்களும் இலங்கையில் கொத்தாக நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிரான குரலை உயர்த்தியிருக்கின்றன. இலங்கையில் நடந்த கொடூரங்களைத் தாங்கமுடியாத சிங்களப் பத்திரிகையாளர்கள் கூடக் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் தமிழ்மக்கள் சொந்த நாட்டில் மிகக் கேவலமான முறையில் வீடற்றவர்களாக முகாம்கள் என்கிற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் வதைபடுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் தந்திரமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈழக் கனவு கண்டதற்காக அவர்களுடைய பார்வையை மட்டுமல்ல, உயிரையே பறித்திருக்கிறார்கள். தமிழ் இனம் கண்ட அவலங்களின் உச்சம் - சமீபத்திய இந்த ஈவு இரக்கமற்ற படுகொலைகள்.

பன்னாட்டு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிரான விசாரணையை இன்னும் யாராலும் துவக்க முடியவில்லை. உலகெங்கும் சிதறிக் கிடக்கும் தமிழர்கள், அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்கள் மத்தியில் வெறுமையுடன் குடையும் கேள்வி - இலங்கையில் தமிழர்களின் எதிர்காலத்தை யார் நிர்ணயிப்பது?

இந்திய அரசின், தமிழக அரசின் எதிர்வினைதான் என்ன?

"சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே" என்ற வரிகள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

என்ன செய்ய முடியும் ஊமை சனங்களால்? என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://puthinam.com/full.php?2bYUmWe0dYe3A0ecAEar3b4qcAl4d3f4l3cc2DvS3d42aOT3b020Qr3e


♥ சிங்களன் ஏறி நடக்கும் பாதையாக.... புதினம்.காம், தமிழ்வின்.காம் ♥

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5dNpuAHAgARehwWTJjNzl82BThFqCK1OiP4PgBd7fAcdoHW4h_jd2iWp2Bjn9jSb8L_7GlJx_sz9c1WGeBHEbs4Y-GTN63hsCgWFinrxluasOR2aSiXNmHKQRlBwNdtLq_HA2WvaWYtxf/s400/paranthan_20081028001.jpg  http://naanchithan.files.wordpress.com/2009/04/2a70fe96f71147431c01714741c8d385.jpg

*சரணாகதியை முறியடித்தல்*



http://puthinam.com/


http://tamilwin.com/

*புதிய காலகட்டத்தினுள் புகுமுன்பாக…*

செம்மலை, வழுதி, தயாமோகன், பட்மனாதன் அண்ணார்…என இன்னும்சில பெயர்கள் ஈழ
விடுதலை வட்டாரங்களில் சில நாட்களாக வெகு வேகமாக உச்சரிக்கப்படுகின்றன. செம்மலை
புலிகளின் அனைத்துலக தொடபகத்திலிருந்து அறிக்கை விடுகிறார். தயாமோகன் மட்டு –
அம்பாறை அரசியற்பிரிவிலிருந்து அறிக்கை விடுகிறார். பன்னாட்டு பேச்சாளர்
பத்மனாதன் ஒரு பொதுவான கொள்கைத்திட்டத்தை உலகத்தமிழர்கள் உருவாக்க
வேண்டுமென்கிறார். இவர்கள் யாவரும் விடுதலைப்புலிகள் இயக்க முத்திரையை போல
போலியாக உருவாக்கப்பட்ட ஒரு முத்திரையுடன் தமது அறிக்கைகளை முதன்மையாக
தமிழ்வின், புதினம் ஆகிய இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இவை யாவும்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வழமைக்கு மாறானது. இவ்வாறு அறிக்கை வெளியிடுவோர்
இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களது அறிக்கைகளில்
குறிப்பிடப்படும் ஒவ்வொருவரது பொறுப்புக்களிலிருந்து பார்க்க்டும்போது மூன்றாம்
நிலை நான்காம் நிலை பொறுப்பாளர்களாகவே இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
இவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் உரிமையை இயக்கம் ஒருபோதும்
வழங்கியிருக்காது. இவர்களது அறிக்கைகள் வேக வேகமாக வெளியாகும்
இக்காலக்கட்டத்தில் 'புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னல் இன்னும் உறுதியாக
இருக்கிறது' என்று சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா
தெரிவித்திருப்பதை இணைத்துப்பார்த்தால் அந்த வலைப்பின்னலை நோக்கி அரசின் சதிவலை
விரிவதையும் புலிகளின் முதல் நிலை, இரண்டாம் நிலை தலைமையை தமக்கு சாதகமாக
பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாம் நிலை, நான்காம் நிலை தலைமையை சிறீலங்கா
அரசு வலைவீசி வருகிறது என்ற ஐயப்பாடு எழுகிறது.

இந்த ஐயப்பாட்டிற்கு காரணமாக அமைவது மேற்சொன்ன அறிக்கைகளை தமிழ்வின், புதினம்
ஆகிய இணையதளங்களில் வெளியிடுவோர் தமது அறிக்கைகளில் இரண்டு மூன்று விடையங்களை
அழுத்தி சொல்வதுதான். முதலாவதாக தேசியத்தலைவர் இறந்து விட்டார் என்று
அடித்துக்கூறுகின்றனர் இந்த அறிக்கையாளர்கள். கருணாநிதியே பிராபகரன் இறந்து
விட்டார் என்ற செய்தி உறுதிபடுத்தப்படவில்லை என்று செய்தியாளர் கூட்டத்தில்
கூறி விட்டார். அது தவிர இந்திய அரசின் பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும் உறுதியாக
இது குறித்து எதனையும் கூறவில்லை. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்கள்
இறப்புச்செய்தியை ஏற்றுக்கொள்ள வில்லை. இந்நிலையில் சிறீலங்கா அரசு தலைவர்
இறப்பு பற்றிய தனது பொய்பரப்புரையை நிறுத்திவிட்டு விடுதலைப்புலிகளின்
பெயரிலேயே அப்பொய்பரப்புரையை அவிழ்த்து விடும் என்று சாதாரண அறிவுபடைத்த எவரும்
சிந்திக்கத்தக்கதே. போருக்கு பல்லாயிரம்கோடி ரூபாய் செலவு செய்யும் சிறீலங்கா
அரசு, புலிப்பதாகையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு புறம்போக்குக்கூட்டத்தை உருவாக்க
சில நூறு கோடிகளை செலவு செய்யாதா என்ன?

பிராபகரன் இறப்பு விடயத்தில் அறிக்கையாளர்கள் புளுகுகின்றனர் என்பது ஒரு
குறிப்பிட்ட செய்தியால் உறுதியாகிறது. 'முன்னாலே போனவர்களின் பின்னாலே போனவரின்
வழியில்' என்ற கட்டுரையை தமிழ்வின்னிலும், புதினத்திலும் வெளியிட்ட தி.வழுதி
தலைவர் இறக்கும் போது சையனைட் குப்பியை அணிந்திருந்தார் என்று
தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறீலங்கா அரசு காட்டிய உடலில் சையனைட் குப்பி
எதுவும் இருக்கவில்லை என்பது மட்டுமின்றி, ஜூன் 12, 2009 அன்று வெளியான
'தினத்தந்தி' செய்தித்தாளில் பிராபகரன் இறக்கையில் சையனைட் குப்பி
அணிந்திருக்கவில்லை என்று ராணுவம் தெரிவித்த செய்தி வெளியாகியுள்ளது.
இறப்புச்செய்தி உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அரசின் கூற்றுக்கும்
அறிக்கையாளர்களுக்கும் உள்ள முரண்பாடு தெரியவில்லையா? இந்த முரண்பாடே தலைவர்
இறக்கவில்லை என்பதை உறுதிசெய்வது விளங்கவில்லையா? ஆகவே அறிக்கையாளர்களின்
முதல்வேலை என்னவென்பது இங்கே தெளிவாகிறது. அதாவது தலைவர் இறந்தது போல் ஒரு
பிரமையை உருவாக்கிடவேண்டுமென்பதே அது. ஏன் அத்தகைய பிரமையை உருவாக்க வேண்டும்?
பிரபாகரன் இறந்ததாக நாம் நம்பினால்தானே இனி புலித்தலைமை என்பது இதுதான் என்று
ஒரு புறம்போக்குத்தலைமை வெளிப்பட முடியும்! அதனால் தம் அறிக்கைகளில் இவர்கள்
மிகக்கவனமாக பிரபாகரனின் புகழ்பாடி பாடியே அவரை புதைக்கும் வேலையை செய்து
வருகின்றனர். தங்கள் அறிக்கைகள் தோறும் பிரபாகரனின் சாதனைகளை, ஈகையை, வீரத்தை
அறிக்கையாளர்கள் மெச்சிப்புகழ்ந்தாலும் தமிழ்வின்னிலும், புதினத்திலும்
தி.வழுதி எழுதியிருக்கும் கட்டுரையின் தலைப்பை பாருங்கள்: "முன்னாலே
போனவர்களின் பின்னாலே போனவரின் வழியில்"! என்ன ஒரு கேவலமான சொற்றொடர்! முன்னாலே
போனவர்களின் பின்னாலே போனவராம் தலைவர். அவரது வீரத்தை புகழ்வது போல
புகழ்பவர்கள் தங்களையறியாமல் அவர் கோழை என்று சொல்லவரும் தங்கள் விருப்பத்தை
தலைப்பிலேயே தெரிவித்து விடுகின்றனர்.

பிராபகரன் இறந்து விட்டதாக அறிக்கையாளர்கள் நிரூபிக்க முயலவில்லை. அவரோடு
சேர்ந்து பொட்டு அம்மானும் பலியாகிவிட்டதாகவும், தலைவரின் குடும்ப்பத்தினரும்
களபலியாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். கோதபய ராஜபக்சேவைத்தவிர வேறெந்த
சக்த்தியும் இவ்வாறு கூற வில்லை. இந்த அறிக்கையாளர்களும் ஏன் அதுபோல
கூறுகின்றனர்? அவர்களது ஆழ்மனவிருப்பம் அடுத்து வரும் அவர்களது வர்ணனையில்
வெளிப்படுகிறது.


[FIL3106.JPG]


இதோ அறிக்கையாளர்களின் வர்ணனை:

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும்.


விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை,
பொட்டு, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும்.

விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய
இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும்.

ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும்,
நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம் தளராமல்
- விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே
சாரும்.

மேற்கண்ட வர்ணனையில் கே.பி என்றழைக்கப்படுபவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்து
விட்டார்கள், அல்லது இறந்து விட்டதாக அறிக்கையாளர்களால் சொல்லப்படுகிறது. ஆக
அந்த கே.பி.தானே தேருக்கு இப்போது சொந்தக்காரர்! தலைவரின் சாவுச்செய்தி
உலகிற்கே புதிராக இருக்கிறது. ஆனால் இயக்கத்தை கைப்பற்றுவதற்காக தலைவரையும்
அவரது குடும்பத்தினரையும் குழிதோண்டி புதைத்து விட்டு, வாரிசுரிமைப்பட்டா
வேண்டுன்கின்றனர் அறிக்கையாளர்கள். தங்களுடைய வாரிசுரிமைக்கு விடுதலைப்புலிகள்
சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று சிந்தித்தவர்கள் உண்மையான
புலிச்சின்னத்தை பயன்படுத்தினால் பின்னாளில் சிக்கல் வரலாம் என்று யூகித்து
இரண்டு வித போலியான சின்னங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். ஜூன் 9-ம் தேதி
பொ.செம்மலை என்பவர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற சின்னத்தில் புலிமுகம்
இடப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டக்கள் ஏதுமில்லை.
சின்னத்தின் கீழ் ஏதோ மொழியில் சில சொற்கள் தெளிவின்றி இடம்பெற்றுள்ளன. ஜூன்
110ம் தேதி தயா மோகன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள
சின்னத்தில் புலிமுகம் வலப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும்
தோட்டாக்கள் இடம்பெற்றுள்ளன. சின்னத்தின் கீழ் 'தமிழ் ஈழம்; என்று ஆங்கிலத்தில்
எழுதப்பட்டுள்ளது. மேலும் ஏதோ சில சொற்கள் தெரிகின்றன. வாசுரிமை கோருபவர்கள்
சின்னத்தில் மாறாட்டம் செய்வதன் நோக்கம் எதிர்காலத்தில் உண்மையான தலைமை
வெளிப்பட்டாலும் தாங்கள் 'தமிழீழ விடுதலைப்புலிகள்'என்ற ஓர் அமைப்பிற்கு தலைமை
தாங்குவதாக காட்டிகொள்வதற்காகவே.

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைமைக்கு வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள்
அழுத்திச்சொல்லவரும் இரண்டாவது விடையம் காயம்பட்டுள்ள கணக்கற்ற பேரையும்
வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லட்ச்சக்கணக்கான மக்களையும்
விடுவித்திட பன்னாட்டரங்கு மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே. சரியான
கோரிக்கை. 'போரை நிறுத்து; புலிகளை அங்கீகரி; ஈழத்தை ஏற்படுத்து" என்று முழங்கி
களம் கண்ட புலம்பெயர் உறவுகள், இனி "போரில் சிக்குண்டவர்களை விடுவி; ஈழத்தை
விடுவி" என முழங்கி களம் காண வேண்டும். இடையில் ஓர் வெற்றிடம் உள்ளது.
"விடுதலைப்புலிகளை அங்கீகரி" என்ற இடம் வெற்றிடமாக உள்ளது. அந்த வெற்றிடத்தில்
தங்களை இருத்திக்கொள்ள முயலும் வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் புலம்பெயர்
தமிழர்களின் அமைதிவழிப்போராட்டம் என்பது இனி ஈழத்திலும் தொடர வேண்டும் என்றும்
தொடக்க முதலே உரைத்து வருகின்றனர். அமைதி வழி என்பது தந்தை செல்வா காலத்தில்
பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. ஆயுத வழி தலைவர் பிராபகரனால் 37 ஆண்டுகளாக
பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. இரண்டுமே தோல்வியடைந்தது என்று
எடுத்துக்கொண்டாலும் கூட ஒன்றிலிருந்து புதிய ஒன்று விளையுமே தவிர பழைய
ஒன்றிற்கு எதுவும் திரும்பி போவதில்லை. வரலாறு திரும்புவதில்லை. தமிழ்நாட்டின்
அரசியல் வாதிகளைப்போல ஈழத்திலும் தாங்கள் தலையெடுக்கலாம் என்ற நப்பாசை உடையோர்
வரலாறு திரும்பும் எனக்கூறலாம். ஆனால் வரலாற்றிலிருந்து பாடம் பெற முயல்பவர்கள்
– எதிரியின் வலையில் வீழ்ந்து விலைபோகாதிருக்க விரும்புபவர்கள் புதிய
வழிமுறைகளைத்தான் நாடுவார்கள். புலித்தலைமை தங்கள் துப்பாக்கிகளை மௌனித்து
வைக்கப்போவதாக அறிவித்தபின் வேறெந்த முடிவுகளையும் எடுக்க வில்லை என்பதை இங்கு
குறிப்பிடவேண்டும். பன்னாட்டு போக்கிற்கேற்ப பரீட்ச்சித்துப்பார்க்க வேண்டிய
புதிய வழிமுறைகளை அவர்கள் இப்போது பரிசீலித்துக்கொண்டிருப்பார்கள்.

இதனையடியாகக்கொண்டு தமிழ்நெட் இணையதளத்தில் வெளியான ஆலோசனைத்திட்டத்தினைக்
கூறலாம். புலம்பெயர் ஈழ அரசு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்கிறது
அவ்வாலோசனைத்திட்டம். இன்று திபேத்தியர்களுக்காக தலாய்லாமா தலைமையில்
புலம்பெயர் அரசு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாளில் நேதாஜி சுபாஷ்
சந்திரபோஸ் தலைமையில் புலம்பெயர் இந்திய அரசு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அதுபோல் புலம்பெயர் ஈழ அரசு ஒன்று அமைக்கப்பட்டால் அது பொம்மை அரசாக இருக்காமல்
தற்போது ஒரு திருப்புமுனையை அடைந்திருக்கும் ஈழப்போரின் வடிவங்களையும்,
போக்குகளையும் அது தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிப்பதன் மூலம்
விடுதலைப்புலிகளின் தலமைப்பாத்திரத்தையும், ஈழத்தை எதார்த்தத்தில் அடைவதற்கான
சாத்தியக்கூறுகளையும் உருவக்க வேண்டும். அந்நிலையில் போராட்ட வழி என்பது பழையன
கழிதல், புதியன புகுதல் என்பதாக இருக்க வேண்டுமேயன்றி பழையன புகுதலாக
இருக்கக்கூடாது. அமைதி வழியா ஆயுதப்போராட்ட வழியா என்பதை தீர்மானிக்கப்போவது
ஏற்கனவே வழிநடத்திய தலைமையின் கீழ் புறப்படப்போகும் புதிய தலைமுறைதான். தலைமையை
பிளக்க முயலும் எதிரிகளின் ஊதுகுழல்கள் அல்ல. விடுதலைப்புலிகளின் தலைமையின்
கீழ் நான்காவது ஈழப்போர் ஏற்படுத்திய திருப்புமுனையாக புறப்பட்டிருக்கும் புதிய
புலம்பெயர் தலைமுறை ஈழக்காடுகளிலும் மேடுகளிலும் மக்கள் முன்னெடுக்கப்போகும்
புதிய போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு, ஊமையாகக் கிடக்கும் தமிழகத்தின் போராட்ட
சக்திகளுக்கு புதுவடிவம் கொடுத்து, உலகமய போக்கினுக்கு ஏற்றபடி அல்லாமல் அதற்கு
எதிர்முகமாக, ஏகாதிபத்திய எதிரி முகாமாக போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.
இந்த போராட்டத்தில் அமைதி வழியும் சேரும், எதிரி முகாம்களின் மீது தாக்குதல்
தொடுக்கும் வழியும் சேரும். இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பது வரலாறு
திரும்பும் என்ற திரிபு வாதத்தையே முன்னிறுத்தும். புதினம், தமிழ்வின்
அறிக்கையாளர்கள் அமைதிவழி ஒன்றுதான் இலக்கை அடைய இனி ஒரே வழி என்பது அவர்கள்
கருணாவின் வழியை, கருணாநிதியின் வழியை, டக்ளஸ் தேவானந்தாவின் வழியை,
சித்தார்த்தன், ஆனந்த சங்கரியின் வழியை தேர்ந்தெடுப்பதையே காட்டுகிறது.

இங்கு சொல்ல வேண்டிய இன்னொரு விடயம் புதினம், தமிழ்வின் அறிக்கையாளர் குழுவினர்
அடுத்து வரும் காலக்கட்டத்தினை 3-வது ஈழப்போர் என வர்ணிப்பது பற்றியது.
போர் என்பது சிங்கள இனவாதிகள், மற்றும் தமிழ் இன விடுதலைப்பாதையாளர்கள் ஆகியோர்
இடையே நடந்த ஆயுதப் போரைக்குறிக்கும். அரசியல் போராட்ட இயக்கம் என்பது தந்தை
செல்வா காலம் தொடங்கி இன்று வரை முடிந்து இனியும் வரப்போகும் காலத்தை
உள்ளடக்கியது. அவ்வகையில் தந்தை செல்வாவின் காலம் தமிழர் உரிமை விடுதலை
போராட்டத்தின் முதற்பகுதி எனலாம். அந்த முதற்பகுதி வட்டுக்கோட்டை தீர்மானத்தோடு
நிறைவு பெறுகிறது. வட்டுக்கோட்டை தீர்மானம் தனி ஈழ நாட்டை உலகிற்கு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து வந்த காலம் ஆயுதப்போரின் காலம். அது நான்கு கட்டங்களாக நடந்து
இன்று ஒரு திருப்புமுனையைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. தமிழர் உரிமை
விடுதலைக்கான இந்த இரண்டாவது போராட்டக்காலம் விடுதலைப்புலிகளின் கை
மேலோங்கியிருந்த காலம். இக்காலத்தில்தான் நான்கு ஈழப்போர்கள் நடந்து
முடிந்திருக்கின்றன. தமிழர் உரிமையை மீட்பதற்கான எதிர்வரும் மூன்றாவது
விடுதலைப்போராட்டக்காலத்தில் ஆயுதபோர் இடம்பெற்றால் அது ஐந்தாவது ஈழபோராக
அமையும்.

தந்தை செல்வா காலம் தொடங்கி எதிர்வரும் காலக்கட்டம் வரை அமைதி வழி அரசியலும்,
ஆயுதபோராட்டமும் மாறி மாறி வந்துள்ளதைக் காண்கிறோம். 'அரசும் புரட்சியும்'
நூலில் அரசியல் மேதை லெனின் கூறுகிறார்: "அரசியல் என்பது ஆயுதங்களின்
உதவியின்றி அமைதி வழியில் நடைபெறும் போர். போர் என்வது ஆயுதங்களின் உதவியுடன்
நடைபெறும் அரசியல்". முதலில் அமைதி வழியில் அரசியில் நடத்தும் இரு தரப்பாரும்
ஒரு புள்ளியை நெருங்குகையில் இனி மேற்கொண்டும் அமைதி வழியில் தங்கள் அரசியலை
தொடர முடியாது என்ற நெருக்கடியை உணரும்போது ஆயுதங்களின் உதவியோடு தங்கள்
அரசியலை தொடருகின்றனர். போர் நடத்த முற்படுகின்றனர். அதுதான் ஈழ
விடுதலைப்போராட்டத்தில் நடைபெற்றது. வட்டுக்கொட்டை தீர்மானத்திற்கு பின்பு
சிறீலங்கா இனவாதிகளும் சரி தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களும் சரி
இனிமேற்கொண்டும் தங்கள் அரசியலை அமைதி வழியில் தொடர முடியாது என்பதை
உணர்ந்தனர். ஆயுதந்தரித்தனர். இன்றைய நிலைமையில் சிங்கள இனவாதிகளுக்கும் தமிழர்
விடுதலைப்போராட்டக்காரர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு யாது? இந்தக்
கேள்விக்கு இரு தரப்பினரும் தங்கள் செயல்பாடுகள் மூலம் அண்மை எதிர்காலத்தில்
பதிலளிப்பார்கள். தி.வழுதியோ, பத்மனாதன் அண்ணாரோ, செம்மலையோ, தயா மோகனோ அல்லது
இந்த பெயர்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் இந்திய அரசோ பதிலளிக்க
முடியாது. அமைதி வழி என்பது ஒரு தரப்புக்கு எடுத்துச் சொல்வது மட்டுமல்ல. இரு
தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. சிங்கள இனவாதத் தரப்பு வன்முறையைக்
கடைப்பிடிக்கவும், ஈழத்தமிழர்கள் அமைதிவழியில்தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற
தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோரின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிக்கும்
குரலாக வரளாற்றில் மாறிவிட்டது. ஒரு வழி மட்டுமே சரியானது என்று கூற
தயாமோகனும், பத்மனாதனும் அவர்களுக்கு பின்னலிருப்போரும் யார்? எதிரி
ஆயுதங்களோடு நிற்கவும், அமைதி வழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் என்று
கூறுவது எதிரியிடம் சரணடையுங்கள் என்று கூறுவதன்றி வேறென்ன?

ஆகவே, தமிழ்வின், புதினம் குழுவினர் விடுதலைப்புலிகளின் தலைமையைக் கைப்பற்றும்
நோக்குடனும், சரணாகதி மூலம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போன்றதொரு வகையாக
மாறமுடியும் என்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிகொள்ளவும் முதலாவதாக
தேசியத்தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்றனர்.
இதற்காக தேசியத்தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறுதி வணக்கம்
செலுத்தத் தூண்டுகின்றனர். இரண்டாவதாக இனிவரும் காலம் ஈழப்போரின் 3-ம் காலம்
என்று கூறுவதன் மூலம் தந்தை செல்வா காலத்திற்கும் விடுதலைப்புலிகளின்
காலத்திற்கும் இடையேயான அரசியல் தேவைகளின் வேறுபாட்டை மறைத்து வரலாற்று
திரிபுவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஈழப்போர் என்று வகைப்படுத்தப்
படுவதும் தந்தை செல்வாவின் கால நிகழ்வுகளும் ஒன்றுதான் என்று நிறுவி வரலாறு
திரும்பும் என நம்பச்செய்து பழைய அமைதிவழிப்பாதைதான் இனி ஒற்றை வழிப்பாதை
எனக்காட்டுகின்றனர். அமைதி வழி அரசியலையும், ஆயுதப்போரையும் தீர்மானிக்கப்போவது
புதிய தலைமுறையும், களமாடும் புலிகளும் அவர்களுக்கு எத்ரான சிங்கள
இனவாதிகளும்தான் என்பதை மறைக்கின்றனர். மூன்றாவதாக ஆயுதங்களுடன் நிற்கும்
எதிரியிடம் அமைதிவழியில் சரணடையச்சொல்வதன் மூலம் எதிர்வரும் காலக்கட்டத்தில்
போராட்டத்தைத் தொடர்வதற்கான புதிய வாய்ப்புக்களை மறுதலிக்கின்றனர். சரணாகதி
வழியில் போன டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், ஆனந்த சங்கரியும் எந்த
போராட்டத்தை தொடர்ந்தனர் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இந்த புதினம், தமிழ்வின் குழுவினருக்கு உடைந்து நொறுங்கிய ஈழத்தமிழர்களும்,
ஊமைகளாக கிடக்கும் தமிழ்நாட்டின் போராட்ட சக்த்திகளும் சேர்ந்து கடந்த 37
ஆண்டுகளாக சளைக்காமல் போராடிய மாவீரன் பிரபாகரனின் வழியில் சொல்ல வேண்டிய பதில்
இதுதான்:

"வரலாறு திரும்புவதில்லை;
நாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாம என்பதை தீர்மானிக்கபோவது எதிரிதான்!".
அது வரையிலும் செங்கொடிக்கு எதிரானவர்கள் செங்கொடியையே தூக்கிகொண்டு வருவது போல
புலிக்கொடிக்கு எதிரானவர்கள் புலிக்கொடியையே தூக்கிகொண்டு வருவார்கள் என்பதை
தமிழர்கள் மறக்காமல் தங்கள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

-------------------------------------
நிலவரசு கண்ணன்
வீரத்தமிழன் முத்துக்குமார் பேரவை
தமிழகம்


'கீற்று' கூகுள் குழுவில் இந்தக்கட்டுரை மீதான தங்கள் கருத்துக்களை பதியுங்கள்:

http://groups.google.co.in/group/keetru/browse_thread/thread/f65ccf3231a504cc?hl=en


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw03WZhWvjCqWQQqaymrXLPayXmFqfR-A7_yu48rzgfZ7WY2SBfABTDKDwA3JB1mhOi7tvzgeDr05cIKddxX6ch1YcbNkS6JNWJxEH5j9YN9MB7YDG06FNBTLyFMbWp93TdV6cSN29XEJM/s400/battle.jpg   https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk1fHSHtvDomkAHaAGO0rhawiuotFsSXei2PWueKnn45lCaBgd8lxeoFbV2T8lGS2hjW-OEo5O_44Vsfp9-4eWOoEzNJ-G5PEB6OW4mJh2xv6ZjPIzDquLNdY6mQ_8hsJjZfEpISYCTOU/s400/vakarai.jpg

♥ மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க முடியும் எப்படி? ♥

மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க :-
[2.png] [1.png]

முதலில் இந்த தளத்திற்கு போய் ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.

பிறகு அதை nokia pc suite மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்

பிறகு..

opera mini browser open செய்யவும்

அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும்

வரும் நீயூ பேஜில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்

மிண்டும் ஒபெரா மினியை restart செய்யவும்

[1.jpg]
நன்றி
http://tvs50.blogspot.com/2009/06/problem-view-tamil-fonts-in-mobile.html

http://hot50cool50.blogspot.com/2009/03/how-to-read-tamil-font-in-mobile.html

♥ புலிகள் எங்களை கௌரவமாக நடத்தினர்: புலிகளிடம் கைதியாக இருந்த சிங்கள கடற்படை வீரர் ♥

எங்களை கௌரவமாக நடத்தினர்: புலிகளிடம் கைதியாக இருந்த இலங்கை கடற்படை வீரர்




கொழும்பு, ஜூன் 14- போர்க் கைதியாக பிடிபட்ட எங்களை விடுதலைப் புலிகள் கௌரவமாக நடத்தினர் என்று இலங்கை கடற்படை வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2006 நவம்பர் மாதம் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 6 பேரை விடுதலைப் புலிகள் போர்க் கைதியாக பிடித்துச் சென்றனர். இதில், சமிந்த குமார ஹெவேஜ் என்பவர் சிங்கள மொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

எங்களை முதலில் கிளிநொச்சியில் 2 ஆண்டுகளாக தங்க வைத்திருந்தனர். பின்னர், அங்கிருந்து வன்னி பகுதிக்கு அழைத்து வந்தனர். மே 17ம் தேதி நடைபெற்ற இறுதித் தாக்குதலின்போது புலிகள் பலர் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் தப்பினோம்.

கடைசி நாட்களில் புலிகள் தங்களிடமுள்ள கனரக ஆயுதங்களுக்கு தேவையான போதிய வெடிபொருட்கள் கிடைக்காமல் பற்றாக்குறையால் தவித்தனர்.

புலிகளின் தலைமை சரணடைவதற்காக எங்களை இலங்கை ராணுவத்திடம் தூது அனுமப்பியதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நாங்கள் தப்பி வரும் முன்னர் புலிகளின் எந்தத் தலைவர்களையும் சந்திக்கவும் இல்லை. ராணுவத்திடம் தூது செல்லவும் இல்லை.

விடுதலைப் புலிகள் பிடித்து வைத்திருந்த போர்க் கைதிகள் அனைவரது பெயரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பதிவு செய்யப்பட்டிருந்தன. எங்களை புலிகள் மோசமாக நடத்தவில்லை. கௌரவமாகவே நடத்தினர்.

போரின் கடைசி நாட்களில் எங்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க விரும்பினர். ஆனால், போர் நடைபெறும் பகுதிக்குள் செஞ்சிலுவைச் சங்கத்தினர் வர தடை விதிக்கப்பட்டிருந்ததால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.

இவ்வாறு இலங்கை கடற்படை வீரர் சமிந்த குமார ஹெவேஜ் கூறியுள்ளார்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=74099&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=


http://www.thaaimann.com/wp-content/uploads/2009/03/still0902_00011.jpg


http://www.thaaimann.com/wp-content/uploads/2009/03/still0902_00008.jpg


http://www.thaaimann.com/wp-content/uploads/2009/03/still0902_00007.jpg

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!