
"பயத்தை விடு...!
இல்லை இலட்சியத்தை விட்டு விடு...!"
_தலைவன் பிரபாகரன்
போராட்டம் என்பது ஓரிருவர் சீறிப் பாய்வதல்ல,
மாறாக,
நாம் அனைவரும் சேர்ந்து ஓரடி முன் வைப்பதே!
-மாமேதை லெனின்.

4ல் ஒரு இந்தியர் பட்டினியால் தவிப்பு
இந்தியாவில் வறுமையில் வாடும் மக்கள் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பை சமீபத்தில் நவ்தான்யா டிரஸ்ட் நடத்தியது. அதில் இந்தியாவில் தினமும் சுமார் 20 கோடி பேர் பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 4ல் ஒருவர் பட்டினியால் தவிக்கிறார். பட்டினிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 5 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போதுமான உடல் எடை இல்லாமல் உள்ளனர்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு எடை குறைவான குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஏழை எளிய வர்கள் நலனுக்காக பட்ஜெட் டில் 32 ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. என்றாலும் ஏழைகள் சாப்பிடும் உணவில் பலன் கிடைக்கவில்லை.
1991 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி ஒரு இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு தலா 186 கிலோவாக இருந்தது. 2001 ம் ஆண்டு இந்த உணவு அளவு 152 கிலோவாக குறைந்து போனது.
தற்போது உணவுப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் ஏழைகள் சாப்பிடும் உணவு அளவு மேலும் குறைந்துள்ளது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=13364




