நேற்று இலங்கை விமானப்படையால் வன்னிக்காட்டுப் பகுதிக்குள் கடும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வன்னி வான்பரப்பை நோக்கி நேற்று 2,3தடவைகளிற்கு மேலாக போர்விமானங்கள் பரந்து சென்றதாகவும் அந்த விமானங்கள் வன்னிக்காட்டுப்பகுதியில் குண்டு வீசியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதே வேளை பல சிங்கள ராணுவத்தினரின் உடல்கள் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அங்கு கொண்டுவரப்பட்ட ராணுவத்தினரின் உடல்களில் வெட்டுக்காயங்கள் தென்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர் என்று ஈழதேசம்.கொம் நிருபர் தெரிவித்தார்.
Www.eeladhesam.coM




